Wednesday, February 05, 2014

யாரொடு நோவேன் யார்க்கெடுத்துரைப்பேன்'


நடத்தைக் கோலங்கள்  4

தம்பையரின்ரை மூன்றாவது பெடிச்சிக்கு சுவிசிலை மாப்பிள்ளையாம். ஏழு லட்சம் சீதனம். இதைக் கேட்ட அதிர்ச்சியில் தலை விறைச்சுப் போச்சு. அதிர்ச்சிக்கு காரணம்!

வீட்டிலை ஆன வேளைக்கு தின்னச் சாப்பாடு இல்லை. நிவாரணத்தை மட்டும் நம்பின சீவியம். மனுஷனுக்கு உழைப்பெண்டு எதுவும் இல்லை. மூத்;த இரண்டு பெடிச்சிகளும்  ஊரிலை இருக்கேக்கையே மனுஷனுக்கு இடைஞ்சல் கொடுக்காமல் தான், தான் விரும்பியபடி கரை சேர்ந்து விட்டினம். இப்ப வெளிலை போறவளுக்குக் கீழை இன்னும் இரண்டு குமர் இருக்குது. நிலைமை இப்படி இருக்கேக்கை இதுகள் என்னவெண்டு ஏழு இலட்சம் புரட்டப் போகுதுகள்.

என்னெண்டு விசாரிச்சுக் கொண்டு போனால் மனுஷியின்ரை ஒன்றுவிட்ட சகோதரி முடிச்ச மாப்பிள்ளையின்ரை நாலு தம்பிகாரன்கள் வெளிநாட்டிலை இருக்கின்றாங்களாம். அவை தான் கொஞ்சம் கொஞ்சம் கொடுத்து ஏழு லட்சமாக்கினவை. மனுஷி இப்ப பெட்டையை கொழும்புக்கு கூட்டிக் கொண்டு போயிருக்கு  வெளியிலை அனுப்புறதுக்கு.

அதுசரி ஒன்டுக்கும் வழியில்லாமல் இருக்கிறதுகளை நம்பி இவ்வளவு தொகையைக் கொடுக்க எப்படி சம்மதிச்சவை. அவவின்ரை 13 வயதுப் பெடியனை இரண்டு வருசத்தாலை வெளிநாட்டுக்கு அனுப்பி அவன் வட்டியுடன் கடனைக் கட்டுவான் என்ற ஒப்பந்தத்தின் பேரில் தான் இவ்வளவு தொகையும் வாங்கினதாம்.

இப்படியொரு துணிச்சல் யாருக்கு வரும்?. 'நகைநட்டு, காணி உறுதி மாதிரி இப்ப அடைவ வைக்க சுலபமான வழி இந்த இளம் ஆண்புரசுகள் போலை'.

No comments: