Showing posts with label நூலகம். Show all posts
Showing posts with label நூலகம். Show all posts

Monday, January 04, 2016

தகவல் வளங்கள்

யாழ். பல்கலைக்கழக நூலகத்தின் முதல் நிலைத் தகவல் வளங்கள்: ஒழுங்கமைப்பு, பயன்பாடு பராமரிப்பு



ஆய்வுச் சுருக்கம்

(அறிவியல் ரீதியில் நோக்கும் போது சமூகத்தின் அதி உயர் கல்வி நிறுவனமாக இருக்கின்ற பல்கலைக்கழகம் ஒன்றின் ஆய்வுத் தேவைக்கு அதிகமாக உதவுபவை முதல் நிலைத் தகவல் வளங்களே. எனினும் பொருளாதார நோக்கில் பார்க்கும் போது வளர்ச்சியடைந்த தேசங்களின் ஆய்வு முயற்சிகள் அதிக பொருட் செலவில் தரம் மிக்க நூல்கள், ஆய்வறிக்கைகள், பருவ இதழ்கள் போன்ற வடிவில்; எமது நூலகத்தை வந்தடைகின்ற அதே சமயம், வெளியீட்டுக்கான வாய்ப்பின்றி அல்லது வெளியீட்டுச் செலவை ஈடு கட்டும் வாய்ப்பின்றி பெறுமதி மிக்க முதல்நிலைத் தகவல் வளங்கள் சர்வ தேச தராதரத்துக்கு ஏற்ப பதிப்பிக்கப்படாமல் யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தில் காணப்படுகின்றன. கையெழுத்துப் பிரதிகளாக, செய்தித் தாள் கட்டுரைகளாக, சிறுநூல்களாக, சிறப்பு மலர்க் கட்டுரைகளாக இலை மறை காயாக இருக்கும் பிரதேச முக்கியத்துவம் வாய்ந்த சிறந்த ஆய்வு முயற்சிகளையும் அதன் முக்கியத்துவத்தையும், அவை பேணிப் பாதுகாக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் ஓரளவேனும் வெளிக்கொணர இக் கட்டுரை முயல்கிறது.)




அறிமுகம்

ஷஒரு நாட்டுக்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ வெளியிடப்பட்ட, வெளியிடப்படாத அனைத்து தகவலும் தகவல் வளங்கள்; எனப்படும்ஷ என தகவல் வளங்கள் என்ற பதத்தை வரைவிலக்கணப்படுத்தும் தன்மை காணப்படினும் கூட1 தகவல் சாதனங்களிலிருந்து பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படும் தகவலே பெரும்பாலும் வளம் என்ற பெயரால் குறிக்கப்படுகிறது. இவை பதிவேடுகளில் பதியப்பட்ட நூல்கள், பருவ இதழ்கள் போன்ற அச்சு வடிவ ஊடகங்களாகவோ அல்லது சுவடிகள், ஓவியங்கள் போன்ற அச்சு வடிவற்ற ஊடகங்களாகவோ அதுவுமன்றி தகவலைப் பரப்பும் வல்லமை மிக்க நிறுவனங்களாகவோ, தகவலை மூளையில் பொதிந்து வைத்திருக்கும் ஆற்றல் பெற்ற ஆராய்ச்சியாளர்கள,; அறிவியலாளர்கள் போன்ற மனித வளங்களாகவோ இருக்கலாம். தகவல் வளங்கள் அவற்றின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் முதல் நிலைத் தகவல் வளங்கள், இரண்டாம் நிலைத் தகவல் வளங்கள், மூன்றாம் நிலைத் தகவல் வளங்கள் என மூவகைப்படுத்தப்படுகின்றன 2.




உண்மையான ஆய்வு அபிவிருத்திகளை, அவற்றின் புதிய பிரயோகங்களின் விளக்கங்களை, அல்லது பழைய கருத்துக்களுக்கான புதிய விளக்கங்களை உடனுக்குடன் தாங்கி வரும் வெளியீடுகள் அனைத்தும் முதல்நிலைத் தகவல் வளங்கள் (Primary information resources) எனப்படுகிறது. ஆய்வாளர் ஒருவரால் உருவாக்கப்படுகின்ற புதிய தகவல்கள் அனைத்தும் இந்த முதல்நிலைத் தகவல் வளங்களின் ஊடாக குறிப்பிட்ட சமூகத்தைச் சென்றடைகிறது. ஒழுங்குபடுத்தப்படாத வளங்களாக இவை இருப்பதனால் இவற்றைப் பயன்படுத்துவது எளிதல்ல. இவற்றின் பூரண பயன்பாட்டிற்குப் பாவனையாளர் இரண்டாம் நிலைத் தகவல் வளங்களிலேயே பெருமளவில் தங்கியிருக்க நேரிடும். மிக முக்கியமான தகவல் மூலாதாரங்களாகக் கருதப்படும் இவ்வளங்கள்

• புதிய அபிவிருத்திகள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிவிப்பதன் மூலம் அத்துறை தொடர்பாக அதிக அறிவு நிலையில் இருக்க உதவுதல்,

• ஒரே மாதிரியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதைத் தடுத்தல்,

• புதிய தகவல்களை உருவாக்குவதற்கு ஏனையோர்களுக்கு உதவுதல் போன்ற வழிகளில் ஆய்வாளர்களுக்குப் உதவுகின்றன.

ஒரு குறிப்பிட்ட பொருட்துறையின் வளர்ச்சி வீதமானது அத்துறை சார்ந்து வெளிவரும் முதல் நிலைத் தகவல் வளங்களின் தொகையிலேயே பெருமளவு தங்கியுள்ளது. தனிப்பொருள் நூல்கள், அறிக்கைகள், ஆய்வுக்கட்டுரைகள், முதல்நிலைப் பருவ இதழ்கள், சிறு நூல்கள், காப்புரிமை இலக்கியங்கள், நியமங்கள், தடை செய்யப்பட்ட ஆவணங்கள், அரச வெளியீடுகள், கையெழுத்துப் பிரதிகள், சுவடிகள் போன்றவை முதல்நிலை தகவல் வளங்களாகக் கருதப்படுகின்றன.




1. பல்கலைக்கழக நூலகமும் முதல்நிலைத் தகவல் வளங்களும்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் சிறப்புக் கவனம் செலுத்தப்படும் முதல்நிலைத் தகவல் வளங்களாக நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள், சிறுநூல்கள், அறிக்கைகள், அரச ஆவணங்கள,; கையெழுத்துப் பிரதிகள், மற்றும் செய்தித் தாள்கள், செய்திக் கடிதங்கள், செய்தியறிக்கைகள், பருவ இதழ்கள், ஆண்டு மலர்கள் என்பவற்றை உள்ளடக்கிய தொடர் வெளியீடுகள்; போன்றவற்றைக் கொள்ள முடியும்.

இவற்றுக்குள் அரிய வளங்களாகவும் பெறுமதி மிக்கதாகவும் கருதப்பட்டு ஆவணக் காப்பகப் பகுதியில் பாதுகாக்கப்படும் முதல்நிலைத் தகவல் வளங்களின் எண்ணிக்கையை அட்டவணை 1 எடுத்துக் காட்டுகிறது. 3 இப்புள்ளிவிபரமானது 2004 யூலை வரை நூலகத்தால் பெற்றுக்கொள்ளப்பட்டதாகும்.




அட்டவணை 1

பொருட்துறை ஆய்வுக்கட்டுரை சிறு நூல்கள் மலர்கள் பருவ இதழ்(தொகுதி)

பொது 08 31 123 72 (299)

தத்துவம் 09 39 03 07(35)

சமயம் 24 889 221 21(46)

சமூக அறிவியல் 121 1178 431 29(205)

மொழி 32 140 02 01

அறிவியல் 23 102 06 16(103)

தொழினுட்பம் 27 172 10 32(111)

கலை 11 186 16 14(75)

இலக்கியம் 76 662 89 09(20)

வரலாறும் புவியியலும் 32 467 23 67(109)


மூலம்: புள்ளிவிபரப் பதிவேடு-ஆவணக்காப்பகப்பகுதி




1.1 ஆய்வுக்கட்டுரைகள் Dissertations

வழிகாட்டுபவரின் மேற்பார்வையின்கீழ் முதுநிலைப் பட்டத்துக்காக அல்லது கலாநிதிப் பட்டத்துக்காகப் பல்கலைக்கழகத்தை அல்லது கல்வி சார்ந்த நிறுவனமொன்றைச் சேர்ந்த மாணவர் ஒருவரால் மேற்கொள்ளப்படும் ஆய்வின் முடிவில் எழுதப்படும் அறிக்கையே ஆய்வுக் கட்டுரை எனப்படுகிறது. 4 உண்மையான ஆய்விற்கான சான்றுகளை இக்கட்டுரை உள்ளடக்க வேண்டும் என்பதுடன் குறிப்பிட்ட துறை சார்ந்த ஆய்வாளர்களுக்கு வேண்டிய முக்கிய ஆவணங்களாக இவை வடிவமெடுக்கின்றன. ஆய்வுக்கட்டுரையில் உள்ள சில முக்கிய தகவல்கள் பின்னர் முதல்நிலைப்பருவ இதழ்களில் அல்லது நூல்களில் வெளியிடப்படுவதெனினும் குறிப்பிட்ட சில தரவுகளுக்கு மூல ஆய்வுக்கட்டுரையிலேயே தங்கியிருக்க வேண்டும் என்பதனால் இவை முக்கியமான முதல்நிலைத் தகவல் வளங்களாக கருதப்படுகின்றன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற முதுமாணி, முது தத்துவமாணி, கலாநிதிப் பட்டம் போன்றவற்றுக்கான ஆய்வுமுயற்சிகள் அனைத்தும் ஆவணக்காப்பகப் பகுதியில் பாதுகாக்கப்படுகின்றன. இதைவிட தமிழ்மொழி, இலக்கியம் போன்ற துறைகளில் இந்திய பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் சிலவும் இங்கு சேர்க்கப்பட்டிருக்கின்றன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் மதிப்பீட்டுக்கென இந்தியப் பல்கலைக்கழகங்கள் சிலவற்றிலிருந்து ஆய்வுக்கட்டுரைகள் இங்கு அனுப்பி வைக்கப்படுவதே இதற்கான காரணமாகும். இத்துடன் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் இலங்கை சார்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் சிலவற்றின் ஒளிப்படப்பிரதியும் ஜீhழவழஉழிலஸ் இங்கு காணப்படுகிறது.

பொருட்துறை சார்ந்து இங்கு காணப்படும் ஆய்வுக்கட்டுரைகளின் எண்ணிக்கையை அட்டவணை 1 எடுத்துக்காட்டுகிறது. இங்கு சமூக அறிவியல் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளே(117) கூடுதலாகக் காணப்படுகின்றன. கல்வியியல் சார்ந்து மேற்கொள்ளப்படும் ஆய்வு முயற்சிகள்(69) அதிகமாக இருப்பதே இத்தகைய அதிகரிப்புக்குக் காரணமாகும். அறிவியல், தொழினுட்பம் சார்ந்த துறைகளில் ஆய்வுக்கட்டுரைகள் மிகவும் குறைவாகவே உள்ளன. 1990 களுக்குப் பின்னர் இத்துறைகளில் எவ்வித ஆய்வுக்கட்டுரைகளும் நூலகத்தினால் பெறப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 5




1.2 சிறு நூல்கள் Pamphlets

ஆவணக் காப்பகப்பகுதியின் மதிப்புக்குப் பெருமை சேர்க்கும் இன்னோர் முதல்நிலைத் தகவல் வளமாகக் கருதப்படுவது இங்கு ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் சிறு நூல்களாகும். நிரந்தரமாகக் கட்டப்படாத அச்சு வடிவ ஆக்கம் எதுவும் சிறுபிரசுரம் அல்லது சிறு நூல் என்ற பதத்தால் குறிப்பிடப்படுமெனினும் 6 சர்வதேச பட்டியலாளர் மகாநாட்டில் தீர்மானிக்கப்பட்டதன்படி ஆகக் குறைந்தது 5 பக்கங்கள் உடையதாகவும் 48 பக்கங்களுக்கு மேற்படாததாகவும் உள்ள பருவஇதழ் அல்லாத வெளியீடுகள் அனைத்தும் இவ்வகைக்குள் அடங்குகின்றன7. கட்டப்படாதபோதும் சில சிறு நூல்கள் அதிக பக்கங்களைக் கொண்டமைந்ததாகவும் நிரந்தரப் பெறுமதியுடையதாகவும் இருக்கக்கூடும். செய்முறைத் தொழினுட்பம், தொழிற்பயிற்சி, பிரயாணம், ஆராய்ச்சி முடிவுகள், புகழ்பெற்ற சொற்பொழிவுகள், செய்தியறிக்கைகள், கருத்து முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் கட்டுரைகள், நிகழ்கால விவகாரங்கள், அரசியல் விவகாரங்கள் போன்ற முக்கிய அம்சங்களைத் தாங்கிவரும் இவை ஆய்வாளர்களுக்கு மிகப் பெறுமதி வாய்ந்த தகவல் மூலங்களாக இருப்பதுடன், விசேட நூலகங்களில்; இவற்றிற்கே கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மிகக் குறைந்தளவு நூல்களே கிடைக்கக்கூடியதாக உள்ள பொருட்துறை சார்ந்த தகவல்களை வழங்குவதற்கு மிகப் பயனுள்ள தகவல் மூலமாக இவை உள்ளன.

பருவ இதழில் வெளி வருகின்ற முக்கிய கட்டுரைகளின் பிரதிகள், றோணியோவில் தட்டச்சு செய்யப்பட்ட பல்கலைக்கழக நினைவுப்பேருரைகள், செய்தித்தாள் துணுக்குகள், முக்கியமான கட்டுரைகளைக் கொண்ட பருவஇதழின் ஒற்றை இதழ்கள் போன்றவை இந் நூலகத்தில் கணிசமானளவுக்கு சேகரிக்கப்பட்டு நிலைக்குத்துக் கோப்புகளில் வகுப்பெண் ஒழுங்கில் பராமரிக்கப்படுகின்றன. இங்குள்ள சிறுநூல்களின் அண்ணளவான எண்ணிக்கையை அட்டவணை 1 தெளிவாகக் காட்டுகிறது. சமூக அறிவியல், இலக்கியம், சமயம் போன்ற துறைகளில் அதிகளவு சிறு நூல்கள் உள்ளன. அரசியல்(336), பொருளியல்(246), கல்வி(310) போன்ற துறைகளில் அதிகளவு சிறுநூல்கள் காணப்படுகின்றன.8

நூலகவியல் விதிமுறையின் படி சிறு நூல்களில் பெரும்பாலானவற்றை குறுங்கால எழுத்து மூலங்களாகக் கருதி காலத்துக்குக் காலம் அவற்றை நூல் இருப்பிலிருந்து நீக்கும் தன்மை பல நாடுகளில் வழக்கிலிருப்பினும் எமது சமூகத்தைப் பொறுத்தவரை இத்தகைய நடைமுறை பொருத்தமற்றதொன்றாகும். இங்கு அச்சிடுதற் தொழினுட்பமானது பொருளாதார ரீதியாக ஆக்ககர்த்தாக்களின் அறிவுருவாக்கத்திற்கு உதவும் நிலைக்கு இன்னும் வரவில்லை. இத்தகைய தன்மையானது பெறுமதி மிக்க ஆய்வு முயற்சிகளை சிறு நூல்களின் வடிவிலோ அல்லது கையெழுத்துப் பிரதிகளின் வடிவிலோ அதுவுமன்றி நிறுவன ரீதியாக இடையிடையே வெளியாகும் சிறப்பு மலர்களிலோ வெளியிடுவதற்கு நிர்ப்பந்திப்பதன் காரணமாக ஏனைய பிரதேசங்களைப் போன்று இங்கு இத்தகைய சிறுநூல்கள் குறுங்காலப் பெறுமதியுடையவையாகக் கருதப்படக்கூடிய வாய்ப்பு இல்லை என்பதுடன் இவை மிகக் கவனமாக பேணப்படவேண்டியதும் அவசியமாகும். வேறு எங்குமே கிடைத்தற்கரிய சிறுநூல்களின் மூலப் பிரதிகளும் இங்கு உண்டு. ஒளிப்படப்பிரதி எடுத்து வாசக பயன்பாட்டுக்கு விடப்பட முடியாதளவுக்கு மிகப் பாதிப்புற்று, நொருங்கும் நிலையிலுள்ள சில மூல நூல்களை அவற்றின் மூல வடிவத்தில் பேணக்கூடிய வகையில் வளர்ச்சியடைந்த தொழினுட்பமுறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு முறைகளை இங்கு கையாளவேண்டிய அவசியம் உண்டு.




1.3 சிறப்பு மலர்கள்

ஆராய்ச்சி நோக்கில் பார்க்கும்போது ஆய்வுக்கட்டுரைகளுக்கு அடுத்ததாக வாசகரின் பயன்பாட்டுக்கு உதவும் இன்னோர் முக்கிய வளமாக சிறப்பு மலர்கள் காணப்படுகின்றன. தனிப்பட்ட மனிதர்கள் அல்லது நிறுவனங்கள் சார்ந்து கொண்டாடப்படும் ஆண்டு விழா, பொன் விழா, வெள்ளி விழா போன்ற சிறப்பு மலர்களாகவோ அல்லது நினைவு மலர்களாகவோ இவை இருக்கலாம். இவற்றிலிருந்து வேறுபட்டதாகக் குறிப்பிட்ட துறை சார்ந்த நிறுவனங்களால் வருடாவருடம் வெளியிடப்படும் ஆண்டு மலர்கள், பருவ இதழ்களாகக் கருதப்பட்டு பருவ இதழ்களுடன் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அட்டவணை 1 இன்படி சமூக அறிவியல் சார்ந்த மலர்களே இங்கு அதிகம் காணப்படுகின்றன. சமூக அறிவியல் துறையில் உள்ள கிட்டத்தட்ட 431 மலர்களில் 390 மலர்கள்; கல்வி நிறுவனம் சார்ந்து வெளியிடப்பட்டவையாகும். சமயத்துறையில் காணப்படும் கிட்டத்தட்ட 222 மலர்களில் பெரும்பாலானவை இந்து சமய ஆலயங்கள் சார்ந்து வெளியிடப்படும் மலர்களாகும். பொது ஆண்டு மலர்களில் கணிசமானவை சனசமூக நிலையங்கள், இதழியல் துறை சார்ந்தவை. இலக்கிய ஆண்டு மலர்களும் கணிசமானளவுக்குக் காணப்படுகின்றன.




1.4 பருவ இதழ்கள் Periodicals

குறிப்பிட்ட தலைப்பினை உடையதாகவும் ஒழுங்கான கால இடைவெளியில் வெளியீடு செய்யப்படுவதாகவும் இறுதி இதழ் எப்போது வெளிவரும் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்க முடியாததுமான வெளியீடே பருவ இதழ் எனப்படுகிறது.9 செய்தியறிக்கைகள், சஞ்சிகைகள், செய்திக்கடிதங்கள், சங்க நடவடிக்கைக் குறிப்பேடுகள் போன்ற பெயர்களில் வெளியாகும் வெளியீடுகள் அனைத்தும் பருவ இதழ்கள் என்ற பொதுப் பெயருக்குள் அடங்குகின்றன. பெரும்பாலான ஆரம்ப இலக்கியங்கள் யாவும் பருவ இதழ் வடிவிலேயே வெளியாகின்றன. அறிவியல் ரீதியான தகவல்களைப் பரிமாற்றம் செய்வதற்கான பிரதான தொடர்பு சாதனமாக கருதப்படும் இவை உண்மையான ஆய்வுகளை உடனுக்குடன் அறிக்கைப்படுத்துகின்றன. பருவ இதழ்களை அவற்றின் கால அடிப்படையில் நாளிதழ்கள்;, வார இதழ்கள், இருவார இதழ்கள், மாத இதழ்கள், இரு மாத இதழ்கள், காலாண்டு இதழ்கள், அரையாண்டு இதழ்கள்;, ஆண்டு இதழ்கள் என வகைப்படுத்தலாம்.

பருவ இதழ்களை அவற்றின் உள்ளடக்கத்தைக் கொண்டு பொதுப்பருவ இதழ்கள், பொருட் பருவ இதழ்கள் என இருவகையாகப் பிரிக்கலாம். குறிப்பிட்ட ஒரு பொருட்துறை சார்ந்ததாக இல்லாமல் அரசியல், ஆக்க இலக்கியங்கள், விளையாட்டு, சினிமாச் செய்திகள், விளம்பரங்கள் போன்றவற்றை உள்ளடக்கி வெளிவருபவை பொதுப்பருவ இதழ்களாகும். எ-டு இந்தியா ருடே, தாயகம், மல்லிகை போன்றவை. காத்திரமான ஆக்கங்களைக் கொண்டிராது செய்தித் துணுக்குகள் பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவற்றைத் தாங்கி வரும் பொதுப் பருவ இதழ்கள், சஞ்சிகைகள் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. பொருட்துறை சார்ந்து வெளியிடப்படும் பருவ இதழ்கள் பொருட் பருவ இதழ்கள் என அழைக்கப்படுகின்றன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தினால் தற்போது பெற்றுக் கொள்ளப்படும் பருவ இதழ்களின் மொத்த எண்ணிக்கையை அட்டவணை 2 தருகிறது.10




அட்டவணை 2


ஈட்டல் முறை வெளியூர் உள்ளுர் மொத்தம்
தமிழ் ஆங்கிலம் தமிழ் ஆங்கிலம்



கொள்வனவு 22 18 28 44 112

அன்பளிப்பு 10 217 23 48 298

பரிமாற்றம் - 05 - 06 11

மொத்தம் 32 240 51 98 421

(மூலம்: புள்ளிவிபரப் பதிவேடு, பருவ இதழ்ப்பகுதி)




கொள்வனவு, அன்பளிப்பு, பரிமாற்றம் என்ற மூன்று வழிகளில் 421 பருவ இதழ்கள் பெற்றுக் கொள்ளப்படுகின்றன. இதில் 149 பருவ இதழ்கள் உள்ளுரிலிருந்தும் 272 பருவ இதழ்கள் வெளியூரிலிருந்தும் பெற்றுக்கொள்ளப்படுகின்றன. அன்பளிப்பு மூலமான பருவ இதழ்களே கூடுதலாக இருப்பதைப் புள்ளிவிபரம் எடுத்துக் காட்டுகிறது. சுவெற்ஸ் ஜளுறுநுவுளுஸ தகவல் நிறுவனமானது கடந்த ஆண்டுகளில் நிதிப் பற்றாக்குறை காரணமாக இடைநிறுத்தப்பட்ட பருவ இதழ்களில் கணிசமானளவு தொகையினை அன்பளிப்பாக வழங்க முன் வந்தமையே அன்பளிப்பில் ஏற்பட்ட அதிகரிப்புக்குக் காரணமாகும். பொதுவாகக் கடந்த காலங்களில் 200க்கும் மேற்பட்ட பருவ இதழ்கள் கொள்வனவு மூலமாக பெற்றுக் கொள்ளப்பட்டபோதும் 2001ம் ஆண்டிலிருந்து நிதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக கொள்வனவு மூலமான பருவ இதழ்களின் எண்ணிக்கை சரிபாதியாகக் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பருவ இதழ்களின் பொருட்துறை சார்ந்த வகைப்பாட்டை அட்டவணை 3 எடுத்துக் காட்டுகிறது.

அட்டவணை 3

பொருட்துறை எண்ணிக்கை

பொது 67

தத்துவம் 08

சமயம் 24

சமூக அறிவியல் 111

மொழி 22

அறிவியல் 60

தொழினுட்பம் 63

கலை 18

இலக்கியம் 06

புவியியலும் வரலாறும் 42

(புள்ளிவிபரப் பதிவேடு - 2004, பருவ இதழ்ப்பகுதி)




1.5 அறிக்கைகள் Reports

குறிப்பிட்ட செயற்திட்டம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பான தகவல்களை ஆய்வுப்பணியாளர்கள் தமது துறைசார்ந்த ஆர்வலர்களுக்குப் பயன்படத்தக்கவகையில் தொகுத்துத் தயாரிக்கப்படும் வெளியீடே அறிக்கைகள் எனப்படுகிறது11. நடைமுறையில் இருக்கும் ஆய்வு அபிவிருத்தித் திட்டங்களின் முடிவுகளை வெளியிடுவதே அறிக்கைகளாகும். ஒரு நாட்டில் அரசாங்கத்தின் அதிகாரத்துடன் வெளியிடப்படும் நம்பகரமான, அதிகாரபூர்வ வெளியீடுகளாக இவை இருப்பதுடன் உள்ளுர், பிரதேச, தேசிய, சர்வதேசிய ரீதியாக குறைந்த விலையில் இவை வெளியீடு செய்யப்படுகின்றன. பெரும்பாலான அறிக்கைகள் வெளியீடு செய்யப்படுவதோ அல்லது பருவ இதழ்க் கட்டுரைகளின் தரத்திற்கு பதிப்பிக்கப்படுவதோ இல்லை. அறிக்கைகளில் தொகுக்கப்படும் பெறுமதி வாய்ந்த தகவல்கள் பின்னர் பருவ இதழ்க் கட்டுரைகளில் சேர்த்துக்கொள்ளப்படுவதன் காரணமாக அறிக்கைகளின் காலம் ஒருசில வருடங்களுக்கே மட்டுப்படுத்தப்பட்டிருப்பினும் அந்த ஒருசில வருடங்களுக்கும் மிகப் பெறுமதி மிக்க தகவல் வளமாக இவை கருதப்படுகின்றன. ஏனெனில் பருவ இதழ்க் கட்டுரைகள் பூரணப்படுத்தப்பட்ட பணிகளையும் வெற்றிகரமாக முடிக்கப்பட்ட பணிகளையும் மட்டுமே சேர்த்துக் கொள்ளும் அதேசமயம் அறிக்கைகளோ ஆய்வுகளின் ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டங்களையும் பிரதிபலிப்பதுடன் நின்றுவிடாது இடைநிறுத்தப்பட்ட ஆய்வுப்பணிகளையும் தோல்வியில் முடிவடைந்த ஆய்வுப்பணிகளையும் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கான முக்கிய தகவல் மூலமாகக் கருதப்படுகினறன.; இவற்றை பின்வரும் மூன்று பரந்த பிரிவுகளுக்குள் வகைப்படுத்த முடியும். 12

• அரச உதவியுடன் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுக்கான அறிக்கைகள் (இராணுவ விஞ்ஞானத்துறை சார்ந்த அறிக்கைகள்)

• தொழிற்துறை உதவியுடன் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுக்கான அறிக்கைகள். இவை வர்த்தக பாதுகாப்புக்கு உட்பட்டவையாகவும் நிறுவனத்துக்கு வெளியே கிடைக்க முடியாதவையாகவும் உள்ளன.

• கல்விசார் ஆய்வுகளுக்கான அறிக்கைகள். இவை எந்தவொரு பாதுகாப்பு அம்சங்களுக்கும் உட்பட்டவையல்ல.




அரச ஆவணப்பகுதியின் கணிசமானளவு பகுதி அறிக்கைகளுக்கென்றே ஒதுக்கப்பட்டிருக்கிறது. தொகை மதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தின் புள்ளி விபரப் பதிவேடுகள், மத்திய வங்கி போன்ற வங்கி சார்ந்த அறிக்கைகள், மற்றும் திணைக்கள அறிக்கைகளை இப்பகுதி கணிசமானளவு கொண்டிருக்கிறது.

1.6 வெளியிடப்படாத ஆவணங்கள் Unpublished resources

கையெழுத்துப் பிரதிகள், ஆய்வுகூடக் குறிப்பேடுகள், நாட்குறிப்பேடுகள், தனிப்பட்டவர்களுக்கு எழுதப்படும் முக்கிய கடிதங்கள், நிறுவனங்கள்pன் கோப்புகள், உள்ளக ஆய்வு அறிக்கைகள், உருவப்படங்கள், வாய்மொழி வரலாறுகள், நாணயங்கள் போன்ற வெளியிடப்படாத தகவல் வளங்களும் முதல்நிலைத் தகவல் வளங்களாகக் கருதப்படுகின்றன. குல சபா நாதன், க.சி.குலரட்ணம் போன்ற அறிஞர்களின் பெறுமதி மிக்க கையெழுத்துப்பிரதிகள் முதல் நிலைத் தகவல் வளங்களின் காத்திரத் தன்மைக்கு மேலும் மெருகூட்டுகின்றன.

1.7 அரசாங்க வெளியீடுகள்; Government documents

அரசாங்கத்தினால் வெளியிடப்படுகின்ற உத்தியோக பூர்வமான வெளியீடுகள் அரசாங்க வெளியீடுகள் எனப்படும். சட்டங்கள் விசேட ஆணைக்குழு அறிக்கைகள் போன்றவற்றை வெளியிடுகின்றன. மசோதாக்கள், சட்டங்கள், பாராளுமன்ற விவாதங்கள், பருவகால ஆணைப்பத்திரங்கள்,நீலப்புத்தகம் போன்ற ஆவணங்கள் அரச ஆவணப்பகுதியில் ஒழுங்குபடுத்தப்பட்டுன.

1.8நூலுருவற்ற சாதனங்கள்

சுவடிகள், ஓவியங்கள்,படங்கள், வரைபுகள், நுண்படங்கள், கணினி சாதனங்கள், பத்திரிகைத் துணுக்குகள் கையெழுத்துப் பிரதிகள் போன்றவையும் முதல்நிலைத் தகவல்களைத் தருபவை. யாழ்.பல்கலைக்கழக நூலகத்தில் இவற்றின் சேகரிப்பு மிகவும் குறைவு என்றே சொல்ல முடியும்.

2.ஒழுங்கமைப்பு
2.1 ஆவணக் காப்பகப்பகுதி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தின் வாசகரது ஆய்வுத் தேவையைப் பூர்த்தி செய்கின்ற பிரதான பிரிவாகக் கருதப்படுவது அதன் ஆவணக்காப்பகப்பிரிவும் அரச வெளியீடுகளுக்கான பிரிவும் ஆகும். ஷஉள்ளடக்கத்தின் பெறுமதியைக் கருத்தில் கொண்டும், சான்றாக காட்டும் பொருட்டு உருவமைப்பில் பாதிப்பு ஏற்படுவதை கூடுதலான வரை தவிர்ப்பதை கருத்தில் கொண்டும்; ஒரு ஆவணத்தை அதன் மூல வடிவில் நிரந்தரமாகப் பேணுவதற்கென விசேடமாக வடிவமைக்கப்படும் அமைப்பு அல்லது அமைப்பின் ஒரு பகுதியே ஆவணக்காப்பகமாகும்ஷ என்ற வரைவிலக்கணத்திலிருந்து அப்பாற்பட்டதாக, கிடைத்தற்கரிய நூல்களின் இருப்பிடமாக, இலங்கை சார்ந்து வெளியிடப்படும் ஆக்கங்களின் சேமிப்பிடமாக, இப்பிரிவு தொழிற்படுகிறது. முதல்நிலைத் தகவல் வளங்களின் கணிசமான பகுதியை உள்ளடக்கியிருக்கும் இப்பகுதியை ஆவணக்காப்பகம் என அழைப்பதைவிட ஆராய்ச்சிப்பகுதி என அழைப்பது கூடுதல் பொருத்தமானது. நூல்கள், ஆய்வுக்கட்டுரைகள், சிறப்பு மலர்கள், சிறு நூல்கள், பருவ இதழ்கள், வரலாற்று முக்கியத்துவம் மிக்க நூல்கள், கையெழுத்துப் பிரதிகள் போன்ற பெறுமதிமிக்க வளங்களை இப்பகுதி தன்னகத்தே கொண்டிருக்கிறது. பொதுவாக இலங்கை தொடர்பாக இலங்கையர்களாலும் வெளிநாட்டு அறிஞர்களாலும் எழுதப்பட்ட நூல்களே இப்பகுதியில் பராமரிக்கப்படுகின்றது..

ஆய்வுக்கட்டுரைகள் அனைத்தும் ஆவணக்காப்பகப் பிரிவில் மரத்தாலான கண்ணாடி அலுமாரிகளில் பொருட்துறை சார்ந்து ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. சிறு நூல்களில் ஓரளவு பகுப்பாக்கம்இ பட்டியலாக்கம் செய்யப்பட்டு பரந்த பொருட் தலைப்புகளி;ன் கீழ் சிறுபிரசுரப் பேழைகளில் ஒழுங்குபடுத்தப்பட்டு மரத்தாலான கண்ணாடி அலுமாரிகளில் வைக்கப்பட்டிருக்கின்றன. கணிசமானளவு சிறுநூல்களுக்கு பட்டியல் பதிவுகள் மேற்கொள்ளப்படவேண்டியுள்ளது. பொருட்துறைகளுக்கிடையிலான தொடர்புத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு அத்தகைய ஆக்கங்களை ஒன்றாகச் சேர்த்துக் கட்டி அதற்கு நூல் வரவுப்பதிவெண் கொடுத்து நூல் இருப்புப் பகுதியில் சேர்க்கும் முயற்சி கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டதெனினும் வாசகரின் பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டு நோக்கின் இவை சிரமம் தரும் ஒன்றாகவே இனங்காணப்பட்டிருக்கிறது. சிலசமயங்களில் பொருட்துறைகளுக்கிடையிலான தொடர்புத் தன்மை, நூலின் அளவு போன்றவற்றைக் கருத்தில் கொள்ளாமலும்; பல சிறு நூல்கள் ஒன்றாகச் சேர்த்து கட்டப்பட்டிருக்கும் தன்மையும் இனங்காணப்பட்டிருக்கிறது. ஒரு தாளில் இருக்கும் தகவல் கூட ஆராய்ச்சி நோக்கில் மிகப் பெறுமதி வாய்ந்ததாக இருப்பதனால் இவை தனித்தனியாக அதற்குரிய பொருட்துறை சார்ந்த நிலைக்குத்துக் கோப்புகளில் பேணப்படவேண்டியது அவசியமாகும். இடப் பெயர்வுக்கு முன்னர் ஒழுங்காக கோவைப்படுத்தப்பட்டு பட்டியலிடப்பட்டு பருவ இதழ்ப்பகுதியின் பராமரிப்பில் இருந்த பெறுமதி மிக்க கையெழுத்துப் பிரதிகளின் ஒரு தொகுதியை ஆவணக் காப்பகப் பகுதியில் ஒழுங்கமைக்கும் முயற்சி அண்மையில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.




2.2 அரச ஆவணப் பகுதி

பாராளுமன்ற விவாதங்கள், மசோதாக்கள், சட்டங்கள், பருவகால ஆணைப்பத்திரங்கள், பாராளுமன்றத் தொடர்கள், நீலப்புத்தகம் போன்றவை அரச ஆவணப் பகுதியில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன. ஆவணக்காப்பகப்பகுதியுடன் இணைந்ததாக இயங்கும் அரச ஆவணப்பகுதியின் 50 வீதத்துக்கும் மேற்பட்ட இடத்தை நிரப்பும் அறிக்கைகள் வாசகரின் பயன்பாடு கூடிய வளமாகவும் கருதப்படுகின்றன. பொதுவாக இலங்கை சார்ந்து வெளியிடப்படும் அறிக்கைகளே இங்கு வைக்கப்பட்டுள்ளது. றழசடன னநஎநடழிஅநவெ சநிழசவஇ hரஅயn னநஎநடழிஅநவெ சநிழசவ போன்ற வெளிநாட்டு அறிக்கைகள் இருப்புப் பகுதி, உசாத்துணைப் பகுதி போன்றவற்றில் பராமரிக்கப்படுகின்றன.

2.3 பருவ இதழ்ப்பகுதி

பருவ இதழ்கள் அனைத்தும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தின் தளப்பகுதில் அமைந்திருக்கும்; பருவ இதழ்ப் பகுதியில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன. நடப்புப் பருவ இதழ்கள் வாசகர் சேவைப் பகுதியுடன் இணைந்ததாகவும், பழைய இதழ்கள் அதற்கென தனியாக இயங்கும் பருவ இதழ் இருப்புப் பகுதியிலும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. கட்டப்பட்ட பருவ இதழ்கள் அனைத்தும் நூலாக கருதப்பட்டு வரவுப் பதிவெண் கொடுக்கப்பட்டு நூல் இருப்புப் பகுதியில் தனியாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. செய்திக் கடிதங்கள் அதற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சிறுபிரசுரப்பேழைகளில் வைக்கப்பட்டு பருவஇதழ்ப்பகுதியில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன.

செய்தித் தாள்களும் பருவ இதழ்ப்பகுதியின் பராமரிப்பிலேயே இருக்கின்றன. இவற்றில் இலங்கை சார்ந்து வெளியிடப்பட்ட பருவ இதழ்கள், ஷகசடதபறஷ போன்ற மிகப் பழமை வாய்ந்த தமிழ்ப்பருவ இதழ்கள் பாதுகாக்கப்படவேண்டிய அரிய வளங்களாகக் கருதப்பட்டு ஆவணக்காப்பகப்பகுதியில் வைக்;கப்பட்டிருக்கின்றன. ஆவணக்காப்பகப் பகுதியில் பேணப்படும் முக்கிய பருவ இதழ் தலைப்புகளின் எண்ணிக்கையையும் அவற்றின் மொத்தத் தொகுதிகளின் எண்ணிக்கையையும் அட்டவணை 1 தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. இது தவிர பருவ இதழின் முதலாவது பிரதி கிடைக்கும் சமயங்களில் இவை அரிய நூலுக்கான பெறுமதி கொடுக்கப்பட்டு ஆவணக்காப்பகப் பிரிவில் பாதுகாக்கப்படுகின்றன.

2.4 நூலுருவற்ற சாதனங்களுக்கான பகுதி

நூலுருவற்ற சாதனங்கள் தனிப்பிரிவில் வைத்துப் பாதுகாக்கப்படவேண்டும் என்ற தீர்மானம் அண்மையில் மேற்கொள்ளப்பட்டு தனி அறையொன்றில் இதற்கான ஆரம்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. ஆவணக்காப்பகப்பிரிவில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சுவடிப்பேழைகள், திரு. கனகசபை அவர்களினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட இருபதுக்கும் மேற்பட்ட ஓவியங்கள், பருவ இதழ்ப்பகுதியினால் வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் பருவ இதழ்களுடன் இணைத்து அனுப்பப்படும் நுண் தாள்கள், இந்து சாதனம் போன்ற செய்தித்தாள்களைப் பேணும்பொருட்டு 1980களின் பிற்பகுதியில் நூலக நிர்வாகத்தின் கீழ் உருவாக்கப்பட்ட நுண்படங்கள் போன்றவற்றை அடித்தளமாகக் கொண்டு நூலுருவற்ற சாதனங்களுக்கான தனிப்பிரிவு ஒன்று உருவாக்கம் பெற்றுள்ளது. தற்போது பட்டியலாக்கப்பகுதியில் வைத்துப் பராமரிக்கப்படும் நவீன இலத்திரனியல் சாதனங்களான சீடிரோம், நெகிழ் வட்டுகள், வீடியோப் படப்பிரதிகள் போன்றவையும் காலப்போக்கில் இதனுடன் இணைக்கப்படக்கூடிய வாய்ப்புண்டு;.

3.பயன்பாடு

முதல் நிலைத் தகவல் வளங்கள் எனப்படுபவை பெரும்பாலும் ஆராய்ச்சிக்கு உதவுபவை. எனவே ஆராய்ச்சியாளர்களே இவற்றின் வாசகர்களாவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பு இறுதி வருட மாணவர்களதும் பட்டப்பின்படிப்பு மாணவர்களதும் தேவைகளை கணிசமானளவுக்கு பூர்த்தி செய்பவையாக இந்த முதல் நிலைத் தகவல் வளங்கள் காணப்படுகின்றன. 2003 ஆகஸ்ட் தொடக்கம் 2004 யூலை வரையான காலப்பகுதியில் அரச ஆவணங்கள் தவிர்ந்த ஆவணக்காப்பகப்பகுதியின் முதல்நிலைத் தகவல் வளங்களைப் பயன்;படுத்திய வாசகர்களது எண்ணிக்கை 2311 ஆகும். 13 நூல்களும்(1158) ஆய்வுக் கட்டுரைகளுமே (1092) இங்கு அதிகளவு பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. சிறப்பு மலர்களுக்குரிய வாசகர்களாக 36 பேர் இனங்காணப்பட்டிருக்கின்றனர்.

சமயம், சமூக அறிவியல் ஆகிய பொருட் துறைகளைச் சார்ந்த மாணவர்கள் இவற்றை அதிகமாகப் பயன்படுத்தும் தன்மை இனங்காணப்பட்டுள்ளது. கடந்த யூலை மாதத்தில் பொருட்துறை சார்ந்த மாணவர்களின் பயன்பாட்டை அட்டவணை 4 எடுத்துக் காட்டுகிறது. 14

அட்டவணை 4

வாசகர் பயன்பாடு பொருட்துறை வாசகர் எண்ணிக்கை

பொது 12

தத்துவம் 59

சமயம் 61

சமூக அறிவியல் 137

மொழி 10

அறிவியல் --

தொழினுட்பம் 13

கலை 41

இலக்கியம் 35

வரலாறு 75

(வாசகர் பதிவேடு-2004 ஆவணக் காப்பகப் பகுதி)




3.1 ஆய்வுக் கட்டுரைகள்

ஆய்வுக் கட்டுரைகளின் பிரதான வாசகர்களாகக் கருதப்படுபவர்கள் பட்டப்பின்படிப்பை மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்களே. கல்வியியல் துறையில் முதுமாணிப்படிப்பை மேற்கொள்பவர்களும், டிப்ளோமா பயிற்சி நெறியை தொடர்பவர்களும் ஆய்வுக்கட்டுரை எழுதுவதற்கான ஆய்வு முறையியல் அறிவைப் பெறும் பொருட்டு ஆய்வுக்கட்டுரைகளைப் பயன்படுத்துகின்றனர். மொழி, தமிழ் இலக்கியம் சார்ந்த ஆய்வுக்கட்டுரைகள் பெரும்பாலும் ஆராய்ச்சியாளர்களினால் தகவல் பெறும் நோக்கத்துக்காக பயன்படுத்தப்படுகின்றது. கடந்த யூலை மாதத்தில் மட்டும் வாசகரால் 271 ஆய்வுக்கட்டுரைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்து சமயம்(75), புவியியல்(58), பொருளியல்(33), கல்வி(28), சமூகவியல்(26), இலக்கியம்(18), ஏனையவை(33) என்ற அடிப்படையில் ஆய்வுக் கட்டுரைகளின் பயன்பாடு இனங்காணப்பட்டிருக்கிறது. இந்து தத்துவம், அபவிருத்திப் பொருளியில் போன்ற துறைகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆய்வுக் கட்டுரைகளை முதலாம், இரண்டாம், மூன்றாம் வருட பட்டப்படிப்பு மாணவர்கள் பாடப்புத்தகமாக பயன்படுத்தும் தன்மை அதிகரித்துக் கொண்டு செல்லும் போக்கு அண்மைக்காலங்களில் இனங்காணப்பட்டிருக்கிறமை பயன்பாடு சார்ந்து இனங் காணப்படும் இன்னோர் முக்கிய அம்சமாகும். ஆரம்பத்தில் ஆய்வுத் தேவைக்கு உதவும் வகையில் பட்டப்படிப்பு இறுதி வருட மாணவர்களுக்கும் பட்டப்பின்படிப்பு மாணவர்களுக்குமே ஆய்வுக்கட்டுரைகளை பயன்படுத்துவதற்கான அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. குறிப்பாகத் தத்துவம், சமயம், புவியியல் சார்ந்து இப்போக்கு இனங்காணப்பட்டிருக்கிறது. இத்தகைய தன்மையானது எதிர்க்கணிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. ஆய்வுக் கட்டுரைகளுக்கான மேலதிக பிரதிகளைப் பெற்றுக் கொள்வது சாத்தியமற்றதாகையால் அரிய நூலாகக் கருதப்பட்டுப் பாதுகாக்கப்படும் ஒரேயொரு பிரதியும் அதிக பாவனை காரணமாக விரைவிலேயே பழுதடைந்து அடுத்த சந்ததிக்குப் பயன்படாமல் போகும் ஆபத்துண்டு. ஷநூல்கள் பாவனைக்கேஷ என்ற நூலகவியல் விதியானது பிரதிகள் பெறப்படமுடியாத சாதனங்களுக்கும், மிகப் பழமை வாய்ந்த அரிய நூல்களுக்கும், உள்ளடக்கத்தில் பெறுமதி இழக்காமல் அதேசமயம் கால மாற்றத்தால் உருவமைப்பில் உடைந்து போயிருக்கும் பெறுமதி மிக்க நூல்களுக்கும் எவ்வளவு தூரம் பொருத்தமானது என்பது மதிப்பீடு செய்யப்படவேண்டியதொன்றாகும்.




3.2 சிறு நூல்கள்

யாழ் பல்கலைக்கழக நூலகத்தில் சிறு நூல்களைப் பொறுத்து மிகப் பெறுமதி வாய்ந்த வளமாக கருதப்படும்; அதேசமயம் இவற்றுக்கான வாசகர்; பயன்பாட்டை விரல் விட்டு எண்ணக்கூடியளவிற்கு ஓரளவேனும் அறியப்படாத வளமாகவே இவை இருக்கின்றன. வாசகரினால் ஒரு தடவை அறியப்பட்டுவிடின் பின்னர் தொடர்ந்து அவரால் பயன்படுத்தப்படும் அளவுக்கு இதன் ஆய்வுப் பெறுமதி அதிகமாகும். அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள் முதற்கொண்டு முக்கியமான நூல்கள் வரை இவை பலதரப்பட்டதாக அமைகின்றன.




3.3 பருவ இதழ்கள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தின் மொத்த நிதி ஒதுக்கீட்டில் கிட்டத்தட்ட 90 வீதமானது பருவ இதழ் கொள்வனவுக்கே ஒதுக்கப்படுவதிலிருந்து இதன் முக்கியத்துவத்தை கண்டுகொள்ள முடியும். இவற்றில் வெளிவரும் தகவல்கள் நூல்களில் உள்ளவற்றிலும் பார்க்கப் புதியவையாகும். பல்கலைக்கழகத்தின் அனைத்து மட்ட வாசகரதும் பாடவிதானம், ஆராய்ச்சி, பொழுதுபோக்கு, போன்றவை தொடர்பாக உடனடித் தகவலை வழங்கும் வளங்களாக இவை இருக்கின்றன. ஆய்வுத் தகவல்களை வழங்கும் முதல்நிலைப் பருவ இதழ்கள் என்ற வகையில் இங்கு வெளிநாட்டு ஆய்வு முயற்சிகளை வெளிக் கொணருகின்ற வெளியூர்ப் பருவ இதழ்களின் ஈட்டலே அதிகமாக உள்ளது. உள்ளுர் ஆய்வு முயற்சிகளுக்கு அடிப்படையை வழங்குதல், வழிகாட்டுதல் என்பவற்றுடன் இவற்றின் பயன்பாடு மட்டுப்படுத்தப்பட்டுவிடுகிறது. உள்ளுர் பருவ இதழ்களைப் பொறுத்து பெரும்பாலானவை ஆய்வு முயற்சிகளைப் பெரிதும் உள்ளடக்காத, தகவல்களைத் தொகுத்து வழங்குகின்ற இரண்டாம் நிலைப் பருவ இதழ்களாகவோ அல்லது இலக்கிய வெளியீடுகளாகவோ இருப்பதனால் ஆய்வு முயற்சிக்கு இவை வழங்கும் பங்களிப்பு என்பது மட்டுப்படுத்தப்பட்டதாகவே இனங்காணப்பட்டிருக்கிறது. செய்தித் தாள்கள் ஆய்வு முயற்சிகளுக்குப் பெரும் உறுதுணையாக இனங்காணப்பட்டிருக்கின்றன. ஆண்டு மலர்கள் பலதரப்பட்ட அறிஞர்களதும் கட்டுரைகளை உள்ளடக்கியிருப்பதனால் ஆராய்ச்சியாளருக்குப் பெரிதும் பயன்படுவதாய் உள்ளன. பெருந்தொகை செலவழித்து அச்சுவடிவில் கொண்டு வருவதற்கான பொருளாதார மார்க்கமோ அதைச் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்போ குறைவாக இருக்கின்ற சமூகம் ஒன்றின் ஆய்வு முயற்சிகளில் கணிசமானளவைப் பதிவாக்கும் வாய்ப்பை இத்தகைய மலர் வெளியீடுகளே வழங்குகின்றமையால் இவை அதிக பயன்பாட்டுக்குரிய வளமாகவும் பேணிப் பாதுகாக்கவேண்டிய வளமாகவும் இனங்காணப்பட்டிருக்கின்றன.




3.4 அறிக்கைகள்

அறிக்கைகள் மிக முக்கியமான முதல் நிலைத் தகவல் வளமாகும். குறிப்பிட்ட நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் ஆய்வு நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களைப் பெற உதவுதல், குறிப்பிட்ட செயற்திட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பான விபரங்களை பெற உதவுதல், குறித்த துறையில் தோல்வியில் முடிவடைந்த செயற்திட்டங்களின் விபரங்களை வழங்குதல், குறித்த துறையில் அண்மைக்கால முன்னேற்றங்களை அறிய உதவுதல் போன்ற நன்மைகளை இவை வழங்குகின்றன. பொதுவாக அறிக்கைகள் புள்ளி விபரத் தகவலைப் பெற்றுக்கொள்ளுமுகமாகப் பயன்படுத்தப்படுவதனால் பெரும்பாலும் பொருளியல், புவியியல் ஆகிய துறைகளைச் சார்ந்த மாணவர்களே இதனை அதிகம் பயன்படுத்துகின்றனர்.




4. பராமரிப்பு

யாழ் பல்கலைக்கழக நூலகத்தின்; முதல்நிலைத் தகவல் வளங்களில் கிட்டத்தட்ட அனைத்துமே தாளை அடிப்படையாகக் கொண்டவையாகும். தகவல் வளங்களில், குறிப்பாக தாளை அடிப்படையாகக் கொண்ட நூலுருச்சாதனங்களில் ஏற்படும் பௌதிக ரீதியிலான பாதிப்பு அண்மைக்காலங்களில் நூலக தகவல் விஞ்ஞான துறையின் பிரதான தொழிற்றிறன்சார் விவகாரங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. 20ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலேயே தகவல் தொழினுட்ப உலகுக்குள் மனித சமூகம் நுழைந்துவிட்டபோதும் வடிவம், எழுத்து இரண்டிலும் நெகிழ்வுத் தன்மை கொண்டதாக, சிறியதாக, பாரமற்றதாக, விரும்பிய இடத்துக்கு எடுத்துச் செல்லக் கூடியதாக, முக்கிய அம்சங்களை வெட்டிச் சேகரிக்கக்கூடியதாக, பல பிரதிகள் எடுக்கக்கூடியதாக, தேவை முடிந்ததும் தூக்கி வீசக் கூடியதாக இருக்கக் கூடிய ஒரேயொரு சாதனம் நூலாகத் தான் இருக்க முடியும்15 என குறிப்பிடப்படும் அளவுக்குத் தாளை அடிப்படையாகக் கொண்ட சாதனங்களின் பயன்பாடு தகவல் யுகம் ஒன்றில் சுலபமாக மறைந்துவிடக் கூடிய அல்லது மறக்கப்பட்டு விடக்கூடிய வாய்ப்பு இல்லை என்றே சொல்ல முடியும். பொதுவாக தகவல் வளங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை உள்ளக காரணிகள், வெளியகக் காரணிகள் என இரு பெரும் பிரிவாக பிரிக்கலாம். உள்ளகக் காரணிகள் என்பவை தகவல் வளங்களின் பௌதிக வடிவமைப்புடன் தொடர்புடையது. வெளியகக் காரணிகளி;ல் உயிரியல் காரணிகள் பௌதிக இரசாயனக் காரணிகள், சூழல் காரணிகள், பேரழிவுகள் என்பவை முக்கியமானவை. 16




4.1 பௌதிக வடிவமைப்பு

.தாள்களுக்கு அழிவை ஏற்படுத்தும் பிரதான காரணி தாளில் செறிந்திருக்கும் அமிலத்தன்மையாகும். தாள்களின் நிரந்தரத்தன்மை தாளில் காணப்படும் அமிலத்தின் அளவில்ஜிர்ஸ தங்கியிருக்கிறது. வெளிறச் செய்தலுக்குப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள், மை வகைகள், காற்று அசுத்தமாக்கிகள், அமிலப்பரவல் போன்றவற்றால் தாளில் அமிலத்தன்மை உருவாகிறது. இந்த அமிலம் இறுக்கமான செலுலோசை சாதாரண அணுத்திண்மங்களாக உடைத்துத் தாளைப் பலவீனப்படுத்துகிறது. இது தவிர உயர் அமிலத்தன்மை உள்ள பொருள்களிலிருந்து அமிலத்தன்மை குறைந்த அல்லது இல்லாத பொருட்களை நோக்கி அமிலம் நகரமுடியும் என்பதால் அமிலத்தன்மையற்ற தாள்கள் கூட காலநிலை மாறுபாடுகளாலும் அமிலப்பொருட்கள் அருகில் இருப்பதன் மூலமும் அமிலத்தன்மையுள்ளதாக மாறலாம். ஓரு நூலில் இணைக்கப்படுகின்ற செய்தித்தாள் துணுக்கு விரைவிலேயே தானும் நிறம் மாறி நூலையும் மண்ணிறமாக மாற்றிவிடுவது இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். இதுமட்டுமன்றி ஈரப்பத விகிதத்தின் ஏற்ற இறக்கத்தினால் தாள்கள் பலதரப்பட்ட வீதத்தில் நீரை உறுஞ்சும் போதும், வெளிவிடும் போதும், தாள்களில் உள்ள நார்ப்பொருட்கள் விரிந்து சுருங்கும் போதும் ஏற்படும் உள்ளக அழுத்தங்கள் சாதனங்களில் நீண்டகால விளைவை ஏற்படுத்துகின்றன. நன்கு கட்டப்பட்ட நூலொன்றின் கோணலடைந்த நூல் மட்டை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இங்கு காணப்படும் தாளை அடிப்படையாகக் கொண்ட சாதனங்களில் கணிசமானவை அமிலத் தன்மை கூடிய தரங்குறைந்த தாள்களாகவே உள்ளன. ஆவணக்காப்பகப்பகுதியில் பாதுகாக்கப்படும் சாதனங்களில் கணிசமானவை மஞ்சள் நிறமுள்ள, நொருங்கும் தன்மை வாய்ந்த நூல்களாகவே இனங்காணப்பட்டுள்ளன. சூரிய ஒளி, அதிக வெப்பம் போன்றவற்றிலிருந்து மர அலுமாரிகள் ஓரளவுக்குக் காப்பு வழங்குகின்ற போதும், சீற் கூரையிலிருந்து நேரடியாகத் தாக்கும் வெப்பமும் மழை ஒழுக்குகளும் ஈரப்பத விகிதத்தில் சடுதியான ஏற்ற இறக்கங்களை கொண்டு வந்து நூலின் அழிவை வேகப்படுத்துவது தவிர்க்க முடியாதாக மாறியிருக்கிறது. ஆவணக்காப்பகப்பகுதியின் சமநிலையற்ற ஈரப்பத விகிதத்தைக் கட்டுப்படுத்துவதற்கேற்ற வகையில் குளிரூட்டல் வசதி மிக அவசியமாகும். செய்தித்தாள் பகுதியிலுள்ள அனைத்து வளங்களும் அதிக வெப்பம் காரணமாகவும் தரங்குறைந்த தாளில் உருவாக்கப்பட்டமையாலும் மஞ்சள் நிறமடைந்து மிகப் பாதிப்புற்ற நிலையில் காணப்படுகின்றன.




4.2 உயிரியல் காரணிகள்:-

• மனிதர்கள்:-ஆவண விரோதிகளில் மிகவும் ஆபத்தானதும், அறிவுசார் ரீதியில் அழிவை ஏற்படுத்தவல்லதுமான உயிரியாகக் காணப்படுவது ஆறறிவு படைத்த மனித உயிரி என்பதையே தகவல் விஞ்ஞானத் துறையின் அனுபவ அறிவு இனங்கண்டிருக்கிறது. மனித உயிரியால் ஏற்படுத்தப்படும் பாதிப்பு உற்பத்தியாளன், பாவனையாளன், பாதுகாவலன் என்ற மூன்று தன்மைகளின் அடிப்படையில் ஏற்படுகிறது. 17 இலாப நோக்கம் கருதிய மனிதனது உழைப்பும் முயற்சியும் இணைந்து நீண்ட நார்ப் பொருளைக் கொண்ட கனதியான நீடித்து உழைக்கக்கூடிய தாள்களின் உற்பத்தியிலிருந்து தரங்குறைந்த குறுங்கால வாழ்வுடைய தாள்களின் உற்பத்திக்கு வித்திட்டமை, தகவல் சாதனங்களுக்கு பொறிமுறை ரீதியிலும் இரசாயன ரீதியிலும் அழிவை ஏற்படுத்தும் ஒளிப்படப் பிரதியாக்கமுறை, நூலகங்களுக்குள்ளே வடிவமைக்கப்படும்; குடிநீர், வசதிகள் போன்றவை உற்பத்தி சார்ந்து ஏற்படும் மனிதப் பாதிப்பாக உள்ளது. இங்கும் கூட அமிலத் தன்மையைப் பரிசோதிப்பதற்கான தொழினுட்ப வசதியோ, அல்லது அவற்றை கூடிய விலை கொடுத்து வாங்கக்கூடிய நிதி வசதியோ இல்லாத காரணத்தால் தரங்குறைந்த தாள்களில் வெளியான நூல்களே அதிக இடத்தை நிரப்புகிறது. ஆவணக்காப்பகப்பகுதியிலுள்ள சாதனங்களும், பருவ இதழ்ப்பகுதியிலுள்ள சாதனங்களும் இரவல் எடுத்துச் செல்ல முடியாததாகையால் இவற்றுக்கான ஒளிப்படப் பிரதியாக்கப் பாவனை மிக அதிகமாகும்.

பாவனையாளர்கல்வி தொடர்பான போதிய அறிவின்மையால் நூலக இறாக்கைகளிலிருந்து நூலின் முதுகுப்புறத்தைப் பலவந்தமாக இழுத்து எடுத்தல், நூலை விரித்து வைத்து அதன் மேல் முழங்கைகளால் அழுத்தியபடி வாசித்தல், பக்க ஓரங்களை இறுதியாகப் படித்;த அடையாளத்துக்காக மடித்துவிடுதல், நூலின் பக்கங்களை கீழிருந்து மேலாக தட்டுவதன் மூலம் பக்கங்களைப் புரட்டுதல், படுத்திருந்து ஒரு கையால் பிடித்தபடி மறுகையால் பக்கங்களைப் புரட்டுதல் போன்ற கவனமற்ற கையாள்கையும் நூல் இரவல் பெறும் போது பிழையான பெயர்களைக் கொடுத்தல், அடையாள அட்டைகளைத் தவறான முறையில் பயன்படுத்தல், ஆவணங்களிலுள்ள பக்கங்கள், படங்கள், வரைபடங்கள் என்பவற்றை வெட்டியெடுத்தல், ஆவணங்களில் எழுத்துக்களின் கீழ்க் கோடிடுதல், பக்க ஓரங்களில் எழுதுதல், கொழுப்பு எண்ணெய்க்கறைகளை ஏற்படுத்துதல் போன்ற திட்டமிட்ட வகையில் ஏற்படுத்தும் பாதிப்புகளும் இங்கு அதிகமாகும்.

நூலின் பாதுகாவலர் என்ற வகையில் பணிநிலை அலுவலர்கள் நூல் தாங்கிகளுக்குள் நூல்களைப் பலவந்தமாகச் செலுத்த முனைதல், நூல் தாங்கிகள் இன்றி நூல்களைச் சாய்ந்த நிலையில் இறாக்கைப்படுத்தல்;, நூல்களை மிக நெருக்கமாக இறாக்கைப்படுத்துதல் போன்றன தாள்கள் கிழிவதற்கும், நூல் மட்டைகளின் கட்டுத் தளர்வதற்கும் ஏதுவாகிறது. நூல் வண்டிகள் இன்றி அல்லது மேல் மாடிகளுக்கு எடுத்துச் செல்வதற்கான வசதிகள் இன்றி நூல்களைக் கைகளில் காவிச் செல்லுதல் காரணமாக நூல்கள் கீழே விழுந்து கிழிபடுதல் தவிர்க்க முடியாததாக உள்ளது. நூல்களை இரவல் வழங்கும் செய்முறையில் நூல்களின் பின்புற அட்டைகளின் உட்பகுதியில் பின்புறப் பலம் கொடுக்காது திகதி முத்திரை இடும் போது ஆவணங்களின் கட்டு விட்டுப்போக வாய்ப்பு ஏற்படுகிறது.

தகவல் அமைப்பின் தலைமை அலுவலரினால் ஆவணங்களைப் பேணுதல் தொடர்பாக சரியான கொள்கை வகுப்போ, திட்டமிடலோ மேற்கொள்ளப்படாதுவிடின் அதுவும் திட்;டமிட்ட ஆவண விரோதச் செயலாகவே கருதப்படுகிறது. மிகக்குறைந்த கட்டுப்பாடுகளுடன் தகவல் வளங்கள்; வாசகரின் பாவனைக்கு விடப்படுமாயின் ஆவண மோசடியோ, களவோ, தவறான பாவனையோ தவிர்க்கப்படமுடியாததாகவே இருக்கும்.

• பேருயிரிகள்:-இலங்கை போன்ற வெப்பவலய நாடுகளில் ஆவணங்களுக்கு நேரடிப்பாதிப்பை உண்டு பண்ணும் காரணிகளாக இவை காணப்படுகின்றன. அடிக்கடி பாவனையில் இல்லாத நூல்களும், இருட்டறையில் வைக்கப்படும் நூல்களும் பேருயிரிகளின் தாக்கத்திற்கு அதிகம் உட்படுகின்றன. இந் நூலகத்தில் பேருயிரிகள் என்ற வகையில் இராமபாணம்;(ளுடைஎநசகiளா), அந்துப்பூச்சி(ஆழவாள), கறையான்(வுநசஅவைந)இ கரப்பான் (ஊழஉமசழயஉhநள) புத்தகப்புழு (டீழழமறழசஅ), புத்தகப்பேன்(டீழழம டiஉந) போன்றவற்றால் ஏற்படும் பாதிப்பு கூடுதல் இனங்காணப்படுகிறது. புகையூட்டல் போன்ற பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ளாமை காரணமாக இராமபாணம், அந்துப்பூச்சி போன்றவற்றின் தாக்கத்தால் ஆரம்பகாலங்களில் சாதனங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டு போகின்றது. மர அலுமாரிகளும், தற்போது பயன்படுத்தப்படும் பூச்சி உரூண்டை, மலத்தியோன் போன்ற பூச்சி கொல்லிகளும் கட்டுப்படுத்த முடியாதளவுக்குப் பரவிச் செல்லும் பேருயிரிகளின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு கொடுப்பது என்பது சாத்தியமற்றது. தளப்பகுதியின் வெடிப்புகளிலிருந்து வெளிக்கிளம்பும் கறையான்களுக்கு எவ்வாறு ஈடு கொடுப்பது என்பது பருவ இதழ்ப்பகுதியின் பிரதான பிரச்சனைகளில் ஒன்றாக மாறியிருக்கிறது.

• நுண்ணுயிரிகள்:-இவை ஒன்றில் பஞ்சு போன்ற படையாகவோ, மஞ்சள், பச்சை, கறுப்பு நிற வண்ணங்கள் நிறைந்த வடிவமைப்பாகவோ, தொப்பளங்கள் போன்றோ படர்ந்திருக்கும். இவை படர்ந்துவிட்டால் அகற்றுவது மிகவும் கடினமாகும். வெப்பநிலை, மிதமான ஈரப்பதன், பனி, கடும் இருட்டு, ஊட்டச் சத்துக்கள் போன்ற சூழல் காரணிகள் பூஞ்சண உருவாக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் துணை செய்கின்றன. நூலக சாதனங்களிற்குக் காலம் முழுவதும் நாசம் விளைவிக்கும் உயிரிகளாக இவை கருதப்படுகின்றன. தாள்களில் மண்ணிறப் புள்ளிகள் முதலில் உருவாகி பின் சாம்பல் நிறப்புள்ளிகளாக நிறமாற்றம் பெற்றிருப்பதைக் கொண்டு அவற்றை நுண்ணுயிரிகள் தாக்கியிருப்பதை அறியமுடியும்.




4..3 சூழல் காரணிகள்

தகவல் அமைப்பு ஒன்று அமைந்திருக்கும் இடமும் ,அங்குள்ள காலநிலையும் ஆவண வளங்களின் அழிவுக்குக் கணிசமான பங்களிப்பை வழங்குகின்றன. மாசடைதலானது திண்ம, திரவ, வாயு, ஆவி வடிவில் உருவாகலாம். பலதரப்பட்ட கைத்தொழில் செய்முறைகள், விபத்துகள், தகவல் அமைப்பின் உள்ளக செயற்பாடுகள், மின்னல், பூகம்பம், காட்டுத்தீ போன்ற சடுதியான இயற்கை நிகழ்வுகள், விலங்குகள், தாவரங்களின் இறப்புப் போன்ற மெதுவாக நடைபெறுகின்ற தொடர் செய்முறைகள் போன்றவற்றால் மாசடைதல் உருவாகிறது. தூசி, அழுக்கு, புகை, காற்று, உப்புத் துணிக்கைகள் போன்ற அசுத்தமாக்கிகளும், வாயுப் பொருட்களும் ஈரத்தன்மை போன்ற சாதாரண காரணிகளும் அழிவை ஏற்படுத்துகின்றன.18

நூலக சாதனங்களில் அதிகம் பரவிக் கிடப்பது தூசியாகும்.; நூலக இறாக்கைகள், சாதனங்கள், தளபாடங்கள் அனைத்தையும் இது ஆக்கிரமித்திருக்கிறது. ஆவணக்காப்பகப் பகுதி, அரச ஆவணக் காப்பகப் பகுதி என்பவை மர அலுமாரிகளைப் பயன்படுத்துவதனூடாக அசுத்தமாக்கிகளிலிருந்து கூடுதல் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்கிறது. எனினும் தாளை அடிப்படையாகக் கொண்ட சாதனங்கள் தமக்குள்ளேயே தூசியை உருவாக்கும் வல்லமை கொண்டமையால் அடிக்கொருதரம் இவை துப்பரவு செய்யப்படாதுவிடின் இதுவே நூற் பாதிப்பின் பிரதான காரணியாக அமைந்து விடும் அபாயம் உண்டு. ஊழியர் பற்றாக்குறையானது திறந்த இறாக்கைகளில் வைக்கப்பட்டிருக்கும் எண்ணுக்கணக்கற்ற பருவ இதழ்களைக் கொண்ட பருவ இதழ்ப்பகுதியினை தூசிப் படலமாக மாற்றியிருக்கிறது.




5. முடிவுரை

முதல்நிலைத் தகவல் வளங்கள் அனைத்தும் ஆய்வு முயற்சியில் ஈடுபட்டிருக்கும் எந்த நிறுவனத்துக்கும் ஆதாரமாக இருப்பவை. நூல் விநியோகஸ்தர் மூலமாகப் பணம் கொடுத்துப் பெற்றுக் கொள்ள முடியாதவை. தனிப்பட்ட ரீதியிலும் குழுவாகவும் சேகரிக்கப்படவேண்டியவை. பிரதேச முக்கியத்துவம் மிக்கவை. தனிக் கவனம் எடுத்து பாதுகாக்கப்படவேண்டியவை. இந்த நூலகத்தில் முதல்நிலைத் தகவல் வளங்கள் பெரும்பாலும் அறியப்படாத வளமாகவே இருக்கின்றன. முதல் நிலைத் தகவல் வளங்களின் அளவையும் அதன் தரத்தையும் கொண்டே ஆய்வு நிறுவனம் ஒன்றின் தரம் அளவிடப்படுகிறது. எனவே இவற்றின் சேகரிப்பு எவ்வளவுக்கெவ்வளவு முக்கியமோ அவ்வளவுக்கு இவற்றின் பராமரிப்பும் முக்கியமானதாகும்..




அடிக்குறிப்புகள்
Rajagopalan,T.S and Rajan,T.N. Agenda for National Information Policy.Handbook of Libraries,Archives & Information centres in India. vol.3-Information policies,systems and networks(1986),Information Technology Publications,New Delhi,p24.
Krishankumar.(1984),Reference services,Vikas,New Delhi,p98-103.
Library Statistics of the Archives&Government documents(2004)
Harrods,L.M.(1987).op.cit.
Library Statistics of the Archives&Government documents(2004)
Philipps,Eva,(1990),Documentation made easy: Vieweg,Wiesbaden,p106
Harrods,L.M(1987).opcit.,p580.
Readers record (2003-4),Archives
Harrods,L.M(1987).Ibid.,p596
Gs;sptpgug; gjpNtL>gUt ,jo;g; gFjp
Parker,C.C,and Turley,R.V(1975), Information sources in science and technology, Butterworths,London,p112.
Ibid
Readers record (2003-4),Archives
Ibid.
Licklider,J.C.R. (1965). Libraries of the future.Mass,MIT,Cambridge.
Harvey,Ross. Preservation in Libraries: Principles,strategies and practices for Librarians. London: Bowker,1993.
Ibid.
Pasce,M.W. (1988),Impact of environmental pollution on the preservation of archives and records: a RAMP study:UNESCO,Paris,p27










(Primary Information resources available at Library, University of Jaffna. Arrangement, Use & maintenance. [Cinthanai.vol.xiv, no.3; Nov. 2004)

பாடசாலை நூலகங்கள்

பாடசாலை நூலகங்கள் 

புதுயுகம் தரும் பெரும் பொறுப்புகள்



புது யுகம்

இது ஒரு தகவல் தொழினுட்ப யுகம். எல்லோர்க்கும் எல்லாம் என்ற ஆதிப் பொதுவுடமைத் தத்துவத்தின் அடிப்படையில் ஆரம்பித்த மனிதனது சமூக வாழ்வு விவசாயத்தை முதன்மையாகவும் நிலத்தை பிரதான மூல வளமாகவும் கொண்ட கைத்தொழிலுக்கு முற்பட்ட சமூகம் ஒன்றையும், கைத்தொழிலை முதன்மையாகவும் இயந்திரத்தை பிரதான மூல வளமாகவும் கொண்ட கைத்தொழில் சமூகம் ஒன்றையும், ஆய்வு நடவடிக்கைகளை முதன்மையாகவும் அறிவை பிரதான மூல வளமாகவும் கொண்ட கைத்தொழிலுக்குப் பிற்பட்ட சமூகம் ஒன்றையும் கடந்து முழுக்க முழுக்க தகவலைச் சுற்றியே பின்னப்பட்ட, தகவல் தொழிற் துறையை முதன்மையாகக் கொண்ட தகவல் சமூகம் ஒன்றில் தற்போது நடைபயில்கிறது.ஷ அறிவே ஆற்றல் என்ற புகழ் பெற்ற வாசகம் கைத்தொழில் சமூகத்துக்கு உரியதெனில் ஷதகவலே ஆற்றல் என்ற புது வாசகம் மூன்றாவது ஆயிரியத்தின் நுழைவாயிலுக்குப் பொருத்தமானது. 1980களில் கருக்கொண்ட தகவல் யுகத்தின் தோற்றப்பாடு 1990களில் வீச்சடைந்து இன்று உலகின் மூலைமுடுக்கெல்லாம் ஊடுருவியுள்ளது. மின்னாமல் முழங்காமல் ஓய்ந்த விவசாயப் புரட்சிக்கும,; மின்னி முழங்கி ஓய்ந்த கைத்தொழில் புரட்சிக்கும் அடுத்ததாக மனித சமூகம் சந்திக்கும் மாபெரும் புரட்சியாகக் கருதப்படுவது தகவல் புரட்சியாகும்.

தகவல் புரட்சிக்கு அடித்தளமாக அமைபவை கணினிகள். கணித்தல் செயற்பாடுகளுக்;கு உதவுவதற்கான கருவியாகக் கண்டுபிடிக்கப்பட்ட கணினி இன்று தனது ஐந்தாவது தலைமுறையில் உலகத்தை உள்ளங்கைக்குள் அடக்கக்கூடிய சர்வ வல்லமைமிக்க சக்தியாக உருவெடுத்துள்ளது. கணினித் தொழினுட்பம், தொலைதொடர்புத் தொழினுட்பம், கட்புல செவிப்புல தொழினுட்பம், நுண்பிரதியாக்கத் தொழினுட்பம் என்பன இணைந்த தகவல் தொழினுட்பச் சூழல் ஒன்று உருவாகியுள்ளது. வீடுகள் முதற்கொண்டு அலுவலகங்கள் வரை எங்கும் கணினி மயம். வீதிகள் தோறும் கணினிப் பயிற்சி நிலையங்கள். வேலைக்;கு உதவும் கருவியாக, அடுத்தவருடன் தொடர்பு கொள்ளும் தொலைபேசியாக, செய்தி அறிய உதவும் செய்தித் தாள்களாக,, அறிவைப் பெருக்க உதவும் நூலகமாக, பொருட்களை விற்க வாங்க உதவும் விற்பனைப் பிரதிநிதியாக, பொழுதுபோக்க உதவும் தொலைக்காட்சியாக என்று மனித வாழ்வின் அனைத்து தேவைகளையும் சிறிய கணினித் திரைக்குள் சாதிக்க இணையம் உதவுகிறது. தகவல் உருவாக்கத்தினதும் பெறுதலினதும் அளவிலும் வகையிலும் ஒவ்வொரு தேசத்தினதும் பொருளாதார அரசியல் சமூக சூழலானது பாதிக்கப்பட்டுள்ளது. உலகை வடிவமைக்கும் ஆற்றல் பெற்ற சக்தியாக உருவெடுத்துள்ள தகவலை அணுகுதல் பகிர்தல் பயன்படுத்தல் என்பவற்றில் வெற்றி பெற்ற ஓரு உலகில் நாம் வாழ்கிறோம்.

மனித இனம் தோன்றிய காலம் முதற் கொண்டு தன்னைச் சுற்றியுள்ளவை மீதான அவதானிப்புகளும், அவ் அவதானிப்புகளை பரிசோதனைக்குள்ளாக்கி தீர்வு காண முயலும் மனித மூளையின் ஆற்றலும், தான் பெற்ற அறிவை அடுத்துவரும் பயன்படுத்தும் வகையில் காலத்துக்குக் காலம் கிடைத்த எழுது பொருட்களில் பதிந்து வைக்கும் மனித சிந்தனையும் இணைந்ததால் தோற்றம் பெற்ற எண்ணற்ற மனித சிந்தனைப் பதிவேடுகளை அனைவரும் பயன்படுத்துவதற்கேற்ற வகையில் சேகரித்து ஒழுங்கமைத்து பாதுகாத்து பாவனைப்படுத்தும் பணியில் பல தகவல் நிறுவனங்கள் தோற்றம் பெற்றுள்ளன. எனவே நூல்களின் பாதுகாத்தல் அதற்கும் சற்று மேலே சென்று நூல்களை இரவல் கொடுத்து வாங்கும் பணியை செய்தல் என்ற நிலையிலிருந்து மாறி உருவத்திலும் உள்ளடக்கத்திலும் சிக்கல் வாய்ந்த கட்டமைப்;பைக் கொண்டதாக மாறியுள்ள தகவல் சாதனங்களை சிறந்த முறையில் கையாளும் பணிக்கு நூலகங்கள் மாறவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறன. அந்த வகையில் புதுயுகத்தின் பரிமாணங்களை உள் வாங்கவேண்டிய தேவை பாடசாலை நூலகங்களுக்கும் இருப்பது காலத்தின் கட்டாயமாகும்.




புதிய போக்குகள்

ஆகக் குறைந்து வகுப்பறை ஒன்றையே நூலகமாக கொண்ட பெரும்பாலான பாடசாலைகளில் மட்டுமன்றி நூலக வசதியை ஓரளவு கொண்ட தரம் கூடிய பாடசாலைகளிலும் கூட புதிய கட்டடம் ஒன்று அவசர அவசரமாக எழும்பிக் கொண்;டிருக்கிறது. சிலது பூரணப்படுத்தப்பட்டுள்ளது. சில முடியும் தறுவாயிலுள்ளது. சிலவற்றுக்கு அடித்தளம் போடப்படுகிறது... பாடசாலையில் கற்றல் இலக்குகளையும் செயல்முறைப்படுத்தக்கூடிய நோக்கங்களையும் பூர்த்தி செய்வதற்கான முக்கிய மூலக்கூறாக பாடசாலை நூலக கற்றல் வள நிலையம ஒன்றின் முக்கியத்துவத்தையும் பெறுமதியையும் கல்வி உயர்கல்வி அமைச்சானது உணர்ந்துள்ளதன் வெளிப்பாடே இவை. பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகளுக்கு கிட்டவாக நிற்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து ஆங்கில மொழியில் நூலக தகவல் விஞ்ஞான டிப்ளோமா பயிற்சி நெறியை கல்வியியல் கல்லூரிகள் தொடங்கியிருக்கின்றன. பயிற்சி முடித்து வெளியேறியுள்ள முதல் தொகுதி மாணவர்கள் பாடசாலைகளுக்குள் புகுந்து நூலகவியல் கற்பிப்பதற்கான வாய்ப்பின்றி ஆங்கிலம் கற்பித்துக் கொண்டிருக்கின்றனர். பாடசாலைகளுக்குள் நூலக உணர்வை ஏற்படுத்துவது மட்டுமன்றி நூலகக் கல்வியை பாடத் திட்டத்தில் புகுத்துவதற்கான தயார்நிலையின் சின்னங்களாக இவர்கள் விளங்குகின்றனர். பாடசாலைகளில் பட்டதாரி ஆசிரியர் அல்லது நீண்ட கால சேவை அனுபவம் உள்ள ஒருவர் ஆசிரிய நூலகராக நியமிக்கப்பட்டு அவர்களுக்கான ஐந்து நாள் செயலமர்வுகளை நூலக தகவல் விஞ்ஞானத்துக்கான தேசிய நிறுவனமும் மாகாண கல்வித் திணைக்களமும் இணைந்து பிரதேச ரீதியாக நடத்தியதைத் தொடர்ந்து பாடசாலை நூலகங்களை புனரமைக்கும் முயற்சிகள் துரிதமாக நடக்கின்றன. 2002 ல் கொழும்பில் நடத்திய ஷபாடசாலை நூலகத்தை ஒழுங்கமைத்தலும் முகாமை செய்தலும்ஷ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஐந்து நாள் செயலமர்வின் வெளிப்பாடாக, இது தொடர்பான கைநூல் ஒன்றும் வெளியிடப்பட்டிருக்கிறது. சர்வதேச நூலக தினதத்தை முன்னிட்டு கடந்த ஒக்டோபர் 21-27 வரை அனைத்து பாடசாலைகளிலும் நூலக வாரம் கொண்டாடப்பட்டு கருத்தரங்குகள் கண்காட்சிகள் சொற்பொழிவுகள் என நூலக செயற்பாடுகள் களைகட்டியிருந்தது மட்டுமன்றி சிறந்த முறையில் நூலக வாரத்தை கொண்டாடியவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கல்வித்திணைக்களம் கௌரவித்த நிகழ்வும் நடந்தேறியிருக்கிறது.




புதிய பொறுப்புகள்

தானங்களில் சிறந்தது வித்தியாதானம் எனப்படும் கல்வி.. கல்வியின் நோக்கங்கள் பல எனினும் அதன் பிரதான நோக்கம் சுயசிந்தனையுள்ள மனிதனை உருவாக்குதல். சுயசிந்தனையுள்ள மனிதனை உருவாக்குவதற்கு அறிவுசார் சிந்தனை அவசியம்.. ஷஎதனையும் உற்றுணர்ந்து, சீர்தூக்கிப் பார்த்து, நிதானித்து, எதிர் விளைவுகள் பக்க விளைவுகளை அடையாளங் கண்டு ,பயன்விளைவு ஆராய்ந்து, அனுகூலங்கள் பிரதிகூலங்களை கருத்தில் கொண்டு, ஒன்றைக் கூறும்- நம்பும் -தீர்மானிக்கும்- தீர்வு காணும்- செயற்படுத்தும்- அறிவும் மனப்பாங்கும் உடைய உள்ளம் அறிவு சார் உள்ளம் என்றும் அத்தகைய சிந்தனை அறிவு சார் சிந்தனை என்றும் கூறலாம்ஷ என படியாதவனின் படிப்பு என்ற நூல் கூறுகிறது. அறிவு சார் சிந்தனையை உருவாக்குவதற்கு பரந்த வாசிப்புத் திறன் முக்கியம். தான் எதிர் கொள்ளும் பிரச்சனைகளிலிருந்து விடுவிப்பதற்கு தனித்துவமான, தனக்குத் தானே நீதிபதியாகக் கூடிய வல்லமையை அளிப்பது இந்த பரந்து பட்ட வாசிப்புத் திறனே. வீட்டுச்சூழலில் இருந்து வெளியுலகுக்கு குழந்தை பிரவேசிக்கும் முதலாவது இடமாக பாடசாலைகள் இருப்பதனால் குழந்தையின் வாசிப்புப் பழக்கத்துக்கு அடித்தளம் போடும் நல்ல வாய்ப்பு பாடசாலை நூலகத்துக்கு ஏற்படுகிறது. நூலக சேவையற்ற கல்வி ஆன்மா இல்லாத உடலுக்கு ஒப்பானது; நாட்டின் எதிர்காலம் ஒப்படைக்கப்பட்டிருப்பது இன்றைய குழந்தைகளிடமே என்பது உண்மையானால் அந்த குழந்தைகளின் உள்ளத்தை கிட்டத்தட்ட 12 வருடங்கள் பண்படுத்தும் பாரிய கடமைப்பாட்டில் இருப்பவை பாடசாலைகள். பாடல்கள் கதை சொல்லல் மூலம் முன்பள்ளிகளில் தனது துருவி ஆராயும் பண்புக்கு களம் அமைக்கும் குழந்தைகள் வாசிப்பு பழக்கத்தின் மூலமே இப் பண்பை கட்டியெழுப்பலாம் என்ற அறிவை பெறக்கூடிய இடமாக பாடசாலை நூலகங்கள் இருத்தல் அவசியமானது. இது மட்டுமன்றி புது முயற்சிகளில் இறங்கும் குழந்தையின் இயல்பை ஊக்குவிப்பது சுயசார்புக் கல்வி மட்டுமே. புதிய பாடத்திட்டங்கள், கணிப்பீடுகள் யாவும் இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது மட்டுமன்றி எழுத்தறிவிக்கும் இறைவர்களையும் கற்பிப்பதற்கு கற்பவர்களாக மாறவேண்டிய நிலையை நிர்ப்பந்திக்கிறது.. இத்தகைய பின்னணியில்; புது யுகம் ஒன்றில் பாடசாலை நூலகங்கள் ஆற்றவேண்டிய பெரும் பொறுப்புகளை வாசகர் நூல்கள் நூலகர்; என்ற அம்சங்களின் கீழ் நோக்குதல் பொருத்தமானது.




வாசகர்

பாடசாலை நூலகத்தின் வாசகர் குழு இரண்டு. ஒன்று அறிவுத் தேடலுக்கும் ஆக்கத்துக்கும் உரிய மாணவ சமூகம். மற்றது கற்பிப்பதற்காக கற்கும் ஆசிரிய சமூகம். மாணவர்களை படிக்கும் தரத்தின் அடிப்படையில் ஆரம்பநிலை,இடைநிலை,உயர்நிலை என மூன்றாக வகைப்படுத்த முடியும். மனித வளர்ச்சிக்கட்டங்களின் அடிப்படையில் ஆரம்ப நிலை மாணவர்கள் பிள்ளைப்பருவத்துக்கும் இடைநிலை உயரநிலை மாணவர்கள் கட்டிளம் பருவத்துக்கும் உரியவர்கள். சர்வதேச நியமத்தின் அடிப்படையில் அனைவருமே சிறுவர்கள்.

பிள்ளைப்பருவம் என்பது 5-12 வயது வரையான பருவம். வீட்டுச்சூழலையும் விட்டுவிடாமல் பள்ளிச்சூழலுக்குள்ளும் முழுதும் அகப்பட்டுப்போகாமல் இருக்கும் இப்பருவத்தினரின் பிரதான தன்மை ஆராய்வூக்கமாகும். அறிவு வளர்ச்சிக்கு அடிப்படையானது ஆராய்வூக்கமாகும். மூன்று வயதில் முன்னிலைக்கு வரும் ஆராய்வூக்கமானது எட்டாவது வயது வரும்போது தீவிரமாக செயற்படத் தொடங்கி ஆக்கவூக்கத்துக்கும் அதன்பின்னர் பலவகைப் பொருட்களைத் தேடிச் சேர்க்கும் சேகரிப்பூக்கத்துக்கும் இட்டுச் செல்கிறது.. இந்த ஊக்கத்தை முளையிலேயே கிள்ளி எறிந்து விடாமல் அதை வளர்ப்பதற்கு உறுதுணையாக இருக்கும் முதலாவது காரணி குடும்பச் சூழல் ஆகும். மற்றய காரணி பாடசாலைச்சூழல். குழந்தையின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் ஆற்றல் பெற்றோருக்கு மட்டுமன்றி ஆசிரியருக்கும் சாத்தியமற்றது. எனவே கடிவாளக் கல்விமுறையை விட்டு சுயமாக கற்றலுக்கு வழிமுறை காணுதல் அவசியமானது இதையே புதிய கல்வித்திட்டங்கள் தற்போது கவனத்தில் எடுக்கின்றன சிந்தனா சக்தியும் நினைவாற்றலும் மிக்க இப்பருவத்தனரே நூலகரின் முதல் இலக்காக இருத்தல் அவசியம். தம்மைச் சுற்றியுள்ளவைகளை அவதானித்து அவை தொடர்பான உண்மை அறிவைப் பெற ஆர்வம் கொண்டிருக்கும் இப்பருவத்தினர் தான் வாசிப்புப் பழக்கத்துக்கும் சுயமாகக் கற்றலுக்குமான இலக்குகள்.

12 வயதில் தொடங்கி 18 அல்லது 20 ஆண்டுகள் வரை நீடிக்கும் கட்டிளம் பருவம் 20ம் நூற்றாண்டின் புதிய கண்டுபிடிப்பாகும். அதுவரை இப்பருவத்தினர் வளந்தோராகக் கருதப்பட்டு பொறுப்புமிக்க பணிகளில் வலிந்து ஈடுபடுத்தப்பட்டனர் ஓர் அமைதியற்ற சிக்கல் நிறைந்த பருவமாக இது கருதப்படுகின்றது.; முழுக்க முழுக்க வீட்டுச்சூழலிலிருந்து விடுபட்டு தனித்தியங்கும் விருப்பு அதிகமாக உள்ள இப்பருவத்தினரிடம் காணப்படும் பிரதான அம்சம் பாலுணர்வு. போதனைகளோ தண்டனைகளோ இவர்களிடம் எடுபடாது. தமது உணர்வுகளுக்கு தீனி போடும் எதையும் தேடி எடுக்கும் ஆற்றல் இவர்களிடம் உண்டு என்பதை யாரும் சொல்லிக்கொடுக்காமலேயே - இளவயதில் வாசிப்புப் பழக்கம் அற்றவர்கள் கூட- இவர்கள் பார்க்கும் படங்களிலிருந்தும் படிக்கும் கதைப்புத்தகங்களிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம். அதேசமயம் பிள்ளைப்பருவத்தினரைப் பொறுத்து பொழுதுபோக்குப்புத்தகமோ அல்லது பொது அறிவுப் புத்தகமோ வழிகாட்டினால் தான் உண்டு. இல்லாவிடில் வெறும் விளையாட்டுகளிலேயே அவர்கள் ஈடுபடுவர் என்பது அனுபவ ரீதியான உண்மையாகும். எனவே பிள்ளைப்பருவத்தில் காட்டப்படும் சரியான வழிகாட்டுதலே கட்டிளம் பருவத்து தனித்தியங்கும் ஆற்றலை அறிவு சார் பாதை நோக்கி செப்பனிட உதவும்.

நூலகத்தின் மற்றொரு வாசகர் குழு பாடசாலையின் ஆசிரியர் சமூகமாகும். அடிக்கடி மாறும் சமூகச்சூழலுக்கு ஏற்ப கற்பிப்பதற்கு, கற்றல் என்பது அவரது அன்றாட நடவடிக்கையாக மாறவேண்டியது அவசியம். புதிய பாடத்திட்டமும் கல்வியின் நோக்கங்களும் ஆசிரியர்களை மாணவர்களாகும்படி நிர்ப்பந்திக்கின்றன என்றால் அவர்கள் செல்ல வேண்டிய பள்ளிக்கூடம் நூலகமே. புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளையின் வார்த்தைகளில் சொல்வதானால் ஆசிரியர் என்பவர் நிரம்பிய கல்வி,,ஆழமான அறிவு விசாலமான ஆராய்ச்சி, பரந்த மனப்பான்மை உயர்ந்த கொள்கை, சூழலைப் பயன் செய்தல் தேசிய நோக்கம் முதலிய பலகருத்துக்களை உள்ளடக்கிய ஷசூழ்ந்த பார்வை கொண்டவர்ஷ இத்தகைய சூழ்ந்த பார்வைக்கு அவர் நூலகத்தின நிரந்தர வாசகராக மாறவேண்டியது அவசியமாகும். ஷ21ம் நூற்றாண்டின் ஆசிரியருக்கு தமது மாணவர்களிடையே காணப்படும் அடிப்படை நிபுணத்துவங்கள், படைப்பாற்றல் திறன் மாற்றம் அல்லது புதமை காணல் என்பவற்றின் சிறப்பம்சங்கள் பல்துறைப்புலமை, மாறும் நிலைக்கேற்ப அமைதல் விமர்சனப்பாங்கு, பிரச்சனைகளை இனங்காணல் மற்றும் தீர்ப்புத் திறமை என்பன பற்றிய ஆற்றல் இருக்க வேண்டும்ஷ என்ற யுனெஸ்கோவின் அறிக்கையும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்;கது.




நூல்கள்

நூல்களை உள்ளடக்கம் உருவமைப்பு என்ற இரு பிரதான பிரிவுகளுக்குள் நோக்குதல் பொருத்தமானது.




உள்ளடக்கம்.

• மனிதனின் ஆய்வு முயற்சிகள் அறிவுப் பிரபஞ்சத்தில் புதுப்புதுத் துறைகளை தோற்றுவித்ததுமல்லாமல் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற எத்தனையோ பொருட்துறைகளை ஒன்றிணைத்து எது கலை? எது அறிவியல்? என்று பிரித்தறியாதபடி புதிய பொருட்துறைகளை உருவாக்கியுள்ளது. எமது முதல் தலைமுறையினருக்கு கணினி அறிவியல் என்ற புதிய துறை இருந்ததோ உயிரியலும் தொழினுட்பவியலும் இணைந்து தோற்றம் பெற்ற உயிர்த்தொழினுட்பவியல் துறையோ தெரியாது.

• ஆய்வுத்துறைகளின் வளர்ச்சி நூல்களின் உள்ளடக்கத்திலும் பலதரப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தியதன் காரணமாக இன்று நூல்கள் என்ற பதத்துக்குள் அறிக்கைகள் ஆராய்ச்சி நூல்கள்,நியமங்கள் காப்புரிமைகள்,சிறுநூல்கள் செய்திக்கடிதங்கள் பருவ இதழ்கள் தொடர் வெளியீடுகள் என நூல்களின் வடிவங்களில் ஏற்படும் மாற்றங்களை உள்வாங்கும் அறிவு நூலகரிடம் எதிர்பார்க்கப்படுகிறது.

• மனிதனின் இன்றைய ஆய்வுகள் நேற்று உண்மை என நிறுவியதை பொய்யாக்கிவிடும் சந்தர்ப்பங்கள் அதிகமாக இருப்பதனால் நூலக சாதனங்களுக்குள் உண்மையானவற்றையும் பொய்யானவற்றையும் பிரித்தறிய வேண்டிய அறிவு நூலகருக்கும் வாசகருக்கும் இன்றியமையாததாகிறது.

• அச்சுப் பொறி தொடங்கி இன்றைய கணினித் தொழினுட்பம் வரை மனிதனின் அச்சிடுதல் தொழினுட்ப வளர்ச்சி தொகை ரீதியான அதிகரிப்புக்கு வழிகோலி நூல்களைத் தேடும் பணியை சிக்கலாக்கியுள்ளது.

• நூல்கள் புனிதமானவை. எனவே நல்லதை, தேவையானதை மட்டுமே பதிந்து வைக்க வேண்டும் என்ற மனிதனின் மனப்பாங்கு மாறி இலாபம் தரும் உற்பத்திப் பொருளாக கருதும் மனப்பாங்கு உருவாகியதன் விளைவாக எதனையும் எப்படியும் அச்சிடலாம் என்ற வகையில் அதிகரித்த மலினப்பதிப்புகளின் உற்பத்தியானது சூழல் மாசடைதல் போல் தகவலிலும் மாசடைதலை உருவாக்கியிருப்பதன் காரணமாக தீயவற்றுக்குள் நல்லதைத் தேடிப்பிடிக்க வேண்டிய அறிவை வாசகனிடம் கோரி நிற்கிறது.

• நூல்கள் பலதரப்பட்ட மொழிகளில் வெளியிடப்படும் அதேசமயம் வாசகர் ஒன்றிரண்டு மொழிகளிலேயே பரிச்சயமாக இருத்தல் சாத்தியம் என்பதால் உலக அறிவை அனைவரும் அணுகத் தக்க வகையிலான பொது திட்டம் ஒன்று நூலகம் சார்ந்து உருவாக்கப்பட வேண்டியதாகிறது.




உருவமைப்பு

• பார்த்தல் கேட்டல் படித்தல் சிந்தித்தல் கற்றல் என்ற ஒழுங்குமுறையில் பாடத்திட்டத்துக்கு பொருத்தமான நூல்கள் மட்டுமன்றி மாணவப் பருவத்தின் தேடலூக்கத்துக்கு உதவுக்கூடிய அனைத்து சாதனங்களையும் கட்டியெழுப்பவேண்டிய பணி நூலகத்துக்குண்டு.

• ஏன் எதற்கு எப்படி யார் போன்ற கேள்விகளுக்கு விடை தரக்கூடிய கலைக்களஞ்சியங்கள், ஆண்டு நூல்கள், அகராதிகள், வாழ்க்கை வரலாற்று நூல்கள் போன்றவை பாடசாலை நூலகம் ஒன்றின் பிரதான சாதனங்களாக இருத்தல் இன்றியமையாததாகும்.

• படித்தல் என்பதைவிட பார்த்துச் செய்தல் என்பதே மாணவப்பருவத்தின் இயல்பு என்பதற்கமைய மாணவர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய படத்துணுக்குகள் காட்சி வில்லைகள் ஒலி,ஒளிப் பதிவுகள் போன்ற கட்புல செவிப்புல சாதனங்களும், தேசப்படங்கள் படங்கள் ஒளிப்படங்கள் வரைபுகள் மாதிரி உருவமைப்புகள் சுவரொட்டிகள் போன்ற வரையுருவ சாதனங்களும் நூலக சேர்க்கையில் இருப்பது மிக முக்கியமானதாகும்..

• இன்றைய தகவல் சமூகத்துடன் இணைந்து போகக்கூடிய வகையில் கணினி அறிவு, இணையப் பயன்பாடு பல்லூடக வசதிகள் உள்ளடங்கிய இலத்திரனியல் சாதனங்கள் உள்ளடக்கப்படல் வேண்டும்




நூலகர்

நூலகம் என்பது நூல்கள் நூலகர்,வாசகர் என்பதன மூவுரு என்றால் இங்கு நூல்களையும் வாசகனையும் பொருத்தமான முறையில் இணைத்து விடுதல் என்னும் பணி நூலகரைச் சார்ந்தது. இங்கு இணைத்து விடுதல் என்பது ஷபொருத்தமான நூலை அதற்கு பொருத்தமான வாசகனிடம் பொருத்தமான நேரத்தில் பொருத்தமான முறையில் இணைத்துவிடுதல்ஷ என்னும் உட்பொருள் கொண்டது. இதற்கு வாசகனது வயது, அவனது தேவைகள், வாசகனது மனப்பாங்கு என்பனவும் நூல்களின் உருவமைப்பு முதற் கொண்டு உள்ளடக்கம் வரையிலான அறிவும் அவருக்கு அவசியமானது. வாசகனுக்கு தேவைப்படும் நூலை அவனுக்கு தேவைப்படும் நேரத்தில் கொடுப்பதற்கு நூலக சாதனங்கள் அனைத்தும் தொட்டவுடன் எடுக்கக்கூடிய வகையில் ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் அவசியமாகும். மாணவர்களது வயது அறிவுத் தரம் ஆர்வம் என்பவற்றின் அடிப்படையிலும் ஆசிரியர்களது தேவைகளது அடிப்படையிலும் மேற்கொள்ளப்படக்கூடிய பாரபட்சமற்ற நூல் தெரிவு, தன்னலமற்ற சேவை, பலதரப்பட்ட வாசகனது தகவல் தேவைகளையும் நினைவில் இருத்திக் கொள்ளக் கூடிய பல்பரிமாண நினைவாற்றல், வாசகர்களது குணநலன்களின் அடிப்படையில் எல்லோரையும் கருத்தில் கொள்ளக்கூடிய வகையிலான அநுதாப மனப்பாங்கு, பலதரப்பட்ட வாசகர்களது சுபாவங்களையும் எதிர் கொள்வதற்கான சாமர்த்தியம்,, வாசகனது அறிவுத் தேவையை பூர்த்தி செய்வதற்கு உதவக்கூடிய புலமைத்துவம், எல்லாவற்றுக்கும் மேலாக கடும் உமைப்பு ஆகிய ஏழு அம்சங்களும் ஒரு நூலகருக்கு இருக்க வேண்டிய சப்த ஒழுக்க தீபங்கள் என இந்திய நூலகவியல் அறிஞர் மிற்றல் கூறுவது இங்கு கருத்தில் கொள்ளப்பட வேண்டியதொன்றாகும். ஆனால் துரதிருஷ்டவசமாக நூலகப்பணி என்பது வேலை தேடுவோரின் இறுதி வாய்ப்பாகவே இன்றும் கருதப்படுகிறது. நுண்ணறிவு மிக்க வாசகனை திருப்திப்படுத்தும் அறிவாளியாக,எனக்கு ஒன்றுமே தெரியாது என்று நினைக்கும் தாழ்வுணர்ச்சியுள்ள வாசகனிடம் நல்லதோர் உளவியலாளராக, கூச்ச சுபாவமுள்ள வாசகனுக்கு நல்லதோர் வழிகாட்டியாக, ஷஎன்னை விட இவருக்கென்ன தெரியும்ஷ என நினைக்கும் எல்லாம் தெரிந்தவரையும்(?) பொறுத்துப்போகும் தத்துவவியலாளராக நூலகர்கள் புதிய யுகத்தில் மாறவேண்டிய தேவை உண்டு.

நூலகர் தானாக மாறாது விடின் புதிய தகவல் யுகமானது அவர்களை மாறும்படி நிர்ப்பந்திக்கும். அல்லது மாற்றும். ஏனெனில் புதிய யுகம் வேண்டுவது நுவலும் நூலகரையே அன்றித் தூங்கும் நூலகரை அல்ல.




குறிப்புதவு நூல்கள்









MITTAL,R,L. Library Administration:Theory and Pratice.-Delhi:Metrapolitan,1978
ANGRILLI,Albert and HELFAT,Lucile. Child Phychology.-Newyork:Barnes,1981.
RAY,Colin.Library services to school and children.-Paris:Unesco,1979.

நூலக முகாமைத்துவம்: ஓர் அறிமுகம்

நூலக முகாமைத்துவம்: ஓர் அறிமுகம்


0.முன்னுரை

           ஓவ்வொரு நாட்டிலும் உள்ள எந்தவொரு நிறுவனத்தை எடுத்துக் கொண்டாலும் - அரச நிறுவனங்கள், தொழில் வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், சமூக சேவை நிறுவனங்கள் மற்றும் வேறு எவ்வகையான ஒரு நடவடிக்கையினை மேற்கொள்ளும் நிறுவனங்கள் - அங்கு முகாமைத்துவம் என்ற பதம் குறிக்கும் செயற்பாடுகளை நாம் கண்கூடாகக் காண முடியும். நிறுவனத்;தின் பல மட்டங்களிலும் கண்காணிப்பாளர்களையும், மேற்பார்வையாளர்களையும், நிர்வாகிகளையும், இயக்குநர்களையும் நாம் காண்கின்றோம். இவர்களது சிறப்புப் பணி என்பது நிறுவனத்தில் பணி புரியும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை, அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியில் அமர்த்தி, அவர்கள் பணிகளை வரையறுத்து அப்பணிகளை அவர்கள் செவ்வனே முடிக்கும்படி செய்து எல்லோருடைய பணிகளும் நிறுவனத்தின் பொதுக் குறிக்;கோளை நிறைவேற்றப் பயன்படுமாறு செய்வதேயாகும். இத்தகையதொரு பணி தான் முகாமைத்துவம் என்ற பொதுப் பெயரால் அழைக்கப்படுகின்றது.

          பொதுவாக முகாமைத்துவம் என்ற பதம் மேலாட்சி, மேலாண்மை, செயலாட்சி, நிர்வாகம் என்ற பல பெயர்களில் வௌ;வேறு ஆசிரியர்களால் உபயோகிக்கப்பட்டாலும் அதன் உண்மையான, பொரும்பாலோரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பதம் முகாமைத்துவம் ஆகும்.

          இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை முகாமைத்துவம் என்பது ஒரு கலையாகவே கருதப்பட்டது. தனிப்பட்டவர்களின் செயல் திறமாக, சிலருக்கே கைவந்த ஒரு கலையாக எண்ணப்பட்டது. ஆனால் முகாமைத்துவம் ஒரு கலையன்று; அது அறிவியல் துறையின் பாற்பட்டது தான் என்ற நிலை அண்மையில் உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் முகாமைத்துவம் அறிவியல் துறையின் பாற்பட்டது என்பதை ஏற்றுக் கொள்ளாத பலர் இன்றும் உள்ளனர் என்பதும் அதற்கு அவர்கள் கூறும் காரணமும் ஓரளவு பொருத்தமாகவே உள்ளதென்பதும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதொன்றாகும்.

           முகாமைத்துவம் சிலர் பால் கலைத்திறனாகவே மிளிர்கின்றது எனினும் எண்ணற்ற நிர்வாகிகள் தேவைப்படும் நவீன காலத்தில், பயிற்சியின் மூலம் நிர்வாகிகளை உருவாக்கிக் கொள்ள உதவுவது முகாமைத்துவ அறிவியல் முறையே எனலாம்.

           வீட்டை நிர்வகிக்கும் இல்லத்தரசி முதற்கொண்டு நாட்டை நிர்வகிக்கும் அரசு வரை முகாமைத்துவம் இன்றியமையாததாகின்றது. இந்த வகையில் ஒரு சமூக சேவையை அடிப்படையாகக் கொண்ட நூலகமும் இதற்கு விதி விலக்கல்ல. சுருங்கக் கூறின், எத்துறையாயினும், எத்தொழிலாயினும், பணியாளர்களின் எண்ணிக்கை ஒன்றுக்கு மேற்படும் போது, அங்கெல்லாம் முகாமைத்துவம் என்ற செயல்முறை தோன்ற வேண்டியுள்ளதுடன் அதுவே தவிர்க்க முடியாத ஒரு செயற்கருவியாக உருவெடுப்பதையும் நாம் காணலாம்.

          முகாமைத்துவக் கொள்கைகளை செம்மைப்படுத்தவும், விரிவு படுத்தவும், ஒவ்வொரு நாடும் முயன்றாலும், முகாமைத்துவத் துறையின் இத்துணை வளர்ச்சிக்கு அமெரிக்க நாடு தான் காரணம் என்றால் அது மிகையாகாது. டேலர் Taylor கில்பெர்த் Hilberth மேரி பார்க்கர் ஃபாலட் ஆParker and Ballet போன்ற வல்லுநர் இத்துறையை விரிவு படுத்தவும், செம்மைப்படுத்தவும் பெரிதும் உதவினர் என்பதும் இவ்வளர்ச்சியின் வாயிலாக முகாமைத்துவ கொள்கைகள் உலகெங்கும் பரவி பல்வேறு நிறுவனங்களாலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.


1.முகாமைத்துவம் - வரைவிலக்கணம் 

           'செய்து முடிக்க வேண்டிய எந்தப் பணியையும் அதற்குரிய பணியாளர்களைக் கொண்டு செய்து முடிப்பதே முகாமைத்துவம் ஆகும்.'

            பொதுவாக முகாமைத்துவம் என்ற சொல்லுக்கு சரியான வரைவிலக்கணம் இதுவரை கொடுக்கப்படவில்லை என்றே கூறலாம். அப்படிக் கொடுக்கப்பட்ட வரைவிலக்கணங்கள் கூட எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஏனெனில், முகாமைத்துவம் என்பது தனிப்பட்ட ஒரு முகாமையாளர் (Manager) புரியும் பணிக்கு மேற்பட்டதாகும். முகாமைத்துவம் ஒரு செயற்பாங்கு. அதன் மூலம் ஒரு நிறுவனத்தின் சிறந்த நோக்கங்களை முகாமையாளர் அந்நிறுவனத்தின் பணி புரியும் பணியாளர்களின் பணிகள் மூலம் பெறுகின்றார். எனவே, எந்தவொரு நிறுவனம் தனது பணியாளர்களின் ஒத்துழைப்பின் மூலம் தன்னுடைய முக்கிய நோக்கங்களை சிறிதும் மாற்றமின்றி பெற விரும்புகின்றதோ அந்நிறுவனத்திற்கு முகாமைத்துவம் அவசியமாகின்றது. முகாமைத்துவக் கோட்பாடுகளைத் தொழில் நிறுவனங்கள் மட்டுமன்றி, தொழில் சார்பற்ற சாதாரண நிறுவனங்களும் அரசு துறைகளும் சமூக சேவை கல்வி நிறுவனங்களும் கடைப்பிடிக்க வேண்டும். இதையே முன்னாள் அமெரிக்க குடியரசுத் தலைவர் ரூஸ்வெல்ட் அவர்கள், 'முகாமைத்துவக் கோட்பாடுகளைக் கடைப்பிடியாத ஒரு அரசு மணலால் கட்டப்பட்ட வீடு போன்றது' எனக் குறிப்பிட்டார். முகாமைத்துவத்தின் சிறப்புத் தன்மைகளை விளக்கும் வகையில் அதற்குக் கொடுக்கப்பட்டுள்ள ஓரிரு வரைவிலக்கணங்களை நோக்குவோம்.


(1) ஒரு குறிப்பிட்ட மனிதக் குழுவினுடைய நோக்கங்களை முடிவு செய்து, அலசியாராய்ந்து, அதனைச் செயற்படுத்துவதன் மூலம், அந்நோக்கங்களை அடையும் நுணுக்கமே முகாமைத்துவம் ஆகும்.
- பீட்டர்சனும் பிளாமனும்.

(2) நிறுவனத்தின் பணியாளர்களையும், வளங்களையும் கொண்டு தகுந்த திட்டங்கள் மூலமாகவும், ஒழுங்கமைப்பு மூலமாகவும், உரிய ஊக்குவிப்பு மூலமாகவும், தகுந்த கட்டுப்பாட்டின் படியும் அந்நிறுவனத்தின் நோக்கங்களை அறுதியிட்டு அவற்றை அடையவிழையும் ஒரு தனிப்பட்ட செயல்பாங்கே முகாமைத்துவமாகும்.
        - இராம முத்தையன்.


2.நூலக முகாமைத்துவம். 

          நூலகம் என்பது சேவை ரீதியானதும் சிக்கல் நிறைந்ததுமான ஒரு அமைப்பாகக் கருதப்படுகின்றது. தொழில் நுட்ப முன்னேற்றத்தின் காரணமாக மனிதனுடைய அறிவு விரிவடைந்தால், அந்த அறிவுப் பசியைப் போக்குவதற்கு நூலகம் ஒத்துழைப்பு நல்க வேண்டியது மிகவும் அவசியமாகும். நூலகத்தில் கடமையாற்றுகின்ற ஊழியர்களும் உயர் கல்வித்தரம் உடையவர்களாக Academic Background அல்லது கல்வித் தரம் உடையவர்களாக Educational background இருப்பதால் நூலக அமைப்பின் முகாமைத்துவப் பாங்கு மற்றைய தொழில் ரீதியான அமைப்பில் இருந்தும் வேறுபட்ட தொன்றாக உள்ளது. முகாமைத்துவம் என்ற பதம் குறிக்கும் வரைவிலக்கணங்கள், கொள்கைகள், கோட்பாடுகள் யாவும் எல்லாவகையான நிறுவனங்களுக்கும் பொதுவானவையாக இருப்பதனால் இவை சமூக சேவையை அடிப்படையாகக் கொண்ட ஒரு நிறுவனமாகக் கருதப்படும் நூலகத்துக்கும் பொருத்தமானவையாக இருப்பதில் ஆச்சரியமில்லை. இந்த வகையில், நூலக முகாமைத்துவம் என்ற பதத்திற்கு அளிக்கப்படும் வரைவிலக்கணங்களும், விளக்கங்களும் கூட பொது முகாமைத்துவக் கோட்பாடுகளை General management Principles  அடிப்படையாகக் கொண்டவையே. இதன் அடிப்படையிலேயே கரட்டினுடைய நூலகவியல் கலைச்சொல் அகராதியில் நூலக முகாமைத்துவம் என்ற பதத்திற்குப் பின்வருமாறு வரைவிலக்கணம் கொடுக்கப் பட்டிருக்கின்றது.

          'நூலக சேவையில் இருந்து மிக உயர்ந்த நன்மையையும் பயன்பாட்டையும் பெறுவதற்கு மேற்கொள்ளப்படக் கூடிய முன்னுரிமைகளை ஒழுங்குபடுத்துதல், அலுவலர்களை ஊக்குவித்தல், நூலக வளங்களைப் பாதுகாத்தல், செயற்பாடுகளை மதிப்பிடுதல் முதலிய தொழில் நுட்பங்களின் செயல்திறன் முகாமைத்துவம் எனப்படும்.'

          எனவே நூலகத்தில் பணியாற்றும் சகல அலுவலர்களையும் ஒருங்கிணைத்து, தகுந்த திட்டமிடல், ஒழுங்கமைப்பு, ஊக்குவிப்பு, கட்டுப்பாடு என்பவற்றினூடாக நூலகத்தை பயன்படுத்தும் ஒவ்வொரு வாசகனையும் திருப்திப்படுத்தும் மிக உயர்ந்த நோக்கத்தை அடைய முயற்சி செய்யும் ஒரு செயற்பாடே நூலக முகாமைத்துவம் எனக் கூறலாம்.


3.முகாமைத்துவமும் நிர்வாகமும். 

         நூலக முகாமைத்துவம் பற்றி ஆராய்வதற்கு முன் முகாமைத்துவத்திற்கும் நிர்வாகத்;துக்குமிடையிலுள்ள வேறுபாடுகளை விளங்கிக் கொள்ளுதல் அவசியமானது. ஏனெனில் முகாமைத்துவம், நிர்வாகம் ஆகிய இரு சொற்களும் பெருமளவில் ஆசிரியர்களால் பயன்படுத்தப்பட்டாலும் அதற்குரிய தெளிவான இலக்கணம் இதுவரை கொடுக்கப்படவில்லை என்றே கூறலாம். பெரும்பாலான ஆசிரியர்கள் இவ்விரு சொற்களையும் ஒரே பொருள்பட பயன்படுத்துகின்றார்கள். ஆனால் இரு சொற்களும் மிகவும் வேறு பட்டவை. நிர்வாகம் மனிதர்களுடைய நடவடிக்கைகளை பொதுவாகக் கட்டுப்படுத்துகின்றது. ஆனால் முகாமைத்துவம் தொழிலில் ஈடுபட்டுள்ள அலுவலர்களின் நடவடிக்கைகளை மட்டும் கட்டுப்படுத்துகின்றது. நிர்வாகம் என்பது ஒரு நிறுவனத்தின் நோக்கங்களையும் கோட்பாடுகளையும் முடிவு செய்வதாகும். செயல்முறைப்படி வகுக்கின் நிர்வாகம் என்பது ஒரு நிறுவனத்தி;ன் நோக்கங்களை அடைவதற்கான எல்லா வழிமுறைகளையும் நிர்ணயம் செய்வதாகும். அவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்ட நோக்கங்களை மனிதத் திறமையினை இயக்குவதன் மூலம் அடைய முற்படுவதே முகாமைத்துவமாகும். சுருங்கக்கூறின் நிர்வாகம் என்பது முடிவாக்கலில் ஈடுபடுகிறதென்றும், முகாமைத்துவம் அம்முடிவுகளை செயல் படுத்துகிறதென்றும் குறிப்பிடலாம். ஒரு சில நிறுவனங்களில் இவ்விரு பணிகளும் ஒரே நபரால் செய்யப்படினும் இவ்விரு பணிகளும் தனித்தனித் தன்மை வாய்ந்தவை.


4.நூலக முகாமைத்துவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.    

           பண்டு தொட்டே முகாமைத்துவம் மனித நடவடிக்கைகளை செம்மையாக நடத்திட உறுதுணையாக இருந்திருக்கின்றது. பிறரை வேலைக்கமர்த்தி, தாம் விரும்பிய திட்டங்களை நிறைவேற்றும் போதெல்லாம், சமூகத் தலைவர்களும், குழுத்தலைவர்களும், நிறுவனத் தலைவர்களும், தொழில் முதலாளிகளும் முகாமைத்துவம் என்ற கருவியையே கையாள வேண்டியிருக்கின்றது. பணியில் ஈடுபடுத்தப்படு;ம் ஆட்களின் எண்ணிக்கை அதிகரி;க்க முகாமைத்துவத்தில் சிக்கல்களும் நுண்முறைகளும் வளரத் தொடங்கின. இந்த வகையில் நூலக முகாமைத்துவத்தின் ஆரம்ப காலத்தையும் நோக்குதல் நன்று.

          ஆதி காலத்தில் நூலகம் என்பது வெறுமனே நூல்களைப் பாதுகாத்து வைக்கும் களஞ்சியம் எனப்பட்டது. நூல்கள் பாவனைக்குட்படுத்தப்படுவதைப் பற்றிய உணர்வு நூலகருக்கோ அவரைச் சார்ந்தவர்களுக்கோ இருக்கவில்லை. அது மட்டுமன்றி நூல்கள் யாவும் அலுமாரிகளில் வைத்துப் பூட்டப்பட்டோ அல்லது மேசையுடன் சங்கிலி மூலம் பிணைக்கப்பட்டோ காணப்பட்டன. ஆனால் மனிதனது சிந்தனா சக்தி வளரத் தொடங்கவும் நூல்களைப் பற்றிய அறிவும் அவற்றைப் பாவிப்பதற்குரிய உணர்வும் மனிதனிடத்தில் வளர்ந்த போது தான் அலுமாரிகளில் வைத்துப் பூட்டப்பட்டிருந்த நூல்களைத் திறந்த தட்டுகளில் வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அத்துடன் வாசகர் நூல்களைத் தாமே தெரிவு செய்யவும் அதனை இரவல் எடுத்துச் செல்லவும் முடிந்தது. எனினும் நூலகர் வெறுமனே இரவல் கொடுத்து மீளப் பெறுதலையே கடமையாகக் கொண்டிருந்த நிலையில் நூலக முகாமைத்துவத்தின் அவசியம் அங்கு உணரப்படவில்லை. தற்காலத்தில் நூலகமானது சமுதாய, கலை, கலாச்சார வளர்ச்சியை ஊக்குவிக்கின்ற ஒரு நிறுவனமாக விளங்குவதுடன் வாசகர்களுக்கு வேண்டிய சகலவிதமான சேவை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும் பொறுப்பு வாய்ந்ததாக இருக்கின்றது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மனிதனின் சிந்திக்கும் ஆற்றல் அதிகரித்ததுடன் நவீன நுண்ணிய ஆய்வுகளையும் பரிசோதனைகளையும் அவன் மேற்கொண்டதன் விளைவாக நூல்களின் எண்ணிக்கையிலும் தரத்திலும் மிகப்பெரியளவிலான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.

           ஒரு விடயத்தைப் பற்றி பல்வேறு விதமான நூல்கள், அறிக்கைகள், ஆய்வுக்கட்டுரைகள், பரிசோதனை முயற்சிகள் வெளியாகத் தொடங்கியதுடன் நூல்களைத் தட்டுக்களில் பிரித்து வகைப்படுத்தி அடுக்குவதிலும் அதனை வாசகர் எந்த சிரமமுமின்றித் தெரிவு செய்து உபயோகிப்பதிலும் சிக்கல் ஏற்படத் தொடங்கியது. அத்துடன் வாசகரிடமிருந்து வெளிப்படும் பல்வேறு வகையான வினாக்களுக்கு விடையிறுக்கும் பொறுப்பும் நூலகருக்கு ஏற்பட்டது. எனவே தொழில்நுட்ப வளர்ச்சி நூலகத்துறையில் அளப்பரிய மாற்றத்தை ஏற்படுத்தியதுடன் நூலக முகாமைத்துவத்தின் அவசியத்தையும் உணர வைத்தது. நூலகம் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு (பகுப்பாக்க, பட்டியலாக்கப்பகுதி, பருவ இதழ் பகுதி, நூல் கொள்வனவுப்பகுதி, அரசாங்க ஆவணப்பகுதி, வாசகர் சேவைப்பகுதி போன்ற) செயல்படத் தொடங்கவும் நூலக அலுவலர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கவும் நிர்வாகத்தை திறம்பட நடாத்துவதில் நூலகர் சிரமப்பட வேண்டியிருந்தது. இத்தகைய ஒரு சூழ்நிலையில் தான் மற்றைய தொழில்துறைகளைப் போன்று முகாமைத்துவக் கோட்பாடுகளை நூலகத்துறைக்கும் பயன்படுத்த முடியும் என்ற உணர்வு ஏற்பட்டது. இந்த வகையில் நூலக முகாமைத்துவத்தின் வளர்ச்சியை நூலகங்களில் பண்டு கொள்ளக்கூடியதாக இருப்பதுடன் வாசகரின் தேவையைப் பூர்த்தி செய்யவும், நூலகத்தின் நோக்கங்களையும் கொள்கைகளையும் அமுல் படுத்தவும் நூலக முகாமைத்துவம் மிகவும் உறுதுணையாக அமைந்துள்ளமையை நாம் காணலாம்.


5.நூலக முகாமைத்துவத்தின் சிறப்புத் தன்மைகள்.

           ஓவ்வொரு முகாமைத்துவத்துக்கும் ஒரு குறிப்பிட்ட நோக்கம் இருத்தல் வேண்டும். அந்நோக்கம் வெளிப்படையாகக் குறிப்பிடலாம். அல்லது குறிப்பிடப்படாமலும் இருக்கலாம். இந்த வகையில் நூலக முகாமைத்துவத்திற்கும் ஒரு குறிப்பிட்ட நோக்கம் இருத்தல் வேண்டும். நூலக முகாமைத்துவத்தின் வெற்றி, அது தனது நோக்;கங்களை எந்தளவிற்கு அடைந்து கொள்கின்றது என்பதன் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகின்றது. அன்றி நூலகத்தில் பணிபுரியும் அலுவலர்களின் எண்ணிக்கையில் அல்ல. தேவைப்படும் அலுவலர்களின் எண்ணிக்கையைக் கருத்திற் கொள்ளாது, இருக்கின்ற அலுவலர்களைக் கொண்டு சிறந்ததொரு சேவையை ஒரு நூலகமானது அதனுடைய வாசகர்களுக்கு வழங்க முடியுமானால் அது வெற்றி என்றே கூறலாம்.

           மனிதனுடைய முழுத் திறமையையும் பயன் படுத்துவது முகாமைத்துவம் ஆகும். ஒரு நூலகர் சிறந்த முகாமைத்துவத்தின் மூலம் நூலகத்தில் பணி புரியும் அலுவலர்களை அவர்கள் ஆண்களாயினும் சரி பெண்களாயினும் சரி நன்முறையில் ஊக்குவித்து அவர்களது திறமையைப் பெருக்கிச் செயலாற்றும்படி செய்ய முடியும்.

           ஒரு நூலகத்தின் நோக்கங்கள் அந்நூலகத்தில் பணி புரியும் சகலரதும் ஒருங்கிணைந்த பணிகளின் மூலம் தான் அடையப்பட முடியுமே தவிர, தனிப்பட்ட அலுவலர் ஒருவரது பணியால் அல்ல. இவ்விதம் நூலக அலுவலர்களை ஒரு குழுவாக ஒருங்கிணைப்பதன் மூலம் அலுவலர்களின் திறன் மிகுதியடைந்து பணிகள் திறமையாகச் செய்யப்படுகின்றன. எனவே தான் நூலக முகாமைத்துவம் அலுவலரின் ஒருங்கிணைந்த குழுவிற்கு முக்கியத்துவம் அளிக்கின்றது.

           ஒரு நூலகத்தின் பணிகள் எல்லாவற்றையும் அந்த நிறுவனத்தின் தலைவரே செய்வதென்பது இயலாத காரியம். எனவே, நூலகர் தானே நேரடியாகச் செயற்படாது அப்பணிகளை பிற அலுவலர்கள் அல்லது ஊழியர்கள் செம்மையாகச் செய்யும்படி இயக்குவித்தல் வேண்டும். ஒரு நூலகரினது வெற்றி, பிற ஊழியர்களின் மூலம் நூலகத்தின் நோக்கங்களை அவர் எந்த அளவில் அடைகின்றார் என்பதன் அடிப்படையிலேயே அமைந்துள்ளது எனக் கூறலாம்.

          ஒரு பணியை நூலகர் தாமே செய்வதற்கும் பிறரை செய்வதற்குத் தூண்டுவதற்கும் அதிக வேறுபாடு உள்ளது. ஒரு குறிக்கப்பட்ட இலக்கை அடைவதற்கு தொழில்நுட்ப அறிவு தேவை எனினும் அது முகாமையாளர்களுக்கு இன்றியமையாததாகக் கருதப்படுவதில்லை. தங்களின் கீழ் பணியாற்றும் இதர அலுவலர்களின் தொழில்நுட்ப அறிவை செம்மையான முறையில் பயன்படுத்த வேண்டியது இவர்களின் கடமையாகும். எனவே சிறந்த முகாமைத்துவம் என்பதும் பிறருடைய திறமையை உரிய முறையில் பயன்படுத்துவதேயாகும்.

          முகாமைத்துவம் என்பது தொட்டுணர முடியாததொரு நடவடிக்கை. இதனை யாரும் பார்க்கவோ தீண்டவோ முடியாது. முகாமைத்துவத்தின் இருப்பு, அந்நிறுவனத்தின் செம்மையான செயற்பாட்டின் மூலமே அறியப்பட முடியும்.

           முகாமைத்துவத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் நிறுவனத்தின் உரிமையாளர் அல்லர். ஒரு சில நிறுவனங்களில் ஒருவரே முகாமையாளராகவும் உரிமையாளராகவும் இருப்பினும், பெரும்பாலான நிறுவனங்;களில் இவர்கள் வௌ;வேறு ஆட்களாகவே இருக்கின்றனர்.


6.நூலக முகாமைத்துவத்தின் முக்கியத்துவம்.   

          நூலக பாவனைக்காக ஒவ்வொரு வாசகனிடமிருந்தும் அறவிடப்படும் ஒவ்வொரு ரூபாவிற்குமான மிக உயர்ந்த பங்களிப்பை வழங்குவதன் மூலம், ஒரு நூலகமானது வாசகனைத் திருப்திப்படுத்தும் பொறுப்பு வாய்ந்ததாகவுள்ளது. நூலகமானது வளர்ச்சியடைந்து வருகின்ற ஒரு நிறுவனமாகவிருப்பதனால் அதற்கு வருடாந்தம் மேலதிக நிதி தேவைப்படுகின்றது. நூலகத்தின் மேலதிக நிதித் தேவைக்கான காரணத்தை ஒவ்வொரு வாசகனும் அறிந்து கொள்வதில் விருப்பமுடையவனாக இருக்கலாம். அவன் மட்டுமன்றி அனுபவம் வாய்ந்த நூலகத்துடன் தொடர்புள்ள அதிகாரிகள் கூட வெறுமனே புகழ் மாலைகளை விடத் தொகை ரீதியாகவும் உண்மையானதுமான தரவுகளிலேயே கூடிய கவனம் செலுத்துகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் விஞ்ஞான முகாமைத்துவம் என்பது ஒரு நூலகர் மேலதிக நிதியை அவர் விரும்பியவாறு பெறுவதற்குரிய உண்மையானதும், தொகைரீதியானதுமான தரவுகளை வழங்கக் கூடிய அறிவை, அபிவிருத்தி செய்வதற்கு உதவுகின்றது எனலாம்.

          வழமையான வேலை முறைகளைச் சிறப்பாகச் செய்யக் கூடிய திறமையை அதிகரிப்பதற்கு நூலக முகாமைத்துவம் உதவுகின்றது. சாதாரணமாக ஒரு நூலகத்தினுடைய பெரும்பாலான வேலைகள் இயந்திரத் தன்மையுடையதாகவும் செய்வதையே திரும்பச்செய்தல் (ஒப்பித்தல்) என்ற தன்மை உடையதாகவும் இருப்பதுடன் அவை தொகை ரீதியான ஆய்வுக்கு வழிப்படுத்தப்படக் கூடியதாகவும் இருக்கின்றன. உதாரணமாக, கட்டளை அனுப்புதல் Ordering பட்டியலாக்கம், அட்டைகளைக் கோவைப்படுத்தல், நூல் கட்டுதல், சுழற்சி Circulation நூல் இருக்கைகளில் நூல்களை முறையாக வைத்தல் என்பன இதற்குள் அடங்கும். நூலக முகாமைத்துவம் என்பது இவ்வேலைகளை சிறப்பாகச்; செய்யக் கூடிய ஆற்றலை அதிகரிக்க உதவுகின்றது.

          விஞ்ஞான முகாமைத்துவம் என்பது, நவீன வேலைப்பகுப்பாக்கத்தின் திறவுகோலாகக் கருதப்படும் வேலைப்பகுப்பாய்வை Work analysis தருகின்றது. இதன் விளைவாக நூலகர் ஒரு அலுவலரிடமிருந்து எதை எதிர்பார்க்க முடியும். எதை எதிர்பார்க்க வேண்டும் என்பதைப் புத்தி சாதுரியத்துடனும் தெளிவுடனும் அறிந்து கொள்ள உதவுகின்றது.

           விஞ்ஞான முகாமைத்துவம் ஒரு நூலகர் நூலகத்தின் நிதி முறையை சிறப்பாகக் கொண்டு நடாத்த உதவுகிறது. ஓவ்வொரு பிரிவுக்குமுரிய தொழிற்பாடுகளுக்குமான நிதித்தேவையினை அவர் நன்கு அறிந்தவர் என்பதால் அவர் புத்தி சாதுரியத்துடன் வீண் விரயங்களைத் தவிர்க்கக் கூடியவராக இருப்பதுடன் சேவைப் பயன்பாட்டை அதிகரிக்கவும் அதன் மூலம் தன் வாசகருக்கு பூரண திருப்திகரமான சேவையை வழங்குவதற்கும் நூலக முகாமைத்துவம் உறுதுணையாக உள்ளது எனலாம்.

          நூலகருக்கும் அவரின் கீழ் கடமையாற்றும் இதர அலுவலர்களுக்கு மிடையேயான கருத்து வேறுபாடுகளையும் சிக்கல்களையும் களைந்து, உளமார்ந்த உறவினை உருவாக்க முகாமைத்துவம் அவசியமாகின்றது.

          முகாமைத்துவக் கோட்பாடுகள் வளர்ச்சியடைந்ததன் காரணமாக நூலகத்தில் கடமையாற்றும் அலுவலர்களுக்கு உரியமுறையில் பயிற்சி அளிக்கப்படுவதனால் நூலக சேவையைத் திறம்பட நடத்த நூலக முகாமைத்துவம் உதவியாகவுள்ளது.

          எல்லாவற்றிற்கும் மேலாக நூலகம் என்பது சமுதாய முன்னேற்றத்துக்கு பாடுபடும் ஒரு நிறுவனம் ஆகும். தனிப்பட்ட மனிதர்களின் சேவை என்பது இங்கு மிக முக்கியமானது. தனிப்பட்ட மனிதர்களின் திறமையை சமுதாய முன்னேற்றத்துக்காகப் பயன்படுத்த நூலக முகாமைத்துவம் மிகவும் இன்றியமையாததாகக் கருதப்படுகின்றது.


7.நூலக முகாமைத்துவத்தின் அடிப்படைக் கூறுகள். 

          முகாமைத்துவத்தின் அடிப்படைக் கூறுகள் பற்றிப் பல்வேறு ஆசிரியர்களாலும் பல்வேறு கருத்துக்களும் விளக்கங்களும் முன்வைக்கப்பட்டிருப்பினும், லூதர் கூலிக் டுருவுர்நுசு புருடுஐஊமு என்பவரது முகாமைத்துவ அடிப்படைக் கூறுகள் பற்றிய விளக்கம் நூலக முகாமைத்துவத்திற்கு பொருத்தமாகவுள்ளது. இவர் குறிப்பிடும் முகாமைத்துவ அடிப்படைக் கூறுகள் நெகிழ்ச்சித் தன்மை வாய்ந்ததுடன் தேவைக்குத் தகுந்த வகையில் இவற்றை மாற்;றியமைத்து பயன்படுத்திக் கொள்ள முடியும். இவ்வடிப்படைக்கூறுகளை கூலிக் ஆங்கிலத்தில் Pழுளுனுஊழுசுடீ என்ற ஒரு சொல்லி;ல் ஒழுங்கு படுத்தியுள்ளார். அவை பின்வருமாறு:

1. திட்டமிடல்  Planning
2. ஒழுங்கமைத்தல் Organising
3. அலுவலர்களை நியமித்தல் Staffing
4. இயக்குவித்தல் Directing
5. ஒருங்கிணைத்தல் Coordinating
6. அறிக்கை அனுப்புதல் Reporting
7. திட்டப்பட்டியல் தயாரித்தல் Budgeting

         மேற்கூறப்பட்ட முகாமைத்துவ அடிப்படைக் கூறுகள் மட்டுமன்றி, கட்டுப்படுத்தல் Controlling செயலூக்கமளித்தல் Motivatingஎன்பனவும் நூலக முகாமைத்துவத்தின் சிறப்புக் கூறுகளாக அமைய முடியும்.


7.1.திட்டமிடல்

         முகாமைத்துவப் பணிகளில் மிக முக்கியமானது திட்டமிடல் ஆகும். ஒரு குறிப்பிட்ட குறிக்கோளை ஒழுங்கான முறையிலும் திறமையான வகையிலும் அடைய வேண்டுமெனின் அக்குறிக்கோளை எவ்வாறு சிறந்த வகையில் அடைவது என்பது பற்றி மிக ஆராய்ந்து திட்டம் ஒன்று வகுக்கப்படல் வேண்;டும். எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் திட்டமிடல் என்னும் சொல்லுக்கு வரைவிலக்கணம் கொடுத்தல் இயலாது. எனினும் ஜோர்ச் டெரி என்பவரது கீழ்க்காணும் வரைவிலக்கணம் ஓரளவிற்கு சிறந்ததாகவுள்ளது.

          'நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை ஒரு முகப்படுத்தி ஊகத்தின் அடிப்படையில் நிறுவனத்தின் நோக்கங்களை உரிய முறையில் அடைய, செய்ய வேண்டிய நடவடிக்கைகளைத் தீட்டுவது திட்டமாகும். எனவே திட்டமிடல் என்பது முக்கியமாக செயல்முறையை தேர்ந்தெடுத்தலையே குறிக்கின்றது. நோக்கங்களை அடைய பல மாற்று வழிகள் இருக்கும் நிலையில் தான் திட்டம் தீட்டலுக்கு அவசியம் எழுகின்றது. இவ்வகையில், ஒரு நூலகத்திலும், தலைமை நூலகரின் பிரதான கடமைகளில் ஒன்றாக திட்டமிடல் அமைகின்றது. நூலகத்திற்கு வரும் பல்வேறு தரப்பட்ட வாசகர்களையும் திருப்திப்படுத்தக் கூடிய சேவையை வழங்கும் மிகப் பொறுப்புள்ள கடமையைச் செய்யத் திட்டமிடல் உதவுவதால் நூலகத் திட்டமிடலுக்கு பரந்து பட்ட அறிவும் அனுபவமும் தேவைப்படுகின்றது.


திட்டத்தின் கூறுகள்.

திட்டத்தின் கூறுகளைப் பின்வருமாறு குறிப்பிடலாம்.

1. நோக்கங்கள்  ழுடிதநஉவiஎநள
2. கொள்கை முறைகள்    Pழடiஉநைள
3. வரையளவு  ளுவயனெயசன
4. செயல்முறை  Pசழஉநனரசந
5. நிகழ்ச்சிமுறை  Pசழபசயஅஅந
6. திட்டப்பட்டியல்  டீரனபநவ
7. முறை  ஆநவாழன
8. நடைமுறைத் திறம்  ளுவசயவநபல

திட்டமிடலில் அடங்கியுள்ள படிகள்.

1. என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானித்தல்.
2. நோக்கங்கள் ஏன் செய்யப்பட வேண்டும்.
3. அதை எப்படி, எங்கே, எப்போது, யார் செய்தல் என்பதைத் தீர்மானித்தல்.
4. திட்டத்தின் காலம், திட்டத்திற்குத் தேவையான பணியாளர், எதன் மூலம் திட்டத்தினை செயற்படுத்த வேண்டும், திட்டத்தின் சாதனங்கள் ஆகியவற்றை நிர்ணயம் செய்தல்.
5. செயலின் விளைவை எவ்வாறு மதிப்பீடு செய்தல் என்பதை நிர்ணயித்தல்.

7.2.ஒழுங்கு அமைத்தல்.

          ஒரு நிறுவனத்தின் நோக்கங்களை உரிய முறையில் அடையும் வகையில் அந்நிறுவனத்தின் உள்துறைகளை உரிய முறையில் அமையச் செய்வதே ஒழுங்கு அமைப்பு ஆகும். திட்டம் தீட்டியபின், அதைச் செயற்படுத்தும் வகையில் தேவையான நூல், உபகரணங்கள் வாங்குவதும், பணியாளர்களை வேலையில் அமர்த்துவதும் நிறுவனத்தைப் பல துறைகளாகப் பிரிப்பதும் இன்றியமையாதவையாகும். உதாரணமாக, ஒரு நூலகத்தில் பல்வேறு வகையான பிரிவுகள் உண்டு. அவ்வாறே ஊழியர், நூலகக் கவனிப்பாளர், நூலக உதவியாளர், உதவி நூலகர், சிரேஷ்ட உதவி நூலகர் எனப் பலதரப்பட்ட அலுவலர்களும் உள்ளனர். எனவே நூலகத்தைப் பல பிரிவுகளாகப் பிரித்தல் ஒவ்வொரு பிரிவுகளுக்கும் ஏற்ற வகையில் அலுவலர்களை நியமித்தல் என்ற பல்வேறு பணிகளையெல்லாம் ஒன்று திரட்டிச் சுருக்கமாகக் கூறுதலே ஒழுங்கு அமைப்பாகும்.

7.3.அலுவலர்களை நியமித்தல்.
          இது அலுவலர்களை நூலகத்திற்குச் சேர்த்துக் கொள்வதனையும் அவர்களை நூலகத்தின் பல்வேறு பிரிவுகளிலும் சேவைக்கு அமர்த்துவதனையும் குறிக்கும். உதாரணமாக, நூலகத்தின் ஒரு பிரிவான பட்டியலாக்கம் பகுப்பாக்கப் பிரிவை எடுத்துக் கொண்டால் அங்கு துறைக்குப் பொறுப்பான உதவி நூலகர் அவரின் கீழ் கடமையாற்றும் நூலக உதவியாளர், நூலகக் கவனிப்பாளர், தொழிலாளர் எனப் பல தரப்பட்ட பிரிவினர் உள்ளனர். இவ் ஒவ்வொரு பிரிவுக்கும் தேவையான பணிகளை வரையறுப்பதும் அவர்;களுக்குரிய பயிற்சியளிப்பதும் அவர்களின் அடிப்படைக் கல்வித்தகைமைகளுக்கு ஏற்ப அவர்களது உத்தியோகத்தை வரையறுப்பதும் நூலக நிர்வாகத்தின் கடமையாக இருப்பதனால் அலுவலர்களை நியமித்தல் என்ற முகாமைத்துவ அடிப்படை கூறு நூலக முகாமைத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது எனலாம்.

7.4.இயக்குவித்தல்.

           இயக்குவித்தல் என்னும் செயல்முறை நூலகருக்குக் கீழ் கடமையாற்றும் அலுவலர்களுக்கு வழிகாட்டுதலையும் அவர்களின் பணிகளை மேற்பார்வை செய்தலையும் குறிக்கின்றது. இதனை மேல் நோக்காகப் பார்க்கும் போது எளிமை வாய்ந்ததாகத் தோன்றினாலும் நடைமுறையில் சிக்கல் வாய்ந்ததாகும். ஓவ்வொரு நிறுவனத்தின் முகாமையாளரும், தன் கீழ் கடமையாற்றும் அலுவலர்கள் ஒவ்வொருவரும் நிறுவனத்தின் சட்டம், ஒழுங்குமுறை ஆகியவற்றைக் கடைப்பிடிக்கும் வகையில் வழிகாட்டல் வேண்டும். அலுவலர் ஒவ்வொருவரும், தாம் பணி புரியும் நிறுவனத்தின் அமைப்பு முறையையும், துறைகளுக்கு இடையே உள்ள உறவு முறையையும், ஒவ்வொரு துறையினதும் பணிகளையும், தமது பணிகளையும், ஆணை உரிமைகளையும் நன்கு அறிந்து கொள்வார்களேயானால் முகாமையாளரின் இயக்குவிக்கும் பணி என்பது இலகுவானதாகின்றது.

7.5.ஒருங்கிணைத்தல்.

           ஒரு செயலுக்கான திட்டத்தை வகுத்து விட்டால் மட்டும் குறிக்கோளை நிச்சயமாக அடைந்து விட முடியும் என்ற உறுதி ஏற்பட்டு விடாது. ஒரு நிறுவனத்தில் உள்ள அலுவலர்களின் கூட்டான ஒருமித்த முயற்சியின் மூலமே குறிக்கோளை அடைய முடியும். தனிப்பட்ட ஒவ்வொருவரினதும் முயற்சிகள் ஒருங்கிணைக்கப்படும் போது தான் இவர்கள் ஒவ்வொருவரின் முயற்சியும் மற்றவரின் முயற்சிக்கு ஆதரவாக அமைவதாக இருக்கும். தனி நபர்களின் தனி முயற்சிகள் ஒருங்கிணைக்கப்படாவிடில் இவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தனிப்பட்ட பணிகளை மட்டுமே கருத்தில் கொண்டு செயலாற்றும் போது தங்களது சக அலுவலர்களின் முயற்சிகளை இழக்கவோ தடுக்கவோ கூடும். ஆகவே ஒவ்வொரு அலுவலரும் ஒரு குழுவாகக் கூட்டார்வத்துடன் செயலாற்றுமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது நிர்வாகத்தின் பொறுப்பாகும்.

7.6.அறிக்கை அனுப்புதல். (சுநிழசவiபெ)

           அறிக்கை அனுப்புதல் என்ற செயல்முறையின் கீழ் நிறுவனத்தின் உரிமையாளருக்கு அவ்வப்போது நிறுவனத்தில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பது பற்றி அறிவித்தல், நிறுவனத்தின் நடவடிக்கைகளை பதிவேடுகள் மூலமும், ஆய்வுகள் மூலமும், தெரியப்படுத்துதல் என்பன அடங்கும். பதிவேடுகளின் மூலம் தலைமை நூலகர் நூலகத்தின் சிறந்த செயல்பாடுகளைத் தனது பொறுப்பதிகாரிக்குத் தெரியப்படுத்த முடியும். அது மட்டுமன்றி  இத்தகவல்களைக் கொண்டு நூலக சேவையின் பயன்பாட்டையும் அவரால் மதிப்பிட முடியும்.

7.7.திட்டப்பட்டியல் தயாரித்தல்.

            திட்டப்பட்டியல் தயாரித்தல் என்பது மிகவும் பயன்பாடுடைய முகாமைத்துவக் கருவியாகும். கவனமாகத் திட்டமிடல், கணக்கியல், கட்டுப்படுத்தல் என்பன திட்டப்பட்டியலில் மிகவும் அவசியமானது. தலைமை நூலகர் என்பவர் நூலகத்தின் தேவைகளைத் தொடர்ச்சியான அடிப்படையில் பரீட்சிக்க வேண்டியிருப்பதுடன் அதற்கேற்ற நிதியையும் பெறுவதற்கு முயற்சி செய்தல் அவசியம்.

7.8.கட்டுப்படுத்தல்.

            கட்டுப்பாடு செய்தல், திட்டப்படி நடைபெற வழிவகுக்கின்றது. ஒரு முகாமையாளர் இதர பணிகளை உரிய முறையில் செவ்வனே செய்வாரானால், அவரைப் பொறுத்த வரை இப்பணி தேவையற்றது. ஆனால் தவறு செய்வது மனித இயல்பு என்பதற்கேற்ப பணியாட்கள் ஒரு சில தவறுகள் புரியலாம். புணியாளர்களுக்கிடையே உள்ள மன வேற்றுமை காரணமாகத் திட்டம் சரியாகச் செயற்படுத்தப் படாமல் போகலாம். திட்டம் பழைய தன்மை வாய்ந்தாக மாறலாம். இவை யாவும் தடுக்கப்பட்டு ஆரம்ப நிலையிலேயே சரி செய்யப்படாவிடில் நிறுவனம் மிக அதிமாகப் பாதிக்கப்படலாம். எனவே தான் கட்டுப்பாடு ஒவ்வொரு நிறுவனத்தின் ஆரம்பப் பகுதியிலும் மிக அவசியமாகின்றது. கட்டுப்பாட்டின் மூலம் திட்டத்தின் எந்த இடத்தில் தவறு நிகழ்ந்தது என்பதையும் அத்தவறுக்குப் பொறுப்பானவர் யார் என்பதையும் அறிந்து, தவறுகள் திருத்தப்படுகின்றன. இன்றைய நிலையில் கட்டுப்பாடு என்பது இன்றியமையாதது ஆகின்றது.


7.9.செயல் ஊக்கம் அளித்தல்.
           மற்றவர்களின் பணியை மேற்பார்வை செய்வதென்பது அதிகாரம் செலுத்துவது என்பதன்று. அவர்களுக்கு உரிய ஒத்தாசை வழங்கி, ஊக்கமளித்து அவர்களின் பிரச்சினைகளில் அக்கறை காட்டி அவற்றை தீர்ப்பதற்கு தக்க ஆலோசனை கூறி வழிகாட்டியாயிருந்து, அவர்களுக்குத் தலைமை ஏற்கும் பணியே நிர்வாகத்தினர் செய்ய வேண்டிய பணிகளிலெல்லாம் தலையாயது. தொழிலாளர் உயிருள்ள இயந்திரங்களல்லர். அவர்களும் மனிதர்கள் தான். அவர்களுக்கும் மனித உணர்ச்சிகளும், ஆசாபாசங்களும் உண்டு என்பதை உணர்ந்து அவற்றுக்கு மதிப்பளித்து, தனக்குக் கீழப் பணிபுரிவோரின் மனதில் அமைதியையும் மகிழ்ச்சியையும் வளர்த்துக் கொண்டு அவர்கள் தங்கள் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுமாறு ஊக்குவித்தால் தான் உயர்ந்த பட்சமான உற்பத்தியைப் பெற இயலும். தொழிலாளர்களின் மிகச் சிறந்த ஆற்றலையும் உழைப்பையும் பெறுவதற்கு ஊக்கம் நிறைந்த குழுக்களாக அவர்களை மாற்றுவது அவசியம். இந்த வகையிலேயே ஊக்குவித்தல் என்பது நூலக முகாமைத்துவத்தின் முக்கியமான மூலகமாக இருப்பதுடன் சிறந்த ஒரு சேவையை வாசகருக்கு வழங்குவதற்கு மிக உதவியான காரணியாகவும் கருதப்படுகின்றது.

8.நூலக முகாமைத்துவத்தின் படி நிலைகள். (டுநஎநடள ழக டுiடிசயசல அயயெபநஅநவெ)

           ஏனைய நிறுவனங்களைப் போன்றே நூலகத்திலும் மூன்று விதமான முகாமைத்துவப் படிநிலைகளை நாம் காண முடியும். அவை பின்வருமாறு:

1. மேல்நிலை முகாமைத்துவம்  Top level management
2. இடைநிலை முகாமைத்துவம்  Middle level management
3. கடைநிலை முகாமைத்தவம்  Low level management
                  மேல்நிலை முகாமைத்துவத்துக்குள் தலைமை நூலகர், நூலகத்தின் தலைவர், இயக்குநர், முதுநிலை அலுவலர்கள் என்போர் தரம் ஒன்றிலும், உதவித் தலைமை நூலகர், முதுநிலை உதவிநூலகர்கள் தரம் இரண்டிலும் அடங்குவர். இவர்களது பணி நிறுவனத்தின் நோக்கங்களை தனக்குக் கீழ் கடமையாற்றும் ஒவ்வொரு துறைக்கும் பொறுப்பான உதவி நூலகர்களை இயக்குவித்தல் ஆகும். இடைநிலை முகாமைத்துவத்துக்குள் நூலகத்தில் காணப்படும் ஒவ்வொரு துறைகளுக்கும் பொறுப்பான உதவி நூலகர்கள் அடங்குவர். இவர்களது பணி துறைகளுக்குரிய பணிகளை தமக்குள் கடமையாற்றும் அலுவலர்களை நேரடியாக மேற்பார்வை செய்வதன் மூலம் பெற்றுக் கொள்வதாகும். கடைநிலை முகாமைத்துவத்திற்குள் முதுநிலை நூலக உதவியாளர்கள், நூலக உதவியாளர்கள் என்போர் அடங்குவர்.

9.நூலகமும் அதன் நிர்வாகியும்

           நூலகம் என்பது குறிக்கப்பட்ட சில எதிர்பார்ப்புகளுடன் கட்டி எழுப்பப்படுகின்ற, குறிக்கப்பட்ட சில தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வாய்ப்பை வழங்குகின்ற, குறிக்கப்பட்ட உண்மையான உள்ளுறவுள்ள (ஊநசவயin யஉவரயட யனெ pழவநவெயைட) நடவடிக்கைகளை கட்டுப்படுத்துகின்ற ஒரு நிறுவனமாகக் கருதப்படுகின்றது. நூலகங்கள் செயல்படு பிரிவுகளாக அமைக்கப்படும் போது அங்கே நூலகர் என்பவர் இச்செயல்படு பிரிவுகளின் தொழிற்பாடுகளுக்கும் அங்கு கடமையாற்றும் அலுவலர்களுக்குமிடையில் ஒரு பாலம் போல் செயல்படுகின்றார். அது மட்டுமன்றி நூலகர் நூலக அமைப்பின் மிக உயர்ந்த அளவிலான குறிக்கோளை அடைவதற்காகத் தங்களுக்குக் கீழ்க் கடமையாற்றும் அலுவலர்களுக்கு ஊக்கமும் செயல்திறனும் அளிப்பவர்களாக இருப்பதுடன் அதற்கான உந்து சக்தியை வழங்குபவர்களாகவும் உள்ளனர். எனவே நூலகர் நூலகத்திற்கும் அதன் அலுவலர்களுக்கும் இடையில் ஒரு இணைப்பை உருவாக்குவதன் மூலம் அமைப்பு ரீதியான கடமையில் அவர்கள் தமது சக்தியை செலவு செய்வதற்கு விருப்பப்படும் படி செய்ய முடியும்.

10.நூலகமும் அதன் அலுவலரும்.

            நூலகத்தினை ஒரு கட்டுமான அமைப்பாகவும் அதே நேரம் தனிப்பட்ட ஒவ்வொரு அலுவலரையும் இன்னொரு கட்டுமான அமைப்பாகவும் நாம் கருதுவோமாயின் இந்த இரு வேறுபட்ட அமைப்புக்களையும் ஐக்கியப்படுத்துகின்ற அல்லது ஒருங்கிணைக்கின்ற வேலையை செய்யும் நூலகர் மிகப் பிரதானமான ஒரு இடத்தை வகிக்கின்றார் எனலாம். நூலக அமைப்பானது சில குறிக்கப்பட்ட நோக்கங்களையும் கொள்கைகளையும் குறிக்கோளையும் இலக்காகக் கொண்டது. அது போல் அந்த நூலகத்தில் கடமையாற்றும் ஒவ்வொரு தனிப்பட்ட அலுவலரும் தமக்கென்று சில குறிக்கப்பட்ட தேவைகளைக் கொண்டிருக்கின்றார். இந்த வேறுபட்ட இருவகையான கட்டுமான அமைப்புகளும் தங்களது தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும் பட்சத்தில் தான் இணைந்த, கூட்டுறவு முறையிலான துழiவெ ஊழழிநசயவழைளொip  ஒரு அமைப்பாகத் தோற்றம் பெறுகின்றன. இவ்வாறு இல்லாவிடில் ஒரு நிறுவனமானது அதன் குறிக்கோள், நோக்கம், இலக்குகளை அடைவதற்கு தனிப்பட்ட ஒருவனது சேவை அவசியம் என்பதற்காக அவனைச் சம்பளத்துக்கு வேலைக்கு அமர்த்துகின்றது என்றோ அதே போல ஒவ்வொரு தனிப்பட்ட அலுவலரும் அவரது சொந்தத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதற்கு நிறுவனம் உதவும் பட்சத்தில் தனது சேவையை வழங்கத் தயாராக இருக்கின்றான் என்றோ நாம் கொள்ள முடியும். எனவே, இங்கு ஒரு நிறுவனத்திற்கும் அதன் ஒவ்வொரு தனிப்பட்ட அலுவலர்களுக்குமிடையில் ஒரு பரஸ்பர உறவுமுறை சுநஉipசழஉயட சநடயவழைளொip   நிலைபெற்று இருப்பதை நாம் காணலாம். ஒரு நூலகத்துக்கும் அதன் ஒவ்வொரு அலுவலர்களுக்குமிடையிலான இந்த பரஸ்பர உறவுமுறை உளவியல் சார்ந்ததொன்றாகும். ஏனெனில் இது எழுத்தில் வடிக்கப்பட்டதோ அல்லது பேச்சில் சொல்லப்படுவதோ அல்ல. நூலகமும் அதன் அலுவலரும் இந்த பரஸ்பர உறவு முறைக்குள் உட்பரவேசிக்கும் போது, இரு அமைப்புகளும் ஒவ்வொருவரும் எதை வழங்குவார்கள், எதைப் பெற்றுக் கொள்வார்கள் என்ற சில எதிர்பார்ப்புகளை முன்வைத்துக் கொண்டு இந்த உறவுமுறையை அணுகுகின்றனர். இந்த எதிர்பார்ப்புகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

(அ) ஒரு நிறுவனத்தினால் வழங்கப்படக் கூடியதாக இருப்பதும் ஒரு தனிப்பட்ட அலுவலரினால் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருப்பதுமான எதிர்பார்ப்புகள்.
1. ஊதியம்.
2. சொந்த அபிவிருத்திக்கான வாய்ப்புக்கள்.
3. சிறந்த சேவையை இனங்காணலும் அதற்கான அங்கீகாரத்தை வெளிப்படுத்தலும்.
4. அத்தியாவசியமான பாதுகாப்பு.
5. சினேகபூர்வமானதும் ஒருவருக்கொருவர் உதவி அளிக்கக் கூடியதுமான சூழல்.
6. நல்ல முறையில் நடாத்தும் தன்மை.
7. கருத்தாழம் மிக்கதும் குறிக்கோளை உடையதுமான சேவை.

(ஆ) ஒரு  தனிப்பட்ட அலுவலரினால் வழங்கப்படக் கூடியதும் ஒரு நிறுவனத்தினால் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருப்பதுமான எதிர்பார்ப்புக்கள்.
1. நேர்மையான நாளாந்த உழைப்பு.
2. அமைப்புக்கு விசுவாசமாக இருத்தல்.
3. தன்முயற்சித்திறன் ஐnவையைவiஎந  
4. நிர்வாகத்தின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்படல்.
5. வேலைப்பயன்பாடு துழடி நககநஉவiஎநநௌள
6. அலுவலர் புதிதாக ஒன்றைப் பயில்வதற்கும், அதனை அபிவிருத்;தி செய்வதற்குமான விருப்பமும் இணக்கமும்.

முடிவுரை.
           அரச நிறுவனங்களாயினும், தனியார் நிறுவனங்களாயினும் சமூக சேவை, கல்வி நிறுவனங்களாயினும் அங்கு முகாமைத்துவம் என்பது மிகவும் முக்கியமான ஒரு கருவியாக கையாளப்படுகின்றது. முனித சமூகத்தின் இயற்கையான தொழிற்பாடுகளுடன் இது தொடர்புடையதாக இருப்பதன் காரணமாகவே இதன் முக்கியத்துவம் அளவிறந்து காணப்படுகின்றது எனலாம். இந்த வகையில் சேவையை மட்டும் முக்கிய குறிக்கோளாகக் கொண்ட ஒரு சமூக நிறுவனமாக நூலகமும் கூட. அது பொதுசன நூலகமாயினும், பாடசாலை, பல்கலைக்கழக நூலகமாயினும் முகாமைத்துவக் கொள்கைகளை பின்பற்றுவதன் மூலம் அதனது அளப்பரிய நோக்கமான நூலக சேவையை திறம்பட நடாத்த முடியும். சுpக்கலானதும் நுண்முறைகளுடன் கூடியதுமான நூல்களின் தொகை ரீதியானதும், அடிப்படையிலானதுமான வளர்ச்சி நூலக முகாமைத்துவக் கோட்பாடுகளிலும் மிகப் பெரிய அளவு மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதுடன் விஞ்ஞான முறை சார்ந்த நூலக முகாமைத்துவத்தின் தோற்றத்திற்கு அடி கோலியிருப்பதை வளர்ந்து வரும் எமது நூலக சேவையில் இருந்து நாம் கண்கூடாகக் காண முடியும்.

உசாத்துணை நூல்கள்.

  1. முத்தையன், இராம. மேலாண்மைத் தத்துவங்கள், சென்னை: தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம், 1976.
  2. GARLISLE, Howard  M. Management: Concept and situations. Chicage: Science Research Associates, 1976.
  3. HARROLD’s Librarian’s Glossary and Reference Book. Comp. by. R. Prythereh. England: Gower Publishing, 1987.
  4. Herald of Library Science. Vol. 24, No. 3, 1985,July.
  5. KUMAR, Krishan. Library Manual. NowDelhi: Vikas, 1982.
  6. MITTAL, R.L. Library Administration: Theory and Practice. New Delhi : Metropolitan, 1964.
  7. SHARMA, J.S. Library Organization. New Delhi: Vikas, 1978.

Saturday, September 13, 2014

ஈழத்தமிழ்ச் சமூகமும் ஆவணவாக்கமும்



ஈழத்தமிழ்ச் சமூகமும் ஆவணவாக்கமும்

1.அறிமுகம்
இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு. நிகழ்வு வரலாறாகுவதற்கு அது ஏதோ ஒரு வகையில் பதியப்படுவது அவசியமாகிறது. பதியப்படாதவை அனைத்தும் மறைந்து போகின்றது. உரு, வரி, வடிவம், அலை ஆகிய நான்கு வகைப்பட்ட தகவல் வெளிப்பாட்டு வடிவங்களினூடாக இந்த நிகழ்வு பதியப்படுவதும், பாதுகாக்கப்படுவதும் அடுத்த தலைமுறைக்குக் கையளிக்கப்படுவதும் தொடர்ச்சியாக நடைபெறும்போது சமூகம் ஒன்றிற்குரிய அறிவுத் தொகுதி அதன் அறிவிலும் ஆழத்திலும் கனதிமிக்கதாக மாறுகின்றது. சமூகம் ஒன்றின் ஒட்டுமொத்த அடையாளத்தையும் சமூக உறுப்பினர் ஒவ்வொருவரும் அறிந்து கொள்வதற்கு ஒன்றுக்கொன்று தொடர்புடைய நிகழ்வுகள் வௌ;வேறு காலங்களில் வௌ;வேறு வடிவங்களில் பதியப்படுவதும் அவை பொதுப்பயன்பாடு கருதி ஓரிடப்படுத்தப்படுவதும் அவசியமானது.  
ஒரு சமூகத்தை அடையாளத்தை உறுதி செய்வது அந்த சமூகத்தின் எழுத்துருவப் பதிவேடுகள். இது வெளியிடப்பட்டதாகவோ வெளியிடப்படாததாகவோ இருக்கலாம். தனிமனிதனின் அடையாள அட்டை, தகுதிச் சான்றிதழ்கள், அவனது நாட்குறிப்பேடு, காணி உறுதி போன்றவை வெளியிடப்படாத ஆவணம். தனிமனிதனின் சிந்தனையிலிருந்து உருவாக்கம் பெற்று அது அச்சு வடிவம் பெறும்போது அது வெளியிடப்பட்ட ஆவணம். தனிமனிதன் போன்றே இந்த ஆவணங்கள் குடும்பம் சார்ந்தவை, சமூகம் சார்ந்தவை, நாடு சார்ந்தவை எனப் பரந்;துபட்டதாகவும், தொடர் செயற்பாடு கொண்டதாகவும் இருக்கும்.

ஈழத்தமிழ்ச் சமூகமும் ஆவணவாக்கமும்;
இலங்கைத் தமிழர் என்ற சொற்பதம் உள்நாடு சார்ந்து இலங்கைத் தீவின் வட  மற்றும் கிழக்கு மாகாணங்களில்  வாழும்; தமிழர், கண்டிப் பிரதேசத்தில் வாழும்; மலையகத் தமிழர், கொழும்பு மற்றும் கொழும்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும்; கொழும்புத் தமிழர், கிழக்கு மாகாணத்தில் செறிவாகவும் இலங்கையில் பரவலாகவும் வாழும் இஸ்லாமியத் தமிழர் என நான்கு வகையான தமிழரையும் வெளிநாடு சார்ந்து உலகெங்கிலும் பரந்து வாழும் புலம்பெயர் தமிழரையும்  உள்ளடக்குகின்றது.   ஈழத்து இலக்கிய வரலாற்றில் ஈழத்துப் பூதந்தேவனார் என்ற பெயர் 3000 ஆண்டு கால பழமையை கொண்டிருந்தபோதும் கடந்த இரு நூற்றாண்டு கால வரலாறே எமது கைக்கும் கிடைக்கும் வரலாறாக உள்ளது என்பதைக் கருத்தில்கொண்டு ஈழத் தமிழ்ச் சமூகம் ஆவணப்படுத்தல் செயற்பாட்டில் மிகப்பலவீனமான சமூகம் என்றதொரு குற்றச்சாட்டும் உண்டு. ஈழத்தமிழர் வாழ்வியலில் தனிநபரை விட சமூகத்திற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், தகவலைப் பதிந்து வைப்பதற்கு ஏற்ற நிரந்தர மற்றும் நீடித்துழைக்கக்கூடிய சாதனங்களின் இல்லாமை, வாய்மொழிப் பாரம்பரியத்தில் அதிகம் தங்கியிருக்கும் பண்பு போன்றவை ஆவணவாக்கச் செயற்பாடு சார்ந்து பலவீனமான சமூகம் என்ற கருத்துநிலைக்குள் ஈழத்தமிழ்ச்சமூகத்தை சுலபமாக தள்ளியிருப்பதும், கடந்த இரு நூற்றாண்டு கால வரலாற்று ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டே அதன் ஆவணவாக்கச் செயற்பாட்டை அறிவதும் சாத்தியமாகிறது.

ஆவணவாக்கம் என்ற கருத்துநிலை ஈழத்தமிழ்ச்சமூகத்திற்குப் புதியதொன்றல்ல. பதப்படுத்திய பனையோலைகள் மட்டுமே தாள்களின் கண்டுபிடிப்புக்கு முந்திய ஈழத்தமிழ்ச்சமூகத்தின் ஒரேயொரு  பதிவு ஊடகமாக இருந்தவகையில் படியெடுத்தல் மூலமான ஆவணவாக்கச் செயற்பாடு பரவலாக இருந்திருக்கிறது என்பதையே நாவலர் மற்றும் சி.வை.தாவின் பதிப்புரைகளில் ஒரே விடயம் தொடர்பாக பல ஏட்டுப் பிரதிகள் பயன்பாட்டில் இருந்தமை புலப்படுத்துகின்றது. ஆரம்பகாலத்தில்  அரச குடும்பத்துடன் மட்டுமே  மட்டுப்படுத்தப்பட்டிருந்த சிந்தனைப் பதிவேடுகளின் பயன்பாடு, இலவசக் கல்வி, தாள்களின் அறிமுகம் மற்றும் அச்சின் கண்டுபிடிப்பு போன்றவற்றால்  பொதுசனமயப்படுத்தப்பட்ட காலமுதற்கொண்டு இன்றுவரை பல பண்புகளைக் கொண்டிருக்கிறது.

1.1 ஆவணவாக்கம்: வரைவிலக்கணம்
ஆவணவாக்கம் அல்லது ஆவணப்படுத்தல் என்ற பதம் பரந்து விரிந்த பொருள் கொண்டது. பொதுவான நோக்கில் தரவுகள் நிகழ்வுகள் தகவல்கள் மற்றும் அறிவு ஆகியவற்றைப் பதிகின்ற ஒரு செயற்பாடே ஆவணவாக்கம் (னுழஉரஅநவெயவழைn) என்ற பெயர் கொண்டழைக்கப்படுகின்றது. நூலகவியல் நோக்கில் ஆவணங்களை பெறுதல் கையாளுதல், தொடர்புபடுத்தல் போன்ற செயல்முறைகள் உள்ளடங்கிய கற்கையாக இது பொருள் கொள்ளப்படுகின்றது. (ர்யசசழன 1987). நிகழ்நிலை நூலகத் தகவல் அறிவியல் அகராதி ஒன்று ஆவணவாக்கம் சார்ந்து பொதுநோக்கு, நூலகவியல், தகவல் அறிவியல், புலமை சார் வெளியீடுகள், தரவுச் செய்முறை மற்றும் ஆவணக்காப்பகம் என ஆறு வகையான வரைவிலக்கணங்களைத் தருகின்றது. பொதுவான நோக்கில் எந்தவொரு செய்முறை சார்ந்த முறையான எழுத்துவடிவ விளக்கம் ஆவணவாக்கம் என பொருள் கொள்ளப்படுகின்றது. நூலகவியல் நோக்கில் நிறுவன வளங்களை பாதுகாக்குமுகமாகவும் ஆய்வுக்கு உதவும் வகையிலும் விசேட ஆவணங்களை குறிப்பாக அறிவியல், தொழில்நுட்ப மற்றும் சட்டம் சார்ந்த ஆவணங்களை முறைப்படி சேகரித்தல் ஒழுங்கமைத்தல், சேமித்தல், மீள்பெறுகை செய்தல் மற்றும் பரவலாக்கம் செய்தல் ஆகிய செய்முறைகளை உள்ளடக்குகின்றது. தகவல் அறிவியல் சார்ந்து புலமைசார் வெளியீடு என்ற வகையில் ஆய்வு முயற்சிக்கு துணை போகின்ற தகவல்களை மேற்கோள் காட்டும் நடைமுறை ஆவணவாக்கம்; எனப் பொருள் கொள்ளப்படுகின்றது. ஆவணக் காப்பகங்களில் உசாத்துணை நோக்கத்துக்காகவும் பாவனையாளருக்கான தேடுதல் கருவியாக உதவும் வகையிலும் பதிவேடுகளுக்கு விபரங்களைத் தயாரித்து ஒழுங்கமைக்கும் செயற்பாடாக கருதப்படுகின்றது. தரவுச் செய்முறையில் பொறிமுறை வாசிப்பு தரவுக் கோவைகளை உருவாக்குதல், செயற்படுத்தல், பராமரித்தல் போன்றவற்றுக்கு தேவைப்படுகின்ற விரிவான தகவல்களாக இது பொருள் கொள்ளப்படுகின்றது.(சுநவைண  2004).
ஆவணவாக்கம் என்ற பதம்  அது பயன்படுத்தப்படும் தகுதியினடிப்படையில் வௌ;வேறுபட்ட பொருள் கொண்டதென்று கூறும் கீழைத்தேச நூலகவியலின் தந்தையான எஸ்.ஆர் இரங்கநாதன்; நூல்களின் உயிருடன் அதாவது கருத்துசார் உள்ளடக்கத்துடன் இணைந்து செய்யப்படும் பணியை - குறிப்பாக  விசேட பொருட்துறை ஒன்றில் வெளியிடப்பட்ட நூல்கள் மற்றும் பருவ இதழ்க்கட்டுரைகளின் பேரினநுண்ணினக் கருத்துப்பொருளின் பட்டியை ஆவண நூல்விவரப்பட்டியல் எனப்பெயரிடுவதுடன் அத்தகைய பட்டியானது விசேட பொருட்துறை வல்லுனர்களின் தேவைகளை பூர்த்தி செய்யுமுகமாக தயாரிக்கப்படும்போது அது ஆவணவாக்கப்பட்டி என்றும் அத்தகைய பட்டியை உருவாக்கும் கலை ஆவணவாக்கம் எனவும் குறிப்பிடுகின்றார் (சுயபெயயெவாயn 1974). 

ஆய்வும் ஆவணவாக்கமும்
ஈழத்தமிழ் இலக்கிய உருவாக்கங்களில் காணப்படும் அடிப்படைப் பிரச்சினைகளில் முக்கியமானது ஆய்வுக்கும் ஆவணவாக்கத்துக்கும் இடையிலான தனித்தன்மைகள், வேறுபாடு மற்றும் உறவுநிலைகளைத்  தெளிவாகப் புரிந்து கொள்ளாமையாகும். இதனால் ஆவணவாக்கப் பண்புகளை மிகுதியாகக் கொண்ட இலக்கியங்கள் ஆய்வு நூல் எனப் படைப்பாளரால் விதந்துரைக்கப்படுவது பொதுவான போக்காக உள்ளது. ஆய்வு என்பது புதிதாக ஒன்றை உருவாக்குவது. ஏற்கனவே உள்ள அறிவின் இருப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்டு புதிய அறிவை உருவாக்குவதற்கு அடிப்படையாக இருப்பது. ஆவணவாக்கம் என்பது ஏற்கனவே உருவாக்கப்பட்ட அறிவை உள்ளது உள்ளபடியேயோ, சுருக்கியோ, விரித்தோ, குறை களைந்தோ, தொகுத்தோ மீள உருவாக்கப்படுவது. ஆய்வு என்பது புதிய கண்டுபிடிப்பாகவோ, ஏற்கனவே கண்டுபிடித்த ஒன்றின் தொடர்ச்சியாகவோ அன்றி அதன் இற்றைப்படுத்தலாகவோ அமையலாம். ஆவணவாக்கம் இன்றேல் ஆய்வு இல்லை. ஆய்வுக்கு மூலமே ஆவணவாக்கம். இதன்காரணமாகவே ஆவணவாக்கம் அறிவியல் துறையாக (னுழஉரஅநவெயவழைn ளுஉநைnஉந) ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. தனி நிறுவனமாகவோ அல்லது நிறுவனத்தின் ஒரு பகுதியாகவோ இயங்கி தகவல் வளங்களைப் பெற்றுக் கொள்ளுதல், செய்முறைப்படுத்துதல், பாதுகாத்தல், சுருக்கப்படுத்தல், சாராம்சம் தயாரித்தல், சொல்லடைவுபடுத்தல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ளும் நிலையங்கள் ஆவணவாக்க நிலையங்கள் என  அழைக்கப்படுகின்றன. குறிப்பிட்ட துறை சார்பாக வெளியாகின்ற அண்மைக்காலத் தகவல்களைச் சேகரித்து முறைப்படுத்தி ஒழுங்குபடுத்தும் சாதாரண நூல்விவரப்பட்டியல் முதற்கொண்டு  குறிப்பிட்ட துறை சார்பாக வெளியிடப்படுகின்ற அண்மைக்கால வெளியீடுகளை தேடிக் கண்டுபிடித்துச், சேகரித்து, ஒழுங்குபடுத்தி, அத்துறையின் வளர்ச்சிநிலை பற்றிய மதிப்பீட்டை புதிய ஆக்கமாக ஆய்வாளருக்கு வழங்கும் பொருட்படிநிலையறிக்கைகள் (ளுவயவந-ழக-வாந-யசவ-சுநிழசவ)  வரை இவற்றின் ஆவணவாக்கச் செயற்பாடுகள் பரந்து பட்டதாகவும் ஆழமானதாகவும் அமையும். ஆவணவாக்கத்தின் மிகச் சிறந்த பெறுபேறாக உருவாக்கப்படும் பொருட்படிநிலை அறிக்கைகள் ஆய்வுக்கான அத்திவாரமாக அறிவியல் சார்ந்த துறைகளில் முக்கியத்துவப்படுத்தப்படுத்தப்படுவதுடன் இதற்கான உருவாக்கச் செலவு ஆயிரங்களிலிருந்து இலட்சங்கள் வரை கூடிக் குறையும்.  துரதிருஷ்டவசமாக ஈழத்தமிழ்ச்சமூகத்தின் பட்ட மற்றும் பட்டப்பின்படிப்பு சார்ந்த ஆய்வுகளில் பெரும்பாலானவை ஆவணவாக்கச் செயற்பாடுகளுடன் மட்டுப்படுத்தபட்டுவிடுகின்ற, ஆய்வுக்கான ஆரம்ப முயற்சிகளாக இருப்பதே கண்கூடு. 

1.2 ஆவணவாக்கம் - வகைகள்
பரந்த நோக்கில் ஆவணவாக்கத்தை மூலவகை ஆவணவாக்கம் (ளுழரசஉந னுழஉரஅநவெயவழைn) கருவி வகை ஆவணவாக்கம்; (வுழழட வலிந னழஉரஅநவெயவழைn) என இருபெரும் பிரிவாக வகைப்படுத்தலாம். மூல வகை ஆவணவாக்கத்தில் தரவு, நிகழ்வு மற்றும் தகவல்கள் கூடியவரை உள்ளது உள்ளபடியே பதியப்படுகின்றன. இது அன்றைய சுவடிப்படியெடுப்பு முதற்கொண்டு இன்றைய முழுப்பாட ஆவணப்படுத்தல் (குரடட வநஒவ னுழஉரஅநவெயவழைn) செயற்பாடுவரை உள்ளடக்கும். ஏற்கனவே உள்ள மூல ஆவணத்தை பாதுகாப்பு மற்றும் பயன்பாடு கருதி படியெடுத்தல், குறிப்பிட்ட ஒரு ஆவணம் பல பிரதிகளைக் கொண்டிருக்கும் பட்சத்தில் அவற்றைப் பரிசோதித்து, ஒப்பு நோக்கி மூல ஆவணத்தை இனங்கண்டு பதிப்பித்தல், பலதரப்பட்ட வெளியீடுகளிலும் வெளிவந்த குறிப்பிட்ட படைப்பாளரின் ஆக்கங்களை அல்லது குறிப்பிட்ட துறைசார்ந்த ஆவணங்களைத் தேடிச் சேகரித்து தொகுத்து வெளியிடுதல், கள ஆய்வின் மூலம் வாய்மொழி வரலாறுகள் மற்றும் பாடல்களைப் பதிதல், பண்பாட்டு நிகழ்வுகளை ஆவணப்படுத்தல் போன்றவை மூலவகை ஆவணவாக்கத்தில். கருவி வகை ஆவணவாக்கமானது ஆய்வாளர்களின் இலகுவான பயன்பாட்டைக் கருத்திற் கொண்டு குறிப்பிட்ட படைப்பாளர் சார்ந்த அல்லது துறை சார்ந்த இலக்கியங்களை முறைப்படி பட்டியலிடுதல் என்பதாகும். இது ஒரு நூலகம் அல்லது தகவல் நிலையத்திலுள்ள அனைத்து ஆவணங்களின் விபரங்களைப் பட்டியலிடுகின்ற நூலகப் பட்டியலாகவோ அல்லது குறிப்பிட்ட துறை சார்ந்து அல்லது படைப்பாளர் சார்ந்து உருவாக்கப்படும் நூல்விபரப்பட்டியல் மற்றும் சொல்லடைவு, சாராம்சச் செயற்பாடாகவோ இருக்கும்.

ஆவணவாக்கத்தின் பண்புகளின் அடிப்படையில் பதிப்புசார் ஆவணவாக்கம் தொகுப்புசார் ஆவணவாக்கம் என்ற இருபெரும் பண்புகளாக வகைப்படுத்தலாம். பொதுவான நோக்கில் தொகுப்புப் பணி என்பது பரந்த பொருள் கொண்டது. குறிப்பிட்ட பொருள் சார்ந்த தரவுகள், தகவல்கள் நிகழ்வுகள் போன்றவற்றை பலதரப்பட்ட ஆவணம் சார்ந்த மற்றும் ஆவணம் சாராத தகவல் வளங்களிலிருந்து தேடிச் சேகரித்து பதிதலை இது குறிக்கின்றது. நூலகவியல் நோக்கில் தொகுப்புப் பணி என்பது படைப்புகளின் தொகுப்புகளுடன் மட்டுப்படுத்தப்பட்டுவிடுகின்றது. இது தனித்த ஒரு படைப்பாளரின் பல ஆக்கங்களை தொகுத்தலாகவோ அல்லது பல படைப்பாளரின் ஆக்கங்களின் தொகுப்பாகவோ அமையக் கூடியது. மூல ஆவணத்தில் எந்தவொருமாற்றத்தையும் செய்யாது இது மேற்கொள்ளபடுவது. பரந்த நோக்கில் குறிப்பிட்ட கால வரையறையில் குறித்த துறை சார்நத அல்லது குறித்த படைப்பாளர் சார்ந்த ஆக்கங்களின் விபரங்களைப் பட்டியலிடுகின்ற செயற்பாடும் தொகுப்புபணியாகவே பார்க்கப்;படுகின்றது. பதிப்புப் பணி என்பது தமிழ்ச் சூழலில்; பலதரப்பட்ட வகையில் பொருள் கொள்ளப்படுகின்றது. நூல் ஒன்றை புதிதாக உருவாக்கி அதனை வெளியிடும் செயற்பாடு மற்றும் அச்சிடுதல் செயற்பாடு போன்றவையும் பதிப்புப் பணி என்றே பொருள்கொள்ளப்படுகின்றது. இங்கு அச்சிடுதல் (pசiவெiபெ)இ பதிப்பித்தல் (நனவைiபெ)இ வெளியிடுதல் (Pரடிடiளாiபெ)இ மீள்பதிப்பு (சுநிசiவெ) ஆகிய நான்கு பதங்களுக்குமிடையிலுள்ள வேறுபாடு தொடர்பான தெளிவு அவசியமானது.  பதிப்பு வேறு. வெளியீடு வேறு. ஏற்கனவே உள்ள ஒன்றை திருத்தம் செய்தோ அன்றி செய்யாமலோ மீள வெளியிடுவது பதிப்புப் பணி. ஆக்கம் ஒன்றை அந்த ஆக்கத்தின் படைப்பாளரோ அல்லது வேறு தனிநபரோ அல்லது நிறுவனமோ பொறுப்பேற்று வெளியிடுவது வெளியீட்டுப் பணி. வெளியிடுவதற்கான அச்சிடுதல் பணிகளை மேற்கொள்வது அச்சிடுதல் பணி. வெளியிட்ட பிரதிகள் போதாதபோது அதனை இற்றைப்படுத்தாமலோ, மீளாய்வு செய்யாமலோ அப்படியே மீள வெளியிடுவது மீள்பதிப்பு.  சமூகத்தில் குறிப்பிட்ட ஆக்கத்தின் ஆசிரியர் அறியப்படாதவிடத்து பாதுகாப்பு நோக்கங்கருதியும் பயன்பாடு கருதியும் அதனைப் மீளப்படியெடுத்தல், பருவ இதழ்களில் அல்லது மாநாட்டு வெளியீடுகளில் வெளியிடும்பொருட்டு பதிப்புக்குழு ஒன்றினூடாக ஆய்வுக் கட்டுரைகளை அதன் ஆசிரியரைக் கொண்டே திருத்துவித்தல், பலதரப்பட்ட வெளியீடுகளிலும் வெளிவந்த குறிப்பிட்ட துறைசார்ந்த அல்லது குறிப்பிட்ட படைப்பாளர் சார்ந்த ஆக்கங்களை தேடிச் சேகரித்து ஒழுங்குபடுத்தி வெளியிடுதல் போன்றவை பதிப்புப் பணிகளில் உள்ளடங்கும். பதிப்புப் பணியானது பலதரப்பட்ட பண்புகளையும் பல படிநிலைகளையும் கடந்து வந்திருக்கிறது. சுவடிகள் மற்றும் நூல்களிலிருந்து எழுதி எடுத்து பாதுகாத்தல், சுவடிகள் கையெழுத்துப் பிரதிகளாக தாள்களில் அல்லது சுவடிகளில் இருப்பவற்றை அப்படியே அச்சு வடிவத்துக்கு மாற்றுதல், பல சுவடிகளை ஒப்பு நோக்கி பாடவேறுபாடுகளை உள்ளடக்கி மீள வெளியிடுதல்இ ஒரு ஆக்கம் சார்ந்து எழுதப்படுகின்ற பல்வேறு ஆக்கங்களை தொகுத்து வெளியிடுதல், ஒரு ஆக்கத்தை பயன்படுத்துவதற்கான பல்வேடு தேடல் வழிமுறைகளை ஆக்கத்தின் முன்னே அல்லது பின்னே  உருவாக்குதல் போன்ற பல்வேறு அம்சங்கள் பதிப்புப் பணியில் உள்ளடங்குகின்றன.

ஆவணத்தின் உருவமைப்பு சார்ந்து இது சுவடிகள், பத்திரிகைகள், நூல்கள், சஞ்சிகைகள், இலத்திரனியல் வளங்கள் போன்ற நூலுருச் சாதனங்களை ஆவணப்படுத்தலை குறிக்கிறது. தொழிற்பாடு சார்ந்து நிகழ்வுகள் தரவுகளைப் பதிதல், ஏற்கனவே உருவாக்கப்பட்ட இலக்கியங்களை பதிப்பித்தல், தொகுத்தல், சொல்லடைவுபடுத்தல், சாராம்சப்படுத்தல் போன்றன உள்ளடங்குகின்றன. ஆவணப்படுத்தலின் வியாபகத் தன்மை சார்ந்து தனிமனிதன், குடும்பம், சமூகம், நாடு என்ற வகையில் இந்த ஆவணவாக்கச் செயற்பாடு நடைமுறையில் உண்டு.


2. ஆய்வின் நோக்கம், பிரச்சனை மற்றும் ஆய்வுமுறைமை
இந்த ஆய்வின் நோக்கம் ஈழத்தமிழ்ச் சமூகத்தின் ஆவணவாக்கப்பண்புகளை மீள்பார்வை செய்து இனங்காணலும் முறைப்படி வகைப்படுத்தலுமாகும். இவ்வாய்வானது ஈழத்தமிழ்ச் சமூகத்தின் ஆவணவாக்கம் தொடர்பான பேணப்பட்டுவரும் தகவல்களின் அடிப்படையிலான விரிவான இலக்கியமீளாய்வின் வழி பெறப்பட்டு, நேர்காணல்கள் மற்றும் கலந்துரையாடல்கள் மூலம் செவ்வைபார்க்கப்பட்ட  தரவுகளைத் தேவைக்கேற்ப வரலாற்று, விவரண உத்திகளைப் பயன்படுத்திப் பகுப்பாய்வு செய்து ஈழத்தமிழ்ச் சமூகத்தின் ஆவணவாக்கப்பண்புகளை மீள்பார்வை செய்து இனங்காணவும் முறைப்படி வகைப்படுத்தவும் முனைந்து நிற்கிறது.

ஆய்வில் சரியான தகவல்களைச் சேகரித்து அவற்றை பரிசோதித்துப் புதிய நோக்குகளையும் வெளிப்படுத்தல்களையும் ஒப்பீடுகளையும் இனங்காணும் வகையில் ஆய்வு முறைமை அமைவது இன்றியமையாதது.     இந்த ஆய்வினைப் பொறுத்த வரையில் ஆய்வுமுறைமையானது. தரவுகளை அடிப்படையாகக் கொண்டமைந்த வரலாற்று ரீதியான நிரற்படுத்தல்களையும்,  கோட்பாட்டு ரீதியான வகையீடுகளையும், எளிதில் விளக்கிக்கூறும் வகையில் தொடர்புபடுத்தி; விளக்கிக்கூறும் விவரண முறைமையினை அடிப்படையாகக் கொண்டுள்ளது. தனித்து விவரண முறைமையினை மாத்திரம் பின்பற்றின் அது பண்புகளை வகைப்படுத்தத் தவறிவிடும் என்பதாலும், வரலாற்று ரீதியான பார்வை தகவற் சேகரிப்பு என்ற வட்டத்தினுள் ஆய்வை முடிவுறுத்;த முனையும் என்ற காரணத்தினாலும் ஆராய்ந்து பெறப்பட்ட ஒத்திசைவான முறைமைகள் பலவற்றை இணைத்து ஆய்வின் முழுமையான பரிமாணத்தை வெளிக்கொணரும் வகையில் ஆய்வு முறைமையானது நெறிப்படுத்தப்பட்டுள்ளது.

4. இனங்காணப்பட்ட ஆவணவாக்கப்பண்புகள்
கீழே குறிப்பிடப்படுகின்ற ஆவணவாக்கப்பண்புகள் குறித்த ஆவணத்திற்கென்றே பிரத்தியேகமாக உள்ள பண்பு அல்ல. ஏனெனில் குறித்தவொரு ஆக்கம் கீழே குறிப்பிடப்படும் பண்புகளில் ஒன் றையோ அல்லது பலவற்றையோ கொண்டிருப்பது தவிர்க்க முடியாதது எனினும் அந்த ஆக்கத்தில் எந்தப் பண்பு மேலோங்கியிருக்கின்றதோ அந்தப் பண்பினடிப்படையில் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு சில ஆக்கங்களில் ஆய்வுத்தன்மை அதிகமாக இருக்கக்கூடும் எனினும் பிரதான பண்பு ஆவணவாக்கமெனில் அதுவே இங்கு கருத்திற்கொள்ளப்படுகின்றது. அதுமட்டுமன்றி ஈழத்தமிழ்ச் சமூகத்தில் இதுவரை எழுந்த அத்தனை ஆக்கங்களையும் இங்கு பட்டியல்படுத்துவது இக்கட்டுரையின் நோக்கமன்று. மாதிரிக்கு சில எடுத்துக்காட்டுக்களைத் தருவதும் கூடியவரையில் ஆரம்பகால இலக்கியங்களை எடுத்துக்காட்டுகளாக கையாள்வதும் இதன் நோக்கமாகும். அவை கிடைக்காத போது தற்போதைய ஆக்கங்களின் மாதிரிகள் எடுத்தாளப்பட்டிருக்கின்றன.

வரலாற்றுத் தகவல்களை ஆவணப்படுத்தும் பண்பு
வரலாற்றுத் தகவல்கள் குறிப்பிட்ட இனம், மதம், மொழி பண்பாடு மற்றும் பொருட்துறை சார்ந்தவை என பலதரப்படும். இவை தொகுப்புப் பணியூடான ஆவணவாக்க செயற்பாட்டின் ஊடாக உருவாக்கப்படுபவை. ஈழத்தமிழ்ச் சமூகத்தின் தொகுப்புப் பணியூடான ஆவணவாக்க செயற்பாட்டின் முன்னோடி என்ற பெருமை சைமன் காசிச்செட்டி அவர்களையே சாரும். இவரது 'தமிழ் புளுராக்' என்ற தமிழ்ப் புலவர் சரிதமும் சிலோன் கசற்றியரும் (1834) ஆய்வுடன் இணைந்த மிக முக்கியமான ஆவணவாக்கப் பணிகளாகும். சிலோன் கசற்றியர் நாடு சார்ந்த வகையில் இலங்கை பற்றிய புவியியல் ரீதியான தகவல் அனைத்தையும் அகர ஒழுங்கில் தொகுத்து தருகின்றது. இதற்கான தரவுகளை நொக்ஸ், கோர்டின், பேர்சிவல், டேவி முதலியோர் எழுத்துக்களிலிருந்தும் சுதேசிய நூல்களிலிருந்தும்  பாரம்பரியச் செய்திகளிலிருந்தும் தொகுக்கப்பட்டிருக்கிறது. (பூலோகசிங்கம் 1970). ஊர் சார்ந்த வகையில் ஆத்மஜோதி நா. முத்தையாவின் ஏழாலை(1977), எங்களுர் ஏழாலையூர்(1994) சீர் இணுவைத் திருவூர் (2004), புங்குடுதீவு மான்மியம் (2012) போன்றன புவியியல் அம்சங்களை மட்டுமன்றி ஊர் தொடர்பான தகவல்களை கூடுதலான வரையில் உள்ளடக்கி தொகுக்கப்பட்டுள்ளது. கலாநிதி பாலசுந்தரத்தின் இடப்பெயராய்வு: காங்கேயன் வட்டாரம்(1988) வடமராட்சி தென்மராட்சி (1989) போன்றவை மற்றும் ஊர்ப் பெயர் தோன்றிய வரலாற்றை ஆவணப்படுத்துகிறது.

யாழ்ப்பாணத்து மானிப்பாய் முத்துத்தம்பிப் பிள்ளை அவர்களால் தொகுக்கப்பட்டு நாவலர் அச்சகத்தினால் 1902இல் வெளியிடப்பட்ட அபிதானகோசம் ஈழத்தின் முதலாவது கலைக்களஞ்சியம்  என்ற பெருமையைப் பெறுவது. வேதாகம புராண இதிகாசங்களில் கூறப்பட்ட தெய்வங்கள், தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள், அசுரர், அவதார புருஷர் போன்ற வாழ்க்கை வரலாற்றுத் தகவல்களையும், நதிகள், புண்ணிய தீர்த்தங்கள் போன்ற இடங்களின் வரலாறுகள், தமிழ்நாட்டின் பண்டைய அரசர், புலவர், வள்ளல்களின் வரலாறுகள் போன்றவை இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்நூலில் உள்ளவை பெரும்பாலும் பல நூல்களிலிருந்தும் எடுக்கப்பட்டவை. பல பதிவுகள் உள்ளதை உள்ளபடியே கூறுபவை, இன்னும் சில சுருக்கமாக்கப்பட்டவை, சில விரிவாக்கப்பட்டவை. பல பதிவுகள் கலைக்களஞ்சியம் போன்று விரிவான தகவலை உள்ளடக்கியவை.

வாழ்க்கை வரலாற்றுத் தகவல்களை ஆவணப்படுத்தும் பண்பு
வாழ்க்கை வரலாற்றுத் தகவல்கள் தனிநபர் சார்ந்ததாகவோ அன்றி குடும்ப வரலாறாகவோ அமையலாம். இதுதவிர தனிநபர் ஒருவரை மையப்படுத்திய விரிவான ஆவணவாக்கமாகவோ அல்லது பல நபர்களை உள்ளடக்கிய தொகுப்பாக்கமாகவோ இருக்கலாம். தமிழ் இலக்கியத் துறையில் தமிழ்ப்புலவர் பலருடைய வாழ்க்கை வரலாறுகளை ஒரே நூலில் உள்ளடக்கி வெளியிடப்பட்ட முதல் நூல் என்ற பெருமையைப் பெறும் சைமன் காசிச்செட்டி அவர்களின் 'தமிழ் புளுட்டாக்'(1859) என்னும் தமிழ்ப்புலவர் சரிதம் தமிழ் இலக்கிய நூல்களைப் பற்றியும் அவர்களின் ஆசிரியர்களைப் பற்றியும் ஆங்கிலத்தில் எழுதப்பெற்ற ஒரு தொகுப்பு நூலாகும். 197 தமிழ்ப்புலவர்களின் வரலாறுகள் இதில் இடம்பெற்றுள்ளன. மேற்படி நூல் உருவாக்கத்திற்கான தகவல் சேகரிப்பானது ஒரு தசாப்பதங்களுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்டது என்பதை 1840ம் ஆண்டு தொடக்கம் வெளிவந்த சிலோன் மகசின் என்ற சஞ்சிகையில் சைமன் காசிச் செட்டி அவர்களால் எழுதப்பட்ட முப்பத்தியிரண்டு அறிஞர்களின் செய்திகள் சான்றாக உள்ளன. இதனை அடிப்படையாகக் கொண்டு எழுந்த சதாசிவம்பிள்ளையின் பாவலர் சரித்திர தீபகம்(1886) முதலாவது தமிழ் நூல் என்ற பெருமையைப் பெறுகின்றது. இதனைத் தொடர்ந்து வெளிவந்த குமாரசுவாமிப் புலவரின் தமிழ்ப் புலவர் சரிதம்(1916), கணேசையரின் ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம்(1933) போன்றவை இவ்வகையைச் சார்ந்தவை.

முத்துக் குமாரசுவாமிப்பிள்ளையால் எழுதப்பட்ட குமாரசுவாமிப்புலவர் வரலாறு (1970), வைத்திலிங்கத்தின் சேர். பொன் இராமனாதனின் வரலாறு(1971), கனக செந்திநாதனின் கவின் கலைக்கு ஒரு கலாகேசரி (1974) போன்றவை மிக விரிவான வகையில்  தனிநபர் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படுத்திய பண்பு கொண்டது. இதற்குப் பின்னரான காலங்களில் தனிநபர்கள் சார்ந்து உருவாக்கப்படும் மணி விழா மற்றும் வைர விழா சார்ந்தோ அன்றி அவர்கள் நினைவாக கொண்டாடப்படும் நூற்றாண்டு விழா சார்ந்தோ வெளியிடப்படும் சிறப்பு மலர்களினூடாகவோ தனிநபர் வரலாறுகள்  எண்ணிறந்த அளவில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன.

1901இல் வெளியிடப்பட்ட விநாசித்தம்பி அவர்களின் 'அயnயைஅpயவாயைச ளுயவொயவாiஅரசயi' என்ற ஆங்கில நூலானது குடும்ப வரலாறை ஆவணப்படுத்திய பண்பு கொண்டது. இதே போன்று தமிழில் எழுதப்பட்ட குடும்ப வரலாற்று நூலாக காசிநாதனின் 'எமது உற்றார், உறவினர் முறை' (1963) அமைகிறது. சில்லாலை இன்னாசித்தம்பி வைத்திய நிலையத்தால் 1983இல் வெளியிடப்பட்ட காக்கும் கரங்கள் என்ற நூலானது இன்னாசித்தம்பி வைத்திய மரபின் பத்துப் பரம்பரையை இரத்தினச்சுருக்கமாக எடுத்துக்கூறுகிறது.

அனுபவங்களை ஆவணப்படுத்தும் பண்பு
தனிநபர் அனுபவங்கள் பெரும்பாலும் நேர்காணல்கள், சொற்பொழிவுகள், மற்றும் கடிதங்கள் வாயிலாகவோ அன்றி பயண இலக்கியங்களாகவோ ஆவணப்படுத்தப்படும் பண்பு பொதுவானதாகும்.  சுதந்திரன் பத்திரிகையில் தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட சுவாமி சச்சிதானந்தாவின் கைலாசம் கண்டேன் என்ற தலைப்பிலான  பயண அனுபவங்கள்; பின்  1960இல் கண்டி திவ்விய ஜீவன சங்கத்தால் நூல் வடிவில் வெளியிடப்பட்டது. ஈழத் தமிழர் போராட்டவரலாற்றில் தனது நூறு நாள் சிறையனுபவங்களை 'தடுப்புக்காவலில் நாம்'(1961) என்ற தலைப்பில் புதுமைலோலனால் தனது மகள் அன்பரசிக்கு மடல்களாக வரையப்பட்டிருக்கிறது. 

மொழிசார் சொற்களை வரிசைப்படுத்தித் தரும் பண்பு
சொற்களின் தொகுப்பு சார்ந்த ஆவணவாக்கப் பணியில் நூல்களின் சொல்லடைவாக நூலில் கையாளப்படும் முக்கிய சொற்களையும் அதன் அமைவிட பக்கத்தையும் நூலின் இறுதியில் உள்ளடக்குதல், அருஞ்சொல் அகராதியாக துறை சார்ந்த அருஞ்சொற்களையும் அதற்கான விளக்கத்தையும் தருகின்ற வகையில் குறித்த நூலின் ஆரம்ப அல்லது இறுதிப்பகுதியிலோ அன்றி தனிநூலாகவோ உருவாக்கப்படல், மொழியின் சொல்வளத்தை அகர ஒழுங்கில் தரும் ஒரு மொழி, இரு மொழி மற்றும் பலமொழி அகராதி வடிவத்தில் தொகுக்கப்படல், குறிப்பிட்ட பொருட்துறை சார்ந்த அருஞ் சொற்களுக்கான விளக்கங்களைப் பட்டியலிடுகின்ற பொருள் அகராதியாக உருவாக்கப்படல் போன்ற பண்புகளை இனங்காண முடியும்.  

ஜி.யூ போப் அவர்களால் 1900 ம் ஆண்டு திருவாசகத்துக்குச் செய்யப்பட்ட ஆங்கில தமிழ்ச் சொல்லடைவு நூலின் பகுதியாக உருவாக்கப்படும் சொல்லடைவுப் பண்பைக் கொண்டது. தமிழ்மொழியின் சொல்வளத்தை அகர வரிசையில் முழுமையாகத் தரும் முதல்முயற்சியாக 58,500 சொற்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண அகராதியானது (1842),  ஒரு மொழி அகராதிக்கான பண்பைக் கொண்டது.  சங்க இலக்கியங்களிலும், சங்க மருவிய இலக்கியங்களிலும் பிற்றைச் சான்றோர் இலக்கியங்களிலும் வருகின்ற அருஞ்சொற்களாகிய இலக்கியச் சொற்களை தொகுத்து உருவாக்கப்பட்ட குமாரசுவாமிப்புலவரின் இலக்கியச் சொல்லகராதி, சொற்பொருளுக்கு அடிப்படை ஆதாரமாக நூற்சான்றுகளைப் பயன்படுத்தும் புதிய பண்பை உள்ளடக்கி  வல்வெட்டித்துறையைச் சேர்ந்த கு.கதிரவேற்பிள்ளையின் அரும்பணியில் உருவான தமிழ்ச்சொல் அகராதி, ந.சி கந்தையாபிள்ளையின் செந்தமிழ் அகராதி(1950) தமிழ்ப்புலவர் அகராதி, தமிழ் இலக்கிய அகராதி (1953) காலக்குறிப்பு அகராதி 1960, திருக்குறள் அகராதி (1961) போன்றன ஒரு மொழி அகராதிப்பண்பு கொண்டவை.

நூல்விபரத்தரவுகளைத் திரட்டித்தரும் பண்பு
நூல்விவர ஆவணவாக்கமானது நூலின் அடிப்படைத் தகவல்களை மட்டும் தரும் முறைப்படுத்தப்பட்ட நூல்விவரப்பட்டியலாகவோ அல்லது நூலின் விவரங்களுடன் நூல் பற்றிய சிறு குறிப்புகளை உள்ளடக்கும் குறிப்புரை நூல்விவரப்பட்டியலாகவோ அதுவுமன்றி குறிப்பிட்ட நூல் தொடர்பான அதிகளவு விவரங்களைத் தரக்கூடிய விளக்க நூல்விவரப்பட்டியலாகவோ அமையலாம்.

முறைப்படுத்தப்பட்ட வகையில் நூல்களின் விவரங்களைத் தரும் பண்பானது பொதுவானதும் அதிகம் வழக்கிலுள்ளதுமான நடைமுறையாக உள்ளது. இது படைப்பாளர் நூல்விவரப்பட்டியலாகவோ அல்லது பொருள் சார் நூல்விவரப்பட்டியலாகவோ அமையலாம். பொருள் சார் நூல்விவரப்பட்டியலானது நாடு, மொழி, இனம், பொருட்துறை என மேலும் வகைப்படுத்தப்படுகிறது. முறைப்படுத்தப்பட்ட நூல்விவர ஆவணவாக்கத்தின் முன்னோடி என்ற பெருமையையும் சைமன் காசிச்செட்டியே பெறுகின்றார். 1848 ம் ஆண்டு யூன் 3, 1849 பெப்ரவரி 24, மற்றும் டிசம்பர் 1 ஆகிய திகதிகளில் திகதி இலங்கை றோயல் ஏசியாற்றிக் சங்கத்தில் இவரால் வாசிக்கப்பட்ட தமிழ் நூற்பட்டியலானது ஈழத்து நூல்விபரப்பட்டியல் வரலாற்றின் முன்னோடி முயற்சி எனக் கருதத்தக்கது. மூன்று பிரதான பொருட்தலைப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இப்பட்டியலின் முதலாவது பிரிவான மொழியியலில் 74 நூல்களின் விபரங்களும் இரண்டாவது பிரிவான புராண இலக்கியம் மற்றும் வரலாறு வாழ்க்கைச் சரிதம் என்ற பகுதியில் இந்துக்கள், கிறிஸ்தவர், இஸ்லாமியர் ஆகிய மூன்று மதம் சார்ந்தும் உள்ள படைப்பாளரின் 82 ஆக்கங்கள் பற்றிய தகவல்களும் மூன்றாவது பிரிவான சமயம் தத்துவம் பற்றிய பகுதியில் 153 நூல்களும் ஆக மொத்தம் 309 நூல்களின் விபரங்கள் இடம்பெறுகின்றன. தமிழ் தவிர்ந்த ஏனைய மொழிகளில் வெளியிடப்பட்ட தமிழியல் சார்ந்த 1322 நூல்களை பதினான்கு பொருட்தலைப்புகளின் கீழ்  பட்டியல்படுத்துகின்ற தனிநாயகம் அடிகளின் 'சுநகநசநnஉந பரனைந வழ வுயஅடை ளுவரனநைள'(1966)இ 1955-70 காலப்பகுதியில் ஈழத்தில் எழுந்த நூல்களின் விவரங்களை பதினொரு தலைப்புகளில் ஒழுங்குபடுத்தித்தரும் கனகசெந்திநாதனின் 'ஈழத்துத் தமிழ்நூல் வழிகாட்டி'(1971)இ இலங்கையில் முஸ்லிம் எழுத்தாளர்கள் ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பினை 1977 நூல்களில் கால அடிப்படையில் எடுத்துக்கூறும் 'சுவடி ஆற்றுப்படை' (4 தொகுதிகள் 1850-2000) என்பன முறைப்படுத்தப்பட்ட நூல்விவரப்பட்டியற் பண்பைக் கொண்டவை. 

அப்புத்துரையின் 'காங்கேயன் கல்விவட்டாரத்தில் எழுந்த நூல்கள்' என்ற நூல்விபரப்பட்டியலும், 'டியவவiஉயடழnயை' என்ற பெயரில் மட்டக்களப்புப் பிரதேசம் சார்ந்த ஆக்கங்களின் தொகுப்பான செல்வராஜாவின் நூல்விவரப்பட்டியலும் பிரதேசம் சார்ந்த நூல்களின் விவரங்களை முறைப்படுத்திய ரீதியில் தரும் பண்பைக் கொண்டிருக்கிறது.

இலண்டனிலிருந்து 2000ம் ஆண்டு முதல் செல்வராஜா அவர்களால் வெளியிடப்படும் 'நூல்தேட்டம்' குறிப்புரைப் பண்பையும் உள்ளடக்கிய தொன்று.  இலங்கை எழுத்தாளர்களால்,  தமிழில் வெளியிட்ட அனைத்து நூல்களும் குறிப்புரையுடன் கூடியதாக இத்தொகுப்பில் இடம்பெறுகின்றது. ஒவ்வொரு தொகுதியிலும் 1000 நூல்கள் என்ற ரீதியில் இதுவரை ஆறு தொகுதிகளில் 6000 ஈழத்துத் தமிழ் நூல்கள் பற்றிய தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. 1970 இல் உருவான எவ்.எக்ஸ்.சி நடராசாவின் 'ஈழத்துத் தமிழ் நூல் வரலாறு' விளக்க நூல்விவரப்பட்டியல் பண்பைக் கொண்டிருக்கிறது. 1993இல் சிவசண்முகராஜாவினால் எழுதப்பட்ட 'ஈழத்துச் சித்த மருத்துவ நூல்கள்: ஓர் அறிமுகம்' என்ற நூலும் விளக்க நூல்விவரப்பட்டியல் என்ற வகைக்குள் அடங்குகின்றது. 1980களுக்குப் பின்னர் குறிப்பிட்ட படைப்பாளரின் ஆக்கங்களைப் பட்டியற்படுத்தும் பண்பு இனங்காணப்படுவதுடன் நாவலர், கைலாசபதி, சிவத்தம்பி, கமால்தீன், எவ்.எக்ஸ். சி நடசாசா ஆகியோரின் ஆக்கங்களின் விவரங்கள் பட்டியல்படுத்தப்பட்டு நூலுருவம் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பத்திரிகைச் செய்திகளின் பதிவு பேணும் பண்பு
பத்திரிகைச் செய்திகளை வெட்டிப் பொருத்துமான தலைப்புகளில் ஒழுங்குபடுத்தும் பணியானது ஆவணப்படுத்தலின் மிக முக்கிய அம்சமாகக் கருதப்படுகின்றது. இந்த வகையில் ஈழத்தமிழர்களின் 100 வருட வரலாற்றை பத்திரிகைச் செய்திகள் மற்றும் தகவல்கள் இரண்டும் இனைந்த வகையில் ஆவணப்படுத்தி வருங்காலத் தலைமுறையினருக்கு வழங்கும் ஆவணவாக்கப்பணியாக கடந்த 45 ஆண்டுகளாக குரும்பசிட்டி இரா. கனகரத்தினத்தின் பத்திரிகை துணுக்குச் சேகரிப்பைக் கொள்ள முடியும். இலங்கை வாழ் தமிழர்கள் என்றில்லாது, உலகளாவிய தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகளை வாழ்க்கை வரலாறுகள், சமய வரலாறுகள், பெரியார்கள், சமயமும் சமயத் தலங்களும், இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்கள், தமிழக - இலங்கைத் தொல்லியல் ஆய்வுகள், சிங்கள மக்கள் மொழி, பண்பாடு, சிங்களவர் - தமிழர் தொடர்புகள், தமிழர் கலைகள், தமிழர் கலையும் பண்பாடும், உலகளாவிய தமிழர் ஆகிய பொதுத் தலைப்பு மற்றும் தனித்தலைப்புகளில் ஏறத்தாழ 7000 கட்டுரைகளை அவர் சேகரித்து வைத்துள்ளார். ஒவ்வொரு தலைப்பையொட்டி 10 முதல் 300 கட்டுரைகள் வரை அவருடைய ஆவணக் காப்பகத்தில் உண்டு.

இதேபோன்று சுனாமி: பத்திரிகை நறுக்குகள்; என்ற தலைப்பில் சங்கானையைச் சேர்ந்த கணேஷ் அவர்களால் பலதரப்பட்ட பத்திரிகைளிலிருந்தும் வெட்டியெடுக்கப்பட்டு 4500க்கும் மேற்பட்ட பத்திரிகை நறுக்குகளை யு3 அளவுள்ள 338 தாள்களில் ஒட்டி 34 பொருட்தலைப்புகளின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்ட 4500க்கும் மேற்பட்ட பத்திரிகை நறுக்குகளும் குறிப்பிடப்படவேண்டியதொன்று..

இலங்கையில் வெளியிடப்பட்ட பலதரப்பட்ட பத்திரிகைகளையும் மையப்படுத்தி 2005இல் பொது நூலகராக தனது பணியை வரித்துக் கொண்ட அனலைதீவு சௌந்தரராஜனின் தனிப்பட்ட ஆர்வம் காரணமாக தொடங்கப்பட்ட பத்திரிகை நறுக்குகளை உருவாக்கும் பணியானது சுனாமி, வடக்கின் வசந்தம், தேச அபிவிருத்தி, பிரதேச அபிவிருத்தி, கல்வி, விவசாயம், மருத்துவம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட தலைப்புகளின் உடுவில் மற்றும் சுன்னாகம் பொது நூலகங்களில் சேமிக்கப்பட்டிருக்கிறது. இது பத்திரிகையில் வெளியாகின்ற கட்டுரைகளை மட்டும்;  வெட்டிப் பொருத்தமான தலைப்புகளின் கீழு; ஒழுங்குபடுத்திச் சேகரிக்கும் பண்பாக இனங்காணப்படுகின்றது. இந்தவகையில் இசை, நடனம், அரங்கு எனக் கலைத்துறையை மட்டும் முதன்மைப்படுத்தி கணிசமான பத்திரிகைத் தகவல்களை ஆவணப்படுத்தியிருக்கும் ஆசிரியர் குகதாசனின் பணியும்; குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தகவல்களைத் தொகுத்தளிக்கும் பண்பு
ஈழத்தமிழ்ச சமூகத்தின் அண்மைக்காலங்களில் அதிகம் இனங்காணப்படும் பண்பாக இது உள்ளது. சஞ்சிகைகள் மற்றும் பத்திரிகைகளில் வெளியிடப்படும் ஆக்கங்களையோ தகவல்களையோ ஒரு தொகுப்பாக ஆவணப்படுத்தும் பண்பு ஈழத் தமிழ் இலக்கியங்களின் முக்கிய போக்காக இனங்காணப்படுகிறது. இந்த வகையில் த.இராமநாதபிள்ளையின் இலக்கிய இலக்கண ஆய்வுரைகள்(1965), சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்களால் எழுதப்பெற்ற பதிப்புரைகளை தொகுத்து வெளிவந்த 'தாமோதரம்' (1971), ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தின் தொகுப்பான  ந. சபாரத்தினத்தின் 'ஊரடங்கு வாழ்வு(1985), சற்றடே றிவியூ ஆங்கலப்பத்திரிகைகளின் தலையங்கம் உட்பட பல பதிவுகளை உள்ளடக்கிய சிவநாயகத்தின் ' Pநn யனெ வாந புரn'இ தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத் தொகுப்பாக தனபாலசிங்கத்தின் நோக்கு மற்றும் ஊருக்கு நல்லது சொல்வேன் போன்றவை, பத்தி எழுத்துகளின் தொகுப்பான யேசுராசாவின் தூவானம் போன்றவை இத்தகைய பண்பைக் கொண்டவை. இதே போன்று சஞ்சிகைகளில் வெளிவந்த கவிதைகள் கட்டுரைகள் மற்றும் சிறுகதைகள் அவ்வப்போது தொகுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டிருப்பது கண்கூடு.

சமூக வழக்காறுகளை ஆவணப்படுத்தும் பண்பு
சமூக வழக்காறுகளை ஆவணப்படுத்தும் பண்பு ஈழத்து இலக்கியங்களில் மிக குறைவாக இனங்காணப்படினும் நாட்டார் பாடல்கள் கணிசமான முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது. முல்லைத்தீவைச் சேர்ந்த த.கைலாயபிள்ளையின் கதிரையப்பபள்ளு(1927), முள்ளியவளையைச்சேர்ந்த சி.ச. அரியகுட்டிப்பிள்ளையின் அருவிச்சிந்து, கதிரையப்பபள்ளு, பண்டிப்பள்ளு, குருவிப்பள்ளு என்ற தலைப்பிலான அருவி வெட்டுப்பாடல்கள் (ஆண்டு இல்லை) கீழ்கரவையம்பதி வ.கணபதிப்பிள்ளையின் வேலப்பணிக்கன் பெண்சாதி அரியாத்தை பேரில் ஒப்பாரி(1934), முல்லைமணியின் கமுகஞ்சண்டை(1979); கல்விவெளியீட்டுத் திணைக்களத்தின் நாட்டார் பாடல்கள்(1976), யாழ்ப்பாணம் மு. இராமலிங்கத்தின் வட இலங்கையர் போற்றும் நாட்டார் பாடல்கள்(1961), தி. சதாசிவ ஜயரின் மட்டக்களப்பு வசந்தன் திரட்டு (1961), சு. வித்தியானந்தனின் மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள்(1960) குறிப்பிடத்தக்கவை.
பேராசிரியர் சு. வித்தியானந்தனின் அலங்காரரூபன் நாடகம்(1962), மூவிராசாக்கள் நாடகம்(1966), ஞானசவுந்தரி நாடகம்(1967) போன்றவை கூத்துச் சாந்த ஆவணப்படுத்தல் முயற்சியாகும்.
பீற்றர் பேர்சிவல் பாதிரியாரின் திருட்டாந்த சங்கிரம் (1843) பழமொழி சார்ந்து 1823 பழமொழிகளை தொகுப்பாகும். சச்சி மாஸ்ரரின் மக்கள் வாழ்வில் பழமொழி என்பது விளக்கக் கட்டுரைப் பாங்கைக் கொண்டது. சி. பத்மநாதனின் இலங்கைத் தமிழர் தேச வழமைகளும் சமூக வழமைகளும் என்ற நூல் சமூகத்தின் சட்டநெறிகளைத் தொகுத்துத் தரும் ஒரு தொகுப்பு ஆவணப் பண்பு கொண்டது.

உருநிலைச் சேகரிப்புகளை ஆவணப்படுத்தும் பண்பு
நூலகமொன்றின் முக்கிய தகவல் வளமாகக் கருதப்படும் உருநிலைச் சேகரிப்புகளில் கலைப்பொருட்கள், கருவிகள், உபகரணங்கள் போன்றவை உள்ளடங்கும். இவை 1. கலை பிரயோக அறிவியல் சார்ந்தவை. (எ-டு விளையாட்டுப் பொருட்கள்) 2. மனிதப்பண்பியல் சார்ந்தவை (எ-டு இசைக்கருவிகள்)  3. அறிவியல் சார்ந்தவை (எ-டு மனித எலும்புத் தொகுதி) 4. சமூக அறிவியல் சார்ந்தவை (நாணயங்கள், தபால் தலைகள்) என நான்கு வகைப்படும். உருநிலைச் சேகரிப்புகளை ஆவணப்படுத்தும் தன்மையில் பொழுதுபோக்கு நோக்கம், பண்பாட்டு அம்சங்களை பாதுகாக்கும் நோக்கம் ஆகிய இரண்டும் முக்கியம் பெறுகின்றன. இந்த வகையில் அருள்சந்திரனின் 'யாழ்ப்பாணப் பெட்டகம்' கணிசமானளவு யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய கட்டிட அமைப்புகள், கலைகள், பண்பாட்டுப் பொருட்கள் உள்ளிட்ட உருநிலைச் சேகரிப்புகளை 32 பொருட்தலைப்புகளில் 3250 புகைப்படங்களினூடாக ஆவணப்படுத்தியிருக்கிறது. தபால்தலைகள் மற்றும் நாணயங்களை அதன் உண்மை வடிவத்தில் ஆவணப்படுத்துவதாக  அனலைதீவு தர்சனின் பணி அமைகிறது. ஆயிரம் மூலிகைத் திட்டத்தினூடாக தமிழர்பிரதேசத்தில் காணப்படும் அரிய மூலிகைகளை ஓரிடத்தில் சேகரித்து பராமரிப்பது மட்டுமன்றி அது தொடர்பான விவரக்குறிப்புகளைப் பட்டியல்படுத்துவதாகவும் மூலிகை பாதுகாப்புச் சபையின் ஸ்தாபகர் வைத்தியர் சந்திரமோகனின் பணி அமைகிறது.

படியெடுத்தல் மூலம் மீட்டுருவாக்கும் பண்பு
மூல ஆவணத்தில் எந்தவித மாற்றமும் செய்யாது அதனை பாதுகாப்பு நோக்கங்கருதி மீள வெளியிடும் இப்பணியானது எழுதிப் படியெடுத்தல், கையெழுத்துப் பிரதியை அச்சுக்கு மாற்றுதல், கையெழுத்துப் பிரதியை பரிசோதித்து அச்சுக்கு மாற்றுதல், அச்சுப்பிரதியை மீள அச்சிடுதல், அச்சிலுள்ளதை அதன் வடிவத்திலேயே ஆவணப்படுத்தல் போன்ற பலதரப்பட்ட பண்புகளைக் கொண்டது. எழுதிப் படியெடுக்கும் பணியானது அச்சின் கண்டுபிடிப்பிற்கு முன்னரான பொது வழக்கிலிருந்த ஆவணவாக்கச் செயற்பாடாகும். நாவலர் மற்றும் பதிப்புப் பணியில் ஈடுபட்ட 19ம் நூற்றாண்டுப் புலமையாளர்களின் பதிப்புப் பணிக்கு மூலமாக இருந்தது எழுத்துமூலத்திலிருந்த மூல ஆவணத்தின் பிரதிகளேயாகும்.  இது சுவடிகளில் எழுதப்பட்ட ஆக்கங்களை பல்வேறு பிரதிகளாக ஆக்கும் செயற்பாட்டைக் குறிக்கிறது. பஞ்சாட்சரசர்மாவின் 'அஷரபோதினி', விவிக்த பதாவலி போன்ற கிரியா பத்ததிகள் படியெடுத்தல் மூலம் மீட்டுருவாக்கும் பண்பு கொண்டவை.(கோப்பாய் சிவம் 1980)

இதுதவிர அச்சிடப்பட்ட ஆவணமொன்றின் பிரதிகள் அனைத்தும் அழிந்தநிலையிலோ எடுக்கமுடியாத நிலையிலோ இருக்கும் அதேசமயம் மீள்பதிப்புச் செய்வதற்கான வாய்ப்பும் இல்லாத போது அச்சுப் பிரதியை மீண்டும் கையெழுத்துப் பிரதியாக ஆவணப்படுத்திய முயற்சியொன்றும் இவ்வாய்வில் இனங்காணப்பட்டிருக்கிறது. குமாரசுவாமிப்புலவரின் இலக்கியச்சொல்லகராதியானது அவரது மகன் முத்துக்குமாரசுவாமிப்பிள்ளையால் 1965இல் நான்கு தொகுதிகளாக எழுதித் தொகுக்கப்பட்டு குமாரசுவாமிப்புலவர் நூலகத்தில் பேணப்படுகிறது.

அச்சுப்பதிப்பின் வழி பாதுகாக்கும் பண்பு
ஈழத்தமிழரின் பெரும்பாலான ஆரம்பகால இலக்கியங்கள் சுவடிகளில் பதியப்பட்டு பின்னர் கையெழுத்துப்பிரதிகளாக தாள்களில் பேணப்பட்டு அதன் பின்னர் அச்சு வடிவம் பெற்றவை. சித்தமருத்துவத்தின் முக்கியத்துவத்தை உய்த்துணர்ந்து அது தொடர்பான சுவடிகளை தேடிச் சேகரித்து அவற்றை அடிப்படையாகக் கொண்டு ஏழாலை க.  பொன்னையா அவர்களின் பதிப்பில் உருவான பரராசசேகரத்தின் ஏழு தொகுதிகள்(1930-36), சொக்கநாதர்தன்வந்திரியம்(1933), செகராசசேகர வைத்தியம், அமிர்தசாகரம்(1927), பதார்த்தசூடாமணி(1927), வைத்தியசிந்தாமணி((1932),, வைத்திய புராணம்((1933), அங்காதிபாதம், வைத்தியதெளிவு(1930) போன்றவை சுவடிநிலையிலிருந்து நேரடியாக அச்சுப்பதிப்பாகவும் முத்துக்குமாரசுவாமிப் பிள்ளையின் கவித்திரட்டு(1964) கையெழுத்துப் பிரதிநிலையிலிருந்து அச்சுப்பதிப்பாகவும் மாற்றம் பெற்றவை.

மீள்பதிப்பினூடாக தகவலைப் பரவலாக்கும் பண்பு
தமிழ்மண் பதிப்பகம், ஆசிய கல்விச் சேவை நிறுவனம் ஈழத்தமிழரின் ஆரம்பகால இலக்கியங்களை அழியவிடாது பாதுகாக்கும் நோக்குடன் மீpள்பதிப்புப் பணிகளை மேற்கொண்டிருக்கின்றன. ஈழத் தமிழ் இலக்கியம் சார்ந்து மீள்பதிப்புப் பணிகள் எண்ணிறந்த அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளமையால் இதற்கான எடுத்துக்காட்டுகளை இங்கு பட்டியலிடுவது தேவையற்றது எனினும் ஒருசில ஆரம்ப கால நூல்களின் மீள்பதிப்பு பணிகளை குறிப்பிடுவது பொருத்தமானது. மீள்பதிப்புப் பணிகளில் சுன்னாகம் குமாராமிப் புலவரால் பதிப்பிக்கப்பட்ட இதோபதேசம்(1886), சகுலமலைக்குறவஞ்சி நாடகம்(1895) இரண்டும்; குறிப்பிடத்தக்கவை (முத்துக்குமாரசுவாமிப் பிள்ளை 1970). கணேசையரின் ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம்(1939), சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமர்சனம்(1928) போன்றவை குறிப்பிடத்தக்கவை.

பாடபேத ஆய்வுடன் கூடிய குறை களையும் பண்பு
சுவடி வடிவில் கவனிப்பாரற்றுக் கிடந்த பழம்பெரும் இலக்கியங்களின் பிரதிகளை தேடிச் சேகரித்து பதிப்பிக்கும் பணியாகவே ஈழத் தமிழ்ச் சமூகத்தின் ஆரம்பகால ஆவணப்படுத்தல் முயற்சிகள் இனங்காணப்படுகின்றது. இத்தகைய பதிப்பு  முன்னோடிகளாக ஆறுமுகநாவலரையும் (நாவலர்) சி.வை.தாமோதரம்பிள்ளையையும் (சி.வை.தா) குறிப்பிடுவது மிகப் பொருத்தமானது. பதிப்புத் துறையில் 19ம்  நூற்றாண்டின் மத்திய பகுதி நாவலர் காலம் எனப்படுகின்றது. 'நல்லைநகர் நாவலர் பிறந்திலரேல் சொல்லுதமிழ் எங்கே சுருதி எங்கே' சி.வை.தாவினால் புகழப்படுமளவிற்கு நாவலரின் பணி மகத்தானது. சிறந்த உரையாசிரியர், நூலாசிரியர், சொற்பொழிவாளர், பிரசங்கி என்பதற்கும் மேலாக அழிவுறும் நிலையிலிருந்த பெரும்பாலான சுவடி நூல்களை மீளத் தமிழ்ச்சமூகத்திற்கு அளித்த ஆவணவியலாளர் என்பது அனைத்திலும் மேலானது. நாவலரின் பதிப்பு முயற்சிகள் 1849இல் சௌந்தியலகரி மூலமும் எல்லப்பநாவலர் உரையும் என்ற நூலுடன் தொடங்குகின்றன. தொடர்ந்து நாவலர் சூடாமணிநிகண்டு (1849), நன்னூல் விருத்தியுரை மூலமும் உரையும்(1851), திருக்கோவையார் மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்(1860), கொலை மறுத்தல் (1860), மறைகையந்தாதி(1860), திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்(1861), உபமான சங்கிரகமும் இரத்தினச் சுருக்கமும் (1866) சேதுபுராணம்(1866), இலக்கணக்கொத்து, இலக்கணச் சூறாவளி, தொல்காப்பியச் சூத்திரவிருத்தி (1866), அருட்பா(1866), சிதம்பரமும்மணிக்கோவை(1867), அருணகிரிநாதர் திருவகுப்பு (1867), பதினொராம்திருமுறை(1869), கோயிற்புராணம், நால்வர் நான்மணிமாலை, பெரிய கோயிற்புராணம், பெரியநாயகி கலித்துறை, முதலான எழுபதுக்கும் மேற்பட்ட நூல்கள் பிழையறப் பதிப்பிக்கப்பட்டது ( கனகரத்தினம் 2007).

பதிப்புப் பணியில் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதி சி.வை.தா காலம் எனப்படுகின்றது. சி.வை.தாவின் பதிப்புகளில் இறையனார் களவியலுரையும் தொல்காப்பியப் பொருளதிகாரமும் தமிழ் அன்னையின் இரு கண்கள் என்றும் இந்த இரண்டையும் பதித்துவியதே சி.வை.தாவுக்கு இம்மைக்கும் மறுமைக்கும் போதுமானது என்கிறார் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை. (கணபதிப்பிள்ளை) இவரின் பதிப்புரைகள் பலதுறைப்பட்ட ஆராய்ச்சிகளைக் கொண்டவை. பதிப்புப் பணியிலே நாவலரை தனது குருவாகக் கொண்ட சி.வை.தா நாவலரின் மறைவுக்குப் பின்னர் பதிப்புப் பணியையே தனது வாழ்நாள் கடமையாகக் கொண்டிருந்தார். இவரது பதிப்பு முயற்சிகள் 1853இல் தொடங்குகின்றன. நீதிநெறி விளக்கம் (1853), தொல்காப்பியம்- சொல்லதிகாரம்- சேனாவரையம் (1868), வீரசோழியம் - பெருந்தேவனாருரை(1881), தணிகைப் புராணம், இறையனாரகப்பொருள்- நக்கீரருரை(1883), தொல்காப்பியப் பொருளதிகாரம்(1885), கலித்தொகை(1887), இலக்கண விளக்கம், சூளாமணி(1889), தொல்காப்பியச் சொல்லதிகாரம்(1892) முதலான நூல்களைப் பதிப்பித்து வழங்கியதன் மூலம் சிறந்ததொரு ஆவணவியலாளராக இனங்காணப்படுகின்றார். குமாரசுவாமிப்புலவரின் யாப்பருங்கலக் காரிகை உரை(1900), ஆசாரக்கோவை(1900), நான்மணிக்கடிகை(1900), ஆத்திசூடி வெண்பா மற்றும் சிசேத்திர விளக்கம்(1901), உரிச்சொனிகண்டு, பழமொழி விளக்கம், திருவாதவூரர் புராணம்(1902) ஆகியனவும் இத்தகைய பண்பைக் கொண்டது. 

தொழினுட்பத் துணையுடன் எண்ணிமப்படுத்தும் பண்பு
ஈழத்தமிழர் இலக்கியங்களை எண்ணிமப்படுத்தும் பணியில் நூலக நிறுவனத்தின் பணி அளப்பரியது. இதனால் உருவாக்கப்பட்ட எண்ணிம நூலகமானது நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், சிறுபிரசுரங்கள் உட்பட்ட 12,000க்கும் மேற்பட்ட ஆக்கங்களை முழுமையாக எண்ணிமப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

முடிவுரை
மூலவகை ஆவணப்படுத்தலானது பொருட்துறைசார்ந்த புலமையில் முழுக்கமுழுக்க தங்கியிருக்கும் அதேசமயம் கருவிசார் ஆவணவாக்கப் பணி என்பது பொருட்துறை சார்ந்த புலமை,  ஆவணப்படுத்தலுக்கான நூலகவியல் அறிவு ஆகிய இரண்டையும் வேண்டிநிற்பதொன்று. ஈழத்தமிழ்ச்சமூகத்தின் ஆவணவாக்கப்பணியானது தனிநபர்களின் ஆர்வத்தின் அடிப்படையிலேயே கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது என்பதை மேற்குறித்த ஆய்வு வெளிக்காட்டி நிற்பதுடன் ஆவணப்படுத்தலின் பலதரப்பட்ட பண்புகளிலும் ஆக்கபூர்வமான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதையும் இந்த ஆய்வு சுட்டி நிற்கிறது. 
உசாத்துணைகள்


1. Harrod, Leonard Montague. Harrod’s librarians’ glossary of terms used in librarianship, documentation and the book crafts and reference book. 6th ed. London: Gower.pp254.
2.    Ranganathan,S.R(1974). Physical bibliography for librarians. 2nd ed. Bombay: Asia publishing house.. p21.
3.      Reitz, Joan.M. ( 2006). Online Dictionary for Library and Information Science. http://www.abc-clio.com/ ODLIS/ odlis b.aspx
4.      Selvarajah,S.J (1988). Batticaloania: a bibliography of Batticaloa. Batticaloa: Municipal Council. 81p
5.      Simon Casie Chitty (1949). The Tamil Plutarch. Colombo: General publishers.135p
6. Thani Nayagam, Xavier S.(1966).  A Reference guide to Tamil Studies: books.Kuala Lumpur:University of Malaya Press.122p.
7. Vali North Cultural society (2008). Yarlppanap pettakam kankardchi-01(The Exhibition on Treasure House of Jaffna-01) Yarl Thinakkural. 14th.Oct.2008. p3.

8.    அப்புத்துரை, சி.(1985). காங்கேசன் கல்வி வட்டாரத்தில் எழுந்த நூல்கள். காங்கேசன் கல்விமலர். காங்கேசன்துறை: காங்கேசன்துறை கல்விவலய அதிபர்கள் சங்கம். பக் 209-223.
9.    கணேசையர், சி(1939). ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம். சென்னை தமிழ்மண் பதிப்பகம். 156ப.
10.    கனகரத்தினம், இரா,. கனகரத்தினம்இ பி(1996). உலகத் தமிழர் ஆவணக் காப்பகம். கண்டி: ஆசிரியர். 26ப.
11.    கோப்பாய் சிவம்(1980). கிரியா பத்ததிகள் தொடர்பான கையெழுத்துப் பிரதிகளின் விளக்கப் பட்டியல்.(வெளியிடப்படவில்லை). 
12.    சண்முகதாஸ்,மனோண்மணி (2007). சி.வை.தாமோதரம்பிள்ளை. கொழும்பு: குமரன். ப20.
13.    சதாசிவம்பிள்ளை,அ.(1886) பாவலர் சரித்திர தீபகம்.மானிப்பாய்: ஸ்றோங்அஸ்பரி இயந்திரசாலை.
14.    சந்திரகுமார், எம் (2009). பழைய வரலாறுகள் எதிர்கால ஆவணங்கள்: கணேசுடனான நேர்காணல். யாழ்தீபம்.   றறற.எசையமநளயசi.டம.
15.    நடராசா, எவ்.எக்ஸ்,சி(1970). ஈழத்துத் தமிழ்நூல் வரலாறு. கொழும்பு: அரசு வெளியீடு
16.    பூலோகசிங்கம், பொ (1970). தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞரின் பெருமுயற்சிகள். யாழ்ப்பாணம்: கலைவாணி புத்தக நிலையம். 276ப.
17.    முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை,கு(1970). குமாரசுவாமிப்புலவர் வரலாறு. சுன்னாகம்: புலவரகம். ப.43
18.    ஜமீல்,எஸ்.எச்.எம் (1994). சுவடி ஆற்றுப்படை. 4 தொகுதிகள். கல்முனை: இஸ்லாமிய நூல் வெளியீட்டுக் கழகம். 



http://www.pubad.gov.lk/web/eservices/circulars/2015/T/31_2001_(x)_(t).pdf