Showing posts with label கருத்தூண். Show all posts
Showing posts with label கருத்தூண். Show all posts

Friday, February 07, 2014

கருத்தூண்



கருத்தூண் என்ற சொல்லின் எனது தெரிவுக்கு தற்போது வயது 15. இதனை மூன்று விதமாக பொருள் கொள்ளமுடியும்.

1. எண்ணக்கருக்களின் தூணாக அதாவது ஆய்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்ற பொருளை உணர்த்துகின்ற கரு+தூண் = கருத்தூண் (Pillar of Ideas) என்பது முதலாவது பொருள்.
2. மேற்கொள்ளப்படும் எந்தவொரு ஆய்வும் சமூகமட்டத்தை இலகுவாகச் சென்றடையும் பொருட்டு இலகுவாக செரிக்க வேண்டும் அதாவது கருத்தை வெளிப்படுத்தும் விதம் மிக மிக் எளிமையாக இருக்க வேண்டும் என்ற பொருளைக் குறிக்கின்ற கருத்து+ ஊண் = கருத்தூண்(Food for Thought) என்பது இரண்டாவது பொருள்
3. மனித இனத்தின் இரு கூறுகளில் புதிய  உயிரைச் சுமக்கும் வாய்ப்பு பெண்ணினத்துக்கு மட்டுமே உண்டு. மென்மை, இரக்கம், ஒழுங்கு போன்றவை பெண் தன்மை என்றும் வன்முறை, ஆக்கிரமிப்பு, வேகம் போன்றவை ஆண் தன்மை என்றும் சொல்லப்படுகின்றன. ஆணோ பெண்ணோ இரண்டு கூறிலுமே இந்த இரு தன்மைகளும் உண்டு. புதிய கருத்தின் பிரசவம் கூட அடுத்தவரை வார்த்தைகளால் நோகடிக்காத, தனது கருத்தே சரியென்று ஆதாரமின்றி வாதாடுவதாக, திணிப்பதா இல்லாது அனைவரது கருத்தையும் ஏற்று அதில் பொருத்தமானவைகள் அனைத்தையும் ஒன்றாக்கி சமூகத்துக்குப் பொதுவான கருத்தாக மாற்றுகின்ற  தன்மை உடையதாக இருக்க வேண்டும் என்ற கருத்துடைய கரு+ தூண் = கருத்தூண் என்பது மூன்றாவது பொருள்.

கருத்தூண் என்ற இந்த சமூக வலைத்தளமானது இந்த மூன்று அம்சங்களின் பிரதிபலிப்பாகத்தான் இருக்கவேண்டும் என்பதில் மிகவும் பிடிவாதமாகவும் இருக்கின்றேன்.