Sunday, July 31, 2005

தேடலுடன்...

பறந்தது சிறகசைத்து
என்
முதற் பத்து வருடங்கள்
வண்ணத்துப் பூச்சியின் வாழ்வாய்....

அலைந்தது திசையின்றி
என்
இரண்டாவது பத்துக்கள்
பொய்மைகளே உண்மைகளாய்...
போர்வைகளே நிஜங்களாய்...
வாடகைக் கூடுகளே எனது கூடுகளாய்;...

உருண்டது முனைப்புடன்
என்
மூன்றாவது பத்துக்கள்
சுமைகளின் அழுத்தங்களுக்குள்
தப்பிப் பிழைத்தலுக்கான
உபாயங்களைத் தேடுவதில்...

கழிகின்றது மெல்ல மெல்ல
என்
நாலாவது பத்துக்கள்
ஒவ்வாமைகளை விலக்கிக் கொள்வதில்...
ஒத்ததுகளைப் பிணைத்துக் கொள்வதில்
எனக்குள் என்னைத் தேடுவதில்...
எனக்கென்று ஒரு கூடு கட்டுவதில்...

உழைத்துக் களைத்த போது
மடியில் தாங்கவும்
உணர்வில் களைத்த போது
மனதில் ஏந்தவும்
எனக்காயும் தனக்காயும்
என்னுள் நுழையவும்
எனக்கென்று ஒரு துணையைத் தேடுவதில்...

1 comment:

பத்மா அர்விந்த் said...

கவிதை எனக்கு பிடித்திருந்தது. பாராட்டுக்கள்.