Wednesday, August 03, 2005

வாய் திறந்து பேசு........

பெண்மை பற்றிய
உனது புரிதல்களுக்கு
உருவமாய் நான்
இல்லாது போனாலும்
எனது அசைவு
உன்னை
வியக்க வைப்பதை
உன் பார்வை சொல்லும்.

ஆண்மை பற்றிய
எனது கணிப்பீடுகளும்
சற்றும் உன்னிடம்
பொருந்தாத போதும்
உனது பண்பு
என்னை
நெகிழ வைப்பதை
என் இதயம் உணரும்.

அமைதியான உன் போக்கு
ஆழமாய் நீ பேசும் வார்த்தைகள்
எனக்கென்றே நீ உதிர்க்கும் புன்னகை
என்னை நலங்கேட்கும் பார்வை
எனக்குள் நிழலாடும் போதெல்லாம்
எனது எண்ணம் -
எனது எழுத்து -
எனது து}க்கம் -
என் உத்தரவின்றி
ஓய்வெடுத்துக் கொள்ளும்.
உண்மை நட்பை
உன்னிடம் பகிரவும்
உயிர்க்கடை வரை
உறவைத் தொடரவும்
எனக்குள் இருந்து
ஏதோவொன்று
உந்தித் தள்ளும்.

நண்பனே!

என் மீதான உனது மதிப்பை
கொண்டாடுவதை விட்டுவிடு
தோழனாய் வந்து கதை பல சொல்லு.
உனக்குள் நான் உயர்ந்திருப்பதில்
எனக்கு எள்ளளவும் சம்மதமில்லை.
மனதிற்குள் ப10ஜிப்பதால்
மாற்றம் வந்துவிடாது.
எனது முன்னோர்களை
உனது முன்னோர்கள்
தெய்வமாய் ஏற்றியும்
தேவைப் பொருளாய் மாற்றியும்
ஊமையாக்கியது போதும்.
மற்றவர் முன் வாய் திறந்து பேசு
நட்பின் ஆற்றலை நாற்றிசையும் அறியட்டும்.
பங்குனி, 1998

No comments: