tag:blogger.com,1999:blog-149817212024-03-07T01:51:43.069-08:00கருத்தூண் by ஸ்ரீகாந்தலட்சுமிநாளைய தலைமுறைக்கான இன்றைய பதிவுகள்Srikanthaluxmyhttp://www.blogger.com/profile/02621345440975786756noreply@blogger.comBlogger87125tag:blogger.com,1999:blog-14981721.post-48883261049275324542018-08-24T04:19:00.002-07:002018-08-24T04:19:54.439-07:00<div style="text-align: center;">
<b>நூல்விபர ஆவணவாக்கத்தில் ஈழத்தமிழர் பங்களிப்பு </b></div>
<div style="text-align: center;">
<b>:சில சான்றுகள்</b></div>
<div style="text-align: center;">
<br /></div>
<br />
<b>0. அறிமுகம்<span style="white-space: pre;"> </span></b><br />
<span style="white-space: pre;"> </span><br />
ஆவணவாக்கம் என்ற பதம் பரந்து விரிந்த பொருள் தருவது. நூலகவியல் நோக்கில் இது நூல்விபர ஆவணவாக்கம் எனப்படுகின்றது. தகவல் வளங்களை முறைப்படி சேகரித்தல், ஒழுங்கமைத்தல், சேமித்தல், மீள்பெறுகை செய்தல் மற்றும் பரவலாக்கம் செய்தல் ஆகிய செய்முறைகளை இது உள்ளடக்குகின்றது. ஆவணவாக்கச் செயற்பாட்டின் தொகுப்புப் பணியுடன் தொடர்புடைய இச்செயற்பாட்டை கருவிவகை ஆவணவாக்கம் எனவும் குறிப்பிடுவர். கருவிவகை ஆவணவாக்கமானது ஆய்வாளர்களின் இலகுவான பயன்பாட்டைக் கருத்திற் கொண்டு குறிப்பிட்ட படைப்பாளர் சார்ந்த அல்லது துறை சார்ந்த இலக்கியங்களை முறைப்படி பட்டியலிடுதலைக் குறிக்கின்றது. இது ஒரு நூலகம் அல்லது தகவல் நிலையத்திலுள்ள அனைத்து ஆவணங்களின் விபரங்களைப் பட்டியலிடுகின்ற நூலகப் பட்டியலாகவோ அல்லது குறிப்பிட்ட துறை சார்ந்து அல்லது படைப்பாளர் சார்ந்து உருவாக்கப்படும் நூல்விவரப்பட்டியல் மற்றும் சொல்லடைவு மற்றும் சாராம்சச் செயற்பாடாகவோ இருக்கும். நூல்களையும் ஏனைய வளங்களையும் முறைப்படுத்தப்பட்ட வகையில் விவரித்து, பகுப்பாக்கம் செய்து, பதிவுகளைப் படிப்பதற்கு ஏற்ற வகையிலும், குறிப்பு எடுப்பதற்கு உதவும் வகையிலும், தர்க்க ரீதியாகவும் பயனுள்ள வகையிலும் ஒழுங்குபடுத்தி உருவாக்கப்படும் ஆய்வடங்கல் நூலகவியல் துறைசார்ந்து நூல்விவரப்பட்டியல் என அழைக்கப்படுகின்றது. இது குறித்த பொருள் சார்ந்ததாகவோ, படைப்பாளருடையதாகவோ, மொழி சார்ந்ததாகவோ, குறித்த காலப்பகுதி சார்ந்ததாகவோ, குறித்த வடிவம் சார்ந்ததாகவோ, குறிப்பிட்ட வெளியீட்டாளர் சார்ந்ததாகவோ இருக்கலாம். படைப்பாளர், தலைப்பு, வெளியீடு, வெளியீட்டு இடம், பதிப்பு, தொடர் குறிப்பு, தொகுதிகளின் எண்ணிக்கை, மேலதிக இணைப்புகள், விலை ஆகிய நூல்விவரத் தகவல்களை இவை உள்ளடக்குகின்றன. சில வெளியீடுகளுக்கு பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர் விவரங்களும் தேவைப்படும். இவற்றை வர்த்தகத் தகவல் எனவும் குறிப்படுவர்.<br />
வெளியீடுகளின் தலைப்புகளையும் ஏனைய விவரங்களையும் சரிபார்க்க உதவுதல், ஒரு குறிப்பிட்ட பொருளில் அல்லது மொழியில், குறிப்பிட்ட படைப்பாளர் அல்லது வெளியீட்டாளரின் நூல்கள் தொடர்பான தகவல்களைக் கண்டறிவதற்கு உதவுதல், ஒரு வெளியீட்டின் மதிப்பையும் அதன் பெறுமதியையும் மதிப்பிட உதவுதல், ஒரு வெளியீடு எந்தெந்தப் பதிப்புகளில் வெளியானது போன்ற ஒரு வெளியீட்டின் வரலாற்று ரீதியான, நூல்விவரம் சார்ந்த பின்னணித் தகவல்களை பெறுவதற்கு உதவுதல், படைப்பாளர் தொடர்பான நூல்விவரத் தரவுகளைப் பெற உதவுதல், ஒரு குறிப்பிட்ட பொருளில் உள்ள சிறந்த நூல்களை அறிய உதவுதல், ஒரு குறிப்பிட்ட காலப்பகுதி சார்ந்து அல்லது குறித்த ஒரு வடிவம் சார்ந்து வெளியான வெளியீடுகள் தொடர்பான தகவலைப் பெற உதவுதல் போன்ற பயன்களை நூல்விவரப்பட்டியல்கள் தருகின்றன.<br />
<br />
<b>1. வகைப்பாடு</b><br />
<br />
நூல்விவரப்பட்டியல்களை முறைப்படுத்தப்பட்ட முறை, பகுத்தாய்வு முறை, வரலாற்று முறை என மூன்று பிரதான பிரிவுகளாக வகைப்படுத்த முடியும். நூல்விவர ஆவணவாக்கமானது நூலின் அடிப்படைத் தகவல்களை மட்டும் தரும் அடிப்படை நூல்விவரப்பட்டியலாகவோ அல்லது நூலின் விவரங்களுடன் நூல் பற்றிய சிறு குறிப்புகளை உள்ளடக்கும் குறிப்புரை நூல்விவரப்பட்டியலாகவோ அதுவுமன்றி குறிப்பிட்ட நூல் தொடர்பான அதிகளவு விவரங்களைத் தரக்கூடிய விளக்க நூல்விவரப்பட்டியலாகவோ அமையலாம்.<br />
நூல் ஒன்றின் ஆத்மாவுடன் பேசும் நோக்கத்தைக்கொண்ட ஒரு செயற்பாட்டை ஆவணவாக்க நூல்விபர பணி என பெயரிடுகின்றார் கீழைத்தேச நூலகவியலின் தந்தையான எஸ்.ஆர். இரங்கநாதன்;. நூல்களின் உயிருடன் அதாவது கருத்துசார் உள்ளடக்கத்துடன் இணைந்து செய்யப்படும் பணியை - குறிப்பாக விசேட பொருட்துறை ஒன்றில் வெளியிடப்பட்ட நூல்கள் மற்றும் பருவ இதழ்க்கட்டுரைகளின் பேரின மற்றும் நுண்ணினக் கருப்பொருளின் பட்டியை ஆவண நூல்விவரப்பட்டியல் எனப் பெயரிடுவதுடன் அத்தகைய பட்டியானது விசேட பொருட்துறை வல்லுனர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யுமுகமாக தயாரிக்கப்படும்போது அது ஆவணவாக்கப்பட்டி என்றும் அத்தகைய பட்டியை உருவாக்கும் கலை ஆவணவாக்கம் எனவும் குறிப்பிடுகின்றார் <span style="font-family: "Times New Roman", serif; font-size: 11pt; line-height: 115%;">(Ranganathan 1974).</span><span style="font-family: Bamini; font-size: 11pt; line-height: 115%;"> </span><br />
<br />
நூல்கள் பகுப்பாக்கம் செய்யப்பட்டு, வகுப்பெண் இடப்பட்ட பின்னர் நூல் விவரத் தரவுகள் தருக்க முறை ஒழுங்கிலோ அல்லது ஏனைய பயனுள்ள ஒழுங்கமைப்பிலோ ஒழுங்குபடுத்தப்படும் நூல்விவரப்பட்டியல்கள் முறைப்படுத்தப்பட்ட வகையிலானவை. இம்முறையில் குறிப்பு எடுப்பதற்கும் படிப்பதற்கும் பொருட்டு, நூலை ஆராய்ந்து ஒவ்வொரு நூலுக்கும் சாதாரண அல்லது விரிவான பதிவுகளை தர்க்க ரீதியாகவும் பயனுள்ள வகையிலும் ஒழுங்குபடுத்துவர். ஒரு ஆக்கத்தின் பொருள் பல தலைப்புகளாகவும் உப தலைப்புகளாகவும் பிரிக்கப்பட்டு அவை ஒவ்வொன்றின் கீழும் பதிவுகள் அகரவரிசையில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும் நூல்விவரப்பட்டியல்கள் பகுத்தாய்வு முறையிலமைந்தவை. இதில் ஒவ்வொரு கட்டுரைகளிலுமுள்ள தகவல்களுக்குப் பரந்த ரீதியில் அகரவரிசைப் பொருட்; சொல்லடைவும் தயாரிக்கப்படும். ஒரு நூலை உருவாக்குவதற்குத் தேவையான தாள்களின் உருவாக்கம், அச்சுக்கலை, வெளியீடு, விளக்கப்படங்கள், வரைபட உருவாக்கம், நூல்கட்டு, நூல் பாதுகாப்பு உட்பட நூலின் உற்பத்தி முறைகளையும் அதன் வரலாற்றையும் உள்ளடக்கித் தயாரிக்கப்படுபவை வரலாற்று முறையிலமைந்த நூல்விவரப்பட்டியல்கள் ஆகும்.<br />
முறையான வகையில் நூல்களின் விவரங்களைத் தரும் பண்பானது பொதுவானதும் அதிகம் வழக்கிலுள்ளதுமான நடைமுறையாக உள்ளது. எம்மிடையே பெரும்பாலும் புழக்கத்தில் இருப்பது முறைப்படுத்தப்பட்ட முறையிலமைந்த நூல்விவரப்பட்டியல்களே. ஒவ்வொரு தனி ஆக்கத்தினதும் அதனுடன் தொடர்பான ஆக்கங்களினதும் தகவல்களை ஒப்பிட்டுப்பார்த்து தர்க்கரீதியாக அல்லது பயனுள்ள ஒழுங்கில் பட்டியல்படுத்தும் செய்முறையாக இது உள்ளது. ஆவணத்தின் வகை சார்ந்து அரிய நூல்களுக்கான நூல்விவரப்பட்டியல்கள்;, பருவஇதழ்களின் பட்டியல்கள், ஆய்வுக் கட்டுரைகளுக்கான பட்டியல்கள் என வகைப்படுத்தப்படுகிறது. உருவாக்க முயற்சி சார்ந்து இது படைப்பாளருக்கான நூல்விபரப்பட்டியல், பெயர் அறியப்படாத, புனைபெயர் ஆக்கங்களுக்கானவை, நிறுவன நூல்விவரப்பட்டியல் என வகைப்படுத்தப்படுகிறது. உள்ளடக்கம் சார்ந்து இது பொதுப் பொருட்துறை, சிறப்புப் பொருட்துறை சார்ந்தவை என வகைப்படுத்தப்படுகிறது. பொருள்சார் நூல்விவரப்பட்டியல்கள், தனிநபர் நூல்விவரப்பட்டியல்கள், நூல்விவரப் பட்டியல்களுக்கான நூல்விவரப்பட்டியல்கள் ஆகியன பொதுப் பொருட்துறை வகையைச் சார்ந்தவையாகும். ஒழுங்கமைப்பு சார்ந்து அகரவரிசையில் அமைந்தவை, கால அடிப்படையிலானவை, பொருட்துறை சார்ந்தவை என இவை வகைப்படுத்தப்படுகின்றன.<br />
<br />
ஈழம் சார்ந்து முறைப்படுத்தப்பட்ட நூல்விவர ஆவணவாக்கத்தின் முன்னோடி என்ற பெருமையை சைமன் காசிச்செட்டி பெறுகின்றார். 1848 ம் ஆண்டு யூன் 3, 1849 பெப்ரவரி 24, மற்றும் டிசம்பர் 1 ஆகிய திகதிகளில் இலங்கை றோயல் ஏசியாற்றிக் சங்கத்தில் இவரால் வாசிக்கப்பட்ட தமிழ் நூற்பட்டியலானது ஈழத்து நூல்விபரப்பட்டியல் வரலாற்றின் முன்னோடி முயற்சி எனக் கருதத்தக்கது. மூன்று பிரதான பொருட்தலைப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இப்பட்டியலின் முதலாவது பிரிவான மொழியியலில் 74 நூல்களின் விபரங்களும் இரண்டாவது பிரிவான புராண இலக்கியம் மற்றும் வரலாறு வாழ்க்கைச் சரிதம் என்ற பகுதியில் இந்துக்கள், கிறிஸ்தவர், இஸ்லாமியர் ஆகிய மூன்று மதம் சார்ந்தும் உள்ள படைப்பாளரின் 83 ஆக்கங்கள் பற்றிய தகவல்களும் மூன்றாவது பிரிவான சமயம், தத்துவம் பற்றிய பகுதியில் 154 நூல்களும் ஆக மொத்தம் 311 நூல்களின் விபரங்கள் இடம்பெறுகின்றன.(<span style="font-family: Bamini; font-size: 11.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: AR-SA; mso-bidi-theme-font: minor-bidi; mso-fareast-font-family: Calibri; mso-fareast-language: EN-US; mso-fareast-theme-font: minor-latin;">.(</span><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 11.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-US; mso-bidi-language: AR-SA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-language: EN-US; mso-fareast-theme-font: minor-latin;">Muthukumaraswamy 1992</span><span style="font-family: Bamini; font-size: 11.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: AR-SA; mso-bidi-theme-font: minor-bidi; mso-fareast-font-family: Calibri; mso-fareast-language: EN-US; mso-fareast-theme-font: minor-latin;">). </span><br />
<br />
<b>1.1 பொதுவான நூல்விவரப்பட்டியல்கள்</b><br />
<br />
பொது நூல்விவரப்பட்டியல்கள் நாடு, மொழி, இனம், என மேலும் வகைப்படுத்தப்படுகிறது. இது வியாபகத்தன்மையின் அடிப்படையில் சர்வதேசியப் பண்பு கொண்டது, தேசிய ரீதியானது, பிராந்திய ரீதியானது, பிரதேசரீதியானது, உள்ளுர் சார்ந்தது எனவும் வகைப்படுத்தப்படக் கூடியது.<br />
<br />
<b>1.11 சர்வதேசியப் பண்பிலமைந்தவை</b><br />
தனிநாயகம் அடிகளின் '<span style="font-family: "Times New Roman","serif"; font-size: 11.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-US; mso-bidi-language: AR-SA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-language: EN-US; mso-fareast-theme-font: minor-latin;">'Reference guide to Tamil Studies' </span> (1966), தமிழ் தவிர்ந்த ஏனைய மொழிகளில் வெளியிடப்பட்ட தமிழியல் சார்ந்த 1322 நூல்களை மானுடவியல், தொல்லியல், கலைகள், கிறிஸ்தவ பணி, அகராதிக்கலை, சமூக வரலாறு, இலக்கிய வரலாறு, மொழி, மொழியியல், சமயம், தத்துவம், பிரயாணம், நூல்விபரப்பட்டியல், பட்டியல்கள் ஆகிய பதினான்கு உப பொருட்தலைப்புகளின் கீழ் அட்டவணைப்படுத்துகின்றது. <span style="font-family: "Times New Roman","serif"; font-size: 11.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-US; mso-bidi-language: AR-SA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-language: EN-US; mso-fareast-theme-font: minor-latin;">(Thaninayakam 1966)</span><span style="font-family: Bamini; font-size: 11.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: "Times New Roman"; mso-bidi-language: AR-SA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-language: EN-US; mso-fareast-theme-font: minor-latin;"> </span><br />
இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட குமரேசன் அவர்களின் தனிப்பட்ட முயற்சியால் உருவான தமிழ்ப்புத்தகங்கள் தொடர்பான தகவல்களைத் திரட்டித் தரும் விருபா: தமிழ்புத்தகத்திரட்டு என்னும் வலைத்தளம் நூல்களின் நூல்விவரத் தகவல்களை கொண்டுள்ள இலத்திரனியல் ஆவணவாக்க முயற்சியாகும். இது இதுவரை 3473 நூல்களின் விவரங்களைத் தொகுத்திருக்கிறது.(எசைரடிய.உழஅ) ஒவ்வொரு பதிவும் தலைப்பு, பதிப்பு ஆண்டு, ஆசிரியர் பதிப்பு, பதிப்பகம், விலை, புத்தகப் பிரிவு, பக்கங்கள், ISBN இலக்கம் ஆகிய தகவல்களை உள்ளடக்குகின்றது. இதுதவிர மதிப்புரைகள் (207), மொழிபெயர்ப்புகள் (113) போன்றவற்றின் விவரங்களையும் இது கொண்டுள்ளது. சிந்தாமணி நிகண்டு, நூலக தகவல் அறிவியல் கலைக்களஞ்சிய அகராதி போன்றவை முழுமையான எண்ணிமப்படுத்தப்பட்டிருப்பதை நோக்கும் போது மூல ஆவணவாக்கப் பணியிலும் இது தற்போது நுழைந்திருப்பதை காட்டுகின்றது. <br />
<br />
உலகிலுள்ள பலதரப்பட்ட நூலகங்களிலும் வளநிலையங்களிலும் இருக்கின்ற இலங்கைத் தமிழர்களின் வரலாறும் பண்பாடும் சார்ந்த முதல்நிலைத் தகவல் வளங்களை ஆவணப்படுத்தும் முயற்சியானது 'pசiஅயசல ளழரசஉநள கழச hளைவழசல ழக வாந ளுசi டுயமெயn வுயஅடைள: ய றழசடன றனைந ளநயசஉh' என்ற தலைப்பில் நூலுருப்பெற்றிருக்கின்றது. இந்த ஆவணப்படுத்தலானது இருமொழி உருவாக்கமாகும். (குணசிங்கம் 2005).<br />
இலண்டனிலிருந்து 2002ம் ஆண்டு முதல் செல்வராஜா அவர்களால் வெளியிடப்படும் 'நூல்தேட்டம்' வெளியிடப்பட்ட இடம் சார்ந்து சர்வதேசியப் பண்பைக் கொண்டதொன்று. இது இலங்கை எழுத்தாளர்களினால் இலங்கையிலும், புலம்பெயர் நாடுகளிலும் அச்சுருவில் வெளியிடப்பட்ட நூல்கள் பற்றிய விபரங்களை ஆவணமாக்குகின்றது. இலங்கை எழுத்தாளர்களால், தமிழில் வெளியிட்ட அனைத்து நூல்களும் குறிப்புரையுடன் கூடியதாக இத்தொகுப்பில் இடம்பெறுகின்றது. ஒவ்வொரு தொகுதியிலும் 1000 நூல்கள் என்ற ரீதியில் இதுவரை பத்து தொகுதிகளில் 10000 ஈழத்துத் தமிழ் நூல்கள் பற்றிய தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. துண்டுப்பிரசுரங்கள், வரைபடங்கள், அச்சிடப்படாத கையெழுத்துப் பிரதிகள், ஒலி, ஒளிப்பதிவு நாடாக்கள், இறுவெட்டுகள் போன்றனவும் பெரும்பான்மையான கல்வெட்டுகள், ஞாபகார்த்த மலர்கள், சஞ்சிகைகள் என்பனவும் இத்தொகுதியில் சேர்க்கப்படவில்லை. எனினும், தனி ஆவணமாகக் கருதும் வகையில் வெளியிடப்பட்டிருக்கும் சஞ்சிகைகளின் சிறப்பு மலர்கள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. மேலும், சில கல்வெட்டுக்களும், ஞாபகார்த்த மலர்களும் தனிநூலின் வகைக்குள் அடங்கக்கூடியதான கனதியான அம்சங்களுடன் வெளிவந்திருப்பதால் அவையும் இத்தொகுதியில் சேர்த்துக் கொண்டுள்ளன. (செல்வராஜா 2002). மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வெளிவந்துள்ள தமிழ் நூல்களின் விபரத் தொகுப்பாக மலேசிய சிங்கப்பூர் நூல்தேட்டம் அமைந்துள்ளது. இந்நூலினையும் லண்டன் அயோத்தி நூலக சேவைகள் வெளியிட்டுள்ளது. மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் வெளிவந்த 756 நூல்களின் விபரங்கள் இதில் உண்டு.<br />
<br />
1.12 தேசியப் பண்பு கொண்டவை<br />
<br />
1970 இல் உருவான எவ்.எக்ஸ்.சி நடராசாவின் 'ஈழத்துத் தமிழ் நூல் வரலாறு' பகுத்தாய்வு முறை நூல்விவரப்பட்டியல் பண்பைக் கொண்டிருக்கிறது. (நடராசா 1970). நூலின் முதலாவது அத்தியாயம் இலங்கையின் அரசியல் வரலாற்றுக் காலத்தை அடிப்படையாகக் கொண்டு ஐந்து உப தலைப்புகளில் தமிழரது ஆக்கங்களை பகுப்பாய்வு செய்கிறது. இரண்டாவது அத்தியாயம் இலக்கியம் என்ற தலைப்பில் ஆறு வெளியீடுகளை ஆவணப்படுத்துகின்றது. மூன்றாவது அத்தியாயம் புராணங்கள் என்ற தலைப்பில் 21 வெளியீடுகளை பகுத்தாய்வு செய்கிறது.<br />
<br />
1955-70 காலப்பகுதியில் ஈழத்தில் எழுந்த தமிழ் நூல்களின் விவரங்களை சிறுகதைகள்(55), நாவல்கள், நாடகங்கள், பெரியோர் வரலாறு, கவிதைகள், சமயப் பாடல்கள்(30), சிறுவர் நூல்கள்(16), இலக்கியக் கட்டுரைகள், சமயக் கட்டுரைகள், பிற நூல்கள்(34), நாவலர் சம்பந்தமான நூல்கள்(11) ஆகிய பதினொரு தலைப்புகளில் ஒழுங்குபடுத்தித்தரும் கனகசெந்திநாதனின் 'ஈழத்துத் தமிழ்நூல் வழிகாட்டி' மொழிசார்ந்து தேசிய நூல்விவரப்பட்டியல் பண்பைக் கொண்டதொன்று. வரதரின் பலகுறிப்பு என்ற நூலில் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருந்த இந்த நூல்விவரப்பட்டியலானது பலரது வேண்டு கோளுக்கமைய மூல நூலிலிருந்து பிரித்தெடுத்து தனியாக உருவாக்கப்பட்ட ஆவணமாக, வெளியிடப்பட்டது. நூலின் தலைப்பு, ஆசிரியர், வெளியீட்டிடம், வெளியீட்டாளர், வெளியிடப்பட்ட ஆண்டு, பக்கம், விலை ஆகிய நூல்விவரத்தரவுகளை உள்ளடக்கி வரதர் வெளியீடாக இது உருவாக்கப்பட்டது. (செந்திநாதன் 1971)<br />
கலாநிதிப்பட்ட கற்கைநெறியைப் பூர்த்திசெய்யுமுகமாக 1984இல் வே.இ.பாக்கியநாதனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட 'தமிழ் ஆய்வுக்கு ஈழத்தின் பங்களிப்பு' என்ற நூற்றொகை ஆய்வின் திருத்தங்களுடன் கூடிய தட்டச்சுப் பிரதியொன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தின் ஆவணக்காப்பகப்பகுதியில் உண்டு. இது 1800-1948 வரையான காலப்பகுதியில் எழுந்த ஆக்கங்களை ஆவணப்படுத்துகின்றது. பெயரறியாத ஆக்கங்கள், நிறுவன வெளியீடுகள், சிறுபிரசுரங்கள், கட்டுரைகள், நூல்கள் உட்பட 2249 பதிவுகள் திருத்தங்களுடன் கூடிய தட்டச்சுப் பிரதியில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. பதிவுகள் அனைத்தும் தூயி தசமப் பகுப்புத்திட்டத்தின் பரந்த பொருட்தலைப்புகளின்; அடிப்படையில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன. 1987இல் இவ் ஆய்விற்குரிய கலாநிதிப்பட்டம் நூலாசிரியருக்கு வழங்கப்பட்டிருப்பினும் அதனது பிரதியைப் பெறமுடியவில்லை (பாக்கியநாதன் 1984).<br />
இலங்கை தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்களினால் எழுதப்பட்ட ஆங்கில நூல்களின் விபரப்பட்டியலாக 'ழேழடவாநவவயஅ' விளங்குகின்றது. இதுவரை ஒரு தொகுதி மாத்திரமே வெளிவந்துள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 414 நூல்கள் பதிவாக்கப்பட்டுள்ளன.<br />
இலங்கையில் முஸ்லிம் எழுத்தாளர்கள் ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பினை 1977 நூல்களில் கால அடிப்படையில் எடுத்துக்கூறும் 'சுவடி ஆற்றுப்படை' (4 தொகுதிகள் 1850-2000) முறைப்படுத்தப்பட்ட நூல்விவரப்பட்டியற் பண்பைக் கொண்டது. (ஜமீல் 1994).<br />
பேராசிரியர் எம்.எம். உவைஸ் அவர்களின் பிரத்தியேக நூலகத்திலுள்ள நூல்களின் விபரங்கள் அடங்கிய நூல்விபரப் பட்டியலை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஆவணப்படுத்தியிருக்கிறது. பேராசிரியர் மர்ஹூம், எம்.எம். உவைஸ் அவர்களின் பிரத்தியேக நூலகத்தைக் கையேற்கும் வைபவத்தை முகன்னிட்டு வெளியிடப்படும் சிறப்பு இதழ் என்ற தலைப்பிலான ஆக்கமானது அவரால் கையளிக்கப்பட்ட 383 தமிழ் ஆங்கில நூல்களின் விபரங்களை மட்டும் பட்டியல்படுத்துகின்றது. இஸ்லாமிய தமிழ் இலக்கியம், இஸ்லாமும் முஸ்லிம்களும், தமிழ் ஆய்வு ஆகிய மூன்று பிரதான பொருட்துறைகளின் கீழ் பல உப பொருட்துறைகள் பருவஇதழ்கள், கடிதங்கள், கையெழுத்துப் பிரதிகள,; பத்திரிகைக்கட்டுரைகள் என்பவற்றை உள்ளடக்கி தமிழ், ஆங்கிலம், சிங்களம் உட்பட் அரபு மொழியில் வெளிடப்பட்ட நானுறுக்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளடக்குகின்றன. (தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ?)<br />
கணபதிப்பிள்ளை அவர்களால் இலங்கையில் தமிழ் வெளியீடுகள் என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையானது வரலாற்று நூல்விபரப் பட்டியற் பண்பைக் கொண்டதொன்று கி. 13ம் நூற்றாண்டிலிருந்து ஈழத்தில் எழுந்த நூல்களையும் நூலாசிரியர்கள் பற்றிய வரலாற்றையும் இது வெளிக்கொணருக்pன்றது. (முயnயியவாippடையi 1958)<br />
<br />
<b>1.13 பிரதேசரீதியானவை</b><br />
1983ம் ஆண்டு வன்னிப் பிராந்திய தமிழாராச்சி மகாநாட்டு மலர் வன்னி தொடர்பாக எழுந்த நூல்கள், கட்டுரைகள் மற்றும் ஆய்வேடுகள் தொடர்பான விபரங்களை ஆணப்படுத்துகின்றது. நா. சுப்பிரமணியனின் தொகுப்பில் உருவான இந்த நூல்விவரப்பட்டியலானது யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்குப் பகுதிகள், முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை மாவட்டங்கள், புத்தளம், சிலாபம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளை உள்ளடக்கிய வன்னிப்பிரதேசத்தின் ஆக்கங்கள், பிரபந்தங்கள், நாட்டார் பாடல்கள், நாவல்கள், சிறுகதைத் தொகுதிகள், கவிதைத் தொகுதிகள், நாடக நூல்கள், நாட்டுக்கூத்து நூல்கள், ஆய்வு நூல்கள், மலர்கள், இதழ்கள், கட்டுரைகள், ஆய்வேடுகள், முதுகலைப்பட்ட ஆய்வேடுகள் ஆகிய பதின்மூன்று பொருட்தலைப்புகளில் (பின்னிணைப்பு உட்பட) 188 ஆக்கங்களின் விவரங்களை உள்ளடக்குகின்றது. (சுப்பிரமணியன் 1983)<br />
சி. அப்புத்துரை (1985) அவர்களால் 'காங்கேயன் கல்வி வட்டாரத்தில் எழுந்த நூல்கள்' என்ற தலைப்பில் தொகுக்கப்பட்ட நூல்விபரப்பட்டியலும், பிரதேசம் சார்ந்த நூல்களின் விவரங்களை முறைப்படுத்திய ரீதியில் தரும் பண்பைக் கொண்டிருக்கிறது.<br />
<br />
'<span style="font-family: "Times New Roman","serif"; font-size: 11.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-US; mso-bidi-language: AR-SA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-language: EN-US; mso-fareast-theme-font: minor-latin;">'Batticalonia'</span>' என்ற பெயரில் மட்டக்களப்பு பொது நூலகத்தின் நூலகராக இருந்த ஜோண் செல்வராஜா அவர்களால் உருவாக்கப்பட்ட மட்டக்களப்புப் பிரதேசம் சார்ந்த ஆக்கங்களின் தொகுப்பான நூல்விவரப்பட்டியலானது 29 முக்கிய பொருட்துறைகளில் 873 பதிவுகளை ஆவணப்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு பதிவும் ஆசிரியர், தலைப்பு, வெளியீட்டிடம், வெளியீட்டாளர் போன்ற பதிவுகளை உள்ளடக்குவதுடன் நூல்கள் மட்டுமன்றி பருவஇதழ்க் கட்டுரைகள், பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள், சிறப்புமலர்க் கட்டுரைகள் பொன்ற அனைத்தையும் உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ளது. ஆங்கில ஆக்கங்களின் விபரங்கள் முதலாவதாகவும் தமிழ் ஆக்கங்கள் அதற்கு அடுத்த நிலையிலும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. <span style="font-family: Bamini; text-align: justify;">(</span><span style="font-family: "Times New Roman", serif; text-align: justify;">Selvarajah</span><span style="font-family: Bamini; text-align: justify;"> 1988)</span><br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Bamini;"><o:p></o:p></span></div>
<br />
நல்லூர்ப் பிரதேசம் பற்றிய ஆக்கங்கள் அனைத்தையும் படைப்பாளர், பொருட்துறை, மொழி, காலம், வடிவம் போன்ற அம்சங்களை உள்ளடக்கி ஆவணப்படுத்தும் ஒரு முயற்சியே யாழ்ப்பாணத் தமிழியல் ஆய்வடங்கல்-1 என்ற தலைப்பில் நூலக விழிப்புணர்வு நிறுவகத்தினால் 2014இல் உருவாக்கப்பட்டிருக்கும் நூல்விவரத் தரவுகளின் தொகுப்பாகும். நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்கள் சார்ந்த ஆக்கங்களே இந்த ஆய்வடங்கலில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. பிரதேசத்தில் உருவாக்கம் பெற்ற பதிவுகள் தவிர்க்கப்பட்டு பிரதேசத்தைப் பற்றிய ஆக்கங்களே தெரிவு செய்யப்பட்டுள்ளன. பொதுவாக நல்லூர்ப் பிரதேச வரலாறானது யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாற்றுடனும், இலங்கைத் தமிழர் வரலாற்றுடனும் பின்னி பிணைந்து இருப்பதன் காரணமாக நல்லூர் பிரதேசம் சார்ந்த நூல்கள், கட்டுரைகள் மட்டுமன்றி நல்லூர் பிரதேசம் பற்றிய தகவல்களை உள்ளடக்கிய எந்தவொரு ஆக்கமும் இந்த ஆய்வடங்கலில் கருத்தில் கொள்ளப்பட்டிருப்பது ஆய்வடங்கல் தொகுப்பு முயற்சியில் இதுவரை கவனத்தில் கொள்ளப்படாத ஒரு புதிய அம்சமாக கொள்ள முடியும். அறிஞர்களின் வாழ்க்கை வரலாறானது தனி நூல் வடிவிலோ அல்லது கட்டுரை வடிவிலோ இல்லாதபோது பொதுவாக எழுந்த வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்புகளிலிருந்து அவை எடுக்கப்பட்டு அவற்றுக்குரிய பக்க எண்களுடன் இங்கு உள்ளடக்கப்பட்டிருப்பதன் காரணமான மேற்கோள் ஆய்வடங்கலுக்கான அம்சங்களையும் இந்த ஆய்வடங்கல் கொண்டிருக்கின்றது. நல்லூர்ப் பிரதேசம் சார்ந்த ஆக்கங்கள் முதன்மை அறிவியல்கள், சமூக அறிவியல்கள், பிரயோக அறிவியல்கள், மானுட அறிவியல்கள் என நான்கு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டிருப்பதுடன் ஒவ்வொரு பிரிவும் ஆக்கங்களின் விரிவுக்கேற்ப சுயமாக உருவாக்கப்பட்ட பல பொருட்தலைப்புகளின் கீழ் பதிவுகளை உள்ளடக்குகின்றன. ஒவ்வொரு பதிவும் ஆசிரியர், தலைப்பு, கட்டுரையாயின் கட்டுரை வெளிவந்த சஞ்சிகைகள் மற்றும் சிறப்பு மலர்களின் பெயர், தொகுதி மற்றும் பகுதி எண்கள், ஆண்டு, பக்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்குகின்றன. (நூலக விழிப்புணர்வு நிறுவகம் 2016)<br />
<br />
<b>1.2 பொருள்சார் நூல்விவரப்பட்டியல்கள்</b><br />
1885-1976 காலப்பகுதியை உள்ளடக்கி 1978இல் வெளிவந்த ஈழத்துத் தமிழ் நாவல்கள் ஒரு தேர்ந்த நூல்விவரப்பட்டியலாகும் (சுப்பிரமணியன் 1978). 439 பதிவுகளை உள்ளடக்கிய இது மூன்று பிரிவுகளைக் கொண்டது. முதலாவது பிரிவில் 210 நூல்களும், இரண்டாவது பிரிவில் செய்தித்தாள்கள் மற்றும் சஞ்சிகைகளில் வெளிவந்த 94 ஆக்கங்களும் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன. மூன்றாவது பிரிவானது நூல்விவரத் தரவுகளைக் கொண்டிராத 135 நாவல்களை பட்டியல்படுத்துகின்றது. இது படைப்பாளர் சார்ந்த அகரவரிசை ஒழுங்கமைப்பைக் கொண்டது<br />
<br />
நூலகவியலில் இலண்டன் டிப்புளோமா கற்கைநெறியின் பகுதித்தேவையை நிறைவு செய்யும்பொருட்டு திரு முருகவேள் அவர்களால் உருவாக்கப்பட்ட சைவம் தொடர்பான நூல்விவரப்பட்டியலானது 1960 வரை ஐரோப்பிய மொழிகளில் வெளிவந்த சைவம் தொடர்பான ஆக்கங்களைப் பட்டியற்படுத்துகின்றது. நூல்கள், நூலின் பகுதிகள், பருவஇதழ்க்கட்டுரைகள், சிறப்புமலர்களில் வெளிவந்த கட்டுரைகள், மாநாட்டு மலர்களில் வெளிவந்த கட்டுரைகள் உள்ளடக்கப்பட்ட அதேசமயம் பத்திரிகை சஞ்சிகைகளில் வெளிவந்த கட்டுரைகளும் ஆய்வேடுகளும் இதில் தவிர்க்கப்பட்டுள்ளன. ஆடிப்படை நூல்விவரத் தரவுகளை மட்டும் இது உள்ளடக்குகின்றது. <span style="font-family: Bamini; font-size: 11.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: AR-SA; mso-bidi-theme-font: minor-bidi; mso-fareast-font-family: Calibri; mso-fareast-language: EN-US; mso-fareast-theme-font: minor-latin;">(</span><span style="font-family: "Times New Roman","serif"; font-size: 11.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-US; mso-bidi-language: AR-SA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-language: EN-US; mso-fareast-theme-font: minor-latin;">Murugaverl</span><span style="font-family: Bamini; font-size: 11.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: AR-SA; mso-bidi-theme-font: minor-bidi; mso-fareast-font-family: Calibri; mso-fareast-language: EN-US; mso-fareast-theme-font: minor-latin;"> 1965). </span> 1984 காலப்பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகராக இருந்த திரு.சி.முருகவேள் அவர்களினால் தொகுத்து உருவாக்கப்பட்ட சித்த ஆயுர்வேத நூல்களுக்கான நூல்விவரப்பட்டியலானது மொழிசார் பண்பைக் கொண்டது. 1960களின் ஆரம்பத்தில் பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் பணிபுரிந்த காலத்தில் அந்த நூலகத்தில் உள்ள சமஸ்கிருத நூல்கள் பற்றிய விவரங்களைத் திரட்டுவதில் ஆரம்பித்த இப்பணியானது பின்னர் கண்டியைச் சுற்றியுள்ள தனியார் சேகரிப்புகளையும் உள்ளடக்கி சட்டம், கணிதம், வானவியல், மருத்துவம் ஆகிய பொருட்துறை சார்ந்து 3454 பதிவுகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டது. புத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள், மருந்து உற்பத்தியாளரால் வெளியிடப்பட்ட பட்டியல்கள், கையெழுத்துப் பிரதிகள் போன்றன இப்பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை. (<span style="font-family: "Times New Roman", serif; text-align: justify;">(Murugaverl 1984)</span><br />
<div class="MsoNormal" style="margin-bottom: .0001pt; margin-bottom: 0in; text-align: justify;">
<span style="font-family: "Times New Roman","serif";"><o:p></o:p></span></div>
<br />
<br />
பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தகவல் சேகரிப்பின் விளைவாக உருவாக்கப்பட்ட ஆங்கில ஆக்கங்களுக்கான குறிப்புரை நூல்விவரப்பட்டியலானது 2006இல் உருவாக்கம் பெற்றது. பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலைதீவுகள், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பாக உருவாக்கம் பெற்ற பத்திரிகை நறுக்குகள், பருவ இதழ்கள், அறிக்கைகள், பயிற்சிக் கையேடுகள், தனிப்பொருள் நூல்கள், சிறுநூல்கள், வலைத்தளங்கள், திரைப்படங்கள் போன்றவற்றிலிருந்து சேகரிக்கப்பட்ட ஆக்கங்களின் விபரங்களை இது உள்ளடக்குகின்றது. 1022 பதிவுகள் நாடுவாரியாக தொகுக்கப்பட்டிருக்கின்றன. (டுழபயயெவாயn 2006). இதே ஆசிரியரால் 2008இல் வறுமை மற்றும் முரண்பாடுகள் தொடர்பான ஆவணத் தொகுப்பு இருமொழியில் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஆங்கல மொழியில் 302 ஆக்கங்களும், தமிழில் 50 பதிவுகளும் இதில் உள்ளன. புநனெநசiபெ hரஅயnவையசயைn – என்ற தலைப்பில் தொகுக்கப்பட்ட குறிப்புரை நூல்விவரப்பட்டியலானது 355 பதிவுகளை உள்ளடக்கியது. பெண்களுக்கெதிரான வன்முறை, பெண்களின் உடல்நலம், வருமான உருவாக்கம், சமூக பங்கேற்பு போன்ற பெருந்துறைகளின்கீழ் பொது, இலங்கை என்ற உபபிரிவுகளில் பதிவுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. (டுழபயயெவாயn 2008)<br />
<br />
1993இல் சிவசண்முகராஜாவினால் எழுதப்பட்ட 'ஈழத்துச் சித்த மருத்துவ நூல்கள்: ஓர் அறிமுகம்' என்ற நூலும் விளக்க நூல்விவரப்பட்டியல் என்ற வகைக்குள் அடங்குகின்றது. (சிவசண்முகராஜா 1993) 1980களுக்குப் பின்னர் குறிப்பிட்ட படைப்பாளரின் ஆக்கங்களைப் பட்டியற்படுத்தும் பண்பு இனங்காணப்படுவதுடன் நாவலர், கைலாசபதி, சிவத்தம்பி, கமால்தீன், எவ்.எக்ஸ். சி நடசாசா ஆகியோரின் ஆக்கங்களின் விவரங்கள் பட்டியல்படுத்தப்பட்டு நூலுருவம் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.<br />
ஈழத்தமிழ் இலக்கியத்தில் அறிவியல் நூல்கள் என்ற தலைப்பில் வெளிவந்த ஆக்கம் அறிவியல் துறைசார்ந்த நூல்களை ஆவணப்படுத்தும் முயற்சியாகும் (அனந்தராஜ் 2004)<br />
வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், மீளாய்வுகள், ஆசிரியர் தலையங்கங்கள், சிறுகுறிப்புகள், கேள்விபதில்கள், அறிவியல் பருவ இதழ்களில் வரும் தொடர்புகள், சர்வதேச மாநாடுகளில் வெளியிடப்படும் கட்டுரைகள், சாராம்சங்கள், நூல்கள், நூலின் பகுதிகள், கலாநிதிப் பட்ட ஆய்வுகள், ஆய்வு அறிக்கைகள், போன்றவை. பருவ இதழில் வெளிவரும் மீளாய்வுகள், சஞ்சிகைகள் பத்திரிகைகளில் வெளிவரும் ஆக்கங்கள், வெளியிடப்படாத கையெழுத்துப் பிரதிகள் தவிர்க்கப்பட்டுள்ளன. 1440 பதிவுகளில் 226 பதிவுகள் ஆங்கிலமல்லாத மொழிகளில் வெளிவந்தவையாகும். (ளுசiமுயவொய 1991)<br />
<br />
1881-2003 வரையான சமஸ்கிருத நூல்களின் விபரங்களை ஆவணப்படுத்துகின்றது. (கிருஷ்ணானந்தசர்மா 2002). இத்தொகுப்பானது பேராசிரியர் கைலாசநாதக்குருக்கள் ஆய்வு மையம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம், அச்சுவேலி சிவஸ்ரீ குமாரசாமிக்குருக்களின் நூற்தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டது. கால அடிப்படையில் தொகுக்கப்பட்ட ஆக்கங்கள் அட்டவணை வடிவமைப்பில் நூலின் பெயர், ஆசிரியர், அச்சுப்பதிப்ப பதிப்பும் வெளியீடும் ஆகிய விபரங்களை மட்டும் உள்ளடக்குகின்றன.<br />
<br />
இலங்கையின் தேசியப் பத்திரிகையான தினகரன் பத்திரிகை ஆசிரியராக இருந்த சிவகுருநாதனால் உருவாக்கப்பட்ட இலங்கைத் தமிழ் ஊடகவியல் தொடர்பான குறிப்புரை நூல்விவரப்பட்டியலானது 1841-1932 வரையான காலப்பகுதியை உள்ளடக்கித் தயாரிக்கப்பட்டதாகும் (சிவகுருநாதன் 1993).<br />
1.3 தனிநபர் நூல்விவரப்பட்டியல்கள்<br />
ஒரு தனிநபரின் ஆக்கங்கள் அல்லது தனிநபரைப் பற்றி மற்றவர்கள் எழுதிய ஆக்கங்களின் தொகுப்பு இவ்வகைக்குள் அடங்கும். இலக்கிய துறையில் இத்தகைய நூல்விவரப்பட்டியல்கள் மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. குறித்த துறையின் பொருள் நிபுணர்களுக்கான முக்கிய தகவல் வளமாக அவை கருதப்படுகின்றன. தனிநபர் நூல்விவரப்பட்டியல்கள் படைப்பாளர் சார்ந்தவை, பொருட்துறை சார்ந்தவை என இரு வகையாகப் பாகுபடுத்தப்படுகின்றன.<br />
<br />
<b>1.31 படைப்பாளர் சார்ந்தவை</b><br />
ஒரு குறிப்பிட்ட படைப்பாளரின் ஆக்கங்கள் அனைத்தையும் தொகுத்து வெளிவரும் நூல்விவரப் பட்டியல்கள் இவ்வகைக்குள் அடங்கும். படைப்பாளரின் வாழ்க்கை வரலாறு, அவரது ஆக்கங்கள் பற்றிய விமர்சனங்கள்; என்பவற்றையும் இது உள்ளடக்கும். அவரால் எழுதப்படும் நூல்கள், பருவஇதழ்க் கட்டுரைகள், நூல்களுக்கு அவர் ஆற்றும் பங்களிப்புகள், அவரால் பதிப்பிக்கப்பட்ட ஆக்கங்கள், மொழிபெயர்ப்புகள், தகவல்கள் அனைத்தையும் இது உள்ளடக்கும். சிலசமயங்களில் படைப்பாளர் நூல்விவரப்பட்டியல்கள் சுய நூல்விவரப்பட்டியல்கள் என அழைக்கப்படுவதும் உண்டு. பெரும்பாலான படைப்பாளர் நூல்விவரப்பட்டியல்கள் சுருக்கமான தகவல்களைக் கொண்டிருப்பினும் கூட விவரமான முறையில் தொகுக்கப்படும் நூல்விவரப்பட்டியலானது பூரணமானதும் சரியானதுமான ஒரு பாடத்துறையை இனங்காணுவதற்கு உதவும். இலங்கை நூலகச் சங்கத்தின் நூலக தகவல் அறிவியல் டிப்புளோமாவின் பகுதித்தேவையை நிறைவு செய்யும் பொருட்டு பல தனிநபர் நூல்விவரப்பட்டியல்கள் தொகுக்கப்பட்டுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.<br />
அருட்தந்தை தனிநாயகம் அவர்களால் வெளியிடப்பட்ட ஆக்கங்களை ஆவணப்படுத்தும் முயற்சி தமிழாரம் என்ற நினைவு மலரில் கட்டுரை வடிவம் பெற்றிருக்கின்றது. அறிமுக உரை எதுவுமற்ற இந்தப் பட்டியலிலிருந்து இது கால அடிப்படையில் தொகுக்கப்பட்டிருப்பது தெரிகிறது. ஆங்கில மொழியில் எழுதப்பட்ட 112 ஆக்கங்கள் உட்பட 140 பதிவுகளை இது உள்ளடக்குகின்றது. ஒவ்வொரு பதிவும் தலைப்பு, நூலாயின் வெளியீட்டு விபரம், கட்டுரையாயின் இதழின் பெயர் தொகுதி எண் பகுதி எண், மாதம், ஆண்டு, பக்கம் ஆகிய விபரங்களைக் கொண்டிருக்கின்றது. யாழ்ப்பாண தொழில்நுட்ப நிறுவனத்தின் நூலகராக இருந்த திரு எஸ் தயாநாதன் அவர்களால் இத்தொகுப்புப் பணி உருவாக்கப்பட்டிருக்கிறது (வுhயலயயெவாயn 1983). பத்மம் என்ற பெயரில் வெளியிடப்பட்ட பேராசிரியர் பத்மநாதன் அவர்களின் பணிநயப்பு மலர் அவரின் ஆக்கங்களை ஆவணப்படுத்துகின்றது. நூல்கள், வெளியிடப்பட்ட கட்டுரைகள், கருத்தரங்கக் கட்டுரைகள் உட்பட அவரது படைப்புகளை மலராக்கக் குழு தொகுத்திருக்கிறது. (பத்மம் 2004).<br />
<br />
பேராசிரியர் ம.கருணாநிதி அவர்களின் படைப்புகள் அவர் சார்ந்து வெளியிடப்பட்ட மலரில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. இதில் நூல்கள்(9), மொழிபெயர்ப்புகள்(13), ஆராய்ச்சிகள்(16), கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள்(7) என மொத்தம் 45 ஆக்கங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. (கருணாநிதி 2014). பேராசிரியர் தில்லைநாதனின் ஆக்கங்கள் பற்றிய தொகுப்பு இரா வை.கனகரத்தினத்தின் முயற்சியில் மணிவிழா மலரில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது (கனகரத்தினம் 1997). பட்டியல் முறைமை, பகுப்பாய்வு, அகராதி முறைமை ஆகிய முன்று பிரிவுகளில் 132 பதிவுகள் ஒழங்கமைக்கப்பட்டுள்ளன. 1981-2014 காலப்பகுதியில் நூலகவியலாளர் செல்வராஜாவினால் வெளியிடப்பட்ட ஆக்கங்கள் அவரது மணிவிழா மலரில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. (குமரன் 2014).<br />
<br />
1988 இல் என். செல்வராசா அவர்களின் முயற்சியில் 1953-85 காலப்பகுதியை உள்ளடக்கி தொகுக்கப்பட்ட பேராசிரியர் கைலாசபதி அவர்களின் ஆக்கங்கள் தேர்ந்த நூல்விவரப்பட்டியற் பண்பைக் கொண்டது. இது கால வகைப்படுத்தல் சார்ந்த ஒழுங்கமைப்பைக் கொண்டுள்ளது. இதன் ஒழுங்கமைப்பு நான்கு பகுதிகளை கொண்டது. முதலாவது பகுதி தேர்ந்த நூல்விபரப்பட்டியலாக ஆண்டு ரீதியில் ஆக்கங்களை ஒழுங்குபடுத்துகின்றது. இரண்டாம் பகுதி பேராசிரியர் வழங்கிய உரைகளை தொகுத்து வழங்குகின்றது. மூன்றாம் பகுதி கட்டுரைகளின் அகரவரிசைச் சொல்லடைவையும் நான்காம் பகுதி வெளியீட்டாளர்களின் பட்டியலையும் உள்ளடக்குகின்றது. 1953-85 காலப்பகுயில் வெளிவந்த 238 ஆக்கங்களை இது உள்ளடக்குகின்றது. ஒவ்வொரு பதிவும் தலைப்பு, வெளியீட்டிடம், வெளியீட்டாளர், வெளியீட்டுத் திகதி, பக்கம் ஆகிய விவரங்களை உள்ளடக்குகின்றது. ஒருசில ஆங்கில ஆக்கங்கள் தவிர்ந்த ஏனையவை தமிழ் ஆக்கங்களாகும். நூல்கள் சிறப்புமலர்க் கட்டுரைகள், பருவ இதழ்க் கட்டுரைகள், பத்திரிகைக் கட்டுரைகள் வானொலி உரைகள் போன்றனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.(செல்வராசா 1988).<br />
<br />
2005இல் கார்த்திகேசு சிவத்தம்பியால் வெளியிடப்பட்ட Pசழகநளளழச மயசவாபைநளார ளுiஎயவாயஅடில: ய pசழகடைந என்ற நூலானது ஆசிரியரின் வாழ்க்கைக்குறிப்பு பணிகள், ஆர்வத்துநைகள், வகித்த பதவிகள் உட்பட அவரது ஆக்கங்களை ஆவணப்படுத்துகின்ற சுய நூல்விவரப்பட்டியலாகும். ஆங்கலத்தில் எழுதப்பட்ட நூல்கள் தனி நூல்கள்(15), ஒழுங்கமைப்பு பேணப்படாத ஆய்வுக் கட்டுரைகள்(44), கால வகைப்பாட்டில் அமைந்த 1959- 2005 வரையில் எழுதப்பட்ட 504 ஆக்கங்களை உள்ளடக்குகின்றது. பத்திரிகை சஞ்சிகைகளில் வெளி வெந்தவை (சிவத்தம்பி 2005)<br />
<br />
தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகர் எம்.எம் றிசாஉதீன் அவர்களால் 2007இல் தொகுக்கப்பட்ட 'ஏ.எம் அபூபக்கரின் எழுத்துப் பணிகள் என்ற நூல்விவரப்பட்டியல் தனிநபர் நூல்விவரப்பட்டியல் வகையைச் சார்ந்தது. இதில் நூல்கள்(20), வெளியிடப்படாத கையெழுத்துப்பிரதிகள்(47), பருவஇதழ் கட்டுரைகள்(117) ஆக மொத்தம் 164 பதிவுகள் தூயி தசம பகுப்பாக்கத்தின் பரந்த பொருட்தலைப்புகளின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. கையெழுத்துப்பிரதிகள் சிறு குறிப்புரைகளை உள்ளடக்குகின்றன. ஏனையவை அடிப்படை நூல்விவரத்தரவுகளை மட்டும் உள்ளடக்குகின்றன. ( சுநகயரனநநn 2007)<br />
பேராசிரியர் சந்திரசேகரம் அவர்களால் எழுதப்பட்ட நூல்கள், சஞ்சிகைக் கட்டுரைகள், பத்திரிகைகள் கட்டுரைகள் உள்ளடங்கலாக தேர்ந்த நூல்விவரப்பட்டியலாக உருவாக்கம் பெற்ற ஆக்கமானது 433 ஆக்கங்களை உள்ளடக்குகின்றது. எஸ்.எல். சியாத் அஹமட் அவர்களின் முயற்சியில் உருவான ஜெமீல் அவர்களின் அறிவாக்கங்கள் என்னும் ஆக்கம் நூல்கள்,மொழிபெயர்ப்புகள், பதிப்புகள், பதிப்புரைகள், கட்டுரைகள், இரங்கல் கட்டுரைகள், சொற்பொழிவுகள், வானொலி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆய்வுகள் போன்றவற்றை ஆவணப்படுத்துகின்றது. (அகமட் 2010). பதிவுகள் தூயி தசமப்பகுப்புத் திட்டத்தின் அடிப்படையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. வெளியிடப்படாத ஆய்வேடுகள்(2), நூல்கள்(11), பதிப்புப் பணிகள்(7), கட்டுரைகள்(71), கலைக்களஞ்சியக் கட்டுரைகள்(43), கலைச்சொல் அகராதிகள்(4), மொழிபெயர்ப்பு(1) ஆகியவற்றை உள்ளடக்கி மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வ. இன்பமோகனால்(2011) தொகுக்கப்பட்ட பேராசிரியர் சோ. கிருஸ்ணராசா அவர்களின் ஆக்கங்கள் 139 பதிவுகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டிருக்கின்றது. <br />
<br />
<b>1.32 பொருட்துறை சார்ந்தவை</b><br />
தனிநபரை ஒரு பொருட்துறையாகக்கருதி அவர் எழுதிய ஆக்கங்களை மட்டுமன்றி படைப்பாளரைப் பற்றிய ஆக்கங்களையும் தொகுக்கும் முயற்சியானது தனிநபர் நூல்விவரப்பட்டியலின் இன்னோர் அம்சமாகக் கருதத்தக்கது. இந்தவகையில் நாவலரது ஆக்கங்களையும் நாவலரைப்பற்றிய ஆக்கங்களையும் ஆவணப்படுத்தும் முயற்சியானது 'நாவலரியல்' என்ற தலைப்பில் இரு நூலகத்துறை சார்ந்தவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்விவரப்பட்டியலாக 1979இல் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையின் வெளியீடாக நூலுருவாக்கம் பெற்றது. படைப்பாளர் அகரவரிசை ஒழுங்கமைப்பில் ஆவணப்படுத்தப்பட்ட இந்த ஆக்கமானது 365 பதிவுகளை உள்ளடக்குகின்றது. (கிருஷ்ணகுமார், சிவனேசச்செல்வன் 1979). அதேசமயம் இதற்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்பே ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் விழா புத்தகக் கண்காட்சி (1969) என்ற பெயரில் நாவலர் எழுதி வெளியிட்ட நூல்கள்(26), உரை எழுதி வெளியிட்டவை (8), பரிசோதித்துப் பதிப்பித்தவை(39) நாவலரைப்பற்றிய நூல்கள்(14) என 87 நூல்களின் விவரங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமன்றி நாவலரது ஆக்கங்களின் கால அடிப்படையான வகைப்பாட்டையும் இந்நூல் உள்ளடக்குகின்றது.<br />
<br />
சுவாமி விபுலானந்தர் அவர்களின் ஆக்கங்கள் பற்றிய தொகுப்பு சற்குணம் என்பரால் தொகுக்கப்பட்டிருக்கிறது. அடிகளார் பற்றி அறிவதற்கு உதவும் நூல்களும் கட்டுரைகளும், அடிகளாரின் கட்டுரைகளும் நூல்களும் என இரு பகுதிகளாக இந்த ஆவணப்படுத்தல் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. (சற்குணம் 1969).<br />
1990ம் ஆண்டு திருமதி வி.பாலசுந்தரம் அவர்களின் ஆலோசனையில் செல்வி சபாபதியால் தொகுக்கப்பட்ட 'சொக்கனின் ஆக்கங்கள்' சமயமும்; தத்துவமும் (கவிதை-11, கட்டுரை-38), கல்வி(7), இலக்கணமும், மொழியியலும், மரபும் (இலக்கணம்-12), கலைகள்(4), இலக்கியம்(கவிதை-46 நாடகம்-88 கதை-39 அறிஞர் விமர்சனம்-86 போன்ற பொருட்தலைப்புகளை உள்ளடக்கி 356 பதிவுகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.<br />
<br />
<b>1.4 ஆவணவகைசார் நூல்விவரப் பட்டியல்கள்</b><br />
1.41 பத்திரிகைகள் சஞ்சிகைகளுக்கான நூல்விவரப்பட்டியல்கள்<br />
<br />
வலி தெற்குப் பிரதேசத்தின் பத்திரிகைகள், பருவ இதழ்கள், சஞ்சிகைகள், சிற்றிதழ்கள் - ஒரு நோக்கு என்ற தலைப்பில் சுன்னாகம் பொது நூலக பொன்விழா மலரில் வெளிவந்த கட்டுரையானது கால அடிப்படையில் அமைந்த விவரண நூல்விவரப்பட்டியல் வகையைச் சார்ந்தது. (கோப்பாய் சிவம் 2014).<br />
<br />
இலங்கையில் வெளிவந்த தமிழ்ப்பத்திரிகைகள் சஞ்சிகைகளை ஆவணப்படுத்தும் கோப்பாய் சிவத்தின் முயற்சியானது 1985இல் நூலுருப்பெற்றிருக்கிறது. 1841ம் ஆண்டில் வெளிவந்த உதயதாரகை என்ற பத்திரிகை முதற்கொண்டு 1984 வரை வெளிவந்த பத்திரிகை சஞ்சிகைகளின் விபரங்கள் இதில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.<br />
யாழ்ப்பாணத்தில் வெளிவந்த பத்திரிகைகள் சஞ்சிகைகளை ஆவணப்படுத்தும் சௌந்தரராஜசர்மாவின் முயற்சியானது ஒரு குறிப்புரையுடன் கூடிய நூல்விவரப்பட்டியலாக கட்டுரை வடிவில் கருத்தூண் சிறப்புமலரில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. எழுபது பதிவுகளை உள்ளடக்கும் இந்தக் கட்டுரையின் பல பதிவுகள் விவரணப்பாங்கைக் கொண்டவை. ஏனையவை குறிப்புரையுடன் கூடியவை. (சௌந்தரராஜசர்மா 2016);<br />
1.42 ஆய்வுக் கட்டுரைகள்<br />
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் உள்ள ஆய்வுக்கட்டுரைகளின் விபரங்கள் ஒரு பகுப்பாக்க ஒழுங்கில் அமையப்பெற்ற ஒரு நூல்விவரப்பட்டியலாக தட்டச்சுப் பிரதி வடிவில் உருவாக்கப்பட்டிருக்கின்றது. 2011ம் ஆண்டு வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்திற்குச் அனுப்பப்பட்ட 507 முதுமாணி, முது தத்துவமாணி மற்றும் கலாநிதிப்பட்ட ஆய்வுகளின் விபரங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. (யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 2011).<br />
1.43 உசாத்துணை சாதனங்கள்<br />
நூலக பட்டப்பின் தகைமைக் கற்கை நெறியின் பகுதித் தேவையைப் பூர்த்தி செய்யுமுகமாக உருவாக்கப்பட்ட நூல்விவரப்பட்டியலானது 1850-1985 காலப்பகுதியில் இலங்கையில் வெளிவந்த உசாத்துணை சாதனங்களைப் பட்டியல்படுத்துகின்றது. முழுமையான நூல்விபரத் தரவுகளுடன் வெளியீட்டின் தன்மை தொடர்பான சுருக்கக் குறிப்புடன் அமைந்த நூல்விவரப்பட்டியலானது ஒரு விளக்க நூல்விவரப்பட்டியலாகும். (முயசரயெயெவாயசயதயா 1986).<br />
<br />
<b>1.44 ஏட்டுச்சுவடிகள்</b><br />
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அன்பளிப்புகளாகப் பெறப்பட்ட ஓலைச் சுவடிகளை ஆவணப்படுத்தும் முயற்சி முன்னாள் நூலகர் திரு சி. முருகவேளால் இரு கட்டமாக ஆரம்பிக்கப்பட்டது. முதலாவது கட்டத்தில் 1992இல் 126 ஏட்டுச்சுவடிகள் தொடர்பான பதிவுகள் அரபு எண் ஒழுங்கில் கல்லச்சுப் பிரதியாக வெளியிடப்பட்டது. (முருகவேள் 1992). இதன் இரண்டாவது கட்டத்தில் 207 ஏட்டுச் சுவடிகள் பதியப்பட்டு 1997இல் நூலகத்தால் கல்லச்சுப் பிரதியாக வெளியிடப்பட்டது. (முருகவேள் 1997).இரு பட்டியல்களும் அரபு எண் ஒழுங்கில் அமைந்த பிரதான பட்டியல், தலைப்புச் சுட்டு மற்றும் பொருட் சுட்டை உள்ளடக்குகின்றன. ஒவ்வொரு பதிவும் தலைப்பு, தலைப்பு இல்லாதவிடத்து அடைப்புக்குறிகளுள் தொகுப்பாளரால் உருவாக்கப்பட்ட இடைத்தலைப்பு, பிரதியின் பாடத் தொடக்கம், பிரதியின் பாட முடிவு, ஓலைகளின் எண்ணிக்கை, அளவும் பிறபகுதிகளும், குறிப்புகள் ஆகியவற்றை உள்ளடக்குகின்றது. <br />
<br />
1.5 சொல்லடைவுகள்<br />
ஒரு ஆவணத்தின் அல்லது கோப்பின் பொருளடக்க விவரங்களை அடையாளம் காண்பதற்கான அல்லது அப்பொருளடக்கங்களின் அமைவிடங்களை அறிவதற்கான குறிப்புகளைக் கொண்டமைந்த ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட குறிப்புதவு பட்டி சொல்லடைவு என அறியப்படுகின்றது. .<br />
1992இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முதுநிலை உதவி நூலகராக இருந்த என். பாக்கியநாதனால் தொகுக்கப்பட்ட ளநடநஉவ டிiடிடழைபசயிhல ழக றசவைiபௌ ழக வாந யஉயனநஅiஉ ளவயகக கயஉரடவல ழக அநனiஉiநெ அகர வரிசையிலமைந்த சிறப்புப் பொருட்தலைப்புகளின் கீழ் ஆங்கில ஆக்கங்கள் (292), படைப்பாளர் ஒழுங்கிலமைந்த தமிழ் பிரசுரங்கள்(17), மருத்துவ நூலகத்தில் உள்ள ஆய்வேடுகள்(12) ஆக மொத்தம் 321 ஆக்கங்களை உள்ளடக்குகின்றது. <br />
<br />
றோயல் ஏசியாற்றிக் சொசைட்டியின் பருவ இதழில் வெளிவந்த கட்டுரைகளை ஆவணப்படுத்தும் முயற்சியில் 1990இல் 861 பதிவுகள் அகரவரிசை ஒழுங்கமைப்பில் உருவாக்கம் பெற்றிருக்கின்றது. (செல்வராஜா 1989). இது தட்டச்சுப் பிரதியாக உருவாக்கப்பட்ட ஒரு வெளியீடாக அமைகிறது.<br />
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆய்விதழான 'சிந்தனை'யில் 1976 முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விசார் உத்தியோகத்தர்களினால் பலதரப்பட்ட பொருட்துறைகளிலும் எழுதிவெளிவந்த 126 ஆய்வுக் கட்டுரைகளுக்கான சொல்லடைவானது ஆசிரிய அகரவரிசையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. (சத்தியசீலன் 1994)<br />
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையால் வெளியிடப்படும் யாழ்ப்பாணப் புவியியலாளனில் 1983-2000 காலப்பகுதியில் வெளிவந்த 141 கட்டுரைகளை உள்ளடக்கி தயாரிக்கப்பட்ட சொல்லடைவானது அகரவரிசை ஒழுங்கமைப்பைக் கொண்டது. (சின்னராசா 2003)<br />
இலங்கையில் வெளியிடப்பட்ட 150 சிறப்புமலர்களில் வெளிவந்த 2202 கட்டுரைகளைத் தொகுத்து வெளியிடப்பட்ட சொல்லடைவானது பரந்த பொருட்தலைப்புகளின் அடிப்படையில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கிறது (செல்வராஜா 2005).<br />
யாழ்ப்பாண விஞ்ஞான சங்கத்தினால் வருடந்தோறும் வெளியிடப்படும் ஆய்வுக்கட்டுரைகளை ஆவணப்படுத்தும் முயற்சியானது 2014இல் சிறுநூல் வடிவம் பெற்றிருக்கிறது. 1991-2012 காலப்பகுதியில் வெளிவந்த 137 ஆய்வுக்கட்டுரைகளின் விபரங்கள் தூயி தசமப்பகுப்புத் திட்டத்தின் பரந்த பொருட்தலைப்புகளின் அடிப்படையில் ஒழுங்குபடுத்தபட்டிருக்கின்றது. (Pசையடிhயமயச 2014)<br />
கனக செந்திநாதன் அவர்களது படைப்புகளை ஆவணப்படுத்தும் முயற்சியில் பிறந்ததே வி. கந்தவனம் அவர்களால் தொகுக்கப்பட்ட பூச்சரம் என்ற தலைப்பிலான ஆக்கமாகும். ஆக்கங்கள் . நூல்கள்(15), பதிப்பு நூல்கள்;(7), பாட நூல்கள்(6), சிறுகதைகள்(15), நாவல்கள்3), நாடகங்கள்(7), கட்டுரைகள்(73) உட்பட இரசிகமணி பற்றி எழுந்த ஆக்கங்களும் இதில் ஆவணப்படுத்தபட்டுள்ளன. (கந்தவனம் 1976).<br />
<br />
முடிவுரை<br />
நூல்விவர ஆவணவாக்கப் பணி என்பது பொருட்துறை சார்ந்த புலமை, ஆவணப்படுத்தலுக்கான நூலகவியல் அறிவு ஆகிய இரண்டையும் வேண்டிநிற்பதொன்று. நூல்விவர ஆவணவாக்கத்தில் ஈழத்தமிழர்களின் பங்களிப்பு சார்ந்து குறிப்பிடத்தக்க விடயம் நூலகத் துறை சார்ந்தவர்களைவிட நூலகத் துறை சாராதவர்களே ஆவணவாக்கப்பணியில் அதிகம் பங்களிப்புச் செய்திருக்கின்றனர். ஈழத்தமிழ்ச்சமூகத்தின் ஆவணவாக்கப்பணியானது தனிநபர்களின் ஆர்வத்தின் அடிப்படையிலேயே கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது என்பதை மேற்குறித்த ஆய்வு வெளிக்காட்டி நிற்பதுடன் ஆவணப்படுத்தலின் பலதரப்பட்ட பண்புகளிலும் ஆக்கபூர்வமான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதையும் இந்த ஆய்வு சுட்டி நிற்கிறது. கால அடிப்படையில் நோக்கும் போது 19ம் நூற்றாண்டின் இரண்டாவது காற்பகுதியில் ஆவணவாக்க முயற்சிகள் முதன்மை பெறத் தொடங்கிவிட்டமையை அவதானிக்க முடியும்.<br />
<br />
<br />
உசாத்துணைகளும் சான்றுகளும்<br />
<br />
<br />
<div class="MsoListParagraphCxSpFirst" style="margin-bottom: .0001pt; margin-bottom: 0in; margin-left: 27.0pt; margin-right: 0in; margin-top: 0in; mso-add-space: auto; mso-list: l0 level1 lfo1; text-align: justify; text-indent: -.25in;">
<!--[if !supportLists]--><span style="background-color: white;"><span lang="EN-GB" style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; color: black; font-family: "Times New Roman", serif; line-height: 115%;">1.<span style="font: 7pt "Times New Roman";"> </span></span><!--[endif]--><span style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; color: black; font-family: "Times New Roman", serif;">Gunasingam, </span><span lang="EN-GB" style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; color: black; font-family: "Times New Roman", serif; line-height: 115%;">Murugar (2005). Primary sources for history of the Sri
Lankan Tamils: a worldwide approach. Sydney: The south Asian Studies Center.
368p.<o:p></o:p></span></span></div>
<div class="MsoListParagraphCxSpMiddle" style="margin-bottom: .0001pt; margin-bottom: 0in; margin-left: 27.0pt; margin-right: 0in; margin-top: 0in; mso-add-space: auto; mso-list: l0 level1 lfo1; text-align: justify; text-indent: -.25in;">
<!--[if !supportLists]--><span style="background-color: white;"><span lang="EN-GB" style="color: black; font-family: "Times New Roman","serif"; line-height: 115%; mso-ansi-language: EN-GB; mso-bidi-font-size: 12.0pt; mso-fareast-font-family: "Times New Roman";"><span style="mso-list: Ignore;">2.<span style="font: 7.0pt "Times New Roman";">
</span></span></span><!--[endif]--><span lang="EN-GB" style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; color: black; font-family: "Times New Roman", serif; line-height: 115%;">Hettiaratchi,D.P.E(1927).<span style="mso-spacerun: yes;"> </span>Some literary undertakings of the late Simon
Casie Chitty. The Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society of
Great Britain & Ireland. Vol. 30, No. 80, Parts I, II, III and IV. (1927),
pp. 455-460. <o:p></o:p></span></span></div>
<div class="MsoListParagraphCxSpMiddle" style="margin-bottom: .0001pt; margin-bottom: 0in; margin-left: 27.0pt; margin-right: 0in; margin-top: 0in; mso-add-space: auto; mso-list: l0 level1 lfo1; text-align: justify; text-indent: -.25in;">
<!--[if !supportLists]--><span style="background-color: white;"><span style="color: black; font-family: "Times New Roman","serif"; mso-fareast-font-family: "Times New Roman";"><span style="mso-list: Ignore;">3.<span style="font: 7.0pt "Times New Roman";">
</span></span></span><!--[endif]--><span style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; color: black; font-family: "Times New Roman", serif;">Kanapathipillai,K.(1958) Tamil publications in
Ceylon. University of Ceylon Review. Vol XVI(1&2)1958.pp6-16<o:p></o:p></span></span></div>
<div class="MsoListParagraphCxSpMiddle" style="margin-bottom: .0001pt; margin-bottom: 0in; margin-left: 27.0pt; margin-right: 0in; margin-top: 0in; mso-add-space: auto; mso-list: l0 level1 lfo1; text-align: justify; text-indent: -.25in;">
<!--[if !supportLists]--><span style="background-color: white;"><span style="color: black; font-family: "Times New Roman","serif"; mso-fareast-font-family: "Times New Roman";"><span style="mso-list: Ignore;">4.<span style="font: 7.0pt "Times New Roman";">
</span></span></span><!--[endif]--><span style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; color: black; font-family: "Times New Roman", serif;">Karunantharajah,R.(1986). The Directories,
Encyclopedias, Yearbooks published in Sri Lanka during 1850-1985. [unpublished
post graduate Thesis] Colombo: University of Keleniya. <o:p></o:p></span></span></div>
<div class="MsoListParagraphCxSpMiddle" style="margin-bottom: .0001pt; margin-bottom: 0in; margin-left: 27.0pt; margin-right: 0in; margin-top: 0in; mso-add-space: auto; mso-list: l0 level1 lfo1; text-align: justify; text-indent: -.25in;">
<!--[if !supportLists]--><span style="background-color: white;"><span style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; color: black; font-family: "Times New Roman", serif;"><span style="mso-list: Ignore;">5.<span style="font: 7.0pt "Times New Roman";"> </span></span></span><!--[endif]--><span style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; color: black; font-family: "Times New Roman", serif;">Loganathan,Bhavani.(2006) An Annotated
bibliography on Violence against Women in South Asia:actions an
dresponse.-Colombo: International center for Ethnic Studies 424p.<o:p></o:p></span></span></div>
<div class="MsoListParagraphCxSpMiddle" style="margin-bottom: .0001pt; margin-bottom: 0in; margin-left: 27.0pt; margin-right: 0in; margin-top: 0in; mso-add-space: auto; mso-list: l0 level1 lfo1; text-align: justify; text-indent: -.25in;">
<!--[if !supportLists]--><span style="background-color: white;"><span style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; color: black; font-family: "Times New Roman", serif;"><span style="mso-list: Ignore;">6.<span style="font: 7.0pt "Times New Roman";"> </span></span></span><!--[endif]--><span style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; color: black; font-family: "Times New Roman", serif;">Loganathan,Bhavani.(2008). Gendering
Humanitarianism:An Annotated bibliography on Gender and Capacity building in
Armed Conflict.-Colombo: International center for Ethnic Studies 186p.<o:p></o:p></span></span></div>
<div class="MsoListParagraphCxSpMiddle" style="margin-bottom: .0001pt; margin-bottom: 0in; margin-left: 27.0pt; margin-right: 0in; margin-top: 0in; mso-add-space: auto; mso-list: l0 level1 lfo1; text-align: justify; text-indent: -.25in;">
<!--[if !supportLists]--><span style="background-color: white;"><span style="color: black; font-family: "Times New Roman","serif"; mso-fareast-font-family: "Times New Roman";"><span style="mso-list: Ignore;">7.<span style="font: 7.0pt "Times New Roman";">
</span></span></span><!--[endif]--><span style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; color: black; font-family: "Times New Roman", serif;">Murugaverl, S (1984). Bibliography of Siddha
Ayurveda: a preliminary Survey. Jaffna: University of Jaffna.(Unpublished
manuscripts).<o:p></o:p></span></span></div>
<div class="MsoListParagraphCxSpMiddle" style="margin-bottom: .0001pt; margin-bottom: 0in; margin-left: 27.0pt; margin-right: 0in; margin-top: 0in; mso-add-space: auto; mso-list: l0 level1 lfo1; text-align: justify; text-indent: -.25in;">
<!--[if !supportLists]--><span style="background-color: white;"><span style="color: black; font-family: "Times New Roman","serif"; mso-fareast-font-family: "Times New Roman";"><span style="mso-list: Ignore;">8.<span style="font: 7.0pt "Times New Roman";">
</span></span></span><!--[endif]--><span style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; color: black; font-family: "Times New Roman", serif;">Murugaverl,S (1965). A bibliographical guide to
the study of Saivism-a bibliography submitted in part requirement for
University of London Diploma in Librarianship. (Manuscript). 97p.<o:p></o:p></span></span></div>
<div class="MsoListParagraphCxSpMiddle" style="margin-bottom: .0001pt; margin-bottom: 0in; margin-left: 27.0pt; margin-right: 0in; margin-top: 0in; mso-add-space: auto; mso-list: l0 level1 lfo1; text-align: justify; text-indent: -.25in;">
<!--[if !supportLists]--><span style="background-color: white;"><span style="color: black; font-family: "Times New Roman","serif"; mso-fareast-font-family: "Times New Roman";"><span style="mso-list: Ignore;">9.<span style="font: 7.0pt "Times New Roman";">
</span></span></span><!--[endif]--><span style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; color: black; font-family: "Times New Roman", serif;">Muthukumaraswamy,V(1992). Some eminent tamils:
writers and other leading figures 19<sup>th</sup> to 20<sup>th</sup> centuries.
Colombo: Department of Hindu religious and cultural affairs. P.1-5. <o:p></o:p></span></span></div>
<div class="MsoListParagraphCxSpMiddle" style="margin-bottom: .0001pt; margin-bottom: 0in; margin-left: 27.0pt; margin-right: 0in; margin-top: 0in; mso-add-space: auto; mso-list: l0 level1 lfo1; text-align: justify; text-indent: -.25in;">
<!--[if !supportLists]--><span style="background-color: white;"><span lang="EN-GB" style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; color: black; font-family: "Times New Roman", serif; line-height: 115%;"><span style="mso-list: Ignore;">10.<span style="font: 7.0pt "Times New Roman";"> </span></span></span><!--[endif]--><span lang="EN-GB" style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; color: black; font-family: "Times New Roman", serif; line-height: 115%;">Prabhahar,V and Chandrasekar,K(2014). Article Index .
Proceedings of the Annual Sessions of Jaffna Science Association (1991-2012).
Jaffna: Jaffna Science Association, 2014.32p.<o:p></o:p></span></span></div>
<div class="MsoListParagraphCxSpMiddle" style="margin-bottom: .0001pt; margin-bottom: 0in; margin-left: 27.0pt; margin-right: 0in; margin-top: 0in; mso-add-space: auto; mso-list: l0 level1 lfo1; text-align: justify; text-indent: -.25in;">
<!--[if !supportLists]--><span style="background-color: white;"><span style="font-family: "Times New Roman","serif"; mso-fareast-font-family: "Times New Roman";"><span style="mso-list: Ignore;">11.<span style="font: 7.0pt "Times New Roman";"> </span></span></span><!--[endif]--><span style="font-family: "Times New Roman","serif";">Ranganathan,S.R(1974). Physical
bibliography for librarians. 2nd ed. Bombay: Asia publishing house. p21.<o:p></o:p></span></span></div>
<div class="MsoListParagraphCxSpMiddle" style="margin-bottom: .0001pt; margin-bottom: 0in; margin-left: 27.0pt; margin-right: 0in; margin-top: 0in; mso-add-space: auto; mso-list: l0 level1 lfo1; text-align: justify; text-indent: -.25in;">
<!--[if !supportLists]--><span style="background-color: white;"><span style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; color: black; font-family: "Times New Roman", serif;"><span style="mso-list: Ignore;">12.<span style="font: 7.0pt "Times New Roman";"> </span></span></span><!--[endif]--><span style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; color: black; font-family: "Times New Roman", serif;">Refaudeen, M.M.(2007) The Collected
writings of Dr.A.M. Aboobucker: a bibliography of the published and unpublished
works.- Oluvil, Library: South Eastern University of Sri Lanka,88p.<o:p></o:p></span></span></div>
<div class="MsoListParagraphCxSpMiddle" style="margin-bottom: .0001pt; margin-bottom: 0in; margin-left: 27.0pt; margin-right: 0in; margin-top: 0in; mso-add-space: auto; mso-list: l0 level1 lfo1; text-align: justify; text-indent: -.25in;">
<!--[if !supportLists]--><span style="background-color: white;"><span style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; color: black; font-family: "Times New Roman", serif;"><span style="mso-list: Ignore;">13.<span style="font: 7.0pt "Times New Roman";"> </span></span></span><!--[endif]--><span style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; color: black; font-family: "Times New Roman", serif;">Selvarajah, N (2010). Noolthettam: an
annotated bibliography of 1000 published writings in Tamil language, by Sri
Lankan Tamils, home and abroad. Vol. 6. London: Ayothy Library Services.<o:p></o:p></span></span></div>
<div class="MsoListParagraphCxSpMiddle" style="margin-bottom: .0001pt; margin-bottom: 0in; margin-left: 27.0pt; margin-right: 0in; margin-top: 0in; mso-add-space: auto; mso-list: l0 level1 lfo1; text-align: justify; text-indent: -.25in;">
<!--[if !supportLists]--><span style="background-color: white;"><span style="color: black; font-family: "Times New Roman","serif"; mso-fareast-font-family: "Times New Roman";"><span style="mso-list: Ignore;">14.<span style="font: 7.0pt "Times New Roman";">
</span></span></span><!--[endif]--><span style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; color: black; font-family: "Times New Roman", serif;">Selvarajah, N(1989). An index to the journal of
the Royal Asiatic Society(Ceylon Branch). Jaffna: Evelyn Rutnam Institute for
Intercultural Studies. 138p.<o:p></o:p></span></span></div>
<div class="MsoListParagraphCxSpMiddle" style="margin-bottom: .0001pt; margin-bottom: 0in; margin-left: 27.0pt; margin-right: 0in; margin-top: 0in; mso-add-space: auto; mso-list: l0 level1 lfo1; text-align: justify; text-indent: -.25in;">
<!--[if !supportLists]--><span style="background-color: white;"><span style="color: black; font-family: "Times New Roman","serif"; mso-fareast-font-family: "Times New Roman";"><span style="mso-list: Ignore;">15.<span style="font: 7.0pt "Times New Roman";">
</span></span></span><!--[endif]--><span style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; color: black; font-family: "Times New Roman", serif;">Selvarajah,S.J (1988). Batticaloania: a
bibliography of Batticaloa. Batticaloa: Municipal Council.<o:p></o:p></span></span></div>
<div class="MsoListParagraphCxSpMiddle" style="margin-bottom: .0001pt; margin-bottom: 0in; margin-left: 27.0pt; margin-right: 0in; margin-top: 0in; mso-add-space: auto; mso-list: l0 level1 lfo1; text-align: justify; text-indent: -.25in;">
<!--[if !supportLists]--><span style="background-color: white;"><span style="color: black; font-family: "Times New Roman","serif"; mso-fareast-font-family: "Times New Roman";"><span style="mso-list: Ignore;">16.<span style="font: 7.0pt "Times New Roman";">
</span></span></span><!--[endif]--><span style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; color: black; font-family: "Times New Roman", serif;">Sri Kantha, Sachi (1991). Prostitute in medical
literature: an annotated bibliography. New York: Greenwood press,1991. 245p<o:p></o:p></span></span></div>
<div class="MsoListParagraphCxSpMiddle" style="margin-bottom: .0001pt; margin-bottom: 0in; margin-left: 27.0pt; margin-right: 0in; margin-top: 0in; mso-add-space: auto; mso-list: l0 level1 lfo1; text-align: justify; text-indent: -.25in;">
<!--[if !supportLists]--><span style="background-color: white;"><span style="color: black; font-family: "Times New Roman","serif"; mso-fareast-font-family: "Times New Roman";"><span style="mso-list: Ignore;">17.<span style="font: 7.0pt "Times New Roman";">
</span></span></span><!--[endif]--><span style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; color: black; font-family: "Times New Roman", serif;">Thani Nayagam, Xavier S. (1966).<span style="mso-spacerun: yes;"> </span>A Reference guide to Tamil Studies: books.
Kuala Lumpur:University of Malaya Press.122p.<o:p></o:p></span></span></div>
<div class="MsoListParagraphCxSpMiddle" style="margin-bottom: .0001pt; margin-bottom: 0in; margin-left: 27.0pt; margin-right: 0in; margin-top: 0in; mso-add-space: auto; mso-list: l0 level1 lfo1; text-align: justify; text-indent: -.25in;">
<!--[if !supportLists]--><span style="background-color: white;"><span style="color: black; font-family: "Times New Roman","serif"; mso-fareast-font-family: "Times New Roman";"><span style="mso-list: Ignore;">18.<span style="font: 7.0pt "Times New Roman";">
</span></span></span><!--[endif]--><span style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; color: black; font-family: "Times New Roman", serif;">Thayanathan,S (1983). Published work of
Xavier<span style="mso-spacerun: yes;"> </span>S. Thani Nayakam. Tamilaram:
Dedicated to the memory of Father Thani Nayakam. Jaffna: Theepam Institute, p
97-107<o:p></o:p></span></span></div>
<div class="MsoListParagraphCxSpLast" style="margin-bottom: .0001pt; margin-bottom: 0in; margin-left: 27.0pt; margin-right: 0in; margin-top: 0in; mso-add-space: auto; mso-list: l0 level1 lfo1; text-align: justify; text-indent: -.25in;">
<!--[if !supportLists]--><span style="background-color: white;"><span style="color: black; font-family: "Times New Roman","serif"; mso-fareast-font-family: "Times New Roman";"><span style="mso-list: Ignore;">19.<span style="font: 7.0pt "Times New Roman";">
</span></span></span><!--[endif]--><a href="http://www.viruba.com/"><span style="color: black; font-family: "Times New Roman","serif"; text-decoration: none; text-underline: none;">www.viruba.com</span></a></span><span style="background: white; color: black; font-family: "Times New Roman","serif";"><o:p></o:p></span></div>
<br />Srikanthaluxmyhttp://www.blogger.com/profile/02621345440975786756noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-14981721.post-40663919734041194372017-05-11T08:06:00.000-07:002017-05-11T08:06:14.829-07:00 கல்வி<div style="text-align: center;">
<b>சுயகற்றலுக்கு வாய்ப்பளிக்கும் நூலகங்களில் மையம் கொள்ள வேண்டிய இலங்கையின் கல்வித்துறை பின்லாந்தின் கல்விமுறை தரும் புதியசிந்தனை</b></div>
<br />
இலங்கையின் அபிவிருத்திச் சூழலில் சமூக செயன்முறையின் முக்கிய அம்சமாக கல்வி காணப்படுவதுடன்; பாடசாலைகள் சமூகத்தில் முக்கியமான அங்கமாகக் காணப்படுகின்றன. மாணவரிடையேயான பல்வகைப்பட்ட ஆற்றல்களும், திறன்களும் பாடசாலையினூடாக விருத்தி செய்யப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்தகைய நிலையில் மாணவர்களிடையே வளர்த்தெடுக்கப்படவேண்டிய அறிவுத் திறன, சிந்தனைத் திறன், தொடர்பாடற் திறன், தொழினுட்பத் திறன், ஊடகத்திறன், கணித அறிதிறன், செயலாக்கத் திறன் போன்ற முக்கிய திறன்களின் வரிசையில் அண்மைக் காலங்களில் மிக முக்கியமாக அதிகம் பேசப்படுகின்ற பதமாக தகவல் அறிதிறன் காணப்படுகின்றது. இது தேவையான தகவலைக் கண்டறிதல், மீளப்பெறல், பகுப்பாய்வு செய்தல், பயன்படுத்தல் முதலிய திறன்களின் தொகுதியாக அமைகின்றது.<br />
<br />
<!--[if gte vml 1]><v:shapetype id="_x0000_t75"
coordsize="21600,21600" o:spt="75" o:preferrelative="t" path="m@4@5l@4@11@9@11@9@5xe"
filled="f" stroked="f">
<v:stroke joinstyle="miter"/>
<v:formulas>
<v:f eqn="if lineDrawn pixelLineWidth 0"/>
<v:f eqn="sum @0 1 0"/>
<v:f eqn="sum 0 0 @1"/>
<v:f eqn="prod @2 1 2"/>
<v:f eqn="prod @3 21600 pixelWidth"/>
<v:f eqn="prod @3 21600 pixelHeight"/>
<v:f eqn="sum @0 0 1"/>
<v:f eqn="prod @6 1 2"/>
<v:f eqn="prod @7 21600 pixelWidth"/>
<v:f eqn="sum @8 21600 0"/>
<v:f eqn="prod @7 21600 pixelHeight"/>
<v:f eqn="sum @10 21600 0"/>
</v:formulas>
<v:path o:extrusionok="f" gradientshapeok="t" o:connecttype="rect"/>
<o:lock v:ext="edit" aspectratio="t"/>
</v:shapetype><v:shape id="Picture_x0020_1" o:spid="_x0000_s1026" type="#_x0000_t75"
alt="http://www.periyarpinju.com/new/images/stories/2015/oct/pinju11.jpg"
style='position:absolute;margin-left:343.1pt;margin-top:480.9pt;width:185.45pt;
height:88.1pt;z-index:251658240;visibility:visible'>
<v:imagedata src="file:///C:\Users\ADMINI~1\AppData\Local\Temp\msohtmlclip1\01\clip_image001.jpg"
o:title="pinju11" cropright="3760f"/>
<w:wrap type="square"/>
</v:shape><![endif]--><!--[if !vml]--><!--[endif]-->ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ளும் தேவையை முன்னிட்டு ஒரு மொழியின் அடிப்படையை மட்டும் கற்றுக் கொள்வதன் மூலம் வாசிப்பதற்கும் எழுதுவதற்குமான ஆற்றல் என்று பொருள் கொள்ளப்பட்ட எழுத்தறிவு அல்லது அறிதிறன் என்ற தனிப்பதமானது பொருட்துறைகளை நன்கு விளங்கிக் கொள்வதற்கான ஆற்றல், தகவலை நன்கு விளங்கிக் கொற்வதற்கும் தொழில்நுட்பக்கருவிகளை நன்கு கையாள்வதற்குமான ஆற்றல் என்ற விரிந்த வரைவிலக்கணத்தைக் கொண்ட தகவல் அறிதிறன் என்ற கூட்டுப்பதமாக அண்மைக் காலங்களில் வளர்ச்சியடைந்திருக்கின்றது. இந்நிலையில் மாணவர்களின் தகவலறிதிறன் மேம்பாட்டில் கல்விக்கொள்கை முக்கிய பங்கு வகிக்கிறது.<br />
<br />
'பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு' (OCED) என்பது வளர்ச்சியடைந்த நாடுகளின் கூட்டமைப்பு. இதன் சார்பில் தங்கள் நாட்டு மாணவர்களின் கல்வித் திறன் குறித்த ஆய்வு அவ்வப்போது நடைபெறும். இதற்கு <span style="font-family: "Times New Roman","serif"; font-size: 12.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-language: EN-US;">PISA-Programme
for International Students Assessment</span> என்று பெயர். குறித்த ஆய்வின்படி உலகின் முன்னணி நாடுகளிடையே பின்லாந்து எப்போதும் முன் வரிசையிலேயே இடம் பிடிக்கிறது. இந்நாட்டின் கல்விக்கொள்கையின் இரகசியம் உலகக் கல்வியியலாளர்களின் புருவத்தை உயர்த்தி விட்டிருக்கிறது. 'அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்?' என அவர்களை எட்டிப்பார்க்க வைத்திருக்கிறது.<br />
பின்லாந்து குடியரசு வட ஜரோப்பா கண்டத்தில் ஆர்டிக் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 338,424 சதுர கிலோ மீட்டர்கள். இதன் தலைநகர்: ஹெல்சிங்கி பல்லாயிரக்கணக்கான ஏரிகளும், காடுகளும், தீவுகளும் மற்றும் சதுப்பு நிலம் கொண்ட நாடாக விளங்குகிறது. எண்ணிலடங்கா ஆறுகள் நாடு முழுவதும் ஓடுவதால் சதுப்பு நிலங்கள் ஏராளம் உள்ளன. 2015 அனுமான கணக்கெடுப்புப்படி இந்நாட்டினர் மொத்தம் 5,483,424 பேர். இவர்களில் பெரும்பான்மை மக்கள் ஃபின் இனத்தவர்கள். ஃபின்னிஷ் மற்றும் ஸ்வீடிஷ் ஆகியவை ஆட்சி மொழிகளாக உள்ளன. அலைபேசிகளின் மூலம் நமக்கு அறிமுகமான நோக்கியா நிறுவனத்தின் தாய்நாடு பின்லாந்து. உலக அளவில் 'கல்வியின் மெக்கா' என அழைக்கப்படுவதும் பின்லாந்துதான்.<br />
பின்லாந்தின் தேசிய நூலகம் ஹெல்சிங்கியில் அமைந்துள்ளது. மொத்தக்குடித்தொகையான ஜந்தரை மில்லியன் மக்களுக்கும் தலா எட்டுநூல்கள் என்ற வகையில் சுமார் 40 மில்லியன் நூல்கள் பல்வேறு நூலகங்களிலும் பாதுகாக்கப்பட்டுள்ளன. 837 பொதுநூலகங்கள் 166 நடமாடும் நூலகங்கள் 58 நிறுவன நூலகங்கள் ஒரு கடலில் மிதக்கும் நூலகம் என சுமார் ஆயிரத்துக்குமேற்பட்ட நூலகங்களைக் கொண்ட பின்லாந்தை 'நூலகங்களின் தேசம்' என சர்வதேச நூலகச்சங்கங்களின் சம்மேளனம் (IFLA) வர்ணித்துள்ளது.<br />
<br />
பின்லாந்தில் ஏழு வயதிலிருந்Nது ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது. அதுவரை சுயதேடலுக்கான சுதந்திரம் அக்குழந்தைக்கு வழங்கப்படுகிறது. எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில் இருந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும் கற்கிறது. இலை உதிர்வதும், செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும் குழந்தைக்கு அடிப்படைக் கல்வியாகிறது. குழந்தை தனது தகவற்சூழலிலிருந்தே தனக்கு தேவைப்படும் தகவலைக் கண்டறிவதற்கு முனைகிறது. இப்படிநிலையிலே குழந்தையின் தகவலறிதிறன் இயல்பாக முளைவிடத்தொடங்குகிறது.<br />
<br />
இத்தகைய கல்விச்சூழலை இலங்கையின் இன்றைய கல்வி;ச்சூழலோடு ஒப்பிடும் போது இலங்கையின் கல்விக்கொள்கை மறுசீரமைக்கப்பட வேண்டிய தேவை உணரப்படுகிறது. பரீட்சை நோக்கிலான வகுப்பறைக்கல்வியில் அறிவு அதிவேக வளர்ச்சி அடையும் என்ற இலங்கையின் தற்காலக் கல்விக்கொள்கையை வேரோடு பிடுங்கி எறியும வகையிலமையும்; பின்லாந்தின் சுயதேடல் நோக்கிலான சுதந்திரக்கல்வி இலங்;கையில் நூலகங்களின் நுழைவாயிலை அகலத்திறந்து வைத்திருக்கிறது.<br />
<br />
எங்கள் பண்டைய கல்விமுறையில் ஏழு வயதில் குருகுலக்கல்விக்குச் சென்றும் திண்ணைப்பள்ளிக்கும் சென்று கற்றதைப்போல ஏழு வயதில பள்ளிக்குச் செல்லும் பின்லாந்துக் குழந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அண்ணளவாக ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறையில் தன்னிச்சையாக வளர்கிறது. பாடசாலை இயங்கும் நேரம் இலங்கைப் பாடசாலைகளைப் போலன்றி மிக மட்டுப்படுத்தப்பட்டது. அந்த நேரத்திலும்கூட, படிப்புக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இசை, ஓவியம், விளையாட்டு, மற்றும் பிற கலைகளுக்கும் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் ஓய்வறை இருக்கிறது. படிக்கப் பிடிக்கவில்லை அல்லது சோர்வாக இருக்கிறது என்றால், மாணவர்கள் அங்கு சென்று ஓய்வு எடுக்கலாம். நூலகத்திற்குச் சென்று விரும்பியதைக்கற்கலாம். இதனால் தான் ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடும் உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய தரவரிசை ஆய்வில்; பின்லாந்து எப்போதும் முன்னணியில் இருக்கிறது.<br />
இலங்கையில் வலுவான சமூகத்தின் உற்பத்தி மையங்களாகக் காணப்படும் பாடசாலைகள் பரிட்சைக்கான தயார்ப்படுத்தும் பொறிமுறை முனையங்களாக தம்மை தற்காத்துக்கொள்வதில், பெறுபேறுகளில் போட்டியிட்டுக்கொள்வதில் அதிக அக்கறை காட்டுகின்றன. இதன் விளைவாக மாணவரிடையே பிணக்குகள் அதிகரிக்கும் மனஅழுத்தம் போதைப்பாவனை என்பவற்றுடன் பாடசாலை இடைவிலகலும் அதிகரித்துக் காணப்படுகின்றன. ஆனால் பின்லாந்தின் கதை வேறு. அங்கு 13 வயது வரை தரம் பிரிக்கும் கலாசாரம் கிடையாது. கற்றலில் போட்டி கிடையாது என்பதால், சக மாணவர்களைப் போட்டியாளர்களாகக் கருதும் மனப்பாங்கும் இல்லை பரீட்சைகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மன உளைச்சல்கள் மாணவர்களுக்கு இல்லை. தேர்ச்சி மதிப்பீட்டு அறிக்கைகள் இல்லை. தங்கள் பிள்ளையின் கற்றல் திறன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள் விரும்பினால், தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம். தேர்வுகள் அடிப்படை முறைகளாக இல்லாத இந்தக் கல்வி முறையில் பயின்றுவரும் மாணவர்கள்தான், உலகளாவிய அளவில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றனர். சுயதேடல் நோக்கிலான கல்விக்கு அனுகூலமான பாடசாலை நூலகங்கள் இருந்தும் வாசிக்க வாய்பபளிக்காத இலங்கையின் பாடப்புத்தகக் கல்வி மாணவர்களின் சுயசிந்தனைத்திறனை மழுங்கடிக்கிறது.<br />
இலங்கையில் இலவசக்கல்வி என்ற பெயரில் அனைவருக்கும் அடிப்படைக்கல்வி புகட்டப்படுகின்ற போதிலும் அதில் தனியார் துறையின் செல்வாக்கு மிகுதியாகவே காணப்படுகிறது. தனியார் பாடசாலைகள் சர்வதேச பாடசாலைகள் தனியார் கல்வி நிறுவனங்கள் மேலதிக வகுப்புக்கள் என நீளும் கல்வியை வைத்துப் பணமீட்டும் நடைமுறைகள் இலங்கைக் கல்விமுறையில் இன்னமும் பிரியாத வரமாக வளர்ந்து செல்கின்றன. பின்லாந்தில் தனியார் பாடசாலை முறை கிடையாது. அங்கு கல்வி என்பது முழுமையாக அரசின் வசம். கோடீசுவரராக இருந்தாலும், நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அனைவரின் குழந்தைகளும் ஒரே பள்ளியில்தான் படிக்க வேண்டும் அனைவருக்கும் சம தரமுள்ள கல்வி என்ற உத்தரவாதம் உள்ளது. அதனால்; பின்லாந்தில் 99 சதவிகிதம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர். அதில் 94 சதவிகிதம் பேர் உயர்கல்விக்குச் செல்கின்றனர்.<br />
இலங்கையில் ஆசிரியப்பணி என்பது பட்டதாரிகளுக்கான அடிப்படை வேலை வாய்ப்பாக அதிக எண்ணிக்கையில் அரசியல் தலையீடுகளைக் கொண்ட சேவைப்புலமாக இனங்காண முடிகிறது. குறிப்பாக ஆசிரிய பயிற்சிக்கலாசாலைகளில் பயிற்சிபெறாத சான்றிதழ்ப் பட்டதாரிகள் பாடத்தேர்ச்சிக்கும் கற்பித்தற்துறைக்கும் பொருந்தாத ஆசிரிய நியமனங்கள் என நீளும் குறைபாடுகளிடையே அவர்களின் நடத்தைக்கோலப்பிறழ்வுகளால் மதிப்பிழக்கும் இலங்கை ஆசிரியத்தொழில் போல அல்லாமல் பின்லாந்தில் ஆசிரியர் பணி என்பது மிகுந்த சமூகக் கௌரவம் உடையது. மூன்றில் ஒரு பின்லாந்து குழந்தைக்கு, ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ் நாள் லட்சியமாக உள்ளது. அரசின் கொள்கை வகுக்கும் முடிவுகளில், திட்டங்களின் செயலாக்கத்தில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.<br />
பின்லாந்தில் மேல்நிலை வகுப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களில் இருந்து ஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஐந்து ஆண்டுகள் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்து கடும் பயிற்சி எடுக்க வேண்டும். பிறகு, ஆறு மாத காலம் ராணுவப் பயிற்சி. ஒரு வருடத்துக்கு வௌ;வேறு பள்ளிகளில் நேரடியாக வகுப்பறையில் ஆசிரியர் பயிற்சி. ஏதாவது ஒரு பாடத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பது. குழந்தை உரிமைப் பயிலரங்கங்களில் பங்கேற்பது. நாட்டின் சட்டத் திட்டங்கள் குறித்த தெளிவுக்காக தேசிய அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ். தீயணைப்பு, தற்காப்புப் பயிற்சி, முதலுதவி செய்வதற்கான மருத்துவச் சான்று என ஆசிரியர் பயிற்சிக்கு சுமார் ஏழு வருடங்களைச் செலவிட வேண்டும். இப்படி ஆசிரியர்களை உருவாக்கும் விதத்தில் பின்லாந்து மேற்கொள்ளும் நெகிழ்ச்சியற்ற தரமான முயற்சிகள் தான், அங்கு கல்வியில் மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறது!<br />
பெரும்பாலான இலங்கைப்பாடசாலைகள் மாணவர்களின் குடும்ப உறவிலோ உளநலனிலோ அக்கறைத்தன்மையை வெளிப்படுத்த இயல்பாகவோ அல்லது தற்செயலாகவோ தவறிவிடுகின்றன. வகுப்பறைகளில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை உள்வாங்;கி ஆசிரியர்களை அவதிப்பட வைக்கின்றன. ஆனால் பின்லாந்தின் போக்கு வித்தியாசமானது. ஒரு பள்ளியில் அதிகபட்சமாக 600 மாணவர்கள் இருக்கலாம்; அதற்கு அதிக எண்ணிக்கை கூடவே கூடாது. மாணவர்களுக்கு எந்தப் பாடம் பிடிக்கிறதோ அதில் இருந்து அவர்களே வீட்டுப்பாடம் செய்து வரலாம். ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர் இருப்பார். அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள் வழங்குவார். பிள்ளைகளின் மன வளர்ச்சியைக் குன்றச்செய்யும் முறையிலான குறை கூறுதல், அவர்கள் கண்டு கொள்ளாதிருத்தல் போன்ற பழக்கங்கள் இங்கில்லை. எனவே மகிழ்ச்சியின் நறுமணத்தில் திளைக்கும் குழந்தைகள், அறிவை ஆர்வத்துடன் சுவைப்பதில் புதிர் எதுவும் இல்லை.<br />
பின்லாந்து கல்வி முறையின் இத்தகைய சிறப்புகள் குறித்து அறிந்து வருவதற்காக, உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களும், பிரதிநிதிகளும் அந்த நாட்டை நோக்கிக் குவிகின்றனர். உலகின் 56 நாடுகளில் இருந்து 15,000 பிரதிநிதிகள் ஒவ்வோர் ஆண்டும் செல்கின்றனர். நாட்டின் அந்நியச் செலாவணியில் கணிசமான சதவிகிதம் கல்விச் சுற்றுலாவின் மூலமே வருகிறது. ஆனால், இப்படி தங்களை நோக்கி வீசப்படும் புகழ்மாலைகளை பின்லாந்தின் கல்வியாளர்களும் அமைச்சர்களும் ஓடோடி வந்து ஏந்திக்கொள்வது இல்லை. அதற்கு அவர்கள் அடக்கமாகக் கூறும் பதில் ;, 'பின்லாந்து கல்வி முறைதான் உலகிலேயே சிறந்தது எனச் சொல்ல முடியாது ஏனெனில் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பின் ஆய்வில் எல்லா உலக நாடுகளும் பங்கேற்காத நிலையில் இப்படி ஒரு முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது. எங்களைவிட சிறந்த கல்விமுறையும் இருக்க வாய்ப்பு உள்ளது' என்பதே அவர்களின் பதில். தனக்குத்தானே முடிசூட்டிக்கொள்ளும் தற்பெருமையாளர்கள் நிறைந்த உலகத்தில் இது மதிக்கத்தக்க மனநிலை.<br />
இப்போது நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய தருணம் இது. பெற்றோர்கள், கல்வியாளர்கள், கல்வி நிறுவனங்கள், ஆட்சியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது. வாசிக்க கற்றுக் கொடுங்கள். நீங்களே முன்னுதாரணமாக இருங்கள். உங்களைப் பார்த்து அவர்கள் கற்றுக்கொள்வார்கள். குழந்தைகளுடன் அவர்கள் குறைகளைப் பற்றி அதிக நேரம் பேசாதீர்கள் நிறைகளை பற்றிப் பேசுங்கள். வாழ்வில் வெற்றிபெற்றவரைப்பற்றி பேசுங்கள், ஒவ்வொரு துறையிலும் சிறந்தவர்களைப்பற்றி பேசுங்கள். முதலில் நாம் மாற வேண்டும். மாற்றம் ஒன்றே மாறாதது. நல்ல மாற்றம் தான் வளர்ச்சியை தரும். பின்லாந்தின் கல்விமுறையிலிருந்து நாம் கற்றுக் கொண்டு மாறுவோம்!. சுயகற்றலுக்கும் சுதந்திரக்கல்விக்கும் வாய்ப்பளித்து வாசிப்பால் உயர்ந்த புதிய தேசத்தினைக் கட்டியெழுப்புவோம்.<br />
<br />Srikanthaluxmyhttp://www.blogger.com/profile/02621345440975786756noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-14981721.post-88694039762138171372017-05-11T07:53:00.000-07:002017-05-11T07:53:04.884-07:00பெண்மைக்குள் பொதிந்திருக்கும் பேராற்றல் - 2<br />
<br />
<br />
கரங்கள்.....<br />
<br />
கண்ணின் மணிகளை விடவும் காத்திரமானவை.............<br />
பெண்ணென்று பிறந்துவிட்டால்.... இவை<br />
இம்மண்ணில் பெரிதும் வேண்டப்படுபவை.<br />
<br />
<br />
கருவறை திறந்து மண்ணுக்கு வந்தபோது<br />
பெற்றவள் மனதைப்<br />
பெரும் வேதனைக்குள்ளாக்கிய<br />
துன்பக் கரங்கள் இவை....<br />
<br />
மருதாணி இட்டு நக அழகு பார்க்கவோ<br />
கொக்கான் வெட்டிக் குதூகலித்து மகிழவோ<br />
கைநிறைய அள்ளி வளமாய் வாயில் போடவோ<br />
வாய்ப்புகள் சிறிதுமற்ற வறுமைக் கரங்கள் இவை...<br />
<br />
இன்னும்.. இன்னும் என்று கேட்டு<br />
கைநிறைப்பவரை இன்று கண்டாலும்<br />
இளமைப்பருவத்து இயலாமை கண்ணுக்குள் நிழலாட<br />
ஏங்கித் தவிக்க வைக்கும் இயலாமைக் கரங்கள் இவை....<br />
<br />
ஆரத் தழுவி... ஆசையுடன் தூக்கி ஏந்தி<br />
உச்சி மோந்து உணர்வுடன் முத்தமிட<br />
இடங்கொடுக்காத<br />
மூட்டுக்கள் அற்ற கரங்கள் இவை....<br />
<br />
உள்ளம் வெம்பி உருகிப் பெருக்கெடுத்து<br />
வெளித்தள்ளும் கண்ணீரை<br />
துடைக்கும் வலுவற்ற<br />
துர்ப்பாக்கியக் கரங்கள் இவை....<br />
<br />
மங்கைப் பருவத்தின் எண்ணச் சிறைக்குள்<br />
இழுத்துப் போர்த்திக்கொண்டு<br />
இனிய கனவுகள் காண்பதற்குத்<br />
தடைக்கல்லாக இருந்திட்ட<br />
வேதனைக் கரங்கள் இவை....<br />
<br />
<br />
'வறுமையும் வலுக்குன்றிய தன்மையும் உலகப் பொதுவுடமை.<br />
பெண்ணென்று பிறந்துவிட்டால் நித்தம் அது வதைச்சாலை...<br />
பின்... இதிலென்ன புதுமை'<br />
<br />
வறுமை அறியாமை, வலுக்குன்றிய தன்மை அத்தனையும் இணைந்த உலகப் பொதுக்குறியீடு இவள்.. இவளிடமிருந்து கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது?<br />
<br />
வறுமை இவளைத் துரத்துகின்றது....<br />
வசதியின்மையோ சுகாதாரக் குறைவுக்குக் கதவு திறக்கிறது...<br />
அறியாமையின் அவசரம் சுத்தத்துக்குக் கதவு மூடுகின்றது...<br />
காப்பற்ற இச்சிறுகுடில் உதிரம் உருக்கி சிறுகச் சேர்க்கும்<br />
உணவுப் பொருட்களையே ஊர்த் திருடரிடம் தொலைக்கிறது.<br />
பின் என்னதான் இருக்கிறது இவளிடம் கற்றுக்கொள்ள...?<br />
<br />
துன்பச்சுமை அழுத்தித் துவண்டு சரிகையில்<br />
தூக்கி நிறுத்தித் துணிவு தந்திட்ட வியத்தகு கரங்கள் இவை !<br />
<br />
இரத்தலே இவளது தலைவிதி என்று ஏற்றுக்கொள்ளும்<br />
உலகப் பொதுநிலையை உடைத்தெறிந்து<br />
முழுமை உடலுக்கன்று. அது உள்ளத்துக்கே என்று<br />
செய்து காட்டும் உயர்ந்த கரங்கள் இவை !<br />
<br />
ஒன்றல்ல இரண்டல்ல...<br />
ஒன்பது உயிர்களுக்குப் பின்வந்த கடைக்குட்டி என்றாலும்<br />
அங்கம் குறைந்தவர்களின் ஆரம்பப் பள்ளியைக்கூட<br />
எட்டிப்பார்க்கவிடாத வறுமைச்சூழலுக்குள் அகப்பட்டுப்போனாலும்...<br />
உருக்குலைந்து உணவுக்குக் கையேந்தி<br />
உறவுகளுக்குச் சுமையாகிப் போகாமல்<br />
உழைத்து உண்ண உதவிடும் உன்னத கரங்கள் இவை !<br />
<br />
'கைபிடிக்க' தகுந்த கரம் இதுவோ? என்று எட்ட விலத்தியபோது<br />
அன்புக் கணவனையே அருமைத்தங்கைக்கு<br />
அர்ப்பணிக்கச் செய்திட்ட அனுதாபக் கரங்கள் இவை !<br />
<br />
துணைவனாய் மாறித் துயர் தீர்த்தவன்,<br />
ஊன்றுகோலாய் நின்று உதவி செய்தவன்,<br />
உயிர் நீத்தபோது<br />
தளர்ந்து போகாமல் நிமிர்ந்து நின்று<br />
தனதும் தனது உயிர்களதும் உதரத்து நெருப்பைக்<br />
குளிர்விக்கும் ஆற்றல் பெற்ற அற்புதக் கரங்கள் இவை !<br />
<br />
முடியாது என்று முடிவாய் விலக்கிய பணியெல்லாம்<br />
தாய் என்ற தகுதியைப் பெற்ற கையுடனே<br />
தடுப்புச் சுவர்களை உடைத்தெறிந்து<br />
சவால்களுக்கு முகங் கொடுத்த நிமிர்வுக் கரங்கள் இவை !<br />
<br />
பெரிய பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும்<br />
இச் சின்னச் சின்னக் காரியங்களை<br />
இலாவகமாக நிறைவேற்றும் அதிசயக் கரங்கள் இவை !<br />
<br />
<br />
<br />
மனிதம் நிறைந்த இம் மண்<br />
<br />
சிறிதளவாவது குளிர்விக்க உதவட்டும் !<br />
இவ்வுயிர்களின் உதரத்து நெருப்பை...<br />
<br />
சிறிதளாவது காட்ட உதவட்டும் !<br />
பள்ளிப்பருவத்து இனிமைகளை...<br />
<br />
சிறிதளவாவது குறைக்க உதவட்டும் !<br />
இக் குஞ்சுக் கரங்களின் வேதனையை....<br />
<br />
சிறிதளவாவது கட்டியெழுப்ப உதவட்டும் !<br />
வாழ்க்கை மீதான இவளது பிடிப்பை...<br />
<br />
<br />Srikanthaluxmyhttp://www.blogger.com/profile/02621345440975786756noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-14981721.post-70564122046180931442017-05-11T07:50:00.000-07:002017-05-11T07:50:07.117-07:00மானுடம் என்றுமே மரணிப்பதில்லைமானுடம் என்றுமே மரணிப்பதில்லை<br />
வெற்றிமனை<br />
மகளிர் உளவளத்துணை நிலையம்<br />
<br />
பின்னணி :- ஆண்குரல்.<br />
<br />
யுத்தம் வந்து இம்மண்ணை நித்தம் வதைத்தபோதும்,<br />
வாழ்க்கைப்பாதை வறுமைப்புயலால் திசைமாறிப்போனபோதும்.<br />
பண்பாட்டுப் படையெடுப்பு பலகாலம் இம்மண்ணின் அடையாளம் தன்னை அழிக்க முனைந்தபோதும்,<br />
தன்னிய தேசமதில் தலைமிர்ந்து வாழ இன்னுயிர்கள் பல விலையாகிப் போனபோதும,;<br />
அன்னிய தேசம் ஆக்கிரமித்த இடமெங்கும் மானுடத்தின் விலையை ஏலத்தில் விட்டபோதும்<br />
<br />
இந்த மண் அழுதது, மக்கள் அழுதனர,; வாழவழியின்றிக் கலங்கினர், இருக்க இடமின்றி ஏதிலியாய் அலைந்தனர், இந்த இடத்தையும் பறிகொடுத்துத் தவித்தனர், தவழ்ந்த மண்ணைத் தவிக்கவிட்டு தம்வாழ்வு தேடிப்பறந்தனர,; மானுடத்தின் சிதைவை கண்முன்னே கண்டு கலங்கி நின்றனர், இத்தனை வதைகளைத்தாங்கிய போதும் மானுடத்தை மட்டும் இந்த மண் என்றுமே கைவிடவில்லை, இறத்த உறவுகளை, அந்நியன் கணைகளால், அங்கத்தை இழந்தவர் என்று பரிதவித்துப் போனதும் மானுடம் இங்கு மடிந்து விடவில்லை. எத்தனையோ துன்பங்களுக்குள்ளும் உயிர்ப்புடன் உலவும் மானுடத்தில் ஒன்றைத்தான் இங்கு தரிசிக்கப்போகிறோம்.<br />
<br />
குரல் :- 01.<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>இந்தச் சிறிய அழகிய விழிகள் எட்டாத தொலைவை ஊடுருவிப் பார்ப்பதன் இரகசியம் தான் என்ன? தூக்கம் தொலைத்து நாளும் பொழுதும் கால்களுக்கு ஓய்வே இன்றி வருவதும்... எட்டி எட்டிப் பார்ப்பதும்... பின் திரும்புவதும்...<br />
<br />
அம்மா என்று அன்பொழுகக் கூப்பிட தோளுக்கு மேல் வளர்ந்துவிட்ட பிள்ளை இருக்;கிறான்...<br />
அன்பே என்று அரவணைத்து அத்தனையும் வழங்க அன்பான கணவனும் தான் இருக்கிறார்.<br />
<br />
தன்னுறவை மறந்து... தன் சுற்றம் மறந்து தன் சுழல் மறந்து... யாருக்காக இந்தத் தவக்கோலம்...? இவ்வளவு ஆவலுடன் இவர் எதிர்பாத்திருக்கும் நபர் இவ்வளவு முக்கியமானவரா...?<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span><br />
அன்னையாய் இருந்து அரிச்சுவடி கற்றுக்கொடுக்க வேண்டிய வயதல்லவா இது. குமரிப்பருவத்தில் குழந்தையாகிப் போனதன் காரணம் தான் என்னவோ...? இளமைக்காலத்தில் இனிய கனவெல்லாம் தொலைந்தது ஏன்?<br />
<br />
சில்லென்று வீசும் இத்தென்றலின் திசையை பலவந்தமாகத் திருப்பியவர் யார்? இனிய இந்த நீரோடையில் கல்லெறிந்து குழப்பியவர் யார்? சின்ன வயதும் சிங்கார வாழ்வும் சீரழிந்து போனது காரணம் தான் என்ன? வறுமையா...? வன்முறையா...., ஏக்கமா.......? தாபமா......? புற உலகின் சிந்தனையின்றி தம் அக உலகிலேயே நித்தம் உலவும் இவர்கள் யார்....? உலக் இன்பங்களை துறந்துவிட்ட துறவிகளோ...? இல்லை....இல்லை......வாழ்வின் உயிர்த்துடிப்பு இங்கே அப்;படியே தெரிகிறதே.....?<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>கலைந்த கேசமும் கந்தல் ஆடையுமாக தெருவில் போவோர் வருவோர் எள்ளி நகையாட, சிறுவர்கள் கல்லால் எறிந்து மகிழ, கவனிப்பாரற்று அலைந்த பல முகங்களும் இங்கு தெரிகிறது.....? யார் இவர்கள்.....? எளிமையும், அழகும், துய்மையும் பொலிந்து நல்லதொரு ஆச்சிரமம் போன்று அமைதியான சுழலுடன் மிளிரும் இந்த இடம் யாருக்குச் சொந்தமானது....? யாராவது சொல்லுங்களேன்.... ? தாம் வாழும் சுழலின் அழகை அனுபவிக்கும் அளவிற்கு புறஉலக சிந்தனையுள்ளவர்களாக இவர்கள் தெரியவில்லையே.......? இந்த இடம் யாருடையது.<br />
<br />
குரல் :- 02.<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>இதுவா......? இது.........? போட்டியும் பூசலும் பொறாமையும் வஞ்சகமும் நிறைந்த இவ்வுலகிலிருந்து பலவந்தமாகத் துரத்தப்பட்ட பல அப்பாவி மனங்கள் தமக்குத் தமக்கென்று சொந்த உலகங்களைச் சிருஷ்டித்து அதில் கோலோச்சிக் கொண்டிருக்கும் சமத்துவ சாம்ராஜ்யம்; இது. வெற்றிமனை என்பது இதன் பெயர்.......<br />
<br />
குரல் :- 01.<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>வெற்றிமனை என்றால்.......?<br />
<br />
குரல் :- 02<br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>வாழ்க்கைச்சுமை தாங்காது வளைந்து போய்விட்ட பல மனங்களின் வாழ்விடம்,<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>கள்ளமில்லா வெள்ளை மனங்கள் குடிகொண்டிருக்கும் ஒரு புனித ஆலயம்,<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>வறுமையும் குடும்ப வன்முறையும் சேர்ந்து தெருவிற்கு விரட்டியப ல அபலைகளின் அபய இல்லம்.<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>மனிதக்குருதிக்கும் தசைக்கும் பேயாய் அலையும் ஆதிக்க வல்லுறுகளின் ஆக்கிரமிப்பில் சிதைந்து போய்விட்ட மனங்களின் மகாமண்டபம்.<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>மண்ணின் விடுதலைக்காக மரணத்தையே யாசிக்கும் மாவீரர்கள் மரணிக்கும் தறுவாயில் கூட மானுடத்தைக் கைவிட்டு விடவில்லை என்பதற்கான சிறந்த உதாரணம்.<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>தமழீழ மண்ணில் பெண்மனநோயாளர்களுக்கு நிழல் தரும் ஒரேயொரு இடம்.<br />
<br />
குரல் :- 01.<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>இங்கு இருப்பவர்கள்...........?;;<br />
குரல் :- 02.<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span><br />
அன்பெனும் அமுதுக்கு ஆலாய்ப் பறப்பவர்,<br />
ஆசைகள் துரத்த அடி சறுக்கியவர்<br />
இரக்கம் பார்த்ததால் இருந்ததை இழந்தவர்<br />
<br />
ஈவிரக்கமின்றி தாக்கப்பட்டவர்,<br />
உறவுகள் உறிஞ்சி உருவிழந்தவர்,<br />
ஊனுறக்கமின்றி ஊரூராய் அலைந்தவர்,<br />
எத்துக்கள் வீழ்த்த எழுத்திறன்னற்றவர்<br />
ஏனென்று கேட்கவும் நாதியற்றவர்,<br />
ஐயங்கூடி அறிவிழந்தவர்,<br />
ஒன்றா இரண்டா இவர் பட்ட பாடு,<br />
ஓ...! மௌனமே தினம் இவர் படும்<br />
<br />
குரல் :- 01.<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>வெற்றிமனை என்று ஏன் பெயர் வைத்தார்கள்......?<br />
குரல் :- 02.<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>வெற்றிமனைகளுக்கெல்லாம் தலையாய வெற்றி கட்டவிழ்த்து ஓடும் மனதைக் கட்டுக்குள் வைத்திருப்பதல்லவா.....? சமுதாய சகதிக்குள் ழூழ்கித்திசைதாறிப் போய்விட்ட மனங்களை அரவணைத்து அவர்களின் மனங்களை வெற்றிகொள்வதென்பது அத்தனை இலேசான காரியமா......என்ன.......?<br />
<br />
குரல் :- 01.<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>அந்நியனின் ஆக்கிரமிப்பில் அல்லும் பகலும் அவலத்தை சுமந்த படி மண்மீட்பு ஒன்றையே தாரக மந்திரமாகக் கொண்ட இந்த மண்ணிற்கு இப்படியான மனைகளில் கவனஞ்செலுத்த நேரமேது.........?<br />
<br />
குரல் :- 02<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>ஏன் இருக்காது......? அன்னியன் கணைகளால் நோயுற்றுப் போனதென்று தன்பிள்ளைக் குணவளிக்க எம்மண் மறுத்ததா.......?<br />
வளமான எம் வாழ்வை வறுமைப் புயல் அழித்ததென்று வாழும் எம்மாசை பாழ்பட்டுப் போனதா......? இரந்துண்டு வாழும் இழிநிலை வந்ததென்று கொடுத்துண்ணும் குணத்தை நாம் எடுத்தெறிந்து விட்டோமா நட்டு வளர்த்தவர் விட்டு விட்டுச் சென்றாரென்று பூத்துக் குலுங்க எம் பூஞ்செடிகள் மறுத்ததா...?<br />
கூடிக் களித்த துணை கூடுவிட்டுப் போனதென்று பாடிக்களித்த எம் கவிக்குயில்கள் மறந்தனவோ.....? பின்......? மனதைத் தொலைத்துவிட்டு<br />
வீதிக்கு வந்துவிட்டால் எமக்கு பாரமென்று இவ்வுறவுகளைச் சரிப்போமா.....? மாட்டோம்!<br />
<br />
குரல் :- 01.<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>தத்தமது உலகில் சஞ்சரிக்துக் கொண்டிருக்கும் இவர்களை இவ்வுலகிற்குள் மறுமடியும் அழைத்துவர முடியாதா.....?<br />
<br />
குரல் :- 02.<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>ஏன் முடியாது......? முடியும் என்ற நம்பிக்கையில், அவாவில், மன உறுதியில் தான் இத்தனை வேலைகளும் நடக்கிறது.<br />
<br />
'வீக்கம் நிறைந்த இவ்வுலகில் மனதாக்கம் கூடி வருத்த ஊக்கங் கெட்டு நல் ஆக்கமெதுவுமின்றி தினம் ஏக்கமுடன் வாழும் இந்த மனங்களின் பாரத்தைப் போக்கத்தான் முயல்கின்றோம்......<br />
<br />
போற்றத்தான் வேண்டாம் என்னை துற்றாமல் இருங்களேன் என சாற்றுவதற்கும் துணிவின்றி இங்கு தேற்றுவாரின்றி அடைபட்டுப் போன இம் மனங்களின் மன ஊற்றுக் கண்ணை திறக்கத்தான முயல்கிறோம்......<br />
<br />
நடுக்கமுறும் மனதின் ஏக்கம் தடுத்து தினமும் மனத்துணிவைக் கொடுத்து இனியொரு தடைவ படுக்கவிடாமல் துக்கி நிறுத்தத்தான் முயல்கிறோம்.....<br />
<br />
அப்பனின் ஆக்கிமிப்பில் ஆத்தாளின் அறிவீனத்தில் அடுத்துப்பிறந்தவரின் அசண்டையீனத்தில் தேடுவாரின்றி தினம் தினம் வரண்டு காரைக்கும், நெருஞ்சி;க்கும், தொட்டவுடன் முகம் சுருங்கும் தொட்டாச்ருங்கிக்கும், கார்குழலில் சூடும் கனகாம்பரமோவெனக் கண்டவரை மயக்கும் காட்டு மரங்களும், கட்டின்றி மேயவந்த கட்டாக்காலிகளுக்கும், களமாக மாறிய இந்;த கட்டற்ற மனங்களுக்கு பட்டறிவால் வேலியிட்டு, கண்டவரும் நுழையாமல் காப்பதற்குத்தான் இத்தனை பெரிதாய் முயற்சிக்கின்றோம்.<br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>இவ்வுலகிற்குள் முற்றுமுழுதாக நுழைந்து விட்டவர்கள் காற்றுக் கொஞ்சம் பலமாக அடித்தால் சிறிது தடுமாறுவது தவிர தானாகவே தளம் பதித்து சிறுமரங்கள் இவைகள்...... இவ்வுலகிற்குள் வந்து வந்து போய்க்கொண்டிருப்பவர்கள் இவர்கள். பக்கத்துணையின்றி படர்ந்து வளர்வதற்கு இயலாத முல்லைக்கொடி போன்றவர்கள் இவர்கள். ஊட்டம் குறைந்து வெளிறிப்போய் பூத்துக்குலுங்கும் திறனின்றி சோர்ந்து நிற்கும் சிறு பூஞ்செடிகள் தான் இவைகள்.<br />
<br />
குரல்:1<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>உள்ளம் உறங்கிவிட உறவுகள் கைவிடடுவிட உடல் உருவிழக்க தெருவிற்கு வந்து நிற்கதியாய் அலையும் இந்த மனங்களை அவைணைத்து காத்தல் என்பது சேவைகளுக்குள எல்லாம் மகத்தான சேவையன்றோ.....? இத்தகைய ஒரு மகத்தான சேவையை முன்னின்று செய்பவர்....?<br />
<br />
பேட்டி<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>இணைப்பாளர் - பெ.அ.பு. நிறுவனம் வெற்றிமனைப் பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு நிறுவனத்தின் புனர்வாழ்வு திட்டங்களில் பிரதானமானது. கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவருக்குமென பூரணி இல்லம் என்ற பெயரில் இங்கிய இந்த அமைப்பு காலமாற்றத்தில,; தேவைகள் பெருக,தனனித்தனி அமைப்புக்களாக மனநோயாளர்களுக்கு வெறிறிமனையாகவும் கைவிடப்பட்ட ஏமாற்றப்பட்ட பெண்களுக்கு மலர்ச் சோலையாகவும்,அநாதரவான சிறுவர்களுக்கு செற்தளிர் இல்லமாகவும் தனது வேலையை விஸ்தரிக்கிறது. இப்புணர்வாழ்வு இல்லங்களுக்கு வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் பப்படத்தொழிற்சாலை, தும்புத்தொழிற்சாலை பண்ணை போன்ற அபிவிருத்தி திட்டங்களையும் இது நிர்வகிக்கின்றது.<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>பொதுநலவிரும்பிகளின் அனுசரணையுடன் 11பேர் கொண்ட நிர்வாகக் குழுவின் வழிநடத்தலில் நேரில் வெற்றிமனையின் தற்போதைய இணைப்பாளராக இயங்குபவர் திருமதி கமலாம்பாள் அவர்கள்.<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>வெற்றிமனையின் பராமரிப்புச் செலவை ஈடுகட்டுவதற்கென முயற்சிகளை நிர்வாகக் குழு மேற்கொள்கிறது. பயனாளிகளின் போசாக்க நிலையை மேம்படுத்தும் நோக்குடன் சர்வதேச கெயார் நிறுவன உதவியுடன் பாற்பண்ணைத்தட்டம் நடைமுப்படுத்தப்படுகிறது. பொதுநல விரும்பிகளின் காருண்யத்தால் அன்பளிப்புக்கள் உடைகளாக, பொருட்களாக பணமாக பெறப்படுகிறது. ஈரம்நிறைந்த இதயங்கள் பிறந்தநாள் பரிசுஎ என்றும், தமது உறவினரின் திவசதிதிக்கான அன்பளிப்பென்றும் இவர்களின் வயிறை இடையிடையே குளிரப்பண்ணுகின்றனர். பயணாளிகளின் மனநலத்தை மேம்படுத்துவற்கென பலவிதமான திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறோம்.<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>வெற்றிமனை தொடரபான இவர்களின் மனப்பதிவுகளைக் கேளுங்கள்..... மனித நேயம் காக்க முழுமனதாய் உழைப்போம் என்கிறார்கள்...... உடைந்த உள்ளங்களுக்கு மறுவாழ்வு அளிக்கவேண்டியது எங்கள் கடமை. எனவே வெற்றிமனை வெற்றிகரமாக இயங்க மனிதநேயத்துடன் பணியாற்ற உறுதி எடுப்போம் என்கிறார்.<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>மருந்து மட்டுமன்றி அன்பும் அரவணைப்புமே இவர்களுக்கு அவசியம் எனவே உளவளம் காக்க உண்மையாய் உழைப்போம் என்கிறார். மருந்தும் மதியுகமும் செய்யாததை அன்பும், அரவணைப்பும் செய்யும். எனவே பணியாளர்களிலேயே அனைத்தும் தங்கியிருக்கிறது என்கிறார்.....<br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span><br />
<br />Srikanthaluxmyhttp://www.blogger.com/profile/02621345440975786756noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-14981721.post-27787705836761968612017-05-11T05:10:00.000-07:002017-05-11T05:10:04.147-07:00நினைவுப் பேருரைநூலகமும் கல்வி அபிவிருத்தியும்<br />
<br />
திரு. எம்.எஸ். இராசரத்தினம் நினைவுப் பேருரை<br />
வட்டு மத்திய கல்லூரி பரிசளிப்பு விழா<br />
<br />
<br />
சாதனைகள் செய்த பூரிப்பும் களிப்பும் நிரம்ப சாதனைகளுக்கான பரிசுகளைத் தட்டிச் செல்லக் காத்திருக்கும் மாணவர்கள், தமது இரத்தத்தில் உதித்த வாரிசுகளின் இந்தச் சாதனைகளுக்கான உழைப்பில் கணிசமான பங்கு தமக்கே உரியது என்ற பெருமிதத்தில் அமர்ந்திருக்கும் பெற்றோர்கள், சாதனைகளுக்குக் களம் தந்த பெருமையில் உரிமையெடுக்கவெனக் காத்திருக்கும் இக்கல்லூரியின் அதிபர் ஆசிரியர்கள், மற்றும் வட்டு மண்ணின் அறிஞர்கள் பெற்றோர்கள் நிறைந்திருக்கும் இவ்வவையிலே எனது வணக்கத்துக்குரியவர்களான அறிஞர்கள், பெரியோர்கள், பேராசிரியப் பெருந்தகைகள், மதிப்பிற்குரியவர்களான பெற்றோர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், எனது தோழமைக்குரிய நண்பர்கள், நூலக சமூகத்தினர், எனது பேரன்புக்கும் பாசத்துக்குமுரிய மாணவர்கள், குழந்தைகள் உங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.<br />
<br />
வட்டுமண் எனக்கு சிறியளவில் பரிச்சியமான ஒரு மண். என்னைச் சுற்றியிருப்பவைகளை அவதானிக்கும் அறிவு இல்லாத ஒரு காலத்தில் எட்டிப்பிடித்து கட்டி அணைத்துக், கன்னத்தைக் கிள்ளி, எமது அழுகையில் ரசனை காணும் எனது சித்தப்பா வட்டு மண்ணின் வாரிசு. 60 களின் இறுதிப் பகுதியில் இருக்கும் அவரை இன்றும் நாம் அழைப்பது வட்டுக்கோட்டைச் சித்தப்பா என்று தான். எட்ட நின்று வே வே காட்டும் எனக்கு வட்டு மண்ணை அவரிடமிருந்து அறிவது எவ்வாறு? அவரைத் தவிர அவரின் உறவுகள் கூட சரியாக ஞாபகமில்லை.. <br />
<br />
தொழிலுக்குள் நுழைந்த காலத்தில் சக ஊழியர்களாக இந்த மண்ணைச் சார்ந்தவர்கள் இருந்திருக்கின்றார்கள். ஆனாலும் ஏனோ வட்டு மண்ணை அவர்கள் நினைவூட்டவில்லை. அறியும் அவாவும் எனக்கு இருந்ததில்லை.<br />
<br />
நூலகத் துறை விரிவுரையாளராகக் கடமையாற்றிய காலப்பகுதியில் கீழ்ப்படிவும் புதியதை அறியும் ஆர்வம் மட்டுமல்ல அதை அதற்குரிய அற, ஆன்மீக ஒழுக்க விதிமுறைகளுடன் பெற விரும்பிய ஒரு மாணவி. வட்டு தொழினுட்பக் கல்லூரியில் நூலக உதவியாளர் என நினைக்கிறேன். பத்மாசனி என்பது பெயர். கிராமியம் இன்னமும் கைவிட்டு விடாத அல்லது கைவிட விரும்பாத உண்மை, நேர்மை, அன்பு, ஆன்மீகம், கீழ்ப்படிவு போன்ற உயரிய பண்புகளைக் கொண்ட மாணவி ஒருவர் எனது கருத்தை அதிகம் ஈர்த்த போது தான் அவருக்கூடாக அவர் வாழும் மண் தொடர்பான எனது நேயம் முதன்முதல் கருக்கொண்டது.<br />
<br />
2003ம் ஆண்டு என நினைக்கிறேன். வட்டு மத்திய கல்லூரியின் நூலக வாரத்தின் சிறப்புச் சொற்பொழிவாளராக திடீர் அழைப்பு. நான் இல்லாமலேயே எனது உதவியாளருடன் சாதுரியமாகப் பேசி எனது வருகையை உறுதிப்படுத்தி நான் இல்லாமலேயே அழைப்பிதழும் என்னை வந்தடைந்துவிட்டது. கல்வி அமைச்சின் ஆணைக்கு மட்டும் அடிபணியும் கல்விக்கூடங்களில் நூலகத்தில் வேலை செய்பவரை அழைக்கும் புதிய ஞானம் எப்படிப் பிறந்தது?. இதுவும் நிர்ப்பந்தமா அல்லது நியாயமான விருப்பமா? தடல்புடல் வரவேற்புடன் இந்தக் கல்லூரியில் நுழைந்தபோதும் கூட என்னைத் தெரிவு செய்தது யார் என்ற தேடலுடன் கண்கள் அங்குமிங்கும் அலைபாய்கிறது. பார்த்தால் மேடையில் நான் ஓரிரு தடைவை மட்டும் பார்த்த ஒரு முகம் என்னை எப்போது எப்படிச் சந்தித்தேன் என்பது பற்றி அசலான உணர்;வுடன் என்னை உங்கள் முன் அறிமுகப்படுத்துகின்றது. கடுமையான ஆசிரியராகப் பலருக்குத் தென்படும் நான் அவரின் விருப்பிற்குரிய ஆசிரியராக எப்படி மாறினேன் தெரியவில்லை. நூலகத் துறை சார்ந்து குமுதினி லோகநாதன் என்ற அந்த ஆசிரியரின் ஆர்வமும், அர்ப்பணிப்பும், அயராத உழைப்பும் தான் முதன்முதலில் இந்த வட்டு மண் தொடர்பாக நூலகத் துறையின் இன்றைய நிலை சார்ந்து எனது ஆழமான சிந்தனைக்கு வழிகோலியிருக்கவேண்டும் என நினைக்கிறேன். அவர் மட்டுமல்ல அவரது அதிபர் திரு சபாரத்தினசிங்கி காட்டிய ஆர்வமும் துடிப்பும் கூட அடிக்கடி இந்தக் கல்லூரி எனது நினைவுகளில் வந்து போகத் தூண்டும் ஒன்று.<br />
<br />
அண்மையில் பாடசாலை நூலக அபிவிருத்தி சார்ந்த ஒரு கருத்தரங்கில் வட்டு மண்ணின் அதிபர்கள், ஆசிரியர்களைச் சந்தித்திருக்கிறேன். இந்தச் சந்திப்புக்கு அடிகோலியவர் அன்றைய பிரதிக் கல்விப்பணிப்பாளராக இருந்த திரு. ரவிச்சந்திரன் அவர்கள். வலிகாமம் வலய அதிபர் ஆசிரிய நூலகர்கள் அனைவரையும் ஓரிடத்துக்கு அழைக்கும் எனது தீர்மானத்தை தனது சாதுரியமான பேச்சால் திசை மாற்றி வட்டு இந்துக் கல்லூரியில் அதனை நடத்த அயராது பாடுபட்ட அவரது முயற்சி இந்த மண் சார்ந்து அவருக்கு இருந்த பற்றைத் தான் கோடிகாட்டியிருக்கிறது.<br />
<br />
நினைவுப் பேருரைக்கும் வட்டு மண் தொடர்பான எனது பரிச்சியத்துக்கும் என்ன சம்பந்தம்.? சம்பந்தம் இருக்கிறது. அது கருத்துப் பரிமாற்றம்----- . சுவரை நோக்கி ஏவப்படும் பந்து ஏவப்படும் இடத்துக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது எறிந்தவருக்கே திரும்ப வந்து அறைவது போன்று ஒரு வழிப் பாதிப்பாக எனது கருத்து இருப்பதில் எனக்கு எப்போதுமே சம்மதமில்லை. எந்த ஒரு நிகழ்விலும் நான் கலந்து கொள்ள ஒத்துக் கொள்வதோ அல்லது நிராகரிப்பதோ இந்த அடிப்படையில் மட்டும் தான். கருத்துப் பரிமாற்றத்தின் போது கருத்தை பெறுபவர் தொடர்பான ஒரு பொது மதிப்பீட்டுடன் தான் எனது கருத்துப் பரிமாற்றத்தின் போக்கை மாற்றியமைப்பது எனது வழமை. எனவே இந்த அவை தொடர்பான எனது நோக்கு பற்றி உங்களுடனான எனது பகிர்வு இந்த மண் தொடர்பான எனது நோக்கினடிப்படையில் அமைந்ததொன்று. <br />
<br />
சரியான தகவல் சரியான நேரத்தில் சரியான வாசகனிடம் போய்ச் சேருவதை உறுதிப்படுத்துவதே நூலகசேவையின் நோக்கம் என்பதன் அடிப்படையில் நூலகம் சார்ந்து பதிவுகளைத் தேடி உங்கள் பவளவிழா மலரில் பார்வையை ஓடவிட்டபோது வட்டு மத்திய கல்லூரியின் நூலகம் சார்ந்து பதிவு எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் நூலகம் சார்ந்த எனது உரைக்கு ஒரு கரு கிடைத்தது. ஈழத்துக் கவி உலகின் மூவேந்தர்கள் என அழைக்கப்படுபவர்களில் ஒருவரான திரு. முருகையன் அவர்களின் பின்வரும் கவி வரிகள்<br />
புத்துயிர்ப்பின் ஒத்துழைப்பினால்<br />
கொள்கைத் தெளிவின் கூட்டியக்கத்தால்<br />
அடாக் கொடுஞ் சுரண்டல், அழுத்தல்,<br />
ஒடுக்கல், வெட்டுக்கொத்து, வெடி<br />
கழுத்தறுப்புகள்<br />
சற்றும் இல்லாத சுகாதாரமான<br />
நீதிச்சூழலை ஏற்படுத்த முடியாதென்று<br />
யார் சொன்னது?<br />
<br />
கல்விக்கூடங்களாவது<br />
முழு மலர்ச்சிக்குக் கைகொடுக்கக் கூடாதா?<br />
என்ன நினைக்கிறீர்கள் பெரியோர்களே?<br />
<br />
என்ற வினாவுடன் உங்கள் பவள விழா மலரில் முருகையன் தனது கவிதையை முடிக்கிறார் அதிலிருந்து நான் ஆரம்பிக்கின்றேன்<br />
<br />
கல்விக் கூடங்கள் நிச்சயம் கைகொடுக்க முடியும்.<br />
எதற்கு? மனிதசமூகத்தின் முழு மலர்ச்சிக்கு<br />
எவ்வாறு.? இது தான் இன்றைய நினைவுப் பேருரையின் கருவாக அமைகிறது.<br />
<br />
மனித சமூகத்தின் முழு மலர்ச்சிக்கு இந்த மண் கைகொடுப்பதற்கு நாம் முதலில் எம்மைப் பற்றி அறிதல் மிக முக்கியமானது. தமிழ்ச் சமூகத்தின் பொதுப் பண்பாக இருப்பது என்ன? <br />
<br />
நாம்<br />
தமிழ் இலக்கணத்தில் செய்வினை செயற்பாட்டு வினை என இரு வினைகள் உண்டு நாம் பெரும்பாலும் செயற்பாட்டு வினையாகத் தான் இருக்கின்றோம். செய்வினையில் அதாவது 'இந்தச் செய்வினையில்' எமக்கு ஆர்வமும் இல்லை. நம்பிக்கையும் இல்லை. சமூக ரீதியில் பார்த்தால் நாம் இயக்குபவர்கள் அல்ல. இயக்குவிக்கப்படுபவர்கள். அரசியல் ரீதியில் சிந்தித்தால் நாம் ஆள்பவர்கள் அல்ல. ஆட்படுபவர்கள். பொருளாதார ரீதியில் சிந்தித்தால் அடுத்தவரைத் தாங்குபவர்கள் அல்ல வளர்முக நாடுகளுக்குரிய பொதுப் பண்பான தங்கியிருப்பவர்கள் அல்லது உதவிக்குரியர்கள். கல்வி சார்ந்து பார்த்தால் மனித வளமாக தாமே உருவாகின்றவர்கள் அல்ல. பெற்றோரின் விருப்பிற்கமைய வலிந்து உருவாக்கப்படுபவர்கள். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இழுத்துப் பிடிக்கும் தன்மையை விட இழுபட்டுப் போகும் தன்மை எங்களிடம் அதிகம். இதில் மன ஆறுதல் தரும் விடயம் எதுவென்றால் சுயசார்பு, தனித்துவம் போன்ற பண்புகளை இன்னமும் வைத்துக் கொண்டு தலைநிமிர்ந்து நிற்கின்ற கிராமங்கள் எம்மிடம் அதிகம் உண்டு. இத்தகைய பண்புகளில் இருந்து கிராமியம் சற்றே தூர நிற்பது மட்டும் தான் ஆறுதல் தரும் ஒரு விடயம். வட்டு மண்ணும் கூட இந்த கிராமியப் பண்பு இன்னமும் மாறாத ஒரு மண்ணாகவே எனக்குப் படுகின்றது.<br />
<br />
நாம் வாழும் சூழல்<br />
<br />
மாறிவரும் சமுதாயமானது ஆற அமர இருந்து நல்லவை தீயவற்றை விலக்கக்கூடிய அறிவையோ அதற்கான நேர அவகாசத்தையோ கொடுக்கமுடியாதளவிற்கு பரபரப்பு மிக்கதாகவும் இயந்திரமயப்பட்டதாகவும்; இருப்பதானது புதிய தலைமுறையினரின் அறிவுத்தேடலிலும் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது நூலுணர்வு மிக்க எமது சமூகத்தின் புதிய தலைமுறையின் தேடலுணர்வையும் கணிசமானளவு பாதித்துள்ளதை மறுக்க முடியாது.<br />
<br />
கற்றல் என்பது வாழ்க்கையினின்றும் எழும் ஒன்று. வாழ்க்கை அனுபவங்களின் ஒரு பகுதியை மட்டுமே பாடசாலைகள் மனிதனுக்கு வழங்க முடியும். தொழில் நோக்கம், அறிவு நோக்கம், ஒருமைப்பாடுடைய ஆளுமையை வளர்த்தெடுக்கும்; இசைந்த வளர்ச்சி நோக்கம், ஒழுக்க நோக்கம், ஓய்வு நோக்கம், சமூக நோக்கம் என பலதரப்பட்ட நோக்கங்களையும் சந்தித்திருக்கும் இன்றைய கல்வி முறையானது செயற்பாட்டளவில் செய்துள்ள சாதனைகள் மிக மிகக் குறைவு. கல்வித்திட்டங்களில் ஏற்படுத்தும் மாற்றங்களின் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஆசிரியர்களுக்கான பயிற்சியோ அவர்களிடம் மனமாற்றத்தைக் கொண்டு வருவதற்கான தூண்டுதல்களோ மிகக் குறைவு. வறுமை வேலையின்மை போன்ற பொருளாதாரக் காரணிகளின் தாக்கம் மிக அதிகமாக உள்ள எமது தேசத்தில் கல்வியின் முழு நோக்கமுமே தொழில் நோக்கமாகவே உள்ளது. மேலை நாட்டு அறிவியல் கண்டுபிடிப்புகளின் பாவனையாளராகவே இருக்கும் எமக்கு இக் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்துவதற்கான தேடலில் வாழ்வின் பெரும் பகுதி கழிந்து விட இக் கண்டுபிடிப்புகளின் உண்மையான பயன்பாடு என்ன இதன் நன்மைகள் தீமைகள் போன்றவற்றை அறிவதற்கான வாய்ப்புகளை இழந்து விடுகின்றோம்.<br />
<br />
போட்டி மிக்க தொழில் சந்தையில் நின்றுபிடிப்பதற்கேற்ற வகையில் தான் எமது நகர்வுகள் இருப்பதன் காரணமாக வாழ்க்கைப் படிப்பிற்கான கால அவகாசமோ சிந்தனையோ எம்மிடம் அருகி வருவதே கண்கூடு. தொழில் சந்தையில் போட்டி போடக்கூடிய வல்லமையைத் தரும் பாடசாலைகளை நோக்கி தமது பிள்ளைகளை நகர்த்தும் பெற்றோர்கள,; பாடசாலைகளைப் பெறுபேறுகளின் அடிப்படையில் தரப்படுத்தும் கல்வித் திட்டங்கள், அந்தஸ்து மிக்க வாழ்க்கைக்குரிய மூலதனமாகக் கல்வியை கருதும் எமது சமூகத்தின் மனப்பாங்கு என்பன மாறும் வரை பாடசாலைகள் அறிவுக்கான அடித்தளங்களாக இருக்கும் வாய்ப்பு சாத்தியமற்றதொன்றாகும். பரந்துபட்ட வாசிப்பால் மட்டுமே அறிவுக்கான அடித்தளம் போடப்பட முடியும் என்பது உண்மையானால் பெற்றோர்கள், ஆசிரியர்கள், நூலகர்கள் என்ற முக்கூட்டுச் சக்திகளின் ஒருங்கிணைந்த செயற்பாட்டினூடாகவே இது அடையப்படமுடியும்.<br />
<br />
<br />
எமது புரிதல்கள் தொடர்பாக எம்மிடையே மாற்றம் வேண்டும். மிக நீண்ட காலமாகவே கல்விக்கும் அறிவுக்குமிடையிலான இடைவெளியின் அளவு தொடர்பான தேடல் என்னிடம் ஆழமாக நிலைகொண்டிருந்திருக்கிறது. படிப்பு கல்வியைத் தரும் பரந்துபட்ட வாசிப்பு அறிவைத் தரும் என்பது நன்கு தெளிவாகத் தெரிந்திருந்தும் கூட கல்வியா அறிவா பெரிது என்ற வாதப்பிரதிவாதங்களின் அடிப்படையில்; கல்வியைப் பெரிதாக்கி கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கல்விக்கு அத்திவாரத்தை இட்டு என்னைச் செப்பனிட்ட பாடசாலையினையும் இன்றுவரை எனது மனதில் பூசிக்கும் பேறு பெற்ற எழுத்தறிவித்த இறைவர்களையும் அடியோடு ஒதுக்கிவிடவோ அல்லது அறிவை ஆழமாகப் பூசித்து கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் அறிவுக்கு ஆணிவேராக இருந்த நூலகத்தை ஒதுக்கிவிடவோ நான் தயாராக இல்லை. எனவே இரண்டுக்குமிடையிலான சமநிலையைத் தேடி ஓடிய எனது முயற்சி வீண் போகவில்லை.<br />
<br />
'ஒரு மனிதன் கற்பது எவ்வாறு எனக் கற்றுக் கொள்வதே கல்வியின் இலக்காகும். கற்றுக் கொள்வதற்கான ஆற்றலானது அறிவை விட முக்கியமானதாகும். அறிவு, காலத்திற்கொவ்வாததாகப் போனாலும் கற்கும் திறனானது அனைத்து அறிவுகளுக்குமான திறவு கோலாக விளங்குகிறது'. என்ற கூற்று அறிவை விட கல்வி முக்கியம் என்ற கருத்துநிலையைத் தருகின்றது. அப்படியாயின் பாடசாலைகள் ஏன் அறிவுக்கான திறவுகோலாகச் செயற்பட முடியாதுள்ளது என்ற வினா எழுவதும் இங்கு தவிர்க்கமுடியாததாகிறது.<br />
<br />
கல்வியின் முக்கியத்துவம் தொடர்பாக நாம் அறியக்கூடிய அல்லது எமக்குக் கிடைக்கக்கூடிய மேற்கத்தேய சிந்தனைகள் கைத்தொழில் சமூகம் ஒன்றின் தோற்றத்துடன் இணைந்ததாக இருக்க, தமிழ்ச் சமூகத்தின் சிந்தனைகளோ இரு ஆயிரியங்களைக் கடந்து நிற்கிறது. 'கல்வி கரையில கற்பவர் நாள் சில மெல்ல நினைக்கின் பிணிபல' <span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>என்னும் நாலடியார், 'தொட்டனைத்து ஊறும் மணற்கேணி நாளும் கற்றனைத்து ஊறும் அறிவு'என்னும் திருக்குறள், 'நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு' என்னும் ஓளவையின் முதுமொழி போன்றன எமக்கு உணர்த்தி நிற்பது கல்வியின் முக்கியத்துவம் என்பது தமிழ் மக்களால் இன்று நேற்று உணரப்பட்டதொன்றல்ல என்பதையே<br />
<br />
கல்வியின் நோக்கங்களை குறுங்காலப் பயன்கள், நீண்டகாலப் பயன்கள், உடனடிப்பயன்கள் என மூவகைப்படுத்துகிறார் இந்திய கல்வியியல் சிந்தனையாளரில் ஒருவரான எஸ் சந்தானம் அவர்கள். ஓவ்வொரு மாணவனும் அன்றாடம் கற்கும் பாடங்களின் முடிவில் அவனிடம் எதிர்பார்க்கப்படுபவை உடனடிப்பயன்கள் எனவும், குறிப்பட்ட பாடம் ஒன்றை மாணவன் கற்பதனூடாக ஏற்படும் பயன்கள் குறுங்காலப் பயன்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. குறுங்காலப் பயன்களே கல்வியின் குறிக்கோள் என அழைக்கப்படுகின்றன. இந்தக் குறிக்கோள்கள் ஒவ்வொன்றும் நிறைவேறும்போது நீண்டகாலப் போக்கில் ஏற்படுபவை நீண்டகாலப் பயன்கள் எனப்படுகின்றன.<br />
<br />
கல்வியின் நோக்கங்கள் பல எனினும் அதன் பிரதான நோக்கம் சுயசிந்தனையும் மனித நேயமுமிக்க மனிதனை உருவாக்குதல் ஆகும். சுயசிந்தனையுள்ள மனிதனை உருவாக்குவதற்கு அறிவுசார் சிந்தனை அவசியம்.. ஷஎதனையும் உற்றுணர்ந்து, சீர்தூக்கிப் பார்த்து, நிதானித்து, எதிர் விளைவுகள் பக்க விளைவுகளை அடையாளங் கண்டு ,பயன்விளைவு ஆராய்ந்து, அனுகூலங்கள் பிரதிகூலங்களை கருத்தில் கொண்டு, ஒன்றைக் கூறும்- நம்பும் -தீர்மானிக்கும்- தீர்வு காணும்- செயற்படுத்தும்- அறிவும் மனப்பாங்கும் உடைய உள்ளம் அறிவு சார் உள்ளம் என்றும் அத்தகைய சிந்தனை அறிவு சார் சிந்தனை என்றும் கூறலாம்ஷ என படியாதவனின் படிப்பு என்ற நூல் கூறுகிறது. 'தௌ;ளிய அறிவும் நன்நடத்தையும் கொண்ட பண்பட்ட மக்களை உருவாக்குவதே கல்வி' என்ற மாட்டின் லுதர், 'மனிதனை மனிதனாக வாழ வைப்பதே உண்மைக் கல்வி' என்ற சுவாமி விவேகானந்தர், 'அன்பை உணருதல், அன்பு காட்டுதல் என்றால் என்ன என்று கண்டுபிடித்தல், அன்பு காட்டுதல் என்பவையே கல்வி' என்ற இந்திய கல்விச் சிந்தனையாளர் ஜே.கிருஸ்ணமூர்த்தி, 'உன்னத மரபுகளையும் அன்பையும், இரக்கத்தையும் ஒருவரிடம் பேணி வளர்க்கவும் முழுமையான வாழ்க்கையை வாழ உதவுவதுமே கல்வி' என்ற கல்வியியலாளர் ராதாகிருஷ்ணன் போன்றோரின் சிந்தனைகள் எமக்கு வெளிக்காட்டுவது மனிதத்தை மனிதர்களிடம் உருவாக்குவதே உண்மைக் கல்வியின் நோக்கம் என்பதையே. அறிவுசார் சிந்தனையானது மனிதநேயத்துடன் இணைந்ததாக இல்லாது விடின் கல்வியின் நோக்கம் நிறைவேறுவது கடினம். அறிவு சார் சிந்தனையை உருவாக்குவதற்கு பரந்த வாசிப்புத் திறன் முக்கியம். தான் எதிர் கொள்ளும் பிரச்சனைகளிலிருந்து விடுவிப்பதற்கு தனித்துவமான, தனக்குத் தானே நீதிபதியாகக் கூடிய வல்லமையை அளிப்பது இந்த பரந்து பட்ட வாசிப்புத் திறனே. வாசிப்புத் திறனை ஊக்குவிக்கக்கூடிய பிரதான தளம் நூலகம் என்பதில் எவ்வித கருத்துமுரண்பாட்டுக்கும் இடம் இருக்காது.<br />
<br />
பாடசாலைகள்.... மனிதன் சந்திக்கும் முதலாவது நிறுவனம். மனித வளர்ச்சிக் கட்டங்களில் இளமை, ஆர்வம், துடிப்பு, தேடல் அதிகம் உள்ள குழந்தைப்பருவம் முழுவதையும் தமதாக்கி அவர்களை நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைப்பதற்கான வழிப்படுத்தல் என்ற மாபெரும் பொறுப்பை ஏற்று நிற்பவை. நூலக சேவையற்ற கல்வி ஆன்மா இல்லாத உடலுக்கு ஒப்பானது நாட்டின் எதிர்காலம் ஒப்படைக்கப்பட்டிருப்பது இன்றைய குழந்தைகளிடமே என்பது உண்மையானால் அந்த குழந்தைகளின் உள்ளத்தை கிட்டத்தட்ட 12 வருடங்கள் பண்படுத்தும் பாரிய கடமைப்பாட்டில் இருப்பவை. எந்தவொரு கல்விசார் நிறுவனத்தினதும் முதுகெலும்பாகத் தொழிற்படுவது என்ற வகையில் பாடசாலை நூலகங்கள் கல்விச்செயற்பாடு முழுமையடைவதற்கான ஆதார நிறுவனமாகத் தொழிற்படும் கடப்பாடுடையவை. மனித ஆளுமையின் ஆத்மீக, ஒழுக்க, சமூக கலாசார அம்சங்களின் விருத்திக்கு பாடசாலை நூலகம் மிக அவசியமானதொன்று. இது ஒரு தேசத்தின் பொருளாதார மேம்பாட்டுக்கு பங்களிப்பு செய்கிறது. வீட்டுச்சூழலில் இருந்து வெளியுலகுக்கு குழந்தை பிரவேசிக்கும் முதலாவது இடமாக பாடசாலைகள் இருப்பதனால் குழந்தையின் வாசிப்புப் பழக்கத்துக்கு அடித்தளம் போடும் நல்ல வாய்ப்பு பாடசாலை நூலகத்துக்கு ஏற்படுகிறது. ஒவ்வொரு கல்விசார் நிறுவனமும் சிறப்புடன் இயங்குவதற்கும் மாணவர்களின் கல்வி கலாச்சார ஆர்வங்களை ஊக்குவிப்பதற்கும் பாடசாலை நூலகம் முக்கிய கருவியாக இருப்பதனால் ஒவ்வொரு முதல்நிலை, இரண்டாம்நிலை, மூன்றாம் நிலைப் பாடசாலைகளுக்கும் பாடசாலை நூலகம் இருத்தல் மிக அவசியமானது. பாடல்கள், கதை சொல்லல் மூலம் முன்பள்ளிகளில் தனது துருவி ஆராயும் பண்புக்கு களம் அமைக்கும் குழந்தைகள் வாசிப்பு பழக்கத்தின் மூலமே இப் பண்பை கட்டியெழுப்பலாம் என்ற அறிவை பெறக்கூடிய இடமாக பாடசாலை நூலகங்கள் இருத்தல் அவசியமானது. இது மட்டுமன்றி புது முயற்சிகளில் இறங்கும் குழந்தையின் இயல்பை ஊக்குவிப்பது சுயசார்புக் கல்வி மட்டுமே. புதிய பாடத்திட்டங்கள், கணிப்பீடுகள் யாவும் இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது மட்டுமன்றி எழுத்தறிவிக்கும் இறைவர்களையும் கற்பிப்பதற்கு கற்பவர்களாக மாறவேண்டிய நிலையை நிர்ப்பந்திக்கிறது. வகுப்பறைக் கற்றல் கற்பித்தலுக்கான புதியதோர் அணுகுமுறையாக 2007இல் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் 5நு-மாதிரியானது (5நு- ஆழனநட) கற்றல் கற்பித்தல் செயற்பாட்டை முழுமைப்படுத்துவதற்கான காரணி என்ற வகையில் பாடசாலை நூலகத்தைத் தரமுள்ள நூலகமாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது.<br />
<br />
வாசிப்பைத் தூண்டக் கூடிய மிகப் பொருத்தமான இடம் நூலகங்களே. நூலகங்கள் அறிவுப் பதிவேடுகளின் சுரங்கம் எனப்படுகிறது. 'கடலைப் போன்றது நூலகம். மணலை விரும்புவோர் மணலை எடுக்கலாம்;;;. சிப்பி, சங்கு, சோகிகளைப் பொறுக்குவோர் அவற்றைப் பொறுக்கலாம்;. குளிப்போர் குளிக்கலாம்;. காற்று வாங்க விரும்புவோர் காற்று வாங்கலாம்;. மீனினங்களைப் பிடிக்க விரும்புவோர் அவற்றைப் பிடிக்கலாம்;. வெறுமனே கரையில் இருந்து கடல் அலையைப் பார்த்து மகிழ விரும்புவோர் அவ்வாறு செய்யலாம்;. முத்தெடுக்க விரும்புவோர் முத்தெடுக்கலாம்.;; செல்கின்றவரது நோக்கம் எதுவோ அதனை அவர் நிறைவேற்றிக் கொள்ளலாம்' என்கிறார் தேர்ந்த வாசகர்களுள் ஒருவரான குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்கள்.<br />
<br />
பொதுவான பொருட்துறைகளில் ஆர்வமுள்ளோரை ஒன்று சேர்த்து அவர்களுக்கென வாசிப்பு வட்டங்களை உருவாக்குதல், வாசிப்பு வட்டங்களுக்குத் தேவையான நூல்களையும் வாசிப்பு வட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கான இடத்தையும் தேர்ந்தெடுத்து வாசிப்பு வட்டங்கள் சிறப்பான முறையில் நடைபெற வழிவகுக்கலாம். வாராந்த மாதாந்த ரீதியில் நடைபெறும் இத்தகைய கருத்தூட்டல்களுக்கு உதவுமுகமாக நூலகங்கள் தமக்கென சிறியளவிலாவது கருத்தரங்கு மண்டபம் ஒன்றையும் கொண்டிருக்குமாயின் வாசிப்பு வட்டம் நடைபெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பேயே அவற்றுடன் தொடர்பான நூல்களை அம் மண்டபத்தின் ஒரு பகுதியிலேயே காட்சிப்படுத்தின் வாசகர்களுக்கு இலகுவாக இருக்கும். பெரும்பாலான பொதுநூலகங்கள் வாசகர் வட்டங்களை சிறப்பாக நடத்திவருவதையும் இங்கு குறிப்பிடவேண்டும்.<br />
<br />
என்னைப் பற்றிய சிறு அறிமுகத்துடன் இந்த நினைவுப் பேருரையை நிறைவு செய்யலாம் என விரும்புகின்றேன். நூலகத் துறை நான் விரும்பி வரித்துக் கொண்ட துறை. பதவி உயர்வுக்கு மட்டும் படிக்கவென நூலகத் துறை கருதப்பட்ட 80களில் பதவியை நாடாது மாணவ நூலகராக அன்றி நூலகத்துறையில் வெறும் மாணவியாக நுழைந்த காலத்தில் நூலகவியல் துறையில் முதலாவது மாணவி என்ற பெருமையை இந்திய மண் எனக்குத் தந்தது. தொழில் சார்ந்து நான் அனுப்பும் ஒரு விண்ணப்படிவமே முதலாவதும் இறுதியுமானதுமாக இருக்கவேண்டும் என்ற பிடிவாதம் தொழிலுக்குத் தேவைப்படும் அடிப்படைத் தகுதியை விட கூடுதலான தகுதியுடன் இத்துறைக்குள் தற்போதைய வேலைக்குள் நுழையும் வாய்ப்பை ஏற்படுத்தியது. பதவிக்கு வந்த பின்னர் அன்றிலிருந்து இன்றுவரை ஆசிரியராக, ஆலோசகராக, சொற்பொழிவாளராக, விரிவுரையாளராக, சிறப்புரையாளராக, முதன்மை விருந்தினராக, சிறப்பு விருந்தினராக, என்று எத்தனையோ நிகழ்வுகளில் என்னைக் கௌரவப்படுத்தியதனூடாக அறிவு ஊறுவதற்கு உதவுகின்ற நூலக சமூகத்தைக் எமது தமிழ்ச் சமூகம் கௌரவப்படுத்தியிருக்கின்றது. இதிலிருந்து இன்னொரு படி மேற்சென்று சைவமும் தமிழும் தம் இரு கண்ணெனப் போற்றிய ஒரு அறிஞர், தமது மண் பெருமை பெற வேண்டும் என உழைத்த சமூகத் தொண்டர், தாம் பிறந்த மண் கல்வியில் தழைத்தோங்க வேண்டும் என நினைத்த உத்தமர், திரு எம். எஸ் இராசரத்தினம் அவர்களது நினைவுப் பேருரைக்கு அழைத்து என்னையும் எனது நூலக சமூகத்தினரையும் கௌரவப்படுத்திய இந்த வட்டு மண்ணுக்கும் அதற்கான முயற்சியெடுத்த அதிபர் திரு சபாரட்ணசிங்கி அவர்களுக்கும் இந்த அவையிலே நன்றி கூறி எனது இந்த உரையை முடித்துக் கொள்கின்றேன்.<br />
<br />
27-06-2008<br />
<br />Srikanthaluxmyhttp://www.blogger.com/profile/02621345440975786756noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-14981721.post-39105490964695744552017-05-11T04:51:00.000-07:002017-05-11T04:51:12.563-07:00சூரியப் புதல்விகள்சூரியப் புதல்விகள்:<br />
பாடல்கள் பற்றிய ஒரு பார்வை<br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>மனிதனுக்கு உயிர்ப்பூட்டும் ஜீவசக்திகளில் முதன்மையானது இசை. தாயின் கருப்பையில் தொடங்கி கல்லறைக்கு போகும் வரை மனிதவாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் இசை வகிக்கும் பங்கு அளப்பரியது.எழுத்து வடிவ ஊடகங்களோ அல்லது கட்புல ஊடகங்களோ ஆற்றமுடியாத பணியை இசையால் ஆற்றமுடியும். பார்வைப்புலனற்றவர், படிப்பறிவு அற்றவர், பணவசதியற்றவர் என பல்வேறு சமூக மட்டத்தினால் பயன்படுத்தப்படக் கூடியதும், குழந்தைகள் தொடங்கி முதியோர் வரை என பரந்துபட்ட சமூகத்தை சென்றடையக் கூடியதும், சமூகத்தின் சமூக, சமய, கலை, கலாச்சார, பண்பாட்டு அம்சங்களில் பரவலாக பயன்படுத்தப்படக் கூடியதுமான ஊடகமாக இசை அமைந்துவிடுகிறது.<br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>மனித மனத்தின் உணர்வுகளும் மானுட வாழ்வின் அனுபவங்களும் கவிஞனின் கைவண்ணத்தில் வரிவடிவம் பெற்று இசைமழையில் குளித்து உயிர்ப்பூட்டும் குரல்கள் மூலமாக மீண்டும் சமூகத்திடமே பாடல்களாக சென்றடையும் போது இவை ஒரு காலத்தின் குரலாய் மாறி நிரந்தர இடத்தைப் பெற்றுவிடுகின்றன. மக்களிடையே சென்று மக்கள் மனதை ஊடுருவி, அவர்களின் உணர்வுகளில் மாற்றத்தை ஏற்படுத்தி அவர்களை செயலூக்கம் புரியச் செய்யும் வல்லமை இசைப்பாடல்களுக்கு உண்டு என்பதை நன்குணர்ந்துதான் மக்களை எழுச்சி கொள்ளச் செய்ய, குதூகலித்து மகிழ, சிந்திக்க, சிந்தனைக்குத் தெளிவூட்ட, வெட்கித் தலைகுனிய வைக்க, விழிப்புணர்வூட்ட, பெருமைப்பட, பெருமிதங் கொள்ளச் செய்ய, எதிரியை கேலி செய்ய, தன் உணர்வை வெளிப்படுத்தவென நூற்றுக்கணக்கான பாடல்களை இந்த மண்ணின் மக்கள் உருவாக்கினர். இன்றைய எமது சமூகத்தின் அடிநிலையை ஊடுருவி நிற்கும் போராட்ட வாழ்வின் யதார்த்தங்களை தமக்கென்றுள்ள தனித்துவ கலைபண்பாட்டு அம்சங்களினூடாக மக்கள் மனங்களில் பதியச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.<br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>இந்த வகையில் கடந்த ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி, விடுதலைப்புலிகள் மகளிர் படையினரால் வெளியிடப்பட்ட 'சூரியப்புதல்விகள்' ஒலிப்பேழை நாடா இன்றைய போராட்ட நிலையினை, போராட்ட வாழ்வில் பெண்களின் பங்களிப்பை இசையில் வடித்தெடுக்கும் ஒரு கலை முயற்சியாகவே கருதப்படுகின்றது. 'நேற்றிருந்த வாழ்வகற்றி புதியதோர் ஒளியைத் தேடி விரைந்த எம்மண்ணின் புதல்வியர் பற்றிய கானங்கள் இவை. விடுதலை வேண்டி உயர்ந்த இவர்களின் கரங்களால் உலகின் புருவங்கள் விரிந்தன. பெண்மை புதியதோர் அர்த்தமானது. நிலவுக்கும் மலருக்கும் காதல் செய். கவிதைக்கும் உவமைகளாய் உணர்த்தப்பட்டவர்கள் வீரத்தின் பொருளாகினர். எமது தேசத்தின் விடுதலை எமது இனத்தின் விடிவு என்ற உயரிய குறிக்கோளை நெஞ்சில் ஏற்றி நடத்து வந்த இந்தப் புதல்வியர் சுமக்கின்ற சுமைகள், அவற்றுக்காய் கொடுக்கின்ற விலைகள், தியாகங்கள், சாதனைகள் என்பவற்றைப் பாடுபொருளாக்கிய இக்கானங்கள் புதிய வீச்சும் எழுச்சியும் கொண்டவை' என்ற அறிமுக உரையுடன் தொடங்கி 10 பாடல்களைத் தாங்கிவரும் இவ்ஒலிப்பேழை விடுதலைப்புலிகள் மகளிர் படையணியின் 3வது பாடல் ஒலிப்பேழையாகும்.<br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>1993ல் 'விழித்தெழுவோம்' என்ற ஒலிப்பேழை அம்புலி, பாரதி, தமிழவன், வசந்தமதி போன்ற போராளிப் பெண்கவிஞர்களின் உள்ளத்துணர்வுகளைத்; தாங்கி வெளிவந்தது. ஆதன் பின்னர் 1995 இல் 'நெருப்பு நிலவுகள்' என்ற ஒலிப்பேழை 'ஆழவேரோடிய சமுதாய வன்முறைகளைக் கடந்து, வேலித்திரைகளிலிருந்து விடுபட்டு விடுதலை வேண்டி நிற்கும் எமது வளர்ச்சி படிமுறை வளர்ச்சியல்ல, பாய்ச்சல் நிகழ்வு' என்ற அறிமுகத்துடன் விடுதலை கானங்களைச் சுமந்து வந்தது. கிட்டத்தட்ட 15 வருடங்களாய் மண்மீட்புப் போரில் தம்மை இணைத்துக் கொண்ட சூரியப் புதல்விகள் தமது பாதையில் எதிர்கொண்ட சவால்கள், சாதனைகளைப் பதியும் முயற்சியில் இந்த ஒலிப்பேழை ஓரளவு வெற்றி பெற்றிருக்கின்றது. ஐந்து பாடல்கள் சூரியப் புதல்வியின் சாதனைகளை, தியாகங்களை பதிவு செய்திருக்க மீதிப்பாடல்கள் சமூகத்தின் இன்றைய வாழ்நிலையை பதியும் முயற்சியில் இறங்கியிருக்கின்றன.<br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>பொதுவாக பாடல்களை பாராட்டை எதிர்பார்த்துக் காத்திருப்பவை, பாடுபவரை மெய்மறக்கச் செய்பவை, சிறிது காலத்திற்கு நிலைத்து நிற்பவை, தலைமுறை கடந்தும் வாழ்பவை எனப் பலவாறாக வகைப்படுத்தலாம். பாடலின் வரிகளை திரும்பத் திரும்ப மீட்கும் சந்தர்ப்பங்களில் பாடலாசிரியன் வெற்றி பெறுகின்றான். பாட்டின் கருப்பொருளையும் மீறி வெறும் மெட்டுகளை அசைபோடும் நிலைக்கு பாடலைக் கேட்பவன் வரும் நிலையில் இசையமைப்பாளன் வெற்றியைத் தனதாக்கிக் கொள்கின்றான். கவிதையும் இசையும் இணைந்த கலவையை உயிர்ப்பூட்டும் குரலால் வெளிப்படுத்துவதன் மூலம் ரசிகன் மனதில் இடம் பிடிக்கும் நிலையில் அங்கு வெற்றி பாடகனிடம் போய் சேர்ந்து விடுகிறது. அனைத்திற்கும் மேலாக பாடலாசிரியரை, இசையமைப்பாளரை, பாகரை என பட்டிமன்றம் நடத்தப்போய் முடிவு தெரியாது குழம்பும் நேரங்களில் பாடல் சிரஞ்சீவித் தன்மையைப் பெற்று விடுகின்றது.<br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>இவ்வாறு காலத்தால் அழியாத கானங்கள் என்ற வகையில் பெண்களின் சாதனைகளைப் பாடுபொருளாக்கி நிற்கும் ஐந்து அற்புதமான பாடல்களை இவ்ஒலிப்பேழை தாங்கி வந்திருக்கின்றது.<br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>காற்றுக்கும் மழைக்கும் ஈடுகொடுக்க முடியாமல் வீழ்ந்து விடு;ம் பூங்கொடிகள் என்ற மூடக்கொள்கைகளால் முடையப்பெற்ற தத்துவம் 15 வருட கால போராட்ட வாழ்வில் தகர்க்கப்பட்டுவிட்ட செய்தியை இப்பாடல்கள் வெளிக்காட்டுகின்றன.<br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>'வேலிப்பொட்டுக்கள் வெடித்து சரிந்தன. அடுக்களை சுவர்களின் இடுக்கண் தொலைந்தது' என்றும் 'நாளை மலர்ந்திடும் ஈழம் காத்திட நாமும் எழுந்ததனாலே, எம் தாழ்வு மனப்பள்ளத்தாக்குகள் எல்லாம் தலைநிமிர்ந்தே மலையாச்சு' என்றும் பெண்போராளிகளின் இன்றைய வாழ்நிலையை நிதர்சனமாக எடுத்துக் காட்டுகிறது போராளி தமிழ்க்கவி எழுதிய 'அந்த வானத்து நிலவை' என்று தொடங்கும் பாடல். மரபுகளால் இறுக்கமாக சூழப்பட்ட சமூக வாழ்நிலையை உடைத்தெறிந்து இளைய தலைமுறையுடன் இணைந்து போராடப் புறப்பட்டுவிட்ட, பேரக்குழந்தைகளையும் கண்டுவிட்ட ஒரு பெண் போராளியின் உள்ளத்து உணர்வுகளின் வெளிப்பாடே இப்பாடல். பாடகியையோ பாடலையோ குழப்பாமல் இங்கிதமாக நுழைந்து நெளிந்து வரும் இசை எம்மை துள்ளிக் குதிக்கச் செய்கின்றது. வயல் சூழ்ந்த கிராமமொன்றின் வயல் வரப்புகளில் உற்சாகமாக வாய் திறந்து பாட ஊக்குவிக்கின்றது.<br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>பாடலும் இசையும் குரலும் சரிவரப் பொருந்தி கேட்பவர் மனத்தில் துக்கமா, சந்தோசமா, பெருமிதமா என்று இணங்காண முடியாமல் உள்ளம் முழுவதும்; நிறைந்திருக்கும் இன்னொரு பாடல் 'வீரமுடன் களமாடி வருகின்ற' எனத் தொடங்கும் ஒரு போராளிக் கவிஞனின் பாடல். தன்கண் முன்னே தனது தங்கையர் புரியும் சாதனைகளைப் பார்த்து அதன் மூலம் ஏற்பட்ட உணர்வின் வெளிப்பாடுகளை இசைமாலையாக்கி அதனை ஒரு அற்புதமான குரல் மூலம் வெளிப்படுத்தியிருக்கும் இப்பாடல் வேவுப்பெண் புலிகள் பற்றி வெளிவந்த முதலாவது பாடல் என்ற பெருமையைப் பெறுகின்றது.<br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>'கண்ணி வயல்களில் ஏறி நடக்கையில் கால்கள் தவறிடக்கூடுமே<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>உம்மைக் கட்டியணைத்தழ தேகமுமின்றியே காலச் சருகுகள் மூடுமே'<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>'நிலமும் அதிராமல் நீரும் விலகாமல் நிழலெனப் போய் வருகின்றீர்<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>இந்த உலகம் உணராத சுமைகளைத் தாங்கவே<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>உங்களின் தோள்களைத் தருகின்றீர்'<br />
<br />
என்ற வரிகள் அனுபவங்கள் பேசுகின்ற ஒரு கவிதையே. ஒரு பெண்ணின் சாதனையை ஆண் கவிஞன் ஏற்றிச் சொல்வதும், பெண் குரல் ஒன்று இப்பாடலின் உட்பொருளை தனது அகக்கண்ணால் உய்த்துணர்ந்து தனது அற்புதமான குரலால் இப்பாடலுக்கு மேன்மையும் புனிதத்தன்மையும் அளிப்பதுமே இப்பாடலின் சிறப்பம்சம். பாடலின் கருப்பொருளை, வரிவடிவத்தை முறிக்காது அதனை மென்மையாக சூழ்ந்து நிற்கும் இசையால் தனது ஆளுமையை இசையமைப்பாளர் வெளிப்படுத்தியிருப்பதும் இப்பாடலின் சிறப்பம்சமாகும்.<br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>பெண்ணின் சாதனைகளை ஆண் ஏற்றி சொல்லும் இன்னொரு பாடல் 'நிலவுக்குள் நிலவொன்று' எனத் தொடங்கும் பாடல். பெண் போராளிகளை தங்கையாகப் பாவித்து அவளின் பெருமைகளை பாடும் ஒரு சகோதரனது உணர்வின் வெளிப்பாடாகவே இப்பாடல் அமைகிறது. 'பெண்ணுக்கு பெருமை தந்து பண்புக்கு உயிர்தந்து மண்ணிற்கும் விடிவைத் தேடும் என்னுயிரே' என்ற வரிகள் மூலம் தனது பண்பாட்டு அம்சங்களுக்குள் நின்று கொண்டு, தாயக மீட்புக்கும் உதவிசெய்து கொண்டு வாழும் சராசரி தமிழீழ பெண்ணை எமக்கு காட்டுகின்றான் பாடலாசிரியன். பாடலின் ஆரம்பத்தில் தனது உலகில் சஞ்சாரம் செய்யும் இசை மெல்ல மெல்ல இறங்கி பாடகனின் குரலுக்கு மெல்ல வழிவிடுகின்றது. தங்கையின் புகழ்பாடும் தமையனின் குரல் கேட்டு இசையும் கூட பெருமிதமும் குதூகலமும் அடைகிறது.<br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>பெண்ணின் சாதனைகளை பெண்ணோ அல்லது ஆணோ ஏற்றி சொல்வதுடன் நின்றுவிடாது இயற்கையும் எவ்வாறு பெருமிதப்படுகின்றது என்பதை வெளிக்காட்டி நிற்கின்றது இன்னொரு பாடல். போராடப் புறப்பட்டு காவியமாகி தனது மடியில் உறங்கிக் கொண்டிருக்கும் எண்ணற்ற பெண் போராளிகளை கடலன்னை எவ்வாறு தாலாட்டுகின்றாள் என்பதை அற்புதமாக வெளிப்படுத்தி நிற்கும் இப்பாடல் விடுதலைப் போராட்டத்தின் சுமைகளைத் தாங்கி வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தமிழ் மகனின் உள்ளத்து வெளிப்பாடுகளாக இருக்கின்றது.<br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>அது போல் கரும்புலிகளின் சாதனைகளை, அவர்களின் மன உரத்தை வெளிப்படுத்தி இருக்கும் இன்னொரு பாடல் 'உருக்கில் மனம் வரித்து' என்று தொடங்கும் ஒரு பாடல். மூன்று ஆண்கவிஞர்களும் இரு பெண்கவிஞர்களும் இணைந்து சூரியப்புதல்வியின் சாதனைகளை, தியாகங்களை பாடுபொருளாக்கி உலவவிட்டிருக்கின்றனர்.<br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>இலக்கியங்கள் காலத்தின் குரலாய் ஒலிப்பவை. அந்தவகையில் போராடப் புறப்பட்டுவிட்ட சமூகத்தின் தற்போதைய வாழ்நிலையை தெட்டத் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன இரு பாடல்கள். இந்த மண்ணில் தாய் தந்தை பிள்ளைகள் என்று குடும்பமே மண் மீட்புக்காக கிளம்பியிருக்கும் நேரம் இது. கிளம்ப மனமில்லாது தயங்கி நிற்பவர்களைக்கூட தமது உச்சக்கட்ட ஆற்றல்களைப் பயன்படுத்தி தாயக விடிவுக்கு தோள் கொடுக்க வாருங்கள் என கூவியழைக்கும் நேரமும் இதுதான். அடுக்களையே அகிலம் என இருந்தவர்கள் இந்த 15 வருட குறுகிய போராட்ட வாழ்வில் சாதித்த சாதனைகள் அளப்பரியவையாக, கற்பனைக்கும் அப்பாற்பட்டவையாக இருந்தும், இன்றைய போராட்ட சுமையை சரிநிகர் சமானமாக அல்லது அதற்கும் கூடுதலாக தாங்கி நிற்கும் வளர்ச்சி பெற்றவையாக இருந்தும் ஆண் பெண் என்ற பேதத்திற்கு அப்பாற்பட்டு ஒட்டுமொத்த சமூகத்தையும் கூவியழைக்கும் தகுதியைப் பெற்றிருந்தும் கூட பெண் இனத்தை மட்டுமே போராட வாருங்கள் என இவர்கள் அழைப்பதன் மூலம் ஏதோ ஒரு விதத்தில் தமக்குள் ஒதுங்கி நிற்கி;ன்ற ஒரு போக்கு இப்பாடல் ஒலிப்பேழையில் வெளிப்படுவது யதார்த்தத்திற்கு புறம்பான ஒன்றாகவே தெரிகின்றது. 'தேசத்தின் விடுதலை' என்று தொடங்கும் முதலாவது பாடல் பெண் போராளி அம்புலியுடையது. அற்புதமான இசையும் உயிர்ப்பூட்டும் குரல்களும் இணைந்து கேட்பவரின் மனத்தில் விடுதலைப் போராட்டம் தொடர்பான சமூகத்தி;ன் உணர்வலைகளை சுமந்து நிற்கும் இப்பாடல் பெண்களின் பங்களிப்பை மட்டும் வேண்டுவதுடன் நின்றுவிடாது ஆண் பெண் இணைந்த பொதுச்சமூகத்தின் பங்களிப்பை வேண்டி நின்றிருந்தால் மிகவும் அற்புதமான பாடலாக அமைந்திருக்கும்.<br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>ஆண் பெண் பேதத்தைக் கடந்து ஒட்டுமொத்த சமூகமே விடுதலைப் போராட்டத்தின் சுமையை தாங்கி நிற்கும் இன்றைய யதார்த்தத்திற்கு மாறாக அரைத்த மாவையே திருப்பி அரைப்பது போல் பெண்ணை விழித்தெழக்கோரும் பாடல்களும் இப்பாடல் ஒலிப்பேழையில் உள்ளடங்கி இருப்பதானது புறச்சூழல்கள் எவ்வளவுதான் மாறினாலும் அகமாற்றம் ஒன்றிற்கு மனித மனம் உட்படுவதற்கு இன்னமும் காலம் எடுக்கும் என்ற யதார்த்தத்தை கோடிகாட்டி நிற்கின்றது. பாடல்கள் எழுதப்பட்ட காலப்பகுதிக்கும் வெளியிட்ட காலப்பகுதிக்கும் இடையிலான இடைவெளியும் இக்குறைபாட்டுக்கு காரணமாக இருக்கக்கூடும். போராளிகளுக்கு சமதையாக பொதுமக்களும் எல்லைப்படையாக, சிறப்பு எல்லைப்படையாக, கிராமியப்படையாக ஒருங்கிணைக்கப்பட்டு சாதனைகள் படைக்கும் இக்காலப்பகுதியில் அவர்கள் பற்றிய ஒரு பாடலாவது இல்லாது இருப்பது இந்த ஒலிப்பேழையின் இன்னொரு பிரதான குறைபாடாகும்.<br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>இன்றைய வாழ்வு நாளைய வரலாறு. எனவே வெறும் எதுகை மோனைகளிலும், உணர்ச்சியூட்டுவதிலும் கவனம் செலுத்துவதை கைவிட்டு இன்றைய சமூகத்தின் வாழ்நிலையை, அவர்களின் சுமைகளை, தியாகங்களை, அர்ப்பணிப்புகளை அப்படியப்படியே ஆவணப்படுத்த வேண்டிய தேவை எமது சமூகத்திற்கு உண்டு.<br />
<br />Srikanthaluxmyhttp://www.blogger.com/profile/02621345440975786756noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-14981721.post-82142368785525406012017-05-11T04:43:00.003-07:002017-05-11T04:44:43.964-07:00உப்புக்கரிக்கும் உதடுகள்<div style="text-align: center;">
உப்புக்கரிக்கும் உதடுகள்</div>
அணிந்துரை<br />
<br />
<b>கவிஞர் பற்றி---</b>-<br />
அமைதியும் அடக்கமும் எளிமையும் பொருந்திய உருவம். பாசத்துக்கான ஏக்கமும் வாழ்க்கை பற்றிய நிச்சயமின்மையும், சமூகம் மீதான அக்கறையும் நிரம்பிய உள்ளம். அறிவுலகமும் உணர்வுலகமும் அடிக்கடி மோதும் போது வெளிக்கிளர்பவை தான் இவரின் கவிதைகள். இரு உலகிற்குள்ளும் தன்னிச்சையாக அலைபவர் இவர். தனி மனித உணர்வுகளுக்குள் நிற்கின்றார் என உணரும் முன்னமே சமூக உலகிற்குள் பாய்ந்து விடும் வேகம் இவருடையது.<br />
சிறிது காலம் ஆங்கில ஆசிரியராக இருந்திருக்கின்றேன். க.பொ.த உயர்தரப் பிரிவில் நான்கு பாடங்களிலும் அதி திறமைச் சித்திகளை (4 யு) அதிலும் கலைப் பிரிவில் அத்தகையதொரு சாதனையை ஏற்படுத்திய பின்னரும் கூட 'ஆங்கிலம் தெரியாதவன் அறிவிலி' என்ற ஆழமான கருத்துநிலைக்குள் சிக்குப்பட்டு, தனக்கு அது வரவில்லையே என்பதற்காகத் தனது சாதனையே அர்த்தமற்றது என்ற விரக்தி நிலையில் அவர் இருந்த ஒரு காலத்தில் ஏற்பட்ட எனது அறிமுகம். அன்னிய மொழி. ஏன்பது உதட்டு நுனியில், ஆங்கிலப் பாணியில் பேசுவதற்கல்ல அம்மொழிலயிலுள்ள அரிய தகவல்களை எமது மொழிக்குக் கொண்டு வந்து எமக்கும் எமது சமூகத்துக்கும் பயன்படுத்துவதற்கே அந்த அறிவு என்ற எனது கருத்துநிலையை மிகக் கஷ்டப்பட்டு அவருக்குள் ஏற்படுத்தி அந்தத் தாழ்வுணர்ச்சியை மெல்ல மெல்ல நீக்கியதன் நன்றி வெளிப்பாடோ அல்லது கவிதை பற்றிய எனது நோக்கும் ஒரு சில மேடைகளில் அவை பற்றிய எனது கருத்து வெளிப்பாடுகளும், அச்சுருவம் பெற்ற எனது ஒரு சில கவிதைகளும், விமர்சனங்களும் தான் என்னை நோக்கி இழுத்ததோ என்னவோ அவரது ஆக்கங்களுக்கு அணிந்துரை வேண்டும் என்ற ஆழமான சுமையை ஏற்றும் அன்பான அவரது வேண்டுகோளுடன்---<br />
<br />
<b>கவிதை பற்றி---</b><br />
புதுக் கவிதை--- 'சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொல் புதிது, சோதி மிக்க நவ கவிதை எந்நாளும் அழியாத மா கவிதை' என்ற பாரதியின் வரிகளால் உரம் பெற்ற கவிதை. கவிதை தொடர்பான அச்சத்தைத் தூக்கியெறிந்து சிவதர்சினியைப் போன்று தனக்குச் சொந்தமான அனுபவங்களை அப்படியே ஒப்பனையின்றி வெளிப்படுத்தும் துணிவைக் கொடுத்த கவிதை. அதே சமயம் வெட்டி எழுதும் வசனங்களுக்கும் கவிதை எனப் பெயரிடும் அசண்டையீனத்தையும் கொடுத்த கவிதை.<br />
எனது உணர்வின் வெளிப்பாடுகள் கட்டாயம் பதியப்பட்டே ஆக வேண்டும் என்ற வேட்கையின் வெளிப்பாட்டுக்கு ஆரம்பத்தில் பத்திரிகைகள் களம் கொடுத்தன. அந்த அங்கீகாரம் ஏற்படுத்திய நம்பிக்கை தந்த வலு இப்போது உப்புக் கரிக்கும் உதடுகள் என்ற தலைப்பில் ஏற்கனவே பதியப்பட்டவையும் புதிதாக உருவம் பெற்றவையும் இணைந்து அச்சுருவம் பெறுகின்றன.<br />
<br />
<b>கவிதையின் உள்ளடக்கம் பற்றி---</b><br />
எனது உணர்வுகள் அப்பட்டமானவை. உணர்வுகளுக்கு ஒப்பனையிடும் எண்ணம் எனக்கு இல்லை. என் கவிதைகள் சொல்ல விழைவது எது என்பதை அறிவதற்கு சிரமப்பட வேண்டிய தேவையில்லை என்பது தான இவரது எண்ணப்பாடு.<br />
யாரிடம் சொல்லியழ என்ற கவிதையே இவரின் முழு உணர்வையும் பிரதிபலிக்கப் போதுமானது.<br />
<br />
உருக்குலைந்த என்னிதயத்தின்<br />
உறைந்து போன குருதியே<br />
என் கவியின் மையாகையில்---<br />
குளிர்ச்சியும் கனிவும்<br />
அருமையான சந்தமும்<br />
எப்படி எனக்கு வரும்?<br />
<br />
என்ற வினவலிலேயே உணர்வின் வரிகளுக்கு உருவ அலங்காரம் இருக்காது என்பது தெளிவாகிறது. உள்ளத்திலிருந்து அவ்வப்போது பீறிடும் உணர்வுகள் அடுத்தவர் மத்தியில் சிரிப்பை, கோபத்தை, கேலித் தனத்தை, வியப்பை, ஏளனத்தை உண்டு பண்ணுமோ என்ற அச்சத்தில் வெட்டிக் கொட்டி, வேலி கட்டி, முடிந்தால் வித்துவத் தனத்தால் ஒரு படலையுங் கட்டி வெளியே பார்ப்பவருக்குப் பிரமையையும் உள்ளே புகுந்தவருக்குப் பரவசத்தையும் கொடுக்கும் முன்னெச்சரிக்கை உணர்வு பற்றியெல்லாம் வீணாக அலட்டிக் கொள்ளாது எனக்குரிய உணர்வுகள் இது. எந்தெந்தச் சூழலில் அவை வெளிக்கிளர்ந்தனவோ- காலையில் துயில் கலைந்த கையுடன் சில --- குளித்து முடித்துச் சில -- சீவிச் சிங்காரித்துச் சில -- அழுது வடித்து ஆற்றில் இழந்து சில --- உணர்வுகள் வற்றி சடமாகச் சில-- என்று அத்தனை உணர்வுகளையும் அப்படியே சமூகத்தைப் போய்ச் சேர விட்டுள்ளமை தான் இக்கவிதைகளுக்குள்ள தனித்துவம்.<br />
எனினும் கூட கவிதைகள் முழவதும் ஆக்கிரமித்திருக்கும் தவித்தல், தேடுதல், ஏங்குதல், இதயம் வெடித்தல், குருதி உறைதல் போன்ற சொல்லாட்சிகள் தமிழ்ச் சமூகத்தின் பெரும்பாலான பெண்களுக்கு வீட்டுச் சூழலும் சமூகச் சூழலும் அளித்த பரிசு.<br />
இவர் சொல்ல விழையும் இரு பிரதான கருப் பொருளில் முக்கியமானது முதன்மையானது தூய அன்புக்கான ஏக்கம் --- முத்தமே சொத்தாக, முடியும் நேரத்தில் அழுத்தி முத்தமிட்ட அன்னையின் பிரிவு தந்த ஏக்கம்--- தன்னையே மட்டும் நேசிக்கும் அன்பிற்கான ஏக்கம்.--- தூய நட்பிற்கான ஏக்கம்--- அதற்கும் மேலே சமூகத்தின் நலன் மீதான ஏக்கம்---<br />
இந்த ஏக்கம் இயல்பாகவே விரக்தி நிலைக்கு இட்டுச் செல்கின்ற போதும் கூட இவரால் வெகுண்டெழ முடியவில்லை. அன்பு பொய்யென்று உணர்ந்த பின்னரும் வெகுண்டெழ முடியாது தனக்குள்ளேயே குமைந்து, குழைந்து வெளிப்படும் உணர்வுகளுக்குரியவர் இவர்<br />
<br />
அனைத்திலுமே நீ வெற்றுச் சொல்லாகி<br />
உள்ளமதில் ரணத்தை ஏற்படுத்தினாலும்<br />
உடைக்காதே என் மனதை என்று<br />
சொல்ல முடியவில்லை என்னால்.<br />
<br />
இடையிடையே கட்டளைக் கவிதைகள் மூலம் வாழ்வு பற்றிய நேர்க்கணிய அணுகுமுறை வெளிப்பட்ட போதும் கூட இவரது சூழலும், இவரது சமூகச் சூழலும் இணைந்து நம்பிக்கையீனம் என்ற வட்டத்துக்குள்ளேயே இவரைச் சுழல விடுகின்றன. சமூகம் பற்றிய இவரது நம்பிக்கையீனம் இவரது எதிர்பார்ப்பு என்ற கவிதையில் ஆழமாக வெளிப்படுகின்றது. இது இவரது தவறல்ல. போர் மலிந்த, போலிகளும் பகட்டுகளும் அரியணையில் வீற்றிருக்கின்ற இன்றைய சூழலில் போலியற்ற தூய வாழ்க்கைக்காக ஏங்கும் எவருக்கும் ஏற்படக் கூடிய நம்பிக்கையீனம் தான் இது. வேண்டுவது இது தான என்ற கவிதையில்<br />
<br />
சின்னத் திரைகளின் சிற்றின்பத்துள்<br />
சிலையாகிப் போகும் சீர் கெட்ட வாழ்வு<br />
இனி எமக்கு வேண்டாம்<br />
சன்னங்கள் உமிழ்ந்து உடலைச்<br />
சல்லடையாக்கும் துப்பாக்கிகள்<br />
மனித நேயத்துக்கு புதைகுழி தோண்டும் போலி மனிதர்கள் வேண்டாம்<br />
<br />
என்று சற்று அழுத்திக் கூறும் வல்லமை இருந்தாலும்,<br />
<br />
விடியும் எனக் காத்திருந்த வேளையில்<br />
இருள் விடையாயமைந்தது<br />
முடியும் எனக் காத்திருந்த வேளையில்<br />
இடைவெளி அதிகரித்து நீண்டது.<br />
<br />
ஞாபகங்கள் சேரத் தொடங்கிய<br />
அந்த நாள் தொடங்கியே<br />
இயந்துபோய்விட்டதாக<br />
என்னுள்ளே உணர்ந்து கொள்கின்றேன்<br />
<br />
என இறுதியில் எதிர்பார்ப்பு என்ற கவிதையில்; நம்பிக்கையீனத்தில் முடிவடைகின்றன எல்லாமே.<br />
<br />
இவரது கவிதைகளில் இரண்டாவது பிரதான கருப்பொருள் சமூக நலன் மீதான அக்கறை.<br />
<br />
மூடிய சிறைச்சாலை<br />
உன் ஆயுள் வரை---<br />
திறந்தவெளிச் சிறைச்சாலையே<br />
<br />
எங்கள் ஆயுள் வரை என்று அடக்குமுறையின் அவலத்தை மட்டும் பதிவுசெய்யவில்லை இவர்.<br />
<br />
யாருமே இல்லாததால்<br />
இப்போதெல்லாம்<br />
தனக்குள்ளே கதைத்துக்கொள்கின்றாள்'<br />
<br />
என்ற வரிகளில் அறியாமைச் சகதிக்குள் வீழ்ந்து கிடக்கும் பெண்ணின் அவலத்தையம் ஆழமாகப் பதிவு செய்கிறார். தன்னைச் சுற்றியுள்ள அவலங்களை மட்டும் பதிவு செய்வதுடன் தனது பணியை மட்டுப்படுத்தாது அதற்குமப்பால் உலகைப் பார்க்கும் பண்பு இவருக்கு உண்டு என்பதை வெளிப்படுத்தி நிற்கிறது அரவாணியின் கதறல் என்ற கவிதை. அரவாணிகளின் உணர்வுகள் சோகங்களை நூல்கள் வாயிலாக மட்டுமே அறிந்திருந்தபோதும் கூட<br />
<br />
எங்கள் வாழ்க்கை அகராதியில்<br />
நாங்கள் தேடும் ஒவ்வொரு சொற்களுமே<br />
விபரீதமாகச் சிரிக்கிறது<br />
நெருஞ்சி முட்களாக <br />
<br />
என்று அவர்களின் உணர்வுகளை ஆழமாகப் பதிந்து செல்வதற்கான அறிவைக் கொடுத்தது சமூக நலன் மீதான இவரது அக்கறையே.<br />
இயற்கையின் அனர்த்தங்கள், சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை பதிவு செய்கிறது 'உப்புக் கரிக்கும் உதடுகள்' என்ற கவிதை. போர் அனர்த்தங்கள் தனி மனிதனில் குறிப்பாக பெண்களில் ஏற்படுத்தும் தாக்கங்களைப் பதிவு செய்கிறது 'சிறையிருக்கும் நண்பிக்கு'என்ற கவிதை. சீதனக்கொடுமையை அழகாகப் பதிவு செய்கிறது ' மரண சாசனம்'<br />
<br />
பொதுவாகவே பெண்களின் படைப்புகள் தன்னை, தனது சோகங்களை, அச்சோகங்களுக்குக் காரணமான ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பை சாடுவதையோ அல்லது அதனை ஒழிப்பதற்கான அதுவுமன்றி உடைப்பதற்கான வழிவகைகளை தேடுவதையோ இலக்காகக் கொண்டிருக்கும் நிலையில் அதிலிருந்து சற்று மேலுயர்ந்து ஆண்பெண் என்ற பேதத்துக்குமப்பால் பொது மனிதனாக நின்று சமூகத்தைப் பார்க்கும் படைப்பாளியாக சிவதர்ஷினியைப் பார்ப்பது மனதுக்கு மகிழ்வைத் தருகிறது.<br />
<br />
கவிதைத் தொகுப்பு முழுவதையும் படித்து முடித்தவர்களுக்கு ஏற்படும் உணர்வுகளில் முக்கியமானது சமாதானம், வேலைநிறுத்தம், கலாசாரச் சீரழிவு, சீதனக் கொடுமை, பாதிப்புற்றோர் நட்பு என்று பன்முகப் பார்வையைக் கொண்டவர் சிவதர்ஷினி என்ற உணர்வே. தன்னுணர்வுக்குள் சிக்குப்பட்டு நிற்பவர்களுக்கு உருவ உத்தித் திறன்கள் இருக்குமளவிற்கு பன்முகப் பார்வை இருப்பதில்லை. சமூக நலன் மீதான உண்மையான அக்கறை உள்ளவர்களுக்கெ தமமைச்சுற்றி நடப்பதை ஆழ ஆராய்ந்து படைப்பிலக்கியம் வாயிலாக சமூகத்திற்கு அனுப்பும் வல்லமை உண்டு என்ற யதார்த்தத்திற்குள் தான் இவரும் நிற்கிறார் என்பது மனதுக்குள் ஆறுதல் தரும் ஒன்று. இவர் பணி தொடர என்றும் என் நல்லாசிகள்.<br />
<br />
<br />
அருளானந்தம் ஸ்ரீகாந்தலட்சுமி<br />
01-07-2005<br />
<br />
<br />
<br />Srikanthaluxmyhttp://www.blogger.com/profile/02621345440975786756noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-14981721.post-81672617876518083352017-05-11T04:17:00.000-07:002017-05-11T04:17:28.057-07:00யாழ்ப்பாணப் பெட்டகம்<div style="text-align: center;">
அணிந்துரை</div>
தன்னைச் சுற்றியுள்ளவை மீதான மனிதனின் அவதானிப்புகள், அவ் அவதானிப்புகளை பரிசோதனைக்குள்ளாக்கி தீர்வு காண முயலும் மனித மூளையின் ஆற்றல், தான் பெற்ற அறிவை அடுத்துவரும் பயன்படுத்தும் வகையில் ஆவணப்படுத்தும் மனித விருப்பு, தனது விருப்பங்களை செயலுருப்படுத்துவதற்கு அவ்வப்போது மனிதன் உருவாக்கிய கருவிகளின் அபரிமித வளர்ச்சி - இன்றைய உலகின் வியத்தகு அறிவியல் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைவது இவற்றின் இணைப்பே. 18ம் 19ம் நூற்றாண்டுகளின் கைத்தொழில் புரட்சி தகவல் பதிவேடுகளின் பௌதிக ரீதியான வளர்ச்சிக்கு வேகமூட்ட 19ம் நூற்றாண்டின் தொழில்நுட்பப் புரட்சியானது பெருக்கத்தை அபரிமிதமாக்கி பின்னரைப்பாதியில் தகவல் யுகமொன்றின் தோற்றப்பாட்டிற்கு வித்திட்டு கைத்தொழில் சமூகமாயிருந்த மனித சமூகத்தை தகவல் சமூகமாய் மாற்றுவதற்கான நிர்ப்பத்தத்தை உருவாக்கியது. பிரித்தானிய அறிவியலாளரான ரிம் பேணர்ஸ் லீ 1989இல் இவ்வுலகிற்கு அளித்த உலகளாவிய வலைத்தளமும் 1991இல் அதன் அறிமுகமும் மனித சமூகத்தின் இதுநாள் வரையிலான தகவல் பதிவேடுகளை தன்னால் முடிந்தவரை ஓரங்கட்ட முயற்சிக்கிறது. மனித வாழ்வின் அனைத்து தேவைகளையும் சிறிய கணினித் திரைக்குள் சாதிக்க இணையம் உதவுகிறது. தகவல் உருவாக்கத்தினதும் பெறுதலினதும் அளவிலும் வகையிலும் ஒவ்வொரு தேசத்தினதும் பொருளாதார அரசியல் சமூக சூழலானது பாதிக்கப்பட்டுள்ளது. உலகை வடிவமைக்கும் ஆற்றல் பெற்ற சக்தியாக உருவெடுத்துள்ள தகவலை அணுகுதல் பகிர்தல் பயன்படுத்தல் என்பவற்றில் வெற்றி பெற்ற ஓரு உலகில் நாம் வாழ்கிறோம்.<br />
தகவல் குறித்த தேடல் ஆவணப்படுத்தல் என்ற சிந்தனையை நோக்கி இயல்பாகப் பயணிக்கின்றது. இன்றைய நிகழ்வு நாளைய வரலாறாகுவதற்கு அது ஏதோ ஒரு வகையில் பதியப்படுவது அவசியமாகிறது. பதியப்படாதவை அனைத்தும் மறைந்து போகின்றது. உரு, வரி, வடிவம், அலை ஆகிய நான்கு வகைப்பட்ட தகவல் வெளிப்பாட்டு வடிவங்களினூடாக இந்த நிகழ்வு பதியப்படுவதும், பாதுகாக்கப்படுவதும் அடுத்த தலைமுறைக்குக் கையளிக்கப்படுவதும் தொடர்ச்சியாக நடைபெறும்போது சமூகம் ஒன்றிற்குரிய அறிவுத் தொகுதி அதன் அறிவிலும் ஆழத்திலும் கனதிமிக்கதாக மாறுகின்றது. சமூகம் ஒன்றின் ஒட்டுமொத்த அடையாளத்தையும் சமூக உறுப்பினர் ஒவ்வொருவரும் அறிந்து கொள்வதற்கு ஒன்றுக்கொன்று தொடர்புடைய நிகழ்வுகள் வௌ;வேறு காலங்களில் வெள்வேறு வடிவங்களில் பதியப்படுவதும் அவை பொதுப்பயன்பாடு கருதி ஓரிடப்படுத்தப்படுவதும் அவசியமானது. <br />
கடந்த காலத்தை பதிவு செய்வதற்கென 19ம் நூற்றாண்டின் தொழில்நுட்ப யுகம் இந்த உலகிற்கு பரிசளி;த்த மிகச் சிறந்த ஊடகம் ஒளிப்படங்கள். சொற்களைவிட உரத்துப் பேசும் ஆற்றல் படங்களுக்குண்டு என்பதால் எந்தவொரு ஊடகத்தினதும்; - அது பத்திரிகையோ அல்லது பருவ இதழோ – ஆயுளைக் கூட்டவோ குறைக்கக்கூடிய ஆற்றல் விம்பங்களுக்கு உண்டு. மனித வரலாற்றின் ஆரம்பக் கட்டங்களிலிருந்து இன்றைய தகவல் யுகம் வரை ஆற்றல் மிக்க ஊடகமாகவும் அதிக கவனிப்பைப் பெற்ற ஊடகமாகவும் இருப்பது விம்பங்களே. தன்னைச் சூழவுள்ள உலகை மீள உருவாக்கும் மனித விருப்பமானது குகை ஒவியங்களிலிருந்து ஆரம்பித்து இன்றைய இணைய விம்பங்கள் வரை நீடித்து எங்கும் வியாபித்திருக்கிறது. மனித வாழ்வின் பெறுமதிமிக்க கணங்களை விம்பங்களாக வடித்தெடுக்க எண்ணும்; மனித விருப்பும் அவ்வாறு பதியப்பட்ட நினைவுகளை சேமித்து பாதுகாப்பதற்கான மனிதனுடைய உளத்தூண்டலும் ஒளிப்படங்கள் மனித வாழ்வில் செலுத்தும் தாக்கத்தை உய்த்துணரப் போதுமானது.<br />
மனிதர்கள், நிகழ்வுகள், மற்றும் இடங்களின் அழகையோ அல்லது துயரத்தையோ எவ்வித கலப்படமுமின்றி வெளிக்காட்டும் ஆற்றல் ஒளிப்படங்களுக்கு உண்டு. ஒளிப்படங்கள் ஏற்கனவே பகிரப்பட்ட தகவல்களின் பயன்பாட்டிற்கு மேலும் வலு சேர்க்கக்ககூடியது. வாசிப்பதையும்; கேட்பதையும் விட உணர்வும் சதையுமாக ஒன்றைப் பார்ப்பதற்கு வலு அதிகமென்பதால் தான் வரி வடிவங்களை விடவும் ஒளிப்படங்கள் ஆற்றல் மிக்க ஊடகமாக உலகை ஆக்கிரமிக்கக்கூடியதாக உள்ளது. வாசகனைச் சென்றடைவதில் வரி வடிவங்களைவிட வரைபுகளுக்கு ஆற்றல் அதிகம் என்பதால் தான் இணையத்தின் அதிக பக்கங்கள் இன்று நிரப்பப்பட்டிருப்பது விம்பங்களினால் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர். வெறும் வரி வடிவத்தைவிட இடையிடையே விம்பங்களுடன் கூடிய புத்தகங்கள் வாசகனை அதிகம் ஈர்க்கும் சக்தி வாய்ந்தவை. ஏனைய கட்புல ஊடகங்களை விடவும் ஒளிப்படங்கள் துல்லியத்தன்மை மிக்கவை. ஓவியமொன்றின் நம்பகத்தன்மையானது அதனை வரையும் கலைஞனின் திறனில் தங்கியுள்ளது. ஓவியத்தில் எதைச் சேர்ப்பது எதை விலக்குவது என்பதன் தீர்மானமும் ஓவியனின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளிலேயே தங்கியிருக்கிறது. ஆனால் ஒளிப்படங்கள் அப்படியன்று. ஒளிப்படக்கருவி எதை மையப்படுத்துகின்றதோ அது எவ்வித கலப்படமும் இன்றி உள்ளதை உள்ளபடியே உலகிற்கு தரும்.<br />
நிச்சயமற்ற வாழ்வியலை அடிப்படைப் பண்பாகக் கொண்ட எந்தவொரு சமூகத்தினதும் வரலாற்றை ஆவணப்படுத்துவதற்கான மிகச் சிறந்த ஊடகமாகக் கருதத்தக்கது அத்தகைய சமூகத்தினது வாழ்வியலை விம்ப முறையில் ஆவணப்படுத்தலாகும். கணினித் தொழினுட்பம், தொலைதொடர்புத் தொழினுட்பம், கட்புல செவிப்புல தொழினுட்பம், நுண்பிரதியாக்கத் தொழினுட்பம் என்பன இணைந்த தகவல் தொழினுட்பச் சூழல் ஒன்று விம்ப ஆவணப்படுத்தலுக்கான அற்புதமான வாய்ப்பை ஏற்படுத்தும் என்பதையே இன்றைய உலகளாவிய வலைத்தளத்தின் பெரும்பகுதி விம்பங்களினால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது தெளிவாக்குகின்றது. பார்ப்பதற்கும் தேடுவதற்கும் விம்ப ஆவணவாக்கத்திற்கு அதிக பங்குண்டு. இங்கு விம்பங்கள் என்னும் பதம் படங்கள், வரைபுகள், ஒளிப்படங்கள், ஓவியங்கள், புகைப்படங்கள் என்பவற்றுக்கான ஒரு பொதுப்பதமாக விளங்குகின்றது. <br />
1937இல் விமானப் பேரழிவை உலகிற்கு கொண்டுவந்த சாம் சேரா, 1945இல் நாகசாகியில் வெடித்த அணுகுண்டின் வானளாவிய புகைப்படலத்தை படம் பிடித்த சார்ள்ஸ் லெவி, 1972இல் வியட்னாமில் யுத்தத்தின் பயங்கரத்தை வெளிக்கொணர்ந்த நிக் யூட், 1993இல் சூடானில் வறுமையின் கோரத்தைப் படம் பிடித்த கெவின் காட்டர், 2001இல் தகர்ந்து கொண்டிருந்த உலகின் அதியுயர உலக வர்த்த மையத்திலிருந்து வெளியே பாய்ந்த நபரை படம் பிடித்த ரிச்சர்ட் ட்ரு, 2004இல் ஒஸ்விச் நச்சு வாயுக்கூடத்தின் சுவர்களிலுள்ள நகக்கீறல்களை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டிய சைமன் றொபேட்சன் என காலத்துக்குக் காலம் உலகின் கவனத்தை ஒற்றை விம்பத்தினூடாக திசைதிருப்பும் வல்லமையை ஏற்படுத்தியிருக்கின்றனர் ஒளிப்படவியலாளர்கள். வாழ்வின் இனிய கணங்களை, இயற்கையின் அழகை மட்டுமன்றி பேரழிவின் அவலத்தை, வறுமையின் கோரத்தை, யுத்தத்தின் பயங்கரத்தை, விபத்தின்; அதிர்வினை உள்ளது உள்ளபடியே உணர்வுகளுடன் வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றது விம்ப உலகம். <br />
உலகின் பல சமூகங்கள் போன்றே நீண்ட காலமாக யுத்தத்தின் கோரப்பிடிக்குள் சிக்கி தொலைந்த புத்தகமாகிப் போன ஈழத்தமிழ்ச்சமூகத்தின் இன்றைய வாழ்வியலில் தற்போது இருப்பதை விடவும் இழந்தவை மிக அதிகம். உலகின் மனச்சாட்சியை உலுக்கிய எத்தனையோ விம்பங்களின் வரிசையில் இடம்பிடிக்கும் வல்லமையை தருமளவிற்கு யுத்தத்தின் கோர முகங்களை சந்தித்திருக்கிறது இந்த மண். இனக்கலவரத்தின் இரத்தக்கறைகள், ஆக்கிரமிப்பின் கோரப்பற்கள், இடப்பெயர்வின் அவலங்கள், யுத்தத்தின் அழிவுகள், பண்பாட்டுத் தொலைப்புகள், சிதைந்த கட்டிடங்கள், சீரழிந்த வாழ்வு, விடிவிலாக் காலைகள், வீரத்தின் விளைநிலங்கள், இருள் கிழித்த அதிர்வுகள், உயிரின் நாற்றுமேடைகள், கடலலையின் தவிப்புகள், கானகத்தின் தீ வரிகள், உறங்காத கண்மணிகள், சமர்க்களத்தின் சரித்திரங்கள், அலை கிழித்த குருவிகள், கார்த்திகையின் பூமுகங்கள், தீயெரித்த புத்தகங்கள், மண் புதைந்த மழலைகள், மௌனித்த உயிர்கள், தியாகத்தின் மூச்சொலிகள் போன்ற ஈழத்தமிழரின் வாழ்வியற் கோலங்களை ஒற்றை விம்பத்திற்குள் சிறைப்பிடித்த உன்னத படைப்பாளிகளையும் அவர்களின் அற்புதப் படைப்புகளையும் இந்த மண் கொண்டிருந்தபோதும் அவற்றை உலக அரங்கில் நிலைநிறுத்தும் வல்லமையைத் தேடியவாறே வழுக்கிச் செல்லும் ஈழ வரலாற்றின் இறுதிப்பக்கங்களில் அவை இல்லை என்றே நினைத்திருக்க வரலாறு தானே நிரப்பிச்சென்ற வல்லுறவின் விம்பம் ஒன்று 2009 இல் இசைப்பிரியா என்ற வடிவில் வையகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது மட்டுமன்றி உலகெங்கணுமுள்ள அசையும் அசையா ஊடகங்களின் அதிக பக்கங்களை நிரப்பியது. எஞ்சியிருந்தவையும் புனர் வாழ்வு, புனருத்தாரணம் என்ற பெயரில் உருமாறிப் போக உரு மாறிய வேகத்திற்;கு ஏற்ப ஈழத்தமிழ்ச் சமூகத்தின் ஆவணப்படுத்தும் ஆர்வம் ஈடுகொடுக்காமையால் எம்மிடம் எஞ்சியிருப்பவை மிகமிகச் சொற்பமே. இந்தச் சொற்பங்களை ஏதோ ஒரு வேகத்திலும் ஓர்மத்திலும் குருவி சேர்க்கும் குறுணிபோல் சிறுகச் சிறுக சேகரித்து உருவாக்கப்பட்டதே 'யாழ்ப்பாணப் பெட்டகம்' என்ற அரிய விம்பங்களின் கருவூலமாகும்.<br />
மரபுரிமைகளைப் பாதுகாக்கவேண்டும் என்ற உயரிய சிந்தனையிலிருந்து 2005 ஆம் ஆண்டு கருக்கொண்ட 'யாழ்ப்பாணப் பெட்டகம்' என்ற வரலாற்றுக் கருவூலத்திலிருந்து பொறுக்கியெடுக்கப்பட்ட 1000 விம்பங்களும் அவற்றி;ன் விபரங்களும் ஆளுமைகள், மற்றும் வணக்கஸ்தலங்கள் என்ற இரு தொகுதிகளாக நூலுருவம் பெறுகின்றன. நூலாக்க முயற்சியின் ஆரம்ப கட்டங்களில் ஆளுமைகள், வணக்கஸ்தலங்கள், ஏனைய மரபுரிமைகள் ஆகிய மூன்று தலைப்புகளின் மூன்று தொகுதிகளை வெளியிடும் நூலாசிரியரின் திட்டம் நிதிப்பற்றாக்குறையை முன்னிட்டு இரு தொகுதிகளாக மாற்றப்பட்டிருப்பது இங்கு கவனத்தில் கொள்ளற்பாலது. யுத்தத்தால் சிதைவடைந்து அனைத்தையும் இழந்து நிற்கும் ஈழத்தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியலை விம்ப வடிவில் ஆவணப்படுத்தும் அருள்சந்திரனின் முயற்சியானது காலத்தின் மிக அவசியமான தேவையாகும்.<br />
அறிவின் வழி விரியும் கற்பனைகளின் புலக்காட்சியும் உருக்களின் வழி விரியும் உண்மைகளின் புறக்காட்சியும்; என மனிதனைச் சூழ்ந்துகொள்ளும் சமூகஊடகங்களின் தகவற் சுனாமியில் ஒவ்வொரு தமிழனும் வாசிக்கவேண்டிய வரலாற்றின் பக்கங்களும் படிமங்களும் தப்பிப்பிழைத்திடல் கடினம். அதிலும் போரும் இழப்பும் வாழ்வாகிப்போன தமிழின இருப்பினையும் இல்லாமற்போன அதன் உண்மைகளின் புறக்காட்சிகளையும் கண்களில் சேகரித்து, மேவிப்பாயும் வரலாற்று வெள்ளத்தில் வழிந்தோடிவிடாமல் தூக்கிநிறுத்திப் பாதுகாப்பது அதைவிடக் கடினம்.<br />
பண்பாடுமிக்க மனிதர்களாக உலகில் தலைநிமிர்ந்து தமிழ் மக்கள் வாழவும், தம்மொழி, தம்மதம், தம்நிலம் என்பவற்றைப் பேணிப் பாதுகாக்கவும் ஓவ்வொரு தமிழனும் வரலாற்றைப் பேணும் பெரும் பொறுப்புடையவனாகிறான். இவன் இயல்பாகக் காணவேண்டிய காட்சிகளை, அறிவோடு இயைந்திட்ட வரலாறுகளை செயற்கையாக கண்காட்சிகளாக காட்டவேண்டிய காலகட்டமே இன்று நீண்டுசெல்கிறது. இந்நிலையில் மனிதனை ஆக்கிரமித்திருக்கும் சமூகஊடகங்களின் அதேபாணியில் எம்தமிழின் ஆளுமைகளையும் வழிபாட்டிடங்களையும் காட்டிடத் துடிக்கின்ற இத்தொகுப்புகளின் துடிப்பும் போக்கும் இயல்பாகவே ஈர்ப்புச்சக்தியைக் கொண்டிருக்கிறது. இதுவே முன்னைப் பழமைக்கும் பின்னைப் புதுமைக்கும் பாலமாய் அமைந்த பெருமையும் பெறுகிறது.<br />
தொகுதி ஒன்று யாழ்ப்பாணப் பிரதேசத்தில் இதுவரை வாழ்ந்து மண்ணுக்குப் பெருமை சேர்த்து மறைந்து போன ஆளுமைகளை ஆவணப்படுத்துகின்றது. பிரதேசரீதியாக இனமொன்றின் மனித ஆளுமைகளை ஆவணப்படுத்தலென்பது தனித்துவமான சவால்கள்மிக்க வரலாற்றுப் பணியாகிறது. வாழ்க்கை வரலாற்றுத் தகவல்களின் துல்லியத்தன்மை தகவல் சேகரிப்பவரின் கைகளிலேயே அதிகம் தங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக அவரது தகவற் திறன்களிலும் மொழியாற்றலிலும் குறித்த சமுகத்தின் மீதான அக்கறையிலும் தங்கியுள்ளது. ஏற்கனவே நூலகங்களில் இருக்கின்ற முதலாம் நிலைத் தகவல் வளங்களான பத்திரிகைகள், சஞ்சிகைகள், மலர்கள், கல்வெட்டுக்கள் போன்றவை ஆளுமைகள் சார்ந்த விம்பங்களை ஆவணப்படுத்துவதற்கான மூலாதாரங்களாக இருப்பினும் விம்பங்களின் துல்லியத்தன்மை கேள்விக்குள்ளாகும்போது மேலதிக தேடலை நோக்கி ஆய்வாளனை நகர நிர்ப்பந்திக்கும் என்ற யதார்த்தம் கணிசமானளவு விம்பங்களை முதல்நிலைத் தரவுகளாக இந்நூலில் உள்ளடக்க வேண்டியதன் அவசியத்தை ஆய்வாளனுக்கு ஏற்படுத்தியிருப்பது புலனாகின்றது. கணிசமான விம்பங்கள் குறித்த ஆளுமைகளின் உறவினர்களிடம் நேரே சென்று அவர்களிடமிருக்கும் தரவுகளிலிருந்து பெறப்பட்டவையாகும்.<br />
தொகுதி இரண்டு யாழ்ப்பாணப் பிரதேசத்திலுள்ள முந்நூறுக்கும் மேற்பட்ட வணக்கஸ்தலங்களை ஆவணப்படுத்துகின்றது. வணக்கஸ்தலங்களில் 200 சைவாலயங்கள்;, 75 கத்தோலிக்க ஆலயங்களினதும், 15 பள்ளிவாசல்களும், 3 விகாரைகளினதும் சுருக்க வரலாறும் அவற்றின் ஆரம்ப மற்றும் தற்போதைய நிலையிலுள்ள வர்ணப் புகைப்படங்களும் பதிவிடப்பட்டுள்ளன. இத்தொகுதியிலும் கணிசமான விம்பங்கள் நூலாசிரியரால் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரே சென்று எடுக்கப்பட்டவையாகும்.<br />
பொதுவாகவே இத்தகைய தொகுப்பாக்கங்கள் இரண்டாம்நிலைத் தரவுகளிலேயே பெரிதும் தங்கியிருப்பவை என்பதனால் உசாத்துணை நூல்களாகக் கருதப்படுபவை. இதிலிருந்து சற்று மாறுபட்டு இத் தொகுப்பாக்கங்கள் முதலாம் நிலைத் தரவுகளை கணிசமானளவில் கொண்டிருப்பதனால் உசாத்துணைப் பண்பு கொண்டதாக அமையக்கூடிய தொகுப்பாக்கங்களிலிருந்து சற்று வேறுபட்டு முதல்நிலைத் தகவல் வளங்கள் என்ற பண்பையும் இத்தொகுப்புகள் கொண்டிருக்கின்றன. இலகுவான தேடுகையை கருத்தில் கொண்டு இத்தகைய ஆக்கங்கள் அகர வரிசையில் உள்ள ஒழுங்கமைப்பையே தமக்குள் கொண்டிருக்கும் இதிலிருந்து சற்று மாறுபட்டு தேர்ந்த வாசகனது உயர்திறன்மிக்க தேடுகைக்கு உதவும் பொருட்டு ஒன்றுடனொன்று தொடர்புடைய ஒரே துறை சார்ந்த ஆளுமைகளை ஒன்றாக குழுமப்படுத்தி முறை சார்ந்த ஒழுங்கமைப்பை பேணும் புதிய முயற்சி ஒன்றை இங்கு அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இதற்கமைய ஆளுமைகள் சார்ந்த பதிவுகள் அகர வரிசையிலமைந்த பரந்த பொருட்தலைப்புகளின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றது. <br />
சமுகவியல் நோக்கில் சமூகமொன்றின் வளர்ச்சிப் போக்கினைத் தீர்மானிக்கவல்ல காரணிகளாக சமுகவியலாளர்கள் கூறுகின்ற நிலைபேறாக்கம், புதுமையாக்கம், ஆவணவாக்கம் போன்ற சிந்தனைகள் செயலுருப்பெறுகின்ற இன்றைய சூழலில் இவ்வாக்கம் சமுக அசைவியக்கத்திற்கான புதியபாதையொன்றினை இனங்காட்டிநிற்கிறது. நூலகவியல் நோக்கில் தேசியநூலகமொன்றினை ஒத்த நிறுவனங்களால் தேசியரீதியாக முன்னெடுக்கப்படவேண்டிய ஆவணப்படுத்தலுக்கான செயலூக்கத்தைத் தரவல்ல சிறுநகர்வாக இதனைக் கணிக்கவேண்டியுள்ளது. வரலாற்று நோக்கில் பாவலர் சரித்திர தீபகம், ஈழத்துத் தமிழ்ப்புலவர் சரித்திரம் போன்ற வாழ்க்கை வரலாற்று நூல்களுடன் ஒரே இறாக்கையில் அமைவிடம் பெறுவதற்கான தகுதிப்பாட்டை இந்நூல் கொண்டிருக்கின்றது. உளவியல் நோக்கில் சமுதாயத்தில் ஆக்கத்துடன் தொடர்புடைய அனைத்து சமூகத்தினரோடும் நெருக்கமான தொடர்பினைப் பேணிநிற்பதுடன் ஆக்கத்தில் இடம்பெறும் ஆளுமைகளின் சந்ததியினர்க்கு மனத்திருப்தியையும் நிறைவையும் தரும் உளத்தூண்டலுக்குரிய ஆவணமாகவும் செல்வாக்குச் செலுத்துகிறது.<br />
அருள்சந்திரனின் அர்ப்பணிப்பு, சமூகநேசம் என்பவற்றைவிட ஆவணப்படுத்தலுக்கான தயார்ப்படுத்தலில் அவரது செம்மைத்தன்மை ஆக்கத்தின் மற்றோர் தரமான குறியீடாகிறது. மேலும் இடையறாத அவரது தேடலின் விளைவாய் தொகுப்பில் இடம் பெறும் அறுநூறுக்கும் மேற்பட்ட ஆளுமைப்பதிவுகளும் முந்நூறுக்கும் மேற்பட்ட வணக்கஸ்தலங்களும் எதிர்காலத்தில் எமது சமூகத்திற்கான இருப்பிற்கும் வளர்ச்சிக்கும் இன்றியமையாதவை. இப்பாரிய பணிச்சுமையினைத் தாங்கி அதன் முடிவுறுத்தி தொகுத்து தயக்கங்களின் தாக்கத்திலிருந்து மேலெழுந்து ஆக்கமொன்றை வெளிக்கொணர்தலென்பது வெறும் பாராட்டுதல்களுக்காகவன்றி அதன் பின்புலத்திலிருக்கும் வலிகளையும் இடர்ப்பாடுகளையும் தாங்கி முளைத்தெழும் வல்லமை படைத்த விருட்சமொன்றிற்கான விதையின் புறப்பாடாகிறது.<br />
ஈழத்து வரலாற்றின் இன்றைய பக்கங்களை நிரப்பிச்செல்லும் அருட்சந்திரனின் பெறுமதிமிக்க இந்த நூலுக்கு அணிந்துரை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.<br />
விருட்சமாய் நிமிர வாழ்த்துக்களுடன்<br />
<br />
அருளானந்தம் ஸ்ரீகாந்தலட்சுமி<br />
பிரதம நூலகர்<br />
யாழ் பல்கலைக்கழகம்<br />
01-12-2016<br />
<br />Srikanthaluxmyhttp://www.blogger.com/profile/02621345440975786756noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-14981721.post-66399437035002500412017-05-10T20:14:00.002-07:002017-05-10T20:14:49.493-07:00Children In Search of Light<div align="center" class="MsoNormal" style="text-align: center;">
<b><i><span style="font-family: "Monotype Corsiva"; font-size: 36.0pt; mso-bidi-font-family: Arial;">Children <o:p></o:p></span></i></b></div>
<div align="center" class="MsoNormal" style="text-align: center;">
<b><i><span style="font-family: "Monotype Corsiva"; font-size: 26.0pt; mso-bidi-font-family: Arial;"> </span></i></b><b><i><span style="font-family: "Monotype Corsiva"; font-size: 24.0pt; mso-bidi-font-family: Arial;">In Search of Light<o:p></o:p></span></i></b></div>
<div align="center" class="MsoNormal" style="text-align: center;">
<br /></div>
<div align="right" class="MsoNormal" style="text-align: right; text-indent: .5in;">
<br /></div>
<div align="center" class="MsoNormal" style="text-align: center;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
Children are</div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-left: .5in; mso-list: l0 level1 lfo1; text-align: justify; text-indent: -.25in;">
<!--[if !supportLists]-->-<span style="font-size: 7pt; font-stretch: normal; font-variant-numeric: normal; line-height: normal;">
</span><!--[endif]-->the buts that appear now with the hope of blooming and
spreading their fragrance in future</div>
<div class="MsoNormal" style="margin-left: .5in; mso-list: l0 level1 lfo1; text-align: justify; text-indent: -.25in;">
<!--[if !supportLists]-->-<span style="font-size: 7pt; font-stretch: normal; font-variant-numeric: normal; line-height: normal;">
</span><!--[endif]-->the seedlings that grow and spread out into branches
with an intention to protect the welfare of the society</div>
<div class="MsoNormal" style="margin-left: .5in; mso-list: l0 level1 lfo1; text-align: justify; text-indent: -.25in;">
<!--[if !supportLists]-->-<span style="font-size: 7pt; font-stretch: normal; font-variant-numeric: normal; line-height: normal;">
</span><!--[endif]-->the pillars that have to be carefully erected to
support the future society</div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
Children are so
sweet. Their characters are different like different fragrance each flower has,
yet are loved by everyone. We are attracted by their love, their activeness,
their playfulness, their sense of companionship and by their curiosity of
exploring. Children’s world is delightful in nature. Joy, merriment and
laughter are the main qualities they possess. They passionately love others and
expect the same in return.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
The creators of
our future innovations and the leaders of the future society are to emerge from
among these children. In keeping with the maxim that “man is not born but made”
several methods are adopted in the western society to bring up their children without
ruining their feelings.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
But in this
soil…..</div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
Children are the
direct victims of systematic forms of repression unleashed by the Sinhala
chauvinistic government. Ethnic oppressive measures have not only taken the
lives of our children and maimed their limbs but have severely affected their
psychological well being.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
Look at this
Child…</div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
Children’s world
is usually full of joy. They enjoy lighting crackers at festivals. But the
experience of numerous bomb blasts and shelling has severely deprived this boy
from enjoying the sound of crackers even at Christmas. or Pongal</div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
Is there any
mother who doesn’t feed her child without showing the moon? Or is there any
child who doesn’t derive pleasure in seeing this moon? But, because he was one among the crowd who were
scattered squealing with horror, when the army dropped <st1:place w:st="on">Para</st1:place>
lights during the massive displacement, this innocent boy is still unable to
get out of that experience of horror which the moonlight reminds him of and he
is afraid to look up at the moon thereafter.</div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
Whenever this
boy hears the sound of this vehicle that reminds him of the helicopter, he
speeds away and takes refuge in his mother’s lap. There are so many a sign of
distress among the children</div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
(Interview with Doctor)</div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
Displacement…</div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
the super power
missile that severely affects the human minds especially on women and children.
When flocks of birds are brutally uprooted and forced to flee from their nests,
the most affected are the young ones. Displacement has the profound physical,
emotional and developmental impact on children that increases their
vulnerability. Do they know the economic blockade and cutting off of the food
ration? Or does this innocent know his father who lost his hands and the mother
tired of begging for their meals. Their biggest need of course food for their
hunger and a lap for their comfort. This is the stage where they eagerly seek
for love and affection at every moment. This mother is busy otherwise unable to
enjoy the fun and frolics of her child. This baby has lost its mother and needs
to be soothed.</div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
This is the next
stage where the child’s interest to know about the mystery of new world starts.
This also the stage where a child doesn’t want to give up the affection of its
mother and at the same time wants to enjoy the new environment. Sigmund Freud,
the famous psychologist called this the ‘stage of Latency’. This is also the
stage where children’s venture to expose their ability and expect appreciation
for their efforts. If we ignore this need they develop a feeling of inferiority
complex. Signs of mental distress are clearly exposed in this stage.</div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
But what happens
here…?</div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
These are the
ones who bear the burden of ethnic oppression directly on their shoulders.
Ethnic oppression has crippled these growing minds and prevented them from
enjoying their childhood. Even though
they are brought up in a hut they are trained to adjust to their environment
and enjoy their environment. The war has forced them to displace and the mode
of living is changed to bitter heights thereby turning them into misfits.</div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
The Sri Lankan
army, being unable to show their might directly to the LTTE, has chosen to
bombard and massacre the innocent. The Sri Lankan government takes pride in
showing the world how they protect the rights of the children. See how the
government forces are cleverly performing the task planned by the government.</div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
The result is
this….</div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
A group of
children longing to go to school takes up the responsibility of bearing the
family burden instead of their fathers who have been arrested by the army and the mothers who
perished by the shelling.</div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
Another group is
staggering in the street without having any inclination to schooling with no
one to look after them or to guide them or to cherish them.</div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
Yet another
group though afford school exist with empty look and sigh of without the joy of
children world. .</div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
However, ethnic
oppression has failed in on aspects here. Though in the grip of poverty and the
means of life is meager, these are the examples to show that the curiosity of a
child cannot be curbed in anyway and to prove that the learning at this stage
depends more on seeing than hearing. </div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
These are the
games that the Indian army taught the children who had enjoyed playing in any
kind of environment whether in the land or sea, fitting well to them. The irony
here in this army vs. tiger game is that nobody is willing to play at the army
side.</div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
What lessons do
these high tech toys produced by the very same countries who advocate numerous activities
for the development of children and their rights, with the intention of profit earnings?
They may be used to teach or show their nation’s greatness and bravery. But for
us, they are very helpful to teach the children tricks to protect themselves
from the enemy. Resources for making these toys may differ in palaces and huts.
But creativeness of minds is the same everywhere, the hands which were used to
make traps to kill squirrels before the war, are now making hand guns. Children
who once insisted on buying dolls do now concentrate on guns. The magic of
making a missile using an empty orex pen and a rib of a palm leaf can be seen
only in this soil.</div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
The imprints
made in the minds of children are eternal, like writing on stones. Can anybody
advise these children to forgive the culprit who had killed their mothers? Can
we ask them to worship the one who had maimed their fathers or raped their
sisters? Are you going to tell them to calm down and forget these who had
forcefully occupied their land and had massacred their loved ones before their
own eyes?</div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
Carrying the
scars of ethnic oppression, the architects of the future nation are immune to
the present situation and became smart though suppressed again and again.</div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
These pillars
that will bear the future nation are waiting for the opportunity to avenge the enemies
who have deprived them of the joys of life.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
Starting from
the leader of the nation to the ordinary citizen there is more a concerted
effort of these nation’s assets who, shaken by the atrocities committed by the
Sri Lankan government are staggering on street with no one to support them.</div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
See the wonder
of this man who is considered as the demon of death to his enemy, showing
humanness and showering love in abundance to these children.</div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
See the wonder of these hands that are ready
to destroy the enemy in order to redeem the mother land, supporting the world
of children. There are numerous plans here to look after these children with
proper care, to give them love and affection, to educate them and to make their
life happy.</div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
To the eyes of
the traitors, it may seem like a training camp for child soldiers, but for us,
these are the homes of love, of charitable activities performed by the men and
women to this soil to the distresses and orphans.</div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
We will never
permit these children to be ruined without care and protection. There are being
taught humanity and patriotism. Present generation is going to give them not
guns but the independent nation</div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
No one needs to
teach the fact that the aim of this militancy is to defend ourselves from those
who try to destroy our racial and nation’s identity. Each and every one who
takes arms today</div>
<div class="MsoNormal" style="margin-left: .5in; mso-list: l0 level1 lfo1; text-align: justify; text-indent: -.25in;">
<!--[if !supportLists]-->-<span style="font-size: 7pt; font-stretch: normal; font-variant-numeric: normal; line-height: normal;">
</span><!--[endif]-->had unfortunately lost one or more in their family,
their parents & sisters.</div>
<div class="MsoNormal" style="margin-left: .5in; mso-list: l0 level1 lfo1; text-align: justify; text-indent: -.25in;">
<!--[if !supportLists]-->-<span style="font-size: 7pt; font-stretch: normal; font-variant-numeric: normal; line-height: normal;">
</span><!--[endif]-->had gone with an intention of saving their loved ones
from the ordeal they had already experienced</div>
<div class="MsoNormal" style="margin-left: .5in; mso-list: l0 level1 lfo1; text-align: justify; text-indent: -.25in;">
<!--[if !supportLists]-->-<span style="font-size: 7pt; font-stretch: normal; font-variant-numeric: normal; line-height: normal;">
</span><!--[endif]--> had felt that
they should achieve the independent land to make their younger generation to
live with happiness.</div>
<div class="MsoNormal" style="margin-left: .5in; mso-list: l0 level1 lfo1; text-align: justify; text-indent: -.25in;">
<!--[if !supportLists]-->-<span style="font-size: 7pt; font-stretch: normal; font-variant-numeric: normal; line-height: normal;">
</span><!--[endif]-->had taken oath that the recapture of the land is their
duty not their sacrifice.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
Any body can
easily find the answers for the big cry that ‘ the children are forcibly
recruited and induced to become combatants’ in the speech delivered by the UN
special representative for children at the
Hotel Oberoi, Colombo, when he had visited Sri Lanka three years ago.</div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
“ Those who have
experienced violence today will be the conveyor-belt of violence to the next
generation” Olara
Ottunnu</div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
It is difficult
to understand why the International community is so concerned about children
joining in armed struggle, since there are many children’s violations which
have to be addressed to so seriously in the countries whether they are under
armed conflict or not.</div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
It is a well
known fact that <st1:country-region w:st="on">Sri Lanka</st1:country-region>
has a worldwide record for child prostitution and sexual abuse of children.
There is a place in Hikkaduva to train the children to become professional sex
workers and at the end of the training children are issued certificate for
their sexual ability. European & Asian tourists are very much attracted by
these young professionals. <st1:country-region w:st="on">India</st1:country-region>
is well known for child labor and <st1:country-region w:st="on">Japan</st1:country-region> is becoming popular in child
prostitution.</div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
It is the
greatness of our Motherland to preserve herself without being caught up in the
snare of mass media, which has full of news about child abuse, drug abuse, liquor,
stealing, child labor and child prostitution worldwide.</div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
It is the
greatness of our people to give joy and pleasure to the children through some
specific cultural outlets.</div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
All those who
care for the welfare of the children are relieved by the fact this liberation struggle
has prevented the perversions that is gaining momentous all over the world
entering this territory.</div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
If it is true
that man is influenced by the environment, the children are the most affected
ones. There should be effective change in the environment if we feed that the behavior
of a child should change. The notion that the environment in a war situation
will change if only there is no ethnic oppression- is very is very difficult
for the oppressors to digest. There is no doubt that the great gift which Sri
Lankan oppressive government is going to donate to this soil is the legion of
undaunted minds, nurtured by the atrocities of the war, and confirmed in the
pursuit if the goal of freedom.</div>
<br />
<div class="MsoNormal" style="text-align: justify; text-indent: .5in;">
<br /></div>
Srikanthaluxmyhttp://www.blogger.com/profile/02621345440975786756noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-14981721.post-49997355607055908352017-05-10T20:13:00.000-07:002017-05-10T20:13:08.816-07:00விழுதாகி வேருமாகி <div style="text-align: center;">
<b>விழுதாகி வேருமாகி</b></div>
<div style="text-align: center;">
<b>பார்வையும் பதிவும்</b></div>
<div style="text-align: center;">
<br /></div>
<br />
மனித வாழ்வில் தம்மால் செயலுருப்படுத்த முடியாத அல்லது செயலுருப்படுத்த நினைக்காத சிந்தனைகள் வழி பிறக்கும் சொற்கள் சொற்றொடர்களுக்குள்ளேயே சொர்க்கத்தைக் காண்பதில் உவகையும் உளத்திருப்தியும் அடையும் மனிதர்கள் நிரம்பிய சமூகமொன்றில், கிட்டத்தட்ட இரு தசாப்தங்கள் தாம் வரித்துக் கொண்ட இலட்சியம் ஒன்றிற்காக உயிர் கொடுத்து, உடல் உறுப்புகளைக் கொடுத்து, உள்ளத்து விருப்பங்களைக் கொடுத்து, நிறைவேற்றிய மாபெரும் பணியின் ஒரு சிறு பகுதிக்கு சொல் வடிவம் கொடுக்கும் அரிய முயற்சியின் வெளிப்பாடே விழுதாகி வேருமாகி என்ற இந்த போரியல் வரலாற்று ஆவணம்.<br />
<br />
ஷஎமது போராட்டத்தின் வரலாற்றை அதன் ஆழத்திலும் அகலத்திலும் அதன் யதார்த்தக்; கோலத்திலும் தரிசித்துக் கொள்வது கடினம். போர் பற்றிய அறிவு ஞானம் இல்லாத பழமையில் புதைந்து போன வரலாற்றாசிரியர்களால் எமது பெண் போராளிகளின் வரலாற்றை துல்லியமாக கிரகித்தறிவது சிரமம்ஷ எதிரி மட்டும் அறிந்ததை எல்லோரும் அறியட்டும் என்ற தலைப்பில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் மனப்பதிவுகளை சுமந்து நிற்கும் முன்னுரையில் காணப்படும் மேற்கண்ட வாசகம் இந்நூல் தொடர்பான பார்வை ஒன்றை உருவாக்கும் முயற்சியில் சிறு தயக்க நிலையை ஏற்படுத்தியிருப்பினும் கூட எந்த ஒரு பொருளினதும் மெய்ப்பொருளைக் காண்பதற்கு பார்த்து, கேட்டு, படித்து, உணர்ந்து, அனுபவித்து பெற்ற புலன் வழி அறிவை, புலனுக்குப் புறம்பாக உள்ள பகுத்தறிவின் துணை கொண்டு சீர்தூக்கிப் பார்க்கும் உரிமையும் அதற்கான ஆற்றலும் இம் மண்ணில் வாழும், இம் மண்ணை நேசிக்கும் ஒரு பிரகிருதிக்கு இருக்கும், இருக்க முடியும் என்ற உள்ளுணர்வு தந்த தூண்டல் இங்கு உங்கள் முன் நூல் பற்றிய பார்வையாக விரிகிறது.<br />
<br />
எந்தவொரு நூலையும் மதிப்பிடும் பணியில் கவனத்தில் கொள்ளப்படும் அம்சங்கள் மூன்று. நூலின் உருவமைப்பு, உள்;ளடக்கம், அதன் உயிர்<br />
;<br />
பாதை திறப்பினால் வேறு பயன் கிடைத்ததோ இல்லையோ மண்ணின் வளத்தையும் மனதின் உரத்தையும் சிறப்பாகப் படம் பிடிக்கும் அட்டைப்படத்துடன், பார்ப்பவர் கண்களுக்கு படிக்க தூண்டும் ஆர்வத்தை ஏற்படுத்தும் கணினி அச்சமைப்புடன் எமது கரங்களில் ஒரு நூல் தவழ்கிறது. இது தான் உருவமைப்பு சொல்லும் சேதி.<br />
<br />
உள்ளடக்கம் சொல்லும் சேதி சற்று வித்தியாசமானது.<br />
ஷஎதிரி மட்டுமே அறிந்ததை எல்லோரும் அறியட்டும் என்ற தேசிய தலைவரின் மனப்பதிவைச் சுமந்து,<br />
ஷகால விரிப்பில் கட்டவிழுந்து கொண்டிருக்கும் ஓர் படையணியின் இராணுவ சாதனைகள் உயிர்த்துடிப்புடன் பசுமையான நினைவுகளுடன் இங்கு பதிவாக்கப்பட்டுள்ளதுஷ என்ற அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச் செல்வனின் பாராட்டுக்களை உள்வாங்கி,<br />
ஷஇது இரத்தத்துளிகளால் எழுதப்பட்ட உண்மை மனிதர்களது கதை. எங்களுக்குள் இருந்தது ஒரு குடும்ப உறவு. இந்த வாழ்விலும் இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும்--- போர் அரங்குகளில் அணிகளைக் களமிறக்கும் ஒவ்வொரு தடவையும் என் மனம் இறுகும்ஷ என வரலாற்றை ஆக்கியோரின் வரலாற்றை இரைமீட்கும் தளபதி விதூஷாவின் உள்ளத்து உணர்வுகளைத் தாங்கி பெண்கள் அணியின் முதல் வித்தான மாலதிக்கு வீரவணக்கம் செய்து,<br />
ஷபோர் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. அது எங்களுக்குப் புரிகிறது. பொருளாதாரப் போர் கருத்தியல் போர் எல்லாமே பாதை திறப்பின் பின்னர் வலுத்து வருகிறது.. தனியார் நிறுவனங்கள் கொட்டுகின்ற சல்லிக் கற்களுக்குள்ளும் படை படையாக ஊற்றுகின்ற தாரின் கீழும் இவர்களின் வியர்வையும் இரத்தடும் தசைத்துணுக்குகளும் புதைந்து போய்க்கொண்டிருக்கின்றன. மாயப்போர்களாலும் காலவெள்ளத்தாலும் அழியாதவர்களாக தலைமுறை கடந்தும் வாழ்பவர்களாக இவர்களை நிலைநிறுத்தவே இந்நூலை எழுதினோம். என கதை பிறந்த கதையை தமக்கேயுரிய நடையில் பணிவுடன் சமர்ப்பிக்கின்ற புரட்சிகா,காந்தா,மலைமகள் ஆகிய மூன்று போராளிகளதும் உணர்வுகளைத் தாங்கி,<br />
567 பக்கங்களில் 11 அத்தியாயங்களில் படையணி எதிர் கொண்ட வரலாற்றுச் சமர்களின் இராணுவ புவியியல் வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கி சமர் புரிந்த அமைவிடங்களின் நிலவுருவப்படங்களுடனும், படையணியின் வரலாற்றை விளக்கும் மூன்று பக்க கவிதையுடனும் வித்தாகிப்போன 1117 மாவீரர்களின் பட்டியலுடனும் உள்ளடக்கம் கச்சிதமாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது.<br />
உள்ளடக்கம் சொல்லும் இன்னொரு செய்தி நூலின் ஒழுங்கமைப்பு. பாதை திறப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற நிகழ்கால வினாவொன்றுடன் தொடங்கி மீண்டும் நிகழ்காலத்தைத் தொட்டு நிற்கின்ற உள்ளடக்க அமைப்பு. யாழ் மண்ணை விட்டு முழுதாக வெளியேறிய மக்களைப் பிடித்திருந்த அதே இறுக்கம் எழுத்துநடையிலும்---<br />
<br />
இராணுவம் வரப்போவதை அறிந்த தளபதி விதூஷாவின் பரபரப்பு படையினரால் இழப்பு படையினருக்கு இழப்பு ஷகண்ணாடியை சிறு கல்லொன்றால் உடைத்து தன் வீரப்பிள்ளையின் படத்தை உரித்து எடுத்து சேலைக்குள் மறைத்தவாறு தேம்பி அழுது கொண்டே கிளாலிக்கடற்கரையை விட்டு திரும்பும் அந்த மூதாட்டி யினைப்போல் மக்களின் துயரங்கள்ஷ அனைத்தும் அதற்கேயுரிய இறுக்கமான உணர்வுடன்-- இந்த இறுக்கம் முல்லைத்தள மீட்பில் தளர்ந்து, மீPண்டும் ஆனையிறவு தோல்வியில் துவண்டு, வெற்றி நிச்சயம் நடவடிக்கையை தீரமுடன் தாங்கி, மன்னார் போர்முழக்கத்தை பம்பலாய் வரவேற்று, ஆனையிறவில் அட்டகாசமாய் நுழைந்து, சாவகச்சேரியை விட்டு துயருடன் மீண்டும் பின்வாங்கி, இறுதியில் போர்நிறுத்தத்தின் பின்னரும் கிட்டத்தட்ட காவியா மதி போன்ற திறமை மிக்க தளபதிகள் உட்பட 100 போராளிகளை விழுங்கிய தீச்சுவாலை நடவடிக்கையின் வலியைத் தாங்கி-- இவை உணர்வின் வரிகள் அதனால் தான் எழுத்துக்கள் கூட இவர்களைப்போல் இறுக்கங்களையும் வலிகளையும் குதூகலங்களையும் அதற்குரிய ஒழுங்கில் அனுபவிக்கிறதோ--?<br />
<br />
உயிரின்றி உடலால் பயனில்லை. எனவே இவை உயிர் சொல்லும் சேதிகள்;.<br />
எந்தவொரு நூலும் அது கொண்டுள்ள கருத்தின் அடிப்படையில் புத்துயிர் தருவது தகவலைத் தருவது உயிர்ப்பூட்டுவது என மூவகைப்படுகிறது. உண்மையோ பொய்யோ நல்லதோ தீயதோ படிப்பவருக்கு ஒரு புதிய உணர்வை, புதுவித எழுச்சியை, புதுவித கிளர்ச்சியை, பொழுதுபோக்கு உணர்வை தருபவை புத்துயிர் தரும் நூல்கள் எனப்படும் அப்பட்டமான உண்மையிலிருந்து வடித்தெடுக்கப்பட்ட ரோல்ஸ்ரோயின் புத்துயிர்ப்பு, மக்சிம்கோர்க்கியின் தாய், லியோன் யூரிஸின் எக்ஸ்சோடஸ் இவ்வகையைச் சார்ந்தது. வரலாறு, அரசியல், புவியியல் போன்று எடுத்துக் கொண்ட பொருட்துறை தொடர்பாக பொதுவான தகவலை உள்ளடக்குபவை தகவலைத் தரும் நூல்கள் எனப்படும். இவை இரண்டையும் தவிர பொருளாதார தத்துவத்தை புகுத்திய அடம்ஸ்மித்தின் தேசங்களின் செல்வம் போன்று, பொதுவுடமைத் தத்துவத்தை தந்த கார்ல் மாக்ஸின் மூலதனம் போன்று உயிரின உருவாக்கத்தை விளக்கிய டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு போன்று மனிதனின் அறிவைத் தூண்டுகின்ற சிந்திக்க செய்கின்ற மனிதனையும் சமூகத்தையும் முன்னேற்றுகின்ற உயிர்ப்பூட்டும் நூல்கள் எம்மிடம் மிகவும் குறைவே. அதிலும் இந்த மூன்று அம்சங்களும் ஒருங்கு சேர அமைந்திருக்கும் அற்புத வாய்ப்பு ஒரு சில நூல்களுக்கே அமைந்து விடுகின்றது<br />
<br />
விழுதாகி வேருமாகி என்ற இந்த வரலாற்று நூல் தான் சொல்ல நினைத்ததை ஒளிவு மறைவின்றி சொல்லும் பாங்கில் போரியல் வரலாற்றுத் தகவலை தரும் ஒரு நூலாகிறது. எப்படி---?<br />
ஆனையிறவில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று தடவைகள் சமர்க்களத்தின் தோல்விகளை ஒப்புக் கொள்வதில்----<br />
ஷமழை சொரியும் இருளோடும் இருண்ட எம் மனங்களோடும்-- பூநகரி நோக்கி வந்தது எமது படகுகள் மட்டுமே-- எம் மனங்களெல்லாம் அரியாலையில், சாவகச்சேரியில், வண்ணாத்திப் பாலத்தில் இன்னும் இன்னும் எம் உறவுகளின்; உயிர் பிரிந்த களங்களில்--- ஒவ்வொரு சோடி விழிகளாலும் படகுகள் நனைந்தன---ஷ என பலத்த உயிரிழப்புகளுடனான பின்னடைவைச் சந்தித்ததை நினைவு கூர்வதில்---<br />
ஷஎமது படையணி பங்கு கொண்ட அனேக சமர்களில் தட்;சாயினியின் கால்கள் நடந்திருக்கின்றன. களங்களில் அவர் காட்டும் வெஞ்சினம், உடனிருக்கும் போராளிகளில் அவர் வைத்திருக்கும் அன்பு, பராமரிப்பு, வழிகாட்டல், தவறு சிறிதென்றாலும் தயவு தாட்சண்யம் இல்லாமல் அவர் வழங்கும் ஒறுப்பு, அதன் பின்னரான விளக்கம்--- ஈடு செய்யமுடியாத இழப்பு இது. பொறுப்புகளை ஈடு செய்யலாம் மனிதர்களை ஈடு செய்வது இயலாத காரியம்-- என சக போராளி ஒருவரின் திறமையை வெளிப்படையாக அளவிடுவதில்---<br />
ஷஎங்களுடைய எல்லாப் பொறுப்பாளர்களுமே எமது பொறுப்பிலிருந்து ஒருபடி கீழிறக்கப்பட்டோம்ஷ - காற்று இறக்கப்பட்டோமஷ; என புளியங்குளம் வெற்றிச் சமரில் கூட உயிரிழப்புக்களைக் குறைப்பதில் கூடுதல் கவனம் எடுக்காமைக்காக காத்து இறக்கப்பட்டதை பெருந்தன்மையுடன் ஒப்புக் கொள்ளுவதில்------<br />
குறுஞ்சி என்ற மருத்துவப் போராளியின் புதிய கள அனுபவத்துடன் தளபதி விதூஷா மல்லுக்கட்டியதை வெளிப்படுத்துவதில்---<br />
வெடிபொருட்களை இழந்ததை, கஞ்சியே களவாழ்க்கையாக மாறிய பொருளாதாரப் பி;ன்னடைவைச் சொல்வதில்--- <br />
என்று பல இடங்களில் இந்த ஒளிவுமறைவற்ற தன்மை பேணப்படுகிறது.<br />
சொல்லப்படும் தகவல்கள் சமர்க்களங்களை வழிநடத்தியவர்களின் நேர்காணல்கள் மூலம் மேலும் வலுவூட்டப்பட்டிருப்பது நம்பகத்தன்மையை கூட்டுகிறது.<br />
வெறுமனே பொதுத் தகவலைத் தரும் பணியுடன் நின்று விடாமல் களமுனைகள் இராணுவ தள அமைப்புகள் வீதிகள் வெட்டைகள் காடுகளின் தன்மைகள் அமைவிடங்கள் என இம் மண்ணில் நடந்தேறிய வரலாற்றுச் சமர்களின் வழித்தடங்கள் பற்றி அறிய விழைபவருக்கு மிகச் சிறந்த ஒரு குறிப்புதவு நூலாக இது கருதப்படக்கூடியது. அதுமட்டுமன்றி வரலாற்றுச் சமர்களில் பங்கெடுத்தவர்களின் விபரங்களைத் தருவதில் வாழ்க்கை வரலாற்று நூலின் பண்புகளை ஓரளவிற்கு இது கொண்டுள்ளது.<br />
ஷ நெருக்கடியான கட்டம் வந்த பின்னர் மைதிலியைக் களம் இறக்கித் தான் அந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வந்தோம் மைதிலியால் தான் அது முடியும் என சமருக்கு பொறுப்பான தளபதி தீபனால் ஒத்துக்கொள்ளப்படும் அளவிற்கு தனித்துவம் வாய்ந்த, யாழ் பின்னடைவின் போது தாடை உடைந்து குற்றுயிரும் குலையுயிருமாய் தப்பி பரந்தனில் கண்மூடிய அந்த அற்புதமான வேவுப்புலி போராளி லெப்.கேணல் மைதிலி---<br />
எந்த இருளிலும் தடுமாற்றம் இல்லாத நிதானம் மிக்க காவியா--- நிர்வாகத் திறன் மிக்க மதி, அமைதியான, உறுதியான, அப்பழுக்கில்லாத அந்த வீரமகள் நிஸ்மியா-- கிளாலி நடவடிக்கையில் துணிவுடன் போரிட்ட கப்டன் துளசிராம், லெப். அறிவரசி;, வெற்றி நிச்சயம் படைநடவடிக்கையில் ,தனது முதல் கள அனுபவத்திலேயே அகழியில் தேங்கிவிட்ட இரத்தம் தன பாதங்களை நனைத்ததையும் பொருட்படுத்தாமல் மன உறுதியை வெளிப்படுத்திய இந்நூலின் ஆசிரியர்களால் பெயர்குறிப்பிட மறந்துவிட்ட? அந்த புதிய போராளி எத்தனையோ சண்டைகளுக்கு ஈடு கொடுத்து தமிழ் மண்ணை முத்தமிட்ட அந்த வீரமகள் லெப். திருக்கோதை--- இப்படி நூலுக்குள் உச்சரிக்கப்படும் ஒவ்வொரு பெயருமே தளபதி விதூஷாவின் வார்த்தைகளில் சொல்வதானால் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொரு கதாநாயகி. சிலசமயம் ஒரு அத்தியாயத்துக்குள்ளேயே பல கதாநாயகியர்.<br />
<br />
சொல்லப்பட்டவற்றை இலகுவான மொழிநடையில் எவரையும் ஈர்க்கும் வகையில் எழுதப்பட்டிருப்பதில் இது ஒரு புத்துயிர் தரும் நூலாகிறது. எப்படி---?<br />
<br />
ஷசில்வண்டுகளின் பின்னணி இசைக்கேற்ப நடைபெற்றுக்கொண்டிருந்த மின்மினிகளின் குழு நடனம் காவற் கடமையில் நின்றவர்களின் தனிமையைப் போக்கியதுஷ என இயற்கை மீதான நேசிப்பில்--<br />
ஷஅட அநியாயமே! இதுவா காஞ்சோண்டி--? முன்னே போய்க்கொண்டிருக்கும் வழிகாட்டிகள் அவற்றிலே முட்டாமல் மோதாமல் இலாவகமாக வளைந்து நெளிந்து போக நாங்களோ அதைப் புரிந்து கொள்ளாமல் ஒரு காஞ்சோண்டியையும் மிச்சம் விடாமல் உரசி உரசி கைகளால் தொட்டு விலக்கி இயற்கை மீது எமக்கிருக்கும் பேரன்பை வெளிப்படுத்தியவாறு சென்றால் கடிக்காமல் வேறென்ன செய்யும்? ஷ என்றும் ஷஇது என்னடா கரைச்சலாகக் கிடக்கு.ஏற்கனவே இசைக்குழ மாதிரி நகர்ந்;து கொண்டிருக்கிறம். அதுக்குள்ள இதுகள் (மின்மினிகள்) லைற் போட்டுக் காட்டிக் கொண்டிருக்குதுகள்-- என இயற்கையின் இடைஞ்சலையும் சுவைபடக் கூறும் தன்மையில்<br />
ஷநல்ல நிலையிலிருந்த 113 இராணுவ சடலங்களை செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்து விட்டோம்.. ஆனால் மன்னகுளத்தின் நீண்ட அடர்ந்த காட்டு மரங்களிடையே இழக்கப்பட்ட சிறப்பு அணியினரின் மானம் மரியாதை கௌரவத்தை எடுத்து ஒப்படைக்க எந்தச் சங்கமும் முன்வரவில்லைஷஎன இராணுவத்தின் படு தோல்வியை எள்ளல் தொனியில் வெளியிடுவதில்--<br />
ஷமீனைக் கொட்டி நீங்கள் கடற்கரையைக் குப்பையாக்குறீங்கள் எண்டு தான் நாங்கள் வாங்கிச் சமைச்சுச் சாப்பிடுறம் என்று யாருமே சாப்பிடாத நெத்தலியைவிடவும் பெரிய, சூடையைவிடவும் சிறிய அந்த மீனை சாப்பிட வேண்டிய இல்லாமையை வெளியிடாமல் சப்பைக் கட்டு கட்டுவதில்---<br />
இப்படி நூல் முழுவதும் ஆங்காங்கே புத்துயிர் கொடுக்கும் இத்தகைய எழுத்துக்கள் ஷஇந்நுலை உருவாக்கிய கரங்கள் துப்பாக்கிக்கு மட்டுமல்ல எழுதுகோலுக்கும் பழக்கப்பட்டு நாட்கள் பலஷ என்பதை அறுதியிட்டுக கூறுகின்றன. அன்றைய களமுனை ஏடான சுதந்திரக்காற்று தாங்கிவந்த தரமான ஆக்கங்கள் அனேகமானவற்றுக்கு அவர்களே சொந்தக்காரர்களாக இருந்தனர் என்ற தளபதி கருணாவின் கூற்று இங்கு கருத்தில் கொள்ளப்படக்கூடியது. எழுதப்பட்ட மொழிநடையில் கதை சொல்லும் பாங்கில் இது இலக்கிய அந்தஸ்துக்குள் நுழையக்கூடியதோ என்ற பிரமை இருப்பினும் கற்பனையின் சாரம் கடுகளவும் இல்லாத இந்நூல் கதை சொல்லும் பாங்கில் மட்டுமே புத்துயிர் தரும் நூலின் வகைக்குள் அடங்குகிறது.<br />
<br />
சொல்ல நினைக்காத எத்தனையோ செய்திகளை படிப்பவரின் சிந்தனையில் புதிதாக உருவாக்கும் பாங்கில் இது ஒரு உயிர்ப்பூட்டும் நூலாகிறது. எப்படி--?<br />
ஷபெறுமதி மிக்க வீராங்கனைகளின் உயிர்கள,; ஐநூற்று அறுபத்தாறு தூக்கமற்ற இரவுகள் ,மழைக்காலங்களில் நனைந்தவாறும் நீர் நிறைந்த பதங்கு குழிகளோடும் கழிந்த நாட்கள் வெய்யில் காலங்களில் நா வரண்டு மர இலைகளில் வழியும் பனி நீரையும் விடாது பொலித்தீன் பைகளில் சேகரித்துக் குடித்த நாட்கள், இராணுவம் நகரும் திசைகளில் எல்லாம் பதுங்குகுழிகளை அமைத்தவாறே நகர்ந்த நாட்கள், நீண்ட தொலைதூர சுமை தாங்கிய நடைப்பயணங்கள், ஓயாத சண்டைகளால் உண்டான உடல் களைப்பு, எல்லாவற்றையும் கடந்து ஓயாத வழிப்புடன் மாலதி படையணி போரிட்டது. என்ற இந்த செய்தி சொல்லும் சொல்லாத செய்தி என்ன?<br />
<br />
கிடுகுவேலிக் கலாச்சாரத்துக்கு பழக்கப்பட்டுப்போன பெண்கள் சமூகம் ஒன்றில்--- குடும்ப கௌரவம், சாதிக்கெடுபிடி, அந்தஸ்து போன்ற வேலிகளுக்குள் நின்று கொண்டே உணர்வுகளுக்கு தீனி போடும் சமூகம் ஒன்றில்-- சமர்க்களங்களில் நின்றுபிடிக்கும் ஆற்றல் இவர்களுக்கு எப்படி வந்தது? அணிகலன்கள்; பூக்கள் பொட்டுகளிலிருந்தும் சீதனக் கொடுமைகளிலிருந்தும் தப்பிக்கும் பொருட்டு புலிகளாக மாறியவர்கள் என முற்போக்குப்(?) பெண்ணியவாதிகளின் சாட்டையடிகளுக்குள் அகப்பட்ட புலிப் பெண்களுக்கு மரணம் அருகில் இருந்தபோதும் இயற்கை மீதான நேசிப்பு, இல்லாமையைக் கூட சுவைபடக் கூறும் உணர்வு எப்படி வந்திருக்க முடியும்? இயக்கத்துக்கு போனவர்களை சமூகம் தீண்டத்தகாதவர்களாக தள்ளி வைக்கும் என்ற இவர்களின் தீர்க்க தரிசனங்களின் முன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி குழந்தை குட்டிகளுடன் வாழவும் தேவையேற்படும் போது போரில் முகம் காட்டவும் புலிப்பெண்ணால் எப்படி முடிந்தது?. அவர்கள் நினைப்பது போல் இதற்கும் பயிற்சியளித்தார்களோ ஆண் புலிகள்? இது பெண்ணின் மொழி. இக்கட்டான நிலையிலும் இயற்கையை நேசிக்கும் ஆற்றல், இல்லாமையிலும் இதயத்தை விட்டுவிடாத ஆற்றல், தோல்வியையும் பெருமனத்துடன் ஒப்புக்கொள்ளும் ஆற்றல், பெரு வலியையும் தாங்கிக் கொள்ளும் ஆற்றல் புலிப்பெண்ணுக்கு மட்டுமல்ல உலகில் உள்ள எந்தப் பெண்ணுக்கும் இயல்பானதொன்று. எனவே இங்கு இட்டுக் கட்டவேண்டிய அவசியம் யாருக்கும் இருக்காது என்றே தோன்றுகிறது. எத்தனையோ வாதப்பிரதிவாதங்கள், கண்டனங்கள், கேலிகள் மத்தியிலும் தமிழீழப் பெண்ணியத்தின் புதிய செல்நெறியை காட்டும் சிறந்த குறியீடாக இந்நூல் பரிணமிக்கப் போவதை காலம் எடுத்து சொல்லும். அதுமட்டுமன்றி தாயக விடுதலையில் விளக்கு ஏந்திய பெருமாட்டிகளாக மட்டும் தமிழ்ப் பெண் பயனபடுத்தப்படவில்லை. ஆண் பெண் என்ற அடையாளத்துக்கும் அப்பால் சென்று சமர்க்களங்களில் சரித்திரமாகி உறங்குபவர்களையும் சரித்;திரமாக இன்றும் உலா வருபவர்களையும் சுமந்திருக்கும் இந்நூல் தமிழீழப் போராட்ட வரலாற்றில் மறைக்க முடியாத மறக்க முடியாத உண்மைகளை வெளிக்கொணரும் அரிய நூலாக ஷவருங்காலத்துக்கான பாதையைத் தேடுவதில் கடந்த காலம் பற்றிய கண்ணோட்டம் அவசியமானது. துரதிருஷ்டவசமாக கடந்த கால வரலாறு என்பது பெண்களின் வரலாற்றை புறக்கணித்த இருட்டடிப்புச் செய்த ஒருபக்கச் சார்பான வரலாறாக இருக்கும் வரை இது எப்படிச் சாத்தியப்படும்-- பெண்களது பங்கு மறுக்கப்பட்ட வரலாறு கி;பி 3000 வருடங்களுக்கு முன்பே தோன்றிவிட்டது. ஆனால் பெண்களது வரலாறோ 19ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் தான் ஆரம்பித்தது. பெண்கள் இறுதியில் ஆண்களுக்கோ வரலாற்றுக்கோ இரையாகிவிடாது வலிமை வாய்ந்தவர்களாக வெல்லற்கரியவர்களாக மீண்டெழுந்தனர்ஷ என்ற றோசலின் மைல்ஸ் என்ற பெண் எழுத்தாளரின் வார்த்தைகளின் சாட்சியாக என்றும் வலம் வரும்.<br />
முழுமை என்பது எதற்குமே சாத்தியமற்றது என்பதற்கு இந்நூலும் விதிவிலக்காக இருக்க முடியாது.<br />
எத்தனையோ இராணுவ அம்சங்களை, போரியல் வியூகங்களை, தோல்விகளை வெளிப்படையாக எல்லோருக்கும் அறியச் செய்த இந்நூல் தென்மராச்சிக்குள் இராணுவம் திடீரென நுழைந்ததை அதை புரிந்து படைநகர்வை தடுக்க தளபதி ஒருவர் பதைபதைத்ததைஷ மண்வெட்டியால் ஒருமுறை தானும் கொத்த முன்னரே இராணுவத்தை நாம் எதிர்கொண்டோம்ஷ என உயிரிழப்புகள் உடமை இழப்புகள் பற்றி வெளிப்படையாக ஒத்துக்கொள்ளும்; நூல் அந்த மாபெரும் பின்னடைவின் காரணம் ஷகண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் ஏதோ காரணங்களுக்காக அன்று அவ்விடத்துக்கு வந்திருக்கவில்லைஷ என்ற ஒற்றை வாக்கியத்தில் தொங்கிக்கொண்டிருப்பது இதன் கனதியைக் குறைக்கிறது.<br />
எழுதியவர்களும் எழுதப்பட்டவர்களும் ஒரே குடும்பத்தவர்கள் என்பதனால் அன்னியோன்னியம் கூடி போராளியின் பெயருக்கு முன்னால் கொடுக்கப்படும் அந்த பதவிநிலை அடிக்கடி மாயமாய் மறைந்து விடுகிறது போலும். ஆட்டைக்கடித்து மாட்டைக் கடித்து இறுதியில் சிறப்புத் தளபதி கேணல் விதூஷா கூட வெறும் விதூஷாவாய்--- இராணுவக் கட்டமைப்பில் இந்த பதவிநிலைகள் மிக முக்கியமானவை என்பது அடுத்தவர் சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை.<br />
5.0 படையணியை உருவாக்குவதில் வெற்றிபெற்ற ஒரு படையணிக்கு இறுதிக்காலங்களில் எல்லைப்படைகளாய் உதவிய மக்களின் பங்களிப்பை நிர்வகிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லையோ என்ற வினா மனதில் எழுவதைத் தடுக்கமுடியவில்லை.<br />
களமுனைகள் இருந்த இடங்களை சுலபமாக எவரும் அறிவதற்கும் ஒன்றுக்கு மேற்பட்ட சமர்களில் கலந்து கொண்ட போராளிகளின் விபரங்களை அறிவதற்கும் ஏதுவாய் நூலின் இறுதியில் இடப்பெயர்கள் ஆட்களின் பெயர்கள் சமர்களின் பெயர்களும் அவற்றிற்கான பக்க எண்களும் உள்ளங்கிய ஒரு சொல்லடைவு கொடுக்கப்பட்டிருந்தால்--- கனதி இன்னும் கூடியிருக்கும்.<br />
சமர்க்களம் தொடர்பான சர்வதேச ஊடகங்களின் அபிப்பிராயங்களை ஒன்றிரண்டுடன் விட்டுவிடாமல் நூலின் இடையிடையே அவற்றிற்குரிய காலக் குறிப்புகளுடன் இணைத்திருப்பின்; கனதி இன்னும் கூடியிருக்கும்.<br />
<br />Srikanthaluxmyhttp://www.blogger.com/profile/02621345440975786756noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-14981721.post-4241891198689978202017-05-10T20:07:00.000-07:002017-05-10T20:07:58.956-07:00வேர்களைத் தேடி<div style="text-align: center;">
<b>வேர்களைத் தேடி</b></div>
<br />
<br />
புதுவழி காட்ட ஆண்டொன்றிங்கு புதிதாய் பிறந்ததென்று நம்பிக்கை கொள்வோர்.....<br />
பட்டாசு கொளுத்த கிடைத்தது வாய்ப்பென்று குதூகலித்து மகிழ்வோர்...<br />
இயற்கைச் சக்திக்குப் இறைமை கற்பித்துப் புனிதம் காப்போர்...<br />
காணிக்கை கொடுக்க கட்டுப்பாடுகள் எதற்கு ? என்று மூடத்தனம் விலக்கி பகுத்தறிவால் கோடிட்டு முழுமை காப்போர்....<br />
உங்களுக்கு மட்டும் இது உரியதல்ல.. உழைப்பவர் அனைவருக்கும் பொதுவானது இது என்று உரிமை எடுத்து கொண்டாடி மகிழ்வோர்....<br />
என இடப்பெயர்வுகள், இல்லாமைகள், மன வேற்றுமைகள், மன விரக்திகள் அனைத்துக்கும் தாக்குப் பிடித்து குச்சு வீட்டிலிருந்து கோபுர வாசல் வரைக்கும் பொலிவு குலையாமல் கொண்டாடப்படும் பொங்கல் விழா... தொன்று தொட்டு தமிழர் வாழ்வோடு பின்னிக்கிடக்கும் புதுமைமிகு விழா...<br />
தைபிறந்தால் வழி பிறக்கும் என்று நம்பிக்கையூட்டி எங்கள் வாழ்வை இயங்கச் செய்யும் தமிழ் இனத்தின் ஆண்டுத் தொடக்க விழாவும் இது தான்<br />
<br />
உழைப்பின் மேன்மையை, சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்ற உழவுத்தொழிலின் மேன்மையை... உழுவார் உலகத்தார்க்கு ஆணி என்ற உழவரின் மேன்மையை... உயரிய வீரத்தின் அடையாளமாக உலகிற்கு உணர்த்தும் ஒப்பற்ற விழா இது... இயற்கைச் சக்திகளின் வலிமைக்கு ஈடு கொடுக்கும் வலுவின்றி அச்சம் தரும் பிரபஞ்சக்கூறுகளை வழிபட்ட ஆதி மனிதனில் தொடங்கி இயற்கைச் சக்திகளின் இருப்பிடங்களை இயன்றவரையில் கண்டுபிடித்துக் கட்டுப்படுத்த முனையும் இன்றைய அறிவியல் மனிதன் வரை முழுமை கெடாமல் தொடரும் சிறப்பு விழா இது... உயிர்களின் இயக்கத்துக்கு ஆதாரமாய் விளங்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரேயொரு உயிரி இந்தப் பூமியிலே மனிதன் மட்டுமே என்ற பேருண்மையை அனைவருக்கும் உணர்த்தி நிற்கும் பண்பாட்டு விழா இது..., நன்றி மறப்பது நன்றன்று உன்ற உயரிய போதனையை அந்த போதனைக்குரியவர்கள் திராவிடர் என்ற ஒப்பற்ற உண்மையை தொடர்ந்து வரும் தலைமுறைகளுக்கும் உணர்த்திக்கொண்டிருக்கும் விழா இது. கண்முன்னே நடப்பதை அவதானித்து, அதன் வழி ஆராய்ச்சி செய்து, ஒரு முடிவுக்கு வந்து, அந்த முடிவை நிரூபித்துக் காட்டும் அறிவியல் நடவடிக்கைக்கு ஆட்படாமல் இருந்த காலத்திலேயே உயிர்களுக்கு உதவும் இயற்கைச் சக்திகளான நிலம், நீர், காற்று, நெருப்பு, ஒளி போன்றவறற்றில் ஒளியே முதன்மையானது என கண்டபிடித்த மனித மூளையின் அற்றலை ஆண்டாண்டு காலமாய் உணர்த்திக்கொண்டிரக்கும் அறிவியல் வழா இது... அறியாமை நிலையில் அச்சம் காரணமாக ஏற்பட்ட கண்டுபிடிப்புகளில் அறிவியல் வளர்ச்pயால் மூட நம்பிக்கைகளாகப் புறந்தள்ளப்பட்ட எத்தனையோ ஆதிகால அறியாமையின் பாற்பட்ட அச்சத்தின் வழி ஏற்பட்ட கண்டுபிடிப்புகளில் புறந்தள்ளப்படமுடியாமல் இன்றும் நிலைத்திருக்கு உன்னத விழா இது... ( பேட்டி)<br />
இயற்கை வழிபாடுகளுக்கு இறைமை கற்பிக்கும் அளவுக்கு மனித சிந்தனை விரிவடைந்து, பண்பாட்டுப் படையெடுப்புகள் வழி புதுப்புது வழிபாடுகளை உள்வாங்கி, நீண்ட இந்து மத பாரம்பரியங்களுக்குள் நடைபயின்று, கணிசமானளவு அர்த்தங்களையும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அறியாமைகளையும் உள்வாங்கி, மனிதனின் சிந்தனை, அழகுணர்ச்சி, விருப்பங்கள் அனைத்தும் இணைந்து இன்றைய வாழ்நிலையை அப்படியே பிரதிபலிக்கக்கூடியவகையில் விதவிமான கோலங்கள், நிறைகுடம், பானை வகைகள், சர்க்கரைப் பொங்கல், பழவகை, பலகார வகைகள் என்று களை கட்டியிருக்கும் இப் பொங்கல் விழா வடமராட்சி, வலிகாமம் போன்றவற்றின் கில பகுதிகளில் இன்றுங்கூட அதன் ஆரம்ப வடிவம் குலையாமல் புதிய மண்பானை, பானையை ஊறுபடுத்தாத புதிய மண் அடுப்பு, மனிதனைவிட மகிமை வாய்ந்தவன் சுவையை விரும்ப மாட்டான் என்ற உண்மை பொதியும் வகையில் மாட்டுப்பாலும் அரிசியும் கலந்த பால் பொங்கல் என்று பின்பற்றப்படுகின்றது. (பேட்டி)<br />
<br />
பானை உடைதல், பால் பொங்கிச் சரிய முதல் உள்ளுக்குள் சுழித்தல் அபசகுனம் என்ற ஆழமான நம்பிக்கையால், மண் பானையை விட்டு உலோகப் பானைகளுக்கு மாறும் வழமை உண்டெனினும் குச்சு வீடு முதற்கொண்டு கோபுர வீடு வரை மண்பானையே இன்றும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது. அவரவர் பொருளாதார நிலைகளுக்கேற்ப அழகுணர்ச்சி கூடி முதன்மை கொடுக்கப்படவேண்டிய மண்பானையும் அடுப்பும் மூலைக்குப் போய்விடுவதும் உண்டு. பசுப்பால் தவிர்த்து தேங்காய் பாலில் பொங்கும் வழக்கமும் கருப்பஞ்சாறு விலக்கி, முக்கனிகளைப் புறந்தள்ளி, அடுத்தநாட்டு அப்பிள் முதலிடம் பெறுவதும் உண்டு.<br />
<br />
மனிதனின் முதலாவது கண்டுபிடிப்பு என்று பகுத்தறிவுடன் சிந்திப்பவரும் சரி,<br />
மாக்கோலம், மஞ்சள் கோலம், பூக்கோலம் என்று புதுப்புது வடிவம் எடுத்து இன்று ஈழமே கோலமாய் மாறும் இந்தக் கோலத்துக்கும் ஒரு வரலாறு உண்டு( பேட்டி)<br />
<br />
மதங்களைக் கடந்து, மங்கல நிகழ்வுகள் அனைத்திலும் முதன்மை இடம் வகிக்கும் இந்த நிறைகுடத்துக்கும் அர்த்தம் உண்டு.<br />
தைப்பொங்கலுக்கு முதல்நாளே வீடுகள் அனைத்தும் பழையன கழித்து, புதியன புகுத்தி, அசுத்தம் நீக்கும் நிகழ்வு இந்தியாவில் போகிப் பண்டிகை என்ற பெயரில் வீடு வாசல் சுத்தமாக்கும் நிகழ்வு, தைப்பொங்கல் அன்று சூரியனுக்கு விழா எடுக்கும் அதே பவ்வியத்துடனும் புனிதத்துடனும் அடுத்தநாள் உழவுக்கு உதவும் கோமாதாக்களுக்குப் பொங்கும் நிகழ்வு,<br />
<br />Srikanthaluxmyhttp://www.blogger.com/profile/02621345440975786756noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-14981721.post-44761637091557082972016-01-04T22:28:00.000-08:002016-01-04T22:32:55.195-08:00தகவல் வளங்கள்<h3 class="post-title entry-title" itemprop="name" style="background-color: #f6f6f6; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 22px; font-stretch: normal; font-weight: normal; margin: 0.75em 0px 0px; position: relative;">
<a href="http://srikanthaluxmy.blogspot.com/2014/09/blog-post_14.html" style="color: grey; text-decoration: none;">யாழ். பல்கலைக்கழக நூலகத்தின் முதல் நிலைத் தகவல் வளங்கள்: ஒழுங்கமைப்பு, பயன்பாடு பராமரிப்பு</a></h3>
<div class="post-header" style="background-color: #f6f6f6; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 10.8px; line-height: 1.6; margin: 0px 0px 1.5em;">
<div class="post-header-line-1">
</div>
</div>
<br />
<br />
ஆய்வுச் சுருக்கம்<br />
<br />
(அறிவியல் ரீதியில் நோக்கும் போது சமூகத்தின் அதி உயர் கல்வி நிறுவனமாக இருக்கின்ற பல்கலைக்கழகம் ஒன்றின் ஆய்வுத் தேவைக்கு அதிகமாக உதவுபவை முதல் நிலைத் தகவல் வளங்களே. எனினும் பொருளாதார நோக்கில் பார்க்கும் போது வளர்ச்சியடைந்த தேசங்களின் ஆய்வு முயற்சிகள் அதிக பொருட் செலவில் தரம் மிக்க நூல்கள், ஆய்வறிக்கைகள், பருவ இதழ்கள் போன்ற வடிவில்; எமது நூலகத்தை வந்தடைகின்ற அதே சமயம், வெளியீட்டுக்கான வாய்ப்பின்றி அல்லது வெளியீட்டுச் செலவை ஈடு கட்டும் வாய்ப்பின்றி பெறுமதி மிக்க முதல்நிலைத் தகவல் வளங்கள் சர்வ தேச தராதரத்துக்கு ஏற்ப பதிப்பிக்கப்படாமல் யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தில் காணப்படுகின்றன. கையெழுத்துப் பிரதிகளாக, செய்தித் தாள் கட்டுரைகளாக, சிறுநூல்களாக, சிறப்பு மலர்க் கட்டுரைகளாக இலை மறை காயாக இருக்கும் பிரதேச முக்கியத்துவம் வாய்ந்த சிறந்த ஆய்வு முயற்சிகளையும் அதன் முக்கியத்துவத்தையும், அவை பேணிப் பாதுகாக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் ஓரளவேனும் வெளிக்கொணர இக் கட்டுரை முயல்கிறது.)<br />
<br />
<br />
<br />
<br />
அறிமுகம்<br />
<br />
ஷஒரு நாட்டுக்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ வெளியிடப்பட்ட, வெளியிடப்படாத அனைத்து தகவலும் தகவல் வளங்கள்; எனப்படும்ஷ என தகவல் வளங்கள் என்ற பதத்தை வரைவிலக்கணப்படுத்தும் தன்மை காணப்படினும் கூட1 தகவல் சாதனங்களிலிருந்து பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படும் தகவலே பெரும்பாலும் வளம் என்ற பெயரால் குறிக்கப்படுகிறது. இவை பதிவேடுகளில் பதியப்பட்ட நூல்கள், பருவ இதழ்கள் போன்ற அச்சு வடிவ ஊடகங்களாகவோ அல்லது சுவடிகள், ஓவியங்கள் போன்ற அச்சு வடிவற்ற ஊடகங்களாகவோ அதுவுமன்றி தகவலைப் பரப்பும் வல்லமை மிக்க நிறுவனங்களாகவோ, தகவலை மூளையில் பொதிந்து வைத்திருக்கும் ஆற்றல் பெற்ற ஆராய்ச்சியாளர்கள,; அறிவியலாளர்கள் போன்ற மனித வளங்களாகவோ இருக்கலாம். தகவல் வளங்கள் அவற்றின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் முதல் நிலைத் தகவல் வளங்கள், இரண்டாம் நிலைத் தகவல் வளங்கள், மூன்றாம் நிலைத் தகவல் வளங்கள் என மூவகைப்படுத்தப்படுகின்றன 2.<br />
<br />
<br />
<br />
<br />
உண்மையான ஆய்வு அபிவிருத்திகளை, அவற்றின் புதிய பிரயோகங்களின் விளக்கங்களை, அல்லது பழைய கருத்துக்களுக்கான புதிய விளக்கங்களை உடனுக்குடன் தாங்கி வரும் வெளியீடுகள் அனைத்தும் முதல்நிலைத் தகவல் வளங்கள் (Primary information resources) எனப்படுகிறது. ஆய்வாளர் ஒருவரால் உருவாக்கப்படுகின்ற புதிய தகவல்கள் அனைத்தும் இந்த முதல்நிலைத் தகவல் வளங்களின் ஊடாக குறிப்பிட்ட சமூகத்தைச் சென்றடைகிறது. ஒழுங்குபடுத்தப்படாத வளங்களாக இவை இருப்பதனால் இவற்றைப் பயன்படுத்துவது எளிதல்ல. இவற்றின் பூரண பயன்பாட்டிற்குப் பாவனையாளர் இரண்டாம் நிலைத் தகவல் வளங்களிலேயே பெருமளவில் தங்கியிருக்க நேரிடும். மிக முக்கியமான தகவல் மூலாதாரங்களாகக் கருதப்படும் இவ்வளங்கள்<br />
<br />
• புதிய அபிவிருத்திகள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிவிப்பதன் மூலம் அத்துறை தொடர்பாக அதிக அறிவு நிலையில் இருக்க உதவுதல்,<br />
<br />
• ஒரே மாதிரியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதைத் தடுத்தல்,<br />
<br />
• புதிய தகவல்களை உருவாக்குவதற்கு ஏனையோர்களுக்கு உதவுதல் போன்ற வழிகளில் ஆய்வாளர்களுக்குப் உதவுகின்றன.<br />
<br />
ஒரு குறிப்பிட்ட பொருட்துறையின் வளர்ச்சி வீதமானது அத்துறை சார்ந்து வெளிவரும் முதல் நிலைத் தகவல் வளங்களின் தொகையிலேயே பெருமளவு தங்கியுள்ளது. தனிப்பொருள் நூல்கள், அறிக்கைகள், ஆய்வுக்கட்டுரைகள், முதல்நிலைப் பருவ இதழ்கள், சிறு நூல்கள், காப்புரிமை இலக்கியங்கள், நியமங்கள், தடை செய்யப்பட்ட ஆவணங்கள், அரச வெளியீடுகள், கையெழுத்துப் பிரதிகள், சுவடிகள் போன்றவை முதல்நிலை தகவல் வளங்களாகக் கருதப்படுகின்றன.<br />
<br />
<br />
<br />
<br />
1. பல்கலைக்கழக நூலகமும் முதல்நிலைத் தகவல் வளங்களும்.<br />
<br />
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் சிறப்புக் கவனம் செலுத்தப்படும் முதல்நிலைத் தகவல் வளங்களாக நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள், சிறுநூல்கள், அறிக்கைகள், அரச ஆவணங்கள,; கையெழுத்துப் பிரதிகள், மற்றும் செய்தித் தாள்கள், செய்திக் கடிதங்கள், செய்தியறிக்கைகள், பருவ இதழ்கள், ஆண்டு மலர்கள் என்பவற்றை உள்ளடக்கிய தொடர் வெளியீடுகள்; போன்றவற்றைக் கொள்ள முடியும்.<br />
<br />
இவற்றுக்குள் அரிய வளங்களாகவும் பெறுமதி மிக்கதாகவும் கருதப்பட்டு ஆவணக் காப்பகப் பகுதியில் பாதுகாக்கப்படும் முதல்நிலைத் தகவல் வளங்களின் எண்ணிக்கையை அட்டவணை 1 எடுத்துக் காட்டுகிறது. 3 இப்புள்ளிவிபரமானது 2004 யூலை வரை நூலகத்தால் பெற்றுக்கொள்ளப்பட்டதாகும்.<br />
<br />
<br />
<br />
<br />
அட்டவணை 1<br />
<br />
பொருட்துறை ஆய்வுக்கட்டுரை சிறு நூல்கள் மலர்கள் பருவ இதழ்(தொகுதி)<br />
<br />
பொது 08 31 123 72 (299)<br />
<br />
தத்துவம் 09 39 03 07(35)<br />
<br />
சமயம் 24 889 221 21(46)<br />
<br />
சமூக அறிவியல் 121 1178 431 29(205)<br />
<br />
மொழி 32 140 02 01<br />
<br />
அறிவியல் 23 102 06 16(103)<br />
<br />
தொழினுட்பம் 27 172 10 32(111)<br />
<br />
கலை 11 186 16 14(75)<br />
<br />
இலக்கியம் 76 662 89 09(20)<br />
<br />
வரலாறும் புவியியலும் 32 467 23 67(109)<br />
<br />
<br />
<div style="text-align: right;">
மூலம்: புள்ளிவிபரப் பதிவேடு-ஆவணக்காப்பகப்பகுதி</div>
<br />
<br />
<br />
<br />
1.1 ஆய்வுக்கட்டுரைகள் Dissertations<br />
<br />
வழிகாட்டுபவரின் மேற்பார்வையின்கீழ் முதுநிலைப் பட்டத்துக்காக அல்லது கலாநிதிப் பட்டத்துக்காகப் பல்கலைக்கழகத்தை அல்லது கல்வி சார்ந்த நிறுவனமொன்றைச் சேர்ந்த மாணவர் ஒருவரால் மேற்கொள்ளப்படும் ஆய்வின் முடிவில் எழுதப்படும் அறிக்கையே ஆய்வுக் கட்டுரை எனப்படுகிறது. 4 உண்மையான ஆய்விற்கான சான்றுகளை இக்கட்டுரை உள்ளடக்க வேண்டும் என்பதுடன் குறிப்பிட்ட துறை சார்ந்த ஆய்வாளர்களுக்கு வேண்டிய முக்கிய ஆவணங்களாக இவை வடிவமெடுக்கின்றன. ஆய்வுக்கட்டுரையில் உள்ள சில முக்கிய தகவல்கள் பின்னர் முதல்நிலைப்பருவ இதழ்களில் அல்லது நூல்களில் வெளியிடப்படுவதெனினும் குறிப்பிட்ட சில தரவுகளுக்கு மூல ஆய்வுக்கட்டுரையிலேயே தங்கியிருக்க வேண்டும் என்பதனால் இவை முக்கியமான முதல்நிலைத் தகவல் வளங்களாக கருதப்படுகின்றன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற முதுமாணி, முது தத்துவமாணி, கலாநிதிப் பட்டம் போன்றவற்றுக்கான ஆய்வுமுயற்சிகள் அனைத்தும் ஆவணக்காப்பகப் பகுதியில் பாதுகாக்கப்படுகின்றன. இதைவிட தமிழ்மொழி, இலக்கியம் போன்ற துறைகளில் இந்திய பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் சிலவும் இங்கு சேர்க்கப்பட்டிருக்கின்றன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் மதிப்பீட்டுக்கென இந்தியப் பல்கலைக்கழகங்கள் சிலவற்றிலிருந்து ஆய்வுக்கட்டுரைகள் இங்கு அனுப்பி வைக்கப்படுவதே இதற்கான காரணமாகும். இத்துடன் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் இலங்கை சார்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் சிலவற்றின் ஒளிப்படப்பிரதியும் ஜீhழவழஉழிலஸ் இங்கு காணப்படுகிறது.<br />
<br />
பொருட்துறை சார்ந்து இங்கு காணப்படும் ஆய்வுக்கட்டுரைகளின் எண்ணிக்கையை அட்டவணை 1 எடுத்துக்காட்டுகிறது. இங்கு சமூக அறிவியல் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளே(117) கூடுதலாகக் காணப்படுகின்றன. கல்வியியல் சார்ந்து மேற்கொள்ளப்படும் ஆய்வு முயற்சிகள்(69) அதிகமாக இருப்பதே இத்தகைய அதிகரிப்புக்குக் காரணமாகும். அறிவியல், தொழினுட்பம் சார்ந்த துறைகளில் ஆய்வுக்கட்டுரைகள் மிகவும் குறைவாகவே உள்ளன. 1990 களுக்குப் பின்னர் இத்துறைகளில் எவ்வித ஆய்வுக்கட்டுரைகளும் நூலகத்தினால் பெறப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 5<br />
<br />
<br />
<br />
<br />
1.2 சிறு நூல்கள் Pamphlets<br />
<br />
ஆவணக் காப்பகப்பகுதியின் மதிப்புக்குப் பெருமை சேர்க்கும் இன்னோர் முதல்நிலைத் தகவல் வளமாகக் கருதப்படுவது இங்கு ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் சிறு நூல்களாகும். நிரந்தரமாகக் கட்டப்படாத அச்சு வடிவ ஆக்கம் எதுவும் சிறுபிரசுரம் அல்லது சிறு நூல் என்ற பதத்தால் குறிப்பிடப்படுமெனினும் 6 சர்வதேச பட்டியலாளர் மகாநாட்டில் தீர்மானிக்கப்பட்டதன்படி ஆகக் குறைந்தது 5 பக்கங்கள் உடையதாகவும் 48 பக்கங்களுக்கு மேற்படாததாகவும் உள்ள பருவஇதழ் அல்லாத வெளியீடுகள் அனைத்தும் இவ்வகைக்குள் அடங்குகின்றன7. கட்டப்படாதபோதும் சில சிறு நூல்கள் அதிக பக்கங்களைக் கொண்டமைந்ததாகவும் நிரந்தரப் பெறுமதியுடையதாகவும் இருக்கக்கூடும். செய்முறைத் தொழினுட்பம், தொழிற்பயிற்சி, பிரயாணம், ஆராய்ச்சி முடிவுகள், புகழ்பெற்ற சொற்பொழிவுகள், செய்தியறிக்கைகள், கருத்து முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் கட்டுரைகள், நிகழ்கால விவகாரங்கள், அரசியல் விவகாரங்கள் போன்ற முக்கிய அம்சங்களைத் தாங்கிவரும் இவை ஆய்வாளர்களுக்கு மிகப் பெறுமதி வாய்ந்த தகவல் மூலங்களாக இருப்பதுடன், விசேட நூலகங்களில்; இவற்றிற்கே கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மிகக் குறைந்தளவு நூல்களே கிடைக்கக்கூடியதாக உள்ள பொருட்துறை சார்ந்த தகவல்களை வழங்குவதற்கு மிகப் பயனுள்ள தகவல் மூலமாக இவை உள்ளன.<br />
<br />
பருவ இதழில் வெளி வருகின்ற முக்கிய கட்டுரைகளின் பிரதிகள், றோணியோவில் தட்டச்சு செய்யப்பட்ட பல்கலைக்கழக நினைவுப்பேருரைகள், செய்தித்தாள் துணுக்குகள், முக்கியமான கட்டுரைகளைக் கொண்ட பருவஇதழின் ஒற்றை இதழ்கள் போன்றவை இந் நூலகத்தில் கணிசமானளவுக்கு சேகரிக்கப்பட்டு நிலைக்குத்துக் கோப்புகளில் வகுப்பெண் ஒழுங்கில் பராமரிக்கப்படுகின்றன. இங்குள்ள சிறுநூல்களின் அண்ணளவான எண்ணிக்கையை அட்டவணை 1 தெளிவாகக் காட்டுகிறது. சமூக அறிவியல், இலக்கியம், சமயம் போன்ற துறைகளில் அதிகளவு சிறு நூல்கள் உள்ளன. அரசியல்(336), பொருளியல்(246), கல்வி(310) போன்ற துறைகளில் அதிகளவு சிறுநூல்கள் காணப்படுகின்றன.8<br />
<br />
நூலகவியல் விதிமுறையின் படி சிறு நூல்களில் பெரும்பாலானவற்றை குறுங்கால எழுத்து மூலங்களாகக் கருதி காலத்துக்குக் காலம் அவற்றை நூல் இருப்பிலிருந்து நீக்கும் தன்மை பல நாடுகளில் வழக்கிலிருப்பினும் எமது சமூகத்தைப் பொறுத்தவரை இத்தகைய நடைமுறை பொருத்தமற்றதொன்றாகும். இங்கு அச்சிடுதற் தொழினுட்பமானது பொருளாதார ரீதியாக ஆக்ககர்த்தாக்களின் அறிவுருவாக்கத்திற்கு உதவும் நிலைக்கு இன்னும் வரவில்லை. இத்தகைய தன்மையானது பெறுமதி மிக்க ஆய்வு முயற்சிகளை சிறு நூல்களின் வடிவிலோ அல்லது கையெழுத்துப் பிரதிகளின் வடிவிலோ அதுவுமன்றி நிறுவன ரீதியாக இடையிடையே வெளியாகும் சிறப்பு மலர்களிலோ வெளியிடுவதற்கு நிர்ப்பந்திப்பதன் காரணமாக ஏனைய பிரதேசங்களைப் போன்று இங்கு இத்தகைய சிறுநூல்கள் குறுங்காலப் பெறுமதியுடையவையாகக் கருதப்படக்கூடிய வாய்ப்பு இல்லை என்பதுடன் இவை மிகக் கவனமாக பேணப்படவேண்டியதும் அவசியமாகும். வேறு எங்குமே கிடைத்தற்கரிய சிறுநூல்களின் மூலப் பிரதிகளும் இங்கு உண்டு. ஒளிப்படப்பிரதி எடுத்து வாசக பயன்பாட்டுக்கு விடப்பட முடியாதளவுக்கு மிகப் பாதிப்புற்று, நொருங்கும் நிலையிலுள்ள சில மூல நூல்களை அவற்றின் மூல வடிவத்தில் பேணக்கூடிய வகையில் வளர்ச்சியடைந்த தொழினுட்பமுறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு முறைகளை இங்கு கையாளவேண்டிய அவசியம் உண்டு.<br />
<br />
<br />
<br />
<br />
1.3 சிறப்பு மலர்கள்<br />
<br />
ஆராய்ச்சி நோக்கில் பார்க்கும்போது ஆய்வுக்கட்டுரைகளுக்கு அடுத்ததாக வாசகரின் பயன்பாட்டுக்கு உதவும் இன்னோர் முக்கிய வளமாக சிறப்பு மலர்கள் காணப்படுகின்றன. தனிப்பட்ட மனிதர்கள் அல்லது நிறுவனங்கள் சார்ந்து கொண்டாடப்படும் ஆண்டு விழா, பொன் விழா, வெள்ளி விழா போன்ற சிறப்பு மலர்களாகவோ அல்லது நினைவு மலர்களாகவோ இவை இருக்கலாம். இவற்றிலிருந்து வேறுபட்டதாகக் குறிப்பிட்ட துறை சார்ந்த நிறுவனங்களால் வருடாவருடம் வெளியிடப்படும் ஆண்டு மலர்கள், பருவ இதழ்களாகக் கருதப்பட்டு பருவ இதழ்களுடன் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அட்டவணை 1 இன்படி சமூக அறிவியல் சார்ந்த மலர்களே இங்கு அதிகம் காணப்படுகின்றன. சமூக அறிவியல் துறையில் உள்ள கிட்டத்தட்ட 431 மலர்களில் 390 மலர்கள்; கல்வி நிறுவனம் சார்ந்து வெளியிடப்பட்டவையாகும். சமயத்துறையில் காணப்படும் கிட்டத்தட்ட 222 மலர்களில் பெரும்பாலானவை இந்து சமய ஆலயங்கள் சார்ந்து வெளியிடப்படும் மலர்களாகும். பொது ஆண்டு மலர்களில் கணிசமானவை சனசமூக நிலையங்கள், இதழியல் துறை சார்ந்தவை. இலக்கிய ஆண்டு மலர்களும் கணிசமானளவுக்குக் காணப்படுகின்றன.<br />
<br />
<br />
<br />
<br />
1.4 பருவ இதழ்கள் Periodicals<br />
<br />
குறிப்பிட்ட தலைப்பினை உடையதாகவும் ஒழுங்கான கால இடைவெளியில் வெளியீடு செய்யப்படுவதாகவும் இறுதி இதழ் எப்போது வெளிவரும் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்க முடியாததுமான வெளியீடே பருவ இதழ் எனப்படுகிறது.9 செய்தியறிக்கைகள், சஞ்சிகைகள், செய்திக்கடிதங்கள், சங்க நடவடிக்கைக் குறிப்பேடுகள் போன்ற பெயர்களில் வெளியாகும் வெளியீடுகள் அனைத்தும் பருவ இதழ்கள் என்ற பொதுப் பெயருக்குள் அடங்குகின்றன. பெரும்பாலான ஆரம்ப இலக்கியங்கள் யாவும் பருவ இதழ் வடிவிலேயே வெளியாகின்றன. அறிவியல் ரீதியான தகவல்களைப் பரிமாற்றம் செய்வதற்கான பிரதான தொடர்பு சாதனமாக கருதப்படும் இவை உண்மையான ஆய்வுகளை உடனுக்குடன் அறிக்கைப்படுத்துகின்றன. பருவ இதழ்களை அவற்றின் கால அடிப்படையில் நாளிதழ்கள்;, வார இதழ்கள், இருவார இதழ்கள், மாத இதழ்கள், இரு மாத இதழ்கள், காலாண்டு இதழ்கள், அரையாண்டு இதழ்கள்;, ஆண்டு இதழ்கள் என வகைப்படுத்தலாம்.<br />
<br />
பருவ இதழ்களை அவற்றின் உள்ளடக்கத்தைக் கொண்டு பொதுப்பருவ இதழ்கள், பொருட் பருவ இதழ்கள் என இருவகையாகப் பிரிக்கலாம். குறிப்பிட்ட ஒரு பொருட்துறை சார்ந்ததாக இல்லாமல் அரசியல், ஆக்க இலக்கியங்கள், விளையாட்டு, சினிமாச் செய்திகள், விளம்பரங்கள் போன்றவற்றை உள்ளடக்கி வெளிவருபவை பொதுப்பருவ இதழ்களாகும். எ-டு இந்தியா ருடே, தாயகம், மல்லிகை போன்றவை. காத்திரமான ஆக்கங்களைக் கொண்டிராது செய்தித் துணுக்குகள் பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவற்றைத் தாங்கி வரும் பொதுப் பருவ இதழ்கள், சஞ்சிகைகள் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. பொருட்துறை சார்ந்து வெளியிடப்படும் பருவ இதழ்கள் பொருட் பருவ இதழ்கள் என அழைக்கப்படுகின்றன.<br />
<br />
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தினால் தற்போது பெற்றுக் கொள்ளப்படும் பருவ இதழ்களின் மொத்த எண்ணிக்கையை அட்டவணை 2 தருகிறது.10<br />
<br />
<br />
<br />
<br />
அட்டவணை 2<br />
<br />
<br />
ஈட்டல் முறை வெளியூர் உள்ளுர் மொத்தம்<br />
தமிழ் ஆங்கிலம் தமிழ் ஆங்கிலம் <br />
<br />
<br />
<br />
கொள்வனவு 22 18 28 44 112<br />
<br />
அன்பளிப்பு 10 217 23 48 298<br />
<br />
பரிமாற்றம் - 05 - 06 11<br />
<br />
மொத்தம் 32 240 51 98 421<br />
<br />
(மூலம்: புள்ளிவிபரப் பதிவேடு, பருவ இதழ்ப்பகுதி)<br />
<br />
<br />
<br />
<br />
கொள்வனவு, அன்பளிப்பு, பரிமாற்றம் என்ற மூன்று வழிகளில் 421 பருவ இதழ்கள் பெற்றுக் கொள்ளப்படுகின்றன. இதில் 149 பருவ இதழ்கள் உள்ளுரிலிருந்தும் 272 பருவ இதழ்கள் வெளியூரிலிருந்தும் பெற்றுக்கொள்ளப்படுகின்றன. அன்பளிப்பு மூலமான பருவ இதழ்களே கூடுதலாக இருப்பதைப் புள்ளிவிபரம் எடுத்துக் காட்டுகிறது. சுவெற்ஸ் ஜளுறுநுவுளுஸ தகவல் நிறுவனமானது கடந்த ஆண்டுகளில் நிதிப் பற்றாக்குறை காரணமாக இடைநிறுத்தப்பட்ட பருவ இதழ்களில் கணிசமானளவு தொகையினை அன்பளிப்பாக வழங்க முன் வந்தமையே அன்பளிப்பில் ஏற்பட்ட அதிகரிப்புக்குக் காரணமாகும். பொதுவாகக் கடந்த காலங்களில் 200க்கும் மேற்பட்ட பருவ இதழ்கள் கொள்வனவு மூலமாக பெற்றுக் கொள்ளப்பட்டபோதும் 2001ம் ஆண்டிலிருந்து நிதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக கொள்வனவு மூலமான பருவ இதழ்களின் எண்ணிக்கை சரிபாதியாகக் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பருவ இதழ்களின் பொருட்துறை சார்ந்த வகைப்பாட்டை அட்டவணை 3 எடுத்துக் காட்டுகிறது.<br />
<br />
அட்டவணை 3<br />
<br />
பொருட்துறை எண்ணிக்கை<br />
<br />
பொது 67<br />
<br />
தத்துவம் 08<br />
<br />
சமயம் 24<br />
<br />
சமூக அறிவியல் 111<br />
<br />
மொழி 22<br />
<br />
அறிவியல் 60<br />
<br />
தொழினுட்பம் 63<br />
<br />
கலை 18<br />
<br />
இலக்கியம் 06<br />
<br />
புவியியலும் வரலாறும் 42<br />
<br />
<div style="text-align: right;">
(புள்ளிவிபரப் பதிவேடு - 2004, பருவ இதழ்ப்பகுதி)</div>
<br />
<br />
<br />
<br />
1.5 அறிக்கைகள் Reports<br />
<br />
குறிப்பிட்ட செயற்திட்டம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பான தகவல்களை ஆய்வுப்பணியாளர்கள் தமது துறைசார்ந்த ஆர்வலர்களுக்குப் பயன்படத்தக்கவகையில் தொகுத்துத் தயாரிக்கப்படும் வெளியீடே அறிக்கைகள் எனப்படுகிறது11. நடைமுறையில் இருக்கும் ஆய்வு அபிவிருத்தித் திட்டங்களின் முடிவுகளை வெளியிடுவதே அறிக்கைகளாகும். ஒரு நாட்டில் அரசாங்கத்தின் அதிகாரத்துடன் வெளியிடப்படும் நம்பகரமான, அதிகாரபூர்வ வெளியீடுகளாக இவை இருப்பதுடன் உள்ளுர், பிரதேச, தேசிய, சர்வதேசிய ரீதியாக குறைந்த விலையில் இவை வெளியீடு செய்யப்படுகின்றன. பெரும்பாலான அறிக்கைகள் வெளியீடு செய்யப்படுவதோ அல்லது பருவ இதழ்க் கட்டுரைகளின் தரத்திற்கு பதிப்பிக்கப்படுவதோ இல்லை. அறிக்கைகளில் தொகுக்கப்படும் பெறுமதி வாய்ந்த தகவல்கள் பின்னர் பருவ இதழ்க் கட்டுரைகளில் சேர்த்துக்கொள்ளப்படுவதன் காரணமாக அறிக்கைகளின் காலம் ஒருசில வருடங்களுக்கே மட்டுப்படுத்தப்பட்டிருப்பினும் அந்த ஒருசில வருடங்களுக்கும் மிகப் பெறுமதி மிக்க தகவல் வளமாக இவை கருதப்படுகின்றன. ஏனெனில் பருவ இதழ்க் கட்டுரைகள் பூரணப்படுத்தப்பட்ட பணிகளையும் வெற்றிகரமாக முடிக்கப்பட்ட பணிகளையும் மட்டுமே சேர்த்துக் கொள்ளும் அதேசமயம் அறிக்கைகளோ ஆய்வுகளின் ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டங்களையும் பிரதிபலிப்பதுடன் நின்றுவிடாது இடைநிறுத்தப்பட்ட ஆய்வுப்பணிகளையும் தோல்வியில் முடிவடைந்த ஆய்வுப்பணிகளையும் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கான முக்கிய தகவல் மூலமாகக் கருதப்படுகினறன.; இவற்றை பின்வரும் மூன்று பரந்த பிரிவுகளுக்குள் வகைப்படுத்த முடியும். 12<br />
<br />
• அரச உதவியுடன் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுக்கான அறிக்கைகள் (இராணுவ விஞ்ஞானத்துறை சார்ந்த அறிக்கைகள்)<br />
<br />
• தொழிற்துறை உதவியுடன் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுக்கான அறிக்கைகள். இவை வர்த்தக பாதுகாப்புக்கு உட்பட்டவையாகவும் நிறுவனத்துக்கு வெளியே கிடைக்க முடியாதவையாகவும் உள்ளன.<br />
<br />
• கல்விசார் ஆய்வுகளுக்கான அறிக்கைகள். இவை எந்தவொரு பாதுகாப்பு அம்சங்களுக்கும் உட்பட்டவையல்ல.<br />
<br />
<br />
<br />
<br />
அரச ஆவணப்பகுதியின் கணிசமானளவு பகுதி அறிக்கைகளுக்கென்றே ஒதுக்கப்பட்டிருக்கிறது. தொகை மதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தின் புள்ளி விபரப் பதிவேடுகள், மத்திய வங்கி போன்ற வங்கி சார்ந்த அறிக்கைகள், மற்றும் திணைக்கள அறிக்கைகளை இப்பகுதி கணிசமானளவு கொண்டிருக்கிறது.<br />
<br />
1.6 வெளியிடப்படாத ஆவணங்கள் Unpublished resources<br />
<br />
கையெழுத்துப் பிரதிகள், ஆய்வுகூடக் குறிப்பேடுகள், நாட்குறிப்பேடுகள், தனிப்பட்டவர்களுக்கு எழுதப்படும் முக்கிய கடிதங்கள், நிறுவனங்கள்pன் கோப்புகள், உள்ளக ஆய்வு அறிக்கைகள், உருவப்படங்கள், வாய்மொழி வரலாறுகள், நாணயங்கள் போன்ற வெளியிடப்படாத தகவல் வளங்களும் முதல்நிலைத் தகவல் வளங்களாகக் கருதப்படுகின்றன. குல சபா நாதன், க.சி.குலரட்ணம் போன்ற அறிஞர்களின் பெறுமதி மிக்க கையெழுத்துப்பிரதிகள் முதல் நிலைத் தகவல் வளங்களின் காத்திரத் தன்மைக்கு மேலும் மெருகூட்டுகின்றன.<br />
<br />
1.7 அரசாங்க வெளியீடுகள்; Government documents<br />
<br />
அரசாங்கத்தினால் வெளியிடப்படுகின்ற உத்தியோக பூர்வமான வெளியீடுகள் அரசாங்க வெளியீடுகள் எனப்படும். சட்டங்கள் விசேட ஆணைக்குழு அறிக்கைகள் போன்றவற்றை வெளியிடுகின்றன. மசோதாக்கள், சட்டங்கள், பாராளுமன்ற விவாதங்கள், பருவகால ஆணைப்பத்திரங்கள்,நீலப்புத்தகம் போன்ற ஆவணங்கள் அரச ஆவணப்பகுதியில் ஒழுங்குபடுத்தப்பட்டுன.<br />
<br />
1.8நூலுருவற்ற சாதனங்கள்<br />
<br />
சுவடிகள், ஓவியங்கள்,படங்கள், வரைபுகள், நுண்படங்கள், கணினி சாதனங்கள், பத்திரிகைத் துணுக்குகள் கையெழுத்துப் பிரதிகள் போன்றவையும் முதல்நிலைத் தகவல்களைத் தருபவை. யாழ்.பல்கலைக்கழக நூலகத்தில் இவற்றின் சேகரிப்பு மிகவும் குறைவு என்றே சொல்ல முடியும்.<br />
<br />
2.ஒழுங்கமைப்பு<br />
2.1 ஆவணக் காப்பகப்பகுதி<br />
<br />
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தின் வாசகரது ஆய்வுத் தேவையைப் பூர்த்தி செய்கின்ற பிரதான பிரிவாகக் கருதப்படுவது அதன் ஆவணக்காப்பகப்பிரிவும் அரச வெளியீடுகளுக்கான பிரிவும் ஆகும். ஷஉள்ளடக்கத்தின் பெறுமதியைக் கருத்தில் கொண்டும், சான்றாக காட்டும் பொருட்டு உருவமைப்பில் பாதிப்பு ஏற்படுவதை கூடுதலான வரை தவிர்ப்பதை கருத்தில் கொண்டும்; ஒரு ஆவணத்தை அதன் மூல வடிவில் நிரந்தரமாகப் பேணுவதற்கென விசேடமாக வடிவமைக்கப்படும் அமைப்பு அல்லது அமைப்பின் ஒரு பகுதியே ஆவணக்காப்பகமாகும்ஷ என்ற வரைவிலக்கணத்திலிருந்து அப்பாற்பட்டதாக, கிடைத்தற்கரிய நூல்களின் இருப்பிடமாக, இலங்கை சார்ந்து வெளியிடப்படும் ஆக்கங்களின் சேமிப்பிடமாக, இப்பிரிவு தொழிற்படுகிறது. முதல்நிலைத் தகவல் வளங்களின் கணிசமான பகுதியை உள்ளடக்கியிருக்கும் இப்பகுதியை ஆவணக்காப்பகம் என அழைப்பதைவிட ஆராய்ச்சிப்பகுதி என அழைப்பது கூடுதல் பொருத்தமானது. நூல்கள், ஆய்வுக்கட்டுரைகள், சிறப்பு மலர்கள், சிறு நூல்கள், பருவ இதழ்கள், வரலாற்று முக்கியத்துவம் மிக்க நூல்கள், கையெழுத்துப் பிரதிகள் போன்ற பெறுமதிமிக்க வளங்களை இப்பகுதி தன்னகத்தே கொண்டிருக்கிறது. பொதுவாக இலங்கை தொடர்பாக இலங்கையர்களாலும் வெளிநாட்டு அறிஞர்களாலும் எழுதப்பட்ட நூல்களே இப்பகுதியில் பராமரிக்கப்படுகின்றது..<br />
<br />
ஆய்வுக்கட்டுரைகள் அனைத்தும் ஆவணக்காப்பகப் பிரிவில் மரத்தாலான கண்ணாடி அலுமாரிகளில் பொருட்துறை சார்ந்து ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. சிறு நூல்களில் ஓரளவு பகுப்பாக்கம்இ பட்டியலாக்கம் செய்யப்பட்டு பரந்த பொருட் தலைப்புகளி;ன் கீழ் சிறுபிரசுரப் பேழைகளில் ஒழுங்குபடுத்தப்பட்டு மரத்தாலான கண்ணாடி அலுமாரிகளில் வைக்கப்பட்டிருக்கின்றன. கணிசமானளவு சிறுநூல்களுக்கு பட்டியல் பதிவுகள் மேற்கொள்ளப்படவேண்டியுள்ளது. பொருட்துறைகளுக்கிடையிலான தொடர்புத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு அத்தகைய ஆக்கங்களை ஒன்றாகச் சேர்த்துக் கட்டி அதற்கு நூல் வரவுப்பதிவெண் கொடுத்து நூல் இருப்புப் பகுதியில் சேர்க்கும் முயற்சி கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டதெனினும் வாசகரின் பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டு நோக்கின் இவை சிரமம் தரும் ஒன்றாகவே இனங்காணப்பட்டிருக்கிறது. சிலசமயங்களில் பொருட்துறைகளுக்கிடையிலான தொடர்புத் தன்மை, நூலின் அளவு போன்றவற்றைக் கருத்தில் கொள்ளாமலும்; பல சிறு நூல்கள் ஒன்றாகச் சேர்த்து கட்டப்பட்டிருக்கும் தன்மையும் இனங்காணப்பட்டிருக்கிறது. ஒரு தாளில் இருக்கும் தகவல் கூட ஆராய்ச்சி நோக்கில் மிகப் பெறுமதி வாய்ந்ததாக இருப்பதனால் இவை தனித்தனியாக அதற்குரிய பொருட்துறை சார்ந்த நிலைக்குத்துக் கோப்புகளில் பேணப்படவேண்டியது அவசியமாகும். இடப் பெயர்வுக்கு முன்னர் ஒழுங்காக கோவைப்படுத்தப்பட்டு பட்டியலிடப்பட்டு பருவ இதழ்ப்பகுதியின் பராமரிப்பில் இருந்த பெறுமதி மிக்க கையெழுத்துப் பிரதிகளின் ஒரு தொகுதியை ஆவணக் காப்பகப் பகுதியில் ஒழுங்கமைக்கும் முயற்சி அண்மையில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.<br />
<br />
<br />
<br />
<br />
2.2 அரச ஆவணப் பகுதி<br />
<br />
பாராளுமன்ற விவாதங்கள், மசோதாக்கள், சட்டங்கள், பருவகால ஆணைப்பத்திரங்கள், பாராளுமன்றத் தொடர்கள், நீலப்புத்தகம் போன்றவை அரச ஆவணப் பகுதியில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன. ஆவணக்காப்பகப்பகுதியுடன் இணைந்ததாக இயங்கும் அரச ஆவணப்பகுதியின் 50 வீதத்துக்கும் மேற்பட்ட இடத்தை நிரப்பும் அறிக்கைகள் வாசகரின் பயன்பாடு கூடிய வளமாகவும் கருதப்படுகின்றன. பொதுவாக இலங்கை சார்ந்து வெளியிடப்படும் அறிக்கைகளே இங்கு வைக்கப்பட்டுள்ளது. றழசடன னநஎநடழிஅநவெ சநிழசவஇ hரஅயn னநஎநடழிஅநவெ சநிழசவ போன்ற வெளிநாட்டு அறிக்கைகள் இருப்புப் பகுதி, உசாத்துணைப் பகுதி போன்றவற்றில் பராமரிக்கப்படுகின்றன.<br />
<br />
2.3 பருவ இதழ்ப்பகுதி<br />
<br />
பருவ இதழ்கள் அனைத்தும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தின் தளப்பகுதில் அமைந்திருக்கும்; பருவ இதழ்ப் பகுதியில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன. நடப்புப் பருவ இதழ்கள் வாசகர் சேவைப் பகுதியுடன் இணைந்ததாகவும், பழைய இதழ்கள் அதற்கென தனியாக இயங்கும் பருவ இதழ் இருப்புப் பகுதியிலும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. கட்டப்பட்ட பருவ இதழ்கள் அனைத்தும் நூலாக கருதப்பட்டு வரவுப் பதிவெண் கொடுக்கப்பட்டு நூல் இருப்புப் பகுதியில் தனியாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. செய்திக் கடிதங்கள் அதற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சிறுபிரசுரப்பேழைகளில் வைக்கப்பட்டு பருவஇதழ்ப்பகுதியில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன.<br />
<br />
செய்தித் தாள்களும் பருவ இதழ்ப்பகுதியின் பராமரிப்பிலேயே இருக்கின்றன. இவற்றில் இலங்கை சார்ந்து வெளியிடப்பட்ட பருவ இதழ்கள், ஷகசடதபறஷ போன்ற மிகப் பழமை வாய்ந்த தமிழ்ப்பருவ இதழ்கள் பாதுகாக்கப்படவேண்டிய அரிய வளங்களாகக் கருதப்பட்டு ஆவணக்காப்பகப்பகுதியில் வைக்;கப்பட்டிருக்கின்றன. ஆவணக்காப்பகப் பகுதியில் பேணப்படும் முக்கிய பருவ இதழ் தலைப்புகளின் எண்ணிக்கையையும் அவற்றின் மொத்தத் தொகுதிகளின் எண்ணிக்கையையும் அட்டவணை 1 தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. இது தவிர பருவ இதழின் முதலாவது பிரதி கிடைக்கும் சமயங்களில் இவை அரிய நூலுக்கான பெறுமதி கொடுக்கப்பட்டு ஆவணக்காப்பகப் பிரிவில் பாதுகாக்கப்படுகின்றன.<br />
<br />
2.4 நூலுருவற்ற சாதனங்களுக்கான பகுதி<br />
<br />
நூலுருவற்ற சாதனங்கள் தனிப்பிரிவில் வைத்துப் பாதுகாக்கப்படவேண்டும் என்ற தீர்மானம் அண்மையில் மேற்கொள்ளப்பட்டு தனி அறையொன்றில் இதற்கான ஆரம்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. ஆவணக்காப்பகப்பிரிவில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சுவடிப்பேழைகள், திரு. கனகசபை அவர்களினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட இருபதுக்கும் மேற்பட்ட ஓவியங்கள், பருவ இதழ்ப்பகுதியினால் வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் பருவ இதழ்களுடன் இணைத்து அனுப்பப்படும் நுண் தாள்கள், இந்து சாதனம் போன்ற செய்தித்தாள்களைப் பேணும்பொருட்டு 1980களின் பிற்பகுதியில் நூலக நிர்வாகத்தின் கீழ் உருவாக்கப்பட்ட நுண்படங்கள் போன்றவற்றை அடித்தளமாகக் கொண்டு நூலுருவற்ற சாதனங்களுக்கான தனிப்பிரிவு ஒன்று உருவாக்கம் பெற்றுள்ளது. தற்போது பட்டியலாக்கப்பகுதியில் வைத்துப் பராமரிக்கப்படும் நவீன இலத்திரனியல் சாதனங்களான சீடிரோம், நெகிழ் வட்டுகள், வீடியோப் படப்பிரதிகள் போன்றவையும் காலப்போக்கில் இதனுடன் இணைக்கப்படக்கூடிய வாய்ப்புண்டு;.<br />
<br />
3.பயன்பாடு<br />
<br />
முதல் நிலைத் தகவல் வளங்கள் எனப்படுபவை பெரும்பாலும் ஆராய்ச்சிக்கு உதவுபவை. எனவே ஆராய்ச்சியாளர்களே இவற்றின் வாசகர்களாவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பு இறுதி வருட மாணவர்களதும் பட்டப்பின்படிப்பு மாணவர்களதும் தேவைகளை கணிசமானளவுக்கு பூர்த்தி செய்பவையாக இந்த முதல் நிலைத் தகவல் வளங்கள் காணப்படுகின்றன. 2003 ஆகஸ்ட் தொடக்கம் 2004 யூலை வரையான காலப்பகுதியில் அரச ஆவணங்கள் தவிர்ந்த ஆவணக்காப்பகப்பகுதியின் முதல்நிலைத் தகவல் வளங்களைப் பயன்;படுத்திய வாசகர்களது எண்ணிக்கை 2311 ஆகும். 13 நூல்களும்(1158) ஆய்வுக் கட்டுரைகளுமே (1092) இங்கு அதிகளவு பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. சிறப்பு மலர்களுக்குரிய வாசகர்களாக 36 பேர் இனங்காணப்பட்டிருக்கின்றனர்.<br />
<br />
சமயம், சமூக அறிவியல் ஆகிய பொருட் துறைகளைச் சார்ந்த மாணவர்கள் இவற்றை அதிகமாகப் பயன்படுத்தும் தன்மை இனங்காணப்பட்டுள்ளது. கடந்த யூலை மாதத்தில் பொருட்துறை சார்ந்த மாணவர்களின் பயன்பாட்டை அட்டவணை 4 எடுத்துக் காட்டுகிறது. 14<br />
<br />
அட்டவணை 4<br />
<br />
வாசகர் பயன்பாடு பொருட்துறை வாசகர் எண்ணிக்கை<br />
<br />
பொது 12<br />
<br />
தத்துவம் 59<br />
<br />
சமயம் 61<br />
<br />
சமூக அறிவியல் 137<br />
<br />
மொழி 10<br />
<br />
அறிவியல் --<br />
<br />
தொழினுட்பம் 13<br />
<br />
கலை 41<br />
<br />
இலக்கியம் 35<br />
<br />
வரலாறு 75<br />
<br />
<div style="text-align: right;">
(வாசகர் பதிவேடு-2004 ஆவணக் காப்பகப் பகுதி)</div>
<br />
<br />
<br />
<br />
3.1 ஆய்வுக் கட்டுரைகள்<br />
<br />
ஆய்வுக் கட்டுரைகளின் பிரதான வாசகர்களாகக் கருதப்படுபவர்கள் பட்டப்பின்படிப்பை மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்களே. கல்வியியல் துறையில் முதுமாணிப்படிப்பை மேற்கொள்பவர்களும், டிப்ளோமா பயிற்சி நெறியை தொடர்பவர்களும் ஆய்வுக்கட்டுரை எழுதுவதற்கான ஆய்வு முறையியல் அறிவைப் பெறும் பொருட்டு ஆய்வுக்கட்டுரைகளைப் பயன்படுத்துகின்றனர். மொழி, தமிழ் இலக்கியம் சார்ந்த ஆய்வுக்கட்டுரைகள் பெரும்பாலும் ஆராய்ச்சியாளர்களினால் தகவல் பெறும் நோக்கத்துக்காக பயன்படுத்தப்படுகின்றது. கடந்த யூலை மாதத்தில் மட்டும் வாசகரால் 271 ஆய்வுக்கட்டுரைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்து சமயம்(75), புவியியல்(58), பொருளியல்(33), கல்வி(28), சமூகவியல்(26), இலக்கியம்(18), ஏனையவை(33) என்ற அடிப்படையில் ஆய்வுக் கட்டுரைகளின் பயன்பாடு இனங்காணப்பட்டிருக்கிறது. இந்து தத்துவம், அபவிருத்திப் பொருளியில் போன்ற துறைகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆய்வுக் கட்டுரைகளை முதலாம், இரண்டாம், மூன்றாம் வருட பட்டப்படிப்பு மாணவர்கள் பாடப்புத்தகமாக பயன்படுத்தும் தன்மை அதிகரித்துக் கொண்டு செல்லும் போக்கு அண்மைக்காலங்களில் இனங்காணப்பட்டிருக்கிறமை பயன்பாடு சார்ந்து இனங் காணப்படும் இன்னோர் முக்கிய அம்சமாகும். ஆரம்பத்தில் ஆய்வுத் தேவைக்கு உதவும் வகையில் பட்டப்படிப்பு இறுதி வருட மாணவர்களுக்கும் பட்டப்பின்படிப்பு மாணவர்களுக்குமே ஆய்வுக்கட்டுரைகளை பயன்படுத்துவதற்கான அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. குறிப்பாகத் தத்துவம், சமயம், புவியியல் சார்ந்து இப்போக்கு இனங்காணப்பட்டிருக்கிறது. இத்தகைய தன்மையானது எதிர்க்கணிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. ஆய்வுக் கட்டுரைகளுக்கான மேலதிக பிரதிகளைப் பெற்றுக் கொள்வது சாத்தியமற்றதாகையால் அரிய நூலாகக் கருதப்பட்டுப் பாதுகாக்கப்படும் ஒரேயொரு பிரதியும் அதிக பாவனை காரணமாக விரைவிலேயே பழுதடைந்து அடுத்த சந்ததிக்குப் பயன்படாமல் போகும் ஆபத்துண்டு. ஷநூல்கள் பாவனைக்கேஷ என்ற நூலகவியல் விதியானது பிரதிகள் பெறப்படமுடியாத சாதனங்களுக்கும், மிகப் பழமை வாய்ந்த அரிய நூல்களுக்கும், உள்ளடக்கத்தில் பெறுமதி இழக்காமல் அதேசமயம் கால மாற்றத்தால் உருவமைப்பில் உடைந்து போயிருக்கும் பெறுமதி மிக்க நூல்களுக்கும் எவ்வளவு தூரம் பொருத்தமானது என்பது மதிப்பீடு செய்யப்படவேண்டியதொன்றாகும்.<br />
<br />
<br />
<br />
<br />
3.2 சிறு நூல்கள்<br />
<br />
யாழ் பல்கலைக்கழக நூலகத்தில் சிறு நூல்களைப் பொறுத்து மிகப் பெறுமதி வாய்ந்த வளமாக கருதப்படும்; அதேசமயம் இவற்றுக்கான வாசகர்; பயன்பாட்டை விரல் விட்டு எண்ணக்கூடியளவிற்கு ஓரளவேனும் அறியப்படாத வளமாகவே இவை இருக்கின்றன. வாசகரினால் ஒரு தடவை அறியப்பட்டுவிடின் பின்னர் தொடர்ந்து அவரால் பயன்படுத்தப்படும் அளவுக்கு இதன் ஆய்வுப் பெறுமதி அதிகமாகும். அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள் முதற்கொண்டு முக்கியமான நூல்கள் வரை இவை பலதரப்பட்டதாக அமைகின்றன.<br />
<br />
<br />
<br />
<br />
3.3 பருவ இதழ்கள்<br />
<br />
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தின் மொத்த நிதி ஒதுக்கீட்டில் கிட்டத்தட்ட 90 வீதமானது பருவ இதழ் கொள்வனவுக்கே ஒதுக்கப்படுவதிலிருந்து இதன் முக்கியத்துவத்தை கண்டுகொள்ள முடியும். இவற்றில் வெளிவரும் தகவல்கள் நூல்களில் உள்ளவற்றிலும் பார்க்கப் புதியவையாகும். பல்கலைக்கழகத்தின் அனைத்து மட்ட வாசகரதும் பாடவிதானம், ஆராய்ச்சி, பொழுதுபோக்கு, போன்றவை தொடர்பாக உடனடித் தகவலை வழங்கும் வளங்களாக இவை இருக்கின்றன. ஆய்வுத் தகவல்களை வழங்கும் முதல்நிலைப் பருவ இதழ்கள் என்ற வகையில் இங்கு வெளிநாட்டு ஆய்வு முயற்சிகளை வெளிக் கொணருகின்ற வெளியூர்ப் பருவ இதழ்களின் ஈட்டலே அதிகமாக உள்ளது. உள்ளுர் ஆய்வு முயற்சிகளுக்கு அடிப்படையை வழங்குதல், வழிகாட்டுதல் என்பவற்றுடன் இவற்றின் பயன்பாடு மட்டுப்படுத்தப்பட்டுவிடுகிறது. உள்ளுர் பருவ இதழ்களைப் பொறுத்து பெரும்பாலானவை ஆய்வு முயற்சிகளைப் பெரிதும் உள்ளடக்காத, தகவல்களைத் தொகுத்து வழங்குகின்ற இரண்டாம் நிலைப் பருவ இதழ்களாகவோ அல்லது இலக்கிய வெளியீடுகளாகவோ இருப்பதனால் ஆய்வு முயற்சிக்கு இவை வழங்கும் பங்களிப்பு என்பது மட்டுப்படுத்தப்பட்டதாகவே இனங்காணப்பட்டிருக்கிறது. செய்தித் தாள்கள் ஆய்வு முயற்சிகளுக்குப் பெரும் உறுதுணையாக இனங்காணப்பட்டிருக்கின்றன. ஆண்டு மலர்கள் பலதரப்பட்ட அறிஞர்களதும் கட்டுரைகளை உள்ளடக்கியிருப்பதனால் ஆராய்ச்சியாளருக்குப் பெரிதும் பயன்படுவதாய் உள்ளன. பெருந்தொகை செலவழித்து அச்சுவடிவில் கொண்டு வருவதற்கான பொருளாதார மார்க்கமோ அதைச் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்போ குறைவாக இருக்கின்ற சமூகம் ஒன்றின் ஆய்வு முயற்சிகளில் கணிசமானளவைப் பதிவாக்கும் வாய்ப்பை இத்தகைய மலர் வெளியீடுகளே வழங்குகின்றமையால் இவை அதிக பயன்பாட்டுக்குரிய வளமாகவும் பேணிப் பாதுகாக்கவேண்டிய வளமாகவும் இனங்காணப்பட்டிருக்கின்றன.<br />
<br />
<br />
<br />
<br />
3.4 அறிக்கைகள்<br />
<br />
அறிக்கைகள் மிக முக்கியமான முதல் நிலைத் தகவல் வளமாகும். குறிப்பிட்ட நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் ஆய்வு நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களைப் பெற உதவுதல், குறிப்பிட்ட செயற்திட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பான விபரங்களை பெற உதவுதல், குறித்த துறையில் தோல்வியில் முடிவடைந்த செயற்திட்டங்களின் விபரங்களை வழங்குதல், குறித்த துறையில் அண்மைக்கால முன்னேற்றங்களை அறிய உதவுதல் போன்ற நன்மைகளை இவை வழங்குகின்றன. பொதுவாக அறிக்கைகள் புள்ளி விபரத் தகவலைப் பெற்றுக்கொள்ளுமுகமாகப் பயன்படுத்தப்படுவதனால் பெரும்பாலும் பொருளியல், புவியியல் ஆகிய துறைகளைச் சார்ந்த மாணவர்களே இதனை அதிகம் பயன்படுத்துகின்றனர்.<br />
<br />
<br />
<br />
<br />
4. பராமரிப்பு<br />
<br />
யாழ் பல்கலைக்கழக நூலகத்தின்; முதல்நிலைத் தகவல் வளங்களில் கிட்டத்தட்ட அனைத்துமே தாளை அடிப்படையாகக் கொண்டவையாகும். தகவல் வளங்களில், குறிப்பாக தாளை அடிப்படையாகக் கொண்ட நூலுருச்சாதனங்களில் ஏற்படும் பௌதிக ரீதியிலான பாதிப்பு அண்மைக்காலங்களில் நூலக தகவல் விஞ்ஞான துறையின் பிரதான தொழிற்றிறன்சார் விவகாரங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. 20ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலேயே தகவல் தொழினுட்ப உலகுக்குள் மனித சமூகம் நுழைந்துவிட்டபோதும் வடிவம், எழுத்து இரண்டிலும் நெகிழ்வுத் தன்மை கொண்டதாக, சிறியதாக, பாரமற்றதாக, விரும்பிய இடத்துக்கு எடுத்துச் செல்லக் கூடியதாக, முக்கிய அம்சங்களை வெட்டிச் சேகரிக்கக்கூடியதாக, பல பிரதிகள் எடுக்கக்கூடியதாக, தேவை முடிந்ததும் தூக்கி வீசக் கூடியதாக இருக்கக் கூடிய ஒரேயொரு சாதனம் நூலாகத் தான் இருக்க முடியும்15 என குறிப்பிடப்படும் அளவுக்குத் தாளை அடிப்படையாகக் கொண்ட சாதனங்களின் பயன்பாடு தகவல் யுகம் ஒன்றில் சுலபமாக மறைந்துவிடக் கூடிய அல்லது மறக்கப்பட்டு விடக்கூடிய வாய்ப்பு இல்லை என்றே சொல்ல முடியும். பொதுவாக தகவல் வளங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை உள்ளக காரணிகள், வெளியகக் காரணிகள் என இரு பெரும் பிரிவாக பிரிக்கலாம். உள்ளகக் காரணிகள் என்பவை தகவல் வளங்களின் பௌதிக வடிவமைப்புடன் தொடர்புடையது. வெளியகக் காரணிகளி;ல் உயிரியல் காரணிகள் பௌதிக இரசாயனக் காரணிகள், சூழல் காரணிகள், பேரழிவுகள் என்பவை முக்கியமானவை. 16<br />
<br />
<br />
<br />
<br />
4.1 பௌதிக வடிவமைப்பு<br />
<br />
.தாள்களுக்கு அழிவை ஏற்படுத்தும் பிரதான காரணி தாளில் செறிந்திருக்கும் அமிலத்தன்மையாகும். தாள்களின் நிரந்தரத்தன்மை தாளில் காணப்படும் அமிலத்தின் அளவில்ஜிர்ஸ தங்கியிருக்கிறது. வெளிறச் செய்தலுக்குப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள், மை வகைகள், காற்று அசுத்தமாக்கிகள், அமிலப்பரவல் போன்றவற்றால் தாளில் அமிலத்தன்மை உருவாகிறது. இந்த அமிலம் இறுக்கமான செலுலோசை சாதாரண அணுத்திண்மங்களாக உடைத்துத் தாளைப் பலவீனப்படுத்துகிறது. இது தவிர உயர் அமிலத்தன்மை உள்ள பொருள்களிலிருந்து அமிலத்தன்மை குறைந்த அல்லது இல்லாத பொருட்களை நோக்கி அமிலம் நகரமுடியும் என்பதால் அமிலத்தன்மையற்ற தாள்கள் கூட காலநிலை மாறுபாடுகளாலும் அமிலப்பொருட்கள் அருகில் இருப்பதன் மூலமும் அமிலத்தன்மையுள்ளதாக மாறலாம். ஓரு நூலில் இணைக்கப்படுகின்ற செய்தித்தாள் துணுக்கு விரைவிலேயே தானும் நிறம் மாறி நூலையும் மண்ணிறமாக மாற்றிவிடுவது இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். இதுமட்டுமன்றி ஈரப்பத விகிதத்தின் ஏற்ற இறக்கத்தினால் தாள்கள் பலதரப்பட்ட வீதத்தில் நீரை உறுஞ்சும் போதும், வெளிவிடும் போதும், தாள்களில் உள்ள நார்ப்பொருட்கள் விரிந்து சுருங்கும் போதும் ஏற்படும் உள்ளக அழுத்தங்கள் சாதனங்களில் நீண்டகால விளைவை ஏற்படுத்துகின்றன. நன்கு கட்டப்பட்ட நூலொன்றின் கோணலடைந்த நூல் மட்டை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.<br />
<br />
இங்கு காணப்படும் தாளை அடிப்படையாகக் கொண்ட சாதனங்களில் கணிசமானவை அமிலத் தன்மை கூடிய தரங்குறைந்த தாள்களாகவே உள்ளன. ஆவணக்காப்பகப்பகுதியில் பாதுகாக்கப்படும் சாதனங்களில் கணிசமானவை மஞ்சள் நிறமுள்ள, நொருங்கும் தன்மை வாய்ந்த நூல்களாகவே இனங்காணப்பட்டுள்ளன. சூரிய ஒளி, அதிக வெப்பம் போன்றவற்றிலிருந்து மர அலுமாரிகள் ஓரளவுக்குக் காப்பு வழங்குகின்ற போதும், சீற் கூரையிலிருந்து நேரடியாகத் தாக்கும் வெப்பமும் மழை ஒழுக்குகளும் ஈரப்பத விகிதத்தில் சடுதியான ஏற்ற இறக்கங்களை கொண்டு வந்து நூலின் அழிவை வேகப்படுத்துவது தவிர்க்க முடியாதாக மாறியிருக்கிறது. ஆவணக்காப்பகப்பகுதியின் சமநிலையற்ற ஈரப்பத விகிதத்தைக் கட்டுப்படுத்துவதற்கேற்ற வகையில் குளிரூட்டல் வசதி மிக அவசியமாகும். செய்தித்தாள் பகுதியிலுள்ள அனைத்து வளங்களும் அதிக வெப்பம் காரணமாகவும் தரங்குறைந்த தாளில் உருவாக்கப்பட்டமையாலும் மஞ்சள் நிறமடைந்து மிகப் பாதிப்புற்ற நிலையில் காணப்படுகின்றன.<br />
<br />
<br />
<br />
<br />
4.2 உயிரியல் காரணிகள்:-<br />
<br />
• மனிதர்கள்:-ஆவண விரோதிகளில் மிகவும் ஆபத்தானதும், அறிவுசார் ரீதியில் அழிவை ஏற்படுத்தவல்லதுமான உயிரியாகக் காணப்படுவது ஆறறிவு படைத்த மனித உயிரி என்பதையே தகவல் விஞ்ஞானத் துறையின் அனுபவ அறிவு இனங்கண்டிருக்கிறது. மனித உயிரியால் ஏற்படுத்தப்படும் பாதிப்பு உற்பத்தியாளன், பாவனையாளன், பாதுகாவலன் என்ற மூன்று தன்மைகளின் அடிப்படையில் ஏற்படுகிறது. 17 இலாப நோக்கம் கருதிய மனிதனது உழைப்பும் முயற்சியும் இணைந்து நீண்ட நார்ப் பொருளைக் கொண்ட கனதியான நீடித்து உழைக்கக்கூடிய தாள்களின் உற்பத்தியிலிருந்து தரங்குறைந்த குறுங்கால வாழ்வுடைய தாள்களின் உற்பத்திக்கு வித்திட்டமை, தகவல் சாதனங்களுக்கு பொறிமுறை ரீதியிலும் இரசாயன ரீதியிலும் அழிவை ஏற்படுத்தும் ஒளிப்படப் பிரதியாக்கமுறை, நூலகங்களுக்குள்ளே வடிவமைக்கப்படும்; குடிநீர், வசதிகள் போன்றவை உற்பத்தி சார்ந்து ஏற்படும் மனிதப் பாதிப்பாக உள்ளது. இங்கும் கூட அமிலத் தன்மையைப் பரிசோதிப்பதற்கான தொழினுட்ப வசதியோ, அல்லது அவற்றை கூடிய விலை கொடுத்து வாங்கக்கூடிய நிதி வசதியோ இல்லாத காரணத்தால் தரங்குறைந்த தாள்களில் வெளியான நூல்களே அதிக இடத்தை நிரப்புகிறது. ஆவணக்காப்பகப்பகுதியிலுள்ள சாதனங்களும், பருவ இதழ்ப்பகுதியிலுள்ள சாதனங்களும் இரவல் எடுத்துச் செல்ல முடியாததாகையால் இவற்றுக்கான ஒளிப்படப் பிரதியாக்கப் பாவனை மிக அதிகமாகும்.<br />
<br />
பாவனையாளர்கல்வி தொடர்பான போதிய அறிவின்மையால் நூலக இறாக்கைகளிலிருந்து நூலின் முதுகுப்புறத்தைப் பலவந்தமாக இழுத்து எடுத்தல், நூலை விரித்து வைத்து அதன் மேல் முழங்கைகளால் அழுத்தியபடி வாசித்தல், பக்க ஓரங்களை இறுதியாகப் படித்;த அடையாளத்துக்காக மடித்துவிடுதல், நூலின் பக்கங்களை கீழிருந்து மேலாக தட்டுவதன் மூலம் பக்கங்களைப் புரட்டுதல், படுத்திருந்து ஒரு கையால் பிடித்தபடி மறுகையால் பக்கங்களைப் புரட்டுதல் போன்ற கவனமற்ற கையாள்கையும் நூல் இரவல் பெறும் போது பிழையான பெயர்களைக் கொடுத்தல், அடையாள அட்டைகளைத் தவறான முறையில் பயன்படுத்தல், ஆவணங்களிலுள்ள பக்கங்கள், படங்கள், வரைபடங்கள் என்பவற்றை வெட்டியெடுத்தல், ஆவணங்களில் எழுத்துக்களின் கீழ்க் கோடிடுதல், பக்க ஓரங்களில் எழுதுதல், கொழுப்பு எண்ணெய்க்கறைகளை ஏற்படுத்துதல் போன்ற திட்டமிட்ட வகையில் ஏற்படுத்தும் பாதிப்புகளும் இங்கு அதிகமாகும்.<br />
<br />
நூலின் பாதுகாவலர் என்ற வகையில் பணிநிலை அலுவலர்கள் நூல் தாங்கிகளுக்குள் நூல்களைப் பலவந்தமாகச் செலுத்த முனைதல், நூல் தாங்கிகள் இன்றி நூல்களைச் சாய்ந்த நிலையில் இறாக்கைப்படுத்தல்;, நூல்களை மிக நெருக்கமாக இறாக்கைப்படுத்துதல் போன்றன தாள்கள் கிழிவதற்கும், நூல் மட்டைகளின் கட்டுத் தளர்வதற்கும் ஏதுவாகிறது. நூல் வண்டிகள் இன்றி அல்லது மேல் மாடிகளுக்கு எடுத்துச் செல்வதற்கான வசதிகள் இன்றி நூல்களைக் கைகளில் காவிச் செல்லுதல் காரணமாக நூல்கள் கீழே விழுந்து கிழிபடுதல் தவிர்க்க முடியாததாக உள்ளது. நூல்களை இரவல் வழங்கும் செய்முறையில் நூல்களின் பின்புற அட்டைகளின் உட்பகுதியில் பின்புறப் பலம் கொடுக்காது திகதி முத்திரை இடும் போது ஆவணங்களின் கட்டு விட்டுப்போக வாய்ப்பு ஏற்படுகிறது.<br />
<br />
தகவல் அமைப்பின் தலைமை அலுவலரினால் ஆவணங்களைப் பேணுதல் தொடர்பாக சரியான கொள்கை வகுப்போ, திட்டமிடலோ மேற்கொள்ளப்படாதுவிடின் அதுவும் திட்;டமிட்ட ஆவண விரோதச் செயலாகவே கருதப்படுகிறது. மிகக்குறைந்த கட்டுப்பாடுகளுடன் தகவல் வளங்கள்; வாசகரின் பாவனைக்கு விடப்படுமாயின் ஆவண மோசடியோ, களவோ, தவறான பாவனையோ தவிர்க்கப்படமுடியாததாகவே இருக்கும்.<br />
<br />
• பேருயிரிகள்:-இலங்கை போன்ற வெப்பவலய நாடுகளில் ஆவணங்களுக்கு நேரடிப்பாதிப்பை உண்டு பண்ணும் காரணிகளாக இவை காணப்படுகின்றன. அடிக்கடி பாவனையில் இல்லாத நூல்களும், இருட்டறையில் வைக்கப்படும் நூல்களும் பேருயிரிகளின் தாக்கத்திற்கு அதிகம் உட்படுகின்றன. இந் நூலகத்தில் பேருயிரிகள் என்ற வகையில் இராமபாணம்;(ளுடைஎநசகiளா), அந்துப்பூச்சி(ஆழவாள), கறையான்(வுநசஅவைந)இ கரப்பான் (ஊழஉமசழயஉhநள) புத்தகப்புழு (டீழழமறழசஅ), புத்தகப்பேன்(டீழழம டiஉந) போன்றவற்றால் ஏற்படும் பாதிப்பு கூடுதல் இனங்காணப்படுகிறது. புகையூட்டல் போன்ற பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ளாமை காரணமாக இராமபாணம், அந்துப்பூச்சி போன்றவற்றின் தாக்கத்தால் ஆரம்பகாலங்களில் சாதனங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டு போகின்றது. மர அலுமாரிகளும், தற்போது பயன்படுத்தப்படும் பூச்சி உரூண்டை, மலத்தியோன் போன்ற பூச்சி கொல்லிகளும் கட்டுப்படுத்த முடியாதளவுக்குப் பரவிச் செல்லும் பேருயிரிகளின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு கொடுப்பது என்பது சாத்தியமற்றது. தளப்பகுதியின் வெடிப்புகளிலிருந்து வெளிக்கிளம்பும் கறையான்களுக்கு எவ்வாறு ஈடு கொடுப்பது என்பது பருவ இதழ்ப்பகுதியின் பிரதான பிரச்சனைகளில் ஒன்றாக மாறியிருக்கிறது.<br />
<br />
• நுண்ணுயிரிகள்:-இவை ஒன்றில் பஞ்சு போன்ற படையாகவோ, மஞ்சள், பச்சை, கறுப்பு நிற வண்ணங்கள் நிறைந்த வடிவமைப்பாகவோ, தொப்பளங்கள் போன்றோ படர்ந்திருக்கும். இவை படர்ந்துவிட்டால் அகற்றுவது மிகவும் கடினமாகும். வெப்பநிலை, மிதமான ஈரப்பதன், பனி, கடும் இருட்டு, ஊட்டச் சத்துக்கள் போன்ற சூழல் காரணிகள் பூஞ்சண உருவாக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் துணை செய்கின்றன. நூலக சாதனங்களிற்குக் காலம் முழுவதும் நாசம் விளைவிக்கும் உயிரிகளாக இவை கருதப்படுகின்றன. தாள்களில் மண்ணிறப் புள்ளிகள் முதலில் உருவாகி பின் சாம்பல் நிறப்புள்ளிகளாக நிறமாற்றம் பெற்றிருப்பதைக் கொண்டு அவற்றை நுண்ணுயிரிகள் தாக்கியிருப்பதை அறியமுடியும்.<br />
<br />
<br />
<br />
<br />
4..3 சூழல் காரணிகள் <br />
<br />
தகவல் அமைப்பு ஒன்று அமைந்திருக்கும் இடமும் ,அங்குள்ள காலநிலையும் ஆவண வளங்களின் அழிவுக்குக் கணிசமான பங்களிப்பை வழங்குகின்றன. மாசடைதலானது திண்ம, திரவ, வாயு, ஆவி வடிவில் உருவாகலாம். பலதரப்பட்ட கைத்தொழில் செய்முறைகள், விபத்துகள், தகவல் அமைப்பின் உள்ளக செயற்பாடுகள், மின்னல், பூகம்பம், காட்டுத்தீ போன்ற சடுதியான இயற்கை நிகழ்வுகள், விலங்குகள், தாவரங்களின் இறப்புப் போன்ற மெதுவாக நடைபெறுகின்ற தொடர் செய்முறைகள் போன்றவற்றால் மாசடைதல் உருவாகிறது. தூசி, அழுக்கு, புகை, காற்று, உப்புத் துணிக்கைகள் போன்ற அசுத்தமாக்கிகளும், வாயுப் பொருட்களும் ஈரத்தன்மை போன்ற சாதாரண காரணிகளும் அழிவை ஏற்படுத்துகின்றன.18<br />
<br />
நூலக சாதனங்களில் அதிகம் பரவிக் கிடப்பது தூசியாகும்.; நூலக இறாக்கைகள், சாதனங்கள், தளபாடங்கள் அனைத்தையும் இது ஆக்கிரமித்திருக்கிறது. ஆவணக்காப்பகப் பகுதி, அரச ஆவணக் காப்பகப் பகுதி என்பவை மர அலுமாரிகளைப் பயன்படுத்துவதனூடாக அசுத்தமாக்கிகளிலிருந்து கூடுதல் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்கிறது. எனினும் தாளை அடிப்படையாகக் கொண்ட சாதனங்கள் தமக்குள்ளேயே தூசியை உருவாக்கும் வல்லமை கொண்டமையால் அடிக்கொருதரம் இவை துப்பரவு செய்யப்படாதுவிடின் இதுவே நூற் பாதிப்பின் பிரதான காரணியாக அமைந்து விடும் அபாயம் உண்டு. ஊழியர் பற்றாக்குறையானது திறந்த இறாக்கைகளில் வைக்கப்பட்டிருக்கும் எண்ணுக்கணக்கற்ற பருவ இதழ்களைக் கொண்ட பருவ இதழ்ப்பகுதியினை தூசிப் படலமாக மாற்றியிருக்கிறது.<br />
<br />
<br />
<br />
<br />
5. முடிவுரை<br />
<br />
முதல்நிலைத் தகவல் வளங்கள் அனைத்தும் ஆய்வு முயற்சியில் ஈடுபட்டிருக்கும் எந்த நிறுவனத்துக்கும் ஆதாரமாக இருப்பவை. நூல் விநியோகஸ்தர் மூலமாகப் பணம் கொடுத்துப் பெற்றுக் கொள்ள முடியாதவை. தனிப்பட்ட ரீதியிலும் குழுவாகவும் சேகரிக்கப்படவேண்டியவை. பிரதேச முக்கியத்துவம் மிக்கவை. தனிக் கவனம் எடுத்து பாதுகாக்கப்படவேண்டியவை. இந்த நூலகத்தில் முதல்நிலைத் தகவல் வளங்கள் பெரும்பாலும் அறியப்படாத வளமாகவே இருக்கின்றன. முதல் நிலைத் தகவல் வளங்களின் அளவையும் அதன் தரத்தையும் கொண்டே ஆய்வு நிறுவனம் ஒன்றின் தரம் அளவிடப்படுகிறது. எனவே இவற்றின் சேகரிப்பு எவ்வளவுக்கெவ்வளவு முக்கியமோ அவ்வளவுக்கு இவற்றின் பராமரிப்பும் முக்கியமானதாகும்..<br />
<br />
<br />
<br />
<br />
அடிக்குறிப்புகள்<br />
Rajagopalan,T.S and Rajan,T.N. Agenda for National Information Policy.Handbook of Libraries,Archives & Information centres in India. vol.3-Information policies,systems and networks(1986),Information Technology Publications,New Delhi,p24. <br />
Krishankumar.(1984),Reference services,Vikas,New Delhi,p98-103. <br />
Library Statistics of the Archives&Government documents(2004) <br />
Harrods,L.M.(1987).op.cit. <br />
Library Statistics of the Archives&Government documents(2004) <br />
Philipps,Eva,(1990),Documentation made easy: Vieweg,Wiesbaden,p106 <br />
Harrods,L.M(1987).opcit.,p580. <br />
Readers record (2003-4),Archives <br />
Harrods,L.M(1987).Ibid.,p596 <br />
Gs;sptpgug; gjpNtL>gUt ,jo;g; gFjp <br />
Parker,C.C,and Turley,R.V(1975), Information sources in science and technology, Butterworths,London,p112. <br />
Ibid <br />
Readers record (2003-4),Archives <br />
Ibid. <br />
Licklider,J.C.R. (1965). Libraries of the future.Mass,MIT,Cambridge. <br />
Harvey,Ross. Preservation in Libraries: Principles,strategies and practices for Librarians. London: Bowker,1993. <br />
Ibid. <br />
Pasce,M.W. (1988),Impact of environmental pollution on the preservation of archives and records: a RAMP study:UNESCO,Paris,p27 <br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
(Primary Information resources available at Library, University of Jaffna. Arrangement, Use & maintenance. [Cinthanai.vol.xiv, no.3; Nov. 2004)Srikanthaluxmyhttp://www.blogger.com/profile/02621345440975786756noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-14981721.post-87038015082129352102016-01-04T22:26:00.000-08:002016-01-04T22:32:30.264-08:00பாடசாலை நூலகங்கள் <h3 class="post-title entry-title" itemprop="name" style="background-color: #f6f6f6; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 22px; font-stretch: normal; font-weight: normal; margin: 0.75em 0px 0px; position: relative; text-align: center;">
<a href="http://srikanthaluxmy.blogspot.com/2014/09/blog-post_40.html" style="color: grey; text-decoration: none;">பாடசாலை நூலகங்கள் </a></h3>
<h3 class="post-title entry-title" itemprop="name" style="background-color: #f6f6f6; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 22px; font-stretch: normal; font-weight: normal; margin: 0.75em 0px 0px; position: relative; text-align: center;">
<a href="http://srikanthaluxmy.blogspot.com/2014/09/blog-post_40.html" style="color: grey; text-decoration: none;">புதுயுகம் தரும் பெரும் பொறுப்புகள்</a></h3>
<div class="post-header" style="background-color: #f6f6f6; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 10.8px; line-height: 1.6; margin: 0px 0px 1.5em;">
<div class="post-header-line-1">
</div>
</div>
<br /><br />புது யுகம் <br /><br />இது ஒரு தகவல் தொழினுட்ப யுகம். எல்லோர்க்கும் எல்லாம் என்ற ஆதிப் பொதுவுடமைத் தத்துவத்தின் அடிப்படையில் ஆரம்பித்த மனிதனது சமூக வாழ்வு விவசாயத்தை முதன்மையாகவும் நிலத்தை பிரதான மூல வளமாகவும் கொண்ட கைத்தொழிலுக்கு முற்பட்ட சமூகம் ஒன்றையும், கைத்தொழிலை முதன்மையாகவும் இயந்திரத்தை பிரதான மூல வளமாகவும் கொண்ட கைத்தொழில் சமூகம் ஒன்றையும், ஆய்வு நடவடிக்கைகளை முதன்மையாகவும் அறிவை பிரதான மூல வளமாகவும் கொண்ட கைத்தொழிலுக்குப் பிற்பட்ட சமூகம் ஒன்றையும் கடந்து முழுக்க முழுக்க தகவலைச் சுற்றியே பின்னப்பட்ட, தகவல் தொழிற் துறையை முதன்மையாகக் கொண்ட தகவல் சமூகம் ஒன்றில் தற்போது நடைபயில்கிறது.ஷ அறிவே ஆற்றல் என்ற புகழ் பெற்ற வாசகம் கைத்தொழில் சமூகத்துக்கு உரியதெனில் ஷதகவலே ஆற்றல் என்ற புது வாசகம் மூன்றாவது ஆயிரியத்தின் நுழைவாயிலுக்குப் பொருத்தமானது. 1980களில் கருக்கொண்ட தகவல் யுகத்தின் தோற்றப்பாடு 1990களில் வீச்சடைந்து இன்று உலகின் மூலைமுடுக்கெல்லாம் ஊடுருவியுள்ளது. மின்னாமல் முழங்காமல் ஓய்ந்த விவசாயப் புரட்சிக்கும,; மின்னி முழங்கி ஓய்ந்த கைத்தொழில் புரட்சிக்கும் அடுத்ததாக மனித சமூகம் சந்திக்கும் மாபெரும் புரட்சியாகக் கருதப்படுவது தகவல் புரட்சியாகும்.<br /><br />தகவல் புரட்சிக்கு அடித்தளமாக அமைபவை கணினிகள். கணித்தல் செயற்பாடுகளுக்;கு உதவுவதற்கான கருவியாகக் கண்டுபிடிக்கப்பட்ட கணினி இன்று தனது ஐந்தாவது தலைமுறையில் உலகத்தை உள்ளங்கைக்குள் அடக்கக்கூடிய சர்வ வல்லமைமிக்க சக்தியாக உருவெடுத்துள்ளது. கணினித் தொழினுட்பம், தொலைதொடர்புத் தொழினுட்பம், கட்புல செவிப்புல தொழினுட்பம், நுண்பிரதியாக்கத் தொழினுட்பம் என்பன இணைந்த தகவல் தொழினுட்பச் சூழல் ஒன்று உருவாகியுள்ளது. வீடுகள் முதற்கொண்டு அலுவலகங்கள் வரை எங்கும் கணினி மயம். வீதிகள் தோறும் கணினிப் பயிற்சி நிலையங்கள். வேலைக்;கு உதவும் கருவியாக, அடுத்தவருடன் தொடர்பு கொள்ளும் தொலைபேசியாக, செய்தி அறிய உதவும் செய்தித் தாள்களாக,, அறிவைப் பெருக்க உதவும் நூலகமாக, பொருட்களை விற்க வாங்க உதவும் விற்பனைப் பிரதிநிதியாக, பொழுதுபோக்க உதவும் தொலைக்காட்சியாக என்று மனித வாழ்வின் அனைத்து தேவைகளையும் சிறிய கணினித் திரைக்குள் சாதிக்க இணையம் உதவுகிறது. தகவல் உருவாக்கத்தினதும் பெறுதலினதும் அளவிலும் வகையிலும் ஒவ்வொரு தேசத்தினதும் பொருளாதார அரசியல் சமூக சூழலானது பாதிக்கப்பட்டுள்ளது. உலகை வடிவமைக்கும் ஆற்றல் பெற்ற சக்தியாக உருவெடுத்துள்ள தகவலை அணுகுதல் பகிர்தல் பயன்படுத்தல் என்பவற்றில் வெற்றி பெற்ற ஓரு உலகில் நாம் வாழ்கிறோம்.<br /><br />மனித இனம் தோன்றிய காலம் முதற் கொண்டு தன்னைச் சுற்றியுள்ளவை மீதான அவதானிப்புகளும், அவ் அவதானிப்புகளை பரிசோதனைக்குள்ளாக்கி தீர்வு காண முயலும் மனித மூளையின் ஆற்றலும், தான் பெற்ற அறிவை அடுத்துவரும் பயன்படுத்தும் வகையில் காலத்துக்குக் காலம் கிடைத்த எழுது பொருட்களில் பதிந்து வைக்கும் மனித சிந்தனையும் இணைந்ததால் தோற்றம் பெற்ற எண்ணற்ற மனித சிந்தனைப் பதிவேடுகளை அனைவரும் பயன்படுத்துவதற்கேற்ற வகையில் சேகரித்து ஒழுங்கமைத்து பாதுகாத்து பாவனைப்படுத்தும் பணியில் பல தகவல் நிறுவனங்கள் தோற்றம் பெற்றுள்ளன. எனவே நூல்களின் பாதுகாத்தல் அதற்கும் சற்று மேலே சென்று நூல்களை இரவல் கொடுத்து வாங்கும் பணியை செய்தல் என்ற நிலையிலிருந்து மாறி உருவத்திலும் உள்ளடக்கத்திலும் சிக்கல் வாய்ந்த கட்டமைப்;பைக் கொண்டதாக மாறியுள்ள தகவல் சாதனங்களை சிறந்த முறையில் கையாளும் பணிக்கு நூலகங்கள் மாறவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறன. அந்த வகையில் புதுயுகத்தின் பரிமாணங்களை உள் வாங்கவேண்டிய தேவை பாடசாலை நூலகங்களுக்கும் இருப்பது காலத்தின் கட்டாயமாகும்.<br /><br /><br /><br /><br />புதிய போக்குகள்<br /><br />ஆகக் குறைந்து வகுப்பறை ஒன்றையே நூலகமாக கொண்ட பெரும்பாலான பாடசாலைகளில் மட்டுமன்றி நூலக வசதியை ஓரளவு கொண்ட தரம் கூடிய பாடசாலைகளிலும் கூட புதிய கட்டடம் ஒன்று அவசர அவசரமாக எழும்பிக் கொண்;டிருக்கிறது. சிலது பூரணப்படுத்தப்பட்டுள்ளது. சில முடியும் தறுவாயிலுள்ளது. சிலவற்றுக்கு அடித்தளம் போடப்படுகிறது... பாடசாலையில் கற்றல் இலக்குகளையும் செயல்முறைப்படுத்தக்கூடிய நோக்கங்களையும் பூர்த்தி செய்வதற்கான முக்கிய மூலக்கூறாக பாடசாலை நூலக கற்றல் வள நிலையம ஒன்றின் முக்கியத்துவத்தையும் பெறுமதியையும் கல்வி உயர்கல்வி அமைச்சானது உணர்ந்துள்ளதன் வெளிப்பாடே இவை. பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகளுக்கு கிட்டவாக நிற்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து ஆங்கில மொழியில் நூலக தகவல் விஞ்ஞான டிப்ளோமா பயிற்சி நெறியை கல்வியியல் கல்லூரிகள் தொடங்கியிருக்கின்றன. பயிற்சி முடித்து வெளியேறியுள்ள முதல் தொகுதி மாணவர்கள் பாடசாலைகளுக்குள் புகுந்து நூலகவியல் கற்பிப்பதற்கான வாய்ப்பின்றி ஆங்கிலம் கற்பித்துக் கொண்டிருக்கின்றனர். பாடசாலைகளுக்குள் நூலக உணர்வை ஏற்படுத்துவது மட்டுமன்றி நூலகக் கல்வியை பாடத் திட்டத்தில் புகுத்துவதற்கான தயார்நிலையின் சின்னங்களாக இவர்கள் விளங்குகின்றனர். பாடசாலைகளில் பட்டதாரி ஆசிரியர் அல்லது நீண்ட கால சேவை அனுபவம் உள்ள ஒருவர் ஆசிரிய நூலகராக நியமிக்கப்பட்டு அவர்களுக்கான ஐந்து நாள் செயலமர்வுகளை நூலக தகவல் விஞ்ஞானத்துக்கான தேசிய நிறுவனமும் மாகாண கல்வித் திணைக்களமும் இணைந்து பிரதேச ரீதியாக நடத்தியதைத் தொடர்ந்து பாடசாலை நூலகங்களை புனரமைக்கும் முயற்சிகள் துரிதமாக நடக்கின்றன. 2002 ல் கொழும்பில் நடத்திய ஷபாடசாலை நூலகத்தை ஒழுங்கமைத்தலும் முகாமை செய்தலும்ஷ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஐந்து நாள் செயலமர்வின் வெளிப்பாடாக, இது தொடர்பான கைநூல் ஒன்றும் வெளியிடப்பட்டிருக்கிறது. சர்வதேச நூலக தினதத்தை முன்னிட்டு கடந்த ஒக்டோபர் 21-27 வரை அனைத்து பாடசாலைகளிலும் நூலக வாரம் கொண்டாடப்பட்டு கருத்தரங்குகள் கண்காட்சிகள் சொற்பொழிவுகள் என நூலக செயற்பாடுகள் களைகட்டியிருந்தது மட்டுமன்றி சிறந்த முறையில் நூலக வாரத்தை கொண்டாடியவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கல்வித்திணைக்களம் கௌரவித்த நிகழ்வும் நடந்தேறியிருக்கிறது.<br /><br /><br /><br /><br />புதிய பொறுப்புகள்<br /><br />தானங்களில் சிறந்தது வித்தியாதானம் எனப்படும் கல்வி.. கல்வியின் நோக்கங்கள் பல எனினும் அதன் பிரதான நோக்கம் சுயசிந்தனையுள்ள மனிதனை உருவாக்குதல். சுயசிந்தனையுள்ள மனிதனை உருவாக்குவதற்கு அறிவுசார் சிந்தனை அவசியம்.. ஷஎதனையும் உற்றுணர்ந்து, சீர்தூக்கிப் பார்த்து, நிதானித்து, எதிர் விளைவுகள் பக்க விளைவுகளை அடையாளங் கண்டு ,பயன்விளைவு ஆராய்ந்து, அனுகூலங்கள் பிரதிகூலங்களை கருத்தில் கொண்டு, ஒன்றைக் கூறும்- நம்பும் -தீர்மானிக்கும்- தீர்வு காணும்- செயற்படுத்தும்- அறிவும் மனப்பாங்கும் உடைய உள்ளம் அறிவு சார் உள்ளம் என்றும் அத்தகைய சிந்தனை அறிவு சார் சிந்தனை என்றும் கூறலாம்ஷ என படியாதவனின் படிப்பு என்ற நூல் கூறுகிறது. அறிவு சார் சிந்தனையை உருவாக்குவதற்கு பரந்த வாசிப்புத் திறன் முக்கியம். தான் எதிர் கொள்ளும் பிரச்சனைகளிலிருந்து விடுவிப்பதற்கு தனித்துவமான, தனக்குத் தானே நீதிபதியாகக் கூடிய வல்லமையை அளிப்பது இந்த பரந்து பட்ட வாசிப்புத் திறனே. வீட்டுச்சூழலில் இருந்து வெளியுலகுக்கு குழந்தை பிரவேசிக்கும் முதலாவது இடமாக பாடசாலைகள் இருப்பதனால் குழந்தையின் வாசிப்புப் பழக்கத்துக்கு அடித்தளம் போடும் நல்ல வாய்ப்பு பாடசாலை நூலகத்துக்கு ஏற்படுகிறது. நூலக சேவையற்ற கல்வி ஆன்மா இல்லாத உடலுக்கு ஒப்பானது; நாட்டின் எதிர்காலம் ஒப்படைக்கப்பட்டிருப்பது இன்றைய குழந்தைகளிடமே என்பது உண்மையானால் அந்த குழந்தைகளின் உள்ளத்தை கிட்டத்தட்ட 12 வருடங்கள் பண்படுத்தும் பாரிய கடமைப்பாட்டில் இருப்பவை பாடசாலைகள். பாடல்கள் கதை சொல்லல் மூலம் முன்பள்ளிகளில் தனது துருவி ஆராயும் பண்புக்கு களம் அமைக்கும் குழந்தைகள் வாசிப்பு பழக்கத்தின் மூலமே இப் பண்பை கட்டியெழுப்பலாம் என்ற அறிவை பெறக்கூடிய இடமாக பாடசாலை நூலகங்கள் இருத்தல் அவசியமானது. இது மட்டுமன்றி புது முயற்சிகளில் இறங்கும் குழந்தையின் இயல்பை ஊக்குவிப்பது சுயசார்புக் கல்வி மட்டுமே. புதிய பாடத்திட்டங்கள், கணிப்பீடுகள் யாவும் இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது மட்டுமன்றி எழுத்தறிவிக்கும் இறைவர்களையும் கற்பிப்பதற்கு கற்பவர்களாக மாறவேண்டிய நிலையை நிர்ப்பந்திக்கிறது.. இத்தகைய பின்னணியில்; புது யுகம் ஒன்றில் பாடசாலை நூலகங்கள் ஆற்றவேண்டிய பெரும் பொறுப்புகளை வாசகர் நூல்கள் நூலகர்; என்ற அம்சங்களின் கீழ் நோக்குதல் பொருத்தமானது.<br /><br /><br /><br /><br />வாசகர்<br /><br />பாடசாலை நூலகத்தின் வாசகர் குழு இரண்டு. ஒன்று அறிவுத் தேடலுக்கும் ஆக்கத்துக்கும் உரிய மாணவ சமூகம். மற்றது கற்பிப்பதற்காக கற்கும் ஆசிரிய சமூகம். மாணவர்களை படிக்கும் தரத்தின் அடிப்படையில் ஆரம்பநிலை,இடைநிலை,உயர்நிலை என மூன்றாக வகைப்படுத்த முடியும். மனித வளர்ச்சிக்கட்டங்களின் அடிப்படையில் ஆரம்ப நிலை மாணவர்கள் பிள்ளைப்பருவத்துக்கும் இடைநிலை உயரநிலை மாணவர்கள் கட்டிளம் பருவத்துக்கும் உரியவர்கள். சர்வதேச நியமத்தின் அடிப்படையில் அனைவருமே சிறுவர்கள்.<br /><br />பிள்ளைப்பருவம் என்பது 5-12 வயது வரையான பருவம். வீட்டுச்சூழலையும் விட்டுவிடாமல் பள்ளிச்சூழலுக்குள்ளும் முழுதும் அகப்பட்டுப்போகாமல் இருக்கும் இப்பருவத்தினரின் பிரதான தன்மை ஆராய்வூக்கமாகும். அறிவு வளர்ச்சிக்கு அடிப்படையானது ஆராய்வூக்கமாகும். மூன்று வயதில் முன்னிலைக்கு வரும் ஆராய்வூக்கமானது எட்டாவது வயது வரும்போது தீவிரமாக செயற்படத் தொடங்கி ஆக்கவூக்கத்துக்கும் அதன்பின்னர் பலவகைப் பொருட்களைத் தேடிச் சேர்க்கும் சேகரிப்பூக்கத்துக்கும் இட்டுச் செல்கிறது.. இந்த ஊக்கத்தை முளையிலேயே கிள்ளி எறிந்து விடாமல் அதை வளர்ப்பதற்கு உறுதுணையாக இருக்கும் முதலாவது காரணி குடும்பச் சூழல் ஆகும். மற்றய காரணி பாடசாலைச்சூழல். குழந்தையின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் ஆற்றல் பெற்றோருக்கு மட்டுமன்றி ஆசிரியருக்கும் சாத்தியமற்றது. எனவே கடிவாளக் கல்விமுறையை விட்டு சுயமாக கற்றலுக்கு வழிமுறை காணுதல் அவசியமானது இதையே புதிய கல்வித்திட்டங்கள் தற்போது கவனத்தில் எடுக்கின்றன சிந்தனா சக்தியும் நினைவாற்றலும் மிக்க இப்பருவத்தனரே நூலகரின் முதல் இலக்காக இருத்தல் அவசியம். தம்மைச் சுற்றியுள்ளவைகளை அவதானித்து அவை தொடர்பான உண்மை அறிவைப் பெற ஆர்வம் கொண்டிருக்கும் இப்பருவத்தினர் தான் வாசிப்புப் பழக்கத்துக்கும் சுயமாகக் கற்றலுக்குமான இலக்குகள்.<br /><br />12 வயதில் தொடங்கி 18 அல்லது 20 ஆண்டுகள் வரை நீடிக்கும் கட்டிளம் பருவம் 20ம் நூற்றாண்டின் புதிய கண்டுபிடிப்பாகும். அதுவரை இப்பருவத்தினர் வளந்தோராகக் கருதப்பட்டு பொறுப்புமிக்க பணிகளில் வலிந்து ஈடுபடுத்தப்பட்டனர் ஓர் அமைதியற்ற சிக்கல் நிறைந்த பருவமாக இது கருதப்படுகின்றது.; முழுக்க முழுக்க வீட்டுச்சூழலிலிருந்து விடுபட்டு தனித்தியங்கும் விருப்பு அதிகமாக உள்ள இப்பருவத்தினரிடம் காணப்படும் பிரதான அம்சம் பாலுணர்வு. போதனைகளோ தண்டனைகளோ இவர்களிடம் எடுபடாது. தமது உணர்வுகளுக்கு தீனி போடும் எதையும் தேடி எடுக்கும் ஆற்றல் இவர்களிடம் உண்டு என்பதை யாரும் சொல்லிக்கொடுக்காமலேயே - இளவயதில் வாசிப்புப் பழக்கம் அற்றவர்கள் கூட- இவர்கள் பார்க்கும் படங்களிலிருந்தும் படிக்கும் கதைப்புத்தகங்களிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம். அதேசமயம் பிள்ளைப்பருவத்தினரைப் பொறுத்து பொழுதுபோக்குப்புத்தகமோ அல்லது பொது அறிவுப் புத்தகமோ வழிகாட்டினால் தான் உண்டு. இல்லாவிடில் வெறும் விளையாட்டுகளிலேயே அவர்கள் ஈடுபடுவர் என்பது அனுபவ ரீதியான உண்மையாகும். எனவே பிள்ளைப்பருவத்தில் காட்டப்படும் சரியான வழிகாட்டுதலே கட்டிளம் பருவத்து தனித்தியங்கும் ஆற்றலை அறிவு சார் பாதை நோக்கி செப்பனிட உதவும்.<br /><br />நூலகத்தின் மற்றொரு வாசகர் குழு பாடசாலையின் ஆசிரியர் சமூகமாகும். அடிக்கடி மாறும் சமூகச்சூழலுக்கு ஏற்ப கற்பிப்பதற்கு, கற்றல் என்பது அவரது அன்றாட நடவடிக்கையாக மாறவேண்டியது அவசியம். புதிய பாடத்திட்டமும் கல்வியின் நோக்கங்களும் ஆசிரியர்களை மாணவர்களாகும்படி நிர்ப்பந்திக்கின்றன என்றால் அவர்கள் செல்ல வேண்டிய பள்ளிக்கூடம் நூலகமே. புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளையின் வார்த்தைகளில் சொல்வதானால் ஆசிரியர் என்பவர் நிரம்பிய கல்வி,,ஆழமான அறிவு விசாலமான ஆராய்ச்சி, பரந்த மனப்பான்மை உயர்ந்த கொள்கை, சூழலைப் பயன் செய்தல் தேசிய நோக்கம் முதலிய பலகருத்துக்களை உள்ளடக்கிய ஷசூழ்ந்த பார்வை கொண்டவர்ஷ இத்தகைய சூழ்ந்த பார்வைக்கு அவர் நூலகத்தின நிரந்தர வாசகராக மாறவேண்டியது அவசியமாகும். ஷ21ம் நூற்றாண்டின் ஆசிரியருக்கு தமது மாணவர்களிடையே காணப்படும் அடிப்படை நிபுணத்துவங்கள், படைப்பாற்றல் திறன் மாற்றம் அல்லது புதமை காணல் என்பவற்றின் சிறப்பம்சங்கள் பல்துறைப்புலமை, மாறும் நிலைக்கேற்ப அமைதல் விமர்சனப்பாங்கு, பிரச்சனைகளை இனங்காணல் மற்றும் தீர்ப்புத் திறமை என்பன பற்றிய ஆற்றல் இருக்க வேண்டும்ஷ என்ற யுனெஸ்கோவின் அறிக்கையும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்;கது.<br /><br /><br /><br /><br />நூல்கள் <br /><br />நூல்களை உள்ளடக்கம் உருவமைப்பு என்ற இரு பிரதான பிரிவுகளுக்குள் நோக்குதல் பொருத்தமானது.<br /><br /><br /><br /><br />உள்ளடக்கம்.<br /><br />• மனிதனின் ஆய்வு முயற்சிகள் அறிவுப் பிரபஞ்சத்தில் புதுப்புதுத் துறைகளை தோற்றுவித்ததுமல்லாமல் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற எத்தனையோ பொருட்துறைகளை ஒன்றிணைத்து எது கலை? எது அறிவியல்? என்று பிரித்தறியாதபடி புதிய பொருட்துறைகளை உருவாக்கியுள்ளது. எமது முதல் தலைமுறையினருக்கு கணினி அறிவியல் என்ற புதிய துறை இருந்ததோ உயிரியலும் தொழினுட்பவியலும் இணைந்து தோற்றம் பெற்ற உயிர்த்தொழினுட்பவியல் துறையோ தெரியாது.<br /><br />• ஆய்வுத்துறைகளின் வளர்ச்சி நூல்களின் உள்ளடக்கத்திலும் பலதரப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தியதன் காரணமாக இன்று நூல்கள் என்ற பதத்துக்குள் அறிக்கைகள் ஆராய்ச்சி நூல்கள்,நியமங்கள் காப்புரிமைகள்,சிறுநூல்கள் செய்திக்கடிதங்கள் பருவ இதழ்கள் தொடர் வெளியீடுகள் என நூல்களின் வடிவங்களில் ஏற்படும் மாற்றங்களை உள்வாங்கும் அறிவு நூலகரிடம் எதிர்பார்க்கப்படுகிறது.<br /><br />• மனிதனின் இன்றைய ஆய்வுகள் நேற்று உண்மை என நிறுவியதை பொய்யாக்கிவிடும் சந்தர்ப்பங்கள் அதிகமாக இருப்பதனால் நூலக சாதனங்களுக்குள் உண்மையானவற்றையும் பொய்யானவற்றையும் பிரித்தறிய வேண்டிய அறிவு நூலகருக்கும் வாசகருக்கும் இன்றியமையாததாகிறது.<br /><br />• அச்சுப் பொறி தொடங்கி இன்றைய கணினித் தொழினுட்பம் வரை மனிதனின் அச்சிடுதல் தொழினுட்ப வளர்ச்சி தொகை ரீதியான அதிகரிப்புக்கு வழிகோலி நூல்களைத் தேடும் பணியை சிக்கலாக்கியுள்ளது.<br /><br />• நூல்கள் புனிதமானவை. எனவே நல்லதை, தேவையானதை மட்டுமே பதிந்து வைக்க வேண்டும் என்ற மனிதனின் மனப்பாங்கு மாறி இலாபம் தரும் உற்பத்திப் பொருளாக கருதும் மனப்பாங்கு உருவாகியதன் விளைவாக எதனையும் எப்படியும் அச்சிடலாம் என்ற வகையில் அதிகரித்த மலினப்பதிப்புகளின் உற்பத்தியானது சூழல் மாசடைதல் போல் தகவலிலும் மாசடைதலை உருவாக்கியிருப்பதன் காரணமாக தீயவற்றுக்குள் நல்லதைத் தேடிப்பிடிக்க வேண்டிய அறிவை வாசகனிடம் கோரி நிற்கிறது.<br /><br />• நூல்கள் பலதரப்பட்ட மொழிகளில் வெளியிடப்படும் அதேசமயம் வாசகர் ஒன்றிரண்டு மொழிகளிலேயே பரிச்சயமாக இருத்தல் சாத்தியம் என்பதால் உலக அறிவை அனைவரும் அணுகத் தக்க வகையிலான பொது திட்டம் ஒன்று நூலகம் சார்ந்து உருவாக்கப்பட வேண்டியதாகிறது.<br /><br /><br /><br /><br />உருவமைப்பு<br /><br />• பார்த்தல் கேட்டல் படித்தல் சிந்தித்தல் கற்றல் என்ற ஒழுங்குமுறையில் பாடத்திட்டத்துக்கு பொருத்தமான நூல்கள் மட்டுமன்றி மாணவப் பருவத்தின் தேடலூக்கத்துக்கு உதவுக்கூடிய அனைத்து சாதனங்களையும் கட்டியெழுப்பவேண்டிய பணி நூலகத்துக்குண்டு.<br /><br />• ஏன் எதற்கு எப்படி யார் போன்ற கேள்விகளுக்கு விடை தரக்கூடிய கலைக்களஞ்சியங்கள், ஆண்டு நூல்கள், அகராதிகள், வாழ்க்கை வரலாற்று நூல்கள் போன்றவை பாடசாலை நூலகம் ஒன்றின் பிரதான சாதனங்களாக இருத்தல் இன்றியமையாததாகும்.<br /><br />• படித்தல் என்பதைவிட பார்த்துச் செய்தல் என்பதே மாணவப்பருவத்தின் இயல்பு என்பதற்கமைய மாணவர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய படத்துணுக்குகள் காட்சி வில்லைகள் ஒலி,ஒளிப் பதிவுகள் போன்ற கட்புல செவிப்புல சாதனங்களும், தேசப்படங்கள் படங்கள் ஒளிப்படங்கள் வரைபுகள் மாதிரி உருவமைப்புகள் சுவரொட்டிகள் போன்ற வரையுருவ சாதனங்களும் நூலக சேர்க்கையில் இருப்பது மிக முக்கியமானதாகும்..<br /><br />• இன்றைய தகவல் சமூகத்துடன் இணைந்து போகக்கூடிய வகையில் கணினி அறிவு, இணையப் பயன்பாடு பல்லூடக வசதிகள் உள்ளடங்கிய இலத்திரனியல் சாதனங்கள் உள்ளடக்கப்படல் வேண்டும்<br /><br /><br /><br /><br />நூலகர்<br /><br />நூலகம் என்பது நூல்கள் நூலகர்,வாசகர் என்பதன மூவுரு என்றால் இங்கு நூல்களையும் வாசகனையும் பொருத்தமான முறையில் இணைத்து விடுதல் என்னும் பணி நூலகரைச் சார்ந்தது. இங்கு இணைத்து விடுதல் என்பது ஷபொருத்தமான நூலை அதற்கு பொருத்தமான வாசகனிடம் பொருத்தமான நேரத்தில் பொருத்தமான முறையில் இணைத்துவிடுதல்ஷ என்னும் உட்பொருள் கொண்டது. இதற்கு வாசகனது வயது, அவனது தேவைகள், வாசகனது மனப்பாங்கு என்பனவும் நூல்களின் உருவமைப்பு முதற் கொண்டு உள்ளடக்கம் வரையிலான அறிவும் அவருக்கு அவசியமானது. வாசகனுக்கு தேவைப்படும் நூலை அவனுக்கு தேவைப்படும் நேரத்தில் கொடுப்பதற்கு நூலக சாதனங்கள் அனைத்தும் தொட்டவுடன் எடுக்கக்கூடிய வகையில் ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் அவசியமாகும். மாணவர்களது வயது அறிவுத் தரம் ஆர்வம் என்பவற்றின் அடிப்படையிலும் ஆசிரியர்களது தேவைகளது அடிப்படையிலும் மேற்கொள்ளப்படக்கூடிய பாரபட்சமற்ற நூல் தெரிவு, தன்னலமற்ற சேவை, பலதரப்பட்ட வாசகனது தகவல் தேவைகளையும் நினைவில் இருத்திக் கொள்ளக் கூடிய பல்பரிமாண நினைவாற்றல், வாசகர்களது குணநலன்களின் அடிப்படையில் எல்லோரையும் கருத்தில் கொள்ளக்கூடிய வகையிலான அநுதாப மனப்பாங்கு, பலதரப்பட்ட வாசகர்களது சுபாவங்களையும் எதிர் கொள்வதற்கான சாமர்த்தியம்,, வாசகனது அறிவுத் தேவையை பூர்த்தி செய்வதற்கு உதவக்கூடிய புலமைத்துவம், எல்லாவற்றுக்கும் மேலாக கடும் உமைப்பு ஆகிய ஏழு அம்சங்களும் ஒரு நூலகருக்கு இருக்க வேண்டிய சப்த ஒழுக்க தீபங்கள் என இந்திய நூலகவியல் அறிஞர் மிற்றல் கூறுவது இங்கு கருத்தில் கொள்ளப்பட வேண்டியதொன்றாகும். ஆனால் துரதிருஷ்டவசமாக நூலகப்பணி என்பது வேலை தேடுவோரின் இறுதி வாய்ப்பாகவே இன்றும் கருதப்படுகிறது. நுண்ணறிவு மிக்க வாசகனை திருப்திப்படுத்தும் அறிவாளியாக,எனக்கு ஒன்றுமே தெரியாது என்று நினைக்கும் தாழ்வுணர்ச்சியுள்ள வாசகனிடம் நல்லதோர் உளவியலாளராக, கூச்ச சுபாவமுள்ள வாசகனுக்கு நல்லதோர் வழிகாட்டியாக, ஷஎன்னை விட இவருக்கென்ன தெரியும்ஷ என நினைக்கும் எல்லாம் தெரிந்தவரையும்(?) பொறுத்துப்போகும் தத்துவவியலாளராக நூலகர்கள் புதிய யுகத்தில் மாறவேண்டிய தேவை உண்டு.<br /><br />நூலகர் தானாக மாறாது விடின் புதிய தகவல் யுகமானது அவர்களை மாறும்படி நிர்ப்பந்திக்கும். அல்லது மாற்றும். ஏனெனில் புதிய யுகம் வேண்டுவது நுவலும் நூலகரையே அன்றித் தூங்கும் நூலகரை அல்ல.<br /><br /><br /><br /><br />குறிப்புதவு நூல்கள்<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /> <br />MITTAL,R,L. Library Administration:Theory and Pratice.-Delhi:Metrapolitan,1978 <br />ANGRILLI,Albert and HELFAT,Lucile. Child Phychology.-Newyork:Barnes,1981. <br />RAY,Colin.Library services to school and children.-Paris:Unesco,1979.Srikanthaluxmyhttp://www.blogger.com/profile/02621345440975786756noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-14981721.post-33514514395638460272016-01-04T03:22:00.001-08:002016-01-04T03:22:29.685-08:00நூலக முகாமைத்துவம்: ஓர் அறிமுகம்<div style="text-align: center;">
<b>நூலக முகாமைத்துவம்: ஓர் அறிமுகம்</b></div>
<br />
<br />
<b>0.முன்னுரை</b><br />
<br />
ஓவ்வொரு நாட்டிலும் உள்ள எந்தவொரு நிறுவனத்தை எடுத்துக் கொண்டாலும் - அரச நிறுவனங்கள், தொழில் வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், சமூக சேவை நிறுவனங்கள் மற்றும் வேறு எவ்வகையான ஒரு நடவடிக்கையினை மேற்கொள்ளும் நிறுவனங்கள் - அங்கு முகாமைத்துவம் என்ற பதம் குறிக்கும் செயற்பாடுகளை நாம் கண்கூடாகக் காண முடியும். நிறுவனத்;தின் பல மட்டங்களிலும் கண்காணிப்பாளர்களையும், மேற்பார்வையாளர்களையும், நிர்வாகிகளையும், இயக்குநர்களையும் நாம் காண்கின்றோம். இவர்களது சிறப்புப் பணி என்பது நிறுவனத்தில் பணி புரியும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை, அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியில் அமர்த்தி, அவர்கள் பணிகளை வரையறுத்து அப்பணிகளை அவர்கள் செவ்வனே முடிக்கும்படி செய்து எல்லோருடைய பணிகளும் நிறுவனத்தின் பொதுக் குறிக்;கோளை நிறைவேற்றப் பயன்படுமாறு செய்வதேயாகும். இத்தகையதொரு பணி தான் முகாமைத்துவம் என்ற பொதுப் பெயரால் அழைக்கப்படுகின்றது.<br />
<br />
பொதுவாக முகாமைத்துவம் என்ற பதம் மேலாட்சி, மேலாண்மை, செயலாட்சி, நிர்வாகம் என்ற பல பெயர்களில் வௌ;வேறு ஆசிரியர்களால் உபயோகிக்கப்பட்டாலும் அதன் உண்மையான, பொரும்பாலோரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பதம் முகாமைத்துவம் ஆகும்.<br />
<br />
இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை முகாமைத்துவம் என்பது ஒரு கலையாகவே கருதப்பட்டது. தனிப்பட்டவர்களின் செயல் திறமாக, சிலருக்கே கைவந்த ஒரு கலையாக எண்ணப்பட்டது. ஆனால் முகாமைத்துவம் ஒரு கலையன்று; அது அறிவியல் துறையின் பாற்பட்டது தான் என்ற நிலை அண்மையில் உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் முகாமைத்துவம் அறிவியல் துறையின் பாற்பட்டது என்பதை ஏற்றுக் கொள்ளாத பலர் இன்றும் உள்ளனர் என்பதும் அதற்கு அவர்கள் கூறும் காரணமும் ஓரளவு பொருத்தமாகவே உள்ளதென்பதும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதொன்றாகும்.<br />
<br />
முகாமைத்துவம் சிலர் பால் கலைத்திறனாகவே மிளிர்கின்றது எனினும் எண்ணற்ற நிர்வாகிகள் தேவைப்படும் நவீன காலத்தில், பயிற்சியின் மூலம் நிர்வாகிகளை உருவாக்கிக் கொள்ள உதவுவது முகாமைத்துவ அறிவியல் முறையே எனலாம்.<br />
<br />
வீட்டை நிர்வகிக்கும் இல்லத்தரசி முதற்கொண்டு நாட்டை நிர்வகிக்கும் அரசு வரை முகாமைத்துவம் இன்றியமையாததாகின்றது. இந்த வகையில் ஒரு சமூக சேவையை அடிப்படையாகக் கொண்ட நூலகமும் இதற்கு விதி விலக்கல்ல. சுருங்கக் கூறின், எத்துறையாயினும், எத்தொழிலாயினும், பணியாளர்களின் எண்ணிக்கை ஒன்றுக்கு மேற்படும் போது, அங்கெல்லாம் முகாமைத்துவம் என்ற செயல்முறை தோன்ற வேண்டியுள்ளதுடன் அதுவே தவிர்க்க முடியாத ஒரு செயற்கருவியாக உருவெடுப்பதையும் நாம் காணலாம்.<br />
<br />
முகாமைத்துவக் கொள்கைகளை செம்மைப்படுத்தவும், விரிவு படுத்தவும், ஒவ்வொரு நாடும் முயன்றாலும், முகாமைத்துவத் துறையின் இத்துணை வளர்ச்சிக்கு அமெரிக்க நாடு தான் காரணம் என்றால் அது மிகையாகாது. டேலர் Taylor கில்பெர்த் Hilberth மேரி பார்க்கர் ஃபாலட் ஆParker and Ballet போன்ற வல்லுநர் இத்துறையை விரிவு படுத்தவும், செம்மைப்படுத்தவும் பெரிதும் உதவினர் என்பதும் இவ்வளர்ச்சியின் வாயிலாக முகாமைத்துவ கொள்கைகள் உலகெங்கும் பரவி பல்வேறு நிறுவனங்களாலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.<br />
<br />
<br />
<b>1.முகாமைத்துவம் - வரைவிலக்கணம் </b><br />
<br />
'செய்து முடிக்க வேண்டிய எந்தப் பணியையும் அதற்குரிய பணியாளர்களைக் கொண்டு செய்து முடிப்பதே முகாமைத்துவம் ஆகும்.'<br />
<br />
பொதுவாக முகாமைத்துவம் என்ற சொல்லுக்கு சரியான வரைவிலக்கணம் இதுவரை கொடுக்கப்படவில்லை என்றே கூறலாம். அப்படிக் கொடுக்கப்பட்ட வரைவிலக்கணங்கள் கூட எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஏனெனில், முகாமைத்துவம் என்பது தனிப்பட்ட ஒரு முகாமையாளர் (Manager) புரியும் பணிக்கு மேற்பட்டதாகும். முகாமைத்துவம் ஒரு செயற்பாங்கு. அதன் மூலம் ஒரு நிறுவனத்தின் சிறந்த நோக்கங்களை முகாமையாளர் அந்நிறுவனத்தின் பணி புரியும் பணியாளர்களின் பணிகள் மூலம் பெறுகின்றார். எனவே, எந்தவொரு நிறுவனம் தனது பணியாளர்களின் ஒத்துழைப்பின் மூலம் தன்னுடைய முக்கிய நோக்கங்களை சிறிதும் மாற்றமின்றி பெற விரும்புகின்றதோ அந்நிறுவனத்திற்கு முகாமைத்துவம் அவசியமாகின்றது. முகாமைத்துவக் கோட்பாடுகளைத் தொழில் நிறுவனங்கள் மட்டுமன்றி, தொழில் சார்பற்ற சாதாரண நிறுவனங்களும் அரசு துறைகளும் சமூக சேவை கல்வி நிறுவனங்களும் கடைப்பிடிக்க வேண்டும். இதையே முன்னாள் அமெரிக்க குடியரசுத் தலைவர் ரூஸ்வெல்ட் அவர்கள், 'முகாமைத்துவக் கோட்பாடுகளைக் கடைப்பிடியாத ஒரு அரசு மணலால் கட்டப்பட்ட வீடு போன்றது' எனக் குறிப்பிட்டார். முகாமைத்துவத்தின் சிறப்புத் தன்மைகளை விளக்கும் வகையில் அதற்குக் கொடுக்கப்பட்டுள்ள ஓரிரு வரைவிலக்கணங்களை நோக்குவோம்.<br />
<br />
<br />
(1) ஒரு குறிப்பிட்ட மனிதக் குழுவினுடைய நோக்கங்களை முடிவு செய்து, அலசியாராய்ந்து, அதனைச் செயற்படுத்துவதன் மூலம், அந்நோக்கங்களை அடையும் நுணுக்கமே முகாமைத்துவம் ஆகும்.<br />
- பீட்டர்சனும் பிளாமனும்.<br />
<br />
(2) நிறுவனத்தின் பணியாளர்களையும், வளங்களையும் கொண்டு தகுந்த திட்டங்கள் மூலமாகவும், ஒழுங்கமைப்பு மூலமாகவும், உரிய ஊக்குவிப்பு மூலமாகவும், தகுந்த கட்டுப்பாட்டின் படியும் அந்நிறுவனத்தின் நோக்கங்களை அறுதியிட்டு அவற்றை அடையவிழையும் ஒரு தனிப்பட்ட செயல்பாங்கே முகாமைத்துவமாகும்.<br />
- இராம முத்தையன்.<br />
<br />
<br />
<b>2.நூலக முகாமைத்துவம். </b><br />
<br />
நூலகம் என்பது சேவை ரீதியானதும் சிக்கல் நிறைந்ததுமான ஒரு அமைப்பாகக் கருதப்படுகின்றது. தொழில் நுட்ப முன்னேற்றத்தின் காரணமாக மனிதனுடைய அறிவு விரிவடைந்தால், அந்த அறிவுப் பசியைப் போக்குவதற்கு நூலகம் ஒத்துழைப்பு நல்க வேண்டியது மிகவும் அவசியமாகும். நூலகத்தில் கடமையாற்றுகின்ற ஊழியர்களும் உயர் கல்வித்தரம் உடையவர்களாக Academic Background அல்லது கல்வித் தரம் உடையவர்களாக Educational background இருப்பதால் நூலக அமைப்பின் முகாமைத்துவப் பாங்கு மற்றைய தொழில் ரீதியான அமைப்பில் இருந்தும் வேறுபட்ட தொன்றாக உள்ளது. முகாமைத்துவம் என்ற பதம் குறிக்கும் வரைவிலக்கணங்கள், கொள்கைகள், கோட்பாடுகள் யாவும் எல்லாவகையான நிறுவனங்களுக்கும் பொதுவானவையாக இருப்பதனால் இவை சமூக சேவையை அடிப்படையாகக் கொண்ட ஒரு நிறுவனமாகக் கருதப்படும் நூலகத்துக்கும் பொருத்தமானவையாக இருப்பதில் ஆச்சரியமில்லை. இந்த வகையில், நூலக முகாமைத்துவம் என்ற பதத்திற்கு அளிக்கப்படும் வரைவிலக்கணங்களும், விளக்கங்களும் கூட பொது முகாமைத்துவக் கோட்பாடுகளை <span style="font-family: "Times New Roman","serif"; font-size: 12.0pt; mso-ansi-language: EN-US; mso-bidi-language: AR-SA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-fareast-language: EN-US;">General management Principles</span><span style="font-family: Bamini; font-size: 12.0pt; mso-ansi-language: EN-US; mso-bidi-font-family: "Times New Roman"; mso-bidi-language: AR-SA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-fareast-language: EN-US;"> </span> அடிப்படையாகக் கொண்டவையே. இதன் அடிப்படையிலேயே கரட்டினுடைய நூலகவியல் கலைச்சொல் அகராதியில் நூலக முகாமைத்துவம் என்ற பதத்திற்குப் பின்வருமாறு வரைவிலக்கணம் கொடுக்கப் பட்டிருக்கின்றது.<br />
<br />
'நூலக சேவையில் இருந்து மிக உயர்ந்த நன்மையையும் பயன்பாட்டையும் பெறுவதற்கு மேற்கொள்ளப்படக் கூடிய முன்னுரிமைகளை ஒழுங்குபடுத்துதல், அலுவலர்களை ஊக்குவித்தல், நூலக வளங்களைப் பாதுகாத்தல், செயற்பாடுகளை மதிப்பிடுதல் முதலிய தொழில் நுட்பங்களின் செயல்திறன் முகாமைத்துவம் எனப்படும்.'<br />
<br />
எனவே நூலகத்தில் பணியாற்றும் சகல அலுவலர்களையும் ஒருங்கிணைத்து, தகுந்த திட்டமிடல், ஒழுங்கமைப்பு, ஊக்குவிப்பு, கட்டுப்பாடு என்பவற்றினூடாக நூலகத்தை பயன்படுத்தும் ஒவ்வொரு வாசகனையும் திருப்திப்படுத்தும் மிக உயர்ந்த நோக்கத்தை அடைய முயற்சி செய்யும் ஒரு செயற்பாடே நூலக முகாமைத்துவம் எனக் கூறலாம்.<br />
<br />
<br />
<b>3.முகாமைத்துவமும் நிர்வாகமும். </b><br />
<br />
நூலக முகாமைத்துவம் பற்றி ஆராய்வதற்கு முன் முகாமைத்துவத்திற்கும் நிர்வாகத்;துக்குமிடையிலுள்ள வேறுபாடுகளை விளங்கிக் கொள்ளுதல் அவசியமானது. ஏனெனில் முகாமைத்துவம், நிர்வாகம் ஆகிய இரு சொற்களும் பெருமளவில் ஆசிரியர்களால் பயன்படுத்தப்பட்டாலும் அதற்குரிய தெளிவான இலக்கணம் இதுவரை கொடுக்கப்படவில்லை என்றே கூறலாம். பெரும்பாலான ஆசிரியர்கள் இவ்விரு சொற்களையும் ஒரே பொருள்பட பயன்படுத்துகின்றார்கள். ஆனால் இரு சொற்களும் மிகவும் வேறு பட்டவை. நிர்வாகம் மனிதர்களுடைய நடவடிக்கைகளை பொதுவாகக் கட்டுப்படுத்துகின்றது. ஆனால் முகாமைத்துவம் தொழிலில் ஈடுபட்டுள்ள அலுவலர்களின் நடவடிக்கைகளை மட்டும் கட்டுப்படுத்துகின்றது. நிர்வாகம் என்பது ஒரு நிறுவனத்தின் நோக்கங்களையும் கோட்பாடுகளையும் முடிவு செய்வதாகும். செயல்முறைப்படி வகுக்கின் நிர்வாகம் என்பது ஒரு நிறுவனத்தி;ன் நோக்கங்களை அடைவதற்கான எல்லா வழிமுறைகளையும் நிர்ணயம் செய்வதாகும். அவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்ட நோக்கங்களை மனிதத் திறமையினை இயக்குவதன் மூலம் அடைய முற்படுவதே முகாமைத்துவமாகும். சுருங்கக்கூறின் நிர்வாகம் என்பது முடிவாக்கலில் ஈடுபடுகிறதென்றும், முகாமைத்துவம் அம்முடிவுகளை செயல் படுத்துகிறதென்றும் குறிப்பிடலாம். ஒரு சில நிறுவனங்களில் இவ்விரு பணிகளும் ஒரே நபரால் செய்யப்படினும் இவ்விரு பணிகளும் தனித்தனித் தன்மை வாய்ந்தவை.<br />
<br />
<br />
<b>4.நூலக முகாமைத்துவத்தின் தோற்றமும் வளர்ச்சியும். </b><br />
<br />
பண்டு தொட்டே முகாமைத்துவம் மனித நடவடிக்கைகளை செம்மையாக நடத்திட உறுதுணையாக இருந்திருக்கின்றது. பிறரை வேலைக்கமர்த்தி, தாம் விரும்பிய திட்டங்களை நிறைவேற்றும் போதெல்லாம், சமூகத் தலைவர்களும், குழுத்தலைவர்களும், நிறுவனத் தலைவர்களும், தொழில் முதலாளிகளும் முகாமைத்துவம் என்ற கருவியையே கையாள வேண்டியிருக்கின்றது. பணியில் ஈடுபடுத்தப்படு;ம் ஆட்களின் எண்ணிக்கை அதிகரி;க்க முகாமைத்துவத்தில் சிக்கல்களும் நுண்முறைகளும் வளரத் தொடங்கின. இந்த வகையில் நூலக முகாமைத்துவத்தின் ஆரம்ப காலத்தையும் நோக்குதல் நன்று.<br />
<br />
ஆதி காலத்தில் நூலகம் என்பது வெறுமனே நூல்களைப் பாதுகாத்து வைக்கும் களஞ்சியம் எனப்பட்டது. நூல்கள் பாவனைக்குட்படுத்தப்படுவதைப் பற்றிய உணர்வு நூலகருக்கோ அவரைச் சார்ந்தவர்களுக்கோ இருக்கவில்லை. அது மட்டுமன்றி நூல்கள் யாவும் அலுமாரிகளில் வைத்துப் பூட்டப்பட்டோ அல்லது மேசையுடன் சங்கிலி மூலம் பிணைக்கப்பட்டோ காணப்பட்டன. ஆனால் மனிதனது சிந்தனா சக்தி வளரத் தொடங்கவும் நூல்களைப் பற்றிய அறிவும் அவற்றைப் பாவிப்பதற்குரிய உணர்வும் மனிதனிடத்தில் வளர்ந்த போது தான் அலுமாரிகளில் வைத்துப் பூட்டப்பட்டிருந்த நூல்களைத் திறந்த தட்டுகளில் வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அத்துடன் வாசகர் நூல்களைத் தாமே தெரிவு செய்யவும் அதனை இரவல் எடுத்துச் செல்லவும் முடிந்தது. எனினும் நூலகர் வெறுமனே இரவல் கொடுத்து மீளப் பெறுதலையே கடமையாகக் கொண்டிருந்த நிலையில் நூலக முகாமைத்துவத்தின் அவசியம் அங்கு உணரப்படவில்லை. தற்காலத்தில் நூலகமானது சமுதாய, கலை, கலாச்சார வளர்ச்சியை ஊக்குவிக்கின்ற ஒரு நிறுவனமாக விளங்குவதுடன் வாசகர்களுக்கு வேண்டிய சகலவிதமான சேவை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும் பொறுப்பு வாய்ந்ததாக இருக்கின்றது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மனிதனின் சிந்திக்கும் ஆற்றல் அதிகரித்ததுடன் நவீன நுண்ணிய ஆய்வுகளையும் பரிசோதனைகளையும் அவன் மேற்கொண்டதன் விளைவாக நூல்களின் எண்ணிக்கையிலும் தரத்திலும் மிகப்பெரியளவிலான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.<br />
<br />
ஒரு விடயத்தைப் பற்றி பல்வேறு விதமான நூல்கள், அறிக்கைகள், ஆய்வுக்கட்டுரைகள், பரிசோதனை முயற்சிகள் வெளியாகத் தொடங்கியதுடன் நூல்களைத் தட்டுக்களில் பிரித்து வகைப்படுத்தி அடுக்குவதிலும் அதனை வாசகர் எந்த சிரமமுமின்றித் தெரிவு செய்து உபயோகிப்பதிலும் சிக்கல் ஏற்படத் தொடங்கியது. அத்துடன் வாசகரிடமிருந்து வெளிப்படும் பல்வேறு வகையான வினாக்களுக்கு விடையிறுக்கும் பொறுப்பும் நூலகருக்கு ஏற்பட்டது. எனவே தொழில்நுட்ப வளர்ச்சி நூலகத்துறையில் அளப்பரிய மாற்றத்தை ஏற்படுத்தியதுடன் நூலக முகாமைத்துவத்தின் அவசியத்தையும் உணர வைத்தது. நூலகம் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு (பகுப்பாக்க, பட்டியலாக்கப்பகுதி, பருவ இதழ் பகுதி, நூல் கொள்வனவுப்பகுதி, அரசாங்க ஆவணப்பகுதி, வாசகர் சேவைப்பகுதி போன்ற) செயல்படத் தொடங்கவும் நூலக அலுவலர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கவும் நிர்வாகத்தை திறம்பட நடாத்துவதில் நூலகர் சிரமப்பட வேண்டியிருந்தது. இத்தகைய ஒரு சூழ்நிலையில் தான் மற்றைய தொழில்துறைகளைப் போன்று முகாமைத்துவக் கோட்பாடுகளை நூலகத்துறைக்கும் பயன்படுத்த முடியும் என்ற உணர்வு ஏற்பட்டது. இந்த வகையில் நூலக முகாமைத்துவத்தின் வளர்ச்சியை நூலகங்களில் பண்டு கொள்ளக்கூடியதாக இருப்பதுடன் வாசகரின் தேவையைப் பூர்த்தி செய்யவும், நூலகத்தின் நோக்கங்களையும் கொள்கைகளையும் அமுல் படுத்தவும் நூலக முகாமைத்துவம் மிகவும் உறுதுணையாக அமைந்துள்ளமையை நாம் காணலாம்.<br />
<br />
<br />
<b>5.நூலக முகாமைத்துவத்தின் சிறப்புத் தன்மைகள்.</b><br />
<br />
ஓவ்வொரு முகாமைத்துவத்துக்கும் ஒரு குறிப்பிட்ட நோக்கம் இருத்தல் வேண்டும். அந்நோக்கம் வெளிப்படையாகக் குறிப்பிடலாம். அல்லது குறிப்பிடப்படாமலும் இருக்கலாம். இந்த வகையில் நூலக முகாமைத்துவத்திற்கும் ஒரு குறிப்பிட்ட நோக்கம் இருத்தல் வேண்டும். நூலக முகாமைத்துவத்தின் வெற்றி, அது தனது நோக்;கங்களை எந்தளவிற்கு அடைந்து கொள்கின்றது என்பதன் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகின்றது. அன்றி நூலகத்தில் பணிபுரியும் அலுவலர்களின் எண்ணிக்கையில் அல்ல. தேவைப்படும் அலுவலர்களின் எண்ணிக்கையைக் கருத்திற் கொள்ளாது, இருக்கின்ற அலுவலர்களைக் கொண்டு சிறந்ததொரு சேவையை ஒரு நூலகமானது அதனுடைய வாசகர்களுக்கு வழங்க முடியுமானால் அது வெற்றி என்றே கூறலாம்.<br />
<br />
மனிதனுடைய முழுத் திறமையையும் பயன் படுத்துவது முகாமைத்துவம் ஆகும். ஒரு நூலகர் சிறந்த முகாமைத்துவத்தின் மூலம் நூலகத்தில் பணி புரியும் அலுவலர்களை அவர்கள் ஆண்களாயினும் சரி பெண்களாயினும் சரி நன்முறையில் ஊக்குவித்து அவர்களது திறமையைப் பெருக்கிச் செயலாற்றும்படி செய்ய முடியும்.<br />
<br />
ஒரு நூலகத்தின் நோக்கங்கள் அந்நூலகத்தில் பணி புரியும் சகலரதும் ஒருங்கிணைந்த பணிகளின் மூலம் தான் அடையப்பட முடியுமே தவிர, தனிப்பட்ட அலுவலர் ஒருவரது பணியால் அல்ல. இவ்விதம் நூலக அலுவலர்களை ஒரு குழுவாக ஒருங்கிணைப்பதன் மூலம் அலுவலர்களின் திறன் மிகுதியடைந்து பணிகள் திறமையாகச் செய்யப்படுகின்றன. எனவே தான் நூலக முகாமைத்துவம் அலுவலரின் ஒருங்கிணைந்த குழுவிற்கு முக்கியத்துவம் அளிக்கின்றது.<br />
<br />
ஒரு நூலகத்தின் பணிகள் எல்லாவற்றையும் அந்த நிறுவனத்தின் தலைவரே செய்வதென்பது இயலாத காரியம். எனவே, நூலகர் தானே நேரடியாகச் செயற்படாது அப்பணிகளை பிற அலுவலர்கள் அல்லது ஊழியர்கள் செம்மையாகச் செய்யும்படி இயக்குவித்தல் வேண்டும். ஒரு நூலகரினது வெற்றி, பிற ஊழியர்களின் மூலம் நூலகத்தின் நோக்கங்களை அவர் எந்த அளவில் அடைகின்றார் என்பதன் அடிப்படையிலேயே அமைந்துள்ளது எனக் கூறலாம்.<br />
<br />
ஒரு பணியை நூலகர் தாமே செய்வதற்கும் பிறரை செய்வதற்குத் தூண்டுவதற்கும் அதிக வேறுபாடு உள்ளது. ஒரு குறிக்கப்பட்ட இலக்கை அடைவதற்கு தொழில்நுட்ப அறிவு தேவை எனினும் அது முகாமையாளர்களுக்கு இன்றியமையாததாகக் கருதப்படுவதில்லை. தங்களின் கீழ் பணியாற்றும் இதர அலுவலர்களின் தொழில்நுட்ப அறிவை செம்மையான முறையில் பயன்படுத்த வேண்டியது இவர்களின் கடமையாகும். எனவே சிறந்த முகாமைத்துவம் என்பதும் பிறருடைய திறமையை உரிய முறையில் பயன்படுத்துவதேயாகும்.<br />
<br />
முகாமைத்துவம் என்பது தொட்டுணர முடியாததொரு நடவடிக்கை. இதனை யாரும் பார்க்கவோ தீண்டவோ முடியாது. முகாமைத்துவத்தின் இருப்பு, அந்நிறுவனத்தின் செம்மையான செயற்பாட்டின் மூலமே அறியப்பட முடியும்.<br />
<br />
முகாமைத்துவத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் நிறுவனத்தின் உரிமையாளர் அல்லர். ஒரு சில நிறுவனங்களில் ஒருவரே முகாமையாளராகவும் உரிமையாளராகவும் இருப்பினும், பெரும்பாலான நிறுவனங்;களில் இவர்கள் வௌ;வேறு ஆட்களாகவே இருக்கின்றனர்.<br />
<br />
<br />
<b>6.நூலக முகாமைத்துவத்தின் முக்கியத்துவம். </b><br />
<br />
நூலக பாவனைக்காக ஒவ்வொரு வாசகனிடமிருந்தும் அறவிடப்படும் ஒவ்வொரு ரூபாவிற்குமான மிக உயர்ந்த பங்களிப்பை வழங்குவதன் மூலம், ஒரு நூலகமானது வாசகனைத் திருப்திப்படுத்தும் பொறுப்பு வாய்ந்ததாகவுள்ளது. நூலகமானது வளர்ச்சியடைந்து வருகின்ற ஒரு நிறுவனமாகவிருப்பதனால் அதற்கு வருடாந்தம் மேலதிக நிதி தேவைப்படுகின்றது. நூலகத்தின் மேலதிக நிதித் தேவைக்கான காரணத்தை ஒவ்வொரு வாசகனும் அறிந்து கொள்வதில் விருப்பமுடையவனாக இருக்கலாம். அவன் மட்டுமன்றி அனுபவம் வாய்ந்த நூலகத்துடன் தொடர்புள்ள அதிகாரிகள் கூட வெறுமனே புகழ் மாலைகளை விடத் தொகை ரீதியாகவும் உண்மையானதுமான தரவுகளிலேயே கூடிய கவனம் செலுத்துகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் விஞ்ஞான முகாமைத்துவம் என்பது ஒரு நூலகர் மேலதிக நிதியை அவர் விரும்பியவாறு பெறுவதற்குரிய உண்மையானதும், தொகைரீதியானதுமான தரவுகளை வழங்கக் கூடிய அறிவை, அபிவிருத்தி செய்வதற்கு உதவுகின்றது எனலாம்.<br />
<br />
வழமையான வேலை முறைகளைச் சிறப்பாகச் செய்யக் கூடிய திறமையை அதிகரிப்பதற்கு நூலக முகாமைத்துவம் உதவுகின்றது. சாதாரணமாக ஒரு நூலகத்தினுடைய பெரும்பாலான வேலைகள் இயந்திரத் தன்மையுடையதாகவும் செய்வதையே திரும்பச்செய்தல் (ஒப்பித்தல்) என்ற தன்மை உடையதாகவும் இருப்பதுடன் அவை தொகை ரீதியான ஆய்வுக்கு வழிப்படுத்தப்படக் கூடியதாகவும் இருக்கின்றன. உதாரணமாக, கட்டளை அனுப்புதல் Ordering பட்டியலாக்கம், அட்டைகளைக் கோவைப்படுத்தல், நூல் கட்டுதல், சுழற்சி Circulation நூல் இருக்கைகளில் நூல்களை முறையாக வைத்தல் என்பன இதற்குள் அடங்கும். நூலக முகாமைத்துவம் என்பது இவ்வேலைகளை சிறப்பாகச்; செய்யக் கூடிய ஆற்றலை அதிகரிக்க உதவுகின்றது.<br />
<br />
விஞ்ஞான முகாமைத்துவம் என்பது, நவீன வேலைப்பகுப்பாக்கத்தின் திறவுகோலாகக் கருதப்படும் வேலைப்பகுப்பாய்வை Work analysis தருகின்றது. இதன் விளைவாக நூலகர் ஒரு அலுவலரிடமிருந்து எதை எதிர்பார்க்க முடியும். எதை எதிர்பார்க்க வேண்டும் என்பதைப் புத்தி சாதுரியத்துடனும் தெளிவுடனும் அறிந்து கொள்ள உதவுகின்றது.<br />
<br />
விஞ்ஞான முகாமைத்துவம் ஒரு நூலகர் நூலகத்தின் நிதி முறையை சிறப்பாகக் கொண்டு நடாத்த உதவுகிறது. ஓவ்வொரு பிரிவுக்குமுரிய தொழிற்பாடுகளுக்குமான நிதித்தேவையினை அவர் நன்கு அறிந்தவர் என்பதால் அவர் புத்தி சாதுரியத்துடன் வீண் விரயங்களைத் தவிர்க்கக் கூடியவராக இருப்பதுடன் சேவைப் பயன்பாட்டை அதிகரிக்கவும் அதன் மூலம் தன் வாசகருக்கு பூரண திருப்திகரமான சேவையை வழங்குவதற்கும் நூலக முகாமைத்துவம் உறுதுணையாக உள்ளது எனலாம்.<br />
<br />
நூலகருக்கும் அவரின் கீழ் கடமையாற்றும் இதர அலுவலர்களுக்கு மிடையேயான கருத்து வேறுபாடுகளையும் சிக்கல்களையும் களைந்து, உளமார்ந்த உறவினை உருவாக்க முகாமைத்துவம் அவசியமாகின்றது.<br />
<br />
முகாமைத்துவக் கோட்பாடுகள் வளர்ச்சியடைந்ததன் காரணமாக நூலகத்தில் கடமையாற்றும் அலுவலர்களுக்கு உரியமுறையில் பயிற்சி அளிக்கப்படுவதனால் நூலக சேவையைத் திறம்பட நடத்த நூலக முகாமைத்துவம் உதவியாகவுள்ளது.<br />
<br />
எல்லாவற்றிற்கும் மேலாக நூலகம் என்பது சமுதாய முன்னேற்றத்துக்கு பாடுபடும் ஒரு நிறுவனம் ஆகும். தனிப்பட்ட மனிதர்களின் சேவை என்பது இங்கு மிக முக்கியமானது. தனிப்பட்ட மனிதர்களின் திறமையை சமுதாய முன்னேற்றத்துக்காகப் பயன்படுத்த நூலக முகாமைத்துவம் மிகவும் இன்றியமையாததாகக் கருதப்படுகின்றது.<br />
<br />
<br />
<b>7.நூலக முகாமைத்துவத்தின் அடிப்படைக் கூறுகள். </b><br />
<br />
முகாமைத்துவத்தின் அடிப்படைக் கூறுகள் பற்றிப் பல்வேறு ஆசிரியர்களாலும் பல்வேறு கருத்துக்களும் விளக்கங்களும் முன்வைக்கப்பட்டிருப்பினும், லூதர் கூலிக் டுருவுர்நுசு புருடுஐஊமு என்பவரது முகாமைத்துவ அடிப்படைக் கூறுகள் பற்றிய விளக்கம் நூலக முகாமைத்துவத்திற்கு பொருத்தமாகவுள்ளது. இவர் குறிப்பிடும் முகாமைத்துவ அடிப்படைக் கூறுகள் நெகிழ்ச்சித் தன்மை வாய்ந்ததுடன் தேவைக்குத் தகுந்த வகையில் இவற்றை மாற்;றியமைத்து பயன்படுத்திக் கொள்ள முடியும். இவ்வடிப்படைக்கூறுகளை கூலிக் ஆங்கிலத்தில் Pழுளுனுஊழுசுடீ என்ற ஒரு சொல்லி;ல் ஒழுங்கு படுத்தியுள்ளார். அவை பின்வருமாறு:<br />
<br />
1.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>திட்டமிடல் Planning<br />
2.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>ஒழுங்கமைத்தல் Organising<br />
3.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>அலுவலர்களை நியமித்தல் Staffing<br />
4.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>இயக்குவித்தல் Directing<br />
5.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>ஒருங்கிணைத்தல் Coordinating<br />
6.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>அறிக்கை அனுப்புதல் Reporting<br />
7.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>திட்டப்பட்டியல் தயாரித்தல் Budgeting<br />
<br />
மேற்கூறப்பட்ட முகாமைத்துவ அடிப்படைக் கூறுகள் மட்டுமன்றி, கட்டுப்படுத்தல் Controlling செயலூக்கமளித்தல் Motivatingஎன்பனவும் நூலக முகாமைத்துவத்தின் சிறப்புக் கூறுகளாக அமைய முடியும்.<br />
<br />
<br />
<b>7.1.திட்டமிடல்</b><br />
<br />
முகாமைத்துவப் பணிகளில் மிக முக்கியமானது திட்டமிடல் ஆகும். ஒரு குறிப்பிட்ட குறிக்கோளை ஒழுங்கான முறையிலும் திறமையான வகையிலும் அடைய வேண்டுமெனின் அக்குறிக்கோளை எவ்வாறு சிறந்த வகையில் அடைவது என்பது பற்றி மிக ஆராய்ந்து திட்டம் ஒன்று வகுக்கப்படல் வேண்;டும். எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் திட்டமிடல் என்னும் சொல்லுக்கு வரைவிலக்கணம் கொடுத்தல் இயலாது. எனினும் ஜோர்ச் டெரி என்பவரது கீழ்க்காணும் வரைவிலக்கணம் ஓரளவிற்கு சிறந்ததாகவுள்ளது.<br />
<br />
'நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை ஒரு முகப்படுத்தி ஊகத்தின் அடிப்படையில் நிறுவனத்தின் நோக்கங்களை உரிய முறையில் அடைய, செய்ய வேண்டிய நடவடிக்கைகளைத் தீட்டுவது திட்டமாகும். எனவே திட்டமிடல் என்பது முக்கியமாக செயல்முறையை தேர்ந்தெடுத்தலையே குறிக்கின்றது. நோக்கங்களை அடைய பல மாற்று வழிகள் இருக்கும் நிலையில் தான் திட்டம் தீட்டலுக்கு அவசியம் எழுகின்றது. இவ்வகையில், ஒரு நூலகத்திலும், தலைமை நூலகரின் பிரதான கடமைகளில் ஒன்றாக திட்டமிடல் அமைகின்றது. நூலகத்திற்கு வரும் பல்வேறு தரப்பட்ட வாசகர்களையும் திருப்திப்படுத்தக் கூடிய சேவையை வழங்கும் மிகப் பொறுப்புள்ள கடமையைச் செய்யத் திட்டமிடல் உதவுவதால் நூலகத் திட்டமிடலுக்கு பரந்து பட்ட அறிவும் அனுபவமும் தேவைப்படுகின்றது.<br />
<br />
<br />
திட்டத்தின் கூறுகள். <br />
<br />
திட்டத்தின் கூறுகளைப் பின்வருமாறு குறிப்பிடலாம்.<br />
<br />
1.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>நோக்கங்கள் ழுடிதநஉவiஎநள<br />
2.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>கொள்கை முறைகள் Pழடiஉநைள<br />
3.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>வரையளவு ளுவயனெயசன<br />
4.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>செயல்முறை Pசழஉநனரசந<br />
5.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>நிகழ்ச்சிமுறை Pசழபசயஅஅந<br />
6.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>திட்டப்பட்டியல் டீரனபநவ<br />
7.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>முறை ஆநவாழன<br />
8.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>நடைமுறைத் திறம் ளுவசயவநபல<br />
<br />
திட்டமிடலில் அடங்கியுள்ள படிகள்.<br />
<br />
1.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானித்தல்.<br />
2.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>நோக்கங்கள் ஏன் செய்யப்பட வேண்டும்.<br />
3.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>அதை எப்படி, எங்கே, எப்போது, யார் செய்தல் என்பதைத் தீர்மானித்தல்.<br />
4.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>திட்டத்தின் காலம், திட்டத்திற்குத் தேவையான பணியாளர், எதன் மூலம் திட்டத்தினை செயற்படுத்த வேண்டும், திட்டத்தின் சாதனங்கள் ஆகியவற்றை நிர்ணயம் செய்தல்.<br />
5.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>செயலின் விளைவை எவ்வாறு மதிப்பீடு செய்தல் என்பதை நிர்ணயித்தல்.<br />
<br />
7.2.ஒழுங்கு அமைத்தல்.<br />
<br />
ஒரு நிறுவனத்தின் நோக்கங்களை உரிய முறையில் அடையும் வகையில் அந்நிறுவனத்தின் உள்துறைகளை உரிய முறையில் அமையச் செய்வதே ஒழுங்கு அமைப்பு ஆகும். திட்டம் தீட்டியபின், அதைச் செயற்படுத்தும் வகையில் தேவையான நூல், உபகரணங்கள் வாங்குவதும், பணியாளர்களை வேலையில் அமர்த்துவதும் நிறுவனத்தைப் பல துறைகளாகப் பிரிப்பதும் இன்றியமையாதவையாகும். உதாரணமாக, ஒரு நூலகத்தில் பல்வேறு வகையான பிரிவுகள் உண்டு. அவ்வாறே ஊழியர், நூலகக் கவனிப்பாளர், நூலக உதவியாளர், உதவி நூலகர், சிரேஷ்ட உதவி நூலகர் எனப் பலதரப்பட்ட அலுவலர்களும் உள்ளனர். எனவே நூலகத்தைப் பல பிரிவுகளாகப் பிரித்தல் ஒவ்வொரு பிரிவுகளுக்கும் ஏற்ற வகையில் அலுவலர்களை நியமித்தல் என்ற பல்வேறு பணிகளையெல்லாம் ஒன்று திரட்டிச் சுருக்கமாகக் கூறுதலே ஒழுங்கு அமைப்பாகும்.<br />
<br />
7.3.அலுவலர்களை நியமித்தல்.<br />
இது அலுவலர்களை நூலகத்திற்குச் சேர்த்துக் கொள்வதனையும் அவர்களை நூலகத்தின் பல்வேறு பிரிவுகளிலும் சேவைக்கு அமர்த்துவதனையும் குறிக்கும். உதாரணமாக, நூலகத்தின் ஒரு பிரிவான பட்டியலாக்கம் பகுப்பாக்கப் பிரிவை எடுத்துக் கொண்டால் அங்கு துறைக்குப் பொறுப்பான உதவி நூலகர் அவரின் கீழ் கடமையாற்றும் நூலக உதவியாளர், நூலகக் கவனிப்பாளர், தொழிலாளர் எனப் பல தரப்பட்ட பிரிவினர் உள்ளனர். இவ் ஒவ்வொரு பிரிவுக்கும் தேவையான பணிகளை வரையறுப்பதும் அவர்;களுக்குரிய பயிற்சியளிப்பதும் அவர்களின் அடிப்படைக் கல்வித்தகைமைகளுக்கு ஏற்ப அவர்களது உத்தியோகத்தை வரையறுப்பதும் நூலக நிர்வாகத்தின் கடமையாக இருப்பதனால் அலுவலர்களை நியமித்தல் என்ற முகாமைத்துவ அடிப்படை கூறு நூலக முகாமைத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது எனலாம்.<br />
<br />
7.4.இயக்குவித்தல்.<br />
<br />
இயக்குவித்தல் என்னும் செயல்முறை நூலகருக்குக் கீழ் கடமையாற்றும் அலுவலர்களுக்கு வழிகாட்டுதலையும் அவர்களின் பணிகளை மேற்பார்வை செய்தலையும் குறிக்கின்றது. இதனை மேல் நோக்காகப் பார்க்கும் போது எளிமை வாய்ந்ததாகத் தோன்றினாலும் நடைமுறையில் சிக்கல் வாய்ந்ததாகும். ஓவ்வொரு நிறுவனத்தின் முகாமையாளரும், தன் கீழ் கடமையாற்றும் அலுவலர்கள் ஒவ்வொருவரும் நிறுவனத்தின் சட்டம், ஒழுங்குமுறை ஆகியவற்றைக் கடைப்பிடிக்கும் வகையில் வழிகாட்டல் வேண்டும். அலுவலர் ஒவ்வொருவரும், தாம் பணி புரியும் நிறுவனத்தின் அமைப்பு முறையையும், துறைகளுக்கு இடையே உள்ள உறவு முறையையும், ஒவ்வொரு துறையினதும் பணிகளையும், தமது பணிகளையும், ஆணை உரிமைகளையும் நன்கு அறிந்து கொள்வார்களேயானால் முகாமையாளரின் இயக்குவிக்கும் பணி என்பது இலகுவானதாகின்றது.<br />
<br />
7.5.ஒருங்கிணைத்தல்.<br />
<br />
ஒரு செயலுக்கான திட்டத்தை வகுத்து விட்டால் மட்டும் குறிக்கோளை நிச்சயமாக அடைந்து விட முடியும் என்ற உறுதி ஏற்பட்டு விடாது. ஒரு நிறுவனத்தில் உள்ள அலுவலர்களின் கூட்டான ஒருமித்த முயற்சியின் மூலமே குறிக்கோளை அடைய முடியும். தனிப்பட்ட ஒவ்வொருவரினதும் முயற்சிகள் ஒருங்கிணைக்கப்படும் போது தான் இவர்கள் ஒவ்வொருவரின் முயற்சியும் மற்றவரின் முயற்சிக்கு ஆதரவாக அமைவதாக இருக்கும். தனி நபர்களின் தனி முயற்சிகள் ஒருங்கிணைக்கப்படாவிடில் இவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தனிப்பட்ட பணிகளை மட்டுமே கருத்தில் கொண்டு செயலாற்றும் போது தங்களது சக அலுவலர்களின் முயற்சிகளை இழக்கவோ தடுக்கவோ கூடும். ஆகவே ஒவ்வொரு அலுவலரும் ஒரு குழுவாகக் கூட்டார்வத்துடன் செயலாற்றுமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது நிர்வாகத்தின் பொறுப்பாகும்.<br />
<br />
7.6.அறிக்கை அனுப்புதல். (சுநிழசவiபெ)<br />
<br />
அறிக்கை அனுப்புதல் என்ற செயல்முறையின் கீழ் நிறுவனத்தின் உரிமையாளருக்கு அவ்வப்போது நிறுவனத்தில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பது பற்றி அறிவித்தல், நிறுவனத்தின் நடவடிக்கைகளை பதிவேடுகள் மூலமும், ஆய்வுகள் மூலமும், தெரியப்படுத்துதல் என்பன அடங்கும். பதிவேடுகளின் மூலம் தலைமை நூலகர் நூலகத்தின் சிறந்த செயல்பாடுகளைத் தனது பொறுப்பதிகாரிக்குத் தெரியப்படுத்த முடியும். அது மட்டுமன்றி இத்தகவல்களைக் கொண்டு நூலக சேவையின் பயன்பாட்டையும் அவரால் மதிப்பிட முடியும்.<br />
<br />
7.7.திட்டப்பட்டியல் தயாரித்தல்.<br />
<br />
திட்டப்பட்டியல் தயாரித்தல் என்பது மிகவும் பயன்பாடுடைய முகாமைத்துவக் கருவியாகும். கவனமாகத் திட்டமிடல், கணக்கியல், கட்டுப்படுத்தல் என்பன திட்டப்பட்டியலில் மிகவும் அவசியமானது. தலைமை நூலகர் என்பவர் நூலகத்தின் தேவைகளைத் தொடர்ச்சியான அடிப்படையில் பரீட்சிக்க வேண்டியிருப்பதுடன் அதற்கேற்ற நிதியையும் பெறுவதற்கு முயற்சி செய்தல் அவசியம்.<br />
<br />
7.8.கட்டுப்படுத்தல்.<br />
<br />
கட்டுப்பாடு செய்தல், திட்டப்படி நடைபெற வழிவகுக்கின்றது. ஒரு முகாமையாளர் இதர பணிகளை உரிய முறையில் செவ்வனே செய்வாரானால், அவரைப் பொறுத்த வரை இப்பணி தேவையற்றது. ஆனால் தவறு செய்வது மனித இயல்பு என்பதற்கேற்ப பணியாட்கள் ஒரு சில தவறுகள் புரியலாம். புணியாளர்களுக்கிடையே உள்ள மன வேற்றுமை காரணமாகத் திட்டம் சரியாகச் செயற்படுத்தப் படாமல் போகலாம். திட்டம் பழைய தன்மை வாய்ந்தாக மாறலாம். இவை யாவும் தடுக்கப்பட்டு ஆரம்ப நிலையிலேயே சரி செய்யப்படாவிடில் நிறுவனம் மிக அதிமாகப் பாதிக்கப்படலாம். எனவே தான் கட்டுப்பாடு ஒவ்வொரு நிறுவனத்தின் ஆரம்பப் பகுதியிலும் மிக அவசியமாகின்றது. கட்டுப்பாட்டின் மூலம் திட்டத்தின் எந்த இடத்தில் தவறு நிகழ்ந்தது என்பதையும் அத்தவறுக்குப் பொறுப்பானவர் யார் என்பதையும் அறிந்து, தவறுகள் திருத்தப்படுகின்றன. இன்றைய நிலையில் கட்டுப்பாடு என்பது இன்றியமையாதது ஆகின்றது.<br />
<br />
<br />
7.9.செயல் ஊக்கம் அளித்தல்.<br />
மற்றவர்களின் பணியை மேற்பார்வை செய்வதென்பது அதிகாரம் செலுத்துவது என்பதன்று. அவர்களுக்கு உரிய ஒத்தாசை வழங்கி, ஊக்கமளித்து அவர்களின் பிரச்சினைகளில் அக்கறை காட்டி அவற்றை தீர்ப்பதற்கு தக்க ஆலோசனை கூறி வழிகாட்டியாயிருந்து, அவர்களுக்குத் தலைமை ஏற்கும் பணியே நிர்வாகத்தினர் செய்ய வேண்டிய பணிகளிலெல்லாம் தலையாயது. தொழிலாளர் உயிருள்ள இயந்திரங்களல்லர். அவர்களும் மனிதர்கள் தான். அவர்களுக்கும் மனித உணர்ச்சிகளும், ஆசாபாசங்களும் உண்டு என்பதை உணர்ந்து அவற்றுக்கு மதிப்பளித்து, தனக்குக் கீழப் பணிபுரிவோரின் மனதில் அமைதியையும் மகிழ்ச்சியையும் வளர்த்துக் கொண்டு அவர்கள் தங்கள் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுமாறு ஊக்குவித்தால் தான் உயர்ந்த பட்சமான உற்பத்தியைப் பெற இயலும். தொழிலாளர்களின் மிகச் சிறந்த ஆற்றலையும் உழைப்பையும் பெறுவதற்கு ஊக்கம் நிறைந்த குழுக்களாக அவர்களை மாற்றுவது அவசியம். இந்த வகையிலேயே ஊக்குவித்தல் என்பது நூலக முகாமைத்துவத்தின் முக்கியமான மூலகமாக இருப்பதுடன் சிறந்த ஒரு சேவையை வாசகருக்கு வழங்குவதற்கு மிக உதவியான காரணியாகவும் கருதப்படுகின்றது.<br />
<br />
8.நூலக முகாமைத்துவத்தின் படி நிலைகள். (டுநஎநடள ழக டுiடிசயசல அயயெபநஅநவெ)<br />
<br />
ஏனைய நிறுவனங்களைப் போன்றே நூலகத்திலும் மூன்று விதமான முகாமைத்துவப் படிநிலைகளை நாம் காண முடியும். அவை பின்வருமாறு:<br />
<br />
1.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>மேல்நிலை முகாமைத்துவம் Top level management<br />
2.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>இடைநிலை முகாமைத்துவம் Middle level management<br />
3.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>கடைநிலை முகாமைத்தவம் Low level management <br />
மேல்நிலை முகாமைத்துவத்துக்குள் தலைமை நூலகர், நூலகத்தின் தலைவர், இயக்குநர், முதுநிலை அலுவலர்கள் என்போர் தரம் ஒன்றிலும், உதவித் தலைமை நூலகர், முதுநிலை உதவிநூலகர்கள் தரம் இரண்டிலும் அடங்குவர். இவர்களது பணி நிறுவனத்தின் நோக்கங்களை தனக்குக் கீழ் கடமையாற்றும் ஒவ்வொரு துறைக்கும் பொறுப்பான உதவி நூலகர்களை இயக்குவித்தல் ஆகும். இடைநிலை முகாமைத்துவத்துக்குள் நூலகத்தில் காணப்படும் ஒவ்வொரு துறைகளுக்கும் பொறுப்பான உதவி நூலகர்கள் அடங்குவர். இவர்களது பணி துறைகளுக்குரிய பணிகளை தமக்குள் கடமையாற்றும் அலுவலர்களை நேரடியாக மேற்பார்வை செய்வதன் மூலம் பெற்றுக் கொள்வதாகும். கடைநிலை முகாமைத்துவத்திற்குள் முதுநிலை நூலக உதவியாளர்கள், நூலக உதவியாளர்கள் என்போர் அடங்குவர்.<br />
<br />
9.நூலகமும் அதன் நிர்வாகியும் <br />
<br />
நூலகம் என்பது குறிக்கப்பட்ட சில எதிர்பார்ப்புகளுடன் கட்டி எழுப்பப்படுகின்ற, குறிக்கப்பட்ட சில தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வாய்ப்பை வழங்குகின்ற, குறிக்கப்பட்ட உண்மையான உள்ளுறவுள்ள (ஊநசவயin யஉவரயட யனெ pழவநவெயைட) நடவடிக்கைகளை கட்டுப்படுத்துகின்ற ஒரு நிறுவனமாகக் கருதப்படுகின்றது. நூலகங்கள் செயல்படு பிரிவுகளாக அமைக்கப்படும் போது அங்கே நூலகர் என்பவர் இச்செயல்படு பிரிவுகளின் தொழிற்பாடுகளுக்கும் அங்கு கடமையாற்றும் அலுவலர்களுக்குமிடையில் ஒரு பாலம் போல் செயல்படுகின்றார். அது மட்டுமன்றி நூலகர் நூலக அமைப்பின் மிக உயர்ந்த அளவிலான குறிக்கோளை அடைவதற்காகத் தங்களுக்குக் கீழ்க் கடமையாற்றும் அலுவலர்களுக்கு ஊக்கமும் செயல்திறனும் அளிப்பவர்களாக இருப்பதுடன் அதற்கான உந்து சக்தியை வழங்குபவர்களாகவும் உள்ளனர். எனவே நூலகர் நூலகத்திற்கும் அதன் அலுவலர்களுக்கும் இடையில் ஒரு இணைப்பை உருவாக்குவதன் மூலம் அமைப்பு ரீதியான கடமையில் அவர்கள் தமது சக்தியை செலவு செய்வதற்கு விருப்பப்படும் படி செய்ய முடியும்.<br />
<br />
10.நூலகமும் அதன் அலுவலரும்.<br />
<br />
நூலகத்தினை ஒரு கட்டுமான அமைப்பாகவும் அதே நேரம் தனிப்பட்ட ஒவ்வொரு அலுவலரையும் இன்னொரு கட்டுமான அமைப்பாகவும் நாம் கருதுவோமாயின் இந்த இரு வேறுபட்ட அமைப்புக்களையும் ஐக்கியப்படுத்துகின்ற அல்லது ஒருங்கிணைக்கின்ற வேலையை செய்யும் நூலகர் மிகப் பிரதானமான ஒரு இடத்தை வகிக்கின்றார் எனலாம். நூலக அமைப்பானது சில குறிக்கப்பட்ட நோக்கங்களையும் கொள்கைகளையும் குறிக்கோளையும் இலக்காகக் கொண்டது. அது போல் அந்த நூலகத்தில் கடமையாற்றும் ஒவ்வொரு தனிப்பட்ட அலுவலரும் தமக்கென்று சில குறிக்கப்பட்ட தேவைகளைக் கொண்டிருக்கின்றார். இந்த வேறுபட்ட இருவகையான கட்டுமான அமைப்புகளும் தங்களது தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும் பட்சத்தில் தான் இணைந்த, கூட்டுறவு முறையிலான துழiவெ ஊழழிநசயவழைளொip ஒரு அமைப்பாகத் தோற்றம் பெறுகின்றன. இவ்வாறு இல்லாவிடில் ஒரு நிறுவனமானது அதன் குறிக்கோள், நோக்கம், இலக்குகளை அடைவதற்கு தனிப்பட்ட ஒருவனது சேவை அவசியம் என்பதற்காக அவனைச் சம்பளத்துக்கு வேலைக்கு அமர்த்துகின்றது என்றோ அதே போல ஒவ்வொரு தனிப்பட்ட அலுவலரும் அவரது சொந்தத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதற்கு நிறுவனம் உதவும் பட்சத்தில் தனது சேவையை வழங்கத் தயாராக இருக்கின்றான் என்றோ நாம் கொள்ள முடியும். எனவே, இங்கு ஒரு நிறுவனத்திற்கும் அதன் ஒவ்வொரு தனிப்பட்ட அலுவலர்களுக்குமிடையில் ஒரு பரஸ்பர உறவுமுறை சுநஉipசழஉயட சநடயவழைளொip நிலைபெற்று இருப்பதை நாம் காணலாம். ஒரு நூலகத்துக்கும் அதன் ஒவ்வொரு அலுவலர்களுக்குமிடையிலான இந்த பரஸ்பர உறவுமுறை உளவியல் சார்ந்ததொன்றாகும். ஏனெனில் இது எழுத்தில் வடிக்கப்பட்டதோ அல்லது பேச்சில் சொல்லப்படுவதோ அல்ல. நூலகமும் அதன் அலுவலரும் இந்த பரஸ்பர உறவு முறைக்குள் உட்பரவேசிக்கும் போது, இரு அமைப்புகளும் ஒவ்வொருவரும் எதை வழங்குவார்கள், எதைப் பெற்றுக் கொள்வார்கள் என்ற சில எதிர்பார்ப்புகளை முன்வைத்துக் கொண்டு இந்த உறவுமுறையை அணுகுகின்றனர். இந்த எதிர்பார்ப்புகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.<br />
<br />
(அ) ஒரு நிறுவனத்தினால் வழங்கப்படக் கூடியதாக இருப்பதும் ஒரு தனிப்பட்ட அலுவலரினால் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருப்பதுமான எதிர்பார்ப்புகள்.<br />
1.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>ஊதியம்.<br />
2.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>சொந்த அபிவிருத்திக்கான வாய்ப்புக்கள்.<br />
3.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>சிறந்த சேவையை இனங்காணலும் அதற்கான அங்கீகாரத்தை வெளிப்படுத்தலும்.<br />
4.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>அத்தியாவசியமான பாதுகாப்பு.<br />
5.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>சினேகபூர்வமானதும் ஒருவருக்கொருவர் உதவி அளிக்கக் கூடியதுமான சூழல்.<br />
6.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>நல்ல முறையில் நடாத்தும் தன்மை.<br />
7.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>கருத்தாழம் மிக்கதும் குறிக்கோளை உடையதுமான சேவை.<br />
<br />
(ஆ) ஒரு தனிப்பட்ட அலுவலரினால் வழங்கப்படக் கூடியதும் ஒரு நிறுவனத்தினால் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருப்பதுமான எதிர்பார்ப்புக்கள்.<br />
1.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>நேர்மையான நாளாந்த உழைப்பு.<br />
2.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>அமைப்புக்கு விசுவாசமாக இருத்தல்.<br />
3.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>தன்முயற்சித்திறன் ஐnவையைவiஎந <br />
4.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>நிர்வாகத்தின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்படல்.<br />
5.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>வேலைப்பயன்பாடு துழடி நககநஉவiஎநநௌள<br />
6.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>அலுவலர் புதிதாக ஒன்றைப் பயில்வதற்கும், அதனை அபிவிருத்;தி செய்வதற்குமான விருப்பமும் இணக்கமும்.<br />
<br />
<b>முடிவுரை.</b><br />
அரச நிறுவனங்களாயினும், தனியார் நிறுவனங்களாயினும் சமூக சேவை, கல்வி நிறுவனங்களாயினும் அங்கு முகாமைத்துவம் என்பது மிகவும் முக்கியமான ஒரு கருவியாக கையாளப்படுகின்றது. முனித சமூகத்தின் இயற்கையான தொழிற்பாடுகளுடன் இது தொடர்புடையதாக இருப்பதன் காரணமாகவே இதன் முக்கியத்துவம் அளவிறந்து காணப்படுகின்றது எனலாம். இந்த வகையில் சேவையை மட்டும் முக்கிய குறிக்கோளாகக் கொண்ட ஒரு சமூக நிறுவனமாக நூலகமும் கூட. அது பொதுசன நூலகமாயினும், பாடசாலை, பல்கலைக்கழக நூலகமாயினும் முகாமைத்துவக் கொள்கைகளை பின்பற்றுவதன் மூலம் அதனது அளப்பரிய நோக்கமான நூலக சேவையை திறம்பட நடாத்த முடியும். சுpக்கலானதும் நுண்முறைகளுடன் கூடியதுமான நூல்களின் தொகை ரீதியானதும், அடிப்படையிலானதுமான வளர்ச்சி நூலக முகாமைத்துவக் கோட்பாடுகளிலும் மிகப் பெரிய அளவு மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதுடன் விஞ்ஞான முறை சார்ந்த நூலக முகாமைத்துவத்தின் தோற்றத்திற்கு அடி கோலியிருப்பதை வளர்ந்து வரும் எமது நூலக சேவையில் இருந்து நாம் கண்கூடாகக் காண முடியும்.<br />
<br />
உசாத்துணை நூல்கள்.<br />
<br />
<ol>
<li>முத்தையன், இராம. மேலாண்மைத் தத்துவங்கள், சென்னை: தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம், 1976.</li>
<li><span style="text-align: justify;">GARLISLE, Howard
</span><span style="text-align: justify;">M. Management: Concept and situations. Chicage: Science Research
Associates, 1976.</span></li>
<li><span style="text-align: justify;">HARROLD’s Librarian’s Glossary and Reference Book.
Comp. by. R. Prythereh. </span><st1:place style="text-align: justify;" w:st="on">England</st1:place><span style="text-align: justify;">:
Gower Publishing, 1987.</span></li>
<li><span style="text-align: justify;">Herald of Library Science. Vol. 24, No. 3, 1985,July.</span></li>
<li><span style="text-align: justify;">KUMAR, Krishan. Library Manual. NowDelhi: Vikas,
1982.</span></li>
<li><span style="text-align: justify;">MITTAL, R.L. Library Administration: Theory and
Practice. </span><st1:place style="text-align: justify;" w:st="on">New Delhi</st1:place><span style="text-align: justify;">
: Metropolitan, 1964.</span></li>
<li><span style="line-height: 150%;">SHARMA, J.S.
Library Organization. </span><st1:place style="line-height: 150%;" w:st="on">New Delhi</st1:place><span style="line-height: 150%;">:
Vikas, 1978.</span></li>
</ol>
Srikanthaluxmyhttp://www.blogger.com/profile/02621345440975786756noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-14981721.post-67345238132668267672016-01-04T03:03:00.003-08:002016-01-04T03:07:17.613-08:00முரண்களுக்குள் தொலையும் முழுமை - 2<br />
<div style="text-align: center;">
<b>முரண்களுக்குள் தொலையும் முழுமை -2</b></div>
<div style="text-align: center;">
<b> ஈழத் தமிழ்ச் சமூகத்தின் கல்விச் செயற்பாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள்;</b></div>
<b>நுழைவாயில்</b><br />
ஒரு சமுதாயம் மதித்துப் போற்றும் வாழ்க்கை நோக்கங்கள், குறிக்கோள்கள் ஆகியவற்றையும் வழிவழியாக அதனுள் பரவிக் காணப்படும் திறன்களையும் இன்றைய தலைமுறைக் குழந்தைகளுக்கு அளிக்க ஒரு சமுதாயம் மேற்கொள்ளும் பல்வேறு செயல்முறைகளின் தொகுப்பாகவோ அல்லது அறிவு, விழுமியங்கள், திறன்கள், மனப்பாங்குகள் என்பவற்றைப் பெற்றுக்கொள்ளும் செய்முறையாகவோ அதுவுமன்றி அறிவைத் தருவதற்கும் திறன்களை விருத்தி செய்வதற்குமென பயிற்சியும் அறிவுறுத்தலும் வழங்கும் செய்முறையாகவோ கல்வி என்ற கருத்துநிலை பல்வேறு வகையில் பொருள் கொள்ளப்படுகிறது. கல்வி என்ற எண்ணக்கரு தொடர்பாக தமிழர்களிடம் உள்ள தகவல்கள் எண்ணற்றவை. கல்விக்கு தமிழ்ச் சமூகம் வழங்கியிருக்கும் இடம் மிகவும் உன்னதமானது. கல்விக்கென இலங்கை அரசு செலவழிக்கும் தொகையோ மிகவும் அளப்பரியது. கல்விக்கு அரசு வழங்கும் முன்னுரிமை, உலகின் கல்விக்கொள்கைளின் சிறப்பம்சங்களை பிழிந்தெடுத்து உருவாக்கப்பட்ட கல்வித்திட்டங்கள், திறமைகளை வடித்தெடுத்து பொருத்தமான இடங்களில் பொருத்தக் கூடிய வகையில் தரம்பிரிக்கப்பட்ட பாடசாலைகள், சர்வதேச உதவு நிறுவனங்களின் அளப்பரிய கவனம் என கல்வியின் புறவயப்பட்ட விரிவாக்கமானது ஆச்சரியமும் பிரேமையும் தரத்தக்கதாக அமையும் அதே சமயம் கற்றல், கற்பித்தல் உட்பட சமூகப் பிரஜை ஒன்றை உருவாக்குவதற்கான கல்வியின் அகவயப்பட்ட விரிவாக்கமானது அவலமும் பிரமையும் தரத்தக்கதாக அமைந்திருக்கிறது. உலகமயமாக்கம், அறிவியல் கண்டுபிடிப்புகள், தகவல் சுனாமி, பொருளாதார வளர்ச்சி போன்றவை கல்வியை அறிவுநுட்பத்திற்கான அடித்தளம் என்ற நிலையிலிருந்து மாற்றி பொருளீட்டுவதற்கான முதலீடாக தரமிறக்கியுள்ளன. அதுமட்டுமன்றி கல்வி பொருளாக மாற்றப்பட்டு எழுத்தறிவிக்கும் இறைவர்களான ஆசிரிய சமூகமே அதன் விற்பனையாளராக மாறியிருக்கும் பரிதாபம், விற்பனையை மேம்படுத்துவதற்கான விளம்பரதாரர்கள், இடைத்தரகர்கள் என கல்வி வியாபாரம் களைகட்டி பறக்கின்ற ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்கின்றோம். இதனால் ஏற்படும் விசனமும் 'தௌ;ளிய அறிவும் நன்நடத்தையும் கொண்ட பண்பட்ட மக்களை உருவாக்குவதே கல்வி' என்ற மாட்டின் லுதர், 'மனிதனை மனிதனாக வாழ வைப்பதே உண்மைக் கல்வி' என்ற சுவாமி விவேகானந்தர், 'அன்பை உணருதல், அன்பு காட்டுதல் என்றால் என்ன என்று கண்டுபிடித்தல், அன்பு காட்டுதல் என்பவையே கல்வி' என்ற இந்திய கல்விச் சிந்தனையாளர் ஜே.கிருஸ்ணமூர்த்தி, போன்றோரின் சிந்தனைகள்; வழி சென்று மனிதத்தை மனிதர்களிடம் உருவாக்குவதே உண்மைக் கல்வியின் நோக்கம் என்பதை அறிவுறுத்தி உண்மைக்கல்வியை எமது மக்களுக்கு நாம் வழங்குவதில் தடையாக இருக்கின்ற எண்ணற்ற பல காரணிகளில் ஒன்றிரண்டை ஆவணப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.<br />
<br />
<b>கற்றல் என்ற கருத்துநிலை </b><br />
கற்றல் என்பது ஒரு அறிவை புதிதாகப் பெறுதல் அல்லது ஏற்கனவே உள்ள அறிவை இற்றைப்படுத்தல் அல்லது மெருகூட்டுதல் அல்லது வலுவூட்டுதல் எனப் பொருள் கொள்ளப்படுகிறது. செய்முறை சார்ந்து நோக்கும்போது படிப்பு, அனுபவம் அல்லது கற்பித்தல் போன்றவற்றால் அறிவும் திறனும் பெறும் செய்முறை கற்றல் எனப்படுகின்றது. பிறப்புமுதல் நம்மிடம் இயற்கையாக அமைந்து காணப்படாமல் நாம் பின்னர் பெறும் அனுபவங்களும் அவற்றின் விளைவுகளும் கற்றல் என்பதில் அடங்குவதாக இந்திய கல்வியியலாளர் சந்தானம் குறிப்பிடுகிறார். இவ்வனுபவங்கள் அறிவு சார்ந்தவையாகவோ, மனவெழுச்சிகள் சார்ந்தவையாகவோ, உடலியக்கங்கள் சார்ந்தவையாகவோ அல்லது இவை யாவற்றுடனும் ஒருங்கே தொடர்புடையதாகவோ இருக்கலாம். கற்றல் பாங்கு என்பது மெய், வாய், கண், மூக்கு செவி ஆகிய ஐம்பொறிகளினூடாக நடைபெறும் பார்த்தல், கதைத்தல், கேட்டல், தொட்டுணர்தல், முகர்தல் ஆகிய செய்முறைகளில் நடைபெறுகின்றது. இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளக்கூடியது கற்றல் என்பது வாழ்நாள் முழுமைக்கு தொடர்ந்து செல்லும் ஒரு செய்முறையாகும். கற்பதற்குரிய இடம் கல்வி நிறுவனங்களான முன்பள்ளிகள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என்ற தவறான பார்வை எம்மிடையே உண்டு. இக்கல்வி நிறுவனங்கள் வாழ்க்கைக்கான கற்றலின் ஒரு பத்து வீதத்தையாவது தருமா என்பது கேள்விக்குரியது. அவ்வாறாயின் கற்றலின் களங்கள் வேறு எவை?<br />
கற்றலின் ஆரம்பம் கருவறையாகும். வாழ்வின் பெரும்பாலான கற்றல் குடும்பம் என்ற ஆதார நிறுவனத்திலிருந்து தான் நடைபெறுகின்றது. குடும்பமும் சுற்றுப்புறச் சூழலும் தான் கற்றலின் பிரதான களங்கள்.<br />
<br />
<b>கருவறை என்னும் கற்றலறை</b><br />
மனிதனின் வாழ்க்கைக் காலம் குழந்தைப்பருவம், இளமைப்பருவம், நடுத்தரப்பருவம், முதுமைப்பருவம் என்ற நான்கு பிரதான பருவங்களைக் கொண்டது. இந்த வாழ்க்கைக் காலத்தில் முதல் 18 வருடங்கள் குழந்தைப்பருவம் என வரையறுக்கப்பட்டிருக்கிறது. தனிமனித நோக்கிலும் சரி, சமூக நோக்கிலும் சரி ஒரு சமூகம் எதிர்கொள்ளும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கான ஆணிவேருக்கும் இந்தக் குழந்தைப்பருவத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இதனடிப்படையில் தான் குழந்தை வளர்ப்பு, குழந்தை உளவியல் தொடர்பான ஆய்வுகள் இன்று தீவிர கவனம் பெற்று வருகின்றன. இத்தகைய ஆய்வில் இறங்கும் போது குழந்தைப் பருவத்திற்கு முந்திய 10 மாதங்கள் தாயின் கருப்பையில் வளரும் ஒரு உயிரின் வாழ்நிலை தொடர்பான கேள்விகளும் ஆய்வுகளும் மனித சமூகத்தின் கவனத்தை திசைதிருப்பியாக வேண்டுமென்பது தவிர்க்க முடியாதது.<br />
குழந்தை உளவியல் தொடர்பான ஆய்வுகள் முனைப்புப் பெற்ற காலத்திலேயே மானுட வளர்ச்சியைத் தீர்மானிப்பது பரம்பரைக் காரணிகளா? சூழல் காரணிகளா? என்ற விவாதமும் தொடங்கிவிட்டது. 'சூழலுக்கும் பரம்பரை அலகுகளுக்கு மிடையிலான தொடர்பு போட்டித்தன்மை அதாவது ஒன்றை ஒன்று அழித்தல் வாய்ந்ததல்ல. இது நடனம் போன்ற நேர்த்தியான அசைவுத் தன்மை வாய்ந்தது. இந்த அசைவானது கரு உருவாகி மூன்றாவது வாரத்திலிருந்தே தோன்றிவிடுகின்றதெனவும் சூழல் காரணமாக கருப்பையில் ஏற்படும் மாற்றங்கள் ஆளுமை மிக்க பரம்பரை அலகுகளின் வழி உருவாகிக் கொண்டு வரும் கருவின் போக்கையே திசை திருப்பிவிடும்' என்ற ஜோர்ஜ் வோஷிங்டன் பல்கலைக்கழக உளநோயியல் ஆய்வாளரான ஸ்ரான்லி கிரீன்ஸ்பான் (ளுவயடெநல புசநநnளியn) அவர்களது கூற்று சூழலா, பரம்பரையா என்ற தனிக்கட்சி விவாதங்களுக்கான கருத்துநிலையை தகர்த்;து இரு காரணிகளதும் பரஸ்பர செல்வாக்குத் தொடர்பான கருத்தொற்றுமை நிலையை ஆய்வாளர்களிடையே ஏற்படுத்திவிட்டது. எடுத்துக் காட்டாக மூளைத்திறன் அதிகம் வாய்த்த பெற்றோரின் மரபணுக்களின் வழி உருவான குழந்தையை தாய் எதிர்கொள்ளும் சூழல் பாதிப்புகள் மூளை வளர்ச்சி குறைந்த குழந்தையாக மாற்றும் வல்லமை வாய்ந்தவையாகும். இதனால் தான் இன்றைய தந்தைவழி சமூக அமைப்பிலும் சரி இதற்கு முன்னர் நிலைகொண்டிருந்த தாய் வழி சமூக அமைப்பிலும் சரி தாய்மை நிலை என்பது கொண்டாடப்; படுவதற்குரியதாகவே இருந்து வருகிறது. தம்மிடம் இருக்கும் பொருளாதார வசதிகளுக்கமைய கருவுற்றிருக்கும் பெண்ணின் விருப்பங்கள் பூர்த்தி செய்யப்படுவதும், உடல், உள ஆரோக்கியத்தில் குடும்பத்தவர் அதிக கவனம் எடுப்பதும், சடங்குகள் மூலம் தாய்மை நிலை கொண்டாடப்படுவதும் இயல்பாகவே இருந்து வருகிறது.<br />
<br />
<b>கருவறைக் கவலையீனங்கள்</b><br />
கருவறையிலேயே கற்றல் செயற்பாடு நடைபெறுவதை ஆய்வுகள் மெய்ப்படுத்தியிருக்கின்றன. பெற்றோர் மற்றும் சூழலால் குழந்தை வடிவமைக்கப்படுகிறது. தாயின் குரலிலிருந்து அது ஒலியைக் கற்கிறது. ஏனைய ஒலிகள்; கருவறையைக் கடந்து தெளிவான முறையில் கருவை வந்தடைதல் சாத்தியமற்றது. பிறக்கும் குழந்தைகள் தாய் பேசும் மொழியின் சாடையிலேயே அழுகின்றன என்றும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. ஒலியை மட்டுமன்றி சுவையையும் மணத்தையும் கூட கருவறையில் சிசு கற்கின்றது. இது உண்மையெனில் கருவறையில் கேட்டல் அல்லது செவிமடுத்தலூடாக சிசு கற்கின்றது. தாயின் எண்ணங்கள், உணர்வுகள் அனைத்தும் குழந்தையிடம் போய்ச் சேருகின்றது. குறிப்பாக கரு உருவாகிய நாளிலிருந்து 2-6 வார காலங்களில் தான் குழந்தையின் உறுப்புக்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன. குழந்தையின் இருதயம் துடிப்பதும் கைகள், கால்கள், விரல்கள் என்பன தோன்றுவதும் உள்ளுறுப்புகள், நரம்பமைப்புகள் உருவாவதும் இக்காலப்பகுதியிலேயேதான். இக்காலத்தில் தாயின் உடலில், மனநிலையில், உணர்வுநிலையில் ஏற்படும் மாற்றமானது கருவை நேரடியாகவே தாக்குகின்றது என ஆய்வுகள் கூறுகின்றன.<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>வறுமையை அடிப்படை பண்பாகக் கொண்ட சமூகங்களில் பசியால் வரும் அனைத்து எதிர்க்கணிய மன எழுச்சிகளையும் செல்வச் செழிப்பைப் பிரதான பண்பாகக் கொண்ட சமூகங்களில் உடலுழைப்பின்மையால் ஏற்படும் நோய்கள் சார்ந்து பெண்ணுக்கு ஏற்படும் மன எழுச்சிகளையும் குழந்தை கற்கின்றது. இன ஒடுக்குமுறையை எதிர்கொள்ளும் தமிழ்ப் பெண்ணுக்கு உடல் பாதிப்பு மட்டுமன்றி உளப்பாதிப்பும் அதிகமாகும். அகதி வாழ்வு, சொத்துக்களின் இழப்பு, பொருளாதார கஷ்டங்கள், அன்புக்குரியவர்களின் இழப்பு, திடீர் மரணங்களால் ஏற்படும் அதிர்ச்சி, எறிகணைத் தாக்கங்கள் போன்றவற்றை கருவறையில் குழந்தையும் எதிர்கொள்கின்றது. இன்றைய சமூகத்தில் பரக்கப்பரக்க பஸ் எடுத்து வேலைக்குப் போகும் கர்ப்பிணிப் பெண்ணின் பரபரப்பு, பதட்டம், இயலாமை, வேதனை, விரக்தி அனைத்தையுமே குழந்தை அனுபவிக்கின்றது.<br />
<br />
<b>சமூக நிறுவனங்களின் ஆதிக்கம்</b><br />
சமூகம் தனிமனிதர்கள் சேர்ந்து உருவாக்கப்பட்டது எனினும் அது பலதரப்பட்ட நிறுவனங்களின் கட்டமைப்பாலானது. சமூகத்தின் தோற்றப்பாடுகள், மரபுகள், முறைசார்ந்த கட்டமைப்புகள் என்பவற்றின் தொகுப்பே சமூக நிறுவனங்கள் ஆகும். தனிமனிதர் ஒவ்வொருவரும் பெற்றோராக, ஆசிரியராக, தொழிலாளியாக, தொழில் முயற்சியாளராக, சமூக சேவையாளராக என பலதரப்பட்ட வகையில் இந் நிறுவனங்களில் தமது பங்கை ஆற்றுகின்றனர். சமூக நிறுவனங்களின் ஆதார (pசiஅயசல) நிறுவனங்களாகக் கருதப்படுபவை குடும்பம், கூட்டாளிக்குழு, சுற்றுப்புறச் சமுதாயம் என்ற மூன்றுமே. இவை சமூக உறுப்பினரிடையே நேரடித் தொடர்பைப் பேணுபவை. மனித குலத்தின் ஆரம்ப கட்டங்களிலேயே இந்த ஆதார நிறுவனங்கள் தோற்றம் பெறத் தொடங்கிவிட்டன. பிறப்பால் விலங்காக இருக்கும் மனிதன் மனிதனாக வார்க்கப்படுவது குடும்பம் என்ற அச்சில் தான.; மனிதன் சந்திக்கின்ற முதலாவது உறவான தாய் சேய் உறவு மனிதனுக்கு தன்னுணர்வையும், தன்னைச் சுற்றியுள்ள கூட்டாளிகளின் உறவு சமூக உணர்வையும் தோற்றுவிக்கிறது. பாடசாலைகள், மத நிறுவனங்கள் போன்றவை நேரடித் தொடர்பையும், மறைமுகத் தொடர்பையும் பேணுகின்ற இடைநிலை (ஐவெநசஅநனயைவந) நிலையங்களாகக் கருதப்படுகின்றன. முற்றிலும் மறைமுகத் தொடர்பைப் பேணுகின்ற அரசு, தொடர்பு சாதனங்கள் போன்றவை வழிநிலை (ளுநஉழனெயசல) நிலையங்கள் எனக் கூறப்படுகின்றன. கற்றல் செயற்பாட்டின் ஒவ்வொரு வளர்ச்சிப்படியிலும் இச் சமூக நிறுவனங்களின் செல்வாக்கு அளப்பரியதாகும். கருவறை தொடங்கி கல்லறைவரை ஒவ்வொரு வளர்ச்சிப்படியிலும் செல்வாக்குச் செலுத்தும் வலிமைமிக்க இச் சமூக நிறுவனங்களின் அளவு, தன்மை, ஆதிக்கம் என்பவற்றினூடாக ஒரு சமூகத்தின் தன்மையையும், அதன் சிக்கல் வாய்ந்த அமைப்பையும் இனங்கண்டுகொள்ள முடியும். இதிலிருந்து தனிமனித வளர்ச்சிக்கும், சமூக வளர்ச்சிக்கும் அடிப்படை இச் சமூக நிறுவனங்களே என்பது தெளிவு.<br />
<br />
<b>குடும்பம் என்னும் முதல் நிறுவனம்</b><br />
உழைப்பு, தாராள மனப்பாங்கு ஒத்துணர்வு, அழகுணர்ச்சி, கட்டுப்பாடு, கீழ்ப்படிவு போன்ற நற்பண்புகளின் பிறப்பிடமாக அமைவது குடும்பம். கருவறையை விட்டு குழந்தை வெளியே வந்ததும் பார்த்தல் அல்லது அவதானிப்பு மூலமான கற்றல் செயற்பாடு இங்கிருந்துதான் தொடங்குகின்றது. பிறக்கும் எந்தக் குழந்தையும் தாயிடமிருந்தே பெரும்பாலானதைக் கற்கிறது.<br />
பார்த்துக் கற்றலில் கூர் நோக்கு அல்லது அவதானிப்பு என்ற அம்சம் முக்கியம் பெறுகின்றது. தான் வாழும் சூழலின் ஒவ்வொரு அம்சமும் அதில் காணப்படும் முரண்களும் குழந்தையின் கற்றல் செயற்பாட்டில் மிகுந்த செல்வாக்குச் செலுத்துகின்றன. சமூகத்திலுள்ள ஏனைய மனிதர்களைப் பற்றி ஒருவன் கொண்டுள்ள மனப்பான்மை, தான் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழவேண்டும் என்பது தொடர்பாக ஒருவனது குறிக்கோள்கள், ஒருவனது வாழ்க்கை நடை என்பவை குடும்பத்திலிருந்தே வருகின்றது. 'நான்' என்னும் உணர்வையும் 'நாம்' என்னும் உணர்வையும் குழந்தைகளில் விதைப்பதில் குடும்பத்திற்குப் பெரும் பங்குண்டு. ஒத்துழைப்பு, பரந்த மனப்பான்மை, உதவும் பாங்கு கொண்ட குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்தில் வளரும் பெற்றோரின் குழந்தைகள் முழு ஆளுமை வளர்ச்சியுடன் இருப்பதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. கருவறை விட்டு வெளியே பிரவேசிக்கும் குழந்தையின் முதல் மூன்று வருடங்கள் முழுமையாக வீட்டுச் சூழலால் வடிவமைக்கப்படுகினறது.<br />
குழந்தையின் ஆளுமை வளர்ச்சிப் போக்கைத் தீர்மானிக்கும் பிரதான சக்தி அக்குழந்தை வாழும் குடும்பச் சூழலே. குடும்பத்தில் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்குமிடையில் ஏற்படக்கூடிய புறக்கணித்தல்-ஏற்றுக்கொள்ளல், அசட்டை செய்தல்-அதிக கவனமெடுத்தல், கட்டுப்படுத்தல்-முழுச்சுதந்திரமளித்தல், பணிந்து போதல்-அதிகாரம் செய்தல், ஒதுங்குதல்-ஒன்றிப்போதல் ஆகிய தொடர்புகள் குழந்தைகளது ஆளுமை வளர்ச்சிப்போக்கையும் சமூக மனப்பான்மைகளையும் நிர்ணயிக்கின்றன என்பதைக் கல்விசார் ஆய்வுகள் மெய்ப்படுத்துகின்றன. 'குழந்தையின் முதல் ஆறு ஆண்டுகளின் வாழ்க்கையை என்னிடம் ஒப்படையுங்கள். அதற்குப்பிறகு அதன் வாழ்க்கை அமைப்பை எப்படிப்பட்டவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைப்பற்றி எனக்கு கவலையில்லை' எனக் கூறும் பெஸ்டலோசி என்ற தலைசிறந்த கல்வியாளரின் கூற்று மனித வாழ்க்கையில் குடும்பமும் சுற்றுப்புறச் சமூகமும் வகிக்கும் பங்கைத் தெளிவாகக் காட்டப் போதுமானது. பார்த்துச் செய்தல் குழந்தையின் பிரதான பண்பு என்பதனால் தேடல் உணர்வுக்கான களம் இங்கிருந்தே ஆரம்பிக்கிறது. நகர்ப்புறக்குடும்பங்களில் நெருக்கமான வசிப்பிடங்களில் வாழ்க்கை, பணம் சேர்ப்பதில் நாட்டம், பெற்றோர் இருவரும் வேலை பார்த்தல், விவாகரத்து போன்ற அம்சங்கள் அதிகமாக இருக்க கிராமப்புறக்குடும்பங்களில் அறியாமை, வறுமை, போன்ற அம்சங்கள் அதிகமாக உள்ளன.<br />
<br />
<b>குழப்பமுறும் குடும்பச் சூழல்</b><br />
'முதல் மூன்று ஆண்டுகளில் ஒருவன் கற்கும் அளவு அவனது வாழ்க்கையில் வேறு எந்த மூன்று ஆண்டுகளிலும் கற்பதில்லை' எனக் கூறும் யோன் டூவி என்ற கல்வியியலாளரின் கூற்றை அடிப்படையாகக் கொண்டு எமது வீடுகளில் நடப்பதை ஒருமுறை நினைவில் கொண்டு வருவோமெனில் 'பிறந்த இரண்டு வயது குழந்தை எழுப்பும் வினவல்களுக்கு பேராசிரியர்களே விடையைத் தேடிடும் காலம் இது. முந்திய தலைமுறைக் குழந்தைகளைப் போலன்றி இன்றைய குழந்தைகள் மிக்க அறிவுடன் பிறக்கிறது அல்லது வளர்கிறது என்று பெருமிதம் கொள்ளும் பெற்றோருக்கும், இதனை ஆய்வின்றியே அறுதியாகக் ஏற்றுக்கொள்ளும் இன்றைய உயர் தகவல் தொழி;ல்நுட்பச் சூழலுக்கும் மட்டும் இது பொருத்தமானது என்ற தவறான பார்வை எம்மிடையே உண்டு. இன்று நேற்றல்ல! குழந்தையின் வினவல்கள் என்றுமே பதிலளிக்க மிகவும் கடினமானவை. சில பெற்றோர் முடிந்தளவிற்கு பதிலளிக்க முற்படுகின்றனர். பலரோ அடக்கிவிடுகின்றனர். பெற்றோர் இருவரும் வேலை பார்க்கும் குடும்பங்களில் ஆயாவின் பராமரிப்பில் வாழும் குழந்தையின் வினவல்களுக்கு பதிலளிக்க யாருமே இருப்பதில்லை. பல குழந்தைகளின் வினவல்கள் பதிலளிக்கப்படமுடியாத சந்தர்ப்பங்களில் கிழட்டுக் கதையாக உருவகப்படுத்தப்பட்டு பெற்றோரால் அல்லது வீட்டிலுள்ள பெரியோரால் முடக்கப்பட்டுவிடுகின்றது.<br />
இன்றைய பெரும்பாலான குடும்பங்கள் பூசல்நிறைந்த குடும்பங்களாகவே காணப்படுகின்றன. பெற்றோர் இருவருமே வேலை பார்க்கும் குடும்பங்களில் உள்ள காலை நேரப் பதட்டம், பரபரப்பு, சண்டை, அதனால் வெளிப்படுத்தப்படும் விரக்திநிலை அனைத்தையுமே குழந்தை ஆழ்ந்து அவதானிக்கின்றது என்பதை பெற்றோர் மறந்துவிடுகின்றனர். குடும்பங்களில் நாம் காணும் இன்னோர் பண்பு தொடர்ச்சியான நச்சரிப்பு. நச்சரிப்புக்கு பேர் போனவர்கள் பெண்கள் என்பதை பெண்களே ஏற்றுக்கொள்வர். மனைவி என்ற வகிபங்கில் அதைக் கொண்டா, இதைக் கொண்டா என கணவனை நச்சரிப்பதும், தாய் என்ற வகிபங்கில் சிறிது நேரம் கூட விளையாட விடாது படி, படி என பிள்ளைகளை நச்சரிப்பதும் குடும்பத்திலிருந்து சற்றேனும் ஓடி ஒளிந்து கொண்டால் என்ன என்ற எண்ணத்தை குடும்ப உறுப்பினர்களிடம் இந்த நச்சரிப்பு ஏற்படுத்துகின்றது. உலகத்தின் புகழின் உச்சியில் ஏறியிருந்தபோதும் மனைவியின் நச்சரிப்பால் மணவாழ்க்கையின் மகிழ்ச்சியைத் தொலைத்தவர்களில் உலகப் புகழ் பெற்ற பிரான்சின் மன்னன் நெப்போலியன் ரஷ்யாவின் இலக்கிய மேதை லியோ ரோல்ஸ்ரோய், அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் போன்றோர் உள்ளடங்குவர். <br />
<br />
<b>மாறும் உறவு மனப்பாங்குகள்</b><br />
மனப்பொருத்தமுள்ள குடும்ப வாழ்க்கையே நல்ல குடும்ப வாழ்க்கைக்கு அடிப்படையாகவும் தொடக்கமாகவும் அமையும் என்ற உளவியலறிஞர்களின் கூற்றுக்கு அமைய தமிழ்ச்சமூகங்களின் வாழ்க்கை இல்லை என்பதை அனைவருமே ஏற்றுக்கொள்வர். 'அப்பா லீவில் வந்தால் நாம் வீட்டின் முன்புற வாயிலால் நுழைய முடியாது. ஏனெனில் அப்பாவும் அம்மாவும் தனிமையில் இருந்து பேசும் இடமாக அது மாறிவிடும். அப்பாவின் பெட்டியில் கணிசமான இடம் அம்மாவிற்குரிய பொருட்களாகவே இருக்கும். யாரும் அதற்கு உரிமை கோர முடியாது. எங்களுக்கென்றும் அப்பா கொண்டு வருவார் ஆனாலும் அம்மாவிற்குரியதைவிட ஒருபடி குறைவாகவே அவை இருக்கும்' என மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் தாய் தந்தையர் ஒன்றாக அமர்ந்து பேசுவதைக் காண்பதே மிக அரிதாக இருந்த ஒரு காலகட்டத்தில் ஐந்து குழந்தைகளைக் கொண்ட ஒரு குடும்பத்தில் தொலைதூரத்தில் வேலை பார்த்து இடையிடையே வீட்டுக்கு வரும் தகப்பனின் நடவடிக்கைகளையும் தாய் தந்தையரின் அந்நியோன்னியத்தையும் பெருமையுடனும் நகைச்சுவையுடனும் விவரிக்கும் மனப்பாங்கு கொண்ட ஒரு பல்கலைக்கழக மாணவனை தற்போது எம்மால் தரிசிக்க முடியுமா?. வீடு பெரிதாக, பல அறைகளைக் கொண்டமைந்தாலும் சிறு குழந்தைகளுக்கெதிரிலேயே ஒன்றாக படுத்துறங்குவது இன்றைய தலைமுறைப் பெற்றோருக்கு மேற்கத்தைய பாணியாக இருக்கக்கூடும். ஆனால் குழந்தை தூங்கியிருக்கும் என்று கற்பனை பண்ணிக்கொண்டு அசண்டையீனமாக குழந்தை எதிரிலேயே குடும்பம் நடத்தும் சில பெற்றோரையும் அதனை இரகசியமாக அவதானிக்கும் குழந்தைகளையும் மேற்கத்தைய சமூகம் நிச்சயம் கொண்டருக்கவில்லை என்ற கசப்பான யதார்த்தம் எத்தனை பேருக்கு தெரியும்?.<br />
குழந்தை பேசக் கற்றுக்கொள்ளும் ஆரம்பக்கட்டங்களிலேயே 'நீ அம்மா பிள்ளையா அப்பா பிள்ளையா' என்ற தாய் அல்லது தகப்பனின் அதுவுமன்றி உறவினரின் 'செல்லங்கொஞ்சும்' வினவல்கள் குழந்தையை ஒன்றில் ஏதாவது ஒரு கட்சியில் சேரும் மனப்பாங்கைக் கற்றுக்கொடுக்கின்றது அல்லது இருவரையும் தனித்தனி திருப்திப்படுத்தும் கெட்டித்தனத்தைக் கற்றுக் கொள்;கின்றது. கணவன் மனைவி உறவு தங்கியிருத்தல் உறவாக இருக்கும் பண்பு அதிகமாக இருக்கும் குடும்பங்களில் கட்சிகட்டிப் பிரிக்கும் பண்பையே குழந்தைகள் அதிகம் கற்றுக் கொள்கின்றனர்.<br />
<br />
<b>வலுவற்ற 'வளர்ப்புப் பண்ணைகள்'</b><br />
கற்றல் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கும் வலுமிக்க நிறுவனங்களாக இருப்பவை கல்வி நிறுவனங்கள். மனிதன் சந்திக்கும் முதலாவது நிறுவனமாக முன்பள்ளிக்கல்வி நிறுவனங்கள் கருதப்படுகின்றன. உடல், உள, சமூக, மனவெழுச்சி விருத்தி, பாடசாலைக்கான தயார்படுத்தல் உள்ளடங்கிய ஒட்டுமொத்த விருத்திக்குப் பொருத்தமான வாய்ப்புகளையும் அனுபவங்களையும் வழங்குவது கிட்டத்தட்ட 3-5 வயது வரையான காலப்பகுதியை உள்ளடக்கும் முன்பள்ளிக் கல்வியின் நோக்கமாகும். முன்பள்ளிப்பருவக் கல்வி ஏற்பாடுகள் பிள்ளைகளின் உள்ளார்ந்த ஆற்றலின் முழுமையான வளர்ச்சிக்கும் வாழ்நாள் முழுவதற்குமான கல்விக்குமான அத்திவாரத்தை இடுகின்றன. பிற்காலத்தில் உருவாகும் சிறந்த உளப்பாங்குகள், கற்றலை விரும்பும் மனநிலை என்பன உருவாக இப்பருவத்தின் வளர்ச்சி மிக முக்கியமானது.<br />
மனிதப்பண்புகளின் 'வளர்ப்புப் பண்ணை'களாகக் கருதப்படும் இந்த நிறுவனங்களின் தற்போதைய நிலை பரிதாபத்திற்குரியது. இந்நிறுவனங்களின் கற்பித்தற்பணி எமது சமூகத்தில் பெரும்பாலும் அடிப்படைக்கல்வித் தகுதியற்றவர்களிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. தனது பிள்ளை ஆங்கிலத்தில் தான் கற்க வேண்டுமென்ற பெற்றோரின் அவாவானது வருவாய் நோக்குடன் இயங்கும் பல முன்பள்ளிகளின் உருவாக்கத்திற்குக் களமமைத்திருக்கிறது. கிராமப்புறங்களில் முன்பள்ளியே தெரியாது வீட்டின் அருகிலுள்ள பாடசாலையில் தாய்மொழியில் கல்வி கற்று பொறியியலாளராகவும் மருத்துவராகவும் உயர்ந்து நடமாடும் எடுத்துக்காட்டுகளாக இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் எம்மவரிடம் இன்றைய பெற்றோர் கற்றுக்கொள்வது என்ன?. பெரும்பாலான முன்பள்ளிகள் பிள்ளை பராமரிப்பு நிலையங்களாக இயங்குகின்றன. குழந்தையின் தொல்லையிலிருந்து பெற்றோர் சற்றுநேரமாவது ஒளிந்திருக்கக்கூடிய புகலிடங்களாகவும் இவை மாறுகின்றன. முன்பள்ளியின் நேரத்தைச் சற்றுக்கூட்டினால் என்ன என்று அங்கலாய்க்கும் தொழில்பார்க்கும் பெற்றோரும் இருக்கத்தான் செய்கின்றனர். இதற்கு மாற்றுவழியாக முன்பள்ளிப் பிள்ளைகளுக்கும் தனியார் கல்வி நிலையங்களை உருவாக்கினால் என்ன என்ற கருத்துநிலையும் தோற்றம் பெற்றிருக்கின்றது.<br />
<br />
<b>ஆட்டங்காணும் அத்திவாரம்</b><br />
மனித வளர்ச்சிக் கட்டங்களில் இளமை, ஆர்வம், துடிப்பு, தேடல் அதிகம் உள்ள குழந்தைப்பருவம் முழுவதையும் தமதாக்கி அவர்களை நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைப்பதற்கான வழிப்படுத்தல் என்ற மாபெரும் பொறுப்பை ஏற்று நிற்பவை பாடசாலைகள் என்ற கல்வி நிறுவனங்கள். குழந்தைகளின் உள்ளத்தை கிட்டத்தட்ட 12 வருடங்கள் பண்படுத்தும் பாரிய கடமைப்பாட்டில் இருப்பவை. மொழித்திறன் விருத்தி, ஆக்கவேலை, சூழலுக்கேற்ற தொழில், பாடசாலையையும் சமூகத்தையும் இணைத்தல் போன்றன 6-10 வயது வரை கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளை உள்ளடக்கும் ஆரம்பக் கல்வியின் நோக்கமாக இருக்கிறது. 'குழந்தைகளினுடைய மனதின் இரகசியத்தையும், ஆசிரியர் பயிற்சி என்னும் கலையையும், ஆசிரியரின் திறமைகளையும் அறிய முற்படுகையில் ஒவ்வொரு குழந்தையிடமும் நான் எனது ஆசிரியனை, ஆசானைக் காண்பேன்' என்கிறார் ஆறுவயதுக் குழந்தைக்கு படிப்பு சொல்லிக் கொடுப்பதை தனது மிக விருப்புக்குரிய தொழிலாக ஏற்ற ருஷ்ய விண்வெளிக்கழகத்தின் தலைவரும் இயற்பியல் விஞ்ஞானியுமான அமனஷ்வீலி. குழந்தைகளின் நடவடிக்கைகளின் உட்பொருளினுள் ஆழப் புகுவதன் மூலம், குழந்தையின் உள்ளாற்றல்களைப் பயன்படுத்தி, அன்பு பரந்த மனப்பாங்கு, நகைச்சுவை உணர்வு, துடியார்வம், யதார்த்தத்தை அறியும் ஆக்கபூர்வமான அணுகுமுறை ஆகியவற்றைத் தட்டியெழுப்பி இவர்களுக்கு அவசியமான சமூக அம்சங்களை அளிக்க முடியும் என்ற இவரது கூற்று ஆரம்பக்கல்விப்; பருவத்தின் அத்தியாவசியத்தையும் வீட்டுச் சூழல் ஒன்றிலிருந்து முதன்முதலான பாடசாலை என்ற நிறுவனத்திற்குள் நுழைகின்ற ஆறு வயது குழந்தையின் முக்கியத்துவத்தையும் தெளிவாகக் காட்டப் போதுமானது.<br />
ஆரம்பக் கல்வியின் முதல் மூன்று ஆண்டுகளோ அல்லது ஐந்து ஆண்டுகளோ ஒரே ஆசிரியரின் கீழ் விடப்படுவதும் ஆசிரியர்கள் குழந்தை விரும்பும் பாடத்தை அதனது போக்கில் விளங்கப்படுத்துவதற்கேற்ற சூழலும் எமது கல்விமுறையில இல்லை. புத்தகச் சுமையால் கேள்விக்குறி போல் வளைந்து நிற்கும் குழந்தைகள் உலகில் மகிழ்ச்சிகரமான கற்றலுக்கும் கற்பித்தலுக்கும் இடமின்றி ஆண்டு ஒன்றிலிருந்தே புலமைப்பரிசில் பரீட்சைக்கு ஏற்ற வகையில் பிள்ளைகளைத் தயார்படுத்துவதும் ஐந்து ஆண்டுகள் வரை குழந்தையின் கற்றல் மகிழ்ச்சிகரமானதாகவன்றி அவலம் நிறைந்ததாக மாறியிருப்பதும் பரிதாபத்திற்குரியதொன்று. பரீட்சையில் சித்தியடைவதைவிட முதற்தரத்தில் தேறுவதற்கான தயார்படுத்தல்களே முனைப்புப் பெற்றிருக்கின்றன.<br />
<br />
<b>தொழிற்கல்வியின் ஆக்கிரமிப்பு</b><br />
குடியாட்சிப்பண்பு நிறைந்த எதிர்கால மக்களை உருவாக்குதலும், உயர்கல்விக்கோ அல்லது ஏதாவது ஒரு தொழிலுக்கோ செல்லக்கூடிய தகுதியை உண்டாக்குவதுமே 10-16 வரையான காலப்பகுதியை உள்ளடக்கும் இரண்டாம் நிலைக்கல்வியின் நோக்கமாகும். இடைநிலைக் கல்வியின் கிட்டத்தட்ட 20 வீதமாவது தொழிற்கல்வி வாய்ப்பு அளிக்கப்படவேண்டிய கட்டமாக இது உணரப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவரும் சமூக வளர்ச்சித் திட்டங்களில் தொடர்ச்சியாக ஒரு மாதமாவது பங்குபெற வைக்கப்படல் வேண்டும். மரவேலை, உலோக வேலை, அச்சடித்தல், கணினித் தொழினுட்பம் போன்றவற்றுக்கான தொழிற்கூடங்களை ஒவ்வொரு பாடசாலையும் கொண்டிருத்தலின் அவசியத்தை இது உணர்த்துகிறது. 17-18 வயது வரையான இரண்டு வருடங்களை உள்ளடக்கும் உயர்கல்வியானது பல்கலைக்கழகக் கல்விக்கான தயார்படுத்தலில் முழுக்கமுழுக்க ஈடுபடவைக்கும் அதேசமயம் தொழிற்கல்வியையும் வளர்த்தெடுக்கும் நோக்கத்தைக் கொண்டது. கிட்டதட்ட 80 வீதம் தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பருவமாக இது உணரப்பட்டிருக்கிறது. உயர்கல்விக்குள் நுழையும் வாய்ப்பற்ற மாணவர்கள் தொழிற்கல்வியில் பயிற்சியைப் பெறுவதற்கு ஏற்றவகையில் பல்தொழினுட்பக் கல்லூரிகளின் உருவாக்கத்தை இது வேண்டிநிற்கிறது.<br />
<br />
அ<b>ந்தஸ்து நோக்கிலான அழுத்தங்கள்</b><br />
தமிழ்ச் சமூகத்தின் கல்வி நோக்கம் வெறும் தொழில் நோக்கமாக இருந்திருப்பின் மகாத்மா காந்தியின் ஆதாரக் கல்விக் கொள்கையை சிரமேற்கொண்டு பாடசாலைக்கொரு கைப்பணி நிலையங்களால் எமது பாடசாலைகள் நிரம்பியிருக்கும். அந்தஸ்து மிக்க தொழில் நோக்கி பிள்ளைகளை வலிந்து செலுத்தும் ஆதிக்க சக்தியாகவே இன்றைய தமிழ்க் குடும்பங்களை இனங்காண முடிகிறது. தமது ஆறேழு பிள்ளைகளில் ஒன்றை பொறியிலாளராகவோ அன்றி மருத்துவராகவோ ஆக்குவதற்கு எமது முந்தைய தலைமுறை அவ்வளவு சிரமப்படவில்லை என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர். தனது தேவைகளை மட்டுமன்றி குடும்பத்தின் தேவைகளை அதுவும் கூட்டுக் குடும்பத்திலுள்ள பேரன் பேத்திகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு தமது பிள்ளைகளைப் பழக்கிய பெற்றோரிடமிருந்து தான் மிகச் சிறந்த கல்வியாளர்களை மருத்துவர்களை, பொறியிலாளர்களளை இச்சமூகம் உருவாக்கியிருக்க இன்றைய தலைமுறையோ ஒன்றிரண்டு பிள்ளைகளுடன் தம்மை மட்டுப்படுத்தியிருப்பது மட்டுமன்றி தனது தேவைகளைக்கூட தனித்து நிறைவேற்றமுடியாதளவிற்கு குழந்தைகளை அனைத்திலும் தங்கியிருப்போராக மாற்றியிருக்கிறது. தமது கரங்களால் தமது வயிற்றை நிரப்புவதற்குக்கூட நேரமின்றியோ அல்லது விருப்பமின்றியோ அதுவுமன்றி பெற்றோரின் அதீத கவனிப்பின் தன்மையாலோ பெற்றோரில் தங்கியிருக்குமளவிற்கு ஆக்கப்பட்டிருக்கின்றது. வீட்டில் அம்மாவின் கரங்களினால் செலுத்தப்படும் உணவை இயந்திரத்தனமாக உள்வாங்கும் அதே பிள்ளை கொத்து ரொட்டிக் கடையில் தட்டு நிரம்ப கொத்தும் பெப்சி சோடாவுமாக எத்துணை மகிழ்ச்சியாக தனது கரங்களினால் அத்தனை உணவையும் சாப்பிட்டு முடிக்கின்றது என்பது எத்தனை அன்னையருக்குத் தெரியும்?. உண்ணும் உணவின் சத்துக்களை கூடுமானவரையில் உணவுக் கலங்கள் உறுஞ்சுவதற்கு உமிழ்நீரின் உதவி தேவையென்பதையும் சொந்தக்கரங்களால் உண்ணுவதன் மூலமே உமிழ்நீர் சுரப்பிகள் இயங்கும் என்பது படித்த அம்மாக்களுக்கே தெரியவில்லை. <br />
<br />
<b>வெறுவாய் மெல்லும் மூன்றாம் நிலைக்கல்வி</b><br />
மூன்றாம்நிலைக் கல்வியின் நோக்கம் மாணவரிடையே உண்மை அறிவை வளர்ப்பதும் அதைப் பரப்புவதுமாகும். சமூகத்தை தாங்கக்கூடிய தலைவர்களையும் சமூகத்தை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும் துறைசார் வல்லுனர்களை உருவாக்குவதில் பல்கலைக்கழகத்தின் பங்கு அளவிடற்கரியது. பல்கலைக்கழகக் கல்வியின் உண்மையான நோக்கம் ஆய்வும் அந்த ஆய்வின் பெறுபேறை சமூகத்தில் பிரயோகிப்பதுமாகும். பல பேராசரியர்களைச் சுடச்சுட உருவாக்கியிருக்கும் பல்கலைக்கழகம் இதுவரை சமூகத்திற்கு தேவையான எத்தனை கண்டுபிடிப்புகளைச் செய்திருக்கிறது? பல்கலைக்கழக சமூகமே தமது பணியிடத்தை அரிவரிப் பள்ளிக்கூடம் என ஏளனம் செய்யுமளவிற்கு இது தரமிறங்கியுள்ளது. மாணவர்களை பாலியல் இம்சை செய்தல், மாணவர்களின் ஆக்கங்களை தமது ஆக்கமாக வெளியிடுதல், தமது வசதியை கருத்திற்கொண்டு பாடவேளைகளை வடிவமைத்தல், போன்ற ஊடகங்களின் எண்ணற்ற குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலையில் உள்ள கற்பித்தற் சமூகமும், பணம், பதவி, சமூகச் செல்வாக்கு போன்றவற்றுக்கு உறுதுணையாக அமையும் தராதரமற்ற நியமனங்களை ஊக்குவிக்கும் நிர்வாகக் கட்டமைப்பும் மாணவ சமூகத்தின் பிரதான கற்றல் களங்களாக மாறியிருக்கின்றன. <br />
<br />
<b>உளத்தூண்டல் அற்ற உடற்கல்வி </b><br />
தலைமைத்துவப் பண்பு, விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு, தோல்வியை சமமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு, குழுப்புரிந்துணர்வு மற்றும் சமூக மென்திறன்களைத் சமூக உறுப்பினர்களுக்கு வழங்குவதில் உடற்கல்விக்கு பாரிய பண்புண்டு. வீட்டுக்குள் விளையாடும் பாண்டிக்குண்டு, தாயம், முற்றத்தில் விளையாடும் கிட்டிப்புல், தாச்சி, போளை அடித்தல் போன்றவை முதற்கொண்டு நிறுவனமயப்பட்ட விளையாட்டுப் போட்டிகள் வரை உள்ளடங்கும். இது மட்டுமன்றி மன ஒருமைப்பாடு, புலனடக்கம், போன்றவற்றைத் தரவல்ல உளப்பயிற்சிகளையும் உள்ளடக்கும். ஆனால் நடைமுறையில் இந்த உடல் உள பயிற்சிகள் வெறும் சம்பிரதாய விளையாட்டுப் போட்டிகளாகவும், அரசியல், சமூக குழு முரண்பாடுகளை ஊக்குவிக்கும் களமாகவுமே எமது சமூகத்தில் முளைவிடத் தொடங்கியிருக்கிறது. தைரியம், பற்றுறுதி, பரந்த மனப்பாங்கு, பொதுநலப் பண்பு போன்றவற்றை வளர்ப்பதற்கு உதவும் விளையாட்டுக் குழுக்களுடன் குழந்தைகள் செலவிட்ட காலம் மாறி, தனியார் கல்வி நிலையங்களில் கூடுதலான நேரம் முடக்கப்பட எஞ்சியுள்ள நேரத்தில் கணனி விளையாட்டுக்களும், வியாபார ரீதியான வர்த்தக மையங்களும் முக்கியப்படுத்தப்படுவதனால் குழந்தைகளை பிரதான அங்கத்தவராக கொண்ட விளையாட்டுக்குழு என்ற வலுமிக்க ஆதார நிறுவனம் நகர்ப்புற சமூகங்களில் மெல்ல மெல்ல மறைந்துகொண்டு போகிறது. சமூக உறுப்பினர்கள் அனைவருமே பங்குகொள்ளக்கூடிய விளையாட்டுகளை கைவிட்டு பதின்மூன்று பேர் கொண்ட கிரிக்கெற் உலகிற்குள் மாய்ந்து போய்க்கிடக்கின்றது இன்றைய பெரும்பான்மை இளைய சமூகம்.<br />
<br />
<b>சிறுவர் உரிமை மீறல்கள்</b><br />
குழந்தையின் தன்மையும் முதிர்ச்சியடைந்த ஒரு மனிதனின் இயல்பும் வேறு பட்டவை என்ற சிந்தனை அறவே எழாத 16ம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து விடுபட்டு குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் கவனமாகவும் கட்டுப்பாட்டுடனும் வளர்க்கப்படவேண்டியவர்கள் என்ற சிந்தனைத் துடிப்பு தோற்றம் பெற்ற மத, இலக்கிய மலர்ச்சிக் காலத்தை மெல்லக் கடந்து, குழந்தையின் மூளை வளர்ச்சி, உளவியல் தாக்கம், குழந்தைக்கும் பெற்றோருக்குமிடையிலான தொடர்பு, குழந்தைக்கும் சகல குழந்தைகளுக்குமிடையிலான தொடர்பு, குழந்தையின் நடத்தை மாற்றம், அதற்கான சமூக சூழல் பற்றிய அதிகளவிலான கேள்விகளும் ஆய்வுகளும் அக்கறைகளுமாக ஒரு நூற்றாண்டைச் செலவழித்து சிறுவர் உரிமைகளும் நலன் பேணும் திட்டங்களும் வெறும் உபதேசமாகப் போய்விடுமோ என்ற வினா எழுப்பும் நிலையில் 21ம் நூற்றாண்டில் காலடி வைத்திருக்கிறது மனித சமூகம். 15 வயதிலேயே குழந்தைக்கு தாயாகும் சிறுமியரையும் குடும்பப் பாரத்தைச் சுமக்கும் பொறுப்புள்ள சிறுவர்களையும் தம்முன்னே காணும் சிறுவர் நலனில் அக்கறை கொண்டவர்களுக்கு 18 வயதுக்குட்பட்டவர்கள் அனைவருமே 'குழந்தைகள்' என கணிக்கப்படவேண்டியவர்கள் என்ற ஐக்கிய நாடுகள் சாசனத்தின் பிரகடனம் அதிர்ச்சியூட்டும் செய்தியாகவே கருதப்படுகிறது.<br />
<br />
<b>சமூக நெறிபிறழ் நடத்தைகள் </b><br />
'ஒருவருடன் ஒருவர் கலந்து, இணைந்து எல்லோருக்கும் பொதுவான சில நோக்கங்களை அடைவதற்காக கூடிச் செயற்படும் பல மனிதர்களின் கூட்டே சமூகம்' என்கிறார் கிட்டிங்ஸ் என்ற அறிஞர். ஷபாதுகாப்பு, புதிய அனுபவங்களைப் பெறல், பிறரது தூண்டல்களுக்கு ஏற்ப நடத்தல், பிறர் தம்மைப்போல் ஒருவராக எம்மை ஏற்றுக்கொள்ளல் ஆகிய நான்கு ஊக்கிகளே சமூகத் தொடர்புகளுக்கு அடிப்படைஷ என்கிறார் தோமஸ் என்ற அறிஞர். ஒரு மனிதனின் முழு வளர்ச்சிக்கு சமூகம் இன்றியமையாதது. உணவு, உடை, உறையுள் போன்ற உடல் தேவைகளும், அன்பு போன்ற உளத்தேவைகளும், பாதுகாப்பு, பொழுதுபோக்கு போன்ற சமூகத் தேவைகளும் நிறைவு பெறுவதற்கு சமூக வாழக்கை மனிதனுக்கு அவசியமானது. தனிமனிதனையும் அவன் வாழும் சமூகத்தையும் பிரித்துப் பார்ப்பது சாத்தியமற்றது. கற்றல் செயற்பாடானது ஒரு சமூகத்தின் சூழலால் வடிவமைக்கப்படுகின்றது. மனிதனும் சமூகமும் ஒன்றுடனொன்று பின்னிப் பிணைந்திருப்பது போன்றே தனிமனித வளர்ச்சியும் சமூக வளர்ச்சியும் ஒன்றுடனொன்;று பின்னிப்பிணைந்தது. மனித வளர்ச்சியானது சமூகத்தின் வளம், சமூகத்தின் மரபு, சமூகத்தின் தேவைகள், சமூகத்தின் சூழல் என்பவற்றின் அடிப்படையிலேயே தங்கியுள்ளது போன்று மரபு, வயது, பயிற்சி, சூழல் என்பன மனித உருவாக்கத்துக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.<br />
ஒரு மனிதனின் ஆளுமை பண்புகள் அவன் வாழுகின்ற சமூகத்தின் தன்மையினால் நிர்ணயிக்ககப்படுகின்றது என்பது உண்மையெனில் தற்போதைய எமது சமூகம் பற்றிய தௌ;ளிய அறிவு எமக்கு அவசியமானதாகும். ஒன்றுக்கொன்று முரண்பட்ட நடத்தைகளைக் கொண்டமைந்த மிகமிகச் சிக்கல் வாய்ந்த ஒரு சமூகமாக, எங்கும்; எதிலும் போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கும் அதேசமயம் தனிமனிதர்களிடமிருந்து அதிகளவு கீழ்ப்படிதலை எதிர்பார்க்கும் சமூகமாக, இன ஒடுக்குமுறையை பூரணமாக அனுபவிக்கும் சமூகமாக,. தமது தனித்தன்மைகளை, பாண்பாட்டுக்கோலங்களை மெல்லமெல்ல கைவிட்டு கண்டதே காட்சி கொண்டதே கோலம் என அலையும் சமூகமாக, நெறிபிறழ் நடத்தைகள் மெல்ல மெல்ல தலையெடுத்தாடுகின்ற சமூகமாக, சமூகச்சிந்தையற்ற கல்வியாளர்களை மிக அதிமாகக் கொண்டிருக்கும் சமூகமாக இனங்காணப்பாட்டிருக்கும் இன்றைய எமது சமூகத்தில் மாணவர்களை சமூக இயல்பினராக்குவது எவ்வாறு என்பது ஒரு கசப்பான யதார்த்தமாகவே உள்ளது.<br />
<br />
<b>மறைந்து கொண்டு வரும் அனுபவக்கல்வி</b><br />
கற்றலின் பிரதான களங்களில் முக்கியமானது பிறரது பட்டறிவு எமக்கு படிப்பறிவாவது ஆகும். முந்தைய தலைமுறை சேர்த்து வைத்திருக்கும் அனுபவங்கள் கல்வி நிறுவனங்கள் தரும் கற்றலின் பிரயோகங்கள் என்பதை பலர் மறந்துவிடுகின்றனர். கூட்டுக் குடும்ப வாழ்விலிருந்து கருக்குடும்ப வாழ்விற்கு எமது சமூகம் மாறியகையுடன் மூத்தவர்களது அனுபவங்களைப் பகிரும் அரிய வாய்ப்பும் மறைந்து விட்டது. நிலைகொண்டிருக்கும் ஓரிரு குடும்பங்களில் அது தலைமுறை இடைவெளி என்ற பார்வையில் புறக்கணிக்கப்படுகின்றது. ஏழைக்குடும்பத்தில் பிறந்து சுயமாக உழைத்து முன்னேறிய ஒரு கணவனுக்கு வாழ்க்கைப்பட்ட பின்னர் ஊதாரித்தனமாக மாறிய மனைவியை 'ஆபத்துக்குதவாப்பிள்ளை, அரும்பசிக்கு உதவா அன்னம், தாகத்தைத் தீராத்தண்ணீர், தரித்திரமறியாப் பெண்டிர்'; என்ற விவேகசிந்தாமணியின் பாடல்களில் பொருத்தமான ஒன்றை மேற்கோள் காட்டும் அன்றைய அப்பாக்கள் பள்ளிக்கூட வாசல் மிதிக்காது வெறும் திண்ணைப் பள்ளியில் கற்றவர்கள் மட்டுமே. திருக்குறள் போன்ற நீதி நூல்களை அதன் பொருளுடன் சொல்லும் வல்லமையை இன்று எத்தனை அப்பாக்கள் கொண்டிருக்கின்றார்கள். குளிக்கும் இடம், கூட்டும் இடம், ஏன் கழிக்கும் இடம் கூட திருவெம்பாவையின் இருபது பாடல்களையும் மனப்பாடம் செய்வதற்கு அன்றைய தலைமுறை பயன்படுத்தியதால் தான் இன்றும் புத்தகம் இன்றியே அவற்றை நினைவில் இருத்திப் பாடும் வல்லமையை அது கொண்டிருக்கின்றது. இன்றைய எமது நிலை...?. மனனப் போட்டியில் மதிப்பெண் வாங்குவதுடன் அது மறந்துவிடுகின்றது. வள்ளுவர் சொல்லும் கசடு அறக்கற்றலும் கற்றபின் அதற்கு அமைய நடத்தலும் ஏட்டுப்படிப்பாகவே நின்றுவிடுகின்றது. <br />
<br />
<b>முன்னணி வகிக்கும் முகஸ்துதிகள்</b><br />
சமூகத்தின கலை, இலக்கிய மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள் மனிதனின் மற்றுமோர் முக்கிய கற்றல் களங்களில் ஒன்றாகும். பரந்த கல்வி, ஆழமான அறிவு, அனுபவ முதிர்ச்சி, ஒழுக்கமான வாழ்க்கை போன்றவற்றால் உயர்ந்து நிற்கும் பெரியவர்களை சமூகத்தின் நிகழ்வுகளுக்கு அழைத்து அவரது வகையால் பெருமையும் பெருமிதமும்; அடைந்த தமிழ்ச்சமூகத்தின் விழாக்கள் உண்மையான பாராட்டுக்களால் அன்று நிரம்பி வழிந்தன. மேடையில் இருப்பர் தொடர்பான மரியாதை அவையில் இருக்கும் அனைவருக்கும் இருந்தது. அவர் முன்னால் விழுந்து வணங்கி ஆசி பெறுவதும் கூட பெரிய விடயமாகப் போற்றப்பட்டது. ஆனால் இன்றைய சமூகத்தின் நிகழ்வுகள் எமக்குக் கற்றுக்கொடுப்பது உண்மையான பாராட்டுக்களை அல்ல. முகத்துக்குப் புன்னகைத்து முதுகுக்கும் புறங்கூறுவது எப்படி என்பதையே. இன்றைய அழைப்பிதழ்களில் வெறும் பிரதம விருந்தினரை உள்ளடக்கிய எம்மவரின் அழைப்பிதழ்கள் இந்த முதுகு சொறியும் போக்க்pனால் சிறப்பு விருந்தினர், பின்னர் கௌரவ விருந்தினர் என தமக்கு படிப்பிலோ, பதவியிலோ அல்லது பொருளுதவியோ செய்வார் என நம்புபவர்களையெல்லாம் அழைப்பிதழில் உள்ளடக்கும் பரிதாபம் கடந்த இருதசாப்த வளர்ச்சி மட்டுமே. இது அண்மையில் ஒரு நிகழ்வு இரு பிரதம விருந்தினர்களை உள்ளடக்குமளவிற்கு இன்னொரு படி மேற்சென்றுள்ளதை செய்தி ஊடகங்கள் ஆவணப்படுத்தியிருக்கிறன. <br />
<br />
<b>தொலையும் பண்பாட்டு அடையாளங்கள்</b><br />
செழிப்பும், பொருளாதார வளர்ச்சியும், குழந்தை வளர்ப்பு தொடர்பான அதீத கவனமும் ஏற்படுத்தும் அதிக வாய்ப்பு வசதிகளின் காரணமாக போதைப் பொருட் பாவனை, குடி, கொலை, கொள்ளை, சிறுவர் விபச்சாரம் போன்ற வன்முறைக்குற்றங்களில் சிறுவர்கள் அகப்பட்டு சீரழிந்து கொண்டிருக்கும் போக்கு ஒரு புறமிருக்க இதற்கு நேர் மாறாக வசதி வாய்ப்புக்கள் எதுவுமி;ன்றி வறுமை, பசி, பட்டினி, போசாக்கின்மை, கல்வி அறிவின்மை என்பவற்றின் காரணமாக குழந்தையிலேயே குடும்பப் பாரத்தை சுமக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு ஏழைக்குடும்ப சிறுவர்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர். தொலைக்காட்சிப் படங்கள் விளையாட்டுக்கள், கேலிச்சித்திரங்கள் போன்றவற்றில் இடம்பெறும் வன்முறைக் காட்சிகளை பார்த்ததும் 'உலகமே இப்படித்தான், இதையே தான் ஒவ்வொருவரும் செய்கின்றனர் எனவே நாமும் செய்யலாம்' என்ற தோற்றப்பாட்டை சிறுவர்கள் பெறுவதும் வன்முறை இங்கு அதிகரிக்க காரணம் எனப்படுகிறது.<br />
ஏனைய பல சமூகங்களுக்கு இல்லாத அளவு போட்டி மனப்பான்மையை தமிழ்ச்சமூகம் கொண்டிருக்கிறது. தமிழ்ச்சமூகத்தின் வியாபார சந்தையில் அதிக கேள்வியுள்ள பொருளாக காணப்படுவது கல்வி என்ற வியாபாரப் பண்டம். கல்வியின் விற்பனையாளர்கள் ஆசிரியர்கள். விளம்பரமின்றியே மிக அதிகளவில் விற்பனையாகும் பொருளும் கல்வியே. தனக்கென தனித்துவப் பண்புகளை தக்க வைத்துக்கொண்ட தமிழ்ச்சமூகத்தின் இன்றைய பண்பு மயப்படுதல். ஏனைய சமூகங்கள் தம்மை அடுத்தவரிலிருந்து வித்தியாசப்படுத்த ஏதாவது ஒரு அடையாளத்தை, ஆகக் குறைந்தது தமது ஆடையணிகளிலாவது (அது சீக்கியர்களின் தலைப்பாகையாகவோ, முஸ்லிம்களின் தொப்பியாகவோ) பேணுவதாக இருக்க எமக்கென தனித்த அடையாளம் இன்றி உலகில் எதுவெல்லாம் புழக்கத்திற்கு வருகின்றதோ அவற்றை காட்சிப்படுத்தும் பொம்மைகளாகவே எமது சமூகம் இனங்காணப்படுகின்றது. கல்விச் சமூகத்தை எடுத்துக்கொண்டால் ஆரம்ப காலங்களில் நாம் வாத்தியார் என அழைக்pன்ற அன்றைய உபாத்தியாயர்களை பாடசாலைக்குள் மட்டுமன்றி பாடசாலைக்கு வெளியிலேயே சமூகத்தின் எந்தவொரு நிகழ்விலும் அதே கோலத்தில் இனங்காணக்கூடிய ஒரு வாய்ப்பும் தமிழ்ப்பண்பாட்டின் தனித்தன்மையையும் காணக்கூடியதாக இருந்தது. ஆனால் இன்று சீருடைகள், ஒழுக்க அம்சங்கள், கட்டுப்பாடுகள் அனைத்தும் மாணவர்களிடம் மட்டும் திணிக்கப்படும் தன்மையே பெரும்பாலும் உண்டு. இதிலிருந்து தெரிவது என்ன ?. மாணவ சமூகத்திற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளோ ஒழுங்கு நடவடிக்கைகளோ பாடசாலையுடன் மட்டும் தான் என்ற ஆழமான உணர்வும் அதனை கழற்றி எறிந்து சுமையிலிருந்து விடுபடும்; தருணத்தை மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்ற உணர்வும் மிக அதிகளவில் உண்டு. சமூகத்தின் நேர்க்கணிய மாற்றத்தை கற்பதன் மூலமே சமூக அபிவிருத்தியைப் பற்றி சிந்திக்கலாமேயன்றி எதிர்க்கணிய மாற்றங்களினால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும் சமூகத்தில் ஒரு மனிதனை சமூக இயல்பினராக்குதல் சாத்தியமற்றது.<br />
<br />
<b>அதிகரிக்கும் விலகல்களும் இடைவெளிகளும்;</b><br />
பிள்ளைகளை தேடல் உணர்வு அதிகமாக இருக்கும் ஆரம்பப் பள்ளி மாணவர்களின் பெற்றோர் ஆசிரியர்களிடம் போடும் கட்டளைகளில் பிரதானமானது மேலதிக பாடத்திட்ட செயற்பாடுகளில் பிள்ளைகளை சேர்க்கவேண்டாம் என ஆசிரியர்களுடன் சண்டை பிடிக்கும் பெற்றோர்கள், தனியார் கல்வி நிலையங்களில் மட்டுமன்றி அதற்கும் மேலாக தனிப்பட்ட வீட்டு ரியூசனில் அதிகம் செலவழிக்கும் பெற்றோர்கள் பள்ளி நிகழ்வுகளில் அன்பு, பாதுகாப்பு, பரஸ்பர உறவு என்பவற்றின் அடிப்படையில் உருவான குடும்பம் என்ற ஆதார நிறுவனம் இன்று அவற்றை புறந்தள்ளி பணத்துக்கும் அந்தஸ்து மிக்க தொழிலிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நிறுவனமாக மாறிக்கொண்டு வருகிறது. வாழ்க்கைப் படிப்பை புறந்தள்ளி ஏட்டுப்படிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பாடசாலை என்ற நிறுவனம், விரும்பத்தகாத மனவெழுச்சிகளை மனிதரிடம் குறிப்பாக குழந்தைகளிடம் தூண்டிவிடும் திரைப்பட ஊடகங்கள், நின்று நிதானித்து சிந்தித்துப் பார்த்து செயற்பட நேரமற்ற பம்பர உலகில் தொகை ரீதியாகவும் தரரீதியாகவும் பெருத்துக்கொண்டு போகும் தகவல் வெள்ளத்துக்குள் நல்லதை, பொருத்தமானதை தெரிவு செய்வதற்கான நேரமோ, பொறுமையோ, அறிவோ அற்ற மனித சமூகம் இப்படி இன்றைய சமூகத்தின் எதிர்க்கணியப் போக்கை விவரித்துக்கொண்டே போகலாம்.<br />
வீட்டுக்கும் வீட்டுக்கு வெளியேயான வாழ்க்கைக்குமிடையிலான விலகல்களும் இடைவெளிகளும் அதிகரித்துச் செல்லும் ஒரு சமூகமாக எமது சமூகம் இனங்காணப்படுகின்றது. பாடசாலையில் அறஞ்செய விரும்பு எனப் படிக்கும் குழந்தை வீட்டில் பிச்சைக்காரன் வந்ததும் படலையைச் சாத்தும் அப்பாவையோ அல்லது அம்மாவையோ பார்க்க நேரும் சந்தர்ப்பங்களில் குழப்பமடைகின்றது. பாடசாலைக் கல்வியை ஊக்குவிப்பதைவிடுத்து தனியார் கல்வி நிலையங்களுக்கு வரத் தூண்டும் ஆசிரியர்கள், போதைவஸ்து பாவனைக்கு தண்டனை கொடுத்துவிட்டு வீட்டிலோ களியாட்ட நிகழ்விலோ அவற்றை நுகரும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள், வீட்டின் பொருளாதார ஏற்றத்தாழ்வைக் காரணங்காட்டி ஒருசிலரை ஒதுக்கும் கூட்டாளிக் குழுக்கள் அனைத்துமே இந்த இடைவெளிகளை மேலும் ஆழமாக்குகின்றன. இத்தகைய குழப்பங்கள் நடைமுறைமுறை வாழ்க்கைக்கும் பாடசாலைக் கல்விக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை என்ற ஆழமான உணர்வை சிறுவயதிலிருந்தே குழந்தையிடம் விதைத்துவிடுகின்றது. <br />
<br />
<b>முடிவுரை</b><br />
சவால்;களைப் பட்டியலிட்டுவிட்டு தீர்வை தராமல் விடுதல் எந்தவொரு பயனுமற்றது. தனக்கென தனித்தன்மையைக் கொண்ட சமூகங்களாக ஒவ்வொரு கிராமமும் வளர்ச்சியடையுமெனில் முரண்கள் குறைவதற்கு பெருமளவு வாய்ப்புண்டு. வெறும் அரசியல் பிரகடனமோ அல்லது நனவாக்க முடியாத கனவோ எதுவாக இருப்பினும் 'அயல் பாடசாலையை சிறந்த பாடசாலையாக்குதல் எண்ற கல்வியமைச்சரின் பிரகடனம் சமூக சிந்தையுள்ள மனிதனை உருவாக்க நினைக்கும் அனைத்து உள்ளங்களிற்கும் தெம்பு தரும் ஒரு செய்தியாகும். தாய்மைநிலையுடன் மிக தொலை தூர பணியிடத்திற்குச் செல்தலின் சிரமம், சக விளையாட்டுத் தோழரை விட்டு சமூக பொருளாதார கலாசார அம்சங்களில் வேறுபட்ட குழுக்களுடன் தன்னை இசைவாக்கம் செய்வதில் ஒரு மாணவனுக்கு இருக்கும் சிரமம். ஓய்வு நோக்கத்திற்கு இடையூறாக இருக்கும் தனியார் கல்வி நிலையங்களிற்கு செல்வதன் சிரமம் போன்றவை சொந்தப் பாடசாலையில் கற்பதன் மூலமோ வேலை பார்ப்பதன் மூலமோ குறையுமெனில் சமூக இயல்பினராக்குவதிலுள்ள சவால்களும் குறைவதற்கு இடமுண்டு. எமக்கு முந்திய தலைமுறையின் ஐக்கியப்பட்ட ஒழுக்க, பண்பாட்டு அம்சங்களும் இன்றை தொழில்நுட்ப வசதி வாய்ப்புகளும் இணையுமெனில் தனித்தன்மையும் சமூக சிந்தையுமுள்ள மேதைகளை இச்சமூகம் அதிகளவில் கொண்டு சிரஞ்சீவியாய் நிலைத்திருக்கும் எண்பது திண்ணம்.<br />
<br />
<b>உசாத்துணைகள்</b><br />
1.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span><span style="color: windowtext; font-family: 'Times New Roman', serif; font-size: 11pt; letter-spacing: -0.6pt; text-indent: -0.25in;"><span style="font-family: 'Times New Roman'; font-size: 7pt; font-stretch: normal;"> </span></span><span style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; color: windowtext; font-family: 'Times New Roman', serif; font-size: 11pt; text-indent: -0.25in;">Eshleman, Adam(2009</span><em style="text-indent: -0.25in;"><span style="border: 1pt none windowtext; color: windowtext; font-size: 11pt; font-style: normal; padding: 0in;">). </span></em><em style="text-indent: -0.25in;"><span style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; border: 1pt none windowtext; color: windowtext; font-size: 11pt; font-style: normal; padding: 0in;">Probing Question: Can
babies learn in utero?. </span></em><em style="text-indent: -0.25in;"><span style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; border: 1pt none windowtext; color: windowtext; font-size: 11pt; font-style: normal; padding: 0in;"><a href="http://news.psu.edu/%20story/">http://news.psu.edu/
story/</a></span></em><em style="text-indent: -0.25in;"><span style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; border: 1pt none windowtext; color: windowtext; font-size: 11pt; font-style: normal; padding: 0in;"> 141254/2009/02/23/research/probing-question-can-babies-learn-utero</span></em><br />
2.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>சந்தானம்,எஸ். (1987). கல்வியின் சமூக தத்துவ அடிப்படைகள். சென்னை: பழனியப்பா பிரதர்ஸ்.-<br />
3.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>அமனஷ்வீலி,ச. (1987) குழந்தைகள் வாழ்க. மொழிபெயர்ப்பு. இரா.பாஸ்கரன். மொஸ்கோ: முன்னேற்றப்பதிப்பகம்.<br />
4.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>சந்திரசேகரம்,சோ. (2006). முன்பள்ளிக் கல்வியின் முக்கியத்துவம். அகவிழி. 2(22). யூன் 2006. ப13-15.<br />
5.<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>நவாஸ்தீன்,ப.மு.(2006). இடைநிலைக் கல்வியில் அறிமுகப்படுத்தப்படும் புதிய கலைத்திட்டச் சீர்திருத்தங்கள். அகவிழி. 2(23). யூலை. 2006. ப12-17.<br />
<div>
<br /></div>
Srikanthaluxmyhttp://www.blogger.com/profile/02621345440975786756noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-14981721.post-14640670431508884912015-11-09T12:29:00.000-08:002015-11-09T12:29:12.637-08:00'கலாசுரபி' யாழ்ப்பாண தேசிய கல்வியியல் கல்லூரி ஆண்டு மலர் <div style="text-align: center;">
<b>'கலாசுரபி'</b></div>
<div style="text-align: center;">
<b>யாழ்ப்பாண தேசிய கல்வியியல் கல்லூரி ஆண்டு மலர் </b></div>
<div style="text-align: center;">
<b>ஆய்வுரை 21-08-2008</b></div>
<br />
குறித்த ஒரு நோக்கத்தை அல்லது பல நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக மக்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பே நிறுவனம் எனப்படுகின்றது. நிறுவனங்களிடமிருந்து பின்வரும் வழிமுறைகளினடிப்படையில் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.. நிறுவனத்தில் பணிபுரியும் அலுவலர்கள், நிறுவனத்திற்குள்ளே இயங்கும் நூலகங்கள் போன்ற சேவை அமைப்புகள் மற்றும் உள்ளக அறிக்கைகள், நிறுவனத்தினால் வெளியிடப்படும் வெளியீடுகள். வேண்டுகோளின் அடிப்படையில் நிறுவனத்தினால் வழங்கப்படும் வசதிகள் (எ-டு. உபகரணங்களை வாடகைக்கு விடுதல்)<br />
<br />
பாடசாலைகள், கல்லூரிகள், தொழினுட்பக் கல்லூரிகள், பல்தொழினுட்பக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள், கல்வியியில் கல்லூரிகள், பல்கலைக்கழகக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், ஆய்வு அபிவிருத்தி நிறுவனங்கள் போன்றவை இதற்குள் உள்ளடங்கும். தொழில் நுணுக்கங்கள், உபகரணப் பாவனை தொடர்பான நிபணத்துவ ஆலோசனையை பெறுதல், மிகவும் முன்னேற்றகரமான, ஆழமான பொருட்துறைகள் தொடர்பான தகவலை வழங்குதல்., குறிப்பிட்ட துறை சார்ந்த மிக அண்மைக் கால கல்விசார் ஆய்வுகளின் விபரங்களை வழங்குதல்., ஒப்பந்தப் பணிகள் அல்லது கிடைக்கக்கூடிய வசதிகள் மூலம் தகவலை வழங்குதல், நூலக சேவைகளை வழங்குதல் இவற்றின் பயன்பாடாகும்.<br />
<br />
நிறுவன வெளியீடுகள் பொதுவில் முழுக்க முழுக்க ஆழமான பொருட்துறை சார்ந்த ஆய்வுகளின் விபரங்களை அல்லது புலமைத்துவ தகவல்களை வழங்குகின்ற துழரசயெட என ஆங்கிலததில் குறிப்படப்படும் பொருளின் அடிப்படையில் அமைந்த ஆய்வுப் பருவ இதழாகவோ அல்லது நிறுவனத்தின் செயற்பாடுகளைப் பருவரீதியாக அதாவது மாத ரீதியாகவோ அல்லது காலாண்டு ரீதியாகவோ தாங்கிவரும் செய்திக் கடிதங்களாகவோ அதுவுமன்றி இது நூல் வடிவிலோ அல்லது பருவ இதழ் ஒன்றில் கட்டுரை வடிவிலோ அதுவுமன்றி கையெழுத்துப் பிரதி வடிவிலோ இருக்கக்கூடிய நிறுவனத்தின் சந்திப்புகள் அல்லது கூட்டங்களின் அறிக்கையாகவோ அல்லது சுருக்கமாகவோ வழங்கப்படுகின்ற அல்லது படிக்கப்படுகின்ற கட்டுரைகளின் வெளியிடப்பட்ட பதிவேடு எனச் சொல்லப்படும் மாநாட்டுக் குறிப்பேடாகவோ அதுவுமன்றி நிறுவனங்கள் சார்ந்து கொண்டாடப்படும் ஆண்டு விழா, பொன் விழா, வெள்ளி விழா போன்ற சிறப்பு மலர்களாகவோ அல்லது நினைவு மலர்களாகவோ இவை இருக்கலாம்.<br />
<br />
வெளி உடல், உள்ளுறுப்புகள், ஆத்மா என மனிதனது உடலமைப்பை வகைப்படுத்துவது போன்று உருவம், உள்ளடக்கம், உட்பொருள்; என்ற மூன்று கூறுகளும் இணைந்ததே சிந்தனைப் பதிவேடு என்ற கோட்பாட்டுக்கு அமைய இப் பதிவேடுகளை அவற்றின் உருவமைப்பு, உள்ளடக்கம், உட்பொருள், தரம், பயன்பாடு, தேவை, தகவல் வெளிப்படுத்தப்படும் விதம், தகவல் பெறும் முறை, ஒழுங்கமைப்பு ஆகிய பின்வரும் ஒன்பது அம்சங்களின் அடிப்படையில் வகைப்படுத்துவது பொருத்தமானது.<br />
<br />
உருவமைப்பின் அடிப்படையில் இவை உபகரணத் தேவையற்ற ஒரு ஊடகம் என்ற பார்க்கப்படுகின்றது. கைத்தொழிலை பிரதான தொழிலாகவும் இயந்திரத்தை பிரதான மூலவளமாகவும் கொண்ட கைத்தொழில் சமூகத்தின் பிரதான பதிவுகளாக நூல்கள், பருவ இதழ்கள், செய்தித்தாள்கள் போன்ற அச்சுப் பதிவுகள் கருதப்படுகின்றன. தாள்களின் கண்டுபிடிப்பும் தொழினுட்ப வளர்ச்சியும் இணைந்து மிகப் பெருந்தொகையான நூல்கள் பருவஇதழ்களை உற்பத்தி செய்யும் சமூகமாக கைத்தொழில் சமூகம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.<br />
<br />
பல்துறைத் தகவல்களும் சுரக்கும் என்ற பொருளைத் தருகின்ற பெயர் கொண்ட வெளியீடு, கலாசுரபி என்ற இந்த வெளியீடு ஒரு கல்விசார் நிறுவனத்தின் ஆண்டு மலர் என்ற வகைப்பாட்டுக்குள் வருகின்ற ஒரு தொடர் வெளியீடு. ஒழுங்கான கால இடைவெளியில், சீரான வடிவத்தில், நிலையான தலைப்புடன் கூடியதாக, பகுதிகளாகவோ, தொடராகவோ வெளியிடப்படும் எந்தவொரு வெளியீடும் தொடர் வெளியீடுகள் எனப்படும். செய்தித்தாள்கள், பருவஇதழ்கள், வருடாந்த வெளியீடுகள், தொடர் நூல்கள், சங்க நடவடிக்கைக் குறிப்பேடுகள், நிறுவன வெளியீடுகள் என்பன இதில் உள்ளடங்குகின்றன.<br />
<br />
<div style="text-align: center;">
<b> '20ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலேயே தகவல் தொழினுட்ப உலகுக்குள் மனித சமூகம் நுழைந்துவிட்டபோதும் வடிவம், எழுத்து இரண்டிலும் நெகிழ்வுத் தன்மை கொண்டதாக, சிறியதாக, பாரமற்றதாக, விரும்பிய இடத்துக்கு எடுத்துச் செல்லக் கூடியதாக, முக்கிய அம்சங்களை வெட்டிச் சேகரிக்கக் கூடியதாக, பல பிரதிகள் எடுக்கக்கூடியதாக, தேவை முடிந்ததும் தூக்கி வீசக் கூடியதாக இருக்கக் கூடிய ஒரேயொரு சாதனம் நூலாகத் தான் இருக்க முடியும் </b></div>
என்ற லிக்லைடர் என்ற அறிஞரின் கூற்றும்,<br />
<br />
<div style="text-align: center;">
அன்றும் இருந்தேன், இன்றும் இருக்கின்றேன், என்றுமிருப்பேன் எங்குமிருப்பேன் கந்தலுமாவேன் கனகமும் கொள்வேன் வந்தனை செய்வார் வசமாய் விடு வேன் </div>
என்ற தில்லைநாயகம் அவர்களின் கூற்றும் தாளை அடிப்படையாகக் கொண்ட சாதனங்களின் பயன்பாடு தகவல் யுகம் ஒன்றில் சுலபமாக மறைந்துவிடக் கூடிய அல்லது மறக்கப்பட்டு விடக்கூடிய வாய்ப்பு இல்லாத நூலுருச் சாதனமான இது உள்ளது..<br />
<br />
கல்லில் தொடங்கி காலப் போக்கில் களிமண் கட்டியில் கருத்துக்கள் ஈந்தேன்<br />
பப்பிரசுத் தாளில் பன்னாள் வாழ்ந்தேன்,<br />
தோலாம் தாளிலும் துவண்டு இருந்தேன்<br />
மெழுகாம் ஏட்டிலும் மெதுவாய்த் தவழ்ந்தேன்<br />
ஓலையை மட்டும் விட்டேனா நான்?<br />
எல்லாம் படிக்க எழிலார் தாளிலும் உருவம் கொண்டேன்<br />
அறிவியலோட்ட அணைப்புச் சிறப்பால் மைக்ரோ உருவிலும் மறைந்து நிற்கின்றேன். என்னும் வே. தில்லைநாயகம்,<br />
<br />
கருத்தினில் பிறந்து மக்கள் காதினில் தவழ்ந்து தாளிக்<br />
குருத்தினில் வளர்ந்து தோலில் குன்றினில் துள்ளியோடி<br />
அருங்கலை அள்ளி அள்ளி அளிக்கின்ற வள்ளலாகி<br />
விருந்தூட்டுகின்றாய் இன்று வெள்ளைத்தாள் கோட்டைக்குள்ளே என்று எழிலோவியத்தில் தீட்டும் வாணிதாசன்<br />
<br />
உள்ளடக்கத்தின் அடிப்படையில் இந்த மலரானது முதல்நிலைத் தகவல் வளமாக அல்லது அடிப்படைத் தகவல் வளமாகக் கருதப்படத்தக்கது. உண்மையான ஆய்வு அபிவிருத்திகளை, அவற்றின் புதிய பிரயோகங்களின் விளக்கங்களை, அல்லது பழைய கருத்துக்களுக்கான புதிய விளக்கங்களை உடனுக்குடன் தாங்கி வரும் வெளியீடுகள் அனைத்தும் முதல்நிலைத் தகவல் வளங்கள் எனப்படுகிறது. மிக முக்கியமான தகவல் மூலாதாரங்களாகக் கருதப்படும் இவ் வளங்கள் புதிய அபிவிருத்திகள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிவிப்பதன் மூலம் அத்துறை தொடர்பாக அதிக அறிவு நிலையில் இருக்க உதவுதல், ஒரே மாதிரியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதைத் தடுத்தல், புதிய தகவல்களை உருவாக்குவதற்கு ஏனையோர்களுக்கு உதவுதல் என்ற வடிவில் ஆய்வாளர்களுக்குப் உதவுகின்றன. ஒரு குறிப்பிட்ட துறையின் வளர்ச்சி வீதமானது அத்துறை சார்ந்து வெளிவரும் முதல்நிலைத் தகவல் வளங்களின் தொகையிலேயே பெருமளவு தங்கியுள்ளது.<br />
<br />
முதல்நிலைத் தகவல் வளங்களில் முதல்நிலையில் வைத்து எண்ணப்படுவது பருவ இதழ்கள். நூல் உருவாக்க முயற்சிக்கு காலம் அதிகம் தேவைப்படும் என்பதனால் ஆய்வு முயற்சிகள் தொடர் வெளியீடுகளைக் களமாகக் கொண்டு அவ்வப்பபோது வெளிவருவதற்கு ஏதுவாக பருவ இதழ்களின் வெளியீடு அமைகின்றது.<br />
<br />
ஆராய்ச்சி நோக்கில் பார்க்கும்போது தொடர் வெளியீடுகளில் பருவ இதழ்களே வாசகரின் பயன்பாட்டுக்கு உதவும் உள்ளுர் சார்ந்த முக்கிய வளமாக இயங்குகின்றன. பருவ இதழ்களை வார இதழ், மாத இதழ், காலாண்டு இதழ் என கால அடிப்படையில் வகைப்படுத்தின் இது ஒரு ஆண்டிதழ். பொதுவாக ஏனைய நிறுவனங்களைவிட கல்வி சார்ந்த நிறுவனங்களே ஆண்டிதழ் உற்பத்தியில் அதிகம் ஈடுபடுகின்றன. கலாசுரபியின் முதலாவது இதழ் தேசிய கல்வியியில் கல்லூரியின் முதலாவது ஆண்டு நிறைவை யொட்டி வெளியிடப்பட்ட மலராகத் தோற்றம் பெற்று பின்னர் நிறுவனத்தின் ஆண்டு வெளியீடாக மாறியதா அல்லது ஒவ்வொரு வருடமும் ஆண்டு நினைவுப் பூர்த்திக்காக வெளியிடப்படும் ஒன்றாக உள்ளதா என்பது ஆய்வுக்குரியது.<br />
ஆண்டு மலர்கள் தனிப்பட்ட மனிதர்கள் அல்லது நிறுவனங்கள் சார்ந்து கொண்டாடப்படும் ஆண்டு விழா, பொன் விழா, வெள்ளி விழா போன்ற சிறப்பு மலர்களாகவோ அல்லது நினைவு மலர்களாகவோ இவை இருக்கலாம். பொது ஆண்டு மலர்களில் கணிசமானவை சனசமூக நிலையங்கள், இதழியல் துறை சார்ந்தவை. இலக்கிய ஆண்டு மலர்களும் கணிசமானளவுக்குக் காணப்படுகின்றன. ஆண்டு மலர்கள் பலதரப்பட்ட அறிஞர்களது கட்டுரைகளையும் உள்ளடக்கி யிருப்பதனால் ஆராய்ச்சியாளருக்குப் பெரிதும் பயன்படுவதாய் உள்ளன. பெருந்தொகை செலவழித்து அச்சுவடிவில் கொண்டு வருவதற்கான பொருளாதார மார்க்கமோ அதைச் சந்தைப் படுத்துவதற்கான வாய்ப்போ குறைவாக இருத்தல், தனது ஆய்வு முயற்சி ஒன்று அந்த ஆய்வுத்துறை சார்ந்த பருவ இதழ்களில் வெளியிடப்பட்டால் தான் அதற்கு மதிப்பு உண்டு என்ற கருத்துநிலை கட்டுரையாசிரியருக்கு இல்லாதிருத்தல், தத்தமது துறைசார்ந்த செயற்பாடுகளைப் பட்டியற் படுத்துவதிலும் பார்க்க சமூகத்தின் மதிப்பு மிக்க அறிஞர்களின் ஆக்கங்கள் தமது சிறப்பு மலரில் வருவது தான் தமக்குச் சிறப்பு என்ற கருத்துநிலையில் சிறப்பு மலர்களின் வெளியீட்டாளர் விடாப்பிடியாக இருத்தல் போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கின்ற சமூகம் ஒன்றின் ஆய்வு முயற்சிகளில் கணிசமான அளவைப் பதிவாக்கும் வாய்ப்பை இத்தகைய சிறப்புமலர் வெளியீடுகளே வழங்குகின்றமையால் இவற்றைத் துறை சார்ந்தவை என ஒதுக்கிவிடுவது பயன்பாட்டு நோக்கில் பாதகமானது. எடுத்துக்காட்டாக பாடசாலை ஒன்றின் சிறப்புமலர் பாடசாலையின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளைத் தான் பேசும் என்று அதனை ஒதுக்கிவிடமுடியாது. அதில் பட்டப்பின்படிப்புக்கு உதவக்கூடிய ஆய்வுக் கட்டுரைகளே அதிகம் காணப்படும். எனவே இவை பேணிப் பாதுகாக்கப்பட வேண்டிய வளமாக நூலகத்துறையால் இனங்காணப்பட்டிருக்கின்றன.<br />
<br />
சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல், படிப்போர்க்கின்மை, நல்ல சொற்களை அமைத்தல், இனிய ஓசையுடைமை, ஆழமுடைத்தாதல், பொருளை முறையும் அமைத்தல், உயர்ந்தோர் வழக்கத்துடன் மாறுபடாமை, சிறந்த பொருளுடைத்தாதல், விளக்கமாய் உதாரணங்கள் கையாளுதல் என நூல் அழகுகள் பத்து' என கூறுகின்றது எமது பழம் பெரும் இலக்கண நூலாகிய தொல்காப்பியம். (தொல்காப்பியம் பொருள் 665)<br />
<br />
நூல் குற்றங்கள்: கூறியது கூறல், மாறுபட்டுக் கூறல், குறைபடக் கூறல், மிகைப்படக் கூறல், பொருளில்லாமல் கூறல், மயங்கக் கூறல், இனிமையில்லாதன கூறல், இழி சொற்களால் புனைந்து கூறல், ஆதாரமின்றி தானே ஒரு பொருளைப் படைத்துக் கூறல், எவ்வாறாயினும் படிப்போர் மனங் கொள்ளாதவாறு கூறல் பொருள் (663)<br />
<br />
அடிப்படையில் ஒரு தகவல் வளமானது வாசகனுக்கு ஒட்டு மொத்தமாக எதைச் சொல்ல விழைகின்றது என்பதன் அடிப்படையில் இவற்றைப் புத்துயிர் தருபவை தகவலைத் தருபவை உயிர்ப்பூட்டுபவை என மூவகைப்படுத்தலாம். அந்த வகையில் கலாசுரபி என்ற இந்த மலர் தகவலைத் தரும் நூல் வகைக்குள் உள்ளடங்குகின்றது. வரலாறு, அரசியல், புவியியல் போன்று எடுத்துக் கொண்ட பொருட்துறை தொடர்பாக பொதுவான தகவலை உள்ளடக்குபவை தகவலைத் தரும் வளங்கள் எனப்படும். குறிப்பிட்ட பொருட்துறையில் எழுதப்படும் தனிப்பொருள் சார்ந்த தகவல் வளங்கள்;, கல்வித்தேவையைப் பூர்த்தி செய்யும் பாடநூல்கள் , ஆய்வுக்கு உதவும் அறிக்கைகள், ஆய்வுக் கட்டுரைகள், பருவ இதழ்கள் போன்ற அடிப்படைத் தகவல் வளங்கள், தேவைப்பட்ட உடனேயே குறிப்புகளை வழங்கும் உசாத்துணைத் தகவல் வளங்கள் இவ்வகைக்குள் அடங்கும்<br />
<br />
கல்வி என்பது கற்றல் கற்பித்தல் பற்றிய தெளிவான இலக்குகளையும் நோக்கங்களையும் கொண்டதாக இருக்க வேண்டும். கற்பிப்பவருக்கு அந்தஸ்தை வழங்காமல் கல்வியை வளச்க்கவோ வழங்கவோ முடியாது. பாடசாலைகளில் அறிவைத் தருவதற்கும் திறன்களை விருத்தி செய்வதற்குமென பயிற்சியும் அறிவுறுத்தலும் வழங்கும் செய்முறை கல்வி எனப்படுகின்றது. படிப்பு, அனுபவம் அல்லது கற்பித்தல் போன்றவற்றால் அறிவும் திறனும் பெறும் செய்முறை கற்றல் எனப்படுகின்றது. (ழுஒகழசன னiஉவழையெசல) கற்றல் எனப்படுவது படிப்படியாக நடத்தையில் பொருத்தப்பாட்டை அடைவதாகும் என்கிறார் ஸ்கின்னர் அவர்கள். மனதின் சக்தியால் உந்தப்பட்டு தன் செயல்களால் ஒருவன் பெறும் மாற்றங்களையே கற்றல் என நாம் கூறுகின்றொம்.. இதிலிருந்து தெரியவருவது அறிவு என்பது முடிவுப் பொருள் கல்வி என்பது முதற் பொருள்.<br />
மாறிவரும் சமுதாயமானது ஆற அமர இருந்து நல்லவை தீயவற்றை விலக்கக்கூடிய அறிவையோ அதற்கான நேர அவகாசத்தையோ கொடுக்கமுடியாதளவிற்கு பரபரப்பு மிக்கதாகவும் இயந்திரமயப்பட்டதாகவும்; இருப்பதானது புதிய தலைமுறையினரின் அறிவுத்தேடலிலும் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது நூலுணர்வு மிக்க எமது சமூகத்தின் புதிய தலைமுறையின் தேடலுணர்வையும் கணிசமானளவு பாதித்துள்ளதை மறுக்க முடியாது. இந்த வகையில் மாணவர்களைவ வாழ்நாள் முழுவதற்குமான கல்விக்காகப் பண்படுத்தும் பெரும் பணியை ஏற்றிருக்கும் இந்தக் கல்லூரியின் ஒரு வெளியீடு உயிர்ப்பு உள்ளதாக மாறவேண்டும் அதற்குஉழைப்பதற்கு சகலரும் முன்வரவேண்டும்.<br />
<br />
<br />Srikanthaluxmyhttp://www.blogger.com/profile/02621345440975786756noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-14981721.post-79042996997395791472015-11-09T12:21:00.001-08:002019-04-25T12:07:52.894-07:00நூலகர் நூலகர் என்கின்றீர் நுவலும் நூலகர் யாரையா ?<div style="text-align: center;">
நூலகர் நூலகர் என்கின்றீர் </div>
<div style="text-align: center;">
நுவலும் நூலகர் யாரையா ?</div>
<br />
<br />
இந்திய நூலகவியல் அறிஞர் திரு.வே. தில்லநாயகம் அவர்களின் மேற் சொல்லப்பட்ட கவிதை வரிகளுக்கு உயிர் கொடுக்கக் கூடிய ஒருவரை அறிவாலயம் சிறப்பு மலரை அலங்கரிப்பதற்குத் தேட மனது தீர்மானித்து, தேடிப் பலனேதுமற்றுக், களைத்து, வெறுமையில் முடிவுறத் தயாரானபோது மனதில் ஏற்பட்ட திடீர் ஒளிக்கீற்றில் வியாபித்து நின்றவர் திரு.ஆ. சபாரத்தினம் அவர்கள். ஆசிரியத் தொழிலில் நெடுங்காலம் நிலைத்திருந்து ஓய்வு பெற்ற இவருக்கும் நூலகத் தொழிலுக்கும் என்ன தொடர்பு?<br />
<br />
15 வருடங்களுக்கு முன்னர் முதன் முதலில் நூலகத் தொழிலுக்குள் நான் நுழைந்த காலத்தில் நூல் அடுக்குகளினூடே குடுகுடுவென ஓடித் திரியும் இவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கின்றேன். நூலகத்தின் உண்மையான வாசகர் யார், இடையிடையே எட்டிப் பார்க்கும் வாசகர் யார் என்ற தேடலில் முனைப்புற்றிருந்த அந்தக் காலத்தில் நுலகத்தில் என் கண்ணில் அடிக்கடி பட்ட ஓரிருவரில்; திரு.ஆ. சபாரத்தினம் ஒருவர். இவர் தொடர்பான வெறும் அவதானிப்புத் தேடலாக முனைப்புப் பெற்றதைத் தவிர்க்க முடியவில்லை. எனவே காண்பவர் அனைவரிடமும் இவரைப் பற்றிய தகவலைத் தேடுவதில் கவனம் சென்றது. அதிருஷ்டவசமாக எனக்குக் கீழ் சிறிது காலம் பயிலுனராகப் பணிபுரிந்த அவரது பேர்த்தி முறையானவரின்; உதவியுடன் நான் பெற்றுக் கொண்டவை இவை.<br />
<br />
'நாரந்தனையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சைவ ஆசாரமிக்க குடும்பத்திலிருந்து வந்தவர். பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தவர். அரிவரி வாத்தியாராக ஆங்கிலம் கற்பிக்கத் தொடங்கி 33 வருடங்கள் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு வரலாற்றாசிரியராகத் தொடர்ந்திருந்து அதிபராக உயர்ந்து ஓய்வு பெற்றவர்;. வரலாறு, சமயம் போன்ற துறைகளில் புத்தகம் எழுதுபவர். தான் வாசித்து மற்றவர்களுக்கும் கொடுப்பது மட்டுமன்றி மற்றவர்கள் கேட்கும் புத்தகங்கள் எங்கிருந்தாலும் அதைத் தேடியெடுத்துக் கொடுக்கும் பண்பு கொண்டவர். சிறு பிள்ளை என்றாலும் கூட மதித்து, அந்தஸ்து பேதமின்றி அனைவருக்கும் உதவும் மனப்பாங்கு கொண்டவர். புத்தகங்களுடன் நெருங்கிப் பிணைக்கப்பட்டவார். புத்தகம் இன்றிச் சபாரத்தினம் இல்லை.'<br />
<br />
உண்மை தான்! எமது சமூகத்தில் நூலகம் பற்றியும் நூலகத்தின் உண்மையான வாசகர் பற்றியும் பேச விழையும் எவரும்:<br />
'எந்த நேரமும் புத்தகமும் கையுமாகத் திரிபவர்;; ஆங்கிலம், தமிழ், வடமொழிப் புலமையுடையவர்; லத்தீன் மொழியில் ஓரளவு பரீச்சயம் உடையவர்; சிறு வயதிலேயே எழுத்துத் துறையில் நுழைந்து கலை, இலக்கியம் வரலாறு, மொழிபெயர்ப்பு போன்ற துறைகளில் ஏராளமான கட்டுரைகளை எழுதியவர்; காந்தியச் சிந்தனைகளிலும் அகிம்சையிலும் நம்பிக்கையுடையவர்; சொல்லும், செயலும் ஒன்றாக வாழ்ந்து காட்டுபவர்;; தீண்டாமையைச் சிறு வயதிலிருந்தே எதிர்த்தது மட்டுமன்றிச் சாதி பேதம் இன்றி எல்லா மாணவர்களையும் வீட்டுக்கு அழைத்து இலவசக் கல்வி வழங்கியவர்'<br />
<br />
என்றெல்லாம் போற்றப்படும் இவரை மறந்து விட்டுப் பேசமுடியாது. இத்தகைய பெருமைகளைச் சுமந்து கொண்டும் 'தலைப்பாரமின்றித';; திரியும் வல்லமை பெற்ற இந்த அறிஞர் 76 அகவையைக் கடந்த பின்னரும் எறும்பு போல் மிகவும் சுறுசுறுப்புடன் இருந்தும், நடந்தும், படுத்தும், என்றும் புத்தகமும் கையுமாக நம்மிடையே உலா வருபவர்;.<br />
<br />
இவரை நூலகத்தின் ஒழுங்கான வாசகராக மட்டும் பார்த்த மனம் சற்று முன்னேறி எழுதுவதற்காக வாசிப்பவரா? வாசிப்பதால் எழுதுகின்றாரா? என்ற ஆய்வுக்கு இட்டுச் சென்றமைக்கு இன்னொரு காரணம் வெளிநாட்டுப் பேராசிரியர் ஒருவருடன் இவரை எந்நேரமும் காணக்கூடியதாக இருந்தமையே. இவர் பற்றி மற்றவர்கள் என்ன கூறுகின்றார்கள் என்று அறியும் ஆவலில் அச்சு வடித் தகவலை நோக்கி தேடல் மீண்டும் தொடர்ந்தது.<br />
<br />
'<b>ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோன்;, நுண்மாண் நுழைபுலமுடையோன்; வையத்துள்; வாழ்வாங்கு வாழ்வோன், நடமாடும் பல்கலைக்கழகம் என்றெல்லாம் கூறக்கூடிய ஒருவர் எம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்றால் அவர் கரம்பனூர் திரு ஆ. சபாரத்தினம் அவர்களே. இவர் மேடையில் ஏறிப் பிரசங்கம் செய்வதில்லை. ஆனால் வாழ்ந்து காட்டுவதன் மூலமே சமுதாயத்தைத் திருத்தலாம் என்னும் அசைக்க முடியாத நம்பிக்கையுடையவர். இவர் போன்றவர்கள் ஆயிரத்தில் ஒருவரே இருக்க முடியும்'</b><br />
<br />
என்கின்றார் இவரின் மாணவர்களில் ஒருவரும் மூத்த எழுத்தாளருமான திரு காரை செ. சுந்தரம்பிள்ளை அவர்கள்.<br />
<br />
'<b>சிறு வயதில் இவர் சிறந்ததோர் பேச்சாளர், பேச்சால் அனைவரையும் கவர்ந்து தனக்கென ஒரு தனித்துவமான கூட்டத்தை வைத்திருந்தார். எந்நேரமும் புத்தகமும் கையுமாகக் காணப்படும் இவர் சிறந்ததொரு நாடக அறிஞராகவும் அறியப்படுகின்றார்'</b><br />
<br />
என்கிறார் இவரின் நண்பரும் இலக்கிய வட்டத் தலைவருமான த. பரமானந்தம் அவர்கள்.<br />
<br />
'<b>இனிமையானவர், அமைதியான சுபாவமுடையவர், மரபு இலக்கியத்தில் மட்டுமன்றி நவீன இலக்கியத்திலும் பாண்டித்தியம் பெற்றவர், மேனாட்டு இலக்கியப் பரிச்சயம் இவருக்கு நன்றாகவே உண்டு என்பதை மல்லிகையில் இவர் எழுதிய கட்டுரைகள் நிருபிக்கின்றன'</b><br />
<br />
என்கிறார் இவருக்குக் 'காவல் நகரோன்'; எனப் புனை பெயரிட்ட இன்னொரு நடமாடும் நூலகமான திரு ஏ.ஜே. கனகரட்னா அவர்கள்.<br />
<br />
'<b>1958ம் ஆண்டு ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியில் இலங்கை வரலாறு, உலக வரலாறு, வரலாற்றில் இலக்கியம் சமயம், அரசியல், அறிவியல் எனப் பல விடயங்களைக் கற்பித்தவர் இவர். இவரின் மூலமாகத்தான் மகாத்மா காந்தி, டால்ஸ்டாய், அரவிந்தர், தாகூர் போன்று மேலும் பலரை அறிந்து கொண்டேன். நூலகத்தில் புத்தகம் வாங்கிப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியவர் இவரே'</b><br />
<br />
என்கின்றார் இவரது இன்னோர் மாணவரும் நவீன சிந்தைகளைக் கொண்டவர் என அறியப்படுபவருமான திரு ஜீவகாருண்யம்.<br />
<br />
<b>';என் இனிய நண்பரான ஆசிரியரும் நூலகருமான திரு சபாரட்னம் அவர்களுக்கு அந்த மறக்க முடியாத சில அனுபவங்களுக்காக நன்றி செலுத்த விரும்புகின்றேன். மிகக் கடினமான சூழலில் கூட எனக்கு உதவ அவர் பின் நின்றதில்லை. போர்க் காலச் சூழல் ஏற்படுத்திய தடைகளைக் கடந்தும் ஒரு துவிச் சக்கர வண்டியில் நாம் இருவரும் அனைத்தையும் சாதித்தோம். எம்மைச் சுற்றி எறிகணைகள் வீழ்ந்து வெடித்துக் கொண்டிருக்கும்போது அவர் மிர்சியா இலியாட்சின் ஆக்கம் தொடர்பாக தனது மதிப்பீட்டை வழங்கிக் கொண்டிருந்தார். எல்லாவற்றுக்கும் மேலாக தனது சொந்த உதாரணத்தின் முலம் சைவத்தின் மிகச் சிறந்த அம்சங்களை எனக்கு உணர்த்தினார். அவற்றை அவர் தமது நீண்ட வாழ்க்கையினூடாக தம் உள்ளத்தில் ஒன்றிணைத்திருக்கின்றார்'</b><br />
<br />
2002ல் உப்சாலாவில் வெளிவந்த 'குடியேற்ற காலத்துக்கு முற்பட்ட தமிழகத்திலும் ஈழத்திலும் பௌத்தம்'. என்ற நூலின் முகவுரையில் மேற் கண்டவாறு குறிப்பிடுகின்றார் உப்சாலாப் பல்கலைக் கழகத்தின் சமயங்களின் வரலாற்றுத் துறைப் பேராசிரியர் பீற்றர் சால்க் அவர்கள்.<br />
<br />
<b>'அவர் ஒரு குடத்திலிட்ட விளக்கு, சைவசித்தாந்தத்தைப் பொறுத்தவரை அவர் ஒரு ஊரறியாப் பேரறிஞர். தமது ஆத்ம திருப்திக்காகக் கற்று இலைமறை காயாக வாழும் ஒரு சில அறிஞர்களுள் சபாரத்தினமும் ஒருவர்'</b><br />
<br />
என்கிறார் யாழ் பல்கலைக் கழகத்தின் வாழ்நாள் பேராசிரியரான திரு சுசீந்திரராசா அவர்கள்.<br />
<br />
அறிஞர் என்பதை அப்பட்டமாகக் காட்டிய ஊடகங்கள் அறிஞரானதற்கான அடித்தளத்தை மட்டும் காட்டாமல் விட்டது ஏன் என்று மனதிற்குள் எழுந்த வினா இவரிடம் நேரடியாகவே அணுகும் தூண்டலை ஏற்படுத்தியது. இந்த அடிப்படையில் <br />
<br />
<br />
'சிறு வயதிலிருந்து எனக்கு இருந்த வாசிப்புப் பழக்கமே என்னை மற்றவர்கள் அறியும் நிலைக்கு உயர்த்தியது. வெறும் கல்வித் தகைமை மட்டும் இருந்திருந்தால் நானும் ஆசிரியத் தொழிலுடன் என்னை மட்டுப்படுத்திக் கொண்டு சமூகத்தின் எங்கோ ஒரு மூலையில் இருந்திருப்பேன். வாசிப்புப் பழக்கம் எனக்குக் கிடைத்த அரிய சொத்து என்றே எண்ணுகின்றேன்'.<br />
<br />
வாசிப்புப் பழக்கத்துக்கு முதல் அடியிட்டவர் எனது தாய் தான். தன் பிள்ளைக்கு வாசிப்புப் பழக்கத்தை ஊட்ட வேண்டும் என்ற அறிவியல் நோக்கில் அவர் எதையும் செய்யவில்லை. அவர் தன்னையறியாமலேயே செய்த மகத்தான பணி கதை சொல்லுதல். நாள்தோறும் கதை சொல்லும் அந்தப் பழக்கமே எனது வாசிப்புக்கு அடிகோலியது என்றே நான் நினைக்கின்றேன்.<br />
<br />
கிராமத்தில் நான்காம் வகுப்புப் படிக்கும் போதே தட்டுத் தடங்கலின்றி விரைந்து வாசிப்பதைப் பார்த்த ஆசிரியர் வித்துவான். இ. பொன்னையா அவர்கள் ஏழாம் வகுப்பு மாணவர்களுடைய 'பாண்டவர் லீலை' என்ற பாடநூலை என்னைக் கொண்டு வாசித்துக் காட்டுவார். அப்போதிருந்தே பொழுது போகாத நேரங்களில் வீட்டிலிருந்து இலங்கை நாவல்களை வாசிக்கத் தொடங்கிவிட்டேன். புதுப்புது வெளியீடுகளான சுத்தானந்த பாரதியின் யோகசித்தி, திருமந்திர விளக்கம் போன்றவற்றை அவர் படிக்கும் போது நான் பின்புறமாக நின்று எட்டி எட்டிப் பார்ப்பேன். படிக்க விருப்பமா என்று கேட்பார். ஆம் என்று தலையாட்டுவேன். ஓரிரவு மட்டும் தான் தருவேன் என்பார். 300 பக்கம் என்றாலும் குப்பி விளக்கில் இரவிரவாகப் படித்து முடித்துவிட்டுக் கொடுத்து விடுவேன். ஆறாம் வகுப்பில் கணித பாட ஆசிரியர,; சுத்தானந்த பாரதியார் மொழி பெயர்த்த இளிச்ச வாயன், ஏழை படும்பாடு போன்ற பிரெஞ்சு நாவல்களைத் தந்தார். வாசிக்கும் பழக்கம் கூடியது. ஆனந்த போதினி, ஆனந்த விகடன், பின்னர் கல்கி, கலைமகள் போன்றவற்றை வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.<br />
<br />
1944ல் நான் புனித அந்தோனியார் கல்லூரியில் 8ஆம் வகுப்புப் படித்த காலத்தில் ஆங்கில இலக்கியம் படிப்பித்த ஆசிரியரான வி.அரசன் 'வாசிப்பு மனிதனைப் பூரண மனிதனாக்கும், பேச்சு ஆயத்த நிலையில் வைத்திருக்கும், எழுத்து சரியாக நுட்பமாகச் சிந்திக்க வைக்கும்'என்ற பிரான்ஸிஸ் பேகனின் வாசகத்தைக் கத்திக் கத்திச் செவிகளில் திணித்துவிட்டார். பெரும்பாலும் எமது முதல் பாடவேளை ஒழுக்க அறிவியலுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும். அப்பாடவேளையில் பெரிய பெரிய தொகுதிகளாக உள்ள சிறுவர் கலைக்களஞ்சியம், புக் ஒவ் நொலேட்ஜ் போன்றவற்றில் ஒவ்வொரு தொகுதியாகக் கொண்டு வந்து ஒரு பாட வேளைக்கு ஒரு விடயம் என்ற அடிப்படையில் எமக்கு ஒவ்வொன்றாக வாசித்து விளக்குவார். எத்தனை வேலைகளுக்கிடையிலும் படுக்கப் போகுமுன்னர் பத்து நிமிடமாவது ஒரு புத்தகம் வாசித்துவிட்டுப் படுக்க வேண்டும் என்பார்.<br />
<br />
என்னுடன் படித்த நண்பர் திரு.இ.கிருஷ்ணபிள்ளை அவர்கள் நின்றும், இருந்தும், நடந்தும், கிடந்தும், உண்டும், என்றும் புத்தகங்களுக்கிடையில் இருக்க வேண்டும் என என்னை ஊக்கப்படுத்துவார். இச் சூழலால் வாசிக்கும் பழக்கம் மேலும் கூடியது. ஒருவரிடம் நூல் இருந்தால் 5 மைல் தூரம் நடந்து போய் என்றாலும் இரவல் வாங்கிப் படிக்கும் அளவுக்குப் புத்தகத்தில் ஒரு வேட்கை உருவாகியது.<br />
<br />
1947இல் மகரகம ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சுமார் 20 கண்ணாடி அலுமாரிகளில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. விஞ்ஞானம் கணிதம் போன்றவற்றைக் கண்ணாடிக்குள் பார்த்தும் பிறவற்றை கையிலெடுத்துப் பொருளடக்கத்தைப் பரிச்சயம் செய்தும் கொள்வேன். நான் படிக்காத பாடமானாலும் அவற்றில்; என்னென்ன நூல்கள் இருக்கின்றன என்று அவர்களுக்குக் காட்டிக் கொடுக்குமளவிற்கு நினைவு கூர்மையாக இருந்தது.<br />
<br />
<br />
'தற்போதைய யாழ். மாநகரசபைப் பொது நூலகம் 1951ஆம் ஆண்டு முற்றவெளி நகர மண்டபத்துக்குக் கிழக்கே வாடி வீட்டுக்குத் தெற்கிலுள்ள கட்டடத்தின் மேல் மாடியில் இயங்கிக் கொண்டிருந்த காலத்திலேயே அங்கத்தவராகச் சேர்ந்து விட்டேன். அன்றிலிருந்து இன்று வரை இந்த நூலகத்தில் அங்கத்தவராக இருக்கின்றேன். 1960-64 இலண்டன் பேராதனைப் பல்கலைக்கழகப் பரீட்சைகளுக்குப் படிக்க இது உதவியது. பண்டிதமணி கணபதிப்பிள்ளை, பேராசிரியர் கைலாசபதி போன்றோருக்குத் தேவையான கிடைத்தற்கரிய நூல்கள் கூட இங்கு பெற்றுக் கொடுத்துள்ளேன். ஐசக் தம்பையா, கு. வன்னியசிங்கம் போன்றோரின் நூற்றொகுதிகளைப் பார்வையிடும் வாய்ப்புக் கிடைத்தது. 1965இல் சரித்திர நூல்கள் எழுதும் போது சிறிதும் அனுபவமில்லாத எனக்கு இங்குள்ள நூல்களே கை கொடுத்துதவின. நூலகம் எரிந்தபோது வேறு எவரையும் விட அதிகம் கவலைப்பட்டவன் நான் தான்';. என்று இன்றும் அதே கவலையுணர்வுடன் கடந்த காலத்தை நினைவு கூருகின்றார் இவ்வறிஞர்.<br />
<br />
<br />
தனது பழைய மதிப்பைக் கணிசமாக இழந்து விட்டபோதும் கணினி போன்ற நவீன துறை சார்ந்த புதிய நூல்கள் மட்டுமன்றி சிறந்த கலை நூல்களையும் கொண்டிருக்கின்றது யாழ்.மாநகரசபைப் பொது நூலகம். வரலாற்றுத்துறை சார்ந்த முக்கிய புத்தகங்களை கொண்டிருக்கின்றது யாழ். பல்கலைக்கழக நூலகம். என தனது கருத்தைக்; கூறுகின்றார்<br />
<br />
<br />
வாசிப்புப் பழக்கம் ஒன்றில் வீட்டிலிருந்து அல்லது படிப்பிக்கும் ஆசிரியரிடமிருந்து தான் பிள்ளைக்கு ஊட்டப்பட வேண்டும். நடைமுறையில் வாசிப்புப் பழக்கத்துக்குத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்ளாமலேயே தனது படிப்பை முடித்துவிட்டு பெற்றோராகவோ அல்லது ஆசிரியராகவோ மாறும் பண்பு இச் சமூகத்தில் இருக்கும் வரை இந்த பலவீனம் தொடர்ந்து நிலை கொள்வது தவிர்க்க முடியாதது.<br />
<br />
இருபதாவது வயதிலேயே தன்னுடன் கூடப் படித்தவர்களால் ஏழசயஉழைரள சநயனநச எனப் புகழப்படுமளவிற்குத் தீவிர வாசிப்புக்காரராக இருக்கும் இவர் வாசகர் மட்டுமல்லர். இவரது நடவடிக்கைகளை மிகக் கூர்ந்து அவதானிக்கும் எவரும் மற்ற எல்லாத் தொழில்களையும் விட நூலகத் தொழில் இவருக்கு மிகப் பொருத்தமானது என்று அறுதியிட்டுக் கூறுமளவிற்கு நூலகரால் கூடச் செய்ய முடியாத எத்தனையோ உதவிகளை இவரிடமிருந்து பெற்ற பெரியவர்கள் மிக அதிகம். தனக்குத் தேவைப்படும் நூல்களை விடப் பிறருக்குத் தேவைப்படும் நூல்களைத் தேடி அலையும் பண்பு தான் இவரிடம் அதிகம். 74 அகவையைத் தாண்டிய பின்னரும் கூட எறும்பு போன்று மிகவும் சுறுசுறுப்பாக நூலக இறாக்கைகளுக்குள் நூல் தேடித் திரியும் இவரைப் பார்த்தால் புரியும்இ இவர் தேடும் நூல்களில் பெரும்பாலானவை இவருக்கு வேண்டிய எவரினதோ அறிவுத் தேடலுக்கு உதவப்போகின்றன என்று. சுவீடன் பல்கலைக்கழகப் பேராசிரியர் பீற்றர் சார்க் அவர்களுக்குத் தேவைப்படும் பெரும்பாலான நூல்களை எங்கிருந்தாலும் தேடி எடுத்து உதவுவதில் முன்னிற்பவர் இவர் என்பது இன்று நாம் நேரே கண்டுணரும் ஒன்று. நல்லதோர் வாசிப்புப் பழக்கமே நல்லதொரு நூலகராகவும் இயங்கும் ஆற்றலைக் கொடுத்திருக்கின்றது.<br />
<br />
உங்களின் இறுதி இலட்சியம் எது வென வினவியபோது பொ. கைலாசபதியின் சிந்தனைகள் என்ற 700 பக்க நூலுக்கு குறிப்பு விளக்கம் எழுதி அதை வெளியிடுவதே தனது பெருவிருப்பம் என்கின்றார்.<br />
<br />
நூலகத் துறை சார்ந்த இவரது பங்கு அளப்பரியது. மாணவப் பருவத்திலேயே நாரந்தனை இளைஞர் சங்கத்தை அமைத்து 23 சஞ்சிகைகளை இந்தியாவிலிருந்து தருவித்து வாசிகசாலை ஒன்றைப் பத்து ஆண்டுகள் வரை நடத்தியவர். கிராம முன்னேற்றச் சங்கம், சனசமூக நிலையங்கள் போன்றவற்றுக்கு கணிசமான பங்களிப்பு வழங்கியவர்.<br />
<br />
யாழ்ப்பாணப் பொதுநூலகராக இருந்த கலாநிதி வே.இ. பாக்கியநாதனிடமும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி நூலகராக இருந்து பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் நூலகப் பொறுப்பாளராக இருந்த திரு.ஆர். தம்பையாவிடமும் நூலகவிஞ்ஞானம் படித்திருக்கிறார்;. அக்காலத்தில் பரீட்சைக்கு தோற்றிய 17 பேரில் தாம் மட்டுமே சித்தியடைந்ததாகக் கூறுகிறார். கீழைத்தேச நூலகவியலின் தந்தை எனப் போற்றப்படும் எஸ்.ஆர். இரங்கநாதன் யாழ். பொது நூலகத்தின் வடிவமைப்புத் தொடர்பாக ஆலோசனை வழங்கும் பொருட்டு இங்கு வந்திருந்தபோது அவரை நேரில் சந்தித்து உரையாடி தான் பிறந்த மண்ணுக்கே அழைத்துச் சென்று அங்கு அனைவருக்கும் ஒரு விரிவுரையையும் ஒழுங்குபடுத்தி மூன்று மணி நேரம் அவருடன் கழித்ததையும் அவரின் அறிவை நினைத்துத் தான் பிரமித்ததையும் பெருமையுடன் நினைவு கூறுகின்றார்.<br />
<br />
சுவீடன் உப்சாலாப் பல்கலைக்கழகத்தின் சமயங்களின் வரலாற்றுத் துறையில் மூன்று மாதம் தங்கியிருந்து பேராசிரியரின் தொகுப்புக்களைச் சுவீடன் முறையிலான நூலக விஞ்ஞான முறையிலான பகுப்பாக்க முறையில் ஒழுங்குபடுத்தியவர். நூலகத் துறை சார்ந்து இவர் ஆற்றிய மாபெரும் பணியாக நாம் கருதக் கூடியது யாழ்ப்பாணத்தில் வெளி வந்த சமயம் சம்பந்தமான நூல்கள், கட்டுரைகள் போன்றவை தொடர்பாக இவர் தொகுத்த 150க்கும் மேற்பட்ட ஆக்கங்களுக்கான குறிப்புதவு நூல் விபரப் பட்டியலாகும். 1986ல் இவரால் தொடங்கப்பட்ட இப் பணியானது தற்போது தான் அச்சுருப் பெறுவதற்கான ஆயத்த நிலையில் இருக்கின்றது. இதைத் தொகுப்பதற்கு யாழ்ப்பாணக் கல்லூரி நூலகம், யாழ். பல்கலைக் கழக நூலகம் மட்டுமன்றி தனிப்பட்டவர்களது வீட்டில் வைத்துப் பேணப்படும் நூல்களும் பயன்படுத்தப்பட்டாக இவர் சொல்கின்றார்.<br />
<br />
நடமாடும் இந்த நூலகம் ஒரு நூலகத்தையே நிர்வகிக்கும்; வாய்ப்பு இல்லாது போனது இந்தச் சமூகத்தின் இழப்பு என்பது நிதர்சனமான உண்மை.<br />
<div>
<br /></div>
Srikanthaluxmyhttp://www.blogger.com/profile/02621345440975786756noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-14981721.post-86518749911368653142015-11-09T12:11:00.000-08:002015-11-09T12:11:32.930-08:00இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன்<br />
ஈழத்தின் நெருக்கடி காலத்து இலக்கிய ஆளுமை<br />
<br />
அன்பும் அறநெறியும் ஆன்மீக வாழ்வும் இணைந்ததோர் அற்புதமான ஊர் இணுவையூர். போட்டதெல்லாம் பொன்னாக மிளிரும் வளங்கொழிக்கும் செந்நிறப் பூமி-- மனிதனதும் மண்ணினதும் தாகம் தீர்க்கும் வற்றாத இனிக்கும் கிணறுகள்-- பணம் பண்ணுவதற்கு புகையிலைக் கண்டு-- பதமாக உண்பதற்கு மரவள்ளிக் கிழங்கு-- வீட்டு நிகழ்வோ ஊர்ப் பொது நிகழ்வோ அடுத்த ஊருக்கு உதவி தேடிப் போகத் தேவையில்லை என்னுமளவிற்கு மாலை கட்டவா, மங்கல முழக்கம் செய்யவா, மணங்கமிழச் சமைக்கவா, அபிஷேகம் செய்ய இளநீர் பறிக்கவா என தொழிலுக்கொரு தெருவென மக்களைக் கொண்ட நல்லதொரு பொருளாதாரச் சூழல்--<br />
முகங்கழுவி உடுத்த உடுப்புடனேயே கும்பிட்டு வந்து தேத்தண்ணி குடிக்க வாகாய், வீட்டு வளவுக்குள் வயிரவர், கையொழுங்கைகளின் முகப்பில், தெருவோரங்களில்; கல்லுப்பிள்ளையார்கள், கிழக்கு மேற்கு வடக்குத் தெற்கு என்று அனைத்துத் திசையிலும் சமூக ஒருங்கிணைப்பு மையங்களாய் தேரோடும் வீதியுடன் கூடிய ஆகம விதிக்குட்பட்ட அம்மன் பிள்ளையார், முருகன் ஆலயங்கள், கடுகு சிறிதென்றாலும் காரம் பெரிது என்ற வகையில் மச்சம் அளையாதவர்களையும் தமது சக்தியால் மடை வைக்கத் தூண்டுகின்ற பத்திர காளி என்று, தடுக்கி விழுந்து எழும்பிப் பார்த்தால் முன்னே ஒரு தெய்வம் அமர்ந்திருக்கும் என்று சொல்லுமளவிற்கு நல்லதொரு ஆன்மீகச் சூழல்---<br />
சமய ஞானத்துடன் தாய்மொழி, அயல்மொழி இரண்டிலும் பாண்டித்தியம் பெறும் வகையில் யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்ட முதலாவது இந்து மகளிர் கல்லூரி என்ற பெருமையைச் சுமக்கின்ற இராமநாதன் கல்லூரி என்னும் முதலாம்தர பாடசாலை, இலங்கைத் தீவில் வயதில் மூத்த இரண்டாவது சைவப் பாடசாலை என்ற பெயர் தரித்த அன்றைய சைவப்பிரகாச வித்தியாசாலை, சைவம் தழைக்கவென உருவாக்கப்பட்ட சைவமகாஜன வித்தியாசாலை என்று பள்ளிப் படிப்புக்கென இந்தச் சிறிய ஊருக்கு மூன்று பாடசாலைகள், சாதிக்கு மட்டுமன்றி குறிச்சிகளுக்கென்றும் வாசிகசாலைகளாய் இயங்கும் ஏழெட்டுப்பத்து சனசமூக நிலையங்கள், பாடசாலைப் பக்கம் எட்டிப்பார்க்காதவர்கள் அல்லது எட்டிப்பார்க்கும் வசதியற்றவர்கள் கூட திருக்குறள் போன்ற நீதி நூல்களையும் பாரதம் போன்ற காப்பியங்களையும் கந்த புராணம் போன்ற சமய நூல்களையும் செவிவழி பெறுவதற்கான சிறந்த சொற்பொழிவுக் கூடங்களாக அமைகின்ற கோவில் மண்டபங்கள், சுருட்டுக் கொட்டில்கள், அரசியல் முதற்கொண்டு அடுத்தவரின் அந்தரங்கங்கள் வரை அலசப்படும் வீட்டுத் திண்ணைகள், வேலிப் பொட்டுகள், கௌரவிக்க வேண்டும் என்ற உணர்வு எழுந்த பின்னர்தான் கல்விப் பின்னணியை அறிய ஓடுமளவிற்கு அறிவில் சிறந்த அறிஞர்கள், பேரறிஞர்கள், சித்தர்கள், சாத்திர விற்பன்னர்கள், பரியாரிகள், விஷக்கடி வைத்தியர்கள், விவசாய விஞ்ஞானிகள், கலைஞர்கள், கைப்பணி செய்வோர் என்று அறிவு சார்ந்தவர்களும் கல்வித் தகைமையின் அடிப்படையில் மட்டும் கௌரவம் பெறும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், எனப் பல தொழில் சார்ந்தவர்களும் ஒருங்கே வசிக்கின்ற பேறு பெற்ற நல்லதொரு பட்டறிவும் பகுத்தறிவும் நிரம்பிய சூழல்.<br />
ஒரு காலத்தில் தூர இடங்களில் இருந்து வந்து பிள்ளை பெற்றுத் துடக்குக் கழிவும் செய்துவிட்டு திரும்பும் வசதி படைத்த புகழ் பூத்த மகப்பேற்று ஆஸ்பத்திரி, இட்ட இடைஞ்சல்கள் அனைத்தையும் தீர்ப்பார் என்ற நம்பிக்கையுடன் விழுந்தடித்து ஓடிவரப்பண்ணுமளவிற்கு சக்தி வாய்ந்த சாத்திர விற்பன்னர்கள், உள வைத்தியத்துக்குப் பேர் போன காரைக்கால் சுவாமியார், விஷக் கடிக்கு பேர் போன முருகையா வாத்தியார், ஆயுள் வேத வைத்தியத்துக்குப் பேர் போன செல்லப்பாப் பரியாரியார் என்று நல்லதொரு மருத்துவச் சூழல்---<br />
தூங்கி எழுந்தால் பண்ணிசையோ பாட்டிசையோ வாத்தியக் கருவிகளின் ஓசையோ என்று கலைகளின் சங்கமமம், நாடகக் கலைஞர்கள், சங்கீத விற்பன்னர்கள், புலவர்கள், கவிஞர்கள், பல்கலை வேந்தர்கள் என இயல் இசை, நாடகம் என முத்தமிழ் சார்ந்த அறிஞர்கள், கலைகளைக் கற்பிக்க ஒரு நுண்கலைப்பீடம், கலைகளை வளர்க்க கோவில் விழாக்கள், ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதை போதிக்காமல் செயற்படுத்திக் காட்டுமளவிற்கு வேட்டியும் நசனலுமாக இன்றும் உலாவிக் கொண்டிருக்கின்ற எமது அன்றைய வாத்தியார்கள், இன்றைய அம்மாக்களின் கோலம் கணிசமாக மாறிவிட்டபோதும் ஒரு அம்மா எப்படி இருந்தா, இருப்பா என்பதற்கு அத்தாட்சியாக தட்டுடுப்பும் வகிடெடுத்த குடும்பியுமாக இன்றும் உலவும் அம்மாக்கள், என்னதான் தொலைக்காட்சியின் ஊடுருவல் இருந்தாலும் ஊர்ப் பொது நிகழ்வில் தமிழ்க் கலாசாரத்தின் சின்னங்கள் அனைத்தையும் பேணும் வகையில் பட்டுப் புடவை, தலை நிறைய மாலை, என்று ஒன்று கூடும் மக்கள் என நல்லதொரு கலாசார சூழல்--<br />
இணுவை மண் உண்மையில் இணையிலி தான். உலகப் புகழ் பெற்ற இணுவில் கந்தனின் மஞ்சம் இந்த மண்ணுக்குரியது. சுடலையுடன் இணைந்த வகையில் மூலஸ்தானத்தில் பஞ்சலிங்க வடிவில் அமர்ந்திருக்கும் காரைக்கால் சிவன் காலத்தால் முந்தியது. வேதத்தில் சேர்க்கவென்று வலிது முயன்றும் பயனடையாது தோல்வியின் சின்னங்களாக இன்றும் இருக்கும் அன்றைய அமெரிக்கன்மிசன் பாடசாலைக் கட்டிடமும் ஆஸ்பத்திரி வளவிலுள்ள தேவாலயமும்... இது மட்டுமா! பட்டறிவும் படிப்பறிவும் இணைந்து உருவாகின்ற ஞானம் (றளைனழஅ) என்ற சொல்லின் அத்தாட்சிகளாக பல ஞானிகளை கொண்ட பெருமை பெற்றது இந்த மண்.<br />
இந்த மண் பற்றி இத்தனை பீடிகை ஏன்?. ஒரு மனிதனைச் செதுக்குவதில் அவன் வாழும் சூழல் மிக முக்கியமானது. இந்த மண்ணுக்குரிய சகல அம்சங்களதும் வார்ப்பாகத் தான் நான் இருக்கின்றேன். இருக்கவும் விரும்புகின்றேன். நீங்களும் கூட விரும்பியோ விரும்பாமலோ உங்கள் சூழலிடமிருந்து தப்பிக்கவே முடியாது. பொதுவாகவே தமிழ்ச் சமூகத்தில் போதனைகள் எடுபடுவதில்லை. முக்கியமாக இணுவை மண்ணில் இந்த எடுபடாத தன்மை சற்று அதிகம். இங்கு ஒவ்வொருவரும் தாம் நடந்து கொள்ளும் முறையினு10டாக அடுத்தவருக்கு வழிகாட்டலை மேற்கொள்ளலாமே தவிர வேறு எந்த வகையிலும் அறிவூட்டலை மேற்கொள்வது சாத்தியமில்லை. நான் பிறந்து வளர்ந்த இச் சூழல், இச்சூழலுடன் அடிக்கடி நான் முரண்படும் சந்தர்ப்பங்கள், இந்த முரண்பாடுகளை எதிர்கொள்ளப் பயன்படுத்தும் தந்திரோபாயங்கள், மீண்டும் இந்தச் சூழல் என்னை தன்னுள் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற உந்துதலுடன் நான் மேற்கொள்ளும் முயற்சிகள் எல்லாமே இன்னொருவர் பற்றிய எமது பார்வையில் செல்வாக்கு செலுத்துவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஏனெனில் அடுத்தவரை அளப்பதற்கு நாம் தேர்ந்தெடுக்கும் அளவுகோல் நாமேயன்றி வேறெதுவும் இல்லை. இணுவையூரில் அதிகம் பார்த்து வன்னி மண்ணில் அதிகம் பழகிய ஒரு இலக்கியவாதி, ஊடகவியலாளன், திறனாய்வாளன் என்ற பல்பரிமாணத் திறன் மிக்க சிதம்பர திருச்செந்திநாதன் அவர்களைப் பற்றிய எனது மதிப்பீடும் கூட இவற்றை அடிப்படையாககக் கொண்டே அமையும் என்பது தவிர்க்கமுடியாதது. <br />
ஜேம்ஸ்பொண்ட் பாணியில் அல்லது அன்றைய முன்னணி நடிகர் ஸ்ரீகாந்தை நினைப்பூட்டும் வகையில் டிங்டொங் பெல்பொட்டம், சகிகட்டோ, ஹிப்பியோ-- இந்திய பாஷையில் சொல்வதானால் பாகவதர் கால கிராப்பு முடி, பெரிய கறுத்தக்கண்ணாடி என இணுவில் சூழலுக்கு முற்றிலும் பொருந்தாத ஒரு உருவமாகவே எழுபதுகளின் பிற்பகுதியில் இவரைப் பார்த்திருக்கின்றேன். இவரது தந்தையுடன் ஸ்நேகம் கொண்ட அளவிற்கு இவரைப் பார்த்து சிரிக்கக்கூட எண்ணாத பருவம் அது. எழுபதுகளின் ஆரம்பத்திலேயே எழுத்துத் துறையில் இவர் பிரவேசித்துவிட்டபோதும், கதைப்புத்தகமே கண்ணாக எனது பருவம் இருந்தபோதும் இவரை இலக்கியவாதியாக அறிவதற்கான எந்தவொரு சூழலும் எனக்கு இருக்கவில்லை என்பதை நான் ஒத்துக்கொண்டேயாகவேண்டும். சிறுகதை உலகில் இவருடன் பழகக்கூடிய வாய்ப்பு தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தான் ஏற்பட்டது எனினும் இவரை ஒரு ஊடகவியலாளனாகவே முதலில் சந்தித்திருக்கின்றேன். இந்தச் சந்திப்பானது இவரது வாரிசுகளில் முதன்மையானவர் என்று சொல்லக்கூடிய பு.சத்தியமூர்த்தியால் மேலும் வலுவூட்டப்பட்டது. கிராமம் கிராமமாகச் சென்று அறிவூட்டல் நிகழ்வுகளை மேற்கொண்ட அந்தக்காலப்பகுதியில் இவரின் சமூகப்பணிகளை இவருடன் இணைந்து பணிபுரிந்த பல இளம் படைப்பாளிகள் ஊடாக இனங்கண்டிருக்கின்றேன்.<br />
எல்லாச் செயற்பாடுகளிலும் மூக்கை நுழைத்து தனக்குத் தானே கிரீடம் சூட்டிக்கொள்ளும் பண்போ அல்லது தனது வால்களை தூண்டிவிட்டு தனக்கு முகமன் தேடும் பண்போ இவரிடம் நான் கண்டதில்லை என்பதற்கு நானே சாட்சியாக அமைந்திருப்பது விந்தை தான். மூன்று சந்தர்ப்பங்கள் இவரை எடைபோடுவதற்கு போதுமானது என நினைக்கின்றேன். முதலாவது சந்தர்ப்பம் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் சத்தியமூர்த்தியின் வேண்டுகோளில் பல இடங்களில் கலந்துரையாடலில் பங்கேற்றிருக்கின்றேன். தாம் முன்பே அறிந்திராத மனிதர்களின் ஆற்றலை ஒருவருக்கு எடுத்துரைத்து அவரை அம்மனிதர்களிடம் சுயமாக அணுகச் செய்து அவர்களை ஒரு நிகழ்வில் பங்கேற்றச் செய்வது பொதுவாக சராசரி மனிதரிடம் காணமுடியாததொன்று. சமூகப் பணி ஆற்றுவதற்கும் 'பெரிசுகள்' வந்துதான் அழைக்கவேண்டும் என்ற வர்க்கத்தில் நான் இல்லை என்பதை உணர்ந்து சிறிசுகளை என்னிடம் அனுப்பினாரா அல்லது சிறிசுகளிடம் தலைமைத்துவப் பாங்கை வளர்த்துவிடுவது என்ற நோக்கில் திரைமறைவில் இருந்துகொண்டே அனைத்தையும் செயற்படுத்தினாரா என்பதை மதிப்பிடும் முதிர்ச்சி அந்த நேரத்தில் என்னிடம் இருக்கவில்லை. எனினும்கூட முகத்துக்குப் புன்னகைத்து முதுகுக்குப் புறங்கூறும் பண்பினராக அன்றி இன்றுவரை என்னுடன் அதே அன்புடனும் மதிப்புடனும் இருக்கக்கூடிய ஒரு இளைய தலைமுறையொன்று அவரால் வளர்க்கப்பட்டிருப்பது அவர் இந்த மண்ணுக்கு விட்டுச்செல்லப்போகும் சொத்து என்பதில் எனக்கு மிகுந்த மனநிறைவு உண்டு.<br />
மற்றிரு சந்தர்ப்பங்களும் தொண்ணூறுகளின் பிற்பகுதியில் ஏற்பட்டவை. பொதுவாகவே இலக்கியச் சூழலில் பல கட்சிகள் இருப்பது தவிர்க்கமுடியாததது. ஒரே கட்சியைச் சேர்ந்த இருவர் சந்திக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் மாற்றுக்கட்சியைப்பற்றிய பிரலாபமே மேலாங்கியிருக்கும். புதுக்குடியிருப்புக்கு வரும்போதெல்லாம் அவருடன் அடிக்கடி கலந்துரையாடும் சந்தர்ப்பம் எனக்கு ஏற்பட்டிருக்கின்றது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அடுத்தவரை விமர்சிக்கும் பண்பை நான் இவரிடம் கண்டதில்லை. பார்த்தவுடன் ஒரு சிரிப்பு. மாதமலருக்குரிய படைப்பை நேரத்திற்குள் தந்துவிடுமாறு பணிவான ஒரு வேண்டுகோள். அத்துடன் நாம் திரும்பவேண்டியது தான். மாதமலரை விமர்சிப்பவர்கள் தொடர்பாக ஏதாவது கேட்டால் ஒரு சிறுசிரிப்புடன் பதில் முடிந்துவிடும். மனிதர்களை விமர்சிப்பதை விடுத்து விவகாரங்களில் மட்டும் கவனம் செலுத்தும் எனது பண்பை உணர்ந்து தான் இத்தகைய போக்கை இந்த இலக்கியவாதி பின்பற்றுகின்றார் என்று தான் ஆரம்பத்தில் நினைத்திருந்தேன். ஆனால் இவர் பற்றிய எனது தேடலில் நான் சந்தித்த அனைவரிடமும் இக்கேள்வியை எழுப்பியிருந்தபோதும் அடுத்தவர் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளும் பண்பு இவரிடம் இல்லை என்பதை அனைவருமே வலியுறுத்தியிருந்தனர். தான் பார்ப்பது, நினைப்பது அனைத்தையும் தனது படைப்பில் புகுத்திவிடுவதாலோ என்னவோ இவரிடம் அலட்டல் குறைவு அல்லது இல்லை.<br />
தொண்ணூறுகளின் பிற்பகுதியில் என்னை ஒரு இலக்கியத் திறனாய்வாளராக சமூகத்திற்கு இனங்காட்டிய நிகழ்வின் பின்னணியிலும் திருச்செந்திநாதனது பங்கு அளப்பரியது. தனது கவிதைத் தொகுதிக்கு மதிப்பீட்டுரை தரவேண்டும் என்ற வேண்டுகோளுடன் என்னிடம் வந்த அந்த இளைஞனை இப்போதும் நினைவு கூருகின்றேன். உணவு, உடை, உறையுள் என்ற மூன்றும் அரைகுறையாகத் தன்னும் கிடைக்கப்பெற்றவனுக்குத்தான் கலை இலக்கியத்திற்கு நேரம் இருக்கும் என்ற ஆழமான நம்பிக்கை உடையவளாகத்தான் இன்றும் இருக்கின்றேன். இந்த எண்ணத்தை எனக்குள் உருவாக்கிவர் இணுவிலிலேயே மிக வசதி படைத்தவர்களில் ஒருவராக இருந்த எனது தந்தைதான். 'புக்கை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பவன்தான் தேவாரம் பாடுவான். இல்லையேல் தனது வயிற்றுப்பாட்டுக்கு வழியைத் தேடுவதே அவன் முதல் பணியாக இருக்கும்' என்று நகைச்சுவையுடன் சொல்லிக்கொண்டே அடுத்தவருக்கு உதவுவதில் முன்னிற்கும் அவரது பண்பு இத்தகைய ஒரு சிந்தையை எனக்குள் ஏற்படுத்தியதோ தெரியவில்லை. இலக்கியத்தை சுவைப்பது என்ற ஒன்றைத்தவிர ஏழ்மையில் உழல்வோருக்கு என்ன செய்யலாம் என்று பெண்கள் புனர்வாழ்வு நிலையம் ஒன்றின் தலைவராக இருந்து அவர்களின் அடிப்படை வசிகளுக்கு எங்கே போய் எப்படி இறைஞ்சலாம் அங்கலாத்துக்கொண்டிருந்த அந்தக்காலப்பகுதியில் வந்தது தான் முல்லைக்கமல் என்ற அந்த இளைய கவிஞனின் இந்த வேண்டுகோள். வந்தாரை வரவேற்கும் வன்னி மண்ணில் எங்கள் அனைவரையும் முகஞ்சுழிக்காது உள்வாங்கிய அந்த மண்ணின் வாரிசு ஒன்றை ஊக்குவிக்கவேண்டிய அனைவருமே? கைவிரித்தநிலையில் முகந் தெரியாத அந்த கவிஞனுக்கு நம்பிக்கையூட்டி தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே அவனை என்னிடம் அனுப்பியவர் இந்த மனிதர். போராட்ட சூழல் ஒன்றில், வயிற்றுப்பாட்டுக்கு வழியற்றவர்களுக்கு வழிதேடுவதிலேயே முழுநேரத்தையும் செலவிட்டிருந்த எனக்கு இலக்கிய விமர்சனத்தில் எனக்கு இருந்த ஆர்வமின்மையை எடுத்துக்கூறினேன். கவிதை சரியில்லை என்றால் மேடையிலேயே வேண்டிக்கட்டுவாய் எனப் பயமுறுத்தியும் பார்த்தேன் அவன் மசிந்து கொடுக்காமல் நீங்கள் வந்தாற் போதும் என சிறு பிள்ளை போல் கண்கள் கலங்க வேண்டியது இன்றும் பசுமையாக இருக்கிறது. இறுதில் வேறு வழியின்றி சம்மதம் தெரிவித்துவிட்டு யார் உன்னை என்னிடம் அனுப்பியது எனக் கேட்டேன். 'மிஸ்ஸிடம் போ 'அவர் சம்மதிக்காவிட்டால் யார் போய்க் கேட்டாலும் சரிவராது. அவரைச் சம்மதிக்கச் செய்வது உனது கெட்டித்தனத்தில் தான் உண்டு. எனக்கூறி 'அண்ணை' தான் அனுப்பியவர் என்று சிறு புன்னகையுடன் கூறினான். அந்த வெளியீட்டு நிகழ்வில் எவ்வளவிற்கு அவனது கவிதை வெற்றியீட்டியதோ அதைவிட மேலாக நடுநிலைவாய்ந்த ஒரு திறனாய்வாளராக சமூகம் என்னைக் கொண்டாடியது. அந்தத் தருணத்தில் கூட 'என்னால் தானே எல்லாம்' என்ற மிடுக்கோ, மிதப்பான பார்வையோ இன்றி அல்லது 'எப்படி என்ரை விளையாட்டு' என்று இன்றைய இலக்கியவாதிகளின் பாணியில் தனது காலில் விழுந்து கும்பிடப்பண்ணும் மனிதராக அவரது வாரிசுகள் அவரை இனங்காணவில்லை என்றே படுகின்றது. பள்ளிப்பருவத்தில் நான் படித்த முதல் நாவலான பார்த்தசாரதியின் பொன்விலங்கில் தொடங்கி, ஜானகிராமன், ராஜம் கிருஷ்ணன் போன்றோரின் சமூக எழுத்துக்களில் மனதைப் பறிகொடுத்து மேத்தாவின் கவிதைகளில் முக்குளித்து ஒரு சிறுவட்டத்துக்குள் திருப்திப்பட்டுக்கொண்டிருந்த என்னை ஒரு பெரிய வட்டத்துக்குள் தள்ளி உலக இலக்கியத்தின் நெழிவு சுழிவுகளை ஆழ ஆராயத் தூண்டிய ஒரு ஆரம்ப நிகழ்வாகவே இதனைப் பார்க்கின்றேன்.<br />
தொண்ணூறுகளின் பிற்பகுதியில் தங்கள் படைப்புகளுக்கு சரியான தளமின்றி வாய்ப்புகள் கிடைக்காது விரக்திநிலையில் இருந்த இளைய தலைமுறைப் படைப்பாளிகளின் விரக்தியும் சமூக எழுத்துக்களைப் புறந்தள்ளி தன்னுணர்வு எழுத்துக்களை மோகிக்கும் சூழலுக்கு ஒரு எதிர்ச்சூழல் உருவாக வேண்டும் என்ற வேகமும் இணைந்து தோற்றம் பெற்ற 'எழு' கலை இலக்கியப் பேரவையின் காப்பாளர்களில் ஒருவராக நான் இருக்க வேண்டும் என்ற இவரது விருப்பத்தைக்கூட இவரது வாரிசுகளை விட்டே செயற்படுத்தினார். நெருக்கடி மிகுந்த காலகட்டத்திலும் மனந்தளராது ஆற்றல்மிக்க புதிய படைப்பாளர்களின் ஆக்கங்களை உள்ளடக்கி வெளிவந்த எழு சிறுகதைகள், முல்லைக் கமரின் மனதும் மனதின் பாடலும் கவிதைத் தொகுப்பு இந்த எழு கலை இலக்கியப் பேரவையின் வெளியீடுகளே.<br />
'ஒருவனின் எழுத்து அவனது செயற்பாடு, சமூகம் மீதான அவனது கரிசனை எல்லாவற்றும் நெருங்கிய தொடர்புண்டு. இவற்றில் ஒன்றைவிட்டு ஒன்றைப் பிரித்துப் பார்க்கமுடியாது' என வெட்டுமுகம் சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் இவர் கூறிய கூற்றுக்கு முரணாக இவரது எந்தவொரு படைப்பும் இல்லை என்பதை இவரது படைப்புகளை வாசித்தவர்கள் ஏற்றுக்கொள்வர் என நினைக்கின்றேன். தனது சுற்றாடலை, தனது சமூகத்தை, தனது இனத்தைப் பாதிக்கும் ஒவ்வொரு விடயமும் தன்னை எழுதத் தூண்டுகிறது என்ற இவரது கூற்றுக்கமையவே இவரது படைப்புகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆழ்ந்த அவதானிப்பும் அனைத்து நடவடிக்கைகளில் கைகொடுக்கும் மனப்பான்மையுமின்றி மக்கள் எழுத்து சாத்தியப்படாது.<br />
'நவீன தமிழிலக்கியத்துறைகளில் சமூகப் பொறுப்புணர்வுடனும் அயரா ஊக்கத்துடனும் செயற்பட்டு வரும் ஈழத்து எழுத்தாளர்களில் தனிக்கவனத்துக்குரியவர்களுள் ஒருவராக திகழ்பவர் இணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன் என கூறும் கலாநிதி நா. சுப்பிரமணியன் (வெட்டுமுகம் அணிந்துரை), திருச்செந்திநாதனின் படைப்பாற்றலின் முனைப்பு தன்னைச் சூழ உள்ள மக்கள் திரளின் நலனை முதன்மைப்படுத்தும் ஒன்று என்பது பற்றி யாருக்கும் ஐயத்துக்கு இடமில்லை எனக்கூறும் பேராசிரியர் சி.சிவசேகரம் (மணல்வெளி அரங்கு மதிப்பீட்டுரை), இந்த மண்ணில் நடைபெறும் வாழ்க்கைச் சிதறல்களுக்கு இதற்குள் நின்றுகொண்டே முகங்கொடுக்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்துணிபு திருச்செந்திநாதனிடத்து துல்லியமாக காணப்படுகின்றது எனக் கூறும் பேராசிரியர் கா.சிவத்தம்பி ஆகிய மூன்று திறனாய்வாளர்களது கூற்றுகளுக்கிடையிலான ஒற்றுமை இதற்கு மேலும் வலுவூட்டுகின்றது.<br />
சிதம்பர திருச்செந்திநாதன் என்ற மனிதர்<br />
சிதம்பர திருச்செந்திநாதன் அவர்கள் இணுவை மண்ணின் சராசரி வார்ப்பில் ஒன்று. என்னைப் போன்றே இவரது வாழ்நிலையிலும் இவர் பிறந்து வளர்ந்த இணுவை மண்ணின்; சூழல், இச்சூழலுடன் அடிக்கடி இவர் முரண்படும் சந்தர்ப்பங்கள், இந்த முரண்பாடுகளை எதிர்கொள்ளப் பயன்படுத்தும் தந்திரோபாயங்கள், மீண்டும் இந்தச் சூழல் இவரை தன்னுள் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற உந்துதலுடன் இவர் மேற்கொள்ளும் முயற்சிகள் போன்றன அதிக செலுத்துகின்றன என்பதை இவரது படைப்புகள் வெளிக்கொணர்கின்றன. கோவில்களால் நிரம்பப்பெற்ற இணுவை மண்ணின் கோவில் உற்சவங்களில் இறை நம்பிக்கை அதிக உள்ள இவரைக் காண்பது மிக அரிது. சமூக ஒன்றிணைப்பு மையங்கள் என்ற பணியிலிருந்து விலகி சமூகத்தின் செல்வாக்கு மிக்க ஒருசிலரின் ஆட்சி மையங்களாக கோவில்கள் இருப்பதில் இவருக்கு சம்மதமில்லை. எனினும் யதார்த்தவாதி வெகுசனவிரோதி என்ற வகையில் இவர்களுடன் வரிந்து கட்டிக்கொண்டு மல்லுக்கட்டாமல் மௌனமாக ஒதுங்கிவிடும் சுபாவம் இவருடையது. படைப்புலகம் என்று வரும்போது கூட எதிரும் புதிருமான இலக்கியவாதிகள் அனைவருடனும் ஒரேமாதிரியான உறவு வைத்திருக்கக்கூடிய மனதராகவே இவரை இனங்காண முடிகிறது. 'பல்வேறு பிரச்சினைகளுடன் கூடிய சமூகத்தின் வெட்டுமுகத்தைக் காட்டும் சிதம்பரதிருச்செந்திநாதன் அப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்வைக்கும் போதகராக தம்மைக்காட்டிக்கொள்ளவில்லை. இவற்றைப் பற்றிச் சிந்தியுங்கள் என வாசகர்களை அழைக்கும் அளவோடு நிற்கின்றார் என வெட்டும் முகம் சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்கிய அணிந்துரையில் நா.சுப்பிரமணியன் கூறுவதில் மிகையேதுமில்லை.<br />
கிட்ட இருந்து பழகியவர்களுக்கு திருச்செந்திநாதன் ஒரு மனிதத்;தன்மை மிக்க மனிதர். அளவோடு பேசி அன்போடு உபசரித்து அதிகமாக ஊக்குவிக்கும் ஒரு பண்பாளர். இலைமறை காயாக இருந்து இளைய தலைமுறையின் படைப்பாற்றலை ஊக்குவித்தது மட்டுமன்றி அதற்கு களமமைத்தும் கொடுத்த ஒரு பண்பாளர் என்பது வன்னி மண்ணில் இவரோடு பழகும் வாய்ப்புக் கிட்டிய 'பெரிசுகள்' பலரினதும் ஒருமித்த கருத்து.<br />
'காய்தல்' இன்றி 'உவத்தலை' மட்டும் மூலமாகக் கொண்டு இவரால் உருவாக்கப்பட்ட இளைய தலைமுறைப்படைப்பாளிகள் மிக அதிகம். சிறுகதை என்றால் இது தான் இலக்கணம். கவிதைக்கு இலக்கணம் இது என்று குருகுலக்கல்வியின் மனப்பாடம் செய்விக்கும் போக்குக்கு மாறாக இன்றைய குழந்தைக்கல்வி போல் எதையும் எந்தவடிவத்திலும் உருவாக்குவதை ஊக்குவிப்பவர் இவர் என்பது இவரால் வளர்த்தெடுக்கப்பட்ட படைப்பாளிகளது ஒருமித்த கருத்து.<br />
'அவரது கதைகள் ஒவ்வொன்றும் கவனமாகச் செதுக்கப்பட்டிருப்பதை அவதானிக்கும் போது தான் சொல்வது வாசகரைத் தெளிவாகச் சென்றடைய வேண்டும் எனக் கருதுகின்ற படைப்பாளிகள் நடுவே அவரை அமர்த்துகின்றது'.<br />
நெருக்கடிக்கால ஊடகவியல் பங்களிப்பு<br />
நெருக்கடி மிகுந்த காலப்பகுதியில் இலாப நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு உள்ளடக்கத்தைவிட வடிவமைப்புக்கு முன்னுரிமை கொடுக்கக்கூடிய மேலைத்தேய பாணியிலான வெளியீட்டு முயற்சிகளுக்கான வாய்ப்புகள் நொடிந்து போன நிலையில் இருக்கும் வளங்களைப் பயன்படுத்தி உள்ளடக்கத்துக்கு முதன்மை கொடுத்து வெளியீட்டு முயற்சிகளை மேற்கொண்ட ஒருசிலரில் சிதம்பர திருச்செந்திநாதனின் பங்கு அளப்பரியது. 80 களிலேயே வெளியீட்டு முயற்சிகளில் இணைந்து பணியாற்றிய அனுபவத்துடன் 90களில் வெளிவந்த ஈழத்து வெளியீடுகள் அனைத்தினது வடிவமைப்பிலும்; முற்றுமுழுதாக இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. கற்றறிவை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வெளியீட்டின் உருவமைப்பில் அக்கறை செலுத்திய ஊடகவியலாளர்கள் உணவு மருந்து மட்டுமன்றி புத்தகத் தயாரிப்பிற்கான மூலப் பொருட்களுக்கும் தடைவிதிக்கப்பட்ட நெருக்கடி காலத்தில் சோர்ந்து ஒதுங்கியபோது கொப்பித் தாள்களில் உள்ளுர் கறுப்பு மைகளைப் பயன்படுத்தி ஏராளமான வெளியீடுகளை உருவாக்க அயராது பாடுபட்டவர் என்ற பெருமையை ஈழத்தின் கடந்த முப்பது ஆண்டு கால போராட்ட வாழ்வியலை ஆவணப்படுத்த முயலும் எவருமே பதிவர்.<br />
தேர்ந்த திறனாய்வாளர்<br />
<br />
மக்கள் இலக்கியத்தின் சார்பாளர்<br />
இவரது இலக்கியப் பயணத்தினூடாக இவரைப் பார்க்க முனையும்போது தனது சூழல் மீதான ஆழ்ந்த அவதானிப்பு இவரது படைப்புகளுக்கு ஆதாரம். அடுத்தவர் பிரச்சனைகளை தனது பிரச்சனைகளாக நினைத்து அதனை அனுபவித்து சேர்த்த அனுபவங்கள் இன்னொரு முதலீடு. பொய்மை, பொறாமை, பொருளாசை, சீதன வழக்கம், இனப்பிரச்சினையின் கொதிநிலைச் சூழலின் அவலங்கள் முதலியன சமூகத்தில் நிகழ்த்தி வந்துள்ள பாதிப்புகளைச் சிதம்பரநாதனின் கதைகள் சித்தரிக்கின்றன என்ற நா. சுப்பிரமணியன் அவர்களின் கூற்றுக்கேற்ப<br />
'சூழவும் வாழ்வியல் தொடர்பான பல்வேறு நெருக்கடிகளும் பொருண்மியச் சுமைகளும் இருந்தாலும் எங்கள் மக்கள் வாழ்கின்றார்கள். அவர்களுள் ஒருவனாக நானும் இருப்பதையிட்டு சந்தோசப்பட முடிகின்றது என என்னுடையதும் அம்மாவினுடையதும் என்ற சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் இவரது கூற்றின் எதிரொலிகளுக்கான ஓரிரு எடுத்துக்காட்டுகள் இவை.<br />
'நிவாரண வெட்டால் ஒடுங்கிப்போன பொதுசனம் போல விளக்கு வெளிச்சம் துடித்துக் கொண்டிருந்தது'<br />
'மேலே பாரத்தால் வானம் எங்கள் எதிர்காலம் போல் இருக்கவில்லை. துலக்கமாகப் பிரகாசித்தது'.<br />
'சமகால நிகழ்வுகளைப் போலவே வெய்யில் அகோரமாக எறித்தது' என்றெல்லாம் எழுதுவதற்கு சூழலுடன் ஒன்றிணைந்து வாழ்ந்தால் மட்டுமே உண்டு. அக்கறையின்றி சீர்கெட்டுப்போன வளவுப் பயிர்களை ஆட்சியில் உள்ளவர்கள் மறந்து போன தமிழ்ப்பிரதேசங்களுக்கு ஒப்பிடவும், 'வேலைக்குப் போட்ட அப்ளிகேஷனை கவனிப்பாரற்றுக் கிடக்கும் அரசாங்கத்துக்கு அனுப்பும் மகஜருக்கு ஒப்பிடவும் முடியும்.<br />
'நகரத்து அழுக்கினை கையில் தாங்கிக் கொண்டிருந்த பெண்மணி' என பிச்சைக்காரியை வர்ணிப்பதற்கும் நமது செம்பாட்டு மண்ணை ரத்தம் ஊறிய மண் என்று சொல்வதற்கும் சூழல் தொடர்பான சமூகப் பிரக்ஞை அவசியமானது. மினிபஸ் நெரிசலிலிருந்து விடுபடும் குதூகலத்தை பாடசாலை முடிந்து வெளியேறும் சிறுபிள்ளைகளின் குதூகலத்திற்கு ஒப்பிடுவதற்கு அது தொடர்பான ஆழ்ந்த அனுபவம் வேண்டும். 'உடல் களைக்க, மனம் களைக்க, தாகமும் பசியும் இணைந்து இம்சைப்படுத்த கிளாலிக்கடற்கரையில் படகுக்காகக் காத்திருந்த வன்னி இடப்பெயர்வைக்கூட இனிமையான பயணம் என்று சொல்வதற்கு நான்கு தசாப்தங்களைக் கடந்த ஒருவருக்கு முடிகிறது எனில் சூழலுடன் பொருந்தி வாழும் மனப்பாங்குக்கும் மேல் சூழலை நேசிப்பும் தன்மையால் மட்டுமே சாத்தியமாகும்.<br />
'எதிரில் வருவோர் எல்லோரையும் விழியாலே எறிந்து கலைத்து, அந்தக்கணத்தில் அவர்களிடம் ஏற்படும் அதிர்வுகளை ரசிக்கும் பெண்ணின் பருவத்தை (எனக்காக?) வெறும் அவதானிப்பால் மட்டும் வெளிக்கொண்டு வரமுடியாது. அந்த அவதானிப்பை தனக்குள் போட்டுப்பார்த்து தனது அனுபவமாக்கினால் மட்டுமே அவ்வாறு எழுத வரும்.<br />
'செம்மண் தரை தோசைக்கல்லாய் சுட்டது' என்று எழுதுவதற்கு அம்மாவிற்கு கூடமாட ஒத்தாசை புரியும் மகனின் அனுபவமாகவோ அல்லது வேலைக்குப் போகும் மனைவிக்கு ஒத்தாசை புரியும் வேலைக்குப் போகும் ஒரு கணவனின் அனுபவமாக எடுத்துக்கொள்ள முடியாது. சூழலை தனக்குள் முழுமையாக உள்வாங்கி, அதனுடன் ஒன்றிணைந்து அதனுடன் இரண்டறக் கலந்து வாழும் தன்மையின் ஊடாக பெற்ற அனுபவத்தின் மூலமே இத்தகைய உவமைகளை எழுத்தில் படைக்க முடியும். <br />
'வெறுமனே விரக்தியும் புலம்பலும், இருப்புத் தொடர்பான அச்சமும் அதனால் எழும் அகமனத்து உளைவுகளுமே நல்ல இலக்கியங்களாக அமைந்துவிடுவதில்லை. வாழ்வு பற்றிய தேடலும், அக்கறையும், எதிர்கால நம்பிக்கையுமே இலக்கியத்தின் கருப்பொருளாக அமைவது சிறப்பானது என்பதுடன் இவையே மனிதனை சூழலுடனும் சக மனிதர்களுடனும் பிரக்ஞை பூர்வமான உறவுகளை பேணத் தூண்டுகின்றன' என்பது இலக்கியம் தொடர்பான சிதம்பரநாதனது கருத்தியல். நான் வேறு எனது படைப்பு வேறு என்றோ, ஒரு இலக்கியவாதியின் படைப்பை மட்டும் மதிப்பிடுங்கள் அவரின் பின்னணியைப்பற்றி ஏன் அலட்டிக்கொள்கின்றீர்கள் என்றோ கோஷமெழுப்பும் இலக்கியப் பரம்பரையினராக சிதம்பர திருச்செந்திநாதன் இருந்திருப்பாராயின் இந்த எழுத்துக்களை எழுத வேண்டிய தேவையே எனக்கு இருந்திருக்காது. ஓரிரு எழுத்துக்களைப் படைத்தவுடனேயே முதுகு சொறிவதற்கும், முகஸ்துதிக்கும் ஆள் தேடி அலையும் வேகத்தில் உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்ற சத்திய வாக்கை காற்றில் பறக்கவிடும் பச்சோந்தி எழுத்தாளர்கள் மத்தியில் இவர் மிக வித்தியாசமானவர். எழுதின ஒரு எழுத்துக்கு சுவீப் அடித்தமாதிரி பவுசு வந்த கையுடனேயே தம்மைத் தாமே மூத்த எழுத்தாளராக பிரகடனப்படுத்தி இளைய தலைமுறையை தமக்கேற்ற வகையில் முது சொறிவதற்குப் பழக்கும் எழுத்தாளர் வட்டத்துக்குள் அடங்காமல் எழுதத் தொடங்கி மூன்று தசாப்தங்களைக் கடந்து விட்டபின்னரும் குடத்திலிட்ட விளக்காக ஆரவாரமின்றி அணையாத தீபமாக இன்றும் இருப்பவர். எமது எழுத்தும் எமது தனிப்பட்ட வாழ்வியலும் ஒன்றிலொன்று பிரிக்கமுடியாதளவிற்கு நெருக்கமாகப் பிணைந்திருப்பவை எனத் தீர்க்கமான முடிவுடன் வாழும் இந்த மனிதரை இவரது எழுத்துக்கள் தான் அறிமுகப்படுத்துகின்றது. இவரின் வாழ்வியலுக்கும் எழுத்துக்குமிடையிலான பிணைப்பை ஊரவள் என்ற முறையில் உறுதிப்படுத்தவேண்டிய அவசியமில்லை என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர்.<br />
<div>
<br /></div>
Srikanthaluxmyhttp://www.blogger.com/profile/02621345440975786756noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-14981721.post-2472354158114857842015-11-08T07:07:00.000-08:002015-11-09T11:26:52.547-08:00முரண்களுக்குள் தொலையும் முழுமை<div style="text-align: center;">
<div class="MsoNormal" style="text-align: justify;">
<div class="MsoNormal">
<br />
<br />
குழந்தையின் தற்கருத்தை, தனித்தியங்கும் ஆற்றலை, தேடல் திறனை ஊக்குவிக்கும் வகையில் இந்த முதல் உலகும், இரண்டாம் உலகும் மாறவேண்டிய, மாற்றப்பட வேண்டிய தேவை தனித்துவம் காக்க விரும்பும் எந்தச் சமூகத்திற்கும் அவசியமானதொன்று.<br />
<br />
<br />
இந்த வகையில் குடும்ப உறுப்பினர்களோ, பாடசாலை ஆசிரியர்களோ குழந்தையின் ஆளுமை விருத்திக்கு உதவும் வகையில் தத்தமது அறிவு நிலை, சிந்தனை போன்றவற்றிலிருந்து ஒன்றில் மேலெழும்பவோ அல்லது கீழிறங்கவோ தயாராகி குழந்தைக்கும் அதன் உலகிற்குமிடையில் சம நிலைத் தன்மையைப் பேண உதவும் போது குழந்தை ஆளுமை விருத்தி தொடர்பான முரண்கள் மூழ்கடிக்கப்பட வாய்ப்புண்டு. குழந்தையின் முதல் உலகான குடும்பம் என்ற கருத்து நிலையில் ஆழ்ந்த உட்பொருள் இனவிருத்தி. இனவிருத்தி என்பதன் செம்மைப் படுத்தப்பட்ட பரந்த பொருள் ஆளுமையும், அறிவும் நிறைந்த உறுப்பினர்களாக உருவாக்குவதன் மூலம் தமக்கென தனித்துவ இன, பண்பாட்டு அடையாளங்களைக் கொண்ட சமூகத்தை உருவாக்குதல். ஆளுமை விருத்திக்கான அடித்தளம் குழந்தைப் பருவமே என்ற தெளிவு நிலைக்கமைய குழந்தைக்கும் குடும்பத்துக்கும் இடையிலான இடைவெளியை இயன்றவகையில் களைதலே முதல் மேற்கொள்ளப் பட வேண்டியது.<br />
<br />
பலம், பலவீனம், தோற்றமைவு, அறிவு, நடத்தை, திறமை என்பன ஒன்றிணைந்து தற்கருத்தை தோற்றுவிக்கும். "இது அப்பாவின் செல்லம்", "இது என்ரை திரவியம்" போன்ற பிணைப்பைக் குறிக்கும் சொற்பிரயோகங்கள் சுழியன், கெட்டிக்காரன் போன்ற திறமையைக் குறிக்கும் சொற்பிரயோகங்கள் குழந்தை மனதில் ஆக்கபூர்வமான தற்கருத்தை ஏற்படுத்தி அதன் மூலம் திருப்தி, மகிழ்ச்சி போன்ற உணர்வுகளை ஏற்படுத்துவதனூடாக ஆளுமை விருத்திக்கு இட்டுச் செல்லும். மாறாக 'முட்டாள்', 'எருமை', 'தேவாங்கு' போன்ற சொற்பிரயோகங்கள் எதிர்மறைக் கருத்து நிலையை தோற்றுவித்து மன அழுத்தம், கோபம், ஒதுங்கிப் போகும் தன்மை என்பவற்றிற்கு இட்டுச் செல்லும். <br />
<br />
<br />
<br />
கண்டதையும் போட்டுடைக்கும் குழந்தையின் நடத்தைக்கு 'சுட்டித்தனம்' எனப்பெயரிட்டு குழந்தை எதிரிலேயே 'குளப்படிக் கந்தன்', 'முரட்டுச்சாமி' எனப் பெருமைப்படும் பெற்றோரோ பேரன் பேத்தியோ தமது செயல் ஊக்குவிக்கப் படுகின்றது என்ற மனோபாவத்தை குழந்தை மனதில் ஏற்படுத்தி, மேலும் மேலும் செய்யத் தூண்டும் ஆக்கிரமிப்பு மனோபாவத்திற்கு தாம் வழி கோலுகின்றோம் என்ற யதார்த்தத்தை உணர மறந்து விடுகின்றனர்.<br />
<br />
<br />
<br />
'ஊத்தை, பினாட்டு, உறண்டை' போன்ற அசுத்தத்தைக் குறிக்கும் பிரயோகங்கள் சுத்தம் தொடர்பான கருத்து நிலையை மறக்கடித்து 'அழுக்கே சொர்க்கம்' என்ற மன நிலையை வளர்த்து விடக் கூடியது. 'கறுப்பி, மரமண்டையன், முழியன், கட்டைச்சி' போன்ற உருவமைப்பை குறிக்கப் பயன்படுத்தும் சொற்பதங்கள் குழந்தைக்குத் தன் தோற்றமைவு தொடர்பான தாழ்வு உணர்ச்சிக்கே இட்டுச் செல்வது மட்டுமன்றி பல அபாயகரமான பின் விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடியவை.<br />
<br />
முழுக்க முழுக்க தகப்பனின் சாயலில் பிறந்த குழந்தையை அதனது பெயரில் அழைக்காது "மணியண்ணை வாங்கோ" என்று அதனது தகப்பனது பெயராலேயே அழைத்ததன் விளைவு தகப்பனின் பண்பற்ற தனத்தையும் குடிகாரக் குணத்தையும் சேர்த்தே குழந்தை உள்வாங்கிக் கொள்ள காரணமாயிருந்திருக்கின்றது.<br />
<br />
<br />
<br />
சில இடங்களில் தாம் பிறந்தகையுடனோ அல்லது சிலகாலம் செல்லவோ தாயை அல்லது தகப்பனை இழந்துவிடும் குழந்தையை "தாயைத்தின்னி" என்றோ "தேப்பனைத் தின்னி" என்றோ பெரியோர் கூப்பிடுவதைப் பார்க்கின்றோம். இது தாழ்வுணர்ச்சியை உருவாக்கி பல அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தவல்லது என்பதை நாம் உணரத் தவறி விடுகின்றோம். தேடலுக்கு ஒரு வேட்டு தன்னைத்தானே ஆராயும் நிலையை அடைதல் மனித வாழ்வில் பலருக்கு சாத்தியப் படுவதேயில்லை. ஆனால்தன்னைச் சுற்றியுள்ள சுற்றுப்புறத்தை ஆராயும் பண்போ குழந்தைப் பருவத்தின் மூன்றாவது வயதில் தொடங்கி எட்டாவது வயதில் தீவிரமாகச் செயற்படத் தொடங்கி விடுகின்றது. மூன்று வயதுக் குழந்தை ஒன்றின் ஏன், எதற்கு, எப்படி? என்ற வினாக்கள் மேதைகளையும் ஆட்டம் காண வைப்பவை.<br />
<br />
<br />
<br />
குழந்தையின் சொல்லாட்சியில் மிகப் பெரும் பகுதியை ஆக்கிரமித்துள்ள வினாவாக்கியங்களை தீர ஆராய்ந்தோமானால் பெரும்பாலும் கண்முன்னே குழந்தை காணும் காட்சிகளையும், பொருட்களையும் பற்றியதாகவே அவை இருக்கும். "மழை எப்படி பெய்யுது? கத்தி ஏன் வெட்டுது? நாய் ஏன் வாலையாட்டுது?" போன்ற வினாக்கள் புலன்வழித் தொடர்புள்ளவை. ஆகக் குறைந்தது வீட்டில் பயன்படுத்தும் பொருட்களின் பின்னணியையாவது "அப்படியாம் இப்படியாம்" என்று 'கேள்விச் செவியன்' நிலையில் இல்லாது காரண காரியத் தொடர்புடன் பதிலளிக்க முயற்சித்தால் குழந்தையின் துருவி ஆராயும் பண்பை தேடலுக்கான களமாக மாற்ற முடியும். (பொருட்கள், இயற்கை நிகழ்வுகள் தொடர்பான தெளிவான இலகுவான விளக்கங்களைக் கொண்ட நூல்கள் நூலகங்களில் நிரம்பி வழிகின்றன என்பதையும் இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்.) ஆனால் பெரும்பாலும் நடப்பது.? கேள்விகளால் துளைத்தெடுக்கும் குழந்தையை "அலட்டல், தொணதொணப்பு, கிழட்டுக்கதை, அரியண்டம்" என்றும் அது போதாவிட்டால் "பிள்ளைபிடிகாரன் வாரான், பூதத்தைத் கூப்பிடுவன்" என்றும் அதுவும் போதாவிட்டால் "ஆக்கினை கூடிப்போச்சு, பள்ளிக்கு கெதியாச் சேர்த்தால்தான் சரி" என்றும் குழந்தையின் தேடலை முளையிலேயே கிள்ளியெறிதலே பரவலாக நடைபெறுவதாகும்.<br />
<br />
<br />
<br />
துருவி ஆராயும் பண்பானது கேள்விகளால் துளைத்தெடுப்பதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. அது பொருட்களை புதிதாக தாமே முயன்று உருவாக்கும் தூண்டலை குழந்தையிடம் உருவாக்கக் கூடியது. கோயில் திருவிழாவில் வாங்கிக் கொடுக்கும் பம்பரமோ, ஊதுகுழலோ வீடு வந்து சேர்வதற்கிடையில் அக்குவேறு ஆணிவேறாய்க் கழற்றப் பட்டிருப்பதும், மை தீர்ந்த ஒறெக்ஸ் பேனாவின் மேல்மூடியும் கீழ்மூடியும் அகற்றப்பட்டு உடற் பகுதிக்கு இறப்பர் வளையம் பொருத்தி தென்னம் ஈர்க்கு பயன்படுத்தி ஏவுகணை விடுவதும் புதிதாய் உருவாக்கும் முயற்சியின் வெளிப்பாடுகளே என்பதை பலர் அறியும் வாய்ப்பு இல்லை. இன்று பெரும்பாலும் வீடுகளையும் முன்பள்ளிகளையும் நிறைத்திருப்பது உருவாக்க சக்தியை தூண்டாத பிளாஸ்ரிக் விளையாட்டுப் பொருட்களே. இதனால்தான் வாங்கிய சிறு காலத்துக்குள்ளேயே இவை அங்கொன்றும் இங்கொன்றுமாக தேடுவாரற்றுக் கிடப்பதும், புதுப்புது உருவாக்கத் திறனுக்குக் களம் அமைக்கும் மண் விளையாட்டு பெற்றோர் தடைச்சட்டம் போட்டாலும் கூட குழந்தைப் பருவத்தின் மிகவும் விருப்புக்குரிய விளையாட்டாகத் தொடர்ந்து நிலைத்திருப்பதும் உருவாக்கத்திறனை அதிகரிக்காத எதுவுமே குழந்தை மனதில் இடம்பிடிக்காது என்பதையே வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.<br />
<br />
முரண்களுக்கும், முரண்களுக்குமிடையே குழந்தையை வார்க்கும் முதலாவது பள்ளி குடும்பமென்றால் அதனைச் செப்பனிடும் அடுத்த பள்ளி பள்ளிக்கூடமே. குழந்தையின் துருவியாராயும் பண்பை, சந்தேகங்களை, தேடலைத் தீர்த்து வைப்பதில் இவை பெரும்பங்கு வகிக்கின்றன. குழந்தை பிறந்த கையுடனேயே தமக்கிடையில் நூறாயிரம் கோடி இணைப்புக்களை ஏற்படுத்தும் மூளையின் நியூரோன்களில் பயன்படுத்தப் படாதவற்றை உடனே மூளை தூக்கி வீசிவிடுமாம். தூண்டலை ஏற்படுத்தக் கூடிய சூழலும், அரவணைப்பும் எவ்வளவு கூடுதலாக இருக்கிறதோ அந்தளவுக்கு இந்த நியூரோன்களின் இணைப்பும் அதிகரிக்கிறதாம். மூன்று வயதுக்கிடையில் நன்கு அரவணைப்புக் கிட்டாத, தூண்டல் அற்ற குழந்தை இலகுவில் மாற்றமுடியாத குணாம்சங்களைத் தனக்குரியதாக ஆக்கிவிடும். இதனடிப்படையில் "பிறப்புக்கு முந்திய குழந்தையின் மூளை விருத்திக்கு எம்மால் உதவ முடியாவிட்டாலும் கூட நன்கு திட்டமிட்ட முன்பள்ளித் திட்டங்கள் மூலம் குழந்தையின் பிறப்புக்கு பின்னர் உள்ள கால கட்டங்களிலாவது நாம் நிறைய மாற்றங்களை ஏற்படுத்த முடியும்" என்ற குழந்தை நரம்பியல் நிபுணரான பிளரி சூகானியின் கூற்று கருத்தில் கொள்ளப்பட வேண்டியதொன்று. ஆனால் பெரும்பாலும் நாம் பார்ப்பது, '2-2' வயதுக்குள்ளேயே குழந்தையை முன்பள்ளியில் ஒப்படைத்து விட்டு சற்று ஆறுதலாக இருக்கக் கிடைத்தது வாய்ப்பென்று நினைக்கும் அன்னையரும், அறிவும், அனுபவமும், உடல் உள முதிர்ச்சியின்மையும் நிறைந்த ஆசிரியைகளை கொண்ட பெரும்பாலும் குழந்தை பராமரிப்பகங்களாக இருக்கும் முன் பள்ளிகளுமே. குழந்தையின் எதிரிலேயே அதன் சகோதரர்களை உறுக்குவதற்கு பெற்றோர் பயன்படுத்தும் "ரீச்சரிட்டைச் சொல்லி அடிவாங்கித் தாறன்", "இவனை கட்டி அவிழ்க்க ஏலாது. பள்ளிக்கு அனுப்ப வேண்டும்" என்ற சொற்பதங்கள் தேடலுக்கு களமாக இருக்க வேண்டிய பாடசாலைகளைச் சிறைச்சாலைகளாக உருப்படுத்தி காட்டுவதனால்தான் அழுகையும் புலம்பலுமாக சில சமயம் அடியும் குத்துமாக பிள்ளைகள் பெற்றோரால் பள்ளிக்கு இழுத்துச் செல்லப்படும் காட்சிகளை நாம் காண முடிகின்றது.<br />
<br />
இதற்கு மாறாக, குழந்தையின் தேடலுக்கு களமமைத்துக் கொடுக்கக் கூடிய வீட்டுச் சூழலில் வளரும் குழந்தையானது பெருத்த கனவுகளுடனும் ஆர்வத்துடனும் பள்ளியை அணுகும் சந்தர்ப்பங்களில் அதனது தேடல் பசிக்கு போதிய தீனி கிடைக்காமல் போகும் போது அது விரக்திக்கும் சோர்வுக்கும் ஆட்பட்டு அந்தக் குழந்தைக்கும் கூட பாடசாலை சிறைச்சாலையாக மாறி விடுகின்றது. குடும்பத் தொடர்புகளும் தொடர் விளைவுகளும் குழந்தையின் முதல் உலகான குடும்பம் என்ற கருத்து நிலையில் ஆழ்ந்த உட்பொருள் இனவிருத்தி. இனவிருத்தி என்பதன் செம்மைப் படுத்தப் பட்ட பரந்த பொருள் ஆளுமையும், அறிவும் நிறைந்த உறுப்பினர்களாக உருவாக்குவதன் மூலம் தமக்கென தனித்துவ இன, பண்பாட்டு அடையாளங்களைக் கொண்ட சமூகத்தை உருவாக்குதல். ஆளுமை விருத்திக்கான அடித்தளம் குழந்தைப் பருவமே என்ற தெளிவு நிலைக்கமைய குழந்தைக்கும் குடும்பத்துக்கும் இடையிலான இடைவெளியை இயன்ற வகையில் களைதலே முதல் மேற் கொள்ளப்பட வேண்டியது.<br />
<br />
<br />
<br />
ஆனால் எப்படிக் களைவது.? பெரும்பாலும் குழந்தைக்கும் அதன் முதலாவது தொடர்பாளரான தாய்க்கும் இடையே காணப்படும் இடைவெளிகளில் முதன்மையானது குழந்தையின் அதீத ஆர்வத்திற்கும் அதற்குப் பதில் சொல்லும் ஆற்றலின்மைக்கும் இடையிலான இடைவெளியேயாகும். அதே போல் குழந்தையின் தாய்க்கும் தந்தைக்கும் இடையிலான தொடர்பு நிலை பெரும்பாலும் அடக்கியாளும் பாலுக்கும் அடங்கிப் போகும் பாலுக்கும் இடையிலான தொடர்பாகக் குழந்தையின் தற்கருத்தைப் பாதிக்கும் தொடர்பாக அமைகின்றது. அதேபோல் குழந்தைக்கும் அதன் சக தோழருக்கும் இடையிலான தொடர்பானது குழந்தைக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் வாய்ப்பு வசதிகளுக்கும் மறுக்கப்படும் வாய்ப்பு வசதிகளுக்கும் இடையிலான முரண்பாடுகளாக குழந்தையின் உணர்வுகளில் தாக்கம் ஏற்படுத்தும் தொடர்பாக அமைகின்றது. தற்போதைய பிரதான பிரச்சினை குழந்தைக்கும் அதன் நேரடித் தொடர்பாளராக இருக்கும் தாய்க்கும் இடையில் நிலவும் இடைவெளியைச் சமநிலைக்கு கொண்டு வருவதேயாகும்.<br />
<br />
கருப்பையில் இருக்கும் 10 மாதங்களும், பின்னுள்ள பாலூட்டும் காலத்திலும்தான் குழந்தை வளர்ப்பின் அடிக்கட்டுமானம் போடப் படுகின்றது. உலகமெங்கும் வீசும் பெண்ணிய அலை ஊர்க் கோடிவரை ஊடுருவி விட்ட போதும் இன்று வரை இங்கு குடும்பத்தின் தாங்குதூண் பெண்தான். பெண்ணின் படிப்பறிவும், பொருளாதார சுதந்திரமும் மிக வேகமாக இரட்டைச்சுமையை பெண்கள் மேல் ஏற்றியிருப்பதே கண்கூடாகப் பார்க்கப்படும் ஒன்று. படிப்பறிவு கூட வாழ்வியல் பட்டறிவுக்கு உதவுவதாக இல்லை. குழந்தையின் துருவி ஆராயும் பண்புக்கு, கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் அளவுக்கு தாயின் அறிவு எட்டிப் பிடிக்கவேண்டும். குழந்தையின் தனித்தியங்கும் ஆற்றலையும், தேடல்த் தாகத்தையும் கட்டுப்படுத்த பிரயத்தனப் படும் தாய்மாரால் அதிகபட்சம் செய்ய முடிவதெல்லாம் "உம்மாண்டி வருகுது" என்று அச்சமூட்டி அவர்களின் ஆளுமையை இயன்றவகையில் சிதைப்பதே.<br />
<br />
<br />
<br />
இரண்டாம் உலகின் முரண்கள் குழந்தைக்கும் அதன் இரண்டாவது உலகான பாடசாலைக்கும் இடையிலான உறவுநிலை பெரும்பாலும் அறிந்தவர் அறியாதவர், பெரியவர் சிறியவர் என்ற அடிப்படையிலேயே அமைந்துள்ளது. குழந்தையின் ஆளுமையை வடிவமைக்கவென மேல்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட குழந்தை மையக் கல்வித் திட்டங்கள் அதைவிட வேகமாக இங்கு வந்துவிட்டதை மறுக்க முடியாது. ஆனால் மேலை நாடுகளில் குழந்தைக் கல்வியை வடிவமைப்பவர்களோ நேரடியாக ஆசிரியர்களாக இருக்கின்றனர். தமது பட்டறிவை அப்படியே உணர்வும் சதையுமாக ஊட்டுகின்றனர். ஆனால் இங்கோ படிப்பறிவும் பட்டறிவும் சமைக்கப்பட்ட அதிலும் உணவு தயாரிப்பின் அனுபவங்கள், படிப்பினைகள் எதுவுமின்றி சமைக்கப்பட்ட சத்துணவாக சுடச்சுட, அறிவும் அனுபவமும் அற்ற இளைய சமூகத்திற்கு பரிமாறப்பட அது கணநேர சுவையை, மகிழ்வை, உணர்வை மட்டுமே கொடுக்க குழந்தைக் கல்வி பழைய பாதையிலேயே தவழ்கின்றது.<br />
<br />
<br />
<br />
"ஆரம்ப கட்ட போதனை முறை முழு எதிர்கால நம்பிக்கையுடையதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் தன் சக்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளிநாள் குறித்தும் மகிழ வேண்டும். ஒவ்வொரு முறை ஆசிரியரைச் சந்திக்கும் போதும் சந்தோசப்பட வேண்டும். ஒவ்வொரு தடவை பாடத்திற்கு மணி அடிக்கும்போதும் உற்சாகப்பட வேண்டும்"<br />
<br />
"தமது ஆசிரியர்களுக்குக் கோபம் ஏற்படுத்துவதற்காக குழந்தைகள் மறக்கவில்லை" போன்ற அற்புதமான கருத்துக்களை அள்ளித் தெளித்திருக்கும் குழந்தைகள் வாழ்க என்ற நூலை எழுதிய ரஸ்ய ஆசிரியரான அமனற்வீலி வெறும் ஆரம்ப பாடசாலை ஆசிரியர் மட்டுமல்ல. இவர் பிரபல சோவியத் விஞ்ஞானி, மனோதத்துவ இயலில் கலாநிதிப்பட்டம் பெற்றவர். பேராசிரியர். இத்தனை தகுதிகளுடனும் தனது 15 வருட ஆசிரிய அனுபவத்தின் வழி 6 வயதுக் குழந்தைக்கு படிப்புச் சொல்லித் தருவதற்கான இலகுவான விளக்கங்களை தந்திருக்கும் நூல் அது. குழந்தைக் கல்வியை நேரடியாக அங்கு செய்வதே மூளை பழுத்த, தலை நரைத்த மேதைகள்தான் என்பது "இவ்வளவு படித்துப் போட்டு அரிவரிக்கோ படிப்பிக்கிறது" என எதிர்ப்புக் குரல் எழுப்புபவர்களுக்கு வியப்பாகவும் வினோதமாகவுமே இருக்கும்.<br />
<br />
<br />
<br />
முடிவாக, குழந்தையின் தற்கருத்தை, தனித்தியங்கும் ஆற்றலை, தேடல்த் திறனை ஊக்குவிக்கும் வகையில் இந்த முதல் உலகும் இரண்டாம் உலகும் மாற வேண்டிய, மாற்றப்பட வேண்டிய தேவை தனித்துவம் காக்க விரும்பும் எந்தச் சமூகத்திற்கும் அவசியமானதொன்று. இந்த வகையில் குடும்ப உறுப்பினர்களோ, பாடசாலை ஆசிரியர்களோ குழந்தையின் ஆளுமை விருத்திக்கு உதவும் வகையில் தத்தமது அறிவு நிலை, சிந்தனை போன்றவற்றிலிருந்து ஒன்றில் மேலெழும்பவோ அல்லது கீழிறங்கவோ தயாராகி குழந்தைக்கும் அதன் உலகிற்குமிடையில் சம நிலைத் தன்மையைப் பேண உதவும் போது குழந்தை ஆளுமை விருத்தி தொடர்பான முரண்கள் மூழ்கடிக்கப்பட வாய்ப்புண்டு.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br /></div>
</div>
</div>
Srikanthaluxmyhttp://www.blogger.com/profile/02621345440975786756noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-14981721.post-75338209651530334832014-09-13T01:16:00.003-07:002015-11-09T11:28:20.142-08:00ஈழத்தமிழ்ச் சமூகமும் ஆவணவாக்கமும் <br />
<br />
ஈழத்தமிழ்ச் சமூகமும் ஆவணவாக்கமும் <br />
<br />
1.அறிமுகம்<br />
இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு. நிகழ்வு வரலாறாகுவதற்கு அது ஏதோ ஒரு வகையில் பதியப்படுவது அவசியமாகிறது. பதியப்படாதவை அனைத்தும் மறைந்து போகின்றது. உரு, வரி, வடிவம், அலை ஆகிய நான்கு வகைப்பட்ட தகவல் வெளிப்பாட்டு வடிவங்களினூடாக இந்த நிகழ்வு பதியப்படுவதும், பாதுகாக்கப்படுவதும் அடுத்த தலைமுறைக்குக் கையளிக்கப்படுவதும் தொடர்ச்சியாக நடைபெறும்போது சமூகம் ஒன்றிற்குரிய அறிவுத் தொகுதி அதன் அறிவிலும் ஆழத்திலும் கனதிமிக்கதாக மாறுகின்றது. சமூகம் ஒன்றின் ஒட்டுமொத்த அடையாளத்தையும் சமூக உறுப்பினர் ஒவ்வொருவரும் அறிந்து கொள்வதற்கு ஒன்றுக்கொன்று தொடர்புடைய நிகழ்வுகள் வௌ;வேறு காலங்களில் வௌ;வேறு வடிவங்களில் பதியப்படுவதும் அவை பொதுப்பயன்பாடு கருதி ஓரிடப்படுத்தப்படுவதும் அவசியமானது. <br />
ஒரு சமூகத்தை அடையாளத்தை உறுதி செய்வது அந்த சமூகத்தின் எழுத்துருவப் பதிவேடுகள். இது வெளியிடப்பட்டதாகவோ வெளியிடப்படாததாகவோ இருக்கலாம். தனிமனிதனின் அடையாள அட்டை, தகுதிச் சான்றிதழ்கள், அவனது நாட்குறிப்பேடு, காணி உறுதி போன்றவை வெளியிடப்படாத ஆவணம். தனிமனிதனின் சிந்தனையிலிருந்து உருவாக்கம் பெற்று அது அச்சு வடிவம் பெறும்போது அது வெளியிடப்பட்ட ஆவணம். தனிமனிதன் போன்றே இந்த ஆவணங்கள் குடும்பம் சார்ந்தவை, சமூகம் சார்ந்தவை, நாடு சார்ந்தவை எனப் பரந்;துபட்டதாகவும், தொடர் செயற்பாடு கொண்டதாகவும் இருக்கும். <br />
<br />
ஈழத்தமிழ்ச் சமூகமும் ஆவணவாக்கமும்;<br />
இலங்கைத் தமிழர் என்ற சொற்பதம் உள்நாடு சார்ந்து இலங்கைத் தீவின் வட மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும்; தமிழர், கண்டிப் பிரதேசத்தில் வாழும்; மலையகத் தமிழர், கொழும்பு மற்றும் கொழும்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும்; கொழும்புத் தமிழர், கிழக்கு மாகாணத்தில் செறிவாகவும் இலங்கையில் பரவலாகவும் வாழும் இஸ்லாமியத் தமிழர் என நான்கு வகையான தமிழரையும் வெளிநாடு சார்ந்து உலகெங்கிலும் பரந்து வாழும் புலம்பெயர் தமிழரையும் உள்ளடக்குகின்றது. ஈழத்து இலக்கிய வரலாற்றில் ஈழத்துப் பூதந்தேவனார் என்ற பெயர் 3000 ஆண்டு கால பழமையை கொண்டிருந்தபோதும் கடந்த இரு நூற்றாண்டு கால வரலாறே எமது கைக்கும் கிடைக்கும் வரலாறாக உள்ளது என்பதைக் கருத்தில்கொண்டு ஈழத் தமிழ்ச் சமூகம் ஆவணப்படுத்தல் செயற்பாட்டில் மிகப்பலவீனமான சமூகம் என்றதொரு குற்றச்சாட்டும் உண்டு. ஈழத்தமிழர் வாழ்வியலில் தனிநபரை விட சமூகத்திற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், தகவலைப் பதிந்து வைப்பதற்கு ஏற்ற நிரந்தர மற்றும் நீடித்துழைக்கக்கூடிய சாதனங்களின் இல்லாமை, வாய்மொழிப் பாரம்பரியத்தில் அதிகம் தங்கியிருக்கும் பண்பு போன்றவை ஆவணவாக்கச் செயற்பாடு சார்ந்து பலவீனமான சமூகம் என்ற கருத்துநிலைக்குள் ஈழத்தமிழ்ச்சமூகத்தை சுலபமாக தள்ளியிருப்பதும், கடந்த இரு நூற்றாண்டு கால வரலாற்று ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டே அதன் ஆவணவாக்கச் செயற்பாட்டை அறிவதும் சாத்தியமாகிறது. <br />
<br />
ஆவணவாக்கம் என்ற கருத்துநிலை ஈழத்தமிழ்ச்சமூகத்திற்குப் புதியதொன்றல்ல. பதப்படுத்திய பனையோலைகள் மட்டுமே தாள்களின் கண்டுபிடிப்புக்கு முந்திய ஈழத்தமிழ்ச்சமூகத்தின் ஒரேயொரு பதிவு ஊடகமாக இருந்தவகையில் படியெடுத்தல் மூலமான ஆவணவாக்கச் செயற்பாடு பரவலாக இருந்திருக்கிறது என்பதையே நாவலர் மற்றும் சி.வை.தாவின் பதிப்புரைகளில் ஒரே விடயம் தொடர்பாக பல ஏட்டுப் பிரதிகள் பயன்பாட்டில் இருந்தமை புலப்படுத்துகின்றது. ஆரம்பகாலத்தில் அரச குடும்பத்துடன் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்த சிந்தனைப் பதிவேடுகளின் பயன்பாடு, இலவசக் கல்வி, தாள்களின் அறிமுகம் மற்றும் அச்சின் கண்டுபிடிப்பு போன்றவற்றால் பொதுசனமயப்படுத்தப்பட்ட காலமுதற்கொண்டு இன்றுவரை பல பண்புகளைக் கொண்டிருக்கிறது. <br />
<br />
1.1 ஆவணவாக்கம்: வரைவிலக்கணம்<br />
ஆவணவாக்கம் அல்லது ஆவணப்படுத்தல் என்ற பதம் பரந்து விரிந்த பொருள் கொண்டது. பொதுவான நோக்கில் தரவுகள் நிகழ்வுகள் தகவல்கள் மற்றும் அறிவு ஆகியவற்றைப் பதிகின்ற ஒரு செயற்பாடே ஆவணவாக்கம் (னுழஉரஅநவெயவழைn) என்ற பெயர் கொண்டழைக்கப்படுகின்றது. நூலகவியல் நோக்கில் ஆவணங்களை பெறுதல் கையாளுதல், தொடர்புபடுத்தல் போன்ற செயல்முறைகள் உள்ளடங்கிய கற்கையாக இது பொருள் கொள்ளப்படுகின்றது. (ர்யசசழன 1987). நிகழ்நிலை நூலகத் தகவல் அறிவியல் அகராதி ஒன்று ஆவணவாக்கம் சார்ந்து பொதுநோக்கு, நூலகவியல், தகவல் அறிவியல், புலமை சார் வெளியீடுகள், தரவுச் செய்முறை மற்றும் ஆவணக்காப்பகம் என ஆறு வகையான வரைவிலக்கணங்களைத் தருகின்றது. பொதுவான நோக்கில் எந்தவொரு செய்முறை சார்ந்த முறையான எழுத்துவடிவ விளக்கம் ஆவணவாக்கம் என பொருள் கொள்ளப்படுகின்றது. நூலகவியல் நோக்கில் நிறுவன வளங்களை பாதுகாக்குமுகமாகவும் ஆய்வுக்கு உதவும் வகையிலும் விசேட ஆவணங்களை குறிப்பாக அறிவியல், தொழில்நுட்ப மற்றும் சட்டம் சார்ந்த ஆவணங்களை முறைப்படி சேகரித்தல் ஒழுங்கமைத்தல், சேமித்தல், மீள்பெறுகை செய்தல் மற்றும் பரவலாக்கம் செய்தல் ஆகிய செய்முறைகளை உள்ளடக்குகின்றது. தகவல் அறிவியல் சார்ந்து புலமைசார் வெளியீடு என்ற வகையில் ஆய்வு முயற்சிக்கு துணை போகின்ற தகவல்களை மேற்கோள் காட்டும் நடைமுறை ஆவணவாக்கம்; எனப் பொருள் கொள்ளப்படுகின்றது. ஆவணக் காப்பகங்களில் உசாத்துணை நோக்கத்துக்காகவும் பாவனையாளருக்கான தேடுதல் கருவியாக உதவும் வகையிலும் பதிவேடுகளுக்கு விபரங்களைத் தயாரித்து ஒழுங்கமைக்கும் செயற்பாடாக கருதப்படுகின்றது. தரவுச் செய்முறையில் பொறிமுறை வாசிப்பு தரவுக் கோவைகளை உருவாக்குதல், செயற்படுத்தல், பராமரித்தல் போன்றவற்றுக்கு தேவைப்படுகின்ற விரிவான தகவல்களாக இது பொருள் கொள்ளப்படுகின்றது.(சுநவைண 2004). <br />
ஆவணவாக்கம் என்ற பதம் அது பயன்படுத்தப்படும் தகுதியினடிப்படையில் வௌ;வேறுபட்ட பொருள் கொண்டதென்று கூறும் கீழைத்தேச நூலகவியலின் தந்தையான எஸ்.ஆர் இரங்கநாதன்; நூல்களின் உயிருடன் அதாவது கருத்துசார் உள்ளடக்கத்துடன் இணைந்து செய்யப்படும் பணியை - குறிப்பாக விசேட பொருட்துறை ஒன்றில் வெளியிடப்பட்ட நூல்கள் மற்றும் பருவ இதழ்க்கட்டுரைகளின் பேரினநுண்ணினக் கருத்துப்பொருளின் பட்டியை ஆவண நூல்விவரப்பட்டியல் எனப்பெயரிடுவதுடன் அத்தகைய பட்டியானது விசேட பொருட்துறை வல்லுனர்களின் தேவைகளை பூர்த்தி செய்யுமுகமாக தயாரிக்கப்படும்போது அது ஆவணவாக்கப்பட்டி என்றும் அத்தகைய பட்டியை உருவாக்கும் கலை ஆவணவாக்கம் எனவும் குறிப்பிடுகின்றார் (சுயபெயயெவாயn 1974). <br />
<br />
ஆய்வும் ஆவணவாக்கமும்<br />
ஈழத்தமிழ் இலக்கிய உருவாக்கங்களில் காணப்படும் அடிப்படைப் பிரச்சினைகளில் முக்கியமானது ஆய்வுக்கும் ஆவணவாக்கத்துக்கும் இடையிலான தனித்தன்மைகள், வேறுபாடு மற்றும் உறவுநிலைகளைத் தெளிவாகப் புரிந்து கொள்ளாமையாகும். இதனால் ஆவணவாக்கப் பண்புகளை மிகுதியாகக் கொண்ட இலக்கியங்கள் ஆய்வு நூல் எனப் படைப்பாளரால் விதந்துரைக்கப்படுவது பொதுவான போக்காக உள்ளது. ஆய்வு என்பது புதிதாக ஒன்றை உருவாக்குவது. ஏற்கனவே உள்ள அறிவின் இருப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்டு புதிய அறிவை உருவாக்குவதற்கு அடிப்படையாக இருப்பது. ஆவணவாக்கம் என்பது ஏற்கனவே உருவாக்கப்பட்ட அறிவை உள்ளது உள்ளபடியேயோ, சுருக்கியோ, விரித்தோ, குறை களைந்தோ, தொகுத்தோ மீள உருவாக்கப்படுவது. ஆய்வு என்பது புதிய கண்டுபிடிப்பாகவோ, ஏற்கனவே கண்டுபிடித்த ஒன்றின் தொடர்ச்சியாகவோ அன்றி அதன் இற்றைப்படுத்தலாகவோ அமையலாம். ஆவணவாக்கம் இன்றேல் ஆய்வு இல்லை. ஆய்வுக்கு மூலமே ஆவணவாக்கம். இதன்காரணமாகவே ஆவணவாக்கம் அறிவியல் துறையாக (னுழஉரஅநவெயவழைn ளுஉநைnஉந) ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. தனி நிறுவனமாகவோ அல்லது நிறுவனத்தின் ஒரு பகுதியாகவோ இயங்கி தகவல் வளங்களைப் பெற்றுக் கொள்ளுதல், செய்முறைப்படுத்துதல், பாதுகாத்தல், சுருக்கப்படுத்தல், சாராம்சம் தயாரித்தல், சொல்லடைவுபடுத்தல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ளும் நிலையங்கள் ஆவணவாக்க நிலையங்கள் என அழைக்கப்படுகின்றன. குறிப்பிட்ட துறை சார்பாக வெளியாகின்ற அண்மைக்காலத் தகவல்களைச் சேகரித்து முறைப்படுத்தி ஒழுங்குபடுத்தும் சாதாரண நூல்விவரப்பட்டியல் முதற்கொண்டு குறிப்பிட்ட துறை சார்பாக வெளியிடப்படுகின்ற அண்மைக்கால வெளியீடுகளை தேடிக் கண்டுபிடித்துச், சேகரித்து, ஒழுங்குபடுத்தி, அத்துறையின் வளர்ச்சிநிலை பற்றிய மதிப்பீட்டை புதிய ஆக்கமாக ஆய்வாளருக்கு வழங்கும் பொருட்படிநிலையறிக்கைகள் (ளுவயவந-ழக-வாந-யசவ-சுநிழசவ) வரை இவற்றின் ஆவணவாக்கச் செயற்பாடுகள் பரந்து பட்டதாகவும் ஆழமானதாகவும் அமையும். ஆவணவாக்கத்தின் மிகச் சிறந்த பெறுபேறாக உருவாக்கப்படும் பொருட்படிநிலை அறிக்கைகள் ஆய்வுக்கான அத்திவாரமாக அறிவியல் சார்ந்த துறைகளில் முக்கியத்துவப்படுத்தப்படுத்தப்படுவதுடன் இதற்கான உருவாக்கச் செலவு ஆயிரங்களிலிருந்து இலட்சங்கள் வரை கூடிக் குறையும். துரதிருஷ்டவசமாக ஈழத்தமிழ்ச்சமூகத்தின் பட்ட மற்றும் பட்டப்பின்படிப்பு சார்ந்த ஆய்வுகளில் பெரும்பாலானவை ஆவணவாக்கச் செயற்பாடுகளுடன் மட்டுப்படுத்தபட்டுவிடுகின்ற, ஆய்வுக்கான ஆரம்ப முயற்சிகளாக இருப்பதே கண்கூடு. <br />
<br />
1.2 ஆவணவாக்கம் - வகைகள்<br />
பரந்த நோக்கில் ஆவணவாக்கத்தை மூலவகை ஆவணவாக்கம் (ளுழரசஉந னுழஉரஅநவெயவழைn) கருவி வகை ஆவணவாக்கம்; (வுழழட வலிந னழஉரஅநவெயவழைn) என இருபெரும் பிரிவாக வகைப்படுத்தலாம். மூல வகை ஆவணவாக்கத்தில் தரவு, நிகழ்வு மற்றும் தகவல்கள் கூடியவரை உள்ளது உள்ளபடியே பதியப்படுகின்றன. இது அன்றைய சுவடிப்படியெடுப்பு முதற்கொண்டு இன்றைய முழுப்பாட ஆவணப்படுத்தல் (குரடட வநஒவ னுழஉரஅநவெயவழைn) செயற்பாடுவரை உள்ளடக்கும். ஏற்கனவே உள்ள மூல ஆவணத்தை பாதுகாப்பு மற்றும் பயன்பாடு கருதி படியெடுத்தல், குறிப்பிட்ட ஒரு ஆவணம் பல பிரதிகளைக் கொண்டிருக்கும் பட்சத்தில் அவற்றைப் பரிசோதித்து, ஒப்பு நோக்கி மூல ஆவணத்தை இனங்கண்டு பதிப்பித்தல், பலதரப்பட்ட வெளியீடுகளிலும் வெளிவந்த குறிப்பிட்ட படைப்பாளரின் ஆக்கங்களை அல்லது குறிப்பிட்ட துறைசார்ந்த ஆவணங்களைத் தேடிச் சேகரித்து தொகுத்து வெளியிடுதல், கள ஆய்வின் மூலம் வாய்மொழி வரலாறுகள் மற்றும் பாடல்களைப் பதிதல், பண்பாட்டு நிகழ்வுகளை ஆவணப்படுத்தல் போன்றவை மூலவகை ஆவணவாக்கத்தில். கருவி வகை ஆவணவாக்கமானது ஆய்வாளர்களின் இலகுவான பயன்பாட்டைக் கருத்திற் கொண்டு குறிப்பிட்ட படைப்பாளர் சார்ந்த அல்லது துறை சார்ந்த இலக்கியங்களை முறைப்படி பட்டியலிடுதல் என்பதாகும். இது ஒரு நூலகம் அல்லது தகவல் நிலையத்திலுள்ள அனைத்து ஆவணங்களின் விபரங்களைப் பட்டியலிடுகின்ற நூலகப் பட்டியலாகவோ அல்லது குறிப்பிட்ட துறை சார்ந்து அல்லது படைப்பாளர் சார்ந்து உருவாக்கப்படும் நூல்விபரப்பட்டியல் மற்றும் சொல்லடைவு, சாராம்சச் செயற்பாடாகவோ இருக்கும். <br />
<br />
ஆவணவாக்கத்தின் பண்புகளின் அடிப்படையில் பதிப்புசார் ஆவணவாக்கம் தொகுப்புசார் ஆவணவாக்கம் என்ற இருபெரும் பண்புகளாக வகைப்படுத்தலாம். பொதுவான நோக்கில் தொகுப்புப் பணி என்பது பரந்த பொருள் கொண்டது. குறிப்பிட்ட பொருள் சார்ந்த தரவுகள், தகவல்கள் நிகழ்வுகள் போன்றவற்றை பலதரப்பட்ட ஆவணம் சார்ந்த மற்றும் ஆவணம் சாராத தகவல் வளங்களிலிருந்து தேடிச் சேகரித்து பதிதலை இது குறிக்கின்றது. நூலகவியல் நோக்கில் தொகுப்புப் பணி என்பது படைப்புகளின் தொகுப்புகளுடன் மட்டுப்படுத்தப்பட்டுவிடுகின்றது. இது தனித்த ஒரு படைப்பாளரின் பல ஆக்கங்களை தொகுத்தலாகவோ அல்லது பல படைப்பாளரின் ஆக்கங்களின் தொகுப்பாகவோ அமையக் கூடியது. மூல ஆவணத்தில் எந்தவொருமாற்றத்தையும் செய்யாது இது மேற்கொள்ளபடுவது. பரந்த நோக்கில் குறிப்பிட்ட கால வரையறையில் குறித்த துறை சார்நத அல்லது குறித்த படைப்பாளர் சார்ந்த ஆக்கங்களின் விபரங்களைப் பட்டியலிடுகின்ற செயற்பாடும் தொகுப்புபணியாகவே பார்க்கப்;படுகின்றது. பதிப்புப் பணி என்பது தமிழ்ச் சூழலில்; பலதரப்பட்ட வகையில் பொருள் கொள்ளப்படுகின்றது. நூல் ஒன்றை புதிதாக உருவாக்கி அதனை வெளியிடும் செயற்பாடு மற்றும் அச்சிடுதல் செயற்பாடு போன்றவையும் பதிப்புப் பணி என்றே பொருள்கொள்ளப்படுகின்றது. இங்கு அச்சிடுதல் (pசiவெiபெ)இ பதிப்பித்தல் (நனவைiபெ)இ வெளியிடுதல் (Pரடிடiளாiபெ)இ மீள்பதிப்பு (சுநிசiவெ) ஆகிய நான்கு பதங்களுக்குமிடையிலுள்ள வேறுபாடு தொடர்பான தெளிவு அவசியமானது. பதிப்பு வேறு. வெளியீடு வேறு. ஏற்கனவே உள்ள ஒன்றை திருத்தம் செய்தோ அன்றி செய்யாமலோ மீள வெளியிடுவது பதிப்புப் பணி. ஆக்கம் ஒன்றை அந்த ஆக்கத்தின் படைப்பாளரோ அல்லது வேறு தனிநபரோ அல்லது நிறுவனமோ பொறுப்பேற்று வெளியிடுவது வெளியீட்டுப் பணி. வெளியிடுவதற்கான அச்சிடுதல் பணிகளை மேற்கொள்வது அச்சிடுதல் பணி. வெளியிட்ட பிரதிகள் போதாதபோது அதனை இற்றைப்படுத்தாமலோ, மீளாய்வு செய்யாமலோ அப்படியே மீள வெளியிடுவது மீள்பதிப்பு. சமூகத்தில் குறிப்பிட்ட ஆக்கத்தின் ஆசிரியர் அறியப்படாதவிடத்து பாதுகாப்பு நோக்கங்கருதியும் பயன்பாடு கருதியும் அதனைப் மீளப்படியெடுத்தல், பருவ இதழ்களில் அல்லது மாநாட்டு வெளியீடுகளில் வெளியிடும்பொருட்டு பதிப்புக்குழு ஒன்றினூடாக ஆய்வுக் கட்டுரைகளை அதன் ஆசிரியரைக் கொண்டே திருத்துவித்தல், பலதரப்பட்ட வெளியீடுகளிலும் வெளிவந்த குறிப்பிட்ட துறைசார்ந்த அல்லது குறிப்பிட்ட படைப்பாளர் சார்ந்த ஆக்கங்களை தேடிச் சேகரித்து ஒழுங்குபடுத்தி வெளியிடுதல் போன்றவை பதிப்புப் பணிகளில் உள்ளடங்கும். பதிப்புப் பணியானது பலதரப்பட்ட பண்புகளையும் பல படிநிலைகளையும் கடந்து வந்திருக்கிறது. சுவடிகள் மற்றும் நூல்களிலிருந்து எழுதி எடுத்து பாதுகாத்தல், சுவடிகள் கையெழுத்துப் பிரதிகளாக தாள்களில் அல்லது சுவடிகளில் இருப்பவற்றை அப்படியே அச்சு வடிவத்துக்கு மாற்றுதல், பல சுவடிகளை ஒப்பு நோக்கி பாடவேறுபாடுகளை உள்ளடக்கி மீள வெளியிடுதல்இ ஒரு ஆக்கம் சார்ந்து எழுதப்படுகின்ற பல்வேறு ஆக்கங்களை தொகுத்து வெளியிடுதல், ஒரு ஆக்கத்தை பயன்படுத்துவதற்கான பல்வேடு தேடல் வழிமுறைகளை ஆக்கத்தின் முன்னே அல்லது பின்னே உருவாக்குதல் போன்ற பல்வேறு அம்சங்கள் பதிப்புப் பணியில் உள்ளடங்குகின்றன. <br />
<br />
ஆவணத்தின் உருவமைப்பு சார்ந்து இது சுவடிகள், பத்திரிகைகள், நூல்கள், சஞ்சிகைகள், இலத்திரனியல் வளங்கள் போன்ற நூலுருச் சாதனங்களை ஆவணப்படுத்தலை குறிக்கிறது. தொழிற்பாடு சார்ந்து நிகழ்வுகள் தரவுகளைப் பதிதல், ஏற்கனவே உருவாக்கப்பட்ட இலக்கியங்களை பதிப்பித்தல், தொகுத்தல், சொல்லடைவுபடுத்தல், சாராம்சப்படுத்தல் போன்றன உள்ளடங்குகின்றன. ஆவணப்படுத்தலின் வியாபகத் தன்மை சார்ந்து தனிமனிதன், குடும்பம், சமூகம், நாடு என்ற வகையில் இந்த ஆவணவாக்கச் செயற்பாடு நடைமுறையில் உண்டு. <br />
<br />
<br />
2. ஆய்வின் நோக்கம், பிரச்சனை மற்றும் ஆய்வுமுறைமை<br />
இந்த ஆய்வின் நோக்கம் ஈழத்தமிழ்ச் சமூகத்தின் ஆவணவாக்கப்பண்புகளை மீள்பார்வை செய்து இனங்காணலும் முறைப்படி வகைப்படுத்தலுமாகும். இவ்வாய்வானது ஈழத்தமிழ்ச் சமூகத்தின் ஆவணவாக்கம் தொடர்பான பேணப்பட்டுவரும் தகவல்களின் அடிப்படையிலான விரிவான இலக்கியமீளாய்வின் வழி பெறப்பட்டு, நேர்காணல்கள் மற்றும் கலந்துரையாடல்கள் மூலம் செவ்வைபார்க்கப்பட்ட தரவுகளைத் தேவைக்கேற்ப வரலாற்று, விவரண உத்திகளைப் பயன்படுத்திப் பகுப்பாய்வு செய்து ஈழத்தமிழ்ச் சமூகத்தின் ஆவணவாக்கப்பண்புகளை மீள்பார்வை செய்து இனங்காணவும் முறைப்படி வகைப்படுத்தவும் முனைந்து நிற்கிறது.<br />
<br />
ஆய்வில் சரியான தகவல்களைச் சேகரித்து அவற்றை பரிசோதித்துப் புதிய நோக்குகளையும் வெளிப்படுத்தல்களையும் ஒப்பீடுகளையும் இனங்காணும் வகையில் ஆய்வு முறைமை அமைவது இன்றியமையாதது. இந்த ஆய்வினைப் பொறுத்த வரையில் ஆய்வுமுறைமையானது. தரவுகளை அடிப்படையாகக் கொண்டமைந்த வரலாற்று ரீதியான நிரற்படுத்தல்களையும், கோட்பாட்டு ரீதியான வகையீடுகளையும், எளிதில் விளக்கிக்கூறும் வகையில் தொடர்புபடுத்தி; விளக்கிக்கூறும் விவரண முறைமையினை அடிப்படையாகக் கொண்டுள்ளது. தனித்து விவரண முறைமையினை மாத்திரம் பின்பற்றின் அது பண்புகளை வகைப்படுத்தத் தவறிவிடும் என்பதாலும், வரலாற்று ரீதியான பார்வை தகவற் சேகரிப்பு என்ற வட்டத்தினுள் ஆய்வை முடிவுறுத்;த முனையும் என்ற காரணத்தினாலும் ஆராய்ந்து பெறப்பட்ட ஒத்திசைவான முறைமைகள் பலவற்றை இணைத்து ஆய்வின் முழுமையான பரிமாணத்தை வெளிக்கொணரும் வகையில் ஆய்வு முறைமையானது நெறிப்படுத்தப்பட்டுள்ளது. <br />
<br />
4. இனங்காணப்பட்ட ஆவணவாக்கப்பண்புகள்<br />
கீழே குறிப்பிடப்படுகின்ற ஆவணவாக்கப்பண்புகள் குறித்த ஆவணத்திற்கென்றே பிரத்தியேகமாக உள்ள பண்பு அல்ல. ஏனெனில் குறித்தவொரு ஆக்கம் கீழே குறிப்பிடப்படும் பண்புகளில் ஒன் றையோ அல்லது பலவற்றையோ கொண்டிருப்பது தவிர்க்க முடியாதது எனினும் அந்த ஆக்கத்தில் எந்தப் பண்பு மேலோங்கியிருக்கின்றதோ அந்தப் பண்பினடிப்படையில் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு சில ஆக்கங்களில் ஆய்வுத்தன்மை அதிகமாக இருக்கக்கூடும் எனினும் பிரதான பண்பு ஆவணவாக்கமெனில் அதுவே இங்கு கருத்திற்கொள்ளப்படுகின்றது. அதுமட்டுமன்றி ஈழத்தமிழ்ச் சமூகத்தில் இதுவரை எழுந்த அத்தனை ஆக்கங்களையும் இங்கு பட்டியல்படுத்துவது இக்கட்டுரையின் நோக்கமன்று. மாதிரிக்கு சில எடுத்துக்காட்டுக்களைத் தருவதும் கூடியவரையில் ஆரம்பகால இலக்கியங்களை எடுத்துக்காட்டுகளாக கையாள்வதும் இதன் நோக்கமாகும். அவை கிடைக்காத போது தற்போதைய ஆக்கங்களின் மாதிரிகள் எடுத்தாளப்பட்டிருக்கின்றன. <br />
<br />
வரலாற்றுத் தகவல்களை ஆவணப்படுத்தும் பண்பு<br />
வரலாற்றுத் தகவல்கள் குறிப்பிட்ட இனம், மதம், மொழி பண்பாடு மற்றும் பொருட்துறை சார்ந்தவை என பலதரப்படும். இவை தொகுப்புப் பணியூடான ஆவணவாக்க செயற்பாட்டின் ஊடாக உருவாக்கப்படுபவை. ஈழத்தமிழ்ச் சமூகத்தின் தொகுப்புப் பணியூடான ஆவணவாக்க செயற்பாட்டின் முன்னோடி என்ற பெருமை சைமன் காசிச்செட்டி அவர்களையே சாரும். இவரது 'தமிழ் புளுராக்' என்ற தமிழ்ப் புலவர் சரிதமும் சிலோன் கசற்றியரும் (1834) ஆய்வுடன் இணைந்த மிக முக்கியமான ஆவணவாக்கப் பணிகளாகும். சிலோன் கசற்றியர் நாடு சார்ந்த வகையில் இலங்கை பற்றிய புவியியல் ரீதியான தகவல் அனைத்தையும் அகர ஒழுங்கில் தொகுத்து தருகின்றது. இதற்கான தரவுகளை நொக்ஸ், கோர்டின், பேர்சிவல், டேவி முதலியோர் எழுத்துக்களிலிருந்தும் சுதேசிய நூல்களிலிருந்தும் பாரம்பரியச் செய்திகளிலிருந்தும் தொகுக்கப்பட்டிருக்கிறது. (பூலோகசிங்கம் 1970). ஊர் சார்ந்த வகையில் ஆத்மஜோதி நா. முத்தையாவின் ஏழாலை(1977), எங்களுர் ஏழாலையூர்(1994) சீர் இணுவைத் திருவூர் (2004), புங்குடுதீவு மான்மியம் (2012) போன்றன புவியியல் அம்சங்களை மட்டுமன்றி ஊர் தொடர்பான தகவல்களை கூடுதலான வரையில் உள்ளடக்கி தொகுக்கப்பட்டுள்ளது. கலாநிதி பாலசுந்தரத்தின் இடப்பெயராய்வு: காங்கேயன் வட்டாரம்(1988) வடமராட்சி தென்மராட்சி (1989) போன்றவை மற்றும் ஊர்ப் பெயர் தோன்றிய வரலாற்றை ஆவணப்படுத்துகிறது. <br />
<br />
யாழ்ப்பாணத்து மானிப்பாய் முத்துத்தம்பிப் பிள்ளை அவர்களால் தொகுக்கப்பட்டு நாவலர் அச்சகத்தினால் 1902இல் வெளியிடப்பட்ட அபிதானகோசம் ஈழத்தின் முதலாவது கலைக்களஞ்சியம் என்ற பெருமையைப் பெறுவது. வேதாகம புராண இதிகாசங்களில் கூறப்பட்ட தெய்வங்கள், தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள், அசுரர், அவதார புருஷர் போன்ற வாழ்க்கை வரலாற்றுத் தகவல்களையும், நதிகள், புண்ணிய தீர்த்தங்கள் போன்ற இடங்களின் வரலாறுகள், தமிழ்நாட்டின் பண்டைய அரசர், புலவர், வள்ளல்களின் வரலாறுகள் போன்றவை இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்நூலில் உள்ளவை பெரும்பாலும் பல நூல்களிலிருந்தும் எடுக்கப்பட்டவை. பல பதிவுகள் உள்ளதை உள்ளபடியே கூறுபவை, இன்னும் சில சுருக்கமாக்கப்பட்டவை, சில விரிவாக்கப்பட்டவை. பல பதிவுகள் கலைக்களஞ்சியம் போன்று விரிவான தகவலை உள்ளடக்கியவை.<br />
<br />
வாழ்க்கை வரலாற்றுத் தகவல்களை ஆவணப்படுத்தும் பண்பு<br />
வாழ்க்கை வரலாற்றுத் தகவல்கள் தனிநபர் சார்ந்ததாகவோ அன்றி குடும்ப வரலாறாகவோ அமையலாம். இதுதவிர தனிநபர் ஒருவரை மையப்படுத்திய விரிவான ஆவணவாக்கமாகவோ அல்லது பல நபர்களை உள்ளடக்கிய தொகுப்பாக்கமாகவோ இருக்கலாம். தமிழ் இலக்கியத் துறையில் தமிழ்ப்புலவர் பலருடைய வாழ்க்கை வரலாறுகளை ஒரே நூலில் உள்ளடக்கி வெளியிடப்பட்ட முதல் நூல் என்ற பெருமையைப் பெறும் சைமன் காசிச்செட்டி அவர்களின் 'தமிழ் புளுட்டாக்'(1859) என்னும் தமிழ்ப்புலவர் சரிதம் தமிழ் இலக்கிய நூல்களைப் பற்றியும் அவர்களின் ஆசிரியர்களைப் பற்றியும் ஆங்கிலத்தில் எழுதப்பெற்ற ஒரு தொகுப்பு நூலாகும். 197 தமிழ்ப்புலவர்களின் வரலாறுகள் இதில் இடம்பெற்றுள்ளன. மேற்படி நூல் உருவாக்கத்திற்கான தகவல் சேகரிப்பானது ஒரு தசாப்பதங்களுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்டது என்பதை 1840ம் ஆண்டு தொடக்கம் வெளிவந்த சிலோன் மகசின் என்ற சஞ்சிகையில் சைமன் காசிச் செட்டி அவர்களால் எழுதப்பட்ட முப்பத்தியிரண்டு அறிஞர்களின் செய்திகள் சான்றாக உள்ளன. இதனை அடிப்படையாகக் கொண்டு எழுந்த சதாசிவம்பிள்ளையின் பாவலர் சரித்திர தீபகம்(1886) முதலாவது தமிழ் நூல் என்ற பெருமையைப் பெறுகின்றது. இதனைத் தொடர்ந்து வெளிவந்த குமாரசுவாமிப் புலவரின் தமிழ்ப் புலவர் சரிதம்(1916), கணேசையரின் ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம்(1933) போன்றவை இவ்வகையைச் சார்ந்தவை. <br />
<br />
முத்துக் குமாரசுவாமிப்பிள்ளையால் எழுதப்பட்ட குமாரசுவாமிப்புலவர் வரலாறு (1970), வைத்திலிங்கத்தின் சேர். பொன் இராமனாதனின் வரலாறு(1971), கனக செந்திநாதனின் கவின் கலைக்கு ஒரு கலாகேசரி (1974) போன்றவை மிக விரிவான வகையில் தனிநபர் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படுத்திய பண்பு கொண்டது. இதற்குப் பின்னரான காலங்களில் தனிநபர்கள் சார்ந்து உருவாக்கப்படும் மணி விழா மற்றும் வைர விழா சார்ந்தோ அன்றி அவர்கள் நினைவாக கொண்டாடப்படும் நூற்றாண்டு விழா சார்ந்தோ வெளியிடப்படும் சிறப்பு மலர்களினூடாகவோ தனிநபர் வரலாறுகள் எண்ணிறந்த அளவில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. <br />
<br />
1901இல் வெளியிடப்பட்ட விநாசித்தம்பி அவர்களின் 'அயnயைஅpயவாயைச ளுயவொயவாiஅரசயi' என்ற ஆங்கில நூலானது குடும்ப வரலாறை ஆவணப்படுத்திய பண்பு கொண்டது. இதே போன்று தமிழில் எழுதப்பட்ட குடும்ப வரலாற்று நூலாக காசிநாதனின் 'எமது உற்றார், உறவினர் முறை' (1963) அமைகிறது. சில்லாலை இன்னாசித்தம்பி வைத்திய நிலையத்தால் 1983இல் வெளியிடப்பட்ட காக்கும் கரங்கள் என்ற நூலானது இன்னாசித்தம்பி வைத்திய மரபின் பத்துப் பரம்பரையை இரத்தினச்சுருக்கமாக எடுத்துக்கூறுகிறது.<br />
<br />
அனுபவங்களை ஆவணப்படுத்தும் பண்பு<br />
தனிநபர் அனுபவங்கள் பெரும்பாலும் நேர்காணல்கள், சொற்பொழிவுகள், மற்றும் கடிதங்கள் வாயிலாகவோ அன்றி பயண இலக்கியங்களாகவோ ஆவணப்படுத்தப்படும் பண்பு பொதுவானதாகும். சுதந்திரன் பத்திரிகையில் தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட சுவாமி சச்சிதானந்தாவின் கைலாசம் கண்டேன் என்ற தலைப்பிலான பயண அனுபவங்கள்; பின் 1960இல் கண்டி திவ்விய ஜீவன சங்கத்தால் நூல் வடிவில் வெளியிடப்பட்டது. ஈழத் தமிழர் போராட்டவரலாற்றில் தனது நூறு நாள் சிறையனுபவங்களை 'தடுப்புக்காவலில் நாம்'(1961) என்ற தலைப்பில் புதுமைலோலனால் தனது மகள் அன்பரசிக்கு மடல்களாக வரையப்பட்டிருக்கிறது. <br />
<br />
மொழிசார் சொற்களை வரிசைப்படுத்தித் தரும் பண்பு<br />
சொற்களின் தொகுப்பு சார்ந்த ஆவணவாக்கப் பணியில் நூல்களின் சொல்லடைவாக நூலில் கையாளப்படும் முக்கிய சொற்களையும் அதன் அமைவிட பக்கத்தையும் நூலின் இறுதியில் உள்ளடக்குதல், அருஞ்சொல் அகராதியாக துறை சார்ந்த அருஞ்சொற்களையும் அதற்கான விளக்கத்தையும் தருகின்ற வகையில் குறித்த நூலின் ஆரம்ப அல்லது இறுதிப்பகுதியிலோ அன்றி தனிநூலாகவோ உருவாக்கப்படல், மொழியின் சொல்வளத்தை அகர ஒழுங்கில் தரும் ஒரு மொழி, இரு மொழி மற்றும் பலமொழி அகராதி வடிவத்தில் தொகுக்கப்படல், குறிப்பிட்ட பொருட்துறை சார்ந்த அருஞ் சொற்களுக்கான விளக்கங்களைப் பட்டியலிடுகின்ற பொருள் அகராதியாக உருவாக்கப்படல் போன்ற பண்புகளை இனங்காண முடியும். <br />
<br />
ஜி.யூ போப் அவர்களால் 1900 ம் ஆண்டு திருவாசகத்துக்குச் செய்யப்பட்ட ஆங்கில தமிழ்ச் சொல்லடைவு நூலின் பகுதியாக உருவாக்கப்படும் சொல்லடைவுப் பண்பைக் கொண்டது. தமிழ்மொழியின் சொல்வளத்தை அகர வரிசையில் முழுமையாகத் தரும் முதல்முயற்சியாக 58,500 சொற்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண அகராதியானது (1842), ஒரு மொழி அகராதிக்கான பண்பைக் கொண்டது. சங்க இலக்கியங்களிலும், சங்க மருவிய இலக்கியங்களிலும் பிற்றைச் சான்றோர் இலக்கியங்களிலும் வருகின்ற அருஞ்சொற்களாகிய இலக்கியச் சொற்களை தொகுத்து உருவாக்கப்பட்ட குமாரசுவாமிப்புலவரின் இலக்கியச் சொல்லகராதி, சொற்பொருளுக்கு அடிப்படை ஆதாரமாக நூற்சான்றுகளைப் பயன்படுத்தும் புதிய பண்பை உள்ளடக்கி வல்வெட்டித்துறையைச் சேர்ந்த கு.கதிரவேற்பிள்ளையின் அரும்பணியில் உருவான தமிழ்ச்சொல் அகராதி, ந.சி கந்தையாபிள்ளையின் செந்தமிழ் அகராதி(1950) தமிழ்ப்புலவர் அகராதி, தமிழ் இலக்கிய அகராதி (1953) காலக்குறிப்பு அகராதி 1960, திருக்குறள் அகராதி (1961) போன்றன ஒரு மொழி அகராதிப்பண்பு கொண்டவை.<br />
<br />
நூல்விபரத்தரவுகளைத் திரட்டித்தரும் பண்பு <br />
நூல்விவர ஆவணவாக்கமானது நூலின் அடிப்படைத் தகவல்களை மட்டும் தரும் முறைப்படுத்தப்பட்ட நூல்விவரப்பட்டியலாகவோ அல்லது நூலின் விவரங்களுடன் நூல் பற்றிய சிறு குறிப்புகளை உள்ளடக்கும் குறிப்புரை நூல்விவரப்பட்டியலாகவோ அதுவுமன்றி குறிப்பிட்ட நூல் தொடர்பான அதிகளவு விவரங்களைத் தரக்கூடிய விளக்க நூல்விவரப்பட்டியலாகவோ அமையலாம். <br />
<br />
முறைப்படுத்தப்பட்ட வகையில் நூல்களின் விவரங்களைத் தரும் பண்பானது பொதுவானதும் அதிகம் வழக்கிலுள்ளதுமான நடைமுறையாக உள்ளது. இது படைப்பாளர் நூல்விவரப்பட்டியலாகவோ அல்லது பொருள் சார் நூல்விவரப்பட்டியலாகவோ அமையலாம். பொருள் சார் நூல்விவரப்பட்டியலானது நாடு, மொழி, இனம், பொருட்துறை என மேலும் வகைப்படுத்தப்படுகிறது. முறைப்படுத்தப்பட்ட நூல்விவர ஆவணவாக்கத்தின் முன்னோடி என்ற பெருமையையும் சைமன் காசிச்செட்டியே பெறுகின்றார். 1848 ம் ஆண்டு யூன் 3, 1849 பெப்ரவரி 24, மற்றும் டிசம்பர் 1 ஆகிய திகதிகளில் திகதி இலங்கை றோயல் ஏசியாற்றிக் சங்கத்தில் இவரால் வாசிக்கப்பட்ட தமிழ் நூற்பட்டியலானது ஈழத்து நூல்விபரப்பட்டியல் வரலாற்றின் முன்னோடி முயற்சி எனக் கருதத்தக்கது. மூன்று பிரதான பொருட்தலைப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இப்பட்டியலின் முதலாவது பிரிவான மொழியியலில் 74 நூல்களின் விபரங்களும் இரண்டாவது பிரிவான புராண இலக்கியம் மற்றும் வரலாறு வாழ்க்கைச் சரிதம் என்ற பகுதியில் இந்துக்கள், கிறிஸ்தவர், இஸ்லாமியர் ஆகிய மூன்று மதம் சார்ந்தும் உள்ள படைப்பாளரின் 82 ஆக்கங்கள் பற்றிய தகவல்களும் மூன்றாவது பிரிவான சமயம் தத்துவம் பற்றிய பகுதியில் 153 நூல்களும் ஆக மொத்தம் 309 நூல்களின் விபரங்கள் இடம்பெறுகின்றன. தமிழ் தவிர்ந்த ஏனைய மொழிகளில் வெளியிடப்பட்ட தமிழியல் சார்ந்த 1322 நூல்களை பதினான்கு பொருட்தலைப்புகளின் கீழ் பட்டியல்படுத்துகின்ற தனிநாயகம் அடிகளின் 'சுநகநசநnஉந பரனைந வழ வுயஅடை ளுவரனநைள'(1966)இ 1955-70 காலப்பகுதியில் ஈழத்தில் எழுந்த நூல்களின் விவரங்களை பதினொரு தலைப்புகளில் ஒழுங்குபடுத்தித்தரும் கனகசெந்திநாதனின் 'ஈழத்துத் தமிழ்நூல் வழிகாட்டி'(1971)இ இலங்கையில் முஸ்லிம் எழுத்தாளர்கள் ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பினை 1977 நூல்களில் கால அடிப்படையில் எடுத்துக்கூறும் 'சுவடி ஆற்றுப்படை' (4 தொகுதிகள் 1850-2000) என்பன முறைப்படுத்தப்பட்ட நூல்விவரப்பட்டியற் பண்பைக் கொண்டவை. <br />
<br />
அப்புத்துரையின் 'காங்கேயன் கல்விவட்டாரத்தில் எழுந்த நூல்கள்' என்ற நூல்விபரப்பட்டியலும், 'டியவவiஉயடழnயை' என்ற பெயரில் மட்டக்களப்புப் பிரதேசம் சார்ந்த ஆக்கங்களின் தொகுப்பான செல்வராஜாவின் நூல்விவரப்பட்டியலும் பிரதேசம் சார்ந்த நூல்களின் விவரங்களை முறைப்படுத்திய ரீதியில் தரும் பண்பைக் கொண்டிருக்கிறது. <br />
<br />
இலண்டனிலிருந்து 2000ம் ஆண்டு முதல் செல்வராஜா அவர்களால் வெளியிடப்படும் 'நூல்தேட்டம்' குறிப்புரைப் பண்பையும் உள்ளடக்கிய தொன்று. இலங்கை எழுத்தாளர்களால், தமிழில் வெளியிட்ட அனைத்து நூல்களும் குறிப்புரையுடன் கூடியதாக இத்தொகுப்பில் இடம்பெறுகின்றது. ஒவ்வொரு தொகுதியிலும் 1000 நூல்கள் என்ற ரீதியில் இதுவரை ஆறு தொகுதிகளில் 6000 ஈழத்துத் தமிழ் நூல்கள் பற்றிய தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. 1970 இல் உருவான எவ்.எக்ஸ்.சி நடராசாவின் 'ஈழத்துத் தமிழ் நூல் வரலாறு' விளக்க நூல்விவரப்பட்டியல் பண்பைக் கொண்டிருக்கிறது. 1993இல் சிவசண்முகராஜாவினால் எழுதப்பட்ட 'ஈழத்துச் சித்த மருத்துவ நூல்கள்: ஓர் அறிமுகம்' என்ற நூலும் விளக்க நூல்விவரப்பட்டியல் என்ற வகைக்குள் அடங்குகின்றது. 1980களுக்குப் பின்னர் குறிப்பிட்ட படைப்பாளரின் ஆக்கங்களைப் பட்டியற்படுத்தும் பண்பு இனங்காணப்படுவதுடன் நாவலர், கைலாசபதி, சிவத்தம்பி, கமால்தீன், எவ்.எக்ஸ். சி நடசாசா ஆகியோரின் ஆக்கங்களின் விவரங்கள் பட்டியல்படுத்தப்பட்டு நூலுருவம் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.<br />
<br />
பத்திரிகைச் செய்திகளின் பதிவு பேணும் பண்பு<br />
பத்திரிகைச் செய்திகளை வெட்டிப் பொருத்துமான தலைப்புகளில் ஒழுங்குபடுத்தும் பணியானது ஆவணப்படுத்தலின் மிக முக்கிய அம்சமாகக் கருதப்படுகின்றது. இந்த வகையில் ஈழத்தமிழர்களின் 100 வருட வரலாற்றை பத்திரிகைச் செய்திகள் மற்றும் தகவல்கள் இரண்டும் இனைந்த வகையில் ஆவணப்படுத்தி வருங்காலத் தலைமுறையினருக்கு வழங்கும் ஆவணவாக்கப்பணியாக கடந்த 45 ஆண்டுகளாக குரும்பசிட்டி இரா. கனகரத்தினத்தின் பத்திரிகை துணுக்குச் சேகரிப்பைக் கொள்ள முடியும். இலங்கை வாழ் தமிழர்கள் என்றில்லாது, உலகளாவிய தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகளை வாழ்க்கை வரலாறுகள், சமய வரலாறுகள், பெரியார்கள், சமயமும் சமயத் தலங்களும், இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்கள், தமிழக - இலங்கைத் தொல்லியல் ஆய்வுகள், சிங்கள மக்கள் மொழி, பண்பாடு, சிங்களவர் - தமிழர் தொடர்புகள், தமிழர் கலைகள், தமிழர் கலையும் பண்பாடும், உலகளாவிய தமிழர் ஆகிய பொதுத் தலைப்பு மற்றும் தனித்தலைப்புகளில் ஏறத்தாழ 7000 கட்டுரைகளை அவர் சேகரித்து வைத்துள்ளார். ஒவ்வொரு தலைப்பையொட்டி 10 முதல் 300 கட்டுரைகள் வரை அவருடைய ஆவணக் காப்பகத்தில் உண்டு. <br />
<br />
இதேபோன்று சுனாமி: பத்திரிகை நறுக்குகள்; என்ற தலைப்பில் சங்கானையைச் சேர்ந்த கணேஷ் அவர்களால் பலதரப்பட்ட பத்திரிகைளிலிருந்தும் வெட்டியெடுக்கப்பட்டு 4500க்கும் மேற்பட்ட பத்திரிகை நறுக்குகளை யு3 அளவுள்ள 338 தாள்களில் ஒட்டி 34 பொருட்தலைப்புகளின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்ட 4500க்கும் மேற்பட்ட பத்திரிகை நறுக்குகளும் குறிப்பிடப்படவேண்டியதொன்று.. <br />
<br />
இலங்கையில் வெளியிடப்பட்ட பலதரப்பட்ட பத்திரிகைகளையும் மையப்படுத்தி 2005இல் பொது நூலகராக தனது பணியை வரித்துக் கொண்ட அனலைதீவு சௌந்தரராஜனின் தனிப்பட்ட ஆர்வம் காரணமாக தொடங்கப்பட்ட பத்திரிகை நறுக்குகளை உருவாக்கும் பணியானது சுனாமி, வடக்கின் வசந்தம், தேச அபிவிருத்தி, பிரதேச அபிவிருத்தி, கல்வி, விவசாயம், மருத்துவம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட தலைப்புகளின் உடுவில் மற்றும் சுன்னாகம் பொது நூலகங்களில் சேமிக்கப்பட்டிருக்கிறது. இது பத்திரிகையில் வெளியாகின்ற கட்டுரைகளை மட்டும்; வெட்டிப் பொருத்தமான தலைப்புகளின் கீழு; ஒழுங்குபடுத்திச் சேகரிக்கும் பண்பாக இனங்காணப்படுகின்றது. இந்தவகையில் இசை, நடனம், அரங்கு எனக் கலைத்துறையை மட்டும் முதன்மைப்படுத்தி கணிசமான பத்திரிகைத் தகவல்களை ஆவணப்படுத்தியிருக்கும் ஆசிரியர் குகதாசனின் பணியும்; குறிப்பிடத்தக்கது. <br />
<br />
தொடர்புடைய தகவல்களைத் தொகுத்தளிக்கும் பண்பு<br />
ஈழத்தமிழ்ச சமூகத்தின் அண்மைக்காலங்களில் அதிகம் இனங்காணப்படும் பண்பாக இது உள்ளது. சஞ்சிகைகள் மற்றும் பத்திரிகைகளில் வெளியிடப்படும் ஆக்கங்களையோ தகவல்களையோ ஒரு தொகுப்பாக ஆவணப்படுத்தும் பண்பு ஈழத் தமிழ் இலக்கியங்களின் முக்கிய போக்காக இனங்காணப்படுகிறது. இந்த வகையில் த.இராமநாதபிள்ளையின் இலக்கிய இலக்கண ஆய்வுரைகள்(1965), சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்களால் எழுதப்பெற்ற பதிப்புரைகளை தொகுத்து வெளிவந்த 'தாமோதரம்' (1971), ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தின் தொகுப்பான ந. சபாரத்தினத்தின் 'ஊரடங்கு வாழ்வு(1985), சற்றடே றிவியூ ஆங்கலப்பத்திரிகைகளின் தலையங்கம் உட்பட பல பதிவுகளை உள்ளடக்கிய சிவநாயகத்தின் ' Pநn யனெ வாந புரn'இ தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத் தொகுப்பாக தனபாலசிங்கத்தின் நோக்கு மற்றும் ஊருக்கு நல்லது சொல்வேன் போன்றவை, பத்தி எழுத்துகளின் தொகுப்பான யேசுராசாவின் தூவானம் போன்றவை இத்தகைய பண்பைக் கொண்டவை. இதே போன்று சஞ்சிகைகளில் வெளிவந்த கவிதைகள் கட்டுரைகள் மற்றும் சிறுகதைகள் அவ்வப்போது தொகுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டிருப்பது கண்கூடு. <br />
<br />
சமூக வழக்காறுகளை ஆவணப்படுத்தும் பண்பு<br />
சமூக வழக்காறுகளை ஆவணப்படுத்தும் பண்பு ஈழத்து இலக்கியங்களில் மிக குறைவாக இனங்காணப்படினும் நாட்டார் பாடல்கள் கணிசமான முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது. முல்லைத்தீவைச் சேர்ந்த த.கைலாயபிள்ளையின் கதிரையப்பபள்ளு(1927), முள்ளியவளையைச்சேர்ந்த சி.ச. அரியகுட்டிப்பிள்ளையின் அருவிச்சிந்து, கதிரையப்பபள்ளு, பண்டிப்பள்ளு, குருவிப்பள்ளு என்ற தலைப்பிலான அருவி வெட்டுப்பாடல்கள் (ஆண்டு இல்லை) கீழ்கரவையம்பதி வ.கணபதிப்பிள்ளையின் வேலப்பணிக்கன் பெண்சாதி அரியாத்தை பேரில் ஒப்பாரி(1934), முல்லைமணியின் கமுகஞ்சண்டை(1979); கல்விவெளியீட்டுத் திணைக்களத்தின் நாட்டார் பாடல்கள்(1976), யாழ்ப்பாணம் மு. இராமலிங்கத்தின் வட இலங்கையர் போற்றும் நாட்டார் பாடல்கள்(1961), தி. சதாசிவ ஜயரின் மட்டக்களப்பு வசந்தன் திரட்டு (1961), சு. வித்தியானந்தனின் மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள்(1960) குறிப்பிடத்தக்கவை. <br />
பேராசிரியர் சு. வித்தியானந்தனின் அலங்காரரூபன் நாடகம்(1962), மூவிராசாக்கள் நாடகம்(1966), ஞானசவுந்தரி நாடகம்(1967) போன்றவை கூத்துச் சாந்த ஆவணப்படுத்தல் முயற்சியாகும்.<br />
பீற்றர் பேர்சிவல் பாதிரியாரின் திருட்டாந்த சங்கிரம் (1843) பழமொழி சார்ந்து 1823 பழமொழிகளை தொகுப்பாகும். சச்சி மாஸ்ரரின் மக்கள் வாழ்வில் பழமொழி என்பது விளக்கக் கட்டுரைப் பாங்கைக் கொண்டது. சி. பத்மநாதனின் இலங்கைத் தமிழர் தேச வழமைகளும் சமூக வழமைகளும் என்ற நூல் சமூகத்தின் சட்டநெறிகளைத் தொகுத்துத் தரும் ஒரு தொகுப்பு ஆவணப் பண்பு கொண்டது. <br />
<br />
உருநிலைச் சேகரிப்புகளை ஆவணப்படுத்தும் பண்பு<br />
நூலகமொன்றின் முக்கிய தகவல் வளமாகக் கருதப்படும் உருநிலைச் சேகரிப்புகளில் கலைப்பொருட்கள், கருவிகள், உபகரணங்கள் போன்றவை உள்ளடங்கும். இவை 1. கலை பிரயோக அறிவியல் சார்ந்தவை. (எ-டு விளையாட்டுப் பொருட்கள்) 2. மனிதப்பண்பியல் சார்ந்தவை (எ-டு இசைக்கருவிகள்) 3. அறிவியல் சார்ந்தவை (எ-டு மனித எலும்புத் தொகுதி) 4. சமூக அறிவியல் சார்ந்தவை (நாணயங்கள், தபால் தலைகள்) என நான்கு வகைப்படும். உருநிலைச் சேகரிப்புகளை ஆவணப்படுத்தும் தன்மையில் பொழுதுபோக்கு நோக்கம், பண்பாட்டு அம்சங்களை பாதுகாக்கும் நோக்கம் ஆகிய இரண்டும் முக்கியம் பெறுகின்றன. இந்த வகையில் அருள்சந்திரனின் 'யாழ்ப்பாணப் பெட்டகம்' கணிசமானளவு யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய கட்டிட அமைப்புகள், கலைகள், பண்பாட்டுப் பொருட்கள் உள்ளிட்ட உருநிலைச் சேகரிப்புகளை 32 பொருட்தலைப்புகளில் 3250 புகைப்படங்களினூடாக ஆவணப்படுத்தியிருக்கிறது. தபால்தலைகள் மற்றும் நாணயங்களை அதன் உண்மை வடிவத்தில் ஆவணப்படுத்துவதாக அனலைதீவு தர்சனின் பணி அமைகிறது. ஆயிரம் மூலிகைத் திட்டத்தினூடாக தமிழர்பிரதேசத்தில் காணப்படும் அரிய மூலிகைகளை ஓரிடத்தில் சேகரித்து பராமரிப்பது மட்டுமன்றி அது தொடர்பான விவரக்குறிப்புகளைப் பட்டியல்படுத்துவதாகவும் மூலிகை பாதுகாப்புச் சபையின் ஸ்தாபகர் வைத்தியர் சந்திரமோகனின் பணி அமைகிறது. <br />
<br />
படியெடுத்தல் மூலம் மீட்டுருவாக்கும் பண்பு<br />
மூல ஆவணத்தில் எந்தவித மாற்றமும் செய்யாது அதனை பாதுகாப்பு நோக்கங்கருதி மீள வெளியிடும் இப்பணியானது எழுதிப் படியெடுத்தல், கையெழுத்துப் பிரதியை அச்சுக்கு மாற்றுதல், கையெழுத்துப் பிரதியை பரிசோதித்து அச்சுக்கு மாற்றுதல், அச்சுப்பிரதியை மீள அச்சிடுதல், அச்சிலுள்ளதை அதன் வடிவத்திலேயே ஆவணப்படுத்தல் போன்ற பலதரப்பட்ட பண்புகளைக் கொண்டது. எழுதிப் படியெடுக்கும் பணியானது அச்சின் கண்டுபிடிப்பிற்கு முன்னரான பொது வழக்கிலிருந்த ஆவணவாக்கச் செயற்பாடாகும். நாவலர் மற்றும் பதிப்புப் பணியில் ஈடுபட்ட 19ம் நூற்றாண்டுப் புலமையாளர்களின் பதிப்புப் பணிக்கு மூலமாக இருந்தது எழுத்துமூலத்திலிருந்த மூல ஆவணத்தின் பிரதிகளேயாகும். இது சுவடிகளில் எழுதப்பட்ட ஆக்கங்களை பல்வேறு பிரதிகளாக ஆக்கும் செயற்பாட்டைக் குறிக்கிறது. பஞ்சாட்சரசர்மாவின் 'அஷரபோதினி', விவிக்த பதாவலி போன்ற கிரியா பத்ததிகள் படியெடுத்தல் மூலம் மீட்டுருவாக்கும் பண்பு கொண்டவை.(கோப்பாய் சிவம் 1980) <br />
<br />
இதுதவிர அச்சிடப்பட்ட ஆவணமொன்றின் பிரதிகள் அனைத்தும் அழிந்தநிலையிலோ எடுக்கமுடியாத நிலையிலோ இருக்கும் அதேசமயம் மீள்பதிப்புச் செய்வதற்கான வாய்ப்பும் இல்லாத போது அச்சுப் பிரதியை மீண்டும் கையெழுத்துப் பிரதியாக ஆவணப்படுத்திய முயற்சியொன்றும் இவ்வாய்வில் இனங்காணப்பட்டிருக்கிறது. குமாரசுவாமிப்புலவரின் இலக்கியச்சொல்லகராதியானது அவரது மகன் முத்துக்குமாரசுவாமிப்பிள்ளையால் 1965இல் நான்கு தொகுதிகளாக எழுதித் தொகுக்கப்பட்டு குமாரசுவாமிப்புலவர் நூலகத்தில் பேணப்படுகிறது. <br />
<br />
அச்சுப்பதிப்பின் வழி பாதுகாக்கும் பண்பு<br />
ஈழத்தமிழரின் பெரும்பாலான ஆரம்பகால இலக்கியங்கள் சுவடிகளில் பதியப்பட்டு பின்னர் கையெழுத்துப்பிரதிகளாக தாள்களில் பேணப்பட்டு அதன் பின்னர் அச்சு வடிவம் பெற்றவை. சித்தமருத்துவத்தின் முக்கியத்துவத்தை உய்த்துணர்ந்து அது தொடர்பான சுவடிகளை தேடிச் சேகரித்து அவற்றை அடிப்படையாகக் கொண்டு ஏழாலை க. பொன்னையா அவர்களின் பதிப்பில் உருவான பரராசசேகரத்தின் ஏழு தொகுதிகள்(1930-36), சொக்கநாதர்தன்வந்திரியம்(1933), செகராசசேகர வைத்தியம், அமிர்தசாகரம்(1927), பதார்த்தசூடாமணி(1927), வைத்தியசிந்தாமணி((1932),, வைத்திய புராணம்((1933), அங்காதிபாதம், வைத்தியதெளிவு(1930) போன்றவை சுவடிநிலையிலிருந்து நேரடியாக அச்சுப்பதிப்பாகவும் முத்துக்குமாரசுவாமிப் பிள்ளையின் கவித்திரட்டு(1964) கையெழுத்துப் பிரதிநிலையிலிருந்து அச்சுப்பதிப்பாகவும் மாற்றம் பெற்றவை. <br />
<br />
மீள்பதிப்பினூடாக தகவலைப் பரவலாக்கும் பண்பு<br />
தமிழ்மண் பதிப்பகம், ஆசிய கல்விச் சேவை நிறுவனம் ஈழத்தமிழரின் ஆரம்பகால இலக்கியங்களை அழியவிடாது பாதுகாக்கும் நோக்குடன் மீpள்பதிப்புப் பணிகளை மேற்கொண்டிருக்கின்றன. ஈழத் தமிழ் இலக்கியம் சார்ந்து மீள்பதிப்புப் பணிகள் எண்ணிறந்த அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளமையால் இதற்கான எடுத்துக்காட்டுகளை இங்கு பட்டியலிடுவது தேவையற்றது எனினும் ஒருசில ஆரம்ப கால நூல்களின் மீள்பதிப்பு பணிகளை குறிப்பிடுவது பொருத்தமானது. மீள்பதிப்புப் பணிகளில் சுன்னாகம் குமாராமிப் புலவரால் பதிப்பிக்கப்பட்ட இதோபதேசம்(1886), சகுலமலைக்குறவஞ்சி நாடகம்(1895) இரண்டும்; குறிப்பிடத்தக்கவை (முத்துக்குமாரசுவாமிப் பிள்ளை 1970). கணேசையரின் ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம்(1939), சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமர்சனம்(1928) போன்றவை குறிப்பிடத்தக்கவை. <br />
<br />
பாடபேத ஆய்வுடன் கூடிய குறை களையும் பண்பு<br />
சுவடி வடிவில் கவனிப்பாரற்றுக் கிடந்த பழம்பெரும் இலக்கியங்களின் பிரதிகளை தேடிச் சேகரித்து பதிப்பிக்கும் பணியாகவே ஈழத் தமிழ்ச் சமூகத்தின் ஆரம்பகால ஆவணப்படுத்தல் முயற்சிகள் இனங்காணப்படுகின்றது. இத்தகைய பதிப்பு முன்னோடிகளாக ஆறுமுகநாவலரையும் (நாவலர்) சி.வை.தாமோதரம்பிள்ளையையும் (சி.வை.தா) குறிப்பிடுவது மிகப் பொருத்தமானது. பதிப்புத் துறையில் 19ம் நூற்றாண்டின் மத்திய பகுதி நாவலர் காலம் எனப்படுகின்றது. 'நல்லைநகர் நாவலர் பிறந்திலரேல் சொல்லுதமிழ் எங்கே சுருதி எங்கே' சி.வை.தாவினால் புகழப்படுமளவிற்கு நாவலரின் பணி மகத்தானது. சிறந்த உரையாசிரியர், நூலாசிரியர், சொற்பொழிவாளர், பிரசங்கி என்பதற்கும் மேலாக அழிவுறும் நிலையிலிருந்த பெரும்பாலான சுவடி நூல்களை மீளத் தமிழ்ச்சமூகத்திற்கு அளித்த ஆவணவியலாளர் என்பது அனைத்திலும் மேலானது. நாவலரின் பதிப்பு முயற்சிகள் 1849இல் சௌந்தியலகரி மூலமும் எல்லப்பநாவலர் உரையும் என்ற நூலுடன் தொடங்குகின்றன. தொடர்ந்து நாவலர் சூடாமணிநிகண்டு (1849), நன்னூல் விருத்தியுரை மூலமும் உரையும்(1851), திருக்கோவையார் மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்(1860), கொலை மறுத்தல் (1860), மறைகையந்தாதி(1860), திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்(1861), உபமான சங்கிரகமும் இரத்தினச் சுருக்கமும் (1866) சேதுபுராணம்(1866), இலக்கணக்கொத்து, இலக்கணச் சூறாவளி, தொல்காப்பியச் சூத்திரவிருத்தி (1866), அருட்பா(1866), சிதம்பரமும்மணிக்கோவை(1867), அருணகிரிநாதர் திருவகுப்பு (1867), பதினொராம்திருமுறை(1869), கோயிற்புராணம், நால்வர் நான்மணிமாலை, பெரிய கோயிற்புராணம், பெரியநாயகி கலித்துறை, முதலான எழுபதுக்கும் மேற்பட்ட நூல்கள் பிழையறப் பதிப்பிக்கப்பட்டது ( கனகரத்தினம் 2007). <br />
<br />
பதிப்புப் பணியில் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதி சி.வை.தா காலம் எனப்படுகின்றது. சி.வை.தாவின் பதிப்புகளில் இறையனார் களவியலுரையும் தொல்காப்பியப் பொருளதிகாரமும் தமிழ் அன்னையின் இரு கண்கள் என்றும் இந்த இரண்டையும் பதித்துவியதே சி.வை.தாவுக்கு இம்மைக்கும் மறுமைக்கும் போதுமானது என்கிறார் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை. (கணபதிப்பிள்ளை) இவரின் பதிப்புரைகள் பலதுறைப்பட்ட ஆராய்ச்சிகளைக் கொண்டவை. பதிப்புப் பணியிலே நாவலரை தனது குருவாகக் கொண்ட சி.வை.தா நாவலரின் மறைவுக்குப் பின்னர் பதிப்புப் பணியையே தனது வாழ்நாள் கடமையாகக் கொண்டிருந்தார். இவரது பதிப்பு முயற்சிகள் 1853இல் தொடங்குகின்றன. நீதிநெறி விளக்கம் (1853), தொல்காப்பியம்- சொல்லதிகாரம்- சேனாவரையம் (1868), வீரசோழியம் - பெருந்தேவனாருரை(1881), தணிகைப் புராணம், இறையனாரகப்பொருள்- நக்கீரருரை(1883), தொல்காப்பியப் பொருளதிகாரம்(1885), கலித்தொகை(1887), இலக்கண விளக்கம், சூளாமணி(1889), தொல்காப்பியச் சொல்லதிகாரம்(1892) முதலான நூல்களைப் பதிப்பித்து வழங்கியதன் மூலம் சிறந்ததொரு ஆவணவியலாளராக இனங்காணப்படுகின்றார். குமாரசுவாமிப்புலவரின் யாப்பருங்கலக் காரிகை உரை(1900), ஆசாரக்கோவை(1900), நான்மணிக்கடிகை(1900), ஆத்திசூடி வெண்பா மற்றும் சிசேத்திர விளக்கம்(1901), உரிச்சொனிகண்டு, பழமொழி விளக்கம், திருவாதவூரர் புராணம்(1902) ஆகியனவும் இத்தகைய பண்பைக் கொண்டது. <br />
<br />
தொழினுட்பத் துணையுடன் எண்ணிமப்படுத்தும் பண்பு <br />
ஈழத்தமிழர் இலக்கியங்களை எண்ணிமப்படுத்தும் பணியில் நூலக நிறுவனத்தின் பணி அளப்பரியது. இதனால் உருவாக்கப்பட்ட எண்ணிம நூலகமானது நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், சிறுபிரசுரங்கள் உட்பட்ட 12,000க்கும் மேற்பட்ட ஆக்கங்களை முழுமையாக எண்ணிமப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. <br />
<br />
முடிவுரை<br />
மூலவகை ஆவணப்படுத்தலானது பொருட்துறைசார்ந்த புலமையில் முழுக்கமுழுக்க தங்கியிருக்கும் அதேசமயம் கருவிசார் ஆவணவாக்கப் பணி என்பது பொருட்துறை சார்ந்த புலமை, ஆவணப்படுத்தலுக்கான நூலகவியல் அறிவு ஆகிய இரண்டையும் வேண்டிநிற்பதொன்று. ஈழத்தமிழ்ச்சமூகத்தின் ஆவணவாக்கப்பணியானது தனிநபர்களின் ஆர்வத்தின் அடிப்படையிலேயே கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது என்பதை மேற்குறித்த ஆய்வு வெளிக்காட்டி நிற்பதுடன் ஆவணப்படுத்தலின் பலதரப்பட்ட பண்புகளிலும் ஆக்கபூர்வமான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதையும் இந்த ஆய்வு சுட்டி நிற்கிறது. <br />
உசாத்துணைகள்<br />
<!--[if gte mso 9]><xml>
<w:WordDocument>
<w:View>Normal</w:View>
<w:Zoom>0</w:Zoom>
<w:TrackMoves/>
<w:TrackFormatting/>
<w:DoNotShowPropertyChanges/>
<w:PunctuationKerning/>
<w:ValidateAgainstSchemas/>
<w:SaveIfXMLInvalid>false</w:SaveIfXMLInvalid>
<w:IgnoreMixedContent>false</w:IgnoreMixedContent>
<w:AlwaysShowPlaceholderText>false</w:AlwaysShowPlaceholderText>
<w:DoNotPromoteQF/>
<w:LidThemeOther>EN-US</w:LidThemeOther>
<w:LidThemeAsian>X-NONE</w:LidThemeAsian>
<w:LidThemeComplexScript>TA</w:LidThemeComplexScript>
<w:Compatibility>
<w:BreakWrappedTables/>
<w:SnapToGridInCell/>
<w:WrapTextWithPunct/>
<w:UseAsianBreakRules/>
<w:DontGrowAutofit/>
<w:SplitPgBreakAndParaMark/>
<w:DontVertAlignCellWithSp/>
<w:DontBreakConstrainedForcedTables/>
<w:DontVertAlignInTxbx/>
<w:Word11KerningPairs/>
<w:CachedColBalance/>
</w:Compatibility>
<w:BrowserLevel>MicrosoftInternetExplorer4</w:BrowserLevel>
<m:mathPr>
<m:mathFont m:val="Cambria Math"/>
<m:brkBin m:val="before"/>
<m:brkBinSub m:val="--"/>
<m:smallFrac m:val="off"/>
<m:dispDef/>
<m:lMargin m:val="0"/>
<m:rMargin m:val="0"/>
<m:defJc m:val="centerGroup"/>
<m:wrapIndent m:val="1440"/>
<m:intLim m:val="subSup"/>
<m:naryLim m:val="undOvr"/>
</m:mathPr></w:WordDocument>
</xml><![endif]--><br />
<!--[if gte mso 9]><xml>
<w:LatentStyles DefLockedState="false" DefUnhideWhenUsed="true"
DefSemiHidden="true" DefQFormat="false" DefPriority="99"
LatentStyleCount="267">
<w:LsdException Locked="false" Priority="0" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Normal"/>
<w:LsdException Locked="false" Priority="9" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="heading 1"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 2"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 3"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 4"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 5"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 6"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 7"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 8"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 9"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 1"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 2"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 3"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 4"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 5"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 6"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 7"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 8"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 9"/>
<w:LsdException Locked="false" Priority="35" QFormat="true" Name="caption"/>
<w:LsdException Locked="false" Priority="10" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Title"/>
<w:LsdException Locked="false" Priority="1" Name="Default Paragraph Font"/>
<w:LsdException Locked="false" Priority="11" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtitle"/>
<w:LsdException Locked="false" Priority="22" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Strong"/>
<w:LsdException Locked="false" Priority="20" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="59" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Table Grid"/>
<w:LsdException Locked="false" UnhideWhenUsed="false" Name="Placeholder Text"/>
<w:LsdException Locked="false" Priority="1" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="No Spacing"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" UnhideWhenUsed="false" Name="Revision"/>
<w:LsdException Locked="false" Priority="34" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="List Paragraph"/>
<w:LsdException Locked="false" Priority="29" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Quote"/>
<w:LsdException Locked="false" Priority="30" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Quote"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="19" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtle Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="21" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="31" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtle Reference"/>
<w:LsdException Locked="false" Priority="32" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Reference"/>
<w:LsdException Locked="false" Priority="33" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Book Title"/>
<w:LsdException Locked="false" Priority="37" Name="Bibliography"/>
<w:LsdException Locked="false" Priority="39" QFormat="true" Name="TOC Heading"/>
</w:LatentStyles>
</xml><![endif]--><!--[if gte mso 10]>
<style>
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:10.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-bidi-font-family:Latha;}
</style>
<![endif]-->
<br />
<div class="MsoNormal" style="background: white; line-height: 13.2pt; margin-bottom: 1.2pt; margin-left: .75in; mso-list: l0 level1 lfo1; mso-margin-top-alt: auto; tab-stops: list .75in; text-align: justify; text-indent: -.25in;">
<span lang="EN-GB" style="color: #303030; font-family: "times new roman" , "serif"; mso-ansi-language: EN-GB; mso-bidi-font-size: 12.0pt;"><span style="mso-list: Ignore;">1.<span style="font: 7.0pt "Times New Roman";"> </span></span></span><span lang="EN-GB" style="background: white; color: #303030; font-family: "times new roman" , "serif"; mso-ansi-language: EN-GB; mso-bidi-font-size: 12.0pt;">Harrod, Leonard
Montague. Harrod’s librarians’ glossary of terms used in librarianship,
documentation and the book crafts and reference book. 6<sup>th</sup> ed.
London: Gower.pp254.</span></div>
<div class="MsoNormal" style="background: white; line-height: 13.2pt; margin-bottom: 1.2pt; margin-left: .75in; mso-list: l0 level1 lfo1; mso-margin-top-alt: auto; tab-stops: list .75in; text-align: justify; text-indent: -.25in;">
<span lang="EN-GB" style="color: black; font-family: "times new roman" , "serif"; mso-ansi-language: EN-GB;"><span style="mso-list: Ignore;">2.<span style="font: 7.0pt "Times New Roman";"> </span></span></span><span lang="EN-GB" style="background: white; color: black; font-family: "times new roman" , "serif"; mso-ansi-language: EN-GB;">Ranganathan,S.R(1974).
Physical bibliography for librarians. 2<sup>nd</sup> ed. Bombay: Asia
publishing house.. p21.</span></div>
<div class="MsoNormal" style="background: white; line-height: 14.4pt; margin-bottom: 1.2pt; margin-left: .75in; mso-list: l0 level1 lfo1; mso-margin-top-alt: auto; tab-stops: list .75in; text-align: justify; text-indent: -.25in;">
<span class="MsoHyperlink"><span style="font-family: "times new roman" , "serif"; text-decoration: none; text-underline: none;"><span style="mso-list: Ignore;">3.<span style="font: 7.0pt "Times New Roman";"> </span></span></span></span><span lang="EN-GB" style="background: white; color: #303030; font-family: "times new roman" , "serif"; mso-ansi-language: EN-GB;">Reitz, Joan.M. ( 2006). Online
Dictionary for Library and Information Science. </span><span class="MsoHyperlink"><span style="font-family: "times new roman" , "serif";"><a href="http://www.abc-clio.com/%20ODLIS/%20odlis%20b.aspx">http://www.abc-clio.com/
ODLIS/ odlis b.aspx</a></span></span></div>
<div class="MsoNormal" style="background: white; line-height: 14.4pt; margin-bottom: 1.2pt; margin-left: .75in; mso-list: l0 level1 lfo1; mso-margin-top-alt: auto; tab-stops: list .75in; text-align: justify; text-indent: -.25in;">
<span style="color: #303030; font-family: "times new roman" , "serif";"><span style="mso-list: Ignore;">4.<span style="font: 7.0pt "Times New Roman";">
</span></span></span><span style="background: white; color: #303030; font-family: "times new roman" , "serif";">Selvarajah,S.J (1988). Batticaloania: a
bibliography of Batticaloa. Batticaloa: Municipal Council. 81p</span></div>
<div class="MsoNormal" style="background: white; line-height: 13.2pt; margin-bottom: 1.2pt; margin-left: .75in; mso-list: l0 level1 lfo1; mso-margin-top-alt: auto; tab-stops: list .75in; text-align: justify; text-indent: -.25in;">
<span lang="EN-GB" style="color: black; font-family: "times new roman" , "serif"; mso-ansi-language: EN-GB;"><span style="mso-list: Ignore;">5.<span style="font: 7.0pt "Times New Roman";">
</span></span></span><span lang="EN-GB" style="background: white; color: black; font-family: "times new roman" , "serif"; mso-ansi-language: EN-GB;">Simon Casie Chitty
(1949). The Tamil Plutarch. Colombo: General publishers.135p</span></div>
<div class="MsoNormal" style="background: white; line-height: 14.4pt; margin-bottom: 1.2pt; margin-left: .75in; mso-list: l0 level1 lfo1; mso-margin-top-alt: auto; tab-stops: list .75in; text-align: justify; text-indent: -.25in;">
<span style="color: #303030; font-family: "times new roman" , "serif";"><span style="mso-list: Ignore;">6.<span style="font: 7.0pt "Times New Roman";"> </span></span></span><span lang="EN-GB" style="background: white; color: #333333; font-family: "times new roman" , "serif"; mso-ansi-language: EN-GB;">Thani Nayagam, Xavier
S.</span><span style="background: white; color: #303030; font-family: "times new roman" , "serif";">(1966).<span style="mso-spacerun: yes;"> </span>A Reference
guide to Tamil Studies: books.Kuala Lumpur:University of Malaya Press.122p.</span></div>
<div class="MsoNormal" style="background: white; line-height: 13.2pt; margin-bottom: 1.2pt; margin-left: .75in; mso-list: l0 level1 lfo1; mso-margin-top-alt: auto; tab-stops: list .75in; text-align: justify; text-indent: -.25in;">
<span lang="EN-GB" style="color: black; font-family: "times new roman" , "serif"; mso-ansi-language: EN-GB;"><span style="mso-list: Ignore;">7.<span style="font: 7.0pt "Times New Roman";"> </span></span></span><span lang="EN-GB" style="background: white; color: black; font-family: "times new roman" , "serif"; mso-ansi-language: EN-GB;">Vali North Cultural
society (2008). Yarlppanap pettakam kankardchi-01(The Exhibition on Treasure
House of Jaffna-01) Yarl Thinakkural. 14<sup>th</sup>.Oct.2008. p3. </span></div>
<br />
8. அப்புத்துரை, சி.(1985). காங்கேசன் கல்வி வட்டாரத்தில் எழுந்த நூல்கள். காங்கேசன் கல்விமலர். காங்கேசன்துறை: காங்கேசன்துறை கல்விவலய அதிபர்கள் சங்கம். பக் 209-223.<br />
9. கணேசையர், சி(1939). ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம். சென்னை தமிழ்மண் பதிப்பகம். 156ப.<br />
10. கனகரத்தினம், இரா,. கனகரத்தினம்இ பி(1996). உலகத் தமிழர் ஆவணக் காப்பகம். கண்டி: ஆசிரியர். 26ப.<br />
11. கோப்பாய் சிவம்(1980). கிரியா பத்ததிகள் தொடர்பான கையெழுத்துப் பிரதிகளின் விளக்கப் பட்டியல்.(வெளியிடப்படவில்லை). <br />
12. சண்முகதாஸ்,மனோண்மணி (2007). சி.வை.தாமோதரம்பிள்ளை. கொழும்பு: குமரன். ப20.<br />
13. சதாசிவம்பிள்ளை,அ.(1886) பாவலர் சரித்திர தீபகம்.மானிப்பாய்: ஸ்றோங்அஸ்பரி இயந்திரசாலை.<br />
14. சந்திரகுமார், எம் (2009). பழைய வரலாறுகள் எதிர்கால ஆவணங்கள்: கணேசுடனான நேர்காணல். யாழ்தீபம். றறற.எசையமநளயசi.டம.<br />
15. நடராசா, எவ்.எக்ஸ்,சி(1970). ஈழத்துத் தமிழ்நூல் வரலாறு. கொழும்பு: அரசு வெளியீடு <br />
16. பூலோகசிங்கம், பொ (1970). தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞரின் பெருமுயற்சிகள். யாழ்ப்பாணம்: கலைவாணி புத்தக நிலையம். 276ப.<br />
17. முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை,கு(1970). குமாரசுவாமிப்புலவர் வரலாறு. சுன்னாகம்: புலவரகம். ப.43<br />
18. ஜமீல்,எஸ்.எச்.எம் (1994). சுவடி ஆற்றுப்படை. 4 தொகுதிகள். கல்முனை: இஸ்லாமிய நூல் வெளியீட்டுக் கழகம். <br />
<br />
<br />
<br />
<a href="http://www.pubad.gov.lk/web/eservices/circulars/2015/T/31_2001_(x)_(t).pdf">http://www.pubad.gov.lk/web/eservices/circulars/2015/T/31_2001_(x)_(t).pdf</a><br />
<br />
<br />
<br />Srikanthaluxmyhttp://www.blogger.com/profile/02621345440975786756noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-14981721.post-34012399013926981182014-09-13T01:03:00.004-07:002015-11-09T11:59:01.984-08:00முப்பரிமாண நூலகம் சுயகற்றலுக்கான புதிய ஊடகம்<div style="text-align: center;">
<b>முப்பரிமாண நூலகம்<br />சுயகற்றலுக்கான புதிய ஊடகம்</b></div>
<!--[if gte mso 9]><xml>
<w:WordDocument>
<w:View>Normal</w:View>
<w:Zoom>0</w:Zoom>
<w:TrackMoves/>
<w:TrackFormatting/>
<w:DoNotShowPropertyChanges/>
<w:PunctuationKerning/>
<w:ValidateAgainstSchemas/>
<w:SaveIfXMLInvalid>false</w:SaveIfXMLInvalid>
<w:IgnoreMixedContent>false</w:IgnoreMixedContent>
<w:AlwaysShowPlaceholderText>false</w:AlwaysShowPlaceholderText>
<w:DoNotPromoteQF/>
<w:LidThemeOther>EN-US</w:LidThemeOther>
<w:LidThemeAsian>X-NONE</w:LidThemeAsian>
<w:LidThemeComplexScript>TA</w:LidThemeComplexScript>
<w:Compatibility>
<w:BreakWrappedTables/>
<w:SnapToGridInCell/>
<w:WrapTextWithPunct/>
<w:UseAsianBreakRules/>
<w:DontGrowAutofit/>
<w:SplitPgBreakAndParaMark/>
<w:DontVertAlignCellWithSp/>
<w:DontBreakConstrainedForcedTables/>
<w:DontVertAlignInTxbx/>
<w:Word11KerningPairs/>
<w:CachedColBalance/>
</w:Compatibility>
<m:mathPr>
<m:mathFont m:val="Cambria Math"/>
<m:brkBin m:val="before"/>
<m:brkBinSub m:val="--"/>
<m:smallFrac m:val="off"/>
<m:dispDef/>
<m:lMargin m:val="0"/>
<m:rMargin m:val="0"/>
<m:defJc m:val="centerGroup"/>
<m:wrapIndent m:val="1440"/>
<m:intLim m:val="subSup"/>
<m:naryLim m:val="undOvr"/>
</m:mathPr></w:WordDocument>
</xml><![endif]-->
<br />
<div align="center" class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: .0001pt; margin-bottom: 0in; text-align: center;">
<span lang="EN-GB" style="font-size: 14.0pt; mso-bidi-font-size: 12.0pt;">Three Dimensional Library: <span style="mso-spacerun: yes;"> </span>an emerging Medium for Self Learning </span></div>
<!--[if gte mso 9]><xml>
<w:LatentStyles DefLockedState="false" DefUnhideWhenUsed="true"
DefSemiHidden="true" DefQFormat="false" DefPriority="99"
LatentStyleCount="267">
<w:LsdException Locked="false" Priority="0" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Normal"/>
<w:LsdException Locked="false" Priority="9" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="heading 1"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 2"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 3"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 4"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 5"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 6"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 7"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 8"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 9"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 1"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 2"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 3"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 4"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 5"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 6"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 7"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 8"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 9"/>
<w:LsdException Locked="false" Priority="35" QFormat="true" Name="caption"/>
<w:LsdException Locked="false" Priority="10" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Title"/>
<w:LsdException Locked="false" Priority="1" Name="Default Paragraph Font"/>
<w:LsdException Locked="false" Priority="0" Name="Body Text"/>
<w:LsdException Locked="false" Priority="11" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtitle"/>
<w:LsdException Locked="false" Priority="0" Name="Hyperlink"/>
<w:LsdException Locked="false" Priority="22" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Strong"/>
<w:LsdException Locked="false" Priority="20" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="59" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Table Grid"/>
<w:LsdException Locked="false" UnhideWhenUsed="false" Name="Placeholder Text"/>
<w:LsdException Locked="false" Priority="1" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="No Spacing"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" UnhideWhenUsed="false" Name="Revision"/>
<w:LsdException Locked="false" Priority="34" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="List Paragraph"/>
<w:LsdException Locked="false" Priority="29" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Quote"/>
<w:LsdException Locked="false" Priority="30" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Quote"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="19" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtle Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="21" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="31" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtle Reference"/>
<w:LsdException Locked="false" Priority="32" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Reference"/>
<w:LsdException Locked="false" Priority="33" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Book Title"/>
<w:LsdException Locked="false" Priority="37" Name="Bibliography"/>
<w:LsdException Locked="false" Priority="39" QFormat="true" Name="TOC Heading"/>
</w:LatentStyles>
</xml><![endif]--><!--[if gte mso 10]>
<style>
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:10.0pt;
font-family:"Times New Roman","serif";
mso-bidi-font-family:Mangal;}
</style>
<![endif]--><br />
சுருக்கம்<br />
(தற்போது நிலைகொண்டிருக்கும் நூலக முறைமைகளினூடாக சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும் நோக்குடன் யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் வெளிப்பாடாக கருக்கொண்ட புதிய கருத்துநிலையே முப்பரிமாண நூலகமாகும். 'சிந்தனைப் பதிவேடுகள் அன்றும் இன்றும்' என்ற தலைப்பில் யாழ் மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் நடமாடும் நூலகக் கண்காட்சியை ஒழுங்குபடுத்தியதன் வாயிலாக சான்றாதாரக் கல்வியின் முக்கியத்துவத்தையும் அதன் பயனையும் தெளிவாகக் கண்டுணர்ந்ததன் விளைவாக முப்பரிமாண நூலகம் என்ற புதிய கருத்துநிலையினூடாக வாசிப்பை மேம்படுத்தும் புதிய உத்தி இங்கு அறிமுகம் செய்யப்படுகிறது. இக்கட்டுரையானது இச்செயற்திட்டத்தினை பாடசாலை நூலகங்கள் ஒவ்வொன்றிலும் அறிமுகப்படுத்தும் நோக்கில் அதன் ஒவ்வொரு அம்சங்களையும் விபரிக்கின்றது.)<br />
<br />
<br />
அறிமுகம்<br />
<br />
கல்வி என்பது கற்றல் கற்பித்தல் ஆகிய இருபெரும் மூலக்கூறுகளைக் கொண்டது. கற்றல் மாணவனுடனும் கற்பித்தல் ஆசிரியருடனும் தொடர்புடையது. மாணவரோ ஆசிரியரோ தாமாக விரும்பாதவரை இரண்டு செயற்பாடுகளுமே முழுமை பெறாது. ஆசிரியரின் சொந்த அபிப்பிராயங்களுக்கு முதன்மை கொடுக்கும் மரபுரீதியான கற்பித்தலிலிருந்து சான்றாதாரங்களுக்கு முதன்மை கொடுக்கும் சான்றாதாரக்கல்வி என்ற நவீன மாதிரி இன்றைய கற்பித்தல் உலகில் அதிகம் செலுத்துகின்றது. அது போன்று கற்றலை முறைசார் கற்றல் முறைசாராக் கற்றல், சுய கற்றல் என வகைப்படுத்துவர். அறிவு மூலவளமாகி, அனைத்து மூல வளங்களையும் இயக்கும் உந்துசக்தியாகத் தொழிற்படும் இன்றைய தகவல் தொழினுட்ப யுகத்தில், மனித சமூகமானது, தனது தேடல்களைப் பல முனைகளிலிருந்தும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. சமூக முன்னேற்றம் என்பது அவ்வச்சூழலில் அமைந்துள்ள தேடலுக்கான வாய்ப்புகளையும் வசதிகளையும்; பயன்படுத்தும் நிலையிலேயே சாத்தியப்படும். இத்தகைய பயன்பாடு; என்பது சுயசிந்தனையின்பாற்பட்டது. சுய சிந்தனைக்குக் களமாக இருப்பது பரந்துபட்ட வாசிப்பே ஆகும்;.<br />
<br />
வாசிப்பால் தன்னை நீண்ட காலம் வளப்படுத்தி கல்வியில் உயர்ந்த சமூகம் என்ற பெருமையை உலகளாவியரீதியில் பெற்ற நமது தமிழ்ச் சமூகத்தின் இன்றைய வாசிப்பு நிலை கேள்விக்குறியாகி நிற்கிறது. குறைந்தது கடந்த இரு தசாப்தங்களாவது மனித மனங்கள் ஒவ்வொன்றிலும் தேடலுக்கான பாதைகள் அனைத்தும் மூடப்பட்ட பரிதாபகர நிலையானது கல்விச் சமூகத்தின் பார்வைக்கு எட்டியதோ இல்லையோ நூலக சமூகத்தின் கண்களுக்கு மிகத் தெளிவாகவே தெரியும் காலப்பகுதி இது. அதிலும் தகவல் தொழினுட்பத்தின் நல்ல அம்சங்களைத் தேடிக் கண்டுபிடித்து கருத்துக்கு இனிமை தரும் அம்சங்களைப் பயன்படுத்தும் ஆற்றலைக் கைவிட்டு கண்ணுக்கு இனிமை தரும் கவர்ச்சிகளை மட்டும் தேடியலையும் நிலையும், வலைத் தளம் இருக்க வாசிப்பு ஏன் என்ற வாதங்களும், வாசிப்புப் பழக்கத்தை இல்லாமலாக்குவதில் 30 ஆண்டுகால உள்நாட்டுப் போருக்கு கணிசமான பங்குண்டு என்ற நொண்டிச் சாக்குகளும், தகவல் தேடலுக்கான அனைத்து தேவைகளையும் இல்லாமலாக்குவதில் ஒருபடி கூடவே ஒத்துழைக்கும் இன்றைய நிலையில் தமிழ்ச் சமூகத்தை வாசிப்பை நோக்கி மீண்டும் திசைதிருப்பும் பாரிய கடமையைக் கொண்டனவாகவே நூலகங்களின் பணி உணரப்படுகின்றது. <br />
<br />
பாடசாலைகள் தோறும் பாடசாலை நூலகக் கற்றல் வள நிலையம் என்ற புதிய பெயருடன் பாடசாலை நூலகங்களை உருவாக்கும் பணி, இருக்கும் நூலகங்களை புது மெருகூட்டும் முயற்சிகள், கூடுதலானவரை பாடசாலை நூலகத்துக்கு பட்டதாரி ஆசிரியர் ஒருவரை ஆசிரிய நூலகர் என்ற பெயருடன் நியமிக்கும் முயற்சிகள், ஒக்டோபர் மாதத்தை தேசிய வாசிப்பு மாதமாகப் பிரகடனப்படுத்தி; அந்த நாட்களில் பொதுசன நூலகம் பாடசாலை நூலகம் என்ற பேதமின்றி கருத்தரங்குகள் கண்காட்சிகள் போட்டிப்பரீட்சைகள் என்று நடத்துதல் ஆசிரிய நூலகர்களுக்கு பயிற்சிப் பட்டறைகளை ஒழுங்குபடுத்துதல் என வாசிப்பை மேம்படுத்துவதற்கான பலவித முயற்சிகளில் இறங்கியிருக்கிறது இலங்கைச் சமூகம். 5நு மாதிரி போன்று வகுப்பறைக் கற்றல் கற்பித்தலுக்கான புதிய பல அணுகுமுறைகள், வகுப்பறைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற வாசிப்பு மூலை, வாசிப்புப் பெட்டி போன்ற புதிய பல செயற்திட்டங்கள் வாசிப்பின் அவசியத்தை மேலும் வெளிப்படுத்தி பாடசாலை நூலகத்தைத் தரமுள்ள நூலகமாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது. <br />
இவை அனைத்தையும் தூக்கிச் சாப்பிடுவது போன்று 'யாம் இருக்கப் பயமேன்' என்று அபயக்கரம் கொடுத்து தனியார் கல்வி நிலையங்கள் சமைத்த உணவை அதாவது தயார்நிலைத் தகவலை மூளைக்குள் செலுத்திக் கொண்டிருக்கும் ஒரு நிலையில் வாசிப்பின் தரம் படுமோசமாகப் பின்தள்ளப்படுவதில் ஆச்சரியத்துக்கு இடமில்லை. இதன் ஒருபடியாக வாசிப்பைத் தூண்டுவதற்கான நீண்டகாலத் தேடலில் பிறந்த புதிய உத்தியே இந்த முப்பரிமாண நூலகம்.<br />
குறிப்பிட்ட பாடத்துறை சார்ந்த உருக்களை கற்றலுக்கான அடிப்படையாகவும் உருக்கள் சார்ந்து வெளியிடப்படும் ஆய்வு வெளியீடுகளை மேலதிக வாசிப்பிற்கான அடிப்படையாகவும் பாடத்துறை சார்ந்து சுருக்கம், விளக்கம், தெளிவு என்பவற்றை மாணவனுக்கு வழங்கக் கூடிய தகவல்களை சுயகற்றலுக்கான அடிப்படையாகவும் கொண்ட புதிய மாதிரியே முப்பரிமாண நூலகம் என்ற கருத்துநிலையாகும். <br />
<br />
வரைவிலக்கணம்<br />
சுயகற்றல் செயற்பாட்டை இலக்கு வைத்து தகவலைக்; கண்டறியும் பொருட்டு குறித்த பாடத் துறையில் பொருள் தரும் வகையில் ஒழுங்குபடுத்தப்பட்ட உருக்கள், ஆவணங்கள், தகவல்கள் என்ற மூன்று முக்கிய மூலகங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட புதிய ஒரு கருத்துநிலையே முப்பரிமாண நூலகமாகும்.<br />
<br />
<br />
தூரநோக்குகள் <br />
1. பிரதேச வரலாற்றினை ஆவணப்படுத்தும் உருநிலை வளங்களின் சேர்க்கை ஒன்றினை கட்டியெழுப்புதலுக்கான அடிப்படைக் கட்டமைப்பினை உருவாக்குதல். <br />
2. நூலகங்களை அதிகார பூர்வமான பண்பாட்டுக் காப்பகமாகத் தொழிற்பட வைத்தல். <br />
3. மாணவர்களிடையே தகவல் வளப்பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வையும் தகவல் அறிவு (ஐடு) விருத்தி நிலையையும் ஏற்படுத்தல். <br />
<br />
இலக்குகள் அல்லது நோக்கங்கள் <br />
1. வாசிப்பினை மாத்திரம் மையப்படுத்தாத வகையில் கண்டும் தொட்டும் உணரத்தக்க சான்றுகளுடன் கூடிய கற்றல் சூழலினை உருவாக்குதல் <br />
2. அறிவின் பதிவகங்களாக தொழிற்படும் நூலகங்களை அனுபவங்களையும் அறிவின் மாதிரிகளையும் வெளிப்படுத்தும் கலையகங்களாக தொழிற்பட வைத்தல். <br />
3. பாடசாலைக் கல்வியில் களப்பயணங்கள் மூலம் பெறும் கல்வி அனுபவங்களை மாதிரிகளின் ஊடாக நூலக மட்டத்திலேயே எற்படுத்த உழைத்தல். <br />
4. எமது பண்பாட்டு புலம் தொடர்பான மாற்றங்களையும் புதுமைகளையும் மாதிரிகளின் ஊடாக ஆவணப்படுத்தவும் வெளிப்படுத்தவும் பாடுபடுதல். <br />
5. பல்லூடகக் கல்வி அறிவின் முழுமையான அனுபவத்தினை மாணவர்களுக்கு வழங்குதல். <br />
<br />
மூலக்கூறுகள்<br />
முப்பரிமாண நூலகமானது ஒன்றுக்கொன்று தொடர்புடைய படிநிலைத்தன்மை வாய்ந்த மூன்று கூறுகளைக் கொண்டது. இந்த மூன்று கூறுகளும் 'பிரமிட்' வடிவ கட்டமைப்பில் ஒழுங்கமைக்கப் படுகின்றன. முதலாவது கூறானது குறிப்பிட்ட பொருட்துறை சார்ந்த உருக்களுடன் தொடர்புடையது. இவை தொகை ரீதியான பண்பை அதிகம்; கொண்டிருக்கும் பிரமிட்டின் அடிப்பகுதியில் வைக்கப்படுகின்றன. இரண்டாவது கூறானது உருக்கள் சார்ந்து நூலகத்தில் காணப்படக்கூடிய தகவல் சாதனங்களுடன் தொடர்புடையது. இது பிரமிட்டின் நடுப்பகுதியில் வைக்கப்படுகிறது. மூன்றாவது கூறானது உருக்கள் மற்றும் ஆவணங்கள் சார்ந்த தகவலுடன் தொடர்புடையது. இவை தர ரீதியான பண்பை அதிகம் கொண்டிருக்கும் பிரமிட்டின் உச்சிப் பகுதியை அலங்கரிக்கின்றன. <br />
<br />
உருவும் அதன் பொருளும் (1வது பரிமாணம்)<br />
முப்பரிமாண நூலகத்தின் முதலாவது பரிமாணமாக உள்ள இந்த உருக்கள் முதல்நிலைத் தகவலாக சுவை ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்து புலன்கள் வழி வாசகனை வந்தடைகின்றன. ஒரு பாடத்துறையின் முழுமையான கற்றலுக்கு புலன்கள் அனைத்தையும் பயன்படுத்தும் வாய்ப்பை இந்த உருக்கள் கொண்டிருக்கின்றன. கற்பித்தல் செயற்பாட்டில் உருக்களின் பயன்பாடு இன்று நேற்று உருவானதொன்றல்ல. அச்சு ஊடகங்கள் புழக்கத்திற்கு வராத ஆரம்பகால கற்பித்தற் செயற்பாட்டில் ஐம்புலன்களில் செவிகளும் வாயும் அதிக பயன்பாட்டைக் கொண்டிருந்தன. அச்சு ஊடகங்களின் அதிக பயன்பாட்டுடன் செவிகளின் இடத்தை கண்கள் பிடித்துக் கொண்டது. கற்பித்தல் சார்ந்த ஆய்வுகளின் பரவலாக்கத்துடன் கற்பித்தற் செயற்பாட்டில் ஒரு விடயத்தை விளக்குதலுக்கு கேட்டல், பார்த்தல், வாசித்தல் ஆகிய மூன்று புலன்களும் போதாது என்பது உணரப்பட்டபோது நான்காவது புலனான உடலை முக்கியமாகக் கரங்களைப் பயன்படுத்தி ஒரு பொருளை விளக்கும் தன்மை முக்கியம் பெறத் தொடங்கியது. இவை நான்கும் ஒரு விடயத்தை விளக்க போதாது என்பது உணரப்பட்டபோது உருக்களின் பயன்பாட்டின் தேவை கற்பித்தற் செயற்பாட்டில் அதிகம் உணரப்பட்டது. ஆரம்பகாலத்தில் உருக்கள் கிடைக்கும் தன்மை குறைவாக இருந்தபோது படங்கள் மிக அதிகம் உதவின. இன்றைய காலங்களில் உருக்களள் ஊடான கற்பித்தல் அதிக பயன்பாடுள்ளதாக உணரப்பட்டிருக்கிறது. குறிப்பாக முன்பள்ளிக் கற்பித்தலில் கற்பித்தல் உபகரணங்கள் முழுக்க முழுக்க உருக்களை அடிப்படையாகக் கொண்ட கற்பித்தல் உபகரணங்களே. ரூசோ மற்றும் பெஸ்ரலோசி போன்ற தலைசிறந்த கல்வியாளர்களும் கற்பித்தற்செயற்பாட்டில் உருக்களின் முக்கியத்துவத்தை விளக்கியிருக்கின்றனர்.<br />
<br />
குறிப்பிட்ட பொருள் சார்ந்து உருவாக்கப்பட்ட அல்லது உருவாக்கப்படுகின்ற உருக்கள்; அனைத்தும் முப்பரிமாண நூலகத்தில் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இவ் உருக்கள் உண்மை உருக்களாகவோ அல்லது மாதிரிகளாகவோ இருக்கலாம். வாசகனின் ஆர்வத்தைத் தூண்டும் சக்தி கலைப்பொருட்களுக்கு அதிகம் இருப்பதன் காரணமாக அரும் பொருட்களை கூடியவரையில் சேகரித்து உருக்கள் என்ற நிலையில் பயன்படுத்துவது பயன்தரக்கூடியது. எடுத்துக்காட்டாக சிற்பக் கலை என்ற பொருட்துறையை எடுத்துக் கொண்டால் ஆதிகால கற்சிற்பத்திலிருந்து இன்றை வரைக்கும் சிற்பக்கலைக்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் சார்ந்து உருக்களை காட்சிப்படுத்தலாம். அதுமட்டுமன்றி வார்ப்புச் சிற்பங்கள், செதுக்குச் சிற்பங்கள் இரண்டும் இணைந்து உருவான சிற்பங்கள் என சிற்பக்கலைக்கு பிரயோகிக்கப்படும் முறைகளின் அடிப்படையில் இவற்றை வகைப்படுத்திக் காட்சிப்படுத்தலாம். <br />
<br />
உருநிலைக் காட்சிப்படுத்தலானது சமூக சமநிலையாக்கம் என்ற இன்னொரு பண்பையும் தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது. பொதுசன நூலகங்களோ அல்லது பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் போன்ற கல்வி நிறுவன நூலகங்களோ இத்தகைய உருநிலைக் காட்சிப்படுத்தலின் போது அறிவுக்கு மட்டுமன்றி திறனுக்கும் வாய்ப்பு வழங்குவதன் காரணமாக சமூகத்தில் படித்தவன், படிக்காதவன் என்ற பேதங்களுக்குமப்பால் சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களது திறன்வழி உருவான வளங்களுக்கும் இடம் கொடுப்பதன் காரணமாக தகவலைத் தாங்கி நிற்கும் மனித வளங்களின் கணிசமான ஒத்துழைப்பு இந்த உருநிலைக் காட்சிப்படுத்தலினூடாக நூலகங்களை வந்தடைகின்றது. கிராமத்திலுள்ள விவசாயி முதற்கொண்டு மரவேலை, இரும்பு வேலை என்று பலதரப்பட்ட வேலைகளைச் செய்யும் அனைத்து உறுப்பினர்களது பங்களிப்பு இந்த உருநிலைக் காட்சிப்படுத்தலுக்கு தேவைப்படுவதன் காரணமாக வாசக சமூகத்தின் உருவாக்கம் பலதரப்பட்ட நிலைகளிலும் இருப்பது இதன் சிறப்பம்சமாகும். <br />
<br />
நூலும் அதன் வடிவங்களும் (2வது பரிமாணம்)<br />
முப்பரிமாண நூலகத்தின் இரண்டாவது பரிமாணமாக உருக்கள் சார்ந்து வெளியிடப்படும் நூல்கள் கருத்தில் கொள்ளப்படுகின்றன. தகவலைப் பொதிந்து வைத்திருக்கும் எழுத்து வடிவிலுள்ள அனைத்து வளங்களும் இங்கு கருத்தில் கொள்ளப்படுகின்றன. இவை நூல்கள், பருவ இதழ் கட்டுரைகள், சிறு நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள் என நூலுருவிலோ அல்லது ஒலி ஒளி நாடாக்கள், நுண் வடிவங்கள், இணையத்தளங்கள் என நூலுருவற்ற வடிவிலோ இருக்கலாம். இவை அனைத்தும் இரண்டாம் நிலைத் தகவலாக வாசகனை வந்தடைகின்றன. நூலக இறாக்கைகளில் ஒளிந்திருக்கும் நூல்கள், முறிந்த ஒழுங்கு என்ற உத்தியின் அடிப்படையில் வாசகனுக்குப் புரியாது பலதரப்பட்ட இடங்களில் சிதறிக்கிடக்கும் நூல்கள் ஓரிடத்தில் காட்சிப்படுத்தப்படுவதானது வாசகனின் இலகுவான பாவனைக்கு உதவுகின்றது. <br />
சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் சமமான இடத்தை வழங்குவதாக உரு நிலைக் காட்சிப்படுத்தல் இருக்க அந்த உறுப்பினர்களில் அறிவுசார் ரீதியில் தனது பங்களிப்பை வழங்கும் எழுத்தாளனுக்கு மட்டும் இந்த இரண்டாம் நிலைத் தகவலுக்கு பங்களிக்கும் வாய்ப்பு இருப்பது இதன் சிறப்பம்சமாகக் கருதத்தக்கது.<br />
<br />
தகவலும் அதன் தரங்களும் (3வது பரிமாணம்)<br />
முப்பரிமாண நூலகத்தின் மூன்றாவது பரிமாணமாகக் கருதத்தக்கது தகவல் உருவாக்கமாகும். உருக்களிலிருந்து நேரடியாக உருவாக்கப்படுவதாகவோ அல்லது இரண்டாம் நிலைத் தகவலாக நூல்களிலிருந்து அதன் முக்கிய அம்சங்களை சாரமாக பிரித்தெடுப்பதாகவோ இது இருக்கும். ஆய்வுகூடங்களிலுள்ள செய்முறைகள் எளிமைப்படுத்தப்பட்ட வடிவில் இங்கு காட்சிப்படுத்தப்படலாம். மனித வளங்களுடன் மேற்கொள்ளப்படும் நோர்காணல் மூலமாகப் பெறப்படும் தகவல்கள் இங்கு காட்சிப்படுத்தப்படலாம். பலதரப்பட்ட நூல்களிலிருந்து தேடித் தொகுப்பாகவும் இவை இருக்கலாம். அதுவுமன்றி குறிப்பிட்ட பொருட்துறை சார்ந்து ஒருவரியால் மேற்கொள்ப்படும் ஆய்வு முடிவுகளின் எளிமைப்படுத்தப்பட்ட வடிவமாகவும் இவை இருக்கலாம். இந்த மூன்றாம் நிலைத் தகவல் உருவாக்கத்திற்கு பொறுப்பானவர்களாக நூலகர்கள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அறிவுப் பிரபஞ்சத்தில் ஏற்கனவே உருவாகிய, இன்றும் உருவாகிக்கொண்டிருக்கின்ற பொருட்துறைகளுககு உரிய இடத்தை தீர்மானிக்கும் பெரும்பணி நூலகர்களிடமே ஒப்படைக்கப்பட்டிருப்பதும், நூலகத்தை நாடும் அனைத்துத் துறை சார்ந்த வாசகனது தகவல் தேவையை பு}ர்த்தி செய்ய வேண்டிய கடப்பாட்டுக்கான அறிவுத் தேடலை மேற்கொள்ள வேண்டிய தேவை இருப்பதும் மூன்றாம்நிலைத் தகவல் உருவாக்கத்தில் நூலகர்களுக்கான பொறுப்பை அதிகப்படுத்தியிருக்கிறது என்றே கூறவேண்டும். <br />
<br />
<br />
உருவாக்கமும் அதன் படிநிலைகளும்<br />
ழ எந்தவொரு நூலகமும் இத்தகைய ஒரு காட்சிப்படுத்தலைப் பின்பற்றமுடியும். <br />
ழ நூலகத்தின் வாசகரது கவனத்தை ஈர்க்கக்கூடிய ஒரு சிறு இடம் இத்தகைய காட்சிப்படுத்தலுக்குப் போதுமானது. அது உசாத்துணைப் பகுதியின் ஒரு மூலையாகவோ அல்லது மையப்பகுதியாகவோ இருக்கலாம். வகுப்பறையின் ஒரு மூலை கூட வாசிப்பு மூலையாக மாறி இந்த எண்ணக்கருவிற்கு முழுமை கொடுப்பது மிகப்பயன்தரத் தக்கது.<br />
ழ வாரம் ஒரு பொருட்துறை என்ற வகையில் பாடத்திட்டத்துடன் இணைந்தவகையில் இக்காட்சிப்படுத்தலை மேற்கொள்ளமுடியும். <br />
<br />
ழ எல்லாப் பொருட்துறைகளுக்கும் உருக்கள் இருக்க முடியாது. அதே போன்று அருகி வரும் பொருட்களைத் தேடும் பணியும் சிரமமானது. உருக்கள் இல்லாத சமயங்களில் வாசகனின் கவனத்தை பெரிதும் ஈர்ப்பதில் உருக்களுக்கு அடுத்தபடியாக உருக்கள் தொடர்பான படங்கள் செல்வாக்குச் செலுத்தும் என்பதைக் கவனத்தில் கொண்டு படங்களை வைக்கலாம். இலக்கியம் மெய்யியல் போன்ற மனிதப்பண்பியல் துறைகளில் உருக்களுக்கு வாய்ப்புகள் குறைவு. இந்நிலையில் படங்களின் பங்களிப்பு பெரிதும் உதவும். எடுத்துக்காட்டாக கவிதை என்ற பொருட்துறையை முப்பரிமாண நூலகம் ஒன்றுக்கு தெரிவு செய்யும் போது அங்கு உருக்களுக்கு வாய்ப்பிருக்காது. எனினும் உலகப் புகழ் பெற்ற கவிஞர்களது உருக்களை சேகரிக்க முடியுமா என்பதை கவனத்தில் கொள்வதும் அது இல்லாத போது அவர்களின் படங்களை காட்சிப்படுத்துவதும் பயன்தரக்கூடியது. <br />
ழ ஒவ்வொரு நூலகமும் உருக்களை சேமித்து வைப்பதற்கு சேமிப்பகம் ஒன்றை உருவாக்குதல் அவசியமானது. இதற்கு ஒரு கண்ணாடி அலுமாரி போதுமானது. நூலகத்தின் மையப்பகுதியில் பாதுகாப்பான வகையில் கலைக்கூடம் போன்றும் இவ்வுருக்கள் பாதுகாக்கப்படலாம். தேவைப்படும் போது இவற்றில் பொருத்தமானவை முப்பரிமாண நூலகத்தின் உருநிலைக்காட்சிப்படுத்தலுக்கு பயன்படுத்தப்படும்.<br />
<br />
முக்கிய பொருட்துறைகளும் அவைசார்ந்த உருக்களும்<br />
<br />
பாடசாலை நூலகங்கள் ஒவ்வொன்றும் ஆரம்பக் கல்வி மாணவர்களுக்குரிய பாடத்திட்டம் சார்ந்த பாடத்துறைகளுக்கென தனியாகவும் இடைநிலைக்கல்வி மாணவர்களின் பாடத்திட்டத்துடன் தொடர்புடைய பாடத்துறைகளுக்கெனவும் தனித்தனியாக முப்பரிமாண மாதிரியை உருவாக்குவது பொருத்தமானது. தெரிந்தெடுக்கப்படும் உருக்கள் வரலாற்று வளர்ச்சிக் கட்டத்தில் அதன் உருவமைப்பிலோ இயலளவிலோ பலதரப்பட்ட மாற்றங்களைச் சந்திக்கக்கூடும் என்பதைக் கருத்திற் கொண்டு உருக்களின் சேகரிப்பில் பழைய பொருட்கள் முதற்கொண்டு புதிய பொருட்கள் வiர் தேடிக்கண்டுபிடித்துக் காட்சிப்படுத்துவது சிறந்தது. <br />
தெரிந்தெடுக்கப்பட்ட சில பாடத்துறைகள் இங்கு தரப்படுகிறது. <br />
• தாவரவியல் - மரத்துண்டுகள், இலை வகைகள், பூக்கள் போன்றன(உண்மை உருக்கள்)<br />
• விலங்கியல் - வீட்டு மிருகங்கள், காட்டு மிருகங்கள், பறவைகள், (மாதிரி உருக்கள்) பூச்சி வகைகள் (உண்மை உருக்கள்)<br />
• பௌதிகவியல் - ஒலிவாங்கிகள், மின்கலங்கள்<br />
• தொழினுட்பம் - தொலைபேசித் தொழினுட்பம், வானொலித் தொழினுட்பம், தொலைக்காட்சித் தொழினுட்பம், அச்சுத் தொழினுட்பம், கணினித் தொழினுட்பம், பிரதியாக்கத் தொழினுட்பம் போன்றவை. <br />
• கருவிகள் - தொழிற்பாடுகளின் அடிப்படையில் வெட்டும் கருவிகள், துளையிடும் கருவிகள் அளக்கும் கருவிகள், இசைக் கருவிகள் போன்றவை<br />
• உபகரணங்கள் - வீட்டு உபகரணங்கள் ( சமையல் உபகரணங்கள், உணவு பதனிடும் உபகரணங்கள், உணவு சேமிக்கும் உபகரணங்கள், உணவு பாதுகாக்கும் உபகரணங்கள் போன்றவை- உண்மை உருக்களாக இவை காட்சிப்படுத்தப்படலாம்), வேலைத்தல உபகரணங்கள் (பெரும்பாலும் இவை மாதிரிகளாகவே சேகரிக்க முடியும்)<br />
• வீடமைப்பு மாதிரிகள்<br />
• காலாசாரம் - தாம்பூலம், ஆடையணிகள்<br />
• கைவினைப் பொருட்கள்- (மூலப்பொருள் சார்ந்து பலதரப்பட்ட கைவினைப் பொருட்களுக்கான முப்பரிமாண மாதிரியை வடிவமைக்கலாம்)<br />
• பொருளாதாரம் - உலோக நாணயங்கள், தாள் நாணயங்கள், தபால் தலைகள் போன்றவை<br />
• நுண்கலைகள் <br />
<br />
<br />
இன்றைய தேவை <br />
எம்முன் காலக்கடமையாய் விரியும் பாரிய இப்பணிக்காக பாடசாலைச் சமூகம் தரக்கூடிய முதன்மையான பங்களிப்பு உணர்வுபூர்வமான ஒத்துழைப்பேயாகும். நம்பிக்கையுடன் நாம் முன்னெடுக்கும் இப்பணியில் இணைய நீங்கள் செய்ய வேண்டியது.<br />
• துறைசார் புலமையாளர்களாயின் காத்திரமான ஆலோசனைகளையும் கருத்தாடல்களையும் வழங்குதல்;. <br />
• மாணவர்களாயின் பயன்பாட்டின் பெறுமதியை உணர்த்தும் வகையில் அமைந்த உங்கள் தேவை அதன் நிரம்பல் குறித்து எமக்குத் தெரியப்படுத்துதல். <br />
• சமூக விஞ்ஞானிகளாயின் ஆவணப்படுத்தப்படவேண்டிய உருநிலைச் சேகரிப்புக்களை வழங்குதல்;. <br />
• ஆர்வலர்களாயின் உருநிலைச் சேகரிப்புக்களை சேகரிககும் பாரிய பணியில் தோள்கொடுத்தல்;. <br />
• பொதுமக்களாயின் வீட்டில் பயன்பாடற்றுக் கிடக்கும் பாரம்பரியக் கலைப் பொக்கிசங்களை பாடசாலை நூலகங்களுக்கு நம்பிக்கையுடன் வழங்குவதன்மூலம் சேகரிப்புக்களை முழுமைப்படுத்த உதவுதல். <br />
<br />
மானுடத்தை நேசிக்கும் அனைத்து மனங்களின் ஒன்றிணைந்த சக்தியே இச் செயற்திட்டத்தின் வெற்றி. ஒட்டுமொத்த சமூகப்பங்களிப்பையும் ஒத்துழைப்பினையும் முழுமையாக நம்பி அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆளணியினரின் செயற்பாடுகள் யாவும் சமூக மேம்பாட்டை மாத்திரமே மையங்கொண்டு சுழல்கின்றன. <br />
<br />
முப்பரிமாண நூலகக் கண்காட்சியை தங்கள் நிறுவனங்களில் நடாத்துவதுற்கு விரும்புவோரை நூலக விழிப்புணர்வு நிறுவகம் இரு கரங் கூப்பி வரவேற்கிறது. உங்களின் மனப்பூர்வமான பங்கேற்புடன் இவற்றை ஒழுங்கு செய்ய விரும்புகின்றது.<br />
<br />
உங்கள் கனிவான ஒத்துழைப்புக்கள் வளமான வாசிப்பை மேம்படுத்துவதினூடாக மானுடத்தின் மேம்பாடாக மலரும் என்ற நம்பிக்கைகளுடன் ஆதரவுக் கரங்களை நீட்டுகின்றோம். <br />
நன்றிகளுடன்<br />
<br />
<br />
ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தம்<br />
பிரதம நூலகர்<br />
யாழ். பல்கலைக்கழகம்<br />
22-003-2012Srikanthaluxmyhttp://www.blogger.com/profile/02621345440975786756noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-14981721.post-76339235807151774502014-09-13T01:00:00.001-07:002015-11-09T11:59:20.810-08:00தகவல் தொழிநுட்ப யுகமொன்றில் பாடசாலை நூலகங்களும் தகவல் அறிதிறனும்தகவல் தொழிநுட்ப யுகமொன்றில் <br />
பாடசாலை நூலகங்களும் தகவல் அறிதிறனும்<br />
<br />
ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தம்<br />
கல்விசார் நூலகர்<br />
யாழ். பல்கலைக்கழகம்<br />
<br />
அறிமுகம்<br />
தகவல் வெளிப்பாட்டு வடிவங்களான உரு வடிவம், எண்ணும் எழுத்தும் சேர்ந்த வரி வடிவம், கோடுகள் இணையும் வரைபு வடிவம், கண்ணுக்குப் புலப்படாத அலை வடிவத் தகவல்களின் ஈட்டல், செய்முறை, சேமிப்பு, பரிமாற்றம், பரவலாக்கம் போன்ற அனைத்து செய்முறைகளுக்கும் தனித்தோ அல்லது இணைந்த வகையிலோ பிரயோகிக்கப்படும் கைவினைத் தொழிநுட்பம், அச்சுத் தொழிநுட்பம், கட்புல செவிப்புலத் தொழினுட்பம், பிரதியாக்கத் தொழினுட்பம், தொலைதொடர்புத் தொழினுட்பம், கணினித் தொழினுட்பம் ஆகியவற்றின் ஒன்றிணைந்த சேர்க்கையில் இன்றைய உலகு இயங்குகின்றது. கையடக்கத் தொலைபேசிக்கு ஒருநாள் ஓய்வு கொடுப்பது கூட சாத்தியமற்றது என்றளவிற்கு நாளாந்த வாழ்வு தொழிநுட்ப உலகுடன் இறுகப் பிணைந்து போயிருக்கிறது. இணையம் இன்றி இயக்கம் இல்லை என்பதையும் முகநூலே (குயஉநடிழழம) முதன்மை நூல் என்பதற்கும் அறிமுக உரைகளும் அணிந்துரைகளும் தேவைப்படாத அளவிற்கு அதன் இன்றியமையாமை அனைத்து மனங்களாலும் உணரப்படுகின்றது. சர்வதேச தொலைத்தொடர்பு நாள், நூல் நாள் போன்று தொழிநுட்பமற்ற நாள் (ழே வுநஉhழெடழபல னயல) என்ற ஒன்றை சர்வதேச ரீதியில் கொண்டாடவேண்டிய தேவையை மனித சமூகம் உணரும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்னுமளவிற்கு தகவல் தொழிநுட்ப உலகின் ஆக்கிரமிப்பால் மனித சமூகம் திணறிக்கொண்டிருக்கிறது. இத்தகைய பின்னணியில் தான் தகவல் அறிதிறன் என்னும் பதமும் புரிந்துகொள்ளப்படவேண்டும். <br />
<br />
ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ளும் தேவையை முன்னிட்டு ஒரு மொழியின் அடிப்படையை மட்டும் கற்றுக் கொள்வதன் மூலம் வாசிப்பதற்கும் எழுதுவதற்குமான ஆற்றல் என்று பொருள் கொள்ளப்பட்ட எழுத்தறிவு அல்லது அறிதிறன் (டவைநசயஉல) என்ற தனிப்பதமானது பொருட்துறைகளை நன்கு விளங்கிக் கொள்வதற்கான ஆற்றல், தகவலை நன்கு விளங்கிக்கொள்வதற்கும் தொழிநுட்பக் கருவிகளை நன்கு கையாள்வதற்குமான ஆற்றல் என்ற விரிந்த வரைவிலக்கணத்தைக் கொண்ட தகவல் அறிதிறன் (ஐகெழசஅயவழைn டவைநசயஉல) என்ற கூட்டுப்பதமாக அண்மைக்காலங்களில்; வளர்ச்சியடைந்திருக்கிறது. தகவல் அறிதிறன், தொழிநுட்ப அறிதிறன், கணித அறிதிறன் போன்ற பதங்கள் தற்கால தகவல் பதிவேடுகளில் கணிசமாகப் பயன்படுத்தப்படுவது மட்டுமன்றி நாளாந்த வாழ்விலும் அடிக்கடி உச்சரிக்கப்படுகின்றன. <br />
<br />
<br />
தகவல் அறிதிறன்<br />
தேவையான தகவலைக் கண்டறிதல், மீளப் பெறல், பகுப்பாய்வு செய்தல், பயன்படுத்தல் முதலிய திறன்களின் தொகுதி தகவல் அறிதிறன் என்ற பதத்தால் குறிப்பிடப்படுகிறது. 1970களின் ஆரம்பகால தோற்றப்பாடுகளில் ஒன்றான தகவல் அறிதிறன் என்ற கருத்துநிலையானது இன்றைய ஒவ்வொரு மனிதனதும் இன்றியமையாத தேவையாக, உலக அபிவிருத்தியைத் தீர்மானிக்கும் அளவுகோலாக, சுயகற்றலுக்கான ஆளுமைவிருத்தியின் தூண்டியாகக் கருதப்படுகிறது. தகவல் அறிதிறனின்றி வாழ்க்கை முழுவதற்குமான கல்வி என்ற கருத்துநிலை பொருளற்றது என்பதைக் கல்விச் சமூகம் உணரத் தொடங்கியிருக்கிறது. தகவற் சுமைக்கான தீர்வாகவும்;, தகவற் பதுக்கலுக்கான தீர்வாகவும், தகவலுக்கான நுழைவாயிலாகவும், தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் ஒன்றாகவும், வேகமாகவும் சரியாகவும் முடிவெடுப்பதற்கான தூண்டலைத் தருவதற்கான அடிப்படையாகவும் இதன் முக்கியத்துவம் மாறியிருக்கிறது. தகவற் தேவை, அதன் கிடைக்கும் தன்மை, தகவலைத் தேடும் வழிமுறைகள், கிடைக்கும் தகவலை மதிப்பிடவேண்டிய தேவை, கிடைத்த தகவலின் நுட்பமான கையாளுகை, தகவலைப் பயன்படுத்துவது தொடர்பான ஒழுக்க நியமங்கள், தகவலைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளும் சரியான வழிகள், கிடைத்த தகவல்களை எவ்வாறு முகாமைசெய்வது என்பன தகவல் அறிவில் உள்ளடங்குகின்றன. தகவல் தொழினுட்பம், தகவல் வளங்கள், தகவல் செய்முறை, தகவல் முகாமைத்துவம், அறிவு உருவாக்கம், அறிவுப் பரம்பல், பேரறிவு என்பன தகவல் அறிதிறனின் ஏழு படிநிலைகளாகக் கொள்ளப்படுகின்றன.<br />
<br />
வரைவிலக்கணம்<br />
தகவல் அறிதிறன் என்ற பதம் தொடர்பாக பலதரப்பட்ட கருத்துநிலைகளும் வரைவிலக்கணங்களும் நிலவுகின்றன. ஒரு சமூகத்திலுள்ள உறுப்பினர் ஒருவர் தான் வாழும் சமூகத்தில்; புத்திபூர்வ முறையிலும் வினைத்திறன்மிக்க வகையிலும் பங்குகொள்வதற்குத் தேவையான திறன்கள் அனைத்தும் தகவல் அறிதிறன் என்ற பதத்தால் குறிக்கப்படுகிறது. அமெரிக்க நூலக சங்கத்தின் கருத்துப்படி தகவல் தேவைப்படும் காலத்தை இனங்காணுவதற்கும், தேவைப்படும் தகவல் உள்ள இடத்தைக் கண்டறிவதற்கும், மதிப்பீடு செய்வதற்கும், வினைத்திறன்மிக்க வகையில் பயன்படுத்துவதற்கும் ஒரு மனிதனுக்கு இருக்கக்கூடிய ஆற்றல் தகவல் அறிதிறன் என்ற பதத்தால் குறிக்கப்படுகிறது. ஜயுடுயு 1989ஸ. <br />
கணினிகளைப் பயன்படுத்தும் அறிவும் தகவலின் தன்மைகளை இனங்கண்டு அதன் தொழிநுட்ப கட்டுமானம் அதன் சமூக கலாசார, தத்துவ விளைவுகள் என்பவற்றுக்கூடாக அதனை அணுகுவதற்கான அறிவு தான் தகவல் அறிதிறன் என இன்னொரு வரைவிலக்கணமும் உண்டு. ஜர்ரபாநள 1996ஸ <br />
<br />
<br />
வரலாறு<br />
தகவல் அறிதிறன் என்ற சொற்றொடரானது 1974ம் ஆண்டு நூலகங்கள் மற்றும் தகவல் அறிவியலுக்கான தேசிய ஆணைக்குழுவின் சார்பாக போல் ஜி.சேர்கோவ்ஸ்கி என்பவரால் எழுதப்பட்ட அறிக்கையில் முதன்முதல் அச்சு வடிவில் உள்ளடக்கப்பட்டது. தகவல் அறிதிறனைக் கொண்ட ஒருவர் பலதரப்பட்ட தகவல் கருவிகளையும் தமது பிரச்சனைகளுக்கு தகவல் தீர்வை உருவாக்குவதற்குத் தேவைப்படும் முதனிலை வளங்களையும் பயன்படுத்துவதற்கு அவரிடம் இருக்கும் தொழிநுட்பங்களதும் திறன்களையும் விபரிப்பதற்கு இப்பதம் பயன்படுத்தப்பட்டது. (ணுரசமழறளமi 1974)<br />
தொடர்ந்து இப்பதத்திற்கு மிகச்சிறப்பான வரைவிலக்கணத்தை வடிவமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எழுத்து அறிதிறன், கணினி அறிதிறன், நூலகத் திறன்கள், தருக்கரீதியாக சிந்திக்கும் திறன்கள் ஆகிய ஏனைய கல்விசார் இலக்குகள் தகவல் அறிதிறனுடன் தொடர்புடையதாகவும் அதன் அபிவிருத்திக்கான முக்கிய ஆதாரமாக கருதப்படினும் தகவல் அறிதிறன் என்ற பதம் இவை அனைத்தையும் தாண்டி தனித்துவ பதமாக தகவல் சமூகம் ஒன்றில் வாழும் ஒருவரின் சமூக பொருளாதார நலனுக்கான திறவுகோலாக மாறியிருக்கிறது. <br />
<br />
தகவல் அறிதிறனும் தேவைப்படும் திறன்களும்<br />
1. தகவற் தேவையை விளங்கிக் கொள்ளும் திறன்: தகவல் தேவைப்படுகிறது என்பதை இனங்காணல், தகவல் ஏன் தேவைப்படுகிறது என்பதை விளங்கிக் கொள்ளல், என்ன வகையான தகவல் எப்போது, எந்த வடிவில், எவ்வளவு தேவைப்படுகின்றது என்பதை இனங்காணல், காலம், வடிவம், அண்மைத்தன்மை, அணுகுகை போன்ற தகவலை அணுகுவதற்கான தடைகளைப் புரிந்து கொள்ளுதல் என்பன இதில் உள்ளடங்குகின்றன. <br />
2. தகவலின் கிடைக்கும் தன்மையை விளங்கிக் கொள்ளும் திறன் : உலகிலுள்ள தகவல் வளங்களின் வகை, அவை கிடைக்கும் இடங்கள், அவற்றைப் பெறும் வழிவகைகள், அவற்றைப் பயன்படுத்தும் காலம், தகவல் வளங்களின் தனித்தன்மை, அவற்றிற்கிடையிலான வேறுபாடுகள் என்பன இதில் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. <br />
3. தகவலைக் கண்டறிவதற்கான திறன்: பொருத்தமான வளங்களை தேடுவதற்கான ஆற்றல், பொருத்தமான தகவலை இனங்காணும் ஆற்றல், இனங்காணப்பட்ட தகவல் வளங்களில் மேலார்ந்த தேடல், ஆழ்ந்த தேடல், போன்ற தேடல் முறைகளைப் பயன்படுத்தித் தேடல் செய்வதற்கான ஆற்றல், சொல்லடைவாக்க சாராம்சப்படுத்தல் பருவ இதழ்களைப் பயன்படுத்தி தேடல் செய்யும் நுட்பங்கள் என்பன இதில் உள்ளடங்குகின்றன. <br />
4. கிடைக்கும் தகவலை மதிப்பிடவேண்டிய தேவையை விளங்கிக்கொள்ளும் திறன்: தேடல் மூலம் கிடைத்த தகவலின் அதிகாரபூர்வத் தன்மை, துல்லியத் தன்மை, அண்மைத்தன்மை, பெறுமதி, பக்கச்சார்புத் தன்மை, தகவல் தேவைக்குப் பொருந்தும் தன்மை என்பவற்றை மதிப்பீடு செய்தல் இதில் கவனத்தில் கொள்ளப்படுகிறது.<br />
5. கிடைத்த தகவலின் நுட்பமான கையாளுகையை விளங்கிக்கொள்ளும் திறன்: கிடைத்த தகவற் பெறுபேற்றை ஆய்வு செய்தல், அவற்றை பொருத்தமான முறையில் வழங்கும் முறைகளை கண்டறிதல், ஒப்பு நோக்குதல், ஒன்றுபடுத்தல், அவற்றிலிருந்து மேலதிக தகவல்களைப் பெறும் முறைகளை கண்டறிதல் என்பன கவனத்தில் கொள்ளப்படுகின்றன. <br />
6. தகவலைப் பயன்படுத்துவது தொடர்பான ஒழுக்க நியமங்களை விளங்கிக் கொள்ளும் திறன்: பொறுப்புணர்வுடன் தகவலை பயன்படுத்த வேண்டியதன் அவசியம், அதில் பின்பற்றப்படவேண்டிய ஒழுக்க நடத்தைகள், தனிநபர் தகவல் தொடர்பில் மனிதத்துடன் அதனைப் பயன்படுத்தல், இரகசியம் பேணல், பிறருடைய செயல்களை மதித்தல், நடுநிலைதவறாமை என்பன இதில் உள்ளடங்குகின்றன. <br />
7. தகவலைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளும் சரியான வழிகளை விளங்கிக் கொள்ளும் திறன்: கிடைத்த தகவலை இலகுவாக பயன்படுத்துவதற்கேற்ற வகையிலமைந்த பொருத்தமான வடிவம் எது? பொருத்தமான தேவையுள்ளவர் யார்?; பொருத்தமான சூழலில் எவ்வாறு வழங்குவது? இதற்குத் தேவையான தொடர்பாடல் ஊடகங்கள் எவை? பொருத்தமான தொடர்பாடல் முறைகள் எவை? தயார்ப்படுத்தல் முறைகள் எவை?<br />
8. கிடைத்த தகவல்களை எவ்வாறு முகாமை செய்வது என்பதை விளங்கிக் கொள்ளல்: கிடைத்த தகவலை எவ்வாறு சேமிப்பது? எந்தெந்த முறைகளில் நிர்வகிப்பது? எவ்வாறு பாதுகாப்பது? எவ்வாறு ஒழுங்குபடுத்துவது? எவ்வாறு மீளப்பெறுவது?<br />
<br />
தகவல் அறிதிறனின் கூறுகள்<br />
1. தகவல் தொழினுட்பம் என்ற கருத்தாக்கம் அறிவு: தகவல் மீள்பெறுகைக்கும் தகவல் தொடர்பாடலுக்குமாக தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தல் தகவல் அறிதிறன் புஒரு தனிநபர் தான் கொண்டிருக்கவேண்டும் என எதிர்பார்க்கின்ற கல்வி, வேலை, தொழிற்திறன்சார் வாழ்க்கை என்பவை சார்ந்த தகவல் தொழிநுட்ப கருவிகளின் பயன்பாட்டை விளங்கிக் கொள்வதற்கான ஆற்றல். <br />
2. தகவல் வள அறிவு: தகவல் வளங்களின் தோற்றம், உருவமைப்பு, வடிவமைப்பு, உள்ளடக்கம், உட்பொருள், தரம், பயன்பாடு, தகவற் தேவை, ஒழுங்கமைப்பு, போன்றவற்றை விளங்கிக் கொள்ளவதற்கான ஆற்றல்<br />
3. சமூகக் கட்டுமான அறிவு: தகவலின் சமூக ரீதியான நிலை அதன் உற்பத்தி என்பற்றை விளங்கிக் கொள்வதற்கான ஆற்றல்.<br />
4. தகவல் தொழிநுட்ப கருவிகள் சார் அறிவு: இன்றைய ஆய்வுப் பணிகளுக்கு உதவக்கூடிய தகவல் தொழிநுட்ப கருவிகளை விளங்கிக் கொள்வதற்கான ஆற்றலும் பயன்படுத்துவதற்கான ஆற்றலும்.<br />
5. வெளியீட்டு அறிவு: ஒருவரால் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளையும் அவரது கருத்துக்களையும் இலத்திரனியல் வாயிலாக நூலிய அடிப்படையிலும் பல்லூடக வடிவிலும் வடிவமைக்கவும் வெளியீடு செய்வதற்குமான ஆற்றல்.<br />
6. புதிய தொழிநுட்பங்களின் அறிவு: புதிய தொழிநுட்பங்களை விளங்கிக் கொள்ளவும், பின்பற்றவும், மதிப்பீடு செய்யவும், தகவல் தொழிநுட்பத்தின் புதிய கண்டுபிடிப்புகளை பயன்படுத்தவும், புதிய தொழிநுட்பங்களை பயன்படுத்தி நுண்ணறிவுமிக்க தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் தேவையான அறிவு.<br />
7. திறனாய்வு அறிவு: தகவல் தொழிநுட்பங்களின் புலமைசார், மனித மற்றும் சமூக பலங்கள், பலவீனங்கள், வசதிகள், வரையறைகள், நன்மைகள், செலவினங்கள் போன்றவற்றை தர்க்கரீதியாக மதிப்பிடும் ஆற்றல்.<br />
<br />
பாடசாலையும் தகவல் அறிதிறன் மாதிரிகளும்<br />
ஸ்கொட்லாந்தில் பல்கலைக்கழக கல்லூரியொன்றின் தகவல் அறிதிறன் சார்ந்து பொறுப்பதிகாரியாக இருக்கும் ஜேம்ஸ் ஹேரிங் ( துயஅநள ர்நசசiபெ) என்பவரால் விருத்தி செய்யப்பட்டு நோக்கம், அமைவிடம், பயன்பாடு, சுய மதிப்பீடு ஆகிய நான்கு அம்சங்களையும் உள்ளடக்கி Pடுருளு (Pரசிழளநஇ டுழஉயவழைnஇ ருளநஇ ளுநடக நஎயடரயவழைn) என்ற முதலெழுத்துப் பெயரால் அடையாளங் காணப்படும் தகவல் அறிதிறன்களின் மாதிரி பாடசாலைகளுக்கு பொருத்தமானது எனக் கருதப்படுகிறது. இதில் நோக்கம் என்பது ஆய்வு அல்லது மேற்கொள்ளப்படும் பணி ஒன்றின் நோக்கத்தை இனங்காணல் என்பதாகவும், அமைவிடம் என்பது நோக்கத்துடன் தொடர்பான தகவல் வளங்களின் அமைவிடத்தை கண்டுபிடித்தல் என்பதாகவும், பயன்பாடு என்பது தகவல்களையும் கருத்துக்களையும் தெரிவு செய்தல் அல்லது நிராகரித்தல், தகவலை பெறும் பொருட்டு படித்தல், குறிப்பு எடுத்தல், அதை வெளியிடுதல் என்;பதாகவும், சுயமதிப்பீடு என்பது தமக்கு ஒதுக்கப்பட்ட பணியில் தகவல் திறன்களை பிரயோகிப்பதில் தமக்கிருக்கிருக்கும் ஆற்றலை மாணவர்கள் எவ்வாறு மதிப்பிடுகிறார்கள், அதிலிருந்து எதிர்காலத்திற்காக எதைக் கற்றுக்கொள்கிறார்கள் என்பதாகவும் அமைகிறது. <br />
<br />
1998 இல் பாடசாலை நூலகர்களுக்கான அமெரிக்க சங்கமும் கல்விசார் தொடர்கள் மற்றும் தொழிநுட்பத்துக்கான சங்கமும் இணைந்து முன்பள்ளி தொடக்கம் க.பொ.த உயர்தரம் வரையுள்ள மாணவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ம12 பாடசாலைகளின் மாணவர்களது சுய கற்றலுக்கும் சமூகப் பொறுப்புக்குமான பின்வரும் ஒன்பது தகவல் அறிவு நியமங்களை மூன்று பிரதான தலைப்புகளின் கீழ் வெளியிட்டது. <br />
<br />
தகவல் அறிதிறன்<br />
1. நியமம் 1: தகவல் அறிவுடைய மாணவர் தகவலை வினைத்திறன்மிக்க வகையிலும் பயனுள்ள வகையிலும் அணுகுவர். <br />
2. நியமம் 2: தகவல் அறிவுடைய மாணவர் தகவலை தர்க்கரீதியாகவும் போட்டிரீதியாகவும் மதிப்பிடுவர்<br />
3. நியமம் 3: தகவல் அறிவுடைய மாணவர் தகவலை சரியாகவும் உருவாக்க சக்தியுடனும் பயன்படுத்துவர்.<br />
சுயாதீனக் கற்றல்<br />
4. நியமம் 4: சுயாதீன கற்கையாளராக உள்ள மாணவர் தகவல் அறிதிறன் உடையவராக இருப்பதுடன் தனிப்பட்ட ஆர்வங்களுடன் தொடர்புடைய தகவலை பெறும் திறனுடையவாராகவும் இருப்பர்<br />
<br />
5. நியமம் 5: சுயாதீன கற்கையாளராக உள்ள மாணவர் தகவல் அறிதிறன் உடையவராக இருப்பதுடன் இலக்கியங்களையும் தகவலின் ஏனைய உருவாக்க வெளிப்படுத்தல்களையும் பாராட்டுவர்.<br />
<br />
6. நியமம் 6: சுயாதீன கற்கையாளராக உள்ள மாணவர் தகவல் அறிதிறன் உடையவராக இருப்பதுடன் தகவலைத் தேடுதலிலும் அறிவு உருவாக்கத்திலும் உச்சத்திறனை அடைய பாடுபடுவர்;.<br />
<br />
சமூகப் பொறுப்பு<br />
<br />
7. நியமம் 7: கற்றல் சமூகத்திற்கும் அதன் வழி சமூகத்திற்கும் பங்களிப்புச் செய்யும் மாணவர் தகவல் அறிதிறன் உடையவராக இருப்பதுடன் ஜனநாயக சமூகத்தில் தகவலின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பவராக இருப்பர்;.<br />
8. நியமம் 8: கற்றல் சமூகத்திற்கும் அதன் வழி சமூகத்திற்கும் பங்களிப்புச் செய்யும் உள்ள மாணவர் தகவல் அறிதிறன் உடையவராக இருப்பதுடன் தகவல் சார்ந்தும் தகவல் தொழிநுட்பம் சார்ந்த ஒழுக்கரீதியான நடத்தையை பின்பற்றுவர்;.<br />
9. நியமம் 9: கற்றல் சமூகத்திற்கும் அதன் வழி சமூகத்திற்கும் பங்களிப்புச் செய்யும் உள்ள மாணவர் தகவல் அறிதிறனுடையவராக இருப்பதுடன் தகவல் உருவாக்கம் சார்ந்தும் தகவல் தொழிநுட்பம் சார்ந்த ஒழுக்கரீதியான நடத்தையை பின்பற்றுவர்;.<br />
<br />
2007இல் மேற்படி அமைப்பானது இந்த நியமங்களை விரிவாக்கம் செய்ததுடன் பாடசாலை நூலகர்கள் தங்கள் கற்பித்தலுக்கு உதவக்கூடிய வகையில் மீளஒழுங்கமைத்து 21ம் நூற்றாண்டின் கற்கையாளருக்கான நியமங்கள் என்ற தலைப்பில் வெளியிட்டது. இந்த வெளியீட்டில் தகவல் அறிதிறன், தொழிநுட்ப அறிதிறன், கட்புல அறிதிறன், நூலிய அறிதிறன், எண்மிய அறிதிறன் போன்ற அறிதிறன்களை முதன்மைப்படுத்தியது. இந்த அம்சங்கள் அனைத்தும் திறன்கள். வளங்கள், கருவிகள் ஆகியவற்றில் கற்கையாளர்களின் பயன்பாடானது<br />
<br />
1. தேடலுக்கும் தர்க்கரீதியாகச் சிந்திப்பதற்குமான அறிவைப் பெறுதல்;<br />
2. முடிவுகளை எடுப்பதற்கும், புதிய நிலைமைகளுக்கும் அறிவைப் பிரயோகித்தல் மற்றும் புதிய அறிவை உருவாக்குதல்<br />
3. அறிவைப் பகிர்தல் மற்றும் ஜனநாயக சமூகத்தின் அங்கத்தவர்களாக ஆக்கபூர்வமாகவும் ஒழுக்கரீதியாகவும் பங்குபற்றல்;<br />
4. தனிப்பட்ட மற்றும் அழகியல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருத்தல் ஆகிய நான்கு பிரதான இலக்குகளாக ஓழுங்கமைக்கப்பட்டது.<br />
<br />
<br />
டீபை6 திறன்கள்<br />
உலகளாவிய ரீதியில் தகவல் மற்றும் தொழிநுட்பத் திறன்களைக் கற்பிப்பதற்கான பிரபல்யமானதும் பரந்தளவில் பயன்படுத்தப்படுவதுமான அணுகுமுறையாக மைக் ஐசன்பேர்க் என்பவரால் உருவாக்கப்பட்ட டீபை6 திறன்கள் கருதப்படுகின்றன. ஜநுளைநnடிநசப 2008ஸ ஆயிரக்கணக்கான பாடசாலைகள், உயர்கல்வி நிறுவனங்கள், வளர்ந்தோர் பயிற்சி திட்டங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் இம்முறையானது மக்களுக்கு தகவல் தேவைப்படும் போதும் தகவலைப் பயன்படுத்தும் சந்தர்ப்பங்களிலும் தகவல் பிரச்சனைத் தீர்வு மாதிரியாக பிரயோகிக்கப்படுகிறது. தனித்துவ தேவைகளின் பொருட்டு தகவலை முறைப்படுத்தப்பட்ட வகையில் கண்டுபிடித்தல், பயன்படுத்தல், பிரயோகித்தல், மதிப்பிடுதல் ஆகியவற்றுக்கு தகவல் தேடுகையையும் தொழிநுட்ப கருவிகளின் உதவியுடனான திறன்களின் பயன்பாட்டையையும் இம்முறையானது ஒருங்கிணைக்கிறது.<br />
<br />
அனைத்து வயது மட்டங்களிலும் தகவல் பிரச்சினையை தீர்ப்பதற்கான செய்முறை மாதிரியாகக் கருதப்படும் இம்முறையானது பிரச்சினை தீர்க்கும் செய்முறையில் ஆறு நிலைகளையும் ஒவ்வொரு நிலையிலும் இரு உப நிலைகளையும் கொண்டிருக்கிறது. <br />
<br />
1. நிலை 1: பணியின் வரைவிலக்கணம்<br />
ய. தகவல் பிரச்சினையை வரைவிலக்கணப்படுத்தல்<br />
டி. தேவைப்படும் தகவலை இனங்காணல்<br />
2. நிலை 2: தகவல் கண்டுபிடிக்கும் தந்திரோபாயங்கள்<br />
ய. கிடைக்கக்கூடிய வளங்கள் அனைத்தையும் நிர்ணயித்தல்<br />
டி. சிறந்த வளங்களை தெரிவு செய்தல்<br />
3. நிலை 3: அமைவிடமும் அணுகுகையும்<br />
ய. புத்திபூர்வமாகவும் பௌதிக ரீதியாகவும் வளங்களை கண்டுபிடித்தல்<br />
டி. ஒவ்வொரு தகவல் வளத்தின் உள்ளேயும் தேவையான தகவலைக் கண்டுபிடித்தல்<br />
4. நிலை 4: தகவல் பயன்பாடு<br />
ய. வாசித்தல், கேட்டல், பார்த்தல், தொடுதல் ஊடாக தகவலை பெறும் செய்முறையில் ஈடுபடுதல்<br />
டி. பொருத்தமான தகவலை பிரித்தெடுத்தல்<br />
5. நிலை 5: கூட்டிணைப்பு (ளுலவொநளளை)<br />
ய. பலதரப்பட்ட வளங்களிலிருந்தும் எடுத்த தகவலை ஒழுங்குபடுத்தல்<br />
டி. தகவலை வெளிப்படுத்தல்<br />
6. நிலை 6: மதிப்பீடு<br />
ய. உருவாக்கத்தை மதிப்பிடுதல் (வினைத்திறன்)<br />
டி. செய்முறையை மதிப்பிடுதல் (பயன்விளைவு)<br />
<br />
<br />
முடிவுரை<br />
இலங்கை அரசாங்கமானது 2009ம் ஆண்டை தகவல் தொழிநுட்பம் மற்றும் ஆங்கிலத்துக்கான ஆண்டாகப் பிரகடனப்படுத்தியிருப்பதும் நீண்ட கால போரியல் வாழ்வின் அவலங்களைச் சுமந்து நலிவடைந்த ஒரு நிலையில் தமிழ்ச் சமூகத்தின் பாடசாலை உலகம் மிகக் குறுகிய காலத்தில் தகவல் தொழினுட்ப உலகமாக வலிந்து மாற்றப்பட்டமையும் தகவல் தொழினுட்பத்தைப் பற்றி பெருப்பித்துக் காட்டப்பட்டுள்ள கற்பனைகள் காரணமாக வயது வேறுபாடின்றி அது எல்லோரையும் ஆக்கிரமித்திருப்பதும் தகவல் தொழிநுட்பப் பயன்பாடு தொடர்பான மீள்பரிசீலனைக்கு இட்டுச் செல்வதன் அவசியத்தைத் தோற்றுவித்திருக்கிறது. முதல்தரப்பாடசாலைகளின் பாடத்திட்டத்தில் தகவல் தொழிநுட்பம் என்ற பாடம் உத்தியோகபூர்வமாக உள்ளடக்கப்பட்டிருப்பதனால் தகவல் தொழிநுட்ப சாதனங்களைப் போதியளவு கொண்டிருக்கின்ற முதல்தர பாடசாலைகளிலும் சரி; உதவித்திட்டங்களினால் தகவல் தொழிநுட்ப உலகை பாடசாலைக்குள் வடிவமைக்க வலிந்து பிரயத்தனப்பட்டுக்கொண்டிருக்கும் ஊர்ப்பாடசாலைகளிலும் சரி தகவல் தொழிநுட்பமானது மாணவர்களின்; கற்றலை இலகுவாக்குவதற்கும் வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கும், கற்றல் சூழலை இலகுவாக்குவதற்கும், உலகத்தைப் பார்ப்பதற்குமான நுழைவாயிலாகவும் இருப்பதற்கேற்றவகையில் தகவல் அறிதிறன்களுக்கான இருப்பிடமாக இருப்பதைவிட மாணவ சமூகத்தின்; முகநூல்களுக்கான இருப்பிடமாகவும் ஆசிரிய சமூகத்தின் இயந்திரமயமான கற்பித்தலுக்கான உதவுகருவியாகவுமே இருப்பதானது நுகர்வோர் கலாசாரத்தின் இன்னொரு அம்சமாக அபிவிருத்தி என்ற போர்வையில் மூன்றாம் உலக நாடுகளில் கொண்டுவந்து திணிக்கப்படும் ஏனைய அம்சங்களைப் போன்றது தானோ இந்தத் தகவல் தொழிநுட்பமும் என்ற கவலையை சமூக நலனைக் கருத்தில் கொண்ட மனங்களில் தோற்றுவித்திருக்கிறது. <br />
<br />
<!--[if gte mso 9]><xml>
<w:WordDocument>
<w:View>Normal</w:View>
<w:Zoom>0</w:Zoom>
<w:TrackMoves/>
<w:TrackFormatting/>
<w:DoNotShowPropertyChanges/>
<w:PunctuationKerning/>
<w:ValidateAgainstSchemas/>
<w:SaveIfXMLInvalid>false</w:SaveIfXMLInvalid>
<w:IgnoreMixedContent>false</w:IgnoreMixedContent>
<w:AlwaysShowPlaceholderText>false</w:AlwaysShowPlaceholderText>
<w:DoNotPromoteQF/>
<w:LidThemeOther>EN-US</w:LidThemeOther>
<w:LidThemeAsian>X-NONE</w:LidThemeAsian>
<w:LidThemeComplexScript>TA</w:LidThemeComplexScript>
<w:Compatibility>
<w:BreakWrappedTables/>
<w:SnapToGridInCell/>
<w:WrapTextWithPunct/>
<w:UseAsianBreakRules/>
<w:DontGrowAutofit/>
<w:SplitPgBreakAndParaMark/>
<w:DontVertAlignCellWithSp/>
<w:DontBreakConstrainedForcedTables/>
<w:DontVertAlignInTxbx/>
<w:Word11KerningPairs/>
<w:CachedColBalance/>
</w:Compatibility>
<w:BrowserLevel>MicrosoftInternetExplorer4</w:BrowserLevel>
<m:mathPr>
<m:mathFont m:val="Cambria Math"/>
<m:brkBin m:val="before"/>
<m:brkBinSub m:val="--"/>
<m:smallFrac m:val="off"/>
<m:dispDef/>
<m:lMargin m:val="0"/>
<m:rMargin m:val="0"/>
<m:defJc m:val="centerGroup"/>
<m:wrapIndent m:val="1440"/>
<m:intLim m:val="subSup"/>
<m:naryLim m:val="undOvr"/>
</m:mathPr></w:WordDocument>
</xml><![endif]--><br />
<!--[if gte mso 9]><xml>
<w:LatentStyles DefLockedState="false" DefUnhideWhenUsed="true"
DefSemiHidden="true" DefQFormat="false" DefPriority="99"
LatentStyleCount="267">
<w:LsdException Locked="false" Priority="0" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Normal"/>
<w:LsdException Locked="false" Priority="9" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="heading 1"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 2"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 3"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 4"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 5"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 6"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 7"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 8"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 9"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 1"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 2"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 3"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 4"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 5"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 6"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 7"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 8"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 9"/>
<w:LsdException Locked="false" Priority="35" QFormat="true" Name="caption"/>
<w:LsdException Locked="false" Priority="10" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Title"/>
<w:LsdException Locked="false" Priority="1" Name="Default Paragraph Font"/>
<w:LsdException Locked="false" Priority="0" Name="Body Text"/>
<w:LsdException Locked="false" Priority="11" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtitle"/>
<w:LsdException Locked="false" Priority="0" Name="Hyperlink"/>
<w:LsdException Locked="false" Priority="22" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Strong"/>
<w:LsdException Locked="false" Priority="20" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="59" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Table Grid"/>
<w:LsdException Locked="false" UnhideWhenUsed="false" Name="Placeholder Text"/>
<w:LsdException Locked="false" Priority="1" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="No Spacing"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" UnhideWhenUsed="false" Name="Revision"/>
<w:LsdException Locked="false" Priority="34" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="List Paragraph"/>
<w:LsdException Locked="false" Priority="29" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Quote"/>
<w:LsdException Locked="false" Priority="30" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Quote"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="19" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtle Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="21" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="31" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtle Reference"/>
<w:LsdException Locked="false" Priority="32" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Reference"/>
<w:LsdException Locked="false" Priority="33" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Book Title"/>
<w:LsdException Locked="false" Priority="37" Name="Bibliography"/>
<w:LsdException Locked="false" Priority="39" QFormat="true" Name="TOC Heading"/>
</w:LatentStyles>
</xml><![endif]--><!--[if gte mso 10]>
<style>
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:10.0pt;
font-family:"Times New Roman","serif";
mso-bidi-font-family:Mangal;}
</style>
<![endif]-->
<br />
<div class="MsoNormal" style="mso-margin-bottom-alt: auto; mso-margin-top-alt: auto;">
<span lang="EN" style="mso-ansi-language: EN; mso-bidi-font-family: "Times New Roman"; mso-bidi-font-size: 12.0pt; mso-bidi-language: AR-SA; mso-fareast-language: EN-GB;">References</span></div>
<div class="MsoNormal" style="margin-left: .5in; mso-list: l0 level2 lfo1; mso-margin-bottom-alt: auto; mso-margin-top-alt: auto; text-indent: -.25in;">
1. ஸ்ரீகாந்தலட்சுமி, அ (2010). தகவல் வளங்களும் சேவைகளும். கொழும்பு: குமரன் புத்தக நிலையம்.<span lang="EN" style="font-family: "bamini" , "sans-serif"; mso-ansi-language: EN; mso-bidi-font-family: "Times New Roman"; mso-bidi-font-size: 12.0pt; mso-bidi-language: AR-SA; mso-fareast-language: EN-GB;"></span></div>
<ol start="2" type="1">
<li class="MsoNormal" style="mso-list: l0 level1 lfo1; mso-margin-bottom-alt: auto; mso-margin-top-alt: auto; tab-stops: list .5in;"><span lang="EN" style="font-size: 11.0pt; mso-ansi-language: EN; mso-bidi-font-family: "Times New Roman"; mso-bidi-language: AR-SA; mso-fareast-language: EN-GB;">American
Association of School Librarians (2007). Standards for the 21st Century
Learner.<span style="mso-spacerun: yes;"> </span>[</span><u><span lang="EN" style="color: blue; font-size: 11.0pt; mso-ansi-language: EN; mso-bidi-font-family: "Times New Roman"; mso-bidi-font-size: 10.0pt; mso-bidi-language: AR-SA; mso-fareast-language: EN-GB;"><a href="http://www.ala.org/ala/mgrps/divs/aasl/guidelinesandstandards/learningstandards/AASL_LearningStandards.pdf">http://www.ala.org/ala/mgrps/divs/aasl/guidelinesandstandards/learningstandards/AASL_LearningStandards.pdf</a></span></u><span lang="EN" style="font-size: 11.0pt; mso-ansi-language: EN; mso-bidi-font-family: "Times New Roman"; mso-bidi-language: AR-SA; mso-fareast-language: EN-GB;">.
</span></li>
<li class="MsoNormal" style="mso-list: l0 level1 lfo1; mso-margin-bottom-alt: auto; mso-margin-top-alt: auto; tab-stops: list .5in;"><span lang="EN" style="font-size: 11.0pt; mso-ansi-language: EN; mso-bidi-font-family: "Times New Roman"; mso-bidi-language: AR-SA; mso-fareast-language: EN-GB;">American
Association of School Librarians and the Association for Educational
Communications and Technology (1998). <a href="http://www.ala.org/ala/mgrps/divs/aasl/guidelinesandstandards/informationpower/InformationLiteracyStandards_final.pdf"><span style="mso-bidi-font-size: 10.0pt;">Information Literacy Standards for
Student Learning.</span></a> </span></li>
<li class="MsoNormal" style="mso-list: l0 level1 lfo1; mso-margin-bottom-alt: auto; mso-margin-top-alt: auto; tab-stops: list .5in;"><span lang="EN" style="font-size: 11.0pt; mso-ansi-language: EN; mso-bidi-font-family: "Times New Roman"; mso-bidi-language: AR-SA; mso-fareast-language: EN-GB;">Association of
College and Research Libraries (2000). Information Literacy Competency
Standards for Higher Education [</span><u><span lang="EN" style="color: blue; font-size: 11.0pt; mso-ansi-language: EN; mso-bidi-font-family: "Times New Roman"; mso-bidi-font-size: 10.0pt; mso-bidi-language: AR-SA; mso-fareast-language: EN-GB;"><a href="http://www.ala.org/%20ala/mgrps/divs/acrl/%20standards/%20standards.pdf">http://www.ala.org/
ala/mgrps/divs/acrl/ standards/ standards.pdf</a></span></u><span lang="EN" style="font-size: 11.0pt; mso-ansi-language: EN; mso-bidi-font-family: "Times New Roman"; mso-bidi-language: AR-SA; mso-fareast-language: EN-GB;"> </span></li>
<li class="MsoNormal" style="mso-list: l0 level1 lfo1; mso-margin-bottom-alt: auto; mso-margin-top-alt: auto; tab-stops: list .5in;"><span lang="EN" style="mso-ansi-language: EN; mso-bidi-font-family: "Times New Roman"; mso-bidi-font-size: 12.0pt; mso-bidi-language: AR-SA; mso-fareast-language: EN-GB;">Bruce,
<span style="mso-spacerun: yes;"> </span>Christine (1997). Seven faces of
Information literacy. AUSLIB Press, Adelaide, South Australia.</span><span lang="EN" style="font-size: 11.0pt; mso-ansi-language: EN; mso-bidi-font-family: "Times New Roman"; mso-bidi-language: AR-SA; mso-fareast-language: EN-GB;"></span></li>
<li class="MsoNormal" style="mso-list: l0 level1 lfo1; mso-margin-bottom-alt: auto; mso-margin-top-alt: auto; tab-stops: list .5in;"><span lang="EN" style="font-size: 11.0pt; mso-ansi-language: EN; mso-bidi-font-family: "Times New Roman"; mso-bidi-language: AR-SA; mso-fareast-language: EN-GB;">Eisenberg, B. M.
(2008). Information Literacy: Essential Skills for the Information Age. <i>Journal
of Library & Information Technology, Vol. 28,</i> No. 2, March 2008,
pp. 39-47, </span></li>
<li class="MsoNormal" style="mso-list: l0 level1 lfo1; mso-margin-bottom-alt: auto; mso-margin-top-alt: auto; tab-stops: list .5in;"><span lang="EN" style="font-size: 11.0pt; mso-ansi-language: EN; mso-bidi-font-family: "Times New Roman"; mso-bidi-language: AR-SA; mso-fareast-language: EN-GB;"><a href="http://athene.riv.csu.edu.au/~jherring/PLUS%20model.htm">http://athene.riv.csu.edu.au/~jherring/PLUS%20model.htm</a></span></li>
<li class="MsoNormal" style="mso-list: l0 level1 lfo1; mso-margin-bottom-alt: auto; mso-margin-top-alt: auto; tab-stops: list .5in;"><span lang="EN" style="mso-ansi-language: EN; mso-bidi-font-family: "Times New Roman"; mso-bidi-font-size: 12.0pt; mso-bidi-language: AR-SA; mso-fareast-language: EN-GB;">The
American Library Association (1989). <span style="mso-spacerun: yes;"> </span>Final Report of the Presidential
Committee on Information Literacy. ALA.</span><span lang="EN" style="font-size: 11.0pt; mso-ansi-language: EN; mso-bidi-font-family: "Times New Roman"; mso-bidi-language: AR-SA; mso-fareast-language: EN-GB;"></span></li>
</ol>
<br />
<br />Srikanthaluxmyhttp://www.blogger.com/profile/02621345440975786756noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-14981721.post-61855725767914373362014-09-13T00:57:00.001-07:002015-11-09T11:59:40.729-08:00வளமான வாசிப்பு மானுடத்தின் மேம்பாடு வளமான வாசிப்பு மானுடத்தின் மேம்பாடு<br />
<br />
'வாசிப்பதால் மனிதன் பூரணமடைகின்றான்' என்பது பதினாறாம் நூற்றாண்டின் தத்துவமேதை பிரான்சிஸ் பேகனின் புகழ்பெற்ற வாசகங்களில் மிக முக்கியமானது. வெறும் வாசிப்பே மனிதன் பூரணமடைய வழிசெய்யும் என இவ்வாசகம் கூறும்போது, வாசிப்பு என்பதற்கு 'வளமான' என்ற அடைமொழி தேவைதானா என்ற வினாவுக்கு பதிலளிப்பதே அதாவது அதன் உட்பொருளை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.<br />
<br />
தனி மனிதனும் மானுடமும் ... <br />
மனிதன் ... உயிரி என்ற வகையில் சிந்தித்தால் இவ்வுலகில் வாழும் உயிரினங்களுக்குள் உயர்வான ஓர் உயிரி. சமூகவியல் ரீதியில் சிந்தித்தால் தனித்து வாழமுடியாத ஒரு சமூகப் பிராணி. பொருளாதார ரீதியில் சிந்தித்தால் இவ்வளவு தான் என்று வரையறுக்க முடியாதளவுக்குத் தேவைகளும் பிரச்சனைகளும் கொண்டவன். அரசியல் ரீதியில் சிந்தித்தால் நாட்டின் எதிர்கால வாரிசு. அறிவியல் ரீதியில் சிந்தித்தால் உலகத்தை உள்ளங்கைக்குள் அடக்குமளவிற்கு அறிவியல் தொழினுட்ப சாதனைகளின் உச்சிப்படியில் வீற்றிருப்பவன். மனிதப்பண்புகளின் அடிப்படையில் சிந்தித்தால் அறிவை ஆக்கத்துக்குப் பயன்படுத்துவதை விடவும் அழிவுக்குப் பயன்படுத்துவதில் ஆர்வம் அதிகமுள்ளவன். <br />
<br />
மனிதன் மனிதத்தன்மையுள்ளவனாக இருக்கும் நிலை மானுடம் எனப்படுகின்றது. மனித இனம் அனைத்தையும் கூட்டாகக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பொதுப்பதமாகவும் இது பார்க்கப்படுகின்றது. மனிதன் ஒரு விலங்கு தான் என்பதை அடிக்கொருதரம் நினைவூட்டிக்கொண்டிருக்கும் கோபம், வெறுப்பு, குரோதம் போன்ற எதிர்மறைப் பெறுமானங்களைப் பகுத்தறிவின் துணை கொண்டு கூடியவரை தவிர்த்து அன்பு, இரக்கம், கருணை, பாசம், காதல், ஈடுபாடு, மரியாதை, பக்தி போன்ற உயரிய மனிதப் பண்புகளை வளர்த்துக்கொள்வதே மனிதத்தன்மைக்கு அடிப்படை. தன்னைச் சுற்றித் தான் போட்டுக்கொள்ளும் குறுகிய வட்டத்தைவிட்டு வெளியே வந்து, உலகை அகலக் கண்கொண்டு பார்க்கும் தன்மையை வளர்த்து, நான், எனது என்ற குறுகிய மனப்பான்மைகளை விலக்கி, 'நாம்' என்ற உணர்வை வளர்ப்பதனூடாக அடுத்தவரை நேசிக்கும் தன்மையை அடுத்தவருக்கு உதவும் தன்மையை உருவாக்கிக்கொள்ளும் பண்பு மானுடம் எனப்படுகின்றது. மதம் சார்ந்த நம்பிக்கைகளுக்கு மேலாகப் பகுத்தறிவுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து மனிதப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண பரிசீலிக்கும் ஒரு சித்தாந்தப் போக்கே மனித நேயம் என ஒக்ஸ்போட் அகராதி குறிப்பிடுகின்றது.<br />
<br />
<br />
இன்றைய மானுடம்<br />
மனிதத்தன்மை குறைந்து விலங்குத்தன்மை அதிகரித்துக் கொண்டு போகும் இன்றைய உலகில் மானுடம் என்பதன் உண்மையான அர்த்தத்தை மிக அழகாக எடுத்துக்காட்டுகின்றது மகிழினியப்பன் என்ற பெயரில் கவிஞர் ச.வே பஞ்சாட்சரம் அவர்கள் வடித்த மானுடம் வாழ்கிறது என்ற கவிதையில் உள்ள பின்வரும் வரிகள். <br />
<br />
மானுடம் ஒன்று வன்முறையால் வழிய குருதி புண்படுத்த <br />
மானுடம் ஒன்று வன்முறையால் வழியக் குருதி புண்படவே<br />
மானுடம் ஒன்று மனம் பதைத்து மருத்துவமனையில் அதைச் சேர்க்க<br />
மானுடம் ஒன்று மருந்து கட்டி மரணம் தடுத்துக் காக்கிறது.<br />
<br />
ஒன்றாய் பலவாய் மானுடங்கள் ஒன்றையொன்று கெடுத்துவர <br />
ஒன்றாய் பலவாய் மானுடங்கள் ஒன்றையொன்று காப்பதனால்<br />
ஒன்றை அழித்த பழிதீர ஒன்றுக்குதவ முனைவதனால்<br />
இன்று மட்டும் மானுடங்கள் இணக்கம் மண்ணில் வாழ்கின்றது.<br />
<br />
பம்பர வேகத்தில் சுழலும் தகவல் சமூகத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வலுவின்றி விவேகமின்றியே அதனுடன் இழுபட்டு ஓடிக்கொண்டிருக்கின்றன இன்றைய மானுடங்கள். பக்கத்து வீட்டில் என்ன நடக்கின்றது என்பதை அறியும் விருப்பமோ அதற்கான நேரமோ இல்லாத மானுடங்கள்;. தனது வீட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் சில மானுடங்கள். அன்பு, பாதுகாப்பு, பரஸ்பர உறவு என்பவற்றை புறந்தள்ளி பணத்துக்கும் அந்தஸ்து மிக்க தொழிலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நிறுவனமாக மாறிக்கொண்டு வருகின்ற குடும்பம் என்ற அமைப்பின் வார்ப்புகள். கொடிய விலங்குகளிடமிருந்து தன்னைப் பாதுகாக்க, கூடி வாழ முற்பட்ட மானுடங்கள் இன்று மானுடங்களிலிருந்து தம்மைப் பாதுகாக்கவேண்டிய தன்மைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. <br />
<br />
சிதைந்துகொண்டு போகும் மனிதப் பண்பை விருத்தி செய்வதற்கு அடிப்படையாக இருப்பது அறிவு. விலங்குத்தன்மையை கூடியவரை தவிர்த்து மனிதத்தன்மையை தக்கவைப்பதற்கு மனிதனுக்கு இன்றியமையாததாக இருப்பது அறிவு, ஆறுதல், இன்பம், ஈடுபாடு, உறுதிப்பாடு, ஊக்கம் போன்றவை. மானுட மேம்பாட்டுக்கு அடிப்படை அறிவு. தொடர்ச்சியான கற்றல் செயற்பாட்டினூடாக ஒரு பொருட்துறை பற்றி ஒரு மனிதன் மூளையில் பதிந்து வைத்திருக்கின்ற அல்லது அனைத்து மக்களாலும் பயன்படுத்தப்படும் பொருட்டு பகிர்ந்து கொள்ளப்படுகின்ற தகவலும் அது தொடர்பான புரிதலும் அறிவு எனப்படுகிறது. மனித வாழ்வைச் சரியான முறையில் கொண்டு நடத்துவதற்கு முக்கியமானது சிந்தனைகள். செயலுக்கு அடிநாதம் சிந்தனைகள். ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு அத்திவாரமாக இருப்பது அவனது எண்ணங்கள். நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்வதற்கு அவசியமானது வாசிப்பேயாகும்.<br />
<br />
மானுடத்தின் மேம்பாடு<br />
மேம்பாடு என்ற கருத்துநிலை வெறுமனே பொருளாதார மேம்பாட்டை மட்டும் மையப்படுத்தியதொன்றல்ல. அது பரந்துபட்ட ஒரு கருத்து நிலையாக சமூக அரசியல், நிறுவன அழகியல் ஒழுக்க அம்சங்களில் மாற்றத்தை வேண்டுவதொன்றாக உள்ளது என்பதையே 'சிறந்த கல்வி, உயர்ந்த போசாக்கு, சுகாதாரம், குறைந்த வறுமை, சுத்தமான சூழ்நிலை, மக்கள் யாவருக்கும் சம சந்தர்ப்பம் கிடைத்தல் அதிகளவு தனிமனித சுதந்திரம், செழிப்பான கலாசார வாழ்க்கை என்பவற்றை உள்ளடக்கியதொன்றாக பல்பரிமாணத் தன்மை நிறைந்ததொன்றாக, சமூக மேம்பாட்டை மையப்படுத்தியதொன்றாக உள்ள 1991இன் உலக வங்கி அறிக்கையானது எடுத்துக்காட்டுகின்றது. ஜ றழசடன டியமெ 1991ஸ<br />
<br />
சமூக மேம்பாட்டுக்கு அடிப்படை மானுட மேம்பாடு. மனித இன முன்னேற்றம் சமூக முன்னேற்றம் ஆகிய இரண்டையும் பரிணாம வளர்ச்சி அடிப்படையில் ஆராய்ந்து இரண்டும் வௌ;வேறானவை அல்ல மனித முன்னேற்றத்தினூடாகவே சமூக முன்னேற்றம் நிகழ்கின்றது என்கிறார் சமூகத்தை அறிவியல் முறையில் ஆய்வு செய்த 19ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற சமூகவியலாளர் ஒகஸ்ட் கோம்த் (யுரபரளவந ஊழஅவந). மரபு, வயது, பயிற்சி, சூழல் என்பன மனித உருவாக்கத்துக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. பிறப்பால் விலங்காக இருக்கும் மனிதன் மனிதனாக வார்க்கப்படுவது குடும்பம் என்ற அச்சில் தான.; மனிதன் சந்திக்கின்ற முதலாவது உறவான தாய் சேய் உறவு மனிதனுக்கு தன்னுணர்வையும், தன்னைச் சுற்றியுள்ள கூட்டாளிகளின் உறவு சமூக உணர்வையும் தோற்றுவிக்கிறது. சமூகத்தின் வளம், சமூகத்தின் மரபு, சமூகத்தின் தேவைகள், சமூகத்தின் சூழல் என்பவற்றின் அடிப்படையிலேயே மனிதனின் முன்னேற்றம் தங்கியுள்ளது. அதேசமயம் தனித்தன்மை மிக்க மனிதர்கள் இன்றி சமூகம் வேரூன்றி நிலைத்து நிற்கமுடியாது. தனிமனித வளர்ச்சியை சமூக முன்னேற்றத்தினின்றும் பிரிக்கமுடியாதளவுக்கு அவை நெருங்கிப் பின்னிப் பிணைந்திருக்கின்றன. <br />
<br />
எவனொருவன் தன்பால் அன்பு கொள்கின்றவனாக, தன்னை மதிப்பவனாக, தன்னை நேசிப்பவனாக விளங்குகின்றானோ அவன் பிறருக்குத் தொல்லை தரமாட்டான். ஒரு மனிதன் இன்னொரு மனிதனை அளப்பதற்கு தன்னையே அளவுகோலாகக் கொள்கிறான். கவனக்குறைவு, அலட்சியப்பாங்கு, தான்தோன்றித்தனம், அக்கறையின்மை போன்றவற்றை தனது நடையுடைபாவனை, நடத்தை, பண்பு, சமூக ஒழுக்கம் அனைத்திலும் நிறைத்து வைத்திருக்கும் ஒருவன் தன்னை அளவுகோலாகக் கொண்டு அடுத்தவனை அளக்கும்போது அது எத்தகைய அபாயகரமான போக்குக்கு இட்டுச்செல்லக்கூடியது என்பது அனுபவித்தவருக்குத் தான் தெரியும். அதிலும் யுத்தம், வறுமை, பண்பாட்டுப் படையெடுப்புகள் போன்றவற்றால் தனது அடையாளங்களை மெல்ல மெல்ல இழந்துவரும் ஒரு சமூகத்தில் மானுடத்தின் இருப்புத் தொடர்பான வினா எழுவது இயற்கையானது. இதற்கு எமது சமூகமும் விதிவிலக்காக முடியாது.<br />
மானுட மேம்பாட்டுக்கு வழி என்ன? மிக அழகாக எடுத்தியம்புகின்றது புரட்சிக் கவியின் அர்த்தம் பொதிந்த பின்வரும் வரிகள்<br />
மனிதரெல்லாம் அன்பு நெறி காண்பதற்கும் <br />
மனோபாவம் வானைப்போல் விரிவடைந்து<br />
தனிமனித தத்துவமாம் இருளைப்போக்கி<br />
சகமக்கள் ஒன்றென்ப துணர்வதற்கும்<br />
இனிதினிதாய் எழுந்த உயர் எண்ணமெல்லாம் <br />
இலகுவது புலவர் தரு சுவடிச் சாலை<br />
புனித முற்று மக்கள் புதுவாழ்வு வேண்டில்<br />
புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்<br />
<br />
ஆம் ! மானுட மேம்பாட்டுக்கு அடிப்படை அறிவு என்றால் அதை அடக்கிக் கொண்டிருப்பவை நூல்கள். நூல்கள் வைக்கப்பட்டிருக்கும் இடம் நூலகம். ஒரு நூலானது கல்வியறிவு தந்து, நடைமுறைநிலை தெரிவித்து கடமைகளைக் காட்டி, உரிமைகளைச் சேர்த்து, பொருளாதாரத்தை வளர்த்து, கலாசாரத்தைக் காக்கும் செயற்பண்புகள் கொண்டது என்கிறார் இந்திய நூலகவியல் விற்பன்னர் வே. தில்லைநாயகம். <br />
<br />
நூலகம் என்பது ஆத்மாவுக்கான மருத்;துவம் என்ற வாசகம் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. நூலகங்களின் வரலாறு என்பது நாகரீகங்களின் தொட்டில் எனப்படும் சுமேரியர் காலத்திலேயே ஆரம்பித்திருக்கக்கூடும் எனினும் யூலியஸ் சீசர் காலத்தில் வாழ்ந்தவராகக் கருதப்படும் னுழைனழசரள ளiஉடைல என்ற கி;மு 1ம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படும் கிரேக்க வரலாற்றாசிரியர்; எகிப்தில் உள்ள திபிஸ் பழங்குடி மக்கள் வாழும் பிரதேசத்தில் நினைவுச்சின்னங்களை விபரிக்கும்போது இச்சின்னங்கள் அமைந்துள்ள இடத்தின் நுழைவாயிலில் பொறிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகின்ற இந்த வாசகமே நூலகங்களின் தொன்மையைக் குறிப்பிடப் போதுமானதென்றால் நூல்களின் தோற்றமோ அதற்கும் பல நூற்றாண்டுகளுக்குமுன் களிமண் பலகைகளிலிருந்து தோற்றம் பெறுகின்றது. (ளூநசயஇ 1976) இயலாமை என்பதையே இல்லாமல் செய்வேன் என்று முழங்கிய மாவீரன் நெப்போலியன் கூட தான் செல்லும் போர்க்களங்கள் அனைத்துக்கும் தன்னுடன் ஒரு நூலகத்தையே கொண்டு செல்வானாம். உறங்கக்கூட நேரமின்றி ஓடுகின்ற குதிரை மீதமர்ந்து கொண்டே உறங்கி ஓய்வெடுக்கும் இவன், பதட்டம் தரும் போர்ச்சூழலிலும் நூல்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தந்திருக்கும்போது நாகரிகத்தில் வளர்ச்சியடைந்து இருக்கும் இன்றைய மனிதர்களிடம் நூலுணர்வு இல்லாமல் போனது ஏன்?<br />
<br />
வாசிப்பு<br />
1940 ம் ஆண்டு அழசவiஅநச யுனடநச என்பவரால் எழுதப்பட்ட ஒரு நூலை வாசிப்பது எவ்வாறு? (ர்ழற வழ சநயன ய டிழழம ) என்ற நூலானது சிறந்த புகழ்பெற்ற நூல்களை தருக்க ரீதியாக வாசிப்பதற்கான வழிகாட்டுதலை உள்ளடக்கியது எனினும் மேற்கத்தைய பாரம்பரியத்துக்குள் உட்படாத எந்த நூலையும் வாசிக்குமாறு அது பரிந்துரை செய்யவில்லை. (றமைipயநனயை) <br />
<br />
வாசிப்பு என்பது பல கருத்துக்களை தனக்குள் உள்ளடக்கியிருப்பது. படித்தல், கற்றல், சொல்லுதல் போன்றவை மட்டுமன்றி இசைக் கருவியை வாசித்தலும் வாசிப்பாகவே கொள்ளப்படுகிறது. எழுதப்பட்ட அல்லது அச்சடிக்கப்பட்ட அல்லது பொறிக்கப்பட்ட வாசகங்களை கண்ணால் பார்த்து அல்லது கரங்களால் தொட்டுணர்ந்து வாயாலோ மனதாலோ உச்சரித்து அறிவால் பொருளுணரும் ஒரு செயலே வாசிப்பு எனப்படுகிறது. <br />
அறிவுத்திறம், மொழித்திறம், பார்வை நலம், கேள்விநலம், உடல்நலம், மனநலம், சூழல்நலம் ஆகியன வாசிப்புக்கு இன்றியமையாததாக உள்ளன. ஜஅழலடந 1976ஸ<br />
<br />
பரந்த ரீதியில் நோக்கின் வாசிப்பை பாடத்திட்ட வாசிப்பு பரந்துபட்ட வாசிப்பு என இருவகைப்படுத்தலாம். <br />
கற்றல் கற்பித்தல் நோக்கங்களின் அடிப்படையில் வாசிப்பு என்பது பல்வேறு செயல்களை உள்ளடக்கியதொரு நிகழ்வாகப் பார்க்கப்படுகின்றது.<br />
<br />
1. வரிவடிவத்தைப் புரிந்து கொள்ளுதல்<br />
2. புதிய சொற்களின் பொருளை ஊகித்தறிதல்<br />
3. வெளிப்படையாகக் கூறப்படும் செய்திகளைப் புரிந்துகொள்ளல்<br />
4. வெளிப்படையாகக் கூறப்படாத செய்திகளைப் புரிந்துகொள்ளல்<br />
5. வாக்கியங்களுக்கிடையிலான தொடர்பைப் புரிந்து கொள்ளல்<br />
6. பகுதியின் பல்வேறு கூறுகளின் இணைப்பைப் புரிந்து கொள்ளல்<br />
7. மையக் கருத்தைக் காணுதல்<br />
8. மையக்கருத்து துணைக்கருத்தின் வேறுபாட்டை உணர்ந்து கொள்ளல்<br />
9. முதன்மைச் செய்திகளைத் தொகுத்துப் பார்த்தல்<br />
10. படிக்கப்பெறும் பகுதி தரும் நீதியையும் பண்பாட்டையும் தெரிந்து கொள்ளல் ஆகிய பத்து அம்சங்களை உள்ளடக்கியது வாசிப்பு என்கிறார் யோகவதி பாலகிருஸ்ணன். பக். 225.)<br />
<br />
வாசிப்பின் நோக்கங்கள்<br />
<br />
கற்றல் நோக்கம் (டுநயசniபெ)<br />
படிக்கும் பருவத்திலிருப்போருக்கு நாட்டு நடப்புப் பற்றி அறியும் ஆவல் பெரிதாக இல்லை. தூக்கத்துக்கு முன்னரும் பின்னரும் அவர்கள் கையில் பெரும்பாலும் பாடப்புத்தகங்களையே பார்க்க முடியும். சிலர் காலை 4.00 மணிக்கே எழுந்துவிடுவர். சிலர் இரவு 11மணிக்கும் அரைத்தூக்கத்துடன் படித்துக்கொண்டிருப்பர். புத்தகத்தைப் பிரித்துப் படிக்காமலேயே 24 மணிநேரமும் புத்தகமும் கையுமாகத் திரிவோரும் எம்மிடையே உண்டு. பரீட்;சையில் வெற்றிபெறும் ஒரு நோக்கத்துக்காகவே பாடப்புத்தகங்களை இவர்கள் வாசிக்கின்றனர். பாடப்புத்தகங்களுடன் நெருங்கிய தொடர்புள்ள புத்தகங்களையும் பரீட்;சை வினாத்தாள்களையும் இவர்கள் வாசிக்கின்றனர். இதை வாசிப்பு என்று கருதுவதை விட படிப்பு என்றே கொள்ள வேண்டும். இந்த வாசிப்பு மனனம் செய்தலாகக் கூட இருக்கலாம். பரீட்சை முடிவடைந்ததும் படித்தவையும் விலகிவிடும். இவர்களை வைத்துக்கொண்டு எம்மை ஒரு வாசிக்கும் சமூகமாகக் கற்பனை பண்ணுதல் பொருத்தமானதல்ல.<br />
குறிப்பிட்ட பொருட்துறையில் எழுதப்படும் தனிப்பொருள் சார்ந்த தகவல் வளங்கள்;, கல்வித்தேவையைப் பூர்த்தி செய்யும் பாடநூல்கள் , ஆய்வுக்கு உதவும் அறிக்கைகள், ஆய்வுக் கட்டுரைகள், பருவ இதழ்கள் போன்ற அடிப்படைத் தகவல் வளங்கள், தேவைப்பட்ட உடனேயே குறிப்புகளை வழங்கும் உசாத்துணைத் தகவல் வளங்கள் என்பன கற்றல் நோக்கத்தை பூர்த்தி செய்பவை. <br />
குறிப்பிட்ட ஒரு பொருட்துறையை தெளிவாக விளங்கிக் கொள்வதற்கென உருவாக்கப்படும் நுல்களே பாட நூல்கள் ஆகும். இவை பொதுவாக பரந்த பொருட்துறையை உள்ளடக்குபவை. வாசிப்பு நோக்கம் என்பதே இங்கு முக்கியமானதாக இருப்பதனால் தகவல் வழங்கப்படும் விதம் இங்கு மிக முக்கியமாக கருத்தில் கொள்ளப்படவேண்டியுள்ளது. வண்ணப்படங்களும் போதிய விளக்கப்படங்களும் கவர்ச்சிகரமான வடிவமைப்பும் வாசிப்பில் தூண்டலை ஏற்படுத்துபவை. நல்லதோர் பாடநூலானது வாசிப்பை மட்டுமன்றி நல்லதோர் கற்பித்தலுக்கும் வழிகாட்டக்கூடியது. புதிய அபிவிருத்திகள், மாறிவரும் கற்பித்தல் முறைகள் என்பவற்றைக் கருத்திற் கொண்டு இவை அடிக்கடி மீளாய்வு செய்யப்படவேண்டியுள்ளன.<br />
<br />
கற்பித்தல் நோக்கம் (வுநயஉhiபெ)<br />
பாடசாலை ஆசிரியர் முதற்கொண்டு பல்கலைக்கழக விரிவுரையாளர் வரை மாணவர்களுக்குக் கற்பிக்கும் பொருட்டு வாசிக்கின்றனர். கல்வித்திட்டங்களில் மாற்றங்கள் ஏற்படும் போக்குக்கு அமைய இத்தகைய வாசிப்பின் தன்மையில் மாற்றங்கள் கூடவோ குறையவோ இடமுண்டு. இத்தகைய வாசிப்பையும் ஆழமான வாசிப்பு என்று கருதமுடியாது. இதையும் ஒருவகைப் படிப்பு என்றே கொள்ள இ.டமுண்டு<br />
<br />
கருத்தைத் தெரிவிக்கும் நோக்கம் (அழவiஎந ழக நஒpசநளளழைn)<br />
புதிய ஆக்கம் ஒன்றைப் படைப்பதற்காகவோ சொற்பொழிவாற்றுவதற்கோ ஒரு நூலுக்கான மதிப்பீட்டுரையை எழுதுவதற்காகவோ வாசிப்பு என்ற செயற்பாடு இடம்பெறுகின்றது. நூல்கள் எதையும் வாசிக்காமலேயே இத்தகைய செயற்பாடுகள் வெற்றிகரமாக நிறைவேறுகின்றன என்பதும் இங்கு கருத்தில் கொள்ளத்தக்கது. ஒரு நூலிலிருந்து ஒரு நூலகத்தையே அலசுமளவிற்கு இத்தகைய வாசிப்பு நீண்டு கொண்டு போகும். 'எழுத்தாளர்களின் நேரத்தின் பெரும்பகுதி வாசிப்பிலேயே கழிகின்றது. ஒரு நூலை எழுதுவதற்கு ஒரு நூலகத்தின் அரைப்பங்கு நூல்களின் பக்கங்கள் புரட்டப்படுகின்றன' என்கிறார் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற பொருளியல் மேதையான சாமுவேல் ஜோன்சன் அவர்கள். நூல்களை வாசிக்கும் போது ஏற்படும் நன்மையைப்போன்று நூல்களிலிருந்து பெறப்படும் விரிவுரைகள் நன்மையைத் தருவதில்லை என் இவர் வாசிப்புக்கு மிகவும் அழுத்தம் தருகின்றார்.<br />
<br />
ஆய்வு நோக்கம் (சுநளநயசஉh)<br />
ஆய்வு நோக்கத்துக்கான வாசிப்பானது பல படிநிலைகளைக் கடந்த பின்னரேயே முழுமை பெறக் கூடியது. ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பொருள் தொடர்பான கலைச்சொற்களை அறியும் ஆரம்பப் பணியில் முதலாவது படிநிலையான துறை சார்ந்த கலைச் சொல் அகராதிகள், இக்கலைச்சொற்களின் பொருளைத் தருகின்ற அகராதிகள், எடுத்துக் கொண்ட பொருள் தொடர்பான பின்னணித் தகவல்களைத் தருகின்ற கலைக்களஞ்சியங்கள் என்பவற்றைக் கடந்து உண்மையான ஆய்வு அபிவிருத்திகளை, அவற்றின் புதிய பிரயோகங்களின் விளக்கங்களை, அல்லது பழைய கருத்துக்களுக்கான புதிய விளக்கங்களை உடனுக்குடன் தாங்கி வரும் முதல்நிலைத் தகவல் வளங்கள் அனைத்துமே இங்கு வாசிப்புக்குரிய மூலங்களாக கொள்ளப்படுகின்றன. ஒழுங்குபடுத்தப்படாத வளங்களாக இவை இருப்பதனால் இதனைப் பயன்படுத்துவது எளிதல்ல. ஆய்வு முறையியல், மற்றும் மொழி அறிவு, தேடுதல் திறன்கள் போன்ற அனைத்துத் திறன்களும் தேவைப்படுகின்ற வாசிப்பாக இது கருதப்படுகிறது.<br />
<br />
மனமகிழ்வு நோக்கம் (சுநஉசநயவழைn)<br />
இத்தகைய வாசிப்பானது உண்மையோ பொய்யோ நல்லதோ தீயதோ படிப்பவருக்கு ஒரு புதிய உணர்வை, புதுவித எழுச்சியை, புதுவித கிளர்ச்சியை, பொழுதுபோக்கு உணர்வைத் தருவதாக உள்ளது. நூல்கள் சஞ்சிகைகள் நாளிதழ்கள் என்பன பொழுதுபோக்கு நோக்கத்தை பூர்த்தி செய்வன என்றாலும் சிறப்பாக கவிதை, நாடகம், நாவல்கள், சிறுகதைகள் போன்ற இலக்கியங்களும், ஓவியம், சிற்பம், போன்ற கலைத்துவ ஆக்கங்களும், வாசிப்பவருக்கு அமைதியையும் நிறைவையும் தருகின்ற ஆன்மீக வளங்களும், பழம்பெரும் இலக்கியங்களான புராண இதிகாசங்கள், திருமுறைகள் போன்றவை மனமகிழ்வு நோக்கத்தை பூர்த்தி செய்பவை. <br />
ஈழத்தமிழ்ச் சமூகத்தின் விடலைப்பருவத்தினருக்கான வாசிப்பை பாலூக்கத்தை அதிகம் தூண்டும் மலினப்பட்ட காதல் கதைகள் பெருமளவில் ஆக்கிரமித்திருக்கின்றன. வாழ்விற்கு வழிகாட்டக்கூடிய எத்தனையோ புனைகதைகளை மிகச் சிறந்த எழுத்தாளர்கள் தமிழ்ச்சமூகத்திற்குத் தந்திருந்தும் கூட ரமணிச்சந்திரன் என்ற ஒரேயோரு எழுத்தாளரின் கதைகளில் விடலைப்பருவம் மட்டும் தொங்கிக்கொண்டிருக்கவில்லை. திருமணம் முடித்து குழந்தைகளைப் பெற்றெடுத்த நடுத்தர வயது குடும்பப் பெண்களையும் இவை தான் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கின்றன. எண்டமூரி வீரேந்திரநாத், பட்டுக்கோட்டை பிரபாகர், இந்துமதி, லட்சுமி என இவர்களின் தெரிவுகள் குடும்பக் கதைகளைத் தவிர்த்து காதல் கதைகளை நோக்கியே நகர்கின்றன. மனமகிழ்விற்கென்று நாடும் இத்தகைய நூல்கள் 'நூல்கள் தனிமையில் இருப்பவர்களுக்கு உற்ற நண்பர்களாகின்றன. துக்கத்தைப் போக்கி மகிழ்வையும் சாந்தியையும் தருகின்றன. தடுமாற்றத்தைத் தெளிய வைத்து மன உறுதியைத் தருகின்றன. ஒருவர் தமது எதிர்காலத்தைத் தீர்மானிக்க வழிகாட்டியாகின்றன. ஒருவருடைய வாழ்வில் தன்னம்பிக்கையை விதைத்து மேம்பாடுகளை வளர்க்க உதவுகின்றன. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அறிஞர்கள், நல்ல மனிதர்கள் ஆகியோருடன் ஆத்மார்த்த நிலையில் சில மணிநேரம் வாழவைக்கின்றன' என்ற மறைந்த பேராசிரியர் நந்தி அவர்களின் கூற்றுக்கு மாறாக படித்து முடித்ததும் ஏக்கத்தையும் விரக்தியையும் நிரந்தரமாகவே வாசிக்கும் மனங்களிடம் ஏற்படுத்தி விடுவதே நடைமுறை யதார்த்தமாக உள்ளமை கண்கூடு. <br />
<br />
தகவல் பெறும் நோக்கம் (ஐகெழசஅயவழைn)<br />
நம்மைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பதை அறியும் ஆவல் பலரை வாசிக்கத் தூண்டுகின்றது. இந்த வாசிப்புக்கு உதவும் வளமாக நாளிதழ்களும் வார இதழ்களும் கருதப்படுகின்றன. தூக்கம் விட்டு எழுந்ததும் காலைநேரக் கோப்பியுடன் செய்தித்தாளை வாசித்தால்தான் சிலருக்குப் பொழுது நன்கு விடியும். காலைக் கடனை முடிக்கப் போகும்போதே செய்தித்தாளுடன் கழிவறைக்குப் போகின்றவர்கள் எம்மிடையே பலர். ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தவர் பலரையும் காலைநேரத்தில் வீட்டின் முன்புற வராந்தாவில் மூக்குக் கண்ணாடியுடன் செய்தித்தாளில் மூழ்கியிருக்கும் நிலையை பரவலாகப் பார்க்க முடியும். எம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியும் ஆவல் பொதுவாக வயது வந்தோர்களுக்கே இருக்கிறது என்பதையே இது காட்டுகின்றது. இதற்காகவே இவர்கள் பணம் கொடுத்து நாளிதழை வாங்குகின்றனர். பணம் கொடுத்து வாங்க விருப்பம் இல்லாதவர்களும் வாங்கும் வசதியற்றவர்களும் காலை எழுந்ததும் வாசிகசாலை நோக்கி ஓடுவதை அவதானிக்க முடியும். அலுவலகம் செல்பவர்கள் அலுவலகத்தின் தேனீர் இடைவேளையின் போது செய்தி தாளை வாசிக்கின்றனர். நேரம் இல்லை என்று தமக்குள் முடிவெடுப்பவர்கள் மாலையில் வாசிக்கின்றனர். தூர இடங்களுக்குப் பயணம் செய்பவர்கள், வீட்டில் வெட்டியாக பொழுதைக்கழிக்கும் வாய்ப்புள்ளவர்கள் ஆனந்தவிகடன், குமுதம் போன்ற சஞ்சிகைகளையும் கற்கண்டு முத்தாரம் போன்றவற்;றையும் வாசிக்கின்றனர்.<br />
நாளிதழ்களில் பெரும்பாலானவை வார இறுதியில் ஞாயிறு சிறப்பிதழைக் கொண்டுள்ளன. தமிழ்ச்சமூகத்தின் மிக முக்கியமான வாசிப்புச் சாதனமாகக் கருதப்படுவது நாளிதழாகும். நேற்றைய நாட்டு நடப்புகளை இன்றைய நாளிதழில் பார்க்கக்கூடியதாக இருக்கும் என்பதால் காலையில் எழுந்ததுமே நாளிதழும் கையுமாக இருப்பவர்களை எம்மிடையே அதிகம் பார்க்கலாம். நாளிதழ்களை சாப்பாடு கட்டப் பயன்படுத்தும் குடும்பங்களும் எம்மிடம் உள்ளன. ஓரிரு நூலகங்களைத் தவிர மற்ற எல்லாப் பொதுநூலகங்களுமே மாத முடிவில் நாளிதழ்களை மொத்தமாக விற்றுக் காசாக்குவதுமுண்டு. ஆனால் எமது சமூகத்தில் இன்றைய செய்தித்தாள் நாளைய குப்பைத் தாள் என்ற மேலைத்தேய கருத்துநிலை பொருத்தமானதல்ல. ஏனெனில் இத்தகைய செய்தித்தாள் உடனே படித்துவிட்டுப்போகும் செய்திகளை மட்டுமன்றி மாணவரின் பாடவிதானம் சார்ந்த தகவல்களையும் ஆய்வு முயற்சிகளுக்கு உதவுகின்ற பலதரப்பட்ட பொருட்துறை சார்ந்த கட்டுரைகள் ஆய்வுக்கட்டுரைகளையும் உள்ளடக்கும் தகவல் வளமாகவே காணப்படுகின்றன. எனவே இவற்றை கிழித்து எறியாது இவற்றிலுள்ள முக்கியமான தகவல்களையும் செய்திகளையும் வெட்டியெடுத்து பொருட்துறை சாரந்து ஒழுங்குபடுத்தி வைக்கும் போது இதனது ஆய்வுப் பெறுமதி அதிகரிக்கும் என்பது சிலருக்கே தெரிந்த உண்மையாக இருக்கிறது. <br />
<br />
சிந்தனை விருத்தி நோக்கம் (ஐnளிசையவழைn)<br />
வாசிப்பு நோக்கங்களில் மிக உன்னத நிலையிலான வாசிப்பாக இதைக் கருத இடமுண்டு. மனிதனின் அறிவைத் தூண்டுகின்ற, சிந்திக்க செய்கின்ற, மனிதனையும் சமூகத்தையும் முன்னேற்றுகின்ற நூல்களின் வாசிப்பாக இதைக் கருத இடமுண்டு. பொருளாதார தத்துவத்தைப் புகுத்திய அடம்ஸ்மித்தின் 'தேசங்களின் செல்வம்', பொதுவுடமைத் தத்துவத்தை தந்த கார்ல்மாக்ஸின் 'மூலதனம்', உயிரின உருவாக்கத்தை விளக்கிய டார்வினின் 'பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு', மக்கள் தொகைப் பிரச்சனையை விளக்கிய மால்தசின் 'மக்கள் தொகைக் கோட்பாடு', மனித மனத்தை அப்படியே படம்பிடித்துக் காட்டிய சிக்மண்ட் பிராய்டின் 'மனித மன சிந்தனை', சத்திய வாழ்க்கையை எடுத்தியம்பிய அரிச்சந்திரன் கதை, அதர்மத்துக்கும் தர்மத்துக்குமிடையிலான யுத்தத்தில் தர்மமே வெல்லும் என்பதை உணர்த்தும் பாரத இராமாயணக் கதைகள். ராகுல சாங்கிருத்தியானின் வால்காவிலிருந்து கங்கை வரை போன்றவை இவ்வகைப்படுவன.<br />
<br />
<br />
இன்றைய வாசிப்புச் ழல்<br />
வாசிப்பு என்ற கருத்துநிலை தொடர்பாக எமது சமூகத்தில் நிலவுகிறது. ஆரம்ப வகுப்பில் வரிவடிவத்தைப் புரிந்து கொள்வதற்காக எழுத்துக்கூட்டி வாசித்தல் என்பதை வாசிப்பாகக் கருதும் போக்கே ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்களிடம் காணப்படுகிறது. குமரப்பருவத்தில் விரிவுரைக் குறிப்புப் புத்தகத்தின் நடுவிலோ அல்லது அனைவரும் படுத்து உறங்கிய பின்னர் விளக்கு வெளிச்சத்திலோ படிக்கப்படுகின்ற பாலியல் உணர்ச்சியைத் தூண்டுகின்ற நூல்களை வாசிப்பதும் வாசிப்பாகத் தான் கருதப்படுகின்றது. <br />
<br />
வாசிப்புக்கு அடிப்படை தரமான நூல்களின் தேர்வு. நூல்கள் தொகையாலோ தரத்தோலோ அதிகரித்துச் செல்லும் தன்மை இல்லாத ஒரு காலப்பகுதியில், நூல்கள் புனிதமானவை என்ற கருத்துநிலை மேலாதிக்கம் செய்த ஒரு காலப்பகுதியில் நூல்கள் அனைத்துமே அறிவுப் பொக்கிசங்களாகவே இருந்தன. கோவில்கள் மடாலயங்களில் பேணிப்பாதுகாக்கப்பட்ட எத்தனையோ பதிவேடுகளை இதன் மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகக் கொள்ளலாம். நூல்களின் தொகை விரல்விட்டு எண்ணத்தக்க அளவிலும் நூல் உருவாக்கத்தில் நீண்டகால அறிவும் அனுபவமும் பிரயோகிக்கப்பட்ட ஒரு காலத்திலேயே நூலைத் தேர்ந்து கற்க வேண்டும் என்ற பொருள் தரும் 'கல்வி கரையில கற்பவர் நாள் சில, மெல்ல நினைக்கிற் பிணி பல - தௌ;ளிதின் ஆராய்ந்து அமைவுடைய கற்பவே, பாலுன் குருகிற றெரிந்து' என்கிற அடிகளை மிகப்பழமை வாய்ந்த இலக்கண நூலான நாலடியார் தனக்குள் பொதிந்து வைத்திருக்கிறது. அதாவது நீருடன் கலந்துள்ள பாலை அன்னம் எவ்வாறு பிரித்துப்பருகுகின்றதோ அவ்வாறே நூல்களின் சாரத்தைக் கிரகிக்க வேண்டும் என்கிறது. நூல் அழகுகள் மட்டுமன்றி நூல் குற்றங்களையும் பட்டியலிட்டிருக்கிறது தொல்காப்பியம். <br />
ஆனால் இன்றைய உலகம் அப்படிப்பட்டதல்ல. நிமிடத்துக்கு மில்லியன்கணக்கில் உருவாகும் இன்றைய நூல் உலகில், கணனி அறிவே நூலுருவாக்கத்துக்குப் போதுமானது என்ற கருத்துநிலையில் இருக்கும் சமூகத்தில் குப்பைக்குள் குன்றிமணியைத் தேடிப் படிக்கவேண்டிய நிர்ப்பந்தம் வாசகனுக்கு. <br />
'தரமான புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பது ஒரு அரிய கலை. தரமற்ற புத்தகங்களை ஈவிரக்கமில்லாமல் நிராகரிப்பது அதைவிடப் பெரிய கலை. நம்மை ஏமாற்ற வீசப்படும் தந்திர வலைகளுக்கெல்லாம் டிமிக்கி கொடுத்துவிட்டு மிக மேலான புத்தகங்களைத்தேடி, அவற்றைப் படைத்திருக்கும் உன்னத ஆசிரியர்களைத் தேடி நாம் செல்ல வேண்டும் என்கிறரர் எழுத்தாளர் சுந்தரராமசாமி. <br />
'அரிசியில் கல்லைக் கலந்துவிட்டால் பிரித்துவிடலாம். ஆனால் அறிவிலே நஞ்சைக் கலந்துவிட்டால் பிரிப்பது கடினம். எனவே நூல்தேர்வு கருத்தில் கொள்ளப்படவேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்கள் நூலகங்களுக்கு கிடைக்க வழிசெய்யப்படவேண்டும்' என்கிறார் குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா. <br />
'குறிக்கோள் இலாது கெட்டேன்' என்றவாறு எதுவித நோக்குமில்லாது நூல்களை வாசிப்பதில் பயனில்லை. நோக்கத்தோடு வாசிக்கும்போது தான் எமக்கு வேண்டியவற்றை நூல் எங்களுக்குக் காட்டும். கேளுங்கள் கொடுக்கப்படும் என்பது புத்தகங்களுக்கும் பொருந்தும்' என்ற நாடறிந்த நாடகாசிரியர் குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களின் மேற்கண்ட வரிகள் வாசிப்புக்கு நோக்கம் இருக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்துகின்றது. <br />
'சில நூல்கள் ருசிக்கப்படவேண்டும். சில விழுங்கப்படவேண்டும். இன்னும் சில சப்பிமென்று சமிக்கச் செய்யப்பட வேண்டும். என்ற புகழ்பெற்ற தத்துவமேதை பிரான்சிஸ் பேகனின் மேற்கண்ட வரிகள் நூல்களை எப்படிப் படிப்பது என்ற அம்சத்தை மிக ஆழமாக கோடிட்டுக் காட்டுகின்றன. <br />
வாசிப்பு அனுபவத்தை வார்த்தைகளில் வரைய முயற்சி செய்யலாம். வாசிக்கத் தொடங்குமுன்பு மனசுக்குள் ஒரு உலகம் இருக்கிறது. உயிரோடும் சுறுசுறுப்போடும் இயங்கும் புற உலகம் போல் இதுவும் இன்னொரு உலகம். மரபு, நம்பிக்கை, லட்சியங்களால் உருவாகும் உலகம். வாசிக்க வாசிக்க வாசிக்கப்படுகின்ற விடயம் மனசில் இயங்கிக்கொண்டிருக்கும் இந்த உலகத்தோடு கரைந்துகொண்டே இருக்கிறது. மன உலகத்துக்கும் வாசிப்புக்குமான உறவு இது. இந்த உறவு தான் வாசக அனுபவத்தை உன்னதமாக்கவோ அருவருப்பாக்கவோ செய்கிறது என்கிறார் தினமணி தமிழ்மணி இதழில் கட்டுரையாளர் பாவண்ணன். <br />
<br />
வளமான வாசிப்பு<br />
ஒருவனுக்குத் தேவையான கருவிகள், ஆற்றல்கள், அதிகாரம் அனைத்தும் வாசிப்பின் மூலம் கிடைக்கக்கூடியது என்பதையும் இவற்றைப் பிரயோகித்தலும் கருவிகளைக் கையாள்வதில் நிபுணத்தும் பெறுவதும் மனிதனை முழுமையாக்கும் என்பதையும் குறிப்படுவதுதான் 'வாசிப்பு மனிதனை முழுமையாக்கும்' என்ற பிரான்சிஸ் பேகன் அவர்களது சுலோகத்தின் உட்பொருள். இந்த சுலோகமானது இன்றைய தகவல் தொழினுட்ப யுகத்தில் 'வளமான' என்ற அடைமொழியை யாசித்து நிற்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறது. <br />
<br />
வியாபாரமயப்படுத்தப்பட்டிருக்கும் நூல் உற்பத்தி, படித்து முடிந்ததும் குப்பைக்கூடைக்குள் போடக்கூடியளவுக்கு உடனடித்தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய நூல்களின் உற்பத்தி, தரங்குறைந்த தாள்களில் உருவாகும் மலிவுப் பதிப்புகளின் அதிகரிப்பு ஆகியவை நூல்கள் புனிதமானவை என்ற கருத்துநிலையைத் தகர்த்துவிட்டன. குப்பைக்குள் குன்றிமணிகளைத் தேடிப் பொறுக்கவேண்டிய நிலையிலிருக்கும் இன்றைய தலைமுறையினருக்குக் கண்டதும் கற்கப் பண்டிதனாவான் என்ற பழமொழி பொருத்தமற்றதொன்று. கருத்துக்கொவ்வாத கதைப்புத்தகங்களே கதியென்று கிடப்பவர்கள் கூட வாசிப்பில் முழு நாளையே தாம் செலவிடுவதாகத் தான் வாதிடுகின்றனர். இங்குதான் வளமான வாசிப்பு என்பதன் முழுமையான அர்த்தம் கிடைக்கிறது. <br />
<br />
வளமான என்ற தமிழ்ச்சொல்லுக்கு இணையாக ஆங்கில மொழியில் சiஉhநௌளஇ நnhயnஉநஅநவெஇ நசெiஉhஅநவெ எனப் பல சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன எனினும் இவற்றுக்கிடையில் சிறுசிறு வேறுபாடுகள் உண்டு. ஒன்றின் மதிப்பு, தரம், கவர்ச்சி என்பவற்றை மேம்படுத்துதல் எனப் பொருள்படுவது நுnhயnஉநஅநவெ. இதனை மேலும் வளப்படுத்துவதுவதன் மூலம் பெறப்படுவது நுசெiஉhஅநவெ.ஜழுஒகழசன 1995ஸ<br />
<br />
வளமான வாசிப்புக்கு அத்திவாரம் இடும் பயனுள்ள முயற்சியில் ஒன்று சிறுவயதில் கதை சொல்லல் ஆகும். கதை சொல்லல் என்பது காதினால் வாசித்தல் என்ற பொருளில் ஜப்பானின் வாசிப்புப் பழக்கத்தை விருத்தி செய்வதற்கான சிறந்த செயற்திட்டமாகப் பின்பற்றப்படுகிறது. பாடசாலைக்குச் செல்லுமுன்னரே குழந்தைகளுக்கு பிடித்தமான கதைகளை பெற்றோர்கள் அவர்களுக்கு முன்பு உரத்து வாசிப்பார்கள். தனக்குப் பிடித்த விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் குழந்தைகள் கூட ஆர்வமாகக் கதை கேட்பர். பாடசாலைக்குப் போகத் தொடங்கியதும் அங்கிருந்து புத்தகங்களை எடுத்து வந்து படிக்கும் பழக்கத்தை இக் குழந்தைகள் ஏற்படுத்திக் கொள்வதற்கு இந்த கதை கேட்கும் பழக்கமே அடிப்படையாக இருக்கிறது. <br />
வளமான வாசிப்புக்கு உதவும் இன்னொரு உத்தி வாசிப்பில் பாய்ந்து செல்லல் என்பதாகும். எல்லா நூல்களையும் எவரும் படிக்க முடியாது. 'ஒரு தினசரியின் வார வெளியீட்டில் இருபத்திநாலு பக்கங்களுக்கு மேல் கண்ணைக்கவரும் வண்ணப்படங்களுடன் பல்துறையிலும் கட்டுரைகள் வெளியாகின்றன. நோயியல், மருத்துவம் எல்லா வார வெளியீடுகளிலும் காணலாம்; அரசியல் அலசல், போர்நிலைகள், சினிமா இப்படிப் போகின்றது. இப்படியான நீர்ப்பாலில் பாலைத்தெரிவது ஒரு கலை. வாசிப்போர் இந்தக் கலையைக் கற்க வேண்டும். ஒரு பந்தியில் இரண்டொரு சொற்களை, வசனங்களை வாசித்தவுடன், என்ன சொல்லப்படுகின்றது என்று விளங்குவது ஒரு அறிவுக்;கலை. அந்தக்கலை கைவந்தவர்கள் ஒரு நூலில் பக்கம் பக்கமாகப்புரட்டி அந்த நூல் முழுவதிலும் என்ன சொல்லப்படுகிறது என்று சொல்லுவார்கள். ளுமippiபெ in சுநயனiபெஇ 'வாசிப்பில் பாய்ந்து செல்லல்' என்று சொல்லலாம் என்கிறார் பண்டிதர் சச்சிதானந்தம் அவர்கள். ஜசச்சிதானந்தம் 2005ஸ<br />
<br />
எனக்கு இப்படி வாய்க்கவில்லையே என்ற ஏக்கத்தைத் தருவதற்குப் பதில் மற்றவரை விட நான் மேல் என்ற மனோநிலையைத் தருகின்ற நூல்கள்---, தான் வாழுகின்ற சமூகத்துக்குப் பொருத்தமான புதுப்புது ஆய்வு முயற்சிகளைத் தூண்டும் நூல்கள்--, விரக்தியால் விழுந்து கிடப்பவரைத் தூக்கி நிறுத்தித் துணிவு தந்திடும் நூல்கள்---, பற்றிப் பிடித்து ஏறுவதற்கு கொழுகொம்பாக இருக்கும் நூல்கள் இவை தான் வளமான வாசிப்புக்குத் தேவைப்படுபவை. இத்தகையதொரு வாசிப்புத் தான் 'நான்' என்ற உணர்வை இல்லாதொழித்து 'நாம்' என்ற உணர்வைத் தோற்றுவிக்கும். நாம் என்ற உணர்வு தோன்றிவிட்டால் சமூக மேம்பாடு தொடர்பாகக் கவலைப்பட வேண்டிய அவசியமேயிருக்காது.<br />
<br />
References<br />
1. Hornby, A.S Oxford Advanced learner’s Dictionary. 5th ed. London: Oxford, 1995.<br />
2. Moyle.D.[1976] The Teaching of Reading. 4th ed. London: Ward Lock Educational, 1976.<br />
3. Shera,Jesse.H. (1976) Introduction to Librarary Science:Basic elements of Library science. Littletone:Libraries unlimited. p14.<br />
4. Sodex, Elle Benetti. What is reading?. A joint position paper of the international Reading Association and National middle school association. www.reading.org<br />
5. Worl Bank [1991 Annual worl bank conference on development economics. ed by Boris Pleskovic and Joseph E.Stiglitz. key note address by Joseph E. Stiglitz.- Wachington:world bank.p17-31.<br />
6. www. Wikipedia.org.<br />
7. சுச்சிதானந்தம்,க. 'புத்தகங்களே சிறந்த தோழர்கள்'அறிவாலயம் திறப்புவிழாச்சிறப்புமலர், இணுவில் : இணுவில் திருவூர் ஒன்றியம,; 2005.<br />
8. யோகவதி பாலகிருஸ்ணன். முதல் உலகத் தமிழாசிரியர் மன்ற மாநாட்டு மலர். பக்கம் 225.)<br />
<br />
<br />Srikanthaluxmyhttp://www.blogger.com/profile/02621345440975786756noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-14981721.post-58267339633251480192014-09-13T00:54:00.002-07:002015-11-09T11:59:54.775-08:00வாசிப்பும் சமூக மேம்பாடும்வாசிப்பும் சமூக மேம்பாடும்<br />
<br />
<br />
<br />
அறிமுகம் <br />
ஆய்வுக்கட்டுரைகள், அன்றாடச் செய்தி இதழ்கள், சுவரொட்டிகள், பொது அறிவுப் போட்டிகள், மேடைச் சொற்பொழிவுகள் என்று கல்விசார் நடவடிக்கைகள் அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தும் ஒரு வாசகம் 'வாசிப்பு மனிதனை முழுமையாக்கும்' என்பதாகும். இந்த வாசகம் ஐந்து நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தது என்பதும் மனித சமூகத்தை நீண்டகாலம் ஆக்கிரமித்திருந்ததும் விவசாயத்தை முதன்மையாகவும் நிலத்தை மூலவளமாகவும் கொண்டதுமான நிலபிரபுத்துவ சமூக அமைப்பு நிலைகொண்டிருந்த ஒரு காலப்பகுதியில் தான் தோற்றம் பெற்றது என்பதும் ஆச்சரியத்துக்குரியதொன்று. இந்த வாசகமும் 'அறிவே ஆற்றல்' என்ற புகழ் பெற்ற வாசகமும் 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த தத்துவ மேதை பிரான்ஸிஸ் பேகனுக்குரியவை. இரண்டு வாசகங்களுக்குமிடையில் நெருங்கிய தொடர்புண்டு.<br />
உலகின் அதிவளர்ச்சியுற்ற சமூகங்களுக்கிணையான எழுத்தறிவு வீதத்தைக் கொண்டவர்களும் மிக நீண்டகாலக் கல்விப்பாரம்பரியத்தை உடையவர்களுமான ஈழத் தமிழ்ச் சமூகத்தில் மேற்குறிப்பட்ட வாசகங்களினது முழுமையான அர்த்தம் 21ம் நூற்றாண்டுக்குள் நுழைந்தபின்னர்தான் உணரப்பட்டிருக்கிறது என்பதையே 2003ல் தொடங்கப்பட்ட பாடசாலை நூலகக் கற்றல் வள நிலையங்களின் தோற்றம், நூலக வாரங்கள், தேசிய நூலக ஆவணவாக்க சபையினால் ஒக்டோபர் மாதம் தேசிய வாசிப்பு மாதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு வாசிப்பை ஊக்குவிப்பதற்கான சகல வழிமுறைகளும் முடுக்கிவிடப்பட்டிருத்தல் போன்ற தேசிய ரீதியிலான, நிறுவனமயப்படுத்தப்பட்ட திட்டங்கள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. தராதரப் பத்திரங்களைக் குவிக்கும் கல்விச் சமூகமாக மட்டும் தான் நாம் இருக்கின்றோம், அறிவுடைய சமூகமாக இல்லை என்ற கசப்பான யதார்த்தம் அறிவுக்கான அடித்தளத்தை உருவாக்க வேண்டிய கட்டாய நிலைக்கு எம்மை இட்டுச் சென்றிருக்கிறது. <br />
<br />
அறிவே ஆற்றல்<br />
ஆளுமை மிக்க மனித சமூகத்தின் பலம் அறிவு எனச் சொல்லப்படுகின்றது. பலம் என்பது இயற்கை வளத்தாலோ, பணபலத்தாலோ அளவிடப்படுவதில்லை. உலகின் வளர்ச்சியுற்ற சமூகங்கள் அனைத்தும் அறிவு என்ற அத்திவாரத்தின் மீதே வளர்ச்சி என்ற கட்டிடத்தை எழுப்பியுள்ளன. அறிவுக்கு அடிப்படையாக இருப்பது வாசிப்பு.<br />
கண்டவை, கேட்டவை, படித்தவை, உணர்ந்தவை எனப் புலன்களால் பெற்ற அறிவை புலனுக்குப் புறம்பாக உள்ள பகுத்தறிவின் துணைகொண்டு அலசி ஆராய்ந்து, ஒப்புநோக்கி, உண்மை கண்டு, புதிய கருத்துக்களை உருவாக்கி, அவற்றை மேலும் ஆய்வுசெய்து, சரிபார்த்து, கோட்பாடு கண்டு, சட்டமாக்கி உலகை வழிநடத்தும் ஆற்றலைப் பெறுவதற்கு அறிவு சார் சிந்தனை அவசியமாகும்.. அறிவு சார் சிந்தனையை உருவாக்குவதற்குப் பரந்த வாசிப்புத் திறன் முக்கியம். தான் எதிர் கொள்ளும் பிரச்சனைகளிலிருந்து தன்னை விடுவிப்பதற்கு உதவுகின்ற, தனித்துவமான, தனக்குத் தானே நீதிபதியாகக் கூடிய வல்லமையை அளிப்பது இந்தப் பரந்துபட்ட வாசிப்புத் திறனே. வாசிப்பதன் மூலமோ, கேள்வி ஞானத்தினாலோ நாம் பெறும் தகவலை தகவலாகவே வைத்திருக்காது அறிந்து கொண்டவற்றை ஆய்வுக்குட்படுத்தி ஆராய்ந்து செல்லும் போதுதான் 'அறிவு' எமக்குள் ஊறும். இதையே 'கற்றனைத்து ஊறும் அறிவு' , 'எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு' ஆகிய குறள்கள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன. கல்லுதல் என்ற பொருள் கொண்ட கல்வி என்பதும் இதையே உணர்த்தி நிற்கிறது.<br />
தனிமனித வளர்ச்சிக்கு அறிவு எந்தளவுக்கு அடிப்படையாக உள்ளதோ சமூக வளர்ச்சிக்கும் அடிப்படை அறிவே. இந்த அறிவுங்கூட தன்னை வளர்ப்பதை மட்டும் கருத்தில் கொள்ளாது தனது சமூகத்தையும் வளர்க்கும் உணர்வைத் தரும்போது மட்டுமே சமூக மேம்பாடு என்பது சாத்தியமாகும்.<br />
<br />
கல்வியும் அறிவும்<br />
'ஒரு மனிதன் கற்பது எவ்வாறு எனக் கற்றுக் கொள்வதே கல்வியின் இலக்காகும் . கற்றுக் கொள்வதற்கான ஆற்றலானது அறிவை விட முக்கியமானதாகும். அறிவு, காலத்திற்கொவ்வாததாகப் போனாலும் கற்கும் திறனானது அனைத்து அறிவுகளுக்குமான திறவு கோலாக விளங்குகிறது'. என்ற கூற்று அறிவை விட கல்வி முக்கியம் என்ற கருத்துநிலையைத் தருகின்றது. அப்படியாயின் பாடசாலைகள் ஏன் அறிவுக்கான திறவுகோலாகச் செயற்பட முடியாதுள்ளது என்ற வினா எழுவதும் இங்கு தவிர்க்கமுடியாததாகிறது. <br />
கற்றல் என்பது வாழ்க்கையினின்றும் எழும் ஒன்று. வாழ்க்கை அனுபவங்களின் ஒரு பகுதியை மட்டுமே பாடசாலைகள் மனிதனுக்கு வழங்க முடியும். தொழில் நோக்கம், அறிவு நோக்கம், ஒருமைப்பாடுடைய ஆளுமையை வளர்த்தெடுக்கும்; இசைந்த வளர்ச்சி நோக்கம், ஒழுக்க நோக்கம், ஓய்வு நோக்கம், சமூக நோக்கம் என பலதரப்பட்ட நோக்கங்களையும் சந்தித்திருக்கும் இன்றைய கல்வி முறையானது செயற்பாட்டளவில் செய்துள்ள சாதனைகள் மிக மிகக் குறைவு. 'மனிதனை மனிதனாக உருவாக்குவதே உண்மைக் கல்வியின் நோக்கம்' என்ற சுவாமி விவேகானந்தரின் சிந்தனை 'உடல் உள்ளம் ஆன்மா என்பவற்றின் சிறப்பு மிக்க பண்புகளை வெளிக் கொணர உதவுவது கல்வி' என்ற காந்தியின் சிந்தனை வெறும் சுலோகங்களாக மட்டுமே படிக்கப்படுகின்றன. கல்வித்திட்டங்களில் ஏற்படுத்தும் மாற்றங்களின் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஆசிரியர்களுக்கான பயிற்சியோ அவர்களிடம் மனமாற்றத்தைக் கொண்டு வருவதற்கான தூண்டுதல்களோ மிகக் குறைவு. வறுமை, வேலையின்மை போன்ற பொருளாதாரக் காரணிகளின் தாக்கம் மிக அதிகமாக உள்ள எமது தேசத்தில் கல்வியின் முழு நோக்கமுமே தொழில் நோக்கமாகவே உள்ளது. மேலை நாட்டு அறிவியல் கண்டுபிடிப்புகளின் பாவனையாளராகவே இருக்கும் எமக்கு இக் கண்டுபிடிப்புகளை பயன்படுத்துவதற்கான தேடலில் வாழ்வின் பெரும் பகுதி கழிந்து விட இக் கண்டுபிடிப்புகளின் உன்மையான பயன்பாடு என்ன---? இதன் நன்மைகள் தீமைகள் எவை....? போன்றவற்றை அறிவதற்கான வாய்ப்புகளை இழந்து விடுகின்றோம்.<br />
போட்டி மிக்க தொழில் சந்தையில் நின்றுபிடிப்பதற்கேற்ற வகையில் தான் எமது நகர்வுகள் இருப்பதன் காரணமாக வாழ்க்கைப் படிப்பிற்கான கால அவகாசமோ சிந்தனையோ எம்மிடம் அருகி வருவதே கண்கூடு. தொழில் சந்தையில் போட்டி போடக்கூடிய வல்லமையைத் தரும் பாடசாலைகளை நோக்கி தமது பிள்ளைகளை நகர்த்தும் பெற்றோர்கள,; பாடசாலைகளைப் பெறுபேறுகளின் அடிப்படையில் தரப்படுத்தும் கல்வித் திட்டங்கள், அந்தஸ்து மிக்க வாழ்க்கைக்குரிய மூலதனமாகக் கல்வியை கருதும் எமது சமூகத்தின் மனப்பாங்கு என்பன மாறும் வரை பாடசாலைகள் அறிவுக்கான அடித்தளங்களாக இருக்கும் வாய்ப்பு சாத்தியமற்றதொன்றாகும். பரந்துபட்ட வாசிப்பால் மட்டுமே அறிவுக்கான அடித்தளம் போடப்பட முடியும் என்பது உண்மையானால் பெற்றோர்கள், ஆசிரியர்கள், நூலகர்கள் என்ற முக்கூட்டுச் சக்திகளின் ஒருங்கிணைந்த செயற்பாட்டினூடாகவே இது அடையப்படமுடியும். <br />
<br />
வாசிப்பு<br />
'அமெரிக்க சனத்தொகையில் 25வயதுக்கு மேற்பட்டோரில் 50வீதமானோர் குறைந்தது நாளாந்தம் ஓரிரு சஞ்சிகைகள் படிக்கின்றனர் வாரமொருதடவை செய்தித்தாள் வாசிக்கின்றனர். ஆனால் கடந்த ஆறு மாதங்களில் ஒரு புத்தகத்தை மட்டும் வாசித்திருக்கின்றனர்' என 1999ஆம் ஆண்டில் தேசிய வீட்டுக் கல்வி ஆய்வின் புள்ளிவிபரம் ஒன்று கூறுகின்றது. இதன் கருத்து அமெரிக்க சனத்தொகையில் மீதி 50 வீதம் ஒரு நூலைக்கூடப் படிக்கவில்லை என்பதே. இதன் மறுபுறத்தில் ஒருவருடத்தில் 10 நூல்கள் படித்தால் வாசகர் உலகின் உயர்மட்டத்தில் இருப்பீர்கள் என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.(நுமைநnடிநசசல -2002). ஆசியான்(யுளுநுயுN) நூலகங்களில் வாசிப்புப் பழக்கத்தைத் தடுக்கும் காரணிகளில் மிக முக்கியமானது அவர்கள் வாசிக்கும் சமூகமாக இல்லாது அரட்டையடிக்கும் சமூகமாக இருப்பதே என அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.(ஐகுடுயு- 1999). பழம்பெருமை பேசுவதிலேயே காலத்தின் பெரும்பகுதியைக் கழிக்கின்ற எமது சமூகத்தக்கும் இது பொருந்தக்கூடியதொன்று.<br />
<br />
வாசிப்பின் அடிப்படையில் எமது சமூத்தைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.<br />
• வாசிக்கத் தெரிந்தவர்கள். ஆனால் வாசிக்காதவர்கள்: வாசிப்பு முக்கியம் என்ற உணர்வு இருந்தும் சோம்பல் காரணமாகவோ அல்லது நேரமின்மை காரணமாகவோ வாசிக்காதவர்கள்.<br />
• வாசிக்கத் தெரிந்தவர்கள் ஆனால் வாசிப்பின் முக்கியத்துவம் தெரியாதவர்கள்: எமது சமூகத்தின் கணிசமான பகுதி இப்பிரிவைச் சார்ந்தவர்களே. வாசிப்பின் முக்கியத்துவம் உணராமலேயே பட்டப்படிப்பையும் முடித்துவிட்டு பலரகப்பட்ட தொழில்களிலும் அமர்ந்துவிடுபவர்கள்.<br />
• வாசிக்கத் தெரிந்தவர்கள் வாசிப்பின் முக்கியத்துவமும் அறிந்தவர்கள்: பேரறிஞர் என எம்மால் போற்றிக் கொண்டாடப்படுபவர்களும், மிகக் குறைந்தளவு தொகையைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்களும் இவர்களே. விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரே இந்த வகையில் உள்ளனர்.<br />
• வாசிக்கத் தெரிந்தவர்கள் ஆனால் வாசிப்பதற்கான வளங்களோ வசதிகளோ அற்றவர்கள்: பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரதேசங்களில் நூலகங்கள் கூட இவர்களின் அறிவுப்பசிக்குத் தீனி போடும் வல்லமையுள்ளனவாக இல்லை என்பது கசப்பான உண்மை.<br />
• வாசிக்கத் தெரியாதவர்கள் ஆனால் வாசிப்பின் முக்கியத்துவம் தெரிந்தவர்கள்: அனேகமான நூலகங்களில் செய்தித்தாள் வாசித்துக்காட்டும் பணியும் தெருத்திண்ணைகளில் ஒருவர் வாசிக்க சுற்றியிருந்து கேட்கும் மக்கள் கூட்டமும் எமக்கு உணர்த்துவது இதைத் தான். <br />
• வாசிக்கத் தெரியாதவர்கள் அதேசமயம் வாசிப்பின் முக்கியத்துவமும் அறியாதவர்கள்: ஏழ்மை, எழுத்தறிவின்மை, அறியாமை போன்ற பலதரப்பட்ட அமைப்புசார் வன்முறையையும் ஒருங்கே அனுபவிக்கும் இத்தகைய மக்களுக்கு வாசிப்பு என்ற கருத்துநிலை புதிது.<br />
<br />
வாசிப்பைத் தூண்டும்; காரணிகள்<br />
வாசிப்புச்சூழல்<br />
பிறக்கும் எந்தக் குழந்தையும் தாயிடமிருந்தே பெரும்பாலானதைக் கற்கிறது. மனித வாழ்க்கையின் பெரும்பகுதி குடும்பம், சுற்றுப்புறச் சமூகம் என்ற வட்டத்துக்குள்ளேயே கழிகிறது. 'குழந்தையின் முதல் ஆறு ஆண்டுகளின் வாழ்க்கையை என்னிடம் ஒப்படையுங்கள் அதற்குப்பிறகு அதன் வாழ்க்கை அமைப்பை எப்படிப்பட்டவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைப்பற்றி எனக்கு கவலையில்லை' எனக் கூறும் பெஸ்டலோசி என்ற தலைசிறந்த கல்வியாளரின் கூற்று மனித வாழ்க்கையில் குடும்பமும் சுற்றுப்புறச் சமூகமும் வகிக்கும் பங்கைத் தெளிவாகக் காட்டப் போதுமானது.(சந்தானம்- 1987). பார்த்துச் செய்தல் குழந்தையின் பிரதான பண்பு என்பதனால் தேடல் உணர்வுக்கான களம் இங்கிருந்தே ஆரம்பிக்கிறது. <br />
காலைப் பேப்பர் படிக்காது விட்டால் பொழுதே புலர்வதில்லை என அங்கலாய்க்கும் அப்பாமார்கள், வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தினருக்குத் தேனீர் கொடுக்கவேண்டும் என்ற அந்த அவசரத்திலும் கூட தண்ணீர் கொதிப்பதற்கிடையில சீனி சுற்றி வந்த பேப்பர் துண்டில் என்ன இருக்கின்றது என்று; பரபரப்புடன் கண்களை மேயவிடும் அம்மாக்கள், பரீட்சை அவசரத்தின் மத்தியிலும் கையில் புதிதாக அகப்பட்ட கதைப்புத்தகத்தை பள்ளிப் பாடப்புத்தகத்துக்குள் மறைத்து வைத்து வாசிக்கும் அக்காக்கள், நாட்டு நடப்புப்பற்றி அலசிக்கொண்டிருக்கும் 'எல்லாம் தெரிந்தவர்கள்' குழாம் ஒன்று தமக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தெளிவுபடுத்தும் வாய்ப்பின்றித் திணறிக்கொண்டிருக்கும்போது, தேனீர் கொடுத்துவிட்டுத் திரும்பும் சாக்கில் இரத்தினச் சுருக்கமாகவும் தெளிவாகவும் தீர்வைக் கொடுத்துவிட்டுப்போகும் குறுகிய காலப் பள்ளிவாழ்க்கைக்குரிய அன்ரிமார்கள் என்று குடும்ப உறுப்பினர்களும் உறவினர்களும் நேரடியாகவோ மறைமுகமாகவோ வாசிக்கும் உணர்வைச் சிறுவயதிலிருந்தே குழந்தைகளிடம் விதைத்து விடுகின்றனர். எனவே வாசிக்கும் சூழல் என்பது மிக முக்கியமான காரணி. <br />
ஆனால் துரதிருஷ்டவசமாக இன்றைய தகவல் தொழினுட்ப யுகம் மேற்குறிப்பிட்ட சூழலை அடியோடு மாற்றியமைத்து விட்டது. ஒரு புறம் நேரம் இல்லை என்ற கோஷமும் மறுபறத்தில் நேரம் போவதே தெரியாமல் தொலைக்காட்சியே கதி என்று கிடப்பதும் தான் குழந்தைகளுக்கு நாம் தரும் சூழலாக மாறிவிட்டது. வாசிக்க விருப்பம்;;! ஆனால் நேரம் தான் கிடைப்பதில்லை என்பதெல்லாம் வெறும் நொண்டிச் சாக்கு. கிணற்றடியில் செலவழிக்கும் நேரம், வேலிப்பொட்டில் மினைக்கெடும் நேரம், மதிய உணவின் பின்னர் குறட்டைவிட்டுத் தூங்கும் நேரம், தொலைக்காட்சித் தொடர்களுக்குள் இம்மை மறுமையின்றி ஆழ்ந்து அமிழ்ந்திருக்கும் நேரம், போன்றவற்றில் சிறிதளவு மிச்சப்படுத்தினாலும் போதும் நேரம் தாராளமாகக் கிடைத்துவிடும். மிக முக்கியமானது வாசிக்க வேண்டும் என்ற உணர்வு மட்டுமே. எம்மைச் சுற்றி எப்போதும் நூல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுதல், நூல் எதுவும் வாசிக்காமல் வீட்டை விட்டு எக்காரணம் கொண்டு வெளியே போவதில்லை என்று பிடிவாதமாக இருத்தல், படுக்கைக்கு அருகில், கைப்பையில், குசினி இறாக்கையில் என்று முக்கியமான இடங்களில் படிக்க விரும்பும் நூலை வைத்திருத்தல் போன்ற செயற்பாடுகள் மூலம் இத்தகைய உணர்வை உருவாக்கிக் கொள்ளலாம்.<br />
<br />
வாசித்தல் இலக்கு<br />
• ஒரு நாளில் எவ்வளவு நேரம் வாசிப்பதற்கு ஒதுக்குவது என்பது மட்டுமன்றி குறிப்பிட்ட காலத்தில் எவ்வளவு நூல்களை வாசிப்பது என்பது தொடர்பான இலக்கு ஒன்றையும் அமைத்துக்கொள்ளுவது வாசிப்பைத் தூண்டக்கூடியது. இந்த இலக்கானது ஒரு நாளில் ஒரு மணி நேரம் வாசிப்புக்கு ஒதுக்குதல் என்பதாகவோ, மாதத்துக்கு ஒரு நூல் என்பதாகவோ அல்லது வாரம் ஒரு நூல் என்பதாகNவுh இருக்கலாம்;. இலக்கை அமைக்கும் வரையில் கடும் சிரமமாகவே இருக்கும். இலக்கை உருவாக்கிவிட்டால் வாசிக்காமல் விடுவது வாழ்க்கையையே தொலைத்துவிடுவது என்பதாகவே மாறிவிடும் அபாயமும் உண்டு. வாசிப்பை மேம்படுத்துவதற்கான முதலாவது படிநிலை இதுவே. வாசித்த நூல்களுக்கான பட்டியல் ஒன்றைத் தயார் செய்து கொள்வது இதில் முக்கியமானது. பதிவை மேற்கொள்ளும் செயற்பாட்டில் சிலருக்கு நாட்குறிப்பேடு, சிலருக்குக் குறிப்பெழுதும் கொப்பி, இன்னும் சிலருக்குப் படிப்பு மேசைக்கு எதிரே இருக்கும் சுவர், இன்னும் சிலருக்கு குளிர்சாதனப்பெட்டி--- பதிவை எங்கே சேமிப்பது என்பது முக்கியமன்று. பதிவைத் தயாரிக்கும் உணர்வே முக்கியமானது.<br />
• இனி வாசிக்கப் போகும் நூல்களுக்கான பட்டியல் ஒன்றைத் தயார் செய்து கொள்ளுதல். நல்ல நண்பர்கள், சக அலுவலர்கள், ஆசிரியர்கள், நூலகர்கள் போன்றோர் நல்ல நூல்களின் தெரிவுக்கு எப்போதும் உதவுவார்கள், பத்திரிகைகளில், செய்தித்தாள்களில் வெளிவரும் நூல்விமரிசனங்கள், நூல்வெளியீட்டு விழாவின் மதிப்புரைகள் போன்றன நல்ல நூலைத் தெரிவு செய்ய உதவும். <br />
<br />
'வாசிப்பு என்னை அப்படியே நிறுத்தி வைக்கின்றது. அந்தச் சக்தி நல்ல கருத்தை வலியுறுத்தும் ஒரு புத்தகத்துக்கே உண்டு என்று தான் சொல்வேன். வாசிக்காத நேரங்களில் நிறைவு, மகிழ்ச்சி சுவாரஸ்யம் அனைத்தும் குறைந்தது போன்ற உணர்வு ஏற்படுகின்றது. சோம்பல் உணர்வு ஏற்படுகின்றது. வேகமாக செயற்பட முடியாத ஒரு சோர்வும் இடையிடையே தெரிகின்ற மாதிரி ஒர் உணர்வு. ஏதோ இழந்து விட்டோம் என்பது மாதிரியும் நல்ல நட்பை இழந்து விட்டது போலவும் கூடச் சில சமயம் உணர முடிகின்றது. எதையாவது வாசித்துக் கொண்டிருப்பது மனதுக்குப் புத்துணர்ச்சியை ஏற்படுத்தவல்லது என்பதை வாசிக்கப் புத்தகம் இல்லாத நேரங்களில் தான் அதிகம் உணர முடிகின்றது. வாசிக்க இன்னும் புத்தகங்கள் இருக்கின்றன என்னும் போது தான் வாழ்க்கையில் பிடிப்பும் மகிழ்ச்சியும் கூடுதலாக இருப்பதை உணர முடிகின்றது. வீட்டு வேலைகளை ஆர்வத்துடனும் வேகமுடனும் செய்ய மனம் வருகின்றது. எப்படியும் ஏதோ ஒரு விதத்திலாவது எனக்கு நல்ல புத்தகங்கள் கிடைத்துக் கொண்டேயிருக்கின்றன. அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்போது தவறாமல் முதல் வேலையாகக் கடவுளுக்கு நன்றி செலுத்திவிட்டு வாசிக்கத் தொடங்கி விடுவேன். நித்திரையைக் கூட நிறுத்தி விடுவேன் வாசிப்பதற்காக' என்கிறார் கொழும்புவாழ் இல்லத்தரசி ஒருவர் (கனகலிங்கம்,ரதி 2005).<br />
<br />
வாசிக்கும் இடம்<br />
வாசிக்கும் இடத்தைத் திட்டமிடுதலும் வாசிப்பைத் தூண்டும் முக்கிய காரணியாகும். சிலருக்குப் படுக்கையில்--- பலருக்குக் காலைப் பொழுதில் கோப்பி அருந்தும் நேரத்தில்,--- இன்னும் சிலருக்கு மதியம் சாப்பிடுகையில்.--- பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் பெரும்பாலான மக்களுக்கு பேரூந்துகள், புகைவண்டிகள், போன்றவையே வாசிக்கும் இடங்கள். வேலைக்குப் போகும் அவசரத்திலும்கூட கைப்பையில் புத்தகம் எடுத்துவைக்க அவர்கள் மறப்பதே கிடையாது. அதேசமயம் ஒற்றைக்காலில் நின்று பயணம் செய்வதற்கான வாய்ப்பை மட்டுமே தரும் எம்மூர் வண்டிகளில் இத்தகைய கருத்துநிலை நகைப்புக்கிடமானதொன்று எனினும் அலுவலகத்தின் மதிய உணவு வேளையை நாம் எவ்வாறு செலவிடுகின்றோம் என்பதையும் மீட்டுப்பார்ப்பது பயன்தரத்தக்கது.<br />
வாசிப்பைத் தூண்டக் கூடிய மிகப் பொருத்தமான இடம் நூலகங்களே. நூலகங்கள் அறிவுப் பதிவேடுகளின் சுரங்கம் எனப்படுகிறது. 'கடலைப் போன்றது நூலகம். மணலை விரும்புவோர் மணலை எடுக்கலாம்;;;. சிப்பி, சங்கு, சோகிகளைப் பொறுக்குவோர் அவற்றைப் பொறுக்கலாம்;. குளிப்போர் குளிக்கலாம்;. காற்று வாங்க விரும்புவோர் காற்று வாங்கலாம்;. மீனினங்களைப் பிடிக்க விரும்புவோர் அவற்றைப் பிடிக்கலாம்;. வெறுமனே கரையில் இருந்து கடல் அலையைப் பார்த்து மகிழ விரும்புவோர் அவ்வாறு செய்யலாம்;. முத்தெடுக்க விரும்புவோர் முத்தெடுக்கலாம்.;; செல்கின்றவரது நோக்கம் எதுவோ அதனை அவர் நிறைவேற்றிக் கொள்ளலாம்' என்ற தேர்ந்த வாசகர்களுள் ஒருவரான குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்களின் கூற்று இங்கு கருத்திற் கொள்ளப்படக்கூடியது. (சண்மகலிங்கம்,ம,2005). <br />
வாசகர் வட்டங்களுடன் இணைந்து கொள்வது வாசிப்பைத் தூண்டக்கூடியதொன்று. வாசகர் வட்டம் என்னும்போது பொதுவான பொருட்துறைகளில் ஆர்வமுள்ளோரை ஒன்று சேர்த்து அவர்களுக்கென வாசிப்பு வட்டங்களை உருவாக்குதல் ஆகும்;. வாசிப்பு வட்டங்களுக்குத் தேவையான நூல்களையும் வாசிப்பு வட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கான இடத்தையும் தேர்ந்தெடுத்து வாசிப்பு வட்டங்கள் சிறப்பான முறையில் நடைபெற வழிவகுக்கலாம். வாராந்த மாதாந்த ரீதியில் நடைபெறும் இத்தகைய கருத்தூட்டல்களுக்கு உதவுமுகமாக நூலகங்கள் தமக்கென சிறியளவிலாவது கருத்தரங்கு மண்டபம் ஒன்றையும் கொண்டிருக்குமாயின் வாசிப்பு வட்டம் நடைபெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பேயே அவற்றுடன் தொடர்பான நூல்களை அம் மண்டபத்தின் ஒரு பகுதியிலேயே காட்சிப்படுத்தின் வாசகர்களுக்கு இலகுவாக இருக்கும். பெரும்பாலான பொதுநூலகங்கள் வாசகர் வட்டங்களை சிறப்பாக நடத்திவருவதையும் இங்கு குறிப்பிடவேண்டும்.<br />
<br />
வாசிக்கும் நேரம்<br />
ஒவ்வொரு நாளும் ஒரு ஒழுங்கில் குறித்த நேரத்தை அமைதியாக வாசிப்பதற்கு ஒதுக்குவது அவசியமாகும். வாசிக்கும் காலமானது தினமும் 10-15 நிமிடங்களாக இருக்கலாம். அல்லது கூடிய நேரமாக கிழமைக்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களாக அமையலாம். தேர்ந்த எழுத்தாளர்களிடம் கேட்டால் குறைந்தது இரண்டு மணி நேரம் வாசிப்பில் செலவிடுவதாகக் கூறுவார்கள். அதேசமயம் புத்தகத்துக்குள் நுழையாமலேயே 24 மணிநேரமும் புத்தகமும் கையுமாகத் திரிபவர்களும் எம்மிடம் உண்டு. பாடசாலை மட்டத்தில் மாணவர்களைத் தாமாகவே தமக்கு விரும்பியவற்றை தெரிவு செய்து தத்தமது விருப்பப்படி வாசிக்க அனுமதிக்க வேண்டும். வாசிப்பதற்கு போதிய புத்தகங்கள் இல்லாத பிரச்சனையைத் தீர்ப்பதற்கு .வேறுபட்ட வகுப்புகளிற்கு வௌ;;வேறு நேரத்தில் வாசிப்பதற்குரிய நேரத்தை ஒதுக்கலாம்;. <br />
சுதந்திரமாக வாசிப்பதற்கான நேரத்தை நாம் தேடிக்கொள்ளாதுவிடின் அல்லது பாடசாலை மட்டத்தில் வாசிப்பதற்கான நேரத்தை ஒதுக்குதலை ஒரு முக்கிய விடயமாகக் கருதாவிடின்; வாழ்நாள் பூராக வாசிக்கும் பழக்கத்தை விருத்தி செய்வதை நாம் இழந்துவிடுவோம். பெற்றோரைப்பொறுத்து இருவருமே வேலைக்குச் செல்பவர்களெனில் பிள்ளைகளின் வாசித்தலை மேற்பார்வை செய்வதற்கான நேரம் அரிதாகவே இருக்கும். இன்னொரு வகையில் மாணவர்களின் பெரும்பாலான நேரம் தனியார் வகுப்புகளிலும் பாடசாலையில் கொடுக்கப்படும் வீட்டு வேலைகளிலும் செலவழிக்கப்படுவதனால் மாணவர்களிற்கு மனச் சந்தோசத்திற்காக வாசிக்கக் கிடைக்கும் நேரம் அற்றுப் போகிறது. <br />
<br />
வளமான வாசிப்பு<br />
எல்லாவற்றையும் விட மிக முக்கியமான காரணி எதை வாசிப்பது என்பது தான்.. நூல்கள் வியாபாரமயப்படுத்தப்பட்டிருப்பதும், ஏனைய பொருட்களை விடவும் நூல்களின் விலை ஒப்பீட்டளவில் குறைந்து கொண்டு போவதும், ஓரே நூலைத் தரங்குறைந்த தாளில் அச்சிட்டுப் பெருந்தொகையில் மலிவுப்பதிப்புகளாக விற்கக்கூடிய வசதியும், படித்து முடிந்ததும் குப்பைக்கூடைக்குள் போடக்கூடியளவுக்கு உடனடித்தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய நூல்களின் உற்பத்தியும், புத்தகங்கள் புனிதமானவை என்ற கருத்துநிலையைத் தகர்த்துவிட்டன. குப்பைக்குள் குன்றிமணிகளைத் தேடிப் பொறுக்கவேண்டிய நிலையிலிருக்கும் இன்றைய தலைமுறையினருக்குக் கண்டதும் கற்கப் பண்டிதனாவான் என்ற பழமொழி பொருத்தமற்றதொன்று. கருத்துக் கொவ்வாத கதைப்புத்தகங்களே கதியென்று கிடப்பவர்கள் கூட வாசிப்பில் முழு நாளையே தாம் செலவிடுவதாகத் தான் வாதிடுகின்றனர். இங்குதான் வளமான வாசிப்பு என்பதன் முழுமையான அர்த்தம் கிடைக்கிறது. பெற்றோர்கள், ஆசிரியர்கள், நூலகர்கள் இணைந்த முயற்சியினால் மட்டுமே தரமான நூல்களைப் படிக்கக்கூடிய வாய்ப்பை இளைய தலைமுறையினர் பெற்றுக்கொள்ளமுடியும். சமூகங்களை வடிவமைத்த சிற்பிகள், சமூகத்தை முன்னேற்றப்பாதைக்கு இட்டுச் சென்ற வழிகாட்டிகள், சமூகத்தில் எதிர்பாராத மாற்றங்களை ஏற்படுத்திய அவதார புருஷர்கள் போன்ற பெரும் தலைவர்களின் வாழ்க்கைச் சரிதங்கள், பொது அறிவு நூல்கள் போன்றவை முன்னேறுவதற்கு மாதிரிகள் தேடி அலையும் மாணவப்பருவத்துக்கு மிகப்பொருத்தமானவை. உலக சமூகங்களின் வாழ்நிலையைக் காட்டும் கண்ணாடிகளாக இருக்கும் மொழி பெயர்ப்பு இலக்கியங்கள் வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு மிகவும்; பயன்தரத் தக்கவை. <br />
எனக்கு இப்படி வாய்க்கவில்லையே என்ற ஏக்கத்தைத் தருவதற்குப் பதில் மற்றவரை விட நான் மேல் என்ற மனோநிலையைத் தருகின்ற நூல்கள்---, தான் வாழுகின்ற சமூகத்துக்குப் பொருத்தமான புதுப்புது ஆய்வு முயற்சிகளைத் தூண்டும் நூல்கள்--, விரக்தியால் விழுந்து கிடப்பவரைத் தூக்கி நிறுத்தித் துணிவு தந்திடும் நூல்கள்---, பற்றிப் பிடித்து ஏறுவதற்கு கொழுகொம்பாக இருக்கும் நூல்கள் இவை தான் வளமான வாசிப்புக்குத் தேவைப்படுபவை. இத்தகையதொரு வாசிப்புத் தான் 'நான்' என்ற உணர்வை இல்லாதொழித்து 'நாம்' என்ற உணர்வைத் தோற்றுவிக்கும். நாம் என்ற உணர்வு தோன்றிவிட்டால் சமூக மேம்பாடு தொடர்பாகக் கவலைப்பட வேண்டிய அவசியமேயிருக்காது.<br />
<br />
குறிப்புதவு நூல்கள்<br />
<br />
1. அருளானந்தம், ஸ்ரீ. சனசமூகநிலையங்கள்: சமூகமேம்பாட்டின் குவிமையங்கள். பாரதிதாசன் கட்டிடத் திறப்புவிழா மலர். 2003.<br />
2. கனகலிங்கம், ரதி. 'இல்லத்தரசி ஒருவரின் வாசிப்பு அனுபவங்கள்'. அறிவாலயம் சிறப்பு மலர். இணுவில்: இணுவில் திருவூர் ஒன்றியம், 2005. பக்.98-99<br />
3. சண்முகலிங்கம், ம. 'நுழைபுலம்'. மேற்படி நூல் பக்.98-99.<br />
4. சந்தானம், எஸ். கல்வியின் தத்துவ சமூக அடிப்படைகள். சென்னை: பழனியப்பா, 1987. பக்.605.<br />
5. International Federation of Library Associations and Institutions.1995-2000<br />
www.ifla.org.<br />
<br />
<br />
ஸ்ரீ. அருளானந்தம்,<br />
முதுநிலை உதவி நூலகர்,<br />
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்<br />
10-08-2006.<br />
<br />
<br />Srikanthaluxmyhttp://www.blogger.com/profile/02621345440975786756noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-14981721.post-22157661975692616972014-09-13T00:49:00.002-07:002015-11-09T12:00:12.647-08:00நூல்களுள் நுழைய-----<!--[if gte mso 9]><xml>
<w:WordDocument>
<w:View>Normal</w:View>
<w:Zoom>0</w:Zoom>
<w:TrackMoves/>
<w:TrackFormatting/>
<w:DoNotShowPropertyChanges/>
<w:PunctuationKerning/>
<w:ValidateAgainstSchemas/>
<w:SaveIfXMLInvalid>false</w:SaveIfXMLInvalid>
<w:IgnoreMixedContent>false</w:IgnoreMixedContent>
<w:AlwaysShowPlaceholderText>false</w:AlwaysShowPlaceholderText>
<w:DoNotPromoteQF/>
<w:LidThemeOther>EN-US</w:LidThemeOther>
<w:LidThemeAsian>X-NONE</w:LidThemeAsian>
<w:LidThemeComplexScript>TA</w:LidThemeComplexScript>
<w:Compatibility>
<w:BreakWrappedTables/>
<w:SnapToGridInCell/>
<w:WrapTextWithPunct/>
<w:UseAsianBreakRules/>
<w:DontGrowAutofit/>
<w:SplitPgBreakAndParaMark/>
<w:DontVertAlignCellWithSp/>
<w:DontBreakConstrainedForcedTables/>
<w:DontVertAlignInTxbx/>
<w:Word11KerningPairs/>
<w:CachedColBalance/>
</w:Compatibility>
<w:BrowserLevel>MicrosoftInternetExplorer4</w:BrowserLevel>
<m:mathPr>
<m:mathFont m:val="Cambria Math"/>
<m:brkBin m:val="before"/>
<m:brkBinSub m:val="--"/>
<m:smallFrac m:val="off"/>
<m:dispDef/>
<m:lMargin m:val="0"/>
<m:rMargin m:val="0"/>
<m:defJc m:val="centerGroup"/>
<m:wrapIndent m:val="1440"/>
<m:intLim m:val="subSup"/>
<m:naryLim m:val="undOvr"/>
</m:mathPr></w:WordDocument>
</xml><![endif]--><br />
<!--[if gte mso 9]><xml>
<w:LatentStyles DefLockedState="false" DefUnhideWhenUsed="true"
DefSemiHidden="true" DefQFormat="false" DefPriority="99"
LatentStyleCount="267">
<w:LsdException Locked="false" Priority="0" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Normal"/>
<w:LsdException Locked="false" Priority="9" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="heading 1"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 2"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 3"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 4"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 5"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 6"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 7"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 8"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 9"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 1"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 2"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 3"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 4"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 5"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 6"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 7"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 8"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 9"/>
<w:LsdException Locked="false" Priority="35" QFormat="true" Name="caption"/>
<w:LsdException Locked="false" Priority="10" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Title"/>
<w:LsdException Locked="false" Priority="1" Name="Default Paragraph Font"/>
<w:LsdException Locked="false" Priority="0" Name="Body Text"/>
<w:LsdException Locked="false" Priority="11" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtitle"/>
<w:LsdException Locked="false" Priority="0" Name="Hyperlink"/>
<w:LsdException Locked="false" Priority="22" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Strong"/>
<w:LsdException Locked="false" Priority="20" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="59" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Table Grid"/>
<w:LsdException Locked="false" UnhideWhenUsed="false" Name="Placeholder Text"/>
<w:LsdException Locked="false" Priority="1" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="No Spacing"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" UnhideWhenUsed="false" Name="Revision"/>
<w:LsdException Locked="false" Priority="34" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="List Paragraph"/>
<w:LsdException Locked="false" Priority="29" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Quote"/>
<w:LsdException Locked="false" Priority="30" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Quote"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="19" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtle Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="21" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="31" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtle Reference"/>
<w:LsdException Locked="false" Priority="32" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Reference"/>
<w:LsdException Locked="false" Priority="33" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Book Title"/>
<w:LsdException Locked="false" Priority="37" Name="Bibliography"/>
<w:LsdException Locked="false" Priority="39" QFormat="true" Name="TOC Heading"/>
</w:LatentStyles>
</xml><![endif]--><!--[if !mso]><img src="//img2.blogblog.com/img/video_object.png" style="background-color: #b2b2b2; " class="BLOGGER-object-element tr_noresize tr_placeholder" id="ieooui" data-original-id="ieooui" />
<style>
st1\:*{behavior:url(#ieooui) }
</style>
<![endif]--><!--[if gte mso 10]>
<style>
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:10.0pt;
font-family:"Times New Roman","serif";}
</style>
<![endif]-->நூல்களுள் நுழைய-----<br />
<br />
<br />
நூல்கள்--- <br />
எண்ணங்களைச் சீர்செய்து கொள்வதற்கான கருவி. சிந்தனையைச் சரிபார்த்துக் கொள்வதற்கான களம்.. வாழ்நாள் முழுவதும் கூட வரும் மறக்க முடியாத துணை. கீழே விழுமுன் எச்சரித்துக் காப்பாற்றும் ஊன்றுகோல். விழுந்துவிட்டாலோ தூக்கி நிறுத்தித் துணிவு தந்திடும் நல்ஆசான். வழி தடுமாறும்போது இடித்துரைத்துத் திருத்தும் நல்ல நண்பன். <br />
'ஒவ்வொரு புத்தகமும் எம்முன்னே மக்களைப் பற்றியும், அவர்கள் ஆசாபாசங்கள் பற்றியும், அவர்கள் இதயம் பற்றியும், கருத்தோட்டங்கள் பற்றியும் அறிந்து கொள்ளத் திறந்து விடப்படும் சாளரங்கள்' என்கிறார் ருஷ்ய மண்ணின் புகழ்பெற்ற இலக்கிய மேதை மக்சிம்கோர்க்கி அவர்கள்.<br />
' ஒரு துளி நஞ்சு ஒருமுறைதான் தீங்கிழைக்கும். ஆனால் தீயநூல் ஒன்று காலம் முழுவதும் மக்கள் மனத்தை நச்சுக் கலமாக்கும் என்கிறார் மேலைத்தேய அறிஞர் ஒருவர். <br />
'நல்ல நூலானது படிக்கப்படிக்க இனிமைதரும் என்கிறது தமிழனின் அரும்பெரும் அறிவுப் பொக்கிசமான திருக்குறள். <br />
மனித சிந்தனைப் பதிவேடுகள் கால மாற்றத்துக்கமைய உடல் உள மாற்றங்களைச் சந்தித்திருக்கின்றமையை வரலாறு எமக்குப் புலப்படுத்துகின்றது. உருவமைப்பின் அடிப்படையில் களிமண் பதிவாகத் தொடங்கி,; ஓலைச் சுவடிகளாக உருப்பெற்று, ஏடு, ஓலை, தூக்கு, பனுவல் என இலக்கியங்களில் பேசப்பட்டு, ஓலைகளில் எழுதியவைகளைத் தொகுத்து நடுவிலே துளையிட்டு நூலால் பிணைத்துக் கட்டியமையால் அச்சின் கண்டுபிடிப்புக்கு முன்னரேயே நூல் எனக் காரணப் பெயர் பெற்று, புதிய கருத்துக்களை தன்னகத்தே கொண்ட இடம் என்பதால் புத்தகம் என்றும், கருத்துக்களைப் பொதிந்து வைத்திருப்பதால் பொத்தகம் என்றும் பொது வழக்கில் வழங்கி வந்திருக்கிறது. <br />
நூலகம் என்ற கருத்துநிலையின் தோற்றத்திற்குப் பின்னர் அறிவியல் தொழினுட்ப வளர்ச்சி காரணமாகத் தகவலைச் சேமிக்கும் சாதனங்களின் பௌதிக வடிவமைப்பில் ஏற்பட்ட புதுப்புது மாற்றங்கள் நூலகங்களை வந்தடைந்தபோது, நூல் என்ற எண்ணக்கரு அனைத்துச் சாதனங்களையும் உள்ளடக்குவதற்குப் பொருத்தமானதல்ல என்பது உணரப்பட்டதன் காரணமாக நூலுக்குப் பதிலாக ஆவணம்(னுழஉரஅநவெ) என்ற சொல் நூலகவியல் துறையில் பரவலான பயன்பாட்டுக்கு வந்தது. ஆவணம் என்ற சொல்லானது நூல்வடிவில் உள்ள சாதனங்களையும் நூல்வடிவில் இல்லாத சாதனங்களையும் சேர்த்துக் குறிக்கும் பொதுப்பதமாகக் கருதப்பட்டது. இலத்திரனியல் உலகிலிருந்து தகவல் உலகிற்குள் மனித சமூகம் நுழைந்து தகவல் என்ற கருத்துநிலை தகவல் உலகில் நிரந்தர இடம் பெற்றபோது தகவலைப் பதிந்து வைத்திருக்கும் எழுத்துவடிவ சாதனங்களுடன் எழுத்துவடிவற்ற மனித வளங்கள் நிறுவன வளங்கள் ஆகியனவும் தகவல் சாதனங்கள் எனப் பெயர் மாற்றம் பெற்றுப் பயன்பாட்டுக்குரிய வளம் என்ற வகையில் தகவல் வளங்கள்; என்ற பெயருடன் இன்றைய தகவல் உலகில் இப் பதிவேடுகள் உலா வருகின்றன. இக்கட்டுரை முழுவதும் தகவல் சாதனங்கள் அனைத்தும் நூல் என்ற பெயரிலேயே பயன்படுத்தப்படுகின்றது.<br />
'20ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலேயே தகவல் தொழினுட்ப உலகுக்குள் மனித சமூகம் நுழைந்துவிட்டபோதும் வடிவம், எழுத்து இரண்டிலும் நெகிழ்வுத் தன்மை கொண்டதாக, சிறியதாக, பாரமற்றதாக, விரும்பிய இடத்துக்கு எடுத்துச் செல்லக் கூடியதாக, முக்கிய அம்சங்களை வெட்டிச் சேகரிக்கக் கூடியதாக, பல பிரதிகள் எடுக்கக்கூடியதாக, தேவை முடிந்ததும் தூக்கி வீசக் கூடியதாக இருக்கக் கூடிய ஒரேயொரு சாதனம் நூலாகத் தான் இருக்க முடியும் என்ற கூற்று தாளை அடிப்படையாகக் கொண்ட சாதனங்களின் பயன்பாடு தகவல் யுகம் ஒன்றில் சுலபமாக மறைந்துவிடக் கூடிய அல்லது மறக்கப்பட்டு விடக்கூடிய வாய்ப்பு இல்லை என்பதையே சுட்டிக்காட்டுகின்றது.. <br />
<br />
<br />
கருத்துநிலை<br />
<br />
நூல்களுக்குள் நுழையும் செயற்பாடு இரண்டு அம்சங்களில் தங்கியுள்ளது. முதலாவதும் முக்கியமானதுமாகக் கருதப்படுவது நூல் பற்றிய கருத்துநிலை. மற்றையது நூலுக்குள் நுழைவதற்கான அகப் புறச் சூழல்கள். நூல் பற்றிய கருத்துநிலைக்குள் செல்வதற்கு நூல் பற்றிய சரியான வரைவிலக்கணத்தைத் தெரிந்து கொள்வது மிக முக்கியமானதாகும்.<br />
அச்சிடப்பட்ட அல்லது எழுதப்பட்ட தாள்களின் பக்கங்களைச் சுலபமாகத் திருப்பிப் பார்க்கக்கூடிய வகையில் நூலால் கோத்துக் கட்டி, அதற்கு மட்டையும் இடப்பட்டு உருவாக்கப்படுவதே நூல் என்கிறது ஒக்ஸ்போட் ஆங்கில அகராதி. இது பௌதிக வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு நூலை வரையறை செய்கிறது.<br />
குறைந்தது 49 பக்கங்களைக் கொண்ட பருவ வெளியீடு அல்லாத அச்சிடப்பட்ட வெளியீடுகள் அனைத்தும் நூல் என்ற பெயர் பெறும் என்கிறது யுனெஸ்கோ. பக்கங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இது நூலை வரையறுக்கிறது. <br />
'சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல், படிப்போர்க்கின்மை, நல்ல சொற்களை அமைத்தல், இனிய ஓசையுடைமை, ஆழமுடைத்தாதல், பொருளை முறையும் அமைத்தல், உயர்ந்தோர் வழக்கத்துடன் மாறுபடாமை, சிறந்த பொருளுடைத்தாதல், விளக்கமாய் உதாரணங்கள் கையாளுதல் என நூல் அழகுகள் பத்து' என கூறுகின்றது எமது பழம் பெரும் இலக்கண நூலாகிய தொல்காப்பியம். (தொல்காப்பியம் பொருள் 665)<br />
நூல் என்பது கல்வியறிவு தந்து, நடைமுறை நிலை தெரிவித்து கடமைகளைக் காட்டி, உரிமைகளைச் சேர்த்து பொருளாதமாரத்தை வளர்த்து கலாசாரத்தைக் காக்கும் செயற்பண்பு கொண்டது. என்கிறார் இந்திய நூலகவியல் அறிஞர் வே. தில்லை நாயகம் அவர்கள். நூலகவியல் துறை சார்ந்து இது நூலை அணுகுகின்றது.<br />
<br />
<br />
வகை<br />
எந்தவொரு நூலும் அது கொண்டுள்ள கருத்தின் அடிப்படையில் புத்துயிர் தருவது, தகவலைத் தருவது, உயிர்ப்பூட்டுவது என மூவகைப்படுகிறது என்கிறார் இந்திய நூலகவியல் அறிஞர். வே. தில்லைநாயகம் அவர்கள். உண்மையோ பொய்யோ நல்லதோ தீயதோ படிப்பவருக்கு ஒரு புதிய உணர்வை, புதுவித எழுச்சியை, புதுவித கிளர்ச்சியை, பொழுதுபோக்கு உணர்வைத் தருபவை புத்துயிர் தரும் நூல்கள் (சுநஉசநயவiஎந டிழழமள) எனப்படும். புத்துயிர்ப்பு உடல் ரீதியாகவோ உள ரீதியாகவோ இருக்கலாம். அப்பட்டமான உண்மையிலிருந்து வடித்தெடுக்கப்பட்ட ரோல்ஸ்ரோயின் புத்துயிர்ப்பு, மக்சிம்கோர்க்கியின் தாய், லியோன்யூரிஸின் எக்ஸ்சோடஸ் இவ்வகையைச் சார்ந்தது. சமூகத்தின் வாழ்நிலையைப் பிரதிபலிப்பவை தான் இலக்கியங்கள் என்ற உயரிய கருத்துநிலையிலிருந்து இம்மியும் வழுவாமல் படைக்கப்படும் எந்தவொரு இலக்கியமும் புத்துயிர்தரும் என்றவகையில் கவிதை நூல்கள், நாடக நூல்கள், நாவல்கள், சிறுகதைகள் போன்ற இலக்கியங்களும், ஓவியம், சிற்பம், போன்ற கலைத்துவ ஆக்கங்களும் புத்துயிர் தரும் நூல்களின் வகைக்குள் உள்ளடக்கப்படுபவை. இவை தவிர ஆன்மீக ரீதியல் வாசிப்பவருக்கு அமைதியையும் நிறைவையும் தருகின்ற ஆன்மீக நூல்களையும் புத்துயிர் தரும் நூல்களுக்குள்ளே உள்ளடக்கலாம். பழம்பெரும் இலக்கியங்களான புராண இதிகாசங்கள், திருமுறைகள் போன்றவை இவ்வகைக்குள் உள்ளடங்கும். <br />
வரலாறு, அரசியல், புவியியல் போன்று எடுத்துக் கொண்ட பொருட்துறை தொடர்பாக பொதுவான தகவலை உள்ளடக்குபவை தகவலைத் தரும் நூல்கள் (ஐகெழசஅயவiஎந டிழழமள) எனப்படும். இவை குறிப்பிட்ட பொருட்துறையில் எழுதப்படும் தனிப்பொருள் நூல்களாகவோ, கல்வித்தேவையைப் பூர்த்தி செய்யும் பாடநூல்களாகவோ, ஆய்வுக்கு உதவும் அறிக்கைகள், ஆய்வுக்கட்டுரைகள், பருவ இதழ்கள் போன்ற அடிப்படை நூல்களாகவோ, அதுவுமன்றி தேவைப்பட்ட உடனேயே குறிப்புகளை வழங்கும் உசாத்துணை நூல்களாகவோ இருக்கலாம்.<br />
இவை இரண்டையும் தவிர பொருளாதார தத்துவத்தை புகுத்திய அடம்ஸ்மித்தின் 'தேசங்களின் செல்வம்', பொதுவுடமைத் தத்துவத்தை தந்த கார்ல்மாக்ஸின் 'மூலதனம்', உயிரின உருவாக்கத்தை விளக்கிய டார்வினின் 'பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு', மக்கள் தொகைப் பிரச்சனையை விளக்கிய மால்தசின் 'மக்கள் தொகைக் கோட்பாடு', மனித மனத்தை அப்படியே படம்பிடித்துக் காட்டிய சிக்மண்ட் பிராய்டின் 'மனித மன சிந்தனை', போன்ற மனிதனின் அறிவைத் தூண்டுகின்ற, சிந்திக்க செய்கின்ற, மனிதனையும் சமூகத்தையும் முன்னேற்றுகின்ற உயிர்ப்பூட்டும் நூல்கள் (ஐnளிசையவiஎந டிழழமள) எம்மிடம் மிகவும் குறைவே. சத்திய வாழ்க்கையை எடுத்தியம்பிய அரிச்சந்திரன் கதை, அதர்மத்துக்கும் தர்மத்துக்குமிடையிலான யுத்தத்தில் தர்மமே வெல்லும் என்பதை உணர்த்தும் பாரத இராமாயணக் கதைகள் இவ்வகைக்குள் உள்ளடக்கப்படக்கூடியவை. அதிலும் இந்த மூன்று அம்சங்களும் ஒருங்கு சேர அமைந்திருக்கும் அற்புத வாய்ப்பு ஒரு சில நூல்களுக்கே அமைந்து விடுகின்றது. ராகுல சாங்கிருத்தியாயனின் 'வால்காவிலிருந்து கங்கை வரை' என்ற நூலை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.<br />
நூலகவியல் துறை சார்ந்து நூல்களை ஆவணம் சார்ந்த வளங்கள், ஆவணம் சாராத வளங்கள் என இருவகையாக வகைப்படுத்த முடியும். ஆவணம் சார்ந்த வளங்கள் ஜனுழஉரஅநவெயசல சநளழரசஉநளஸ அவற்றின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் முதல்நிலைத் தகவல் வளங்கள் இரண்டாம்நிலைத் தகவல் வளங்கள் மூன்றாம்நிலைத் தகவல் வளங்கள் என மூன்று வகையாகவும் உருவமைப்பின் அடிப்படையில் நூலுருச் சாதனங்கள் நூலுருவற்ற சாதனங்கள் என இருவகையாகவும் வகைப்படுத்தப்படுகின்றன. ஆவணம் சாராத வளங்கள் (ழேn னழஉரஅநவெயசல ளழரசஉநள) மனித வளங்கள், நிறுவன வளங்கள் என இருவகையாகப் பாகுபடுத்தப்படுகின்றன.<br />
உண்மையான ஆய்வு அபிவிருத்திகளை, அவற்றின் புதிய பிரயோகங்களின் விளக்கங்களை, அல்லது பழைய கருத்துக்களுக்கான புதிய விளக்கங்களை உடனுக்குடன் தாங்கி வரும் வெளியீடுகள் அனைத்தும் முதல்நிலைத் தகவல் வளங்கள் எனப்படுகிறது. ஆய்வாளர் ஒருவரால் உருவாக்கப்படுகின்ற புதிய தகவல்கள் அனைத்துமே இந்த முதல்நிலைத் தகவல் வளங்களின் ஊடாகக் குறிப்பிட்ட சமூகத்தைச் சென்றடைகிறது. ஒழுங்குபடுத்தப்படாத வளங்களாக இவை இருப்பதனால் இதனைப் பயன்படுத்துவது எளிதல்ல. மிக முக்கியமான தகவல் மூலாதாரங்களாகக் கருதப்படும் இவ் வளங்கள் புதிய அபிவிருத்திகள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிவிப்பதன் மூலம் அத்துறை தொடர்பாக அதிக அறிவு நிலையில் இருக்க உதவுதல், ஒரே மாதிரியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதைத் தடுத்தல், புதிய தகவல்களை உருவாக்குவதற்கு ஏனையோர்களுக்கு உதவுதல் போன்ற வழிகளில் ஆய்வாளர்களுக்கு உதவுகின்றன. ஒரு குறிப்பிட்ட துறையின் வளர்ச்சி வீதமானது அத்துறை சார்ந்து வெளிவரும் முதல்நிலைத் தகவல் வளங்களின் தொகையிலேயே பெருமளவு தங்கியுள்ளது. அறிக்கைகள், ஆய்வுக் கட்டுரைகள், சிறுநூல்கள், அரச ஆவணங்கள், ஆய்வுப் பருவ இதழ்கள் போன்றவற்றை இத்தகைய வளங்களுக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.<br />
இரண்டாம்நிலைத் தகவல் வளங்கள் என்பவை முதல் நிலைத் தகவல் வளங்களிலிருந்து தொகுக்கப்படுவதாக அல்லது முதல்நிலைத் தகவல் வளங்களுக்கு வழி காட்டுவதாக இருக்கும். குறிப்பிட்ட தகவல் பாவனையாளரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு முதல் நிலைத் தகவல்களில் உள்ள அடிப்படைத் தகவல்கள் புதுப்பிக்கப்பட்டு, தெரிவு செய்யப்பட்டு, ஏதாவது ஒரு திட்டமிடப்பட்ட ஒழுங்கமைப்பில் மீள ஒழுங்கமைக்கப்பட்டு பொதி செய்யப்படுகின்றன. முதல் நிலைத் தகவல் வளங்களிலும் பார்க்க இலகுவாகக் கிடைக்கக்கூடியதாக இவை உள்ளன. சுருக்கமான தகவல்களை வழங்குவது மட்டுமன்றி முதல் நிலைத் தகவல் வளங்களுக்கான நூல்விபரத் திறவு கோலாகவும் இவை தொழிற்படுகின்றன. பாநூல்கள், குறிப்பிட்ட துறை சார்ந்து எழுதப்படும் தனிநூல்கள், அகராதிகள், கலைக்களஞ்சியங்கள் போன்ற குறிப்பெடுக்க உதவும் உசாத்துணை நூல்கள் போன்றவை இவ்வகைக்குள் அடங்கும்.<br />
வாசகனது தேடுகையின் அடிப்படையில் நூல்களை ஏன், என்ன, எப்படி, யார், என்ற வினாக்களுக்கு விடை தரக்கூடியவகையில் வகைப்படுத்தலாம். அறிவியல் தொழினுட்ப நூல்கள் ஏன் என்ற வினாவுக்கு விடையளிக்கக்கூடியவை. கைந்நூல்கள், கையேடுகள், வழிகாட்டிகள் போன்ற செய்முறை நூல்கள் எப்படிச் செய்வது என்ற வினாவுக்கு விடை தருபவை. சொல்லைப் பற்றிய வரைவிலக்கணத்தையோ பொருளைப்பற்றிய விளக்கத்தையோ அல்லது குறிப்பிட்ட வினாக்களுக்கு விடையளிக்கின்ற நூல்கள் என்ன என்ற வினாவுக்கு விடையளிப்பவை. வாழ்க்கை வரலாற்று நூல்கள் யார் என்ற வினாவுக்கு விடையளிப்பவை.<br />
நூலகங்களில் நூல்களின் ஒழுங்கமைப்பை அடிப்படையாகக் கொண்டும் நூல்கள் வகைப்படுத்தப்படுகின்றன. கீழைத்தேய நூல்களை ஒழுங்கமைப்பதற்கான சிறந்த அடிப்படையாகக் கொள்ளும் கோலன் பகுப்புத் திட்டம் நூல்களை இயற்கை அறிவியல், மனிதப்பண்பியல், சமூக அறிவியல் ஆகிய மூன்று பிரதான பொருட்துறைகளின் கீழ் ஒழுங்குபடுத்தியிருக்கிறது. உலகம் முழுவதிலுமுள்ள பெரும்பாலான நூலகங்களால் பின்பற்றப்படும் தூயி தசமப்பகுப்புத் திட்டம் நூல்களை பொது, சமயம், சமூக அறிவியல், மொழி, அறிவியல், தொழினுட்பம், கலை, இலக்கியம், புவியியலும் வரலாறும் என்ற பத்துப் பிரதான பிரிவுகளின் கீழ் அறிவுப்பிரபஞ்சத்தின் பொருட்துறைகளை ஒழுங்குபடுத்தியிருப்பதன் மூலம் அனைத்து நூல்களையும் ஒழுங்குபடுத்துவதற்கான அடிப்படையை வழங்குகின்றது. <br />
<br />
<br />
நுழையும் வழி<br />
<br />
சரியான தகவலை சரியான வடிவத்தில், சரியான நேரத்தில் பெறக்கூடியதாக இருக்கும் நிலையிலேயே எந்தவொரு சமூகத்தினதும் மேம்பாடு சாத்தியமாகும். நூல்கள், வாசகர், நூலகர் ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று சரிவரப் பொருந்தும்போது தான் சரியான தகவல் சரியான நேரத்தில் சரியான நபரைச் சென்றடைதல் சாத்தியமாகிறது. உருவத்திலும் உள்ளடக்கத்திலும் எல்லையற்றுப் பரந்து விரிந்திருக்கும் தகவல் பிரபஞ்சத்தை அணுகும் வழிகளை அறிந்து கொள்வதன் மூலமே சமூக மேம்பாட்டுக்கான நுழைவாயிலைக் கண்டறிதல் சாத்தியமாகும். பின்வரும் கருத்துநிலைகள் தொடர்பான அறிவு நழையும் வழிகளை இலகுவானதாக்கக்கூடும். நூலுக்குள் நுழையும் இரண்டாவது வழி நூலுக்கள் நுழைவதற்கான அகப்புறச் சூழல்கள். இச்சூழல்களை வாசகன் சார்ந்தவை நூல்சார்ந்தவை என இருவிதமாக அணுகலாம்.<br />
<br />
வாசகன் சார்ந்தவை<br />
• மனிதன் வாசிப்புக்கு அறிவுத்திறம், மொழித்திறம், பார்வை நலம், கேள்விநலம், உடல்நலம், உள நலம், சூழல் நலம் ஆகியவை மிக இன்றியமையாதவை. ஆழலடந.னு.ஜ1976ஸ வாசகனின் மனப்பாங்கு, எதிர்பார்ப்புகள், அறியாமை, அச்சம், ஒத்துழையாமை, தகவல் தேடும் பண்பு, மொழியாற்றல், பொருட்துறை சார்ந்த அறிவு, நவீன சாதனங்களின் பாவனை போன்றன நூலை அணுகுவதற்கான ஆற்றலைத் தீர்மானிக்கின்றன. நூலின் பொருளடக்கம், சொல்லடைவு, கலைச்சொல் அகராதி போன்றவற்றினூடாக நூலில் உள்ளடக்கப்பட்டுள்ள தகவலைக் கண்டுபிடிக்கும் ஆற்றல், தேசப்படங்கள், வரைபுகள், விளக்கப்படங்கள், அட்டவணைகள் போன்றவற்றை விளங்கிக்கொள்ளும் ஆற்றல், நூலிலுள்ள ஒரு பந்தியின் பிரதான உட்பொருளை இனங்காணும் ஆற்றல், அபிப்பிராயம் ஒன்றுக்கும் உண்மையான நிகழ்வுக்குமிடையிலான வேறுபாட்டைப் புரிந்து கொள்ளும் ஆற்றல், நூல் உள்ளடக்கும் தகவலானது உண்மையா பொய்யா என இனங்காணும் ஆற்றல், நூல் கொண்டுள்ள கருத்து தனது தகவல் தேவைக்கு பொருத்தமானதா என்பதை புரிந்து கொள்ளும் ஆற்றல், இன்ரநெற், சீடி போன்ற நூலுருவற்ற சாதனங்களைப் பயன்படுத்துவதற்கும் அதற்கான உபகரணங்களை இயக்குவதற்குமான ஆற்றல் போன்ற பலதரப்பட்ட ஆற்றல்கள் நூலைப் பயன்படுத்துபவருக்கு இன்றியமையாததாகக் கருதப்படுகின்றது.<br />
<br />
• குடும்பம் மனிதனுக்குக் கிடைக்கும் நல்லதொரு வாசிப்புச்சூழல் நூல்களுக்குள் நுழையும் மனோநிலையை உருவாக்குவதற்கு மிக முக்கியமானது. மனித வாழ்வின் பெரும்பகுதி குடும்பம், சுற்றுப்புறச் சமூகம் என்ற வட்டத்துக்குள்ளேயே கழிவதனால் வீடு, சுற்றம், நண்பர்கள் ஆகிய மூன்றும் நூல்களுக்குள் நுழையும் மனோநிலையைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தம்மைச் சுற்றி எப்போதும் நூல்கள் உள்ள வீட்டில் வாழக் கிடைத்தாலும் கூட நூல்களுக்குள் நுழையும் வல்லமை யாருக்கும் வந்துவிடுவதில்லை. அந்த நூல்களை எடுத்து வாசிக்கும் பெற்றோர் அல்லது ஏனைய அங்கத்தவர் தான் நூல்களுள் நுழையும் மனோநிலையைத் தெரிந்தோ தெரியாமலோ ஏற்படுத்திவிடுகின்றனர். வீடு சரியாக அமையாத சந்தர்ப்பம் உள்ளவர்களுக்கு ஆசிரியர்கள் இத்தகைய சூழலை ஏற்படுத்திக் கொடுக்க முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக வாசிக்கும் பழக்கம் உள்ள நண்பர்களின் உறவு தன்னிச்சையாகவே அவர்களிடம் அளப்பரிய மாறுதல்களை ஏற்படுத்திவிடுகின்றது. <br />
<br />
• சமூகம் ஒருபுறம் வளர்ச்சியடைந்த சமூகங்கள் நூல்களின் தொகை ரீதியான பெருக்கத்தால் திணறிக் கொண்டிருக்கும் அதேசமயம் பின்தங்கிய சமூகங்கள் தகவல் பிரபஞ்சத்துக்குள் நுழையும் வாய்ப்பற்று இருக்க மறுபுறம் தகவல் தொழிற்துறையின் உருவாக்கம் காரணமாக ஏனைய பண்டங்களை விடவும் தகவல் சாதனங்களின்; விலை ஒப்பீட்டளவில் குறைந்து கொண்டு போவதும், ஓரே நூலை தரங்குறைந்த தாளில் அச்சிட்டு பெருந்தொகையில் மலிவுப்பதிப்புகளாக விற்கக்கூடிய வசதியும், படித்து முடிந்ததும் குப்பைக்கூடைக்குள் போடக்கூடியளவுக்கு உடனடித்தேவையை பூர்த்தி செய்யக்கூடிய நூல்களின் உற்பத்தியும் நூல்கள் மீது வைத்திருந்த மரியாதையைக் கணிசமானளவு குறைத்திருக்கிறது. வீட்டுக்கொரு நூலகம் என்ற அண்ணாவின் தாகம், வீதிக்கொரு நூலகம் என்ற புரட்சிக்;கவியின் கோசம் செயலுறுப்பெறும்போது நூலுக்குள் நுழைவதற்கான புறச்சூழல் எந்தச் சமூகத்தக்கும் வாய்த்துவிடும். வாசகனுக்குப் பொருத்தமற்ற நூல்களும், பொழுதுபோக்குக்குகந்த மலிவுப்பதிப்புகளுமாக சிறிய மண்டபத்தில் குறைந்த தொகை நூல்களுடன் சேவையாற்றுகின்ற எமது பிரதேசத்தின் பெரும்பாலான பொது நூலகங்கள் போன்று இல்லாமல் நூலகவியல் பேரறிஞர் எஸ். ஆர் இரங்கநாதன் அவர்களின் நூல்கள் பாவனைக்கே, நூலுக்கேற்ற ஆள், ஆளுக்கேற்ற நூல், வாசகர் நேரம் பேணுக, நூலகம் ஒரு வளரும் உயிரி ஆகிய பஞ்ஙசீலக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட நூலக சேவை நூலுக்குள் நுழைவதற்கான சூழலை ஏற்படுத்தும்.<br />
<br />
நூல்கள் சார்ந்தவை<br />
ழ உருவம் அன்றைய களிமண் பதிவுகள் முதற்கொண்டு இன்றைய கணினிப் பதிவுகள் வரை நூல்கள் அவற்றின் உருவமைப்பில் கணிசமான மாற்றஙகளைச் சந்தித்திருக்கிறது. ஓலைச்சுவடிகள், படங்கள், ஓவியங்கள் போன்ற மரபு ரீதியான சாதனங்கள் , படத்துணுக்குகள் காட்சி வில்லைகள், ஒலி,ஒளிப் பதிவுகள், நுண்வடிவங்கள் போன்ற கட்புல செவிப்புல சாதனங்கள்;, ஒளிப்படங்கள், வரைபுகள், மாதிரி உருவமைப்புகள், சுவரொட்டிகள் போன்ற வரையுருவ சாதனங்களைக் கடந்து இன்று எங்கும் சீடீ எதிலும் சீடி என்ற வகையில் தகவல் உலகத்துக்குள் சீடி உலகம் ஒன்று உருப் பெற்றுள்ளமையும் வாசகன் அறிந்து கொள்வது இன்றியமையாதது.. <br />
<br />
ழ உள்ளடக்கம் ஆய்வுத்துறைகளின் வளர்ச்சி நூல்களின் உள்ளடக்கத்திலும் பலதரப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தியதன் காரணமாக அறிக்கைகள், ஆராய்ச்சி நூல்கள், நியமங்கள், காப்புரிமைகள், சிறுநூல்கள், செய்திக்கடிதங்கள், பருவ இதழ்கள், தொடர் வெளியீடுகள் போன்ற முதல் நிலைத் தகவல் வளங்களையும் இத் தகவல் வளங்களிலிருந்து தொகுக்கப்படுகின்ற பாட நூல்கள், உசாத்துணை நூல்கள் போன்ற இரண்டாம் நிலைத் தகவல் வளங்களையும், இவற்றைத் தொகுத்து தருகின்ற மூன்றாம் நிலைத் தகவல் வளங்களையும் தோற்றுவித்திருக்கிறது.<br />
<br />
ழ எண்ணிக்கை உருவம் உள்ளடக்கம் எண்ணிக்கை, தரம் போன்ற பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் நூல்களின் தொகை ரீதியான அதிகரிப்பை தகவல் கட்டுமீறல் ஜஐகெழசஅயவழைn நுஒpடழளழைஸெ என்ற பதம் குறித்துநிற்கிறது. இன்று உலகில் 12 மில்லியன் ஆய்வாளர்களால் வருடாவருடம் 2 மில்லியன் கட்டுரைகள் உருவாக்கப்படுவதாக மதிப்பிடப்படுகிறது. 50-60 ஆயிரம் அறிவியல் தொழினுட்ப பருவ இதழ்கள் வெளியிடப்படுகின்றன. நாளாந்தம் மூன்று பருவ இதழ்கள் புதிதாகத் தோன்றும் அதே சமயம் ஒரு பருவ இதழின் வெளியீடு நிறுத்தப்படுகிறது. வெளியீடு செய்யப்படும் இலக்கியங்களில் 50மூமானவை தேவைக்கும் மேற்பட்டதாக உள்ளது. நூல்களின் தொகை ரீதியான அதிகரிப்பு நூல்களைத் தேடும் பணியைச் சிக்கலாக்குகிறது.<br />
<br />
ழ புதிய துறைகளின் தோற்றம் மனிதனின் ஆய்வு முயற்சிகள் அறிவுப் பிரபஞ்சத்தில் புதுப்புதுத் துறைகளை தோற்றுவித்ததுமல்லாமல் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற எத்தனையோ பொருட்துறைகளை ஒன்றிணைத்து எது கலை? எது அறிவியல்? என்று பிரித்தறியாதபடி புதிய பொருட்துறைகளை உருவாக்கியுள்ளது. எமது முதல் தலைமுறையினருக்கு கணினி அறிவியல் என்ற புதிய துறை இருந்ததோ உயிரியலும் தொழினுட்பவியலும் இணைந்து தோற்றம் பெற்ற உயிர்த்தொழினுட்பவியல் துறையோ தெரியாது.<br />
<br />
ழ சுமை ஒரே பொருட்துறை சார்ந்து எண்ணற்ற தகவல் சாதனங்களின் உற்பத்தியினால் தகவல் தேடுகையில் வாசகனுக்கு ஏற்படும் சிரமத்தை தகவல் சுமை (ஐகெழசஅயவழைn ழுஎநசடழயன) என்ற பதம் குறிக்கிறது. சாதாரண நூல்களை எடுத்துக் கொண்டால் ஒரே பொருட்துறை சார்ந்து ஒரே மாதிரியான பல நூல்கள் இருக்கும்போது அதில் பொருத்தமானதையும் சரியானதையும் தேர்ந்தெடுக்கும் வல்லமை எல்லா வாசகருக்கும் இல்லை. ஒரே பொருட்துறையில் எண்ணற்ற நூல்கள் வெளியிடப்படுவதன் காரணமாக தகவல் சுமையின்; தாக்கத்துக்கு வாசகன் உட்படுவது தவிர்க்க முடியாததாகிறது. இது சரியான தகவலைச் சரியான நேரத்தில் பெறுவதைத் தடை செய்கிறது.<br />
<br />
• நூல்களின் செயற்கைத் தன்மை சாதாரண நூல்களை எடுத்துக் கொண்டால் ஒரே பொருட்துறை சார்ந்து ஒரே மாதிரியான பல நூல்கள் இருக்கும்போது அதில் பொருத்தமானதையும் சரியானதையும் தேர்ந்தெடுக்கும் வல்லமை எல்லா வாசகருக்கும் இல்லை. அதே போன்று அகராதிகள், கலைக்களஞ்சியங்கள், ஆண்டு நூல்கள் போன்ற உசாத்துணை சாதனங்களோ அல்லது நுண்வடிவங்கள், படத்துணுக்குகள் சீடிரோம்கள் போன்ற உபகரணப் பாவனையுள்ள சாதனங்களோ செயற்கைத் தன்மை வாய்ந்தவை. இவற்றிலிருந்து வாசகனுக்குத் தேவைப்படும் தகவலைத் தேடிப் பொறுக்கியெடுத்தல் கடினமான அறிவுசார் பணியாகும். ஒருவரின் தனிப்பட்ட உதவியின்றி இவற்றைப் பயன்படுத்தல் மிகவும் சிரமமானது.<br />
<br />
• நூல்களின் ஒழுங்கமைப்பு உசாத்துணை நூல்கள் அகரவரிசை ஒழுங்கமைப்பு, பகுப்பாக்க ஒழுங்கமைப்பு, கால ஒழுங்கமைப்பு போன்றவற்றைப் பின்பற்றுகின்றன. அகராதிகள் பெரும்பாலும் அகர ஒழுங்கமைப்பையே பின்பற்றுகின்றன. அறிவியல் நூல்களில் பெரும்பாலானவை சில கோட்பாடுகள், சட்டங்களின் அடிப்படையில் ஒழுங்குபடுத்தப்படுகின்றன. வரலாற்று நூல்கள் கால ரீதியல் ஒழுங்கமைக்கப்படுகின்றன. பகுப்பாக்க ஒழுங்கமைப்பைப் பின்பற்றும் நூல்களுக்குள் இலகுவாக நுழையக்கூடிய தன்மையை நூலின் இறுதிப்பகுதியில் தரப்பட்டுள்ள சொல்லடைவு ஏற்படுத்தவல்லது. பெரும்பாலான அறிவியல் தொழினுட்ப நூல்களைப் படிப்பதற்கு நூலின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ள கலைச்சொல்லகராதி உதவக்கூடியது. <br />
<br />
• தகவல் மாசடைதல் நூல்கள் புனிதமானவை. எனவே நல்லதை, தேவையானதை மட்டுமே பதிவு செய்தல் வேண்டும் என்ற மனிதனின் மனப்பாங்கு மாறி இலாபம் தரும் உற்பத்திப் பொருளாக கருதும் மனப்பாங்கு உருவாகியதன் விளைவாக எதனையும் எப்படியும் அச்சிடலாம் என்ற வகையில் அதிகரித்த மலினப்பதிப்புகளின் உற்பத்தியானது சூழல் மாசடைதல் போல் தகவலிலும் மாசடைதலை ஜஐகெழசஅயவழைn pழடடரவழைஸெ உருவாக்கியிருப்பதன் காரணமாக தீயவற்றுக்குள் நல்லதைத் தேடிப்பிடிக்க வேண்டிய அறிவை வாசகனிடம் கோரி நிற்கிறது.<br />
<br />
• மொழி ஆங்கில மொழி இன்றும் மேலாதிக்கம் செலுத்துவதும் பெரும்பாலான தரவுத் தளங்கள் ஆங்கில மொழியை மையமாகக் கொண்டிருப்பதும் தாய்மொழிக் கல்வியில் தங்கியுள்ள வாசகனது தகவல் அணுகுகையை மட்டுப்படுத்துகின்றன. வேற்று மொழியில் பரிச்சியமின்மை தகவல் தேடும் ஆர்வத்தில் விரக்தி நிலையைத் தோற்றுவிப்பது மட்டுமன்றி தெளிவற்ற தன்மையையும் உருவாக்கும். கணினி யுகத்தில் மொழித் தடையானது மனிதனுக்கும் இயந்திரத்துக்குமிடையில், இயந்திரத்துக்கும் இயந்திரத்துக்குமிடையில், மனிதனுக்கும் மனிதனுக்குமிடையில், இயந்திரத்துக்கும் மனிதனுக்குமிடையில,; பொருத்தப்பாடின்மையையும் முரண்பாட்டையும், உருவாக்கும். இலக்கியங்களில் பயன்படுத்தப்படும் சொல்லலங்காரங்கள், கலைச்சொற்கள் போன்றன தகவலை விளங்கிக் கொள்வதில் இடர்ப்பாடுகளை ஏற்படுத்துகின்றன. <br />
<br />
முடிவுரை<br />
நூல்களுக்குள் நுழைவதற்கான சூழல் முழுக்க முழுக்க சமூகத்தின் மனப்பாங்கிலேயே தங்கியிருக்கிறது. பொதுவாகவே வாசிப்புப் பழக்கம் குறைந்த சமூகமாக இனங்காணப்பட்டிருக்கும் தமிழ்ச்சமூகத்தில் நூலுக்குள் நுழையும் செயற்பாடு ஒன்றில் கல்வித்தேவையின் பொருட்டு கட்டாயமாக்கப்பட்டதொன்றாக அல்லது நிர்ப்பந்திக்கப்பட்டதொன்றாக இருக்கின்றதேயன்றி இயல்பானதாக, சமூக மேம்பாட்டை மையப்படுத்தியதொன்றாக இன்னமும் வளரவில்லையென்றே கூறவேண்டும்.<br />
<br />
குறிப்புதவு நூல்கள்<br />
<!--[if gte mso 9]><xml>
<w:WordDocument>
<w:View>Normal</w:View>
<w:Zoom>0</w:Zoom>
<w:TrackMoves/>
<w:TrackFormatting/>
<w:DoNotShowPropertyChanges/>
<w:PunctuationKerning/>
<w:ValidateAgainstSchemas/>
<w:SaveIfXMLInvalid>false</w:SaveIfXMLInvalid>
<w:IgnoreMixedContent>false</w:IgnoreMixedContent>
<w:AlwaysShowPlaceholderText>false</w:AlwaysShowPlaceholderText>
<w:DoNotPromoteQF/>
<w:LidThemeOther>EN-US</w:LidThemeOther>
<w:LidThemeAsian>X-NONE</w:LidThemeAsian>
<w:LidThemeComplexScript>TA</w:LidThemeComplexScript>
<w:Compatibility>
<w:BreakWrappedTables/>
<w:SnapToGridInCell/>
<w:WrapTextWithPunct/>
<w:UseAsianBreakRules/>
<w:DontGrowAutofit/>
<w:SplitPgBreakAndParaMark/>
<w:DontVertAlignCellWithSp/>
<w:DontBreakConstrainedForcedTables/>
<w:DontVertAlignInTxbx/>
<w:Word11KerningPairs/>
<w:CachedColBalance/>
</w:Compatibility>
<w:BrowserLevel>MicrosoftInternetExplorer4</w:BrowserLevel>
<m:mathPr>
<m:mathFont m:val="Cambria Math"/>
<m:brkBin m:val="before"/>
<m:brkBinSub m:val="--"/>
<m:smallFrac m:val="off"/>
<m:dispDef/>
<m:lMargin m:val="0"/>
<m:rMargin m:val="0"/>
<m:defJc m:val="centerGroup"/>
<m:wrapIndent m:val="1440"/>
<m:intLim m:val="subSup"/>
<m:naryLim m:val="undOvr"/>
</m:mathPr></w:WordDocument>
</xml><![endif]--><br />
<!--[if gte mso 9]><xml>
<w:LatentStyles DefLockedState="false" DefUnhideWhenUsed="true"
DefSemiHidden="true" DefQFormat="false" DefPriority="99"
LatentStyleCount="267">
<w:LsdException Locked="false" Priority="0" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Normal"/>
<w:LsdException Locked="false" Priority="9" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="heading 1"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 2"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 3"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 4"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 5"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 6"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 7"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 8"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 9"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 1"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 2"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 3"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 4"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 5"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 6"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 7"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 8"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 9"/>
<w:LsdException Locked="false" Priority="35" QFormat="true" Name="caption"/>
<w:LsdException Locked="false" Priority="10" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Title"/>
<w:LsdException Locked="false" Priority="1" Name="Default Paragraph Font"/>
<w:LsdException Locked="false" Priority="0" Name="Body Text"/>
<w:LsdException Locked="false" Priority="11" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtitle"/>
<w:LsdException Locked="false" Priority="0" Name="Hyperlink"/>
<w:LsdException Locked="false" Priority="22" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Strong"/>
<w:LsdException Locked="false" Priority="20" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="59" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Table Grid"/>
<w:LsdException Locked="false" UnhideWhenUsed="false" Name="Placeholder Text"/>
<w:LsdException Locked="false" Priority="1" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="No Spacing"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" UnhideWhenUsed="false" Name="Revision"/>
<w:LsdException Locked="false" Priority="34" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="List Paragraph"/>
<w:LsdException Locked="false" Priority="29" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Quote"/>
<w:LsdException Locked="false" Priority="30" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Quote"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="19" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtle Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="21" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="31" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtle Reference"/>
<w:LsdException Locked="false" Priority="32" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Reference"/>
<w:LsdException Locked="false" Priority="33" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Book Title"/>
<w:LsdException Locked="false" Priority="37" Name="Bibliography"/>
<w:LsdException Locked="false" Priority="39" QFormat="true" Name="TOC Heading"/>
</w:LatentStyles>
</xml><![endif]--><!--[if !mso]><img src="//img2.blogblog.com/img/video_object.png" style="background-color: #b2b2b2; " class="BLOGGER-object-element tr_noresize tr_placeholder" id="ieooui" data-original-id="ieooui" />
<style>
st1\:*{behavior:url(#ieooui) }
</style>
<![endif]--><!--[if gte mso 10]>
<style>
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:10.0pt;
font-family:"Times New Roman","serif";}
</style>
<![endif]-->
<br />
<div class="MsoNormal" style="line-height: 125%; margin-left: .5in; mso-list: l0 level1 lfo1; text-indent: -.25in;">
<span style="font-size: 10.0pt; line-height: 125%;"><span style="mso-list: Ignore;">1.<span style="font: 7.0pt "Times New Roman";">
</span></span></span><span style="font-size: 10.0pt; line-height: 125%;">Harrod,L.M.
<b>Harrod`s librarians` glossary of terms used in librarianship documentation
and the book craft and reference book</b>. Compiled by Ray Prytherch,6<sup>th</sup>
ed..- London:
Gower,1987.</span></div>
<div class="MsoNormal" style="margin-left: .5in; mso-list: l0 level1 lfo1; text-align: justify; text-indent: -.25in;">
<span style="font-family: "akarathi"; font-size: 10.0pt; mso-bidi-font-family: Akarathi; mso-fareast-font-family: Akarathi;"><span style="mso-list: Ignore;">2.<span style="font: 7.0pt "Times New Roman";">
</span></span></span><span style="font-size: 10.0pt;">Licklider,J.C.R.
(1965),J E} <b>Libraries of the future</b>.Mass,MIT,Cambridge</span><span style="font-family: "akarathi"; font-size: 10.0pt;">.</span></div>
<div class="MsoNormal" style="margin-left: .5in; mso-list: l0 level1 lfo1; text-align: justify; text-indent: -.25in;">
<span style="font-family: "akarathi"; font-size: 10.0pt; mso-bidi-font-family: Akarathi; mso-fareast-font-family: Akarathi;"><span style="mso-list: Ignore;">3.<span style="font: 7.0pt "Times New Roman";">
</span></span></span><span style="font-size: 10.0pt;">Moyle.D.[1976] <b>The
Teaching of Reading</b>.
4<sup>th</sup> ed. London:
Ward Lock Educational, 1976.</span><span style="font-family: "akarathi"; font-size: 10.0pt;"></span></div>
<div class="MsoNormal" style="margin-left: .5in; mso-list: l0 level1 lfo1; text-align: justify; text-indent: -.25in;">
<span style="font-family: "akarathi"; font-size: 10.0pt; mso-bidi-font-family: Akarathi; mso-fareast-font-family: Akarathi;"><span style="mso-list: Ignore;">4.<span style="font: 7.0pt "Times New Roman";">
</span></span></span><span style="font-size: 10.0pt;">Oxford</span><span style="font-size: 10.0pt;"> English Dictionary</span><span style="font-family: "akarathi"; font-size: 10.0pt;"></span></div>
5. தில்லைநாயகம்இவே. இந்திய நூலக இயக்கம். <br />
<br />
ஸ்ரீகாந்தலட்சுமி,அ<br />
கல்விசார் நூலகர்,<br />
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்<br />
20-06-2006<br />
<br />
<span style="font-family: "akarathi"; font-size: 10.0pt;"></span>
Srikanthaluxmyhttp://www.blogger.com/profile/02621345440975786756noreply@blogger.com0