Thursday, May 11, 2017

மானுடம் என்றுமே மரணிப்பதில்லை

மானுடம் என்றுமே மரணிப்பதில்லை
வெற்றிமனை
மகளிர் உளவளத்துணை நிலையம்

பின்னணி :- ஆண்குரல்.

யுத்தம் வந்து இம்மண்ணை நித்தம் வதைத்தபோதும்,
வாழ்க்கைப்பாதை வறுமைப்புயலால் திசைமாறிப்போனபோதும்.
பண்பாட்டுப் படையெடுப்பு பலகாலம் இம்மண்ணின் அடையாளம் தன்னை அழிக்க முனைந்தபோதும்,
தன்னிய தேசமதில் தலைமிர்ந்து வாழ இன்னுயிர்கள் பல விலையாகிப் போனபோதும,;
அன்னிய தேசம் ஆக்கிரமித்த இடமெங்கும் மானுடத்தின் விலையை ஏலத்தில் விட்டபோதும்

இந்த மண் அழுதது, மக்கள் அழுதனர,; வாழவழியின்றிக் கலங்கினர், இருக்க இடமின்றி ஏதிலியாய் அலைந்தனர், இந்த இடத்தையும் பறிகொடுத்துத் தவித்தனர், தவழ்ந்த மண்ணைத் தவிக்கவிட்டு தம்வாழ்வு தேடிப்பறந்தனர,; மானுடத்தின் சிதைவை கண்முன்னே கண்டு கலங்கி நின்றனர், இத்தனை வதைகளைத்தாங்கிய போதும் மானுடத்தை மட்டும் இந்த மண் என்றுமே கைவிடவில்லை, இறத்த உறவுகளை, அந்நியன் கணைகளால், அங்கத்தை இழந்தவர் என்று பரிதவித்துப் போனதும் மானுடம் இங்கு மடிந்து விடவில்லை. எத்தனையோ துன்பங்களுக்குள்ளும் உயிர்ப்புடன் உலவும் மானுடத்தில் ஒன்றைத்தான் இங்கு தரிசிக்கப்போகிறோம்.

குரல் :- 01.
இந்தச் சிறிய அழகிய விழிகள் எட்டாத தொலைவை ஊடுருவிப் பார்ப்பதன் இரகசியம் தான் என்ன? தூக்கம் தொலைத்து நாளும் பொழுதும் கால்களுக்கு ஓய்வே இன்றி வருவதும்... எட்டி எட்டிப் பார்ப்பதும்... பின் திரும்புவதும்...

அம்மா என்று அன்பொழுகக் கூப்பிட தோளுக்கு மேல் வளர்ந்துவிட்ட பிள்ளை இருக்;கிறான்...
அன்பே என்று அரவணைத்து அத்தனையும் வழங்க அன்பான கணவனும் தான் இருக்கிறார்.

தன்னுறவை மறந்து... தன் சுற்றம் மறந்து தன் சுழல் மறந்து... யாருக்காக இந்தத் தவக்கோலம்...? இவ்வளவு ஆவலுடன் இவர் எதிர்பாத்திருக்கும் நபர் இவ்வளவு முக்கியமானவரா...?

அன்னையாய் இருந்து அரிச்சுவடி கற்றுக்கொடுக்க வேண்டிய வயதல்லவா இது. குமரிப்பருவத்தில் குழந்தையாகிப் போனதன் காரணம் தான் என்னவோ...?  இளமைக்காலத்தில் இனிய கனவெல்லாம் தொலைந்தது ஏன்?

சில்லென்று வீசும் இத்தென்றலின் திசையை பலவந்தமாகத் திருப்பியவர் யார்? இனிய இந்த நீரோடையில் கல்லெறிந்து குழப்பியவர் யார்? சின்ன வயதும் சிங்கார வாழ்வும் சீரழிந்து போனது காரணம் தான் என்ன? வறுமையா...? வன்முறையா...., ஏக்கமா.......? தாபமா......? புற உலகின் சிந்தனையின்றி தம் அக உலகிலேயே நித்தம் உலவும் இவர்கள் யார்....? உலக் இன்பங்களை துறந்துவிட்ட துறவிகளோ...? இல்லை....இல்லை......வாழ்வின் உயிர்த்துடிப்பு இங்கே அப்;படியே தெரிகிறதே.....?
கலைந்த கேசமும் கந்தல் ஆடையுமாக தெருவில் போவோர் வருவோர் எள்ளி நகையாட, சிறுவர்கள் கல்லால் எறிந்து மகிழ, கவனிப்பாரற்று அலைந்த பல முகங்களும் இங்கு தெரிகிறது.....? யார் இவர்கள்.....? எளிமையும், அழகும், துய்மையும் பொலிந்து நல்லதொரு ஆச்சிரமம் போன்று அமைதியான சுழலுடன் மிளிரும் இந்த இடம் யாருக்குச் சொந்தமானது....? யாராவது சொல்லுங்களேன்.... ? தாம் வாழும் சுழலின் அழகை அனுபவிக்கும் அளவிற்கு புறஉலக சிந்தனையுள்ளவர்களாக இவர்கள் தெரியவில்லையே.......? இந்த இடம் யாருடையது.

குரல் :- 02.
இதுவா......? இது.........? போட்டியும் பூசலும் பொறாமையும் வஞ்சகமும் நிறைந்த இவ்வுலகிலிருந்து பலவந்தமாகத் துரத்தப்பட்ட பல அப்பாவி மனங்கள் தமக்குத் தமக்கென்று சொந்த உலகங்களைச் சிருஷ்டித்து அதில் கோலோச்சிக் கொண்டிருக்கும் சமத்துவ சாம்ராஜ்யம்; இது. வெற்றிமனை என்பது இதன் பெயர்.......

குரல் :- 01.
வெற்றிமனை என்றால்.......?

குரல் :- 02

வாழ்க்கைச்சுமை தாங்காது வளைந்து போய்விட்ட பல மனங்களின் வாழ்விடம்,
கள்ளமில்லா வெள்ளை மனங்கள் குடிகொண்டிருக்கும் ஒரு புனித ஆலயம்,
வறுமையும் குடும்ப வன்முறையும் சேர்ந்து தெருவிற்கு விரட்டியப ல அபலைகளின் அபய இல்லம்.
மனிதக்குருதிக்கும் தசைக்கும் பேயாய் அலையும் ஆதிக்க வல்லுறுகளின் ஆக்கிரமிப்பில் சிதைந்து போய்விட்ட மனங்களின் மகாமண்டபம்.
மண்ணின் விடுதலைக்காக மரணத்தையே யாசிக்கும் மாவீரர்கள் மரணிக்கும் தறுவாயில் கூட மானுடத்தைக் கைவிட்டு விடவில்லை என்பதற்கான சிறந்த உதாரணம்.
தமழீழ மண்ணில் பெண்மனநோயாளர்களுக்கு நிழல் தரும் ஒரேயொரு இடம்.

குரல் :- 01.
இங்கு இருப்பவர்கள்...........?;;
குரல் :- 02.

அன்பெனும் அமுதுக்கு ஆலாய்ப் பறப்பவர்,
ஆசைகள் துரத்த அடி சறுக்கியவர்
இரக்கம் பார்த்ததால் இருந்ததை இழந்தவர்

ஈவிரக்கமின்றி தாக்கப்பட்டவர்,
உறவுகள் உறிஞ்சி உருவிழந்தவர்,
ஊனுறக்கமின்றி ஊரூராய் அலைந்தவர்,
எத்துக்கள் வீழ்த்த எழுத்திறன்னற்றவர்
ஏனென்று கேட்கவும் நாதியற்றவர்,
ஐயங்கூடி அறிவிழந்தவர்,
ஒன்றா இரண்டா இவர் பட்ட பாடு,
ஓ...! மௌனமே தினம் இவர் படும்

குரல் :- 01.
வெற்றிமனை என்று ஏன் பெயர் வைத்தார்கள்......?
குரல் :- 02.
வெற்றிமனைகளுக்கெல்லாம் தலையாய வெற்றி கட்டவிழ்த்து ஓடும் மனதைக் கட்டுக்குள் வைத்திருப்பதல்லவா.....? சமுதாய சகதிக்குள் ழூழ்கித்திசைதாறிப் போய்விட்ட மனங்களை அரவணைத்து அவர்களின் மனங்களை வெற்றிகொள்வதென்பது அத்தனை இலேசான காரியமா......என்ன.......?

குரல் :- 01.
அந்நியனின் ஆக்கிரமிப்பில் அல்லும் பகலும் அவலத்தை சுமந்த படி மண்மீட்பு ஒன்றையே தாரக மந்திரமாகக் கொண்ட இந்த மண்ணிற்கு இப்படியான மனைகளில் கவனஞ்செலுத்த நேரமேது.........?

குரல் :- 02
ஏன் இருக்காது......? அன்னியன் கணைகளால் நோயுற்றுப் போனதென்று தன்பிள்ளைக் குணவளிக்க எம்மண் மறுத்ததா.......?
வளமான எம் வாழ்வை வறுமைப் புயல் அழித்ததென்று வாழும் எம்மாசை பாழ்பட்டுப் போனதா......? இரந்துண்டு வாழும் இழிநிலை வந்ததென்று கொடுத்துண்ணும் குணத்தை நாம் எடுத்தெறிந்து விட்டோமா நட்டு வளர்த்தவர்  விட்டு விட்டுச் சென்றாரென்று பூத்துக் குலுங்க எம் பூஞ்செடிகள் மறுத்ததா...?
கூடிக் களித்த துணை கூடுவிட்டுப் போனதென்று பாடிக்களித்த எம் கவிக்குயில்கள் மறந்தனவோ.....? பின்......? மனதைத் தொலைத்துவிட்டு
வீதிக்கு வந்துவிட்டால் எமக்கு பாரமென்று இவ்வுறவுகளைச் சரிப்போமா.....? மாட்டோம்!

குரல் :- 01.
தத்தமது உலகில் சஞ்சரிக்துக் கொண்டிருக்கும் இவர்களை இவ்வுலகிற்குள் மறுமடியும் அழைத்துவர முடியாதா.....?

குரல் :- 02.
ஏன் முடியாது......? முடியும் என்ற நம்பிக்கையில், அவாவில், மன உறுதியில் தான் இத்தனை வேலைகளும் நடக்கிறது.

'வீக்கம் நிறைந்த இவ்வுலகில் மனதாக்கம் கூடி வருத்த ஊக்கங் கெட்டு நல் ஆக்கமெதுவுமின்றி தினம் ஏக்கமுடன் வாழும் இந்த மனங்களின் பாரத்தைப் போக்கத்தான் முயல்கின்றோம்......

போற்றத்தான் வேண்டாம் என்னை துற்றாமல் இருங்களேன் என சாற்றுவதற்கும் துணிவின்றி இங்கு தேற்றுவாரின்றி அடைபட்டுப் போன இம் மனங்களின் மன ஊற்றுக் கண்ணை திறக்கத்தான முயல்கிறோம்......

நடுக்கமுறும் மனதின் ஏக்கம் தடுத்து தினமும் மனத்துணிவைக் கொடுத்து இனியொரு தடைவ படுக்கவிடாமல் துக்கி நிறுத்தத்தான் முயல்கிறோம்.....

அப்பனின் ஆக்கிமிப்பில் ஆத்தாளின் அறிவீனத்தில் அடுத்துப்பிறந்தவரின் அசண்டையீனத்தில் தேடுவாரின்றி தினம் தினம் வரண்டு காரைக்கும், நெருஞ்சி;க்கும், தொட்டவுடன் முகம் சுருங்கும் தொட்டாச்ருங்கிக்கும், கார்குழலில் சூடும் கனகாம்பரமோவெனக் கண்டவரை மயக்கும் காட்டு மரங்களும், கட்டின்றி மேயவந்த கட்டாக்காலிகளுக்கும், களமாக மாறிய இந்;த கட்டற்ற மனங்களுக்கு பட்டறிவால் வேலியிட்டு, கண்டவரும் நுழையாமல் காப்பதற்குத்தான் இத்தனை பெரிதாய் முயற்சிக்கின்றோம்.

இவ்வுலகிற்குள் முற்றுமுழுதாக நுழைந்து விட்டவர்கள் காற்றுக் கொஞ்சம் பலமாக அடித்தால் சிறிது தடுமாறுவது தவிர தானாகவே தளம் பதித்து சிறுமரங்கள் இவைகள்...... இவ்வுலகிற்குள் வந்து வந்து போய்க்கொண்டிருப்பவர்கள் இவர்கள். பக்கத்துணையின்றி படர்ந்து வளர்வதற்கு இயலாத முல்லைக்கொடி போன்றவர்கள் இவர்கள். ஊட்டம் குறைந்து வெளிறிப்போய் பூத்துக்குலுங்கும் திறனின்றி சோர்ந்து நிற்கும் சிறு பூஞ்செடிகள் தான் இவைகள்.

குரல்:1
உள்ளம் உறங்கிவிட உறவுகள் கைவிடடுவிட உடல் உருவிழக்க தெருவிற்கு வந்து நிற்கதியாய் அலையும் இந்த மனங்களை அவைணைத்து காத்தல் என்பது சேவைகளுக்குள எல்லாம் மகத்தான சேவையன்றோ.....? இத்தகைய ஒரு மகத்தான சேவையை முன்னின்று செய்பவர்....?

பேட்டி
இணைப்பாளர் - பெ.அ.பு. நிறுவனம் வெற்றிமனைப் பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு நிறுவனத்தின் புனர்வாழ்வு திட்டங்களில் பிரதானமானது. கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவருக்குமென பூரணி இல்லம் என்ற பெயரில் இங்கிய இந்த அமைப்பு காலமாற்றத்தில,; தேவைகள் பெருக,தனனித்தனி அமைப்புக்களாக மனநோயாளர்களுக்கு வெறிறிமனையாகவும் கைவிடப்பட்ட ஏமாற்றப்பட்ட பெண்களுக்கு மலர்ச் சோலையாகவும்,அநாதரவான சிறுவர்களுக்கு செற்தளிர் இல்லமாகவும் தனது வேலையை விஸ்தரிக்கிறது. இப்புணர்வாழ்வு இல்லங்களுக்கு வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் பப்படத்தொழிற்சாலை, தும்புத்தொழிற்சாலை பண்ணை போன்ற அபிவிருத்தி திட்டங்களையும் இது நிர்வகிக்கின்றது.
பொதுநலவிரும்பிகளின் அனுசரணையுடன் 11பேர் கொண்ட நிர்வாகக் குழுவின் வழிநடத்தலில் நேரில் வெற்றிமனையின் தற்போதைய இணைப்பாளராக இயங்குபவர் திருமதி கமலாம்பாள் அவர்கள்.
வெற்றிமனையின் பராமரிப்புச் செலவை ஈடுகட்டுவதற்கென முயற்சிகளை நிர்வாகக் குழு மேற்கொள்கிறது. பயனாளிகளின் போசாக்க நிலையை மேம்படுத்தும் நோக்குடன் சர்வதேச கெயார் நிறுவன உதவியுடன் பாற்பண்ணைத்தட்டம் நடைமுப்படுத்தப்படுகிறது. பொதுநல விரும்பிகளின் காருண்யத்தால் அன்பளிப்புக்கள் உடைகளாக, பொருட்களாக பணமாக பெறப்படுகிறது. ஈரம்நிறைந்த இதயங்கள் பிறந்தநாள் பரிசுஎ என்றும், தமது உறவினரின் திவசதிதிக்கான அன்பளிப்பென்றும் இவர்களின் வயிறை இடையிடையே குளிரப்பண்ணுகின்றனர். பயணாளிகளின் மனநலத்தை மேம்படுத்துவற்கென பலவிதமான திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறோம்.
வெற்றிமனை தொடரபான இவர்களின் மனப்பதிவுகளைக் கேளுங்கள்..... மனித நேயம் காக்க முழுமனதாய் உழைப்போம் என்கிறார்கள்...... உடைந்த உள்ளங்களுக்கு மறுவாழ்வு அளிக்கவேண்டியது எங்கள் கடமை. எனவே வெற்றிமனை வெற்றிகரமாக இயங்க மனிதநேயத்துடன் பணியாற்ற உறுதி எடுப்போம் என்கிறார்.
மருந்து மட்டுமன்றி அன்பும் அரவணைப்புமே இவர்களுக்கு அவசியம் எனவே உளவளம் காக்க உண்மையாய் உழைப்போம் என்கிறார். மருந்தும் மதியுகமும் செய்யாததை அன்பும், அரவணைப்பும் செய்யும். எனவே பணியாளர்களிலேயே அனைத்தும் தங்கியிருக்கிறது என்கிறார்.....



No comments: