Sunday, September 11, 2005

ஏக்கமும் தாக்கமும்-----

பக்கத்து வீட்டு எலுமிச்சை மரத்திற்கும்
எனக்கும் வயது பத்துக்குள் தான்.
மினுமினுத்த மேனியும் மேதகு வாழ்வுமாய்
அதுவோ வீட்டின் முற்றத்தில்……
குட்டை சொறியுடன் கோலங்கெட்டு
நானோ ஒதுக்குப் புறத்தில்…….
வேலி ஓட்டைக்குள் தினமும் அதைப் பார்த்து
பொங்கும் என் மனது -
அதனுடன் உறவாட அதுவாகவே நானாக
ஏங்கும் பல பொழுது -

வேண்டும் போது பசிதீர்க்க
விரும்பும் போது தாகந் தணிக்க
வட்டில் பாத்தி தனில்
வளமாய் உணவு
நிதமும் தயாராக…..
சிந்தாமல் சிதறாமல்
அடுத்தவர் தீண்டாமல்
கதியால் கூடொன்றோ
மிகவும் கவனமாக…..

காதல் து}துக்கு
எறும்புத் து}தர்களை
எளிதாய் வரவழைக்க
சக்கைத் தேங்காய்ப் ப10
குளியல் இடையிடையே
வந்த து}தர்
தங்கி ஓய்வெடுக்க
மட்டை மாளிகைகள் அங்கங்கே

நான் மட்டும் இங்கு
உணவளிக்க யாருமின்றி
அரவணைப்புக்கு தினமேங்கி
விதைத்து மட்டும் விட்டுவிட்டு
விட்டேற்றியாக
விலகும் மனத்திடம்
விடியலைத் தேடி….

அடுத்த வீட்டு வாய்க்கால்
பல பொழுது மனமிரங்கித்
தன் வரம்பை மீறி
என் தாகம் தணிக்கும்
வானம் சிலசமயம்
குமுறிக் கொந்தளித்து
எனக்காக விடுங் கண்ணீர்
எனக்குத் தெம்ப10ட்டும்.
தெம்படையும் போதெல்லாம்
பக்கத்து வேலியால்
எட்டியே நிதம் பார்ப்பேன்
நித்தமும் மனங் குமைவேன்.
விதைப்புடன் நின்றுவிட்டு
விளைச்சலுக்காக மட்டும்
வெறித்து வெறித்து நோக்கும்
ஈரமற்ற இதயங் கண்டு
வெட்கித் தலைகுனிவேன்.

No comments: