Saturday, February 22, 2014

பிரியம்


என் ஒவ்வொரு மலர்வும்
உனக்கென்றே ஆனது
ஒவ்வொரு புலர்வும்
நீ
எனக்காகவே
கண்விழித்த போதில்
பெரும்பொழுதை
என்னுடனே கழித்தபோதில்
நான் சோர்ந்த போதெல்லாம்
தெம்பூட்டியபோதில்
எனது ஒவ்வொரு உயிர்ப்பிற்காகவும்
தவமிருந்தபோதில்
இரவின் விழிப்பை நினைவூட்டும்
அந்த விழிகளின் பரபரப்பில்
என் மலர்ச்சியை கண்டபோதில்

ஒவ்வொன்றிலும் பக்குவம் இருந்தது.
பரந்தநோக்கும் தெரிந்தது

ஒவ்வொரு புலர்விலும்
முதல் முகம்
என்முகமாகவே இருக்க விரும்பினாய்.
விழிகளை மூடியபடி
'கணியம்  பார்த்து
என் அருகில் வந்து
உன் முதற் பார்வையை எனக்காக்குவதில்
என்னைத் தழுவுவதில் உனக்கொரு இன்பம்
.
 நீண்ட இடைவெளியின் பின்
மீண்டும் உன்னைப் பார்க்கிறேன்.
அதே முகம்,
அதே மகிழ்ச்சி
அதே பரிவு
அதே தழுவல்
இன்னொன்றும் கூட
ஒரு பொட்டுக் கண்ணீர்
செயலிழந்த விழிகளிலிருந்து

No comments: